ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் யார்? - ஓஷோ

2 posters

Go down

நான் யார்? - ஓஷோ Empty நான் யார்? - ஓஷோ

Post by சிவா Tue Feb 07, 2023 8:57 am


`நான் என்பது என்ன? நீ இதைப் பற்றி அமைதியாக சிந்தித்துப் பார்த்திருக்கிறாயா? அது உன் காலா, கையா, தலையா அல்லது உன் இதயமா அல்லது வெறும் அகங்காரமா?' என்று ‘காமத்திலிருந்து கடவுளுக்கு’ சொற்பொழிவில் கேட்கிறார் ஓஷோ.



நான் யார்?

மெய்யணர்வு தளத்தில் இது முக்கியமான கேள்வி!

‘நான்’ என்பது ‘யார்?’ என்பதை விளக்க, சுவாரஸ்யமான குட்டிக் கதையைச் சொல்கிறார் ஓஷோ.

பெரு மதிப்புக்குரிய நான்சென் என்ற ஞானியை மாமன்னன் மாலிண்ட் என்பவன் தனது அரசவைக்கு அழைக்க விரும்பினான்.

தூதுவன் நான்சென்னிடம் சென்று “குரு நான்சென் அவர்களே! அரசர் உங்களைக் காண விரும்புகிறார். நான் உங்களை அழைப் பதற்காக வந்திருக்கிறேன்!” என்றான்.

நான்சென் முதலில் அந்தத் தூதுவனை நோக்கி ஒரு கேலிப் புன்னகையை வீசினார். பின்னர், “உன் அரசரின் விருப்பத்துக்காக நான் வருகிறேன். ஆனால், `நான்சென்' என்று இங்கு யாரும் இல்லை. அது ஒரு பெயர்தான். ஒரு தற்காலிகக் குறியீடு. நான் வருகிறேன். ஆனால் அது `நான்சென்' இல்லை!” என்றார்.

தூதுவன் குழப்பத்துடன் அரசரிடம் சென்று நான்சென் கூறியதைக் கூறினான். மன்னனுக்குக் கொஞ்சம் ஆச்சரியம்; கொஞ்சம் குழப்பம்.

“அவரை அழைத்து வா!” என்று தூதுவனிடம் உத்தரவிட்டான்.

நான்சென் தேரில் அழைத்து வரப்பட்டார். மன்னன் வாசலில் நின்று அவரை வரவேற்றான்.

“குரு நான்சென் அவர்களே! வாருங்கள்… வாருங்கள்!”

இதைக் கேட்டவுடன் நான்சென் சிரித்தார்.

“நான் உன்னுடைய வரவேற்பை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் நினைவில்கொள்… `நான்சென்' என்ற பெயருடைய யாரும் இங்கு வரவில்லை” என்றார்.

“நீங்கள் வித்தியாசமாகப் பேசுகிறீர்கள் குருவே! நான்சென் இல்லை என்றால், நீங்கள் வேறு யார்? இது என்ன வார்த்தை விளை யாட்டு? என் எளிய அறிவுக்குப் புரியுமாறு சற்று விளக்கிச் சொல்ல வேண்டுகிறேன்” என்றான் அரசன் பணிவாக.

உடனே நான்சென், தான் வந்த ரதத்தைச் சுட்டிக்காட்டி கேட்டார்:

“நான் வந்த ரதம் அதுதானே?”

“ஆம். அதுவேதான்! இதில் என்ன சந்தேகம் தங்களுக்கு?” என்றான் அரசன்.

“இப்போது குதிரைகளைக் கழற்றி விடுங்கள்!” என்றார் நான்சென்.

அவர் கூறியபடியே ரதத்திலிருந்து குதிரை கள் தனியே அவிழ்த்து விடப்பட்டன.

குதிரைகளைக் காட்டி “அது ரதமா?” என்று கேட்டார் நான்சென்.

“குதிரைகளை எப்படி ரதம் என்று அழைக்க முடியும் குருவே?” என்று கேட்டான் அரசன்.

நான்சென் அடுத்து சொன்னதின் பேரில் குதிரைகளைக் கட்டும் நுகத்தடி ரதத்திலிருந்து கழற்றப்பட்டது.

இப்போது “இந்த நுகத்தடிதான் ரதமா?” என்று நான்சென் கேட்டார்.

“அது எப்படி? அவை நுகத்தடிகள்! ரதமல்ல!” என்றான் அரசன்.

அடுத்தடுத்து நான்சென் கூறக் கூற, தேரின் ஒவ்வொரு பாகங்களும் தனித்தனியே கழற்றப் பட்டன. கடைசியில் ஒன்றும் மிச்சமில்லை.

நான்சென் “எங்கே உனது ரதம்? ஒவ்வொரு பாகம் எடுத்துச் செல்லப் பட்டபோதும் இது ரதமல்ல என்று நீயே கூறினாய். ஆகவே இப்போது சொல், உனது ரதம் எங்கே?” என்று கேட்டார்.

அரசன் நான்சென்னின் கேள்விகளை ஆச்சரியமாக நோக்கினான்.

அவர் தொடர்ந்தார்: “நான் சொல்வதைப் புரிந்துகொண்டாயா? ரதம் என்பது ஒரு கூட்டு முயற்சி. சில குறிப்பிட்ட விஷயங்கள் சேர்ந்த சேகரிப்பு. ரதம் என்பது தனித்து இருப்பதல்ல. இப்போது உள்ளே பார்... எங்கே உனது ஆணவம், எங்கே உனது ‘நான்?’.

நீ எங்கேயும் ‘நானை’க் கண்டுபிடிக்க முடியாது. அது பல சக்திகள் ஒன்று சேர்ந்த ஒருமித்த ஒரு வெளிப்பாடு. அவ்வளவுதான். ஒவ்வோர் உறுப்பையும் எண்ணிப்பார். உன்னுடைய ஒவ்வொரு பார்வையைப் பற்றியும் நினைத்துப் பார். பின் ஒவ்வொன்றாக வெளியேற்று. இறுதியில் ஒன்றுமற்றதுதான் எஞ்சி இருக்கும்!” என்றார் நான்சென்.

இந்தக் கதையைக் விவரித்த பின் இப்படி கூறுகிறார் ஓஷோ: ‘அதுதான் இருத்தலின் உணர்வு. இருக்கிறது, ஆனாலும் அதைக் குறிப்பாக எங்கேயும் காண முடியவில்லை. எவ்வளவு ஆழமாகத் தேடினாலும் உன்னை எங்கும் கண்டுபிடிக்க முடியாது.

ஆனால் ஆழமாக தேடும்போது ‘நான்’ என்று ஒன்று இல்லை என்பதை உணர்வாய். இதை உணரும் நிலையே ஆன்மிகத்தின் பேரானந்த நிலை. இதை உணர்ந்து அனுபவிக்கத் தொடங்கி விட்டால், இறை உணர்வின் வாசலுக்குள் நீ மெள்ள அடியெடுத்து வைக்கிறாய் என்று அர்த்தம்!’

இப்போது உங்களுக்குள் கேட்டுப் பாருங்கள் இந்தக் கேள்வியை:

‘நான்’ யார்!?


- எஸ்.ராஜகுமாரன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

நான் யார்? - ஓஷோ Empty Re: நான் யார்? - ஓஷோ

Post by Dr.S.Soundarapandian Tue Feb 07, 2023 1:04 pm

இதுபோன்ற #தத்துவவிளக்கம் ஏன் ஏற்பட்டது தெரியுமா?
அரசனின் இறுமாப்பைக் குறைக்கவும், சிலரின் ஆணவத்தைத் தகர்க்கவும், ஏழ்மையை அகற்ற முயலாதே, உருப்படியாகச் சிந்திக்காதே , - என்று சொல்லி , #உயர் #வர்க்கத்தை #அப்படியே #பாதுகாக்கும் ஒரு #நோக்கத்திற்காகவும்தான்!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum