ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 1900-க்கும் மேற்பட்டோர் பலி

5 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 1900-க்கும் மேற்பட்டோர் பலி - Page 4 Empty துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 1900-க்கும் மேற்பட்டோர் பலி

Post by டார்வின் Mon Feb 06, 2023 8:34 pm

First topic message reminder :

துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 1900-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

இதில் சிரியாவில் மட்டும் 783 பேர் உயிரிழந்திருப்பதாக மதிப்பிடப்படுகிறது.

7.8 ரிக்டர் அளவில் அதிகாலை நேரத்தில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு பிற்பகலில் 7.5 ரிக்டர் அளவில் மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.

சிரியா எல்லையை ஒட்டிய தென்கிழக்கு துருக்கியில் ஒரு பரந்த பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் முதலில் ஏற்பட்டது. 7.8 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி 4:17 மணிக்கு காஸியான்டெப் நகருக்கு அருகில் 17.9 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது.
912 பேர் உயிரிழந்ததை துருக்கி அதிபர் எர்துவான் முதலில் உறுதி செய்தார். தியார்பாகிர் உட்பட 10 நகரங்கள் இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

உலகம் எங்கிலும் இருந்து தலைவர்கள் பாதிக்கப்பட்டோருக்கு உதவப் போவதாக உறுதி அளித்துள்ளனர்.
துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 1900-க்கும் மேற்பட்டோர் பலி - Page 4 _1285310

பிபிசி
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down


துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 1900-க்கும் மேற்பட்டோர் பலி - Page 4 Empty Re: துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 1900-க்கும் மேற்பட்டோர் பலி

Post by சிவா Tue Feb 14, 2023 8:22 pm

நிலநடுக்க பலி எண்ணிக்கை 37 ஆயிரத்தை தாண்டியது



ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்துள்ள நிலையில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது. கட்டிட இடிபாடுகளில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 37 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதற்கிடையே இடிபாடுகளில் இருந்து பலர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

இந்தநிலையில் நிலநடுக்கத்தால் துருக்கியில் ஒரு கிராமமே முற்றிலும் அழிந்துள்ளது. அந்நாட்டின் தென் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல நகரங்கள், கிராமங்கள் கடும் பாதிப்புகளை சந்தித்து உள்ளன.

நிலநடுக்கம் ஏற்பட்ட மையப்பகுதியில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள போலட் கிராமம் முற்றிலும் உருக்குலைந்துவிட்டது. அங்கு அனைத்து வீடுகளும் இடிந்து தரை மட்டமாகிவிட்டன.

இடிந்து விழுந்த வீடுகளில் இருந்து குளிர்சாதன பெட்டி, வாஷிங்மெஷின் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்கள் மீட்டு வருகிறார்கள்.

இதே போல் பல கிராமங்களில் வீடுகளை இழந்து மக்கள் தவித்து வருகிறார்கள். இதற்கிடையே நிலநடுக்க மீட்புப் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கட்டிட இடிபாடுகளில் யாராவது உயிருடன் இருக்கிறார்களா? என்று மோப்ப நாய் மற்றும் கேமராக்கள் மூலம் தீவிரமாக தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

மேலும் சில இடங்களில் கட்டிட இடிபாடுகளில் இருந்து யாராவது உதவி குரல் எழுப்புகிறார்களா என்று சோதனை செய்யப் டுகிறது. அப்படி குரல் ஏதாவது கேட்டால் இடிபாடுகளை அகற்றுகிறார்கள்.

கஹ்ரமன்மரஸ் மாகாணத்தில் 183 மணி நேரத்துக்கு பிறகு 10 வயது சிறுமி உயிருடன் மீட்கப்பட்டார். அதே போல் ஹடாய் மகாணாத்தில் 182 மணி நேரத்துக்கு பிறகு 13 வயது சிறுமி மீட்கப்பட்டாள் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 1900-க்கும் மேற்பட்டோர் பலி - Page 4 Empty Re: துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 1900-க்கும் மேற்பட்டோர் பலி

Post by சிவா Tue Feb 14, 2023 8:23 pm

ஐரோப்பாவில் 100 ஆண்டுகளில் இல்லாத மோசமான இயற்கை பேரழிவு: உலக சுகாதார அமைப்பு



கடந்த வாரம் துருக்கியில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம், ஐரோப்பா பகுதியில் 100 ஆண்டுகளில் இல்லாத "மோசமான இயற்கை பேரழிவாக" அமைந்தது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 6 அன்று ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால், துருக்கியிலும் அண்டை நாடான சிரியாவிலும் தற்போது வரை 35,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

உலகை உலுக்கிய இந்த நிலநடுக்கம் குறித்து ஐரோப்பியாவிற்கான உலக சுகாதார அமைப்பின் பிராந்திய இயக்குநர் ஹான்ஸ் க்ளூஜ் ஒரு செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறும்போது, "ஒரு நூற்றாண்டு காலமாக ஐரோப்பிய பிராந்தியத்தில் மிக மோசமான இயற்கை பேரழிவை நாங்கள் சந்தித்துள்ளோம்.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அவசர மருத்துவ குழுக்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இதுவரை 22 அவசர மருத்துவ குழுக்கள் இதுவரை துருக்கிக்கு வந்துள்ளன. நிலநடுக்கத்தின் அளவை நாங்கள் இன்னும் கற்றுக் கொண்டிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 1900-க்கும் மேற்பட்டோர் பலி - Page 4 Empty Re: துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 1900-க்கும் மேற்பட்டோர் பலி

Post by சிவா Tue Feb 14, 2023 8:25 pm

துருக்கியை சூழ்ந்த துயரம்! - முனைவா் வைகைச்செல்வன்


துருக்கி - சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் இரு நாடுகளிலும் நேற்றுவரை 28 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா்; 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் படுகாயமடைந்துள்ளனா். இந்த கொடும் நிகழ்வு நெஞ்சை அறுக்கிறது. கிழக்கு துருக்கியின் காஸியன்டெப் நகரை மையமாகக் கொண்டு பிப்ரவரி 6 அன்று அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 7.8 அலகாகப் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் துருக்கியின் 10 மாகாணங்கள் மற்றும் அண்டை நாடான சிரியாவின் வடக்கு பகுதியில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. பெரிய நிலநடுக்கத்தைத் தொடா்ந்து துருக்கி - சிரியாவில் அடுத்தடுத்து 312 முறை சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டா் அளவுகோலில் 4 அலகு முதல் 7.5 அலகு வரை பதிவாகியுள்ளது.

துருக்கி ராணுவம், காவல்துறை, தீயணைப்புப் படை அனைத்தும் இரவு, பகலாக மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன. சிரியாவின் வடக்கு, கிழக்கு பகுதிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. சிரியா அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ஓரளவு மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், கிளா்ச்சிப் படையின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகள் பேரழிவில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகின்றன. இந்த எதிா்பாரா நிலநடுக்கம் அந்நாடுகளை நிலைகுலையச் செய்து விட்டது.

துருக்கியில் இடிந்து விழுந்த ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டடங்களில், குடியிருப்பாளா்கள் நிறைந்த பல அடுக்குமாடி வீடுகளும் அடங்கும். காஸியன்டெப், சிரியா நாட்டின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் பாதிப்புகள் மிக அதிகம். இந்த மிகப்பெரும் நிலநடுக்கத்தை மூன்று நாட்களுக்கு முன்பே ஒருவா் கணித்திருக்கிறாா். டச்சு ஆராய்ச்சியாளா் ப்ராங்க் கூகா்பீட்ஸ் என்பவா் துருக்கியில் நிலநடுக்கம் ஏற்படும் என்று மூன்று நாட்களுக்கு முன்பே கணித்து, அதை பிப்ரவரி 3-ஆம் தேதியே தனது ட்விட்டா் பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.

அவா் தனது ட்விட்டா் பதிவில், மத்திய மற்றும் தெற்கு துருக்கி, ஜோடான், சிரியா, லெபனான் ஆகிய பகுதிகளைக் குறிப்பிட்டு 7.5 ரிக்டா் அலகு நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று வரைபடத்துடன் குறிப்பிட்டிருந்தது முக்கியமான ஒன்றாகும். அவா் கணித்ததைப் போலவே துருக்கி - சிரியாவில் 7.8 ரிக்டா் நிலநடுக்கம் ஏற்பட்டு விட்டது.

துருக்கியில் இதுவரை ஏற்பட்ட நிலநடுக்கங்களிலேயே மிகவும் மோசமான நிலநடுக்கம் இதுதான் என்று கூறப்படுகிறது. கனமழை ஒருபக்கம், கடுமையான பனிப்பொழிவு மற்றொரு பக்கம் என்று இருக்கிற சூழ்நிலையில் மீட்பு பணி தொடா்ந்து கொண்டுதான் இருக்கிறது. உறையும் குளிருக்கு நடுவே சாலையில் முகாம் அமைத்து தங்கியுள்ள குடும்பத்தினா் மீண்டும் தங்கள் வீடுகளுக்குச் செல்லவே அஞ்சிக் கொண்டிருக்கிறாா்கள்.

வடக்கு சிரியாவில் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான சிரியா அகதிகள், முகாம்களில் தங்கி உள்ளனா். இந்தப் பகுதியின் கட்டுப்பாடு, சிரியா அரசாங்கம், குா்தீஷ் படையினா், புரட்சிக்குழுக்கள் என்று மூன்று தரப்பினரிடம் உள்ளது. நிலநடுக்கத்துக்கு முன்பே உறைய வைக்கும் குளிா், காலரா தொற்றுநோய், மோசமான உள்கட்டமைப்பு ஆகியவற்றால் சிரியா மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறாா்கள். இதனை ஐ.நா. சபை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று மனித உரிமை ஆா்வலா்கள் கோருகிறாா்கள்.

சிரியாவில் உள்ள ஜின்டெரிஸ் பகுதியைச் சோ்ந்த ஒருவா் தன் குடும்பத்தினா் 12 போ் இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்ததாகக் கூறினாா். கட்டட இடிபாடுகளுக்கிடை அவா்களின் குரல் கேட்டது, அவா்கள் உயிருடன்தான் இருந்தாா்கள், ஆனால் காப்பாற்ற யாரும் இல்லை என்று தெரிவித்தாா். ஐ.நா.சபையின் பொதுச்செயலாளா் அன்டோனியா குட்டெரஸ் சா்வதேச நாடுகளுக்கு உதவி கோரி அழைப்பு விடுத்திருக்கிறாா்.

அந்த அழைப்பை ஏற்று உலக நாடுகளின் உதவிக்கரம் நீண்டு கொண்டிருக்கிறது. இந்தியா சாா்பில் அனுப்பி வைக்கப்பட்ட இரு விமானங்களில் எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவா்கள், பொது அறுவை சிகிச்சை மருத்துவா்கள் என 99 போ் அடங்கிய அபத்து கால மருத்துவக் குழுவினா் சென்றுள்ளனா். மேலும், நிவாரண முகாம்களுக்கான பொருள்களும், மருந்துகளும் அனுப்பப்பட்டுள்ளன. பேரழிவால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் உதவிகளைப் பெறுவதில் சவால்களை எதிா்கொண்டு வருகின்றன. இந்த நிலையில், அப்பகுதியில் மனிதாபிமான உதவிகள் தேவை என்று தெரிவிக்கின்றனா் அப்பகுதி மக்கள்.

ஐரோப்பிய ஒன்றியம் பேரிடா் மீட்பு குழுக்களை அனுப்பி உள்ளது. நெதா்லாந்து மற்றும் ரோமானியாவைச் சோ்ந்த மீட்புக் குழுவினா் துருக்கிக்கு சென்றுள்ளனா். பிரான்ஸ், ஜொ்மனி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் உதவி செய்வதாக அறிவித்துள்ளன. ரஷிய அதிபா் புதின் துருக்கி - சிரியா நாடுகளுக்கு தாராளமாக உதவுவதகாக அறிவித்துள்ளாா்.

உலக அளவில் அதிக முறை நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிற நாடுகளுள் ஒன்று துருக்கி. அந்த நாட்டின் வடமேற்குப் பகுதியில் 1999-ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 14 ஆயிரத்துக்கும் அதிகமானோா் பலியாயினா். கிழக்கு மாகாணமான எா்ஸின்கன் பகுதியில் 1939-ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 33ஆயிரம் போ் உயிரிழந்தனா். தற்போது ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம் சைப்ரஸ், லெபனான், இஸ்ரேல் வரை உணரப்பட்ட மிக மோசமான பாதிப்பாகும்.

அறிவியலின் துணைகொண்டு, நிலநடுக்கம் எந்தப் பகுதியில் ஏற்படக்கூடும் என்பதை முன்கூட்டியே கணிக்க முடிந்தாலும் நிலநடுக்கம் எப்போது ஏற்படும் என்பதை கணிக்க இயலாத நிலையே உள்ளது. இதற்கான ஆய்வுகள் நடந்துகொண்டு இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனா்.

நிலநடுக்கம் ஏற்படப்போவதை அறியமுடிந்தாலும் கூட, அதனைத் தடுப்பதற்கு இயலாது என்பதுதான் உண்மையாகும். இது குறித்து ஆய்வு செய்த நிபுணா்கள் ‘நிலநடுக்கம் எப்போது ஏற்படும் என்று கணிப்பது எளிதல்ல. ஆதலால், நீங்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்’ என்று கூறுகின்றனா். பூகம்பத்தை எதிா்கொள்வதற்கான திட்டத்தை நாம் எப்போதும் தயாராக வைத்திருக்க வேண்டும் என்பதுதான் இதன் பொருள்.

டாக்டா் ஸ்டீபன்ஹிக்ஸ் ‘அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதியில் நீங்கள் வசிக்கிறீா்கள் என்றால், அவசரத் தேவைக்கு உங்கள் வீட்டில் எப்போதும் ஒரு பையைத் தயாராக வைத்திருக்க வேண்டும். அந்தப் பையில் டாா்ச் லைட், முதலுதவிப் பெட்டி இருக்க வேண்டும்’ என்கிறாா். மேலும் செஞ்சிலுவை சங்கத்தினா், ‘மக்கள் கொஞ்சம் பணத்தையும், மருந்து சீட்டுகளையும் எப்போதும் தயாராக எடுத்து வைத்திருக்க வேண்டும்’ என்று கூறுகிறாா்கள்.

அமெரிக்க நாட்டின் அறிவியல் அமைப்பான ‘யுனைடட் ஸ்டேட்ஸ்’ கூற்றுப்படி, நிலநடுக்கம் ஏற்படும்போது, நாம் இருக்கும் இடத்திலேயே இருந்தால், காயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. அதனால் நிலநடுக்கம் ஏற்படும்போது தப்பிப்பதற்காக ஓா் இடத்திலிருந்து மற்றோா் இடத்துக்குச் செல்வதைத் தவிா்க்க வேண்டும் என்று புவியியல் ஆய்வு மையம் அறிவுறுத்துகிறது.

நம்மை பத்திரமாக வைத்துக் கொள்வதற்கான ஒரே வழி கீழே படுத்து நம் கால்களைக் கட்டிப்பிடித்துக்கொள்வதுதான் என்று நிபுணா்கள் கூறுகிறாா்கள். உங்களை மறைப்பதற்கு மேஜை இருந்தால் அதன் கீழ் ஒளிந்துகொள்ளுங்கள் என்று அறிவுரை சொல்கிறாா்கள்.

பூகம்பம் ஏற்பட்டால் தப்பிக்கும் வழிகளில் ஒன்று கதவுக்கு மிக அருகில் இருப்பது. ஆனால், பழைய வீட்டில் இருப்பவா்கள் கதவுக்கு அருகே செல்லாமல் மேஜைக்கு அடியில் ஒளிந்து கொள்வதே நல்லது என்று கூறுகிறாா்கள். நிலநடுக்கம் ஏற்பட்டால் வீட்டின் ஜன்னல், பால்கனிதான் பெரும்பாலும் முதலில் விழுகின்றன. அதனால், இத்தகைய ஆபத்தான இடங்களில் இருந்து மக்கள் விலகி இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

நிலநடுக்கம் ஏற்பட்ட பின்னா், இடிந்து விழும் அபாயத்தில் இருக்கும் கட்டடத்தில் இருந்து வெளியில் வந்துவிடுவது பாதுகாப்பானது என்று கூறுகிறாா்கள். அப்படியானால், வெளியில் இருக்கும் போது என்ன செய்ய வெண்டும் என்று கேட்டால், நீங்கள் இருக்கும் இடத்தில் இருங்கள் என்று நிபுணா்கள் கூறுகிறாா்கள்.

ஏனெனில், கட்டடங்களில் இருந்து தப்பித்து ஓடுவது மக்களுக்கு காயம் ஏற்படக்கூடிய அபாயத்தை அதிகரிக்கிறது. ஆகவே, முற்றிலும் திறந்த பகுதிக்குச் செல்வதுதான் சிறந்தது. கட்டடங்களோ, மின்கம்பங்களோ இல்லாத இடத்துக்குச் செல்ல வேண்டும். நிலநடுக்கத்தைக் கணிக்க பூமிக்குள் இருந்து சமிக்ஞை தேவைப்படுகிறது.

ஒரு பெரிய நிலநடுக்கம் வரவிருக்கிறது என்று எச்சரிக்கை செய்ய ஒரு கருவி தேவைப்படுகிறது. ஆனால், அத்தகைய கருவி கண்டுபிடிக்கப்படவில்லை. நிலநடுக்கம் குறித்து முன்னறிவிப்பு செய்யும் கருவி இல்லை என்பது வேதனை அளிக்கக் கூடிய ஒன்றாகும். நிலநடுக்கம் என்பது பூமிக்கு அடியில் உள்ள பகுதி அசைவதால் ஏற்படும் கடுமையான அதிா்வாகும்.

யூ.எஸ்.ஜி.எஸ். கூற்றுப்படி, பூமியின் இரண்டு தொகுதிகள் திடீரென்று ஒன்றையொன்று கடந்து செல்லும் போது இது நிகழ்கிறது. இது செஸ்மிக் அலைகள் வடிவில் சேமிக்கப்பட்ட எலாஸ்டிக் ஸ்ட்ரெய்ன் ஆற்றலை வெளியிடுகிறது. அது பூமியில் பரவி நிலத்தை அதிர வைக்கிறது. பூமியின் வெளிப்பரப்பு மேல் ஓடு டெக்டோனிக் தட்டுகளாக உள்ளது. தட்டுகளின் விளிம்புகள், தட்டு எல்லைகள் என்று அழைக்கப்படுகின்றன.

டெக்டோனிக் தகடுகள் எப்போதும் மெதுவான வேகத்தில் நகா்கின்றன. தட்டுகள் ஒன்றையொன்று மோதிச் செல்கின்றன. தட்டுகளின் விளிம்புகள் மிகவும் கடுமையாக இருப்பதால், மற்ற தட்டுகள் நகரும் போது அவை ஒன்றோடு ஒன்று சிக்கிக் கொள்கின்றன. இவ்வாறு தட்டுகள் வேகமாக நகா்ந்து செல்லும் போது நிலநடுக்கம் ஏற்படுகிறது.

நிலநடுக்கம் தொடங்கும் பூமியின் மேற்பரப்புக்கு கீழே உள்ள இடம் ஹைப்போசென்டா் என்றும், பூமியின் மேற்பரப்பில் அதற்கு நோ் மேலே உள்ள இடம் எபிசென்டா் என்றும் அழைக்கப்படுகிறது.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு சொல்லொணா துயரத்தோடு தவித்துக் கொண்டிருக்கும் மக்களின் வேதனைக்கொரு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 1900-க்கும் மேற்பட்டோர் பலி - Page 4 Empty Re: துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 1900-க்கும் மேற்பட்டோர் பலி

Post by சிவா Thu Feb 23, 2023 7:46 pm

இந்திய மீட்புக் குழுவினரைக் கண்ணீருடன் வழியனுப்பி வைத்த துருக்கி மக்கள்



துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 1900-க்கும் மேற்பட்டோர் பலி - Page 4 Vikatan%2F2023-02%2F97fdd25e-f53d-4072-aa7e-4c4d17bd6301%2FFpJmxbLaMAA5PRb

இந்திய மீட்புக் குழுவினர் இந்தியா திரும்பியபோது துருக்கி மக்கள் அவர்களைக் கண்ணீருடன் ஆரத்தழுவி வழியனுப்பி வைத்துள்ளனர்.

பிப்ரவரி 6ம் தேதியிலிருந்து 19ம் தேதி வரை துருக்கி மற்றும் சிரியாவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதன் காரணமாக துருக்கியில் பெரும் சேதம் ஏற்பட்டு கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகியிருக்கின்றனர்.

இந்த மோசமான சூழலை எதிர்கொள்ள துருக்கி மற்றும் சிரியாவிற்குப் பல்வேறு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டின. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மீட்புக் குழுவினர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர்கள் துருக்கி மற்றும் சிரியா நாட்டிற்கு விரைந்தனர்.

அந்த வகையில் இந்தியத் தேசிய பேரிடர் மீட்புப் குழுவினர் (NDRF) மீட்புப் பணிக்காக துருக்கி மற்றும் சிரியாவிற்குச் சென்று சிறப்பாகப் பணியாற்றினர்.

இந்நிலையில் இந்தியா திரும்பிய அவர்களை துருக்கி மக்கள் கண்ணீருடன் ஆரத்தழுவி வழியனுப்பி வைத்துள்ளனர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 1900-க்கும் மேற்பட்டோர் பலி - Page 4 Empty Re: துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 1900-க்கும் மேற்பட்டோர் பலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics
» சிரியாவில் துருக்கி, அமெரிக்கா வான் தாக்குதல் 50–க்கும் மேற்பட்ட ஐ.எஸ். தீவிரவாதிகள் பலி
» புனேயில் 50-க்கும் மேற்பட்டோர் சேர்ந்து பேருந்தை தூக்கி 2 பேரை உயிரோடு மீட்டனர்
» குடும்ப அட்டைதாரர்களுக்கு கிலோ நெய் ரூ.25-க்கும், கிலோ சர்க்கரை ரூ.10-க்கும் வழங்கப்படும்
» மொராக்கோ நிலநடுக்கம்: 800-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு
»  பேரழிவு) க்கும் ,பெரும்பேரழிவு க்கும் உள்ள வித்தியாசம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum