புதிய பதிவுகள்
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் யார்? - ஓஷோ Poll_c10நான் யார்? - ஓஷோ Poll_m10நான் யார்? - ஓஷோ Poll_c10 
10 Posts - 71%
heezulia
நான் யார்? - ஓஷோ Poll_c10நான் யார்? - ஓஷோ Poll_m10நான் யார்? - ஓஷோ Poll_c10 
2 Posts - 14%
வேல்முருகன் காசி
நான் யார்? - ஓஷோ Poll_c10நான் யார்? - ஓஷோ Poll_m10நான் யார்? - ஓஷோ Poll_c10 
1 Post - 7%
viyasan
நான் யார்? - ஓஷோ Poll_c10நான் யார்? - ஓஷோ Poll_m10நான் யார்? - ஓஷோ Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் யார்? - ஓஷோ Poll_c10நான் யார்? - ஓஷோ Poll_m10நான் யார்? - ஓஷோ Poll_c10 
202 Posts - 41%
heezulia
நான் யார்? - ஓஷோ Poll_c10நான் யார்? - ஓஷோ Poll_m10நான் யார்? - ஓஷோ Poll_c10 
199 Posts - 40%
mohamed nizamudeen
நான் யார்? - ஓஷோ Poll_c10நான் யார்? - ஓஷோ Poll_m10நான் யார்? - ஓஷோ Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
நான் யார்? - ஓஷோ Poll_c10நான் யார்? - ஓஷோ Poll_m10நான் யார்? - ஓஷோ Poll_c10 
21 Posts - 4%
prajai
நான் யார்? - ஓஷோ Poll_c10நான் யார்? - ஓஷோ Poll_m10நான் யார்? - ஓஷோ Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
நான் யார்? - ஓஷோ Poll_c10நான் யார்? - ஓஷோ Poll_m10நான் யார்? - ஓஷோ Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
நான் யார்? - ஓஷோ Poll_c10நான் யார்? - ஓஷோ Poll_m10நான் யார்? - ஓஷோ Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நான் யார்? - ஓஷோ Poll_c10நான் யார்? - ஓஷோ Poll_m10நான் யார்? - ஓஷோ Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நான் யார்? - ஓஷோ Poll_c10நான் யார்? - ஓஷோ Poll_m10நான் யார்? - ஓஷோ Poll_c10 
7 Posts - 1%
mruthun
நான் யார்? - ஓஷோ Poll_c10நான் யார்? - ஓஷோ Poll_m10நான் யார்? - ஓஷோ Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் யார்? - ஓஷோ


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 7 Feb 2023 - 10:27


`நான் என்பது என்ன? நீ இதைப் பற்றி அமைதியாக சிந்தித்துப் பார்த்திருக்கிறாயா? அது உன் காலா, கையா, தலையா அல்லது உன் இதயமா அல்லது வெறும் அகங்காரமா?' என்று ‘காமத்திலிருந்து கடவுளுக்கு’ சொற்பொழிவில் கேட்கிறார் ஓஷோ.



நான் யார்?

மெய்யணர்வு தளத்தில் இது முக்கியமான கேள்வி!

‘நான்’ என்பது ‘யார்?’ என்பதை விளக்க, சுவாரஸ்யமான குட்டிக் கதையைச் சொல்கிறார் ஓஷோ.

பெரு மதிப்புக்குரிய நான்சென் என்ற ஞானியை மாமன்னன் மாலிண்ட் என்பவன் தனது அரசவைக்கு அழைக்க விரும்பினான்.

தூதுவன் நான்சென்னிடம் சென்று “குரு நான்சென் அவர்களே! அரசர் உங்களைக் காண விரும்புகிறார். நான் உங்களை அழைப் பதற்காக வந்திருக்கிறேன்!” என்றான்.

நான்சென் முதலில் அந்தத் தூதுவனை நோக்கி ஒரு கேலிப் புன்னகையை வீசினார். பின்னர், “உன் அரசரின் விருப்பத்துக்காக நான் வருகிறேன். ஆனால், `நான்சென்' என்று இங்கு யாரும் இல்லை. அது ஒரு பெயர்தான். ஒரு தற்காலிகக் குறியீடு. நான் வருகிறேன். ஆனால் அது `நான்சென்' இல்லை!” என்றார்.

தூதுவன் குழப்பத்துடன் அரசரிடம் சென்று நான்சென் கூறியதைக் கூறினான். மன்னனுக்குக் கொஞ்சம் ஆச்சரியம்; கொஞ்சம் குழப்பம்.

“அவரை அழைத்து வா!” என்று தூதுவனிடம் உத்தரவிட்டான்.

நான்சென் தேரில் அழைத்து வரப்பட்டார். மன்னன் வாசலில் நின்று அவரை வரவேற்றான்.

“குரு நான்சென் அவர்களே! வாருங்கள்… வாருங்கள்!”

இதைக் கேட்டவுடன் நான்சென் சிரித்தார்.

“நான் உன்னுடைய வரவேற்பை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் நினைவில்கொள்… `நான்சென்' என்ற பெயருடைய யாரும் இங்கு வரவில்லை” என்றார்.

“நீங்கள் வித்தியாசமாகப் பேசுகிறீர்கள் குருவே! நான்சென் இல்லை என்றால், நீங்கள் வேறு யார்? இது என்ன வார்த்தை விளை யாட்டு? என் எளிய அறிவுக்குப் புரியுமாறு சற்று விளக்கிச் சொல்ல வேண்டுகிறேன்” என்றான் அரசன் பணிவாக.

உடனே நான்சென், தான் வந்த ரதத்தைச் சுட்டிக்காட்டி கேட்டார்:

“நான் வந்த ரதம் அதுதானே?”

“ஆம். அதுவேதான்! இதில் என்ன சந்தேகம் தங்களுக்கு?” என்றான் அரசன்.

“இப்போது குதிரைகளைக் கழற்றி விடுங்கள்!” என்றார் நான்சென்.

அவர் கூறியபடியே ரதத்திலிருந்து குதிரை கள் தனியே அவிழ்த்து விடப்பட்டன.

குதிரைகளைக் காட்டி “அது ரதமா?” என்று கேட்டார் நான்சென்.

“குதிரைகளை எப்படி ரதம் என்று அழைக்க முடியும் குருவே?” என்று கேட்டான் அரசன்.

நான்சென் அடுத்து சொன்னதின் பேரில் குதிரைகளைக் கட்டும் நுகத்தடி ரதத்திலிருந்து கழற்றப்பட்டது.

இப்போது “இந்த நுகத்தடிதான் ரதமா?” என்று நான்சென் கேட்டார்.

“அது எப்படி? அவை நுகத்தடிகள்! ரதமல்ல!” என்றான் அரசன்.

அடுத்தடுத்து நான்சென் கூறக் கூற, தேரின் ஒவ்வொரு பாகங்களும் தனித்தனியே கழற்றப் பட்டன. கடைசியில் ஒன்றும் மிச்சமில்லை.

நான்சென் “எங்கே உனது ரதம்? ஒவ்வொரு பாகம் எடுத்துச் செல்லப் பட்டபோதும் இது ரதமல்ல என்று நீயே கூறினாய். ஆகவே இப்போது சொல், உனது ரதம் எங்கே?” என்று கேட்டார்.

அரசன் நான்சென்னின் கேள்விகளை ஆச்சரியமாக நோக்கினான்.

அவர் தொடர்ந்தார்: “நான் சொல்வதைப் புரிந்துகொண்டாயா? ரதம் என்பது ஒரு கூட்டு முயற்சி. சில குறிப்பிட்ட விஷயங்கள் சேர்ந்த சேகரிப்பு. ரதம் என்பது தனித்து இருப்பதல்ல. இப்போது உள்ளே பார்... எங்கே உனது ஆணவம், எங்கே உனது ‘நான்?’.

நீ எங்கேயும் ‘நானை’க் கண்டுபிடிக்க முடியாது. அது பல சக்திகள் ஒன்று சேர்ந்த ஒருமித்த ஒரு வெளிப்பாடு. அவ்வளவுதான். ஒவ்வோர் உறுப்பையும் எண்ணிப்பார். உன்னுடைய ஒவ்வொரு பார்வையைப் பற்றியும் நினைத்துப் பார். பின் ஒவ்வொன்றாக வெளியேற்று. இறுதியில் ஒன்றுமற்றதுதான் எஞ்சி இருக்கும்!” என்றார் நான்சென்.

இந்தக் கதையைக் விவரித்த பின் இப்படி கூறுகிறார் ஓஷோ: ‘அதுதான் இருத்தலின் உணர்வு. இருக்கிறது, ஆனாலும் அதைக் குறிப்பாக எங்கேயும் காண முடியவில்லை. எவ்வளவு ஆழமாகத் தேடினாலும் உன்னை எங்கும் கண்டுபிடிக்க முடியாது.

ஆனால் ஆழமாக தேடும்போது ‘நான்’ என்று ஒன்று இல்லை என்பதை உணர்வாய். இதை உணரும் நிலையே ஆன்மிகத்தின் பேரானந்த நிலை. இதை உணர்ந்து அனுபவிக்கத் தொடங்கி விட்டால், இறை உணர்வின் வாசலுக்குள் நீ மெள்ள அடியெடுத்து வைக்கிறாய் என்று அர்த்தம்!’

இப்போது உங்களுக்குள் கேட்டுப் பாருங்கள் இந்தக் கேள்வியை:

‘நான்’ யார்!?


- எஸ்.ராஜகுமாரன்



Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue 7 Feb 2023 - 14:34

இதுபோன்ற #தத்துவவிளக்கம் ஏன் ஏற்பட்டது தெரியுமா?
அரசனின் இறுமாப்பைக் குறைக்கவும், சிலரின் ஆணவத்தைத் தகர்க்கவும், ஏழ்மையை அகற்ற முயலாதே, உருப்படியாகச் சிந்திக்காதே , - என்று சொல்லி , #உயர் #வர்க்கத்தை #அப்படியே #பாதுகாக்கும் ஒரு #நோக்கத்திற்காகவும்தான்!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக