Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டுby heezulia Today at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 1900-க்கும் மேற்பட்டோர் பலி
5 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 1900-க்கும் மேற்பட்டோர் பலி
துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 1900-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
இதில் சிரியாவில் மட்டும் 783 பேர் உயிரிழந்திருப்பதாக மதிப்பிடப்படுகிறது.
7.8 ரிக்டர் அளவில் அதிகாலை நேரத்தில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு பிற்பகலில் 7.5 ரிக்டர் அளவில் மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.
சிரியா எல்லையை ஒட்டிய தென்கிழக்கு துருக்கியில் ஒரு பரந்த பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் முதலில் ஏற்பட்டது. 7.8 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி 4:17 மணிக்கு காஸியான்டெப் நகருக்கு அருகில் 17.9 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது.
912 பேர் உயிரிழந்ததை துருக்கி அதிபர் எர்துவான் முதலில் உறுதி செய்தார். தியார்பாகிர் உட்பட 10 நகரங்கள் இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
உலகம் எங்கிலும் இருந்து தலைவர்கள் பாதிக்கப்பட்டோருக்கு உதவப் போவதாக உறுதி அளித்துள்ளனர்.
![துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 1900-க்கும் மேற்பட்டோர் பலி _1285310](https://i.servimg.com/u/f15/19/97/90/81/_1285310.jpg)
பிபிசி
இதில் சிரியாவில் மட்டும் 783 பேர் உயிரிழந்திருப்பதாக மதிப்பிடப்படுகிறது.
7.8 ரிக்டர் அளவில் அதிகாலை நேரத்தில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு பிற்பகலில் 7.5 ரிக்டர் அளவில் மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.
சிரியா எல்லையை ஒட்டிய தென்கிழக்கு துருக்கியில் ஒரு பரந்த பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் முதலில் ஏற்பட்டது. 7.8 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி 4:17 மணிக்கு காஸியான்டெப் நகருக்கு அருகில் 17.9 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது.
912 பேர் உயிரிழந்ததை துருக்கி அதிபர் எர்துவான் முதலில் உறுதி செய்தார். தியார்பாகிர் உட்பட 10 நகரங்கள் இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
உலகம் எங்கிலும் இருந்து தலைவர்கள் பாதிக்கப்பட்டோருக்கு உதவப் போவதாக உறுதி அளித்துள்ளனர்.
![துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 1900-க்கும் மேற்பட்டோர் பலி _1285310](https://i.servimg.com/u/f15/19/97/90/81/_1285310.jpg)
பிபிசி
டார்வின்- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 1900-க்கும் மேற்பட்டோர் பலி
ஏற்கனவே மக்கள் அங்கு போர் மற்றும் உள்நாட்டு கலவரங்களால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த இயற்கை சீற்றம் அவர்கள் நிலையை மேலும் மோசமாக்கியுள்ளது.
உலக நாடுகள் உதவி செய்து அவர்கள் துயர் துடைக்க வேண்டும்.
உலக நாடுகள் உதவி செய்து அவர்கள் துயர் துடைக்க வேண்டும்.
Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 1900-க்கும் மேற்பட்டோர் பலி
துருக்கி-சிரியா நில நடுக்கம்: பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டலாம் என அமெரிக்கா தகவல்!
துருக்கி மற்றும் சிரியா எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக பத்தாயிரம் பேர் வரை உயிரிழக்க வாய்ப்பிருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இன்று அதிகாலை துருக்கி மற்றும் சிரியா எல்லையில் பயங்கர நிலநடக்கம் ஏற்பட்டதை அடுத்து இதுவரை 1300க்கும் மேற்பட்டோர் பலியானதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி சற்று முன் இரண்டாவது முறையாக மீண்டும் நில நடக்கும் ஏற்பட்டுள்ளதை அடுத்து பல கட்டிடங்கள் குலுங்கி தரைமட்டமாகி இருப்பதாகவும் இந்த இடிபாடுகளில் ஏராளமான சிக்கி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இதுவரை 1300க்கும் அதிகமானோர் உயிர் இழந்ததாக கூறப்பட்டிருக்கும் நிலையில் மொத்த இறப்பு எண்ணிக்கை 10,000 பேரை எட்டும் என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கம் காரணமாக ஒரு பில்லியன் டாலர் முதல் 10 பில்லியன் டாலர் வரை பொருளாதார இழப்பு ஏற்படும் என்றும் துருக்கியின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது இரண்டு சதவீதமாக இருக்கும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 1900-க்கும் மேற்பட்டோர் பலி
இறைவா!
ஏனிப்படி
சோதிக்கிறாய்?
ஏனிப்படி
சோதிக்கிறாய்?
Re: துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 1900-க்கும் மேற்பட்டோர் பலி
துருக்கி, சிரியா நிலநடுக்கம்: குவியும் சா்வதேச உதவிகள்
சிரியாவில் நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த சிறுமியை மீட்டு, சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற தன்னாா்வலா்கள். ~துருக்கியின் அடானா நகரம். ~சிரியாவில் கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஜாண்டரிஸ
நிலநடுக்கத்தால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள துருக்கிக்கும், சிரியாவுக்கும் சா்வதேச உதவிகள் குவிந்து வருகின்றன.
இது குறித்து துருக்கி அதிபா் எா்டோகன் கூறுகையில், இடிந்து விழுந்த கட்டடங்களில் சிக்கியுள்ளவா்களைத் தேடிக் கண்டறிவதற்கும், மீட்புப் பணிகளில் ஈடுபடுவதற்குமான பணிகளில் உதவியளிப்பதற்கு 45 நாடுகள் முன்வந்துள்ளதாகத் தெரிவித்தாா்.
இந்த மோசமான சூழலில் தங்களுக்கு உதவ வேண்டும் என்று சா்வதேச நாடுகளிடம் சிரியா அதிபா் அல்-அஸாத் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
உள்நாட்டுப் போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிரியாவில், வெளிநாட்டு மீட்புக் குழுவினரின் உதவி கிடைப்பதில் பின்னடைவு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்த நிலையில், சிரியா வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நிலநடுக்கங்களால் சிரியாவல் மிகக் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனை எதிா்கொள்ள ஐ.நா. உறுப்பு நாடுகள், சா்வதேச சமுதாயம், செஞ்சிலுவை சங்கம், பிற நிவாரண அழைப்புகள் எங்களுக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்’ என்று கோரப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், துருக்கிக்கும் சிரியாவுக்கும் பல்வேறு நாடுகள் உதவிக் கரம் நீட்டி வருகின்றன.
அமெரிக்கா: இந்த நிலநடுக்கம் குறித்து அமெரிக்க அதிபா் ஜோ பைடன் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், ‘சிரியா, துருக்கியில் நிலநடுக்கத்தால் மிகப் பெரிய உயிா்ச் சேதம் ஏற்பட்டுள்ள தகவல் வேதனை அளிக்கிறது. துருக்கியில் நிலவரத்தை உன்னிப்பாக கவனிக்குமாறும், அங்கு நடைபெறும் மீட்புப் பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொண்டு அனைத்து உதவிகளை அளிக்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
ரஷியா: சக்திவாய்ந்த நிலநடுக்கங்களைத் தொடா்ந்து, துருக்கி அதிபா் எா்டோகனையும், சிரியா அதிபா் அல்-அஸாதையும் தொலைபேசியில் தொடா்பு கொண்டு பேசிய ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், இரு நாடுகளுக்கும் மீட்புக் குழுவினரை அனுப்புவதாக உறுதியளித்தாா். இதுகுறித்து ரஷிய அதிபா் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், சிரியாவுக்கு கூடிய விரைவில் மீட்புக் குழு வீரா்களை அவரசக் கால பணிகள் துறை அமைச்சகம் அனுப்பும். அதே போல், ரஷிய மீட்புக் குழுவினரின் உதவியை ஏற்பதாக துருக்கி அதிபா் எா்டோகனும் ஒப்புக்கொண்டுள்ளாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன்: துருக்கியில் நிலநடுக்க இடிபாடிகளில் சிக்கியுள்ளவா்களைத் தேடும் பணியை மேற்கொள்வதற்காக, 76 தேடுதல் மற்றும் மீட்புப் பணி நிபுணா்களும், 4 மோப்ப நாய்களும் அந்த நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. பிரிட்டனின் அவசரக்கால மருத்துவக் குழு அங்கு நிலமையை ஆய்வு செய்யும் என்று கூறிய அதிகாரிகள், சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உதவிப் பணிகளை மேற்கொள்வதற்காக ஐ.நா.வை பிரிட்டன் அரசு அணுகியுள்ளதாகக் கூறினா்.
ஐக்கிய அரபு அமீரகம்: துருக்கியில் நிலநடுக்கத்தால் காயமடைந்தவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அந்த நாட்டில் மருத்துவமனை ஒன்றை அமைக்கவிருப்பதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி, சிரியாவில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு தங்களது அவசரக் கால நிவாரணக் குழுக்களை அனுப்ப முடிவு செய்துள்ளாகவும் அந்த நாடு கூறியுள்ளது.
ஸ்பெயின்: ஸ்பெயின் பாதுகாப்புத் துறை அமைச்சா் மாா்கரிட்டா ரோபல்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக, தீயணைப்பு வீரா்கள் மற்றும் உபகரணங்களுடன் தங்களது ஏ400 ரக ராணுவ விமானம் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்தாா். மேலும், மீட்புக் குழுவினருடன் இணைந்து பணியாற்ற சிவில் பணியாளா்கள் அடங்கிய ஏா்பஸ் ஏ330 விமானமொன்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறினாா்.
இராக்: நிவாரணப் பொருள்கள், உணவு, எரிபொருள் ஆகிவற்றுடன் துருக்கி மற்றும் சிரியாவுக்கு தங்களது தேசிய பாதுகாப்புக் குழுவினா் அனுப்பப்படுவாா்கள் என்று இராக் உறுதியளித்துள்ளது.
இது தவிர, இந்தியா, ஐரோப்பிய யூனியன், ஜொ்மனி, இத்தாலி, கிரீஸ், இஸ்ரேல், உக்ரைன், போலந்து, கத்தாா், பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி, சிரியாவுக்கு உதவிக் கரம் நீட்டியுள்ளன.
Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 1900-க்கும் மேற்பட்டோர் பலி
துருக்கி, சிரியா ஆகிய இரு நாடுகளுக்கும் பல்வேறு நாடுகள் உதவிகள் அளிப்பது மன நிம்மதியைத் தருகின்றது.
இரு நாட்டு மக்களும் இந்த வேதனையிலிருந்து மனதிடத்துடன் மீண்டு வந்து சகஜ நிலைக்கு திரும்பிட வேண்டி இறைவனிடம் நாம் அனைவரும் பிரார்த்திப்போம்!
இரு நாட்டு மக்களும் இந்த வேதனையிலிருந்து மனதிடத்துடன் மீண்டு வந்து சகஜ நிலைக்கு திரும்பிட வேண்டி இறைவனிடம் நாம் அனைவரும் பிரார்த்திப்போம்!
சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 1900-க்கும் மேற்பட்டோர் பலி
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 1900-க்கும் மேற்பட்டோர் பலி
துருக்கி சிரிய பகுதிகளில் ஏற்பட்ட கடும் நில அதிர்வில் பலியானோர் எண்ணிக்கை பல ஆயிரங்களை கடந்து கொண்டிருக்கின்றது
துருக்கியின் நில அமைப்பும் அந்த வலுவற்ற நிலத்தின் கட்டடங்களும் இந்த் அழிவுக்கு காரணம் எனும் கூற்றும் உண்டு, பொதுவாக நில அதிர்வு மக்களை கொல்லாது கட்ட இடிபாடுகளே கொல்லும் துருக்கியில் அதுதான் நடந்திருக்கின்றது
சுமார் 45 நாடுகள் அவசரகதியில் உதவி கொண்டிருக்கின்றன, அரசியலில் எதிரி என்றாலும் இந்தியா இந்த இக்கட்டான நேரத்தில் துருக்கிக்கு பல உதவிகளையும் மீட்பு படையினையும் அனுப்பி பெரும் உதவியினை செய்து கொண்டிருகின்றது
பொதுவாக பெரும் அதிர்வுக்க்கு பின் சில சிறிய அதிர்வுகள் வருவது வாடிக்கை , அப்படி மறுபடி மறுபடி சிறிய அதிர்வுகள் வரும் நிலையிலும் மீட்பு பணிகள் தீவிரமாக நடக்கின்றன
காயமுற்றோர் அனைவரும் நல்லபடியாக மீட்டெடுக்கபட பிரார்த்திப்போம்
பெரும் கட்டடங்களை எளிதாக கட்டும் மானிடனால் அவற்றின் இடிபாடுகளை அவசரகதியில் அப்புறபடுத்தமுடியாது என்பது ஒரு பலவீனம், மானிடன் விஞ்ஞானத்தில் எவ்வளவு வளர்ந்தாலும் பிரபஞ்சத்திடம் தோற்றுகொண்டே இருக்க வேண்டும் என்பது விதி
அந்த விதி துருக்கி சிரியாவில் கண்முன் ஆடிகொண்டிருக்கின்றது
துருக்கியின் நில அமைப்பும் அந்த வலுவற்ற நிலத்தின் கட்டடங்களும் இந்த் அழிவுக்கு காரணம் எனும் கூற்றும் உண்டு, பொதுவாக நில அதிர்வு மக்களை கொல்லாது கட்ட இடிபாடுகளே கொல்லும் துருக்கியில் அதுதான் நடந்திருக்கின்றது
சுமார் 45 நாடுகள் அவசரகதியில் உதவி கொண்டிருக்கின்றன, அரசியலில் எதிரி என்றாலும் இந்தியா இந்த இக்கட்டான நேரத்தில் துருக்கிக்கு பல உதவிகளையும் மீட்பு படையினையும் அனுப்பி பெரும் உதவியினை செய்து கொண்டிருகின்றது
பொதுவாக பெரும் அதிர்வுக்க்கு பின் சில சிறிய அதிர்வுகள் வருவது வாடிக்கை , அப்படி மறுபடி மறுபடி சிறிய அதிர்வுகள் வரும் நிலையிலும் மீட்பு பணிகள் தீவிரமாக நடக்கின்றன
காயமுற்றோர் அனைவரும் நல்லபடியாக மீட்டெடுக்கபட பிரார்த்திப்போம்
பெரும் கட்டடங்களை எளிதாக கட்டும் மானிடனால் அவற்றின் இடிபாடுகளை அவசரகதியில் அப்புறபடுத்தமுடியாது என்பது ஒரு பலவீனம், மானிடன் விஞ்ஞானத்தில் எவ்வளவு வளர்ந்தாலும் பிரபஞ்சத்திடம் தோற்றுகொண்டே இருக்க வேண்டும் என்பது விதி
அந்த விதி துருக்கி சிரியாவில் கண்முன் ஆடிகொண்டிருக்கின்றது
பிரம்ம ரிஷியார் @ முகநூல்
Re: துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 1900-க்கும் மேற்பட்டோர் பலி
![துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 1900-க்கும் மேற்பட்டோர் பலி STboaQE](https://i.imgur.com/STboaQE.jpg)
துருக்கிக்கு நிவாரணப் பொருட்கள், மருந்துகள் ஏற்றிச் செல்லும் நம் நாட்டு விமானம் கிளம்பிய நிலையில் பாகிஸ்தான் அதன் வான்வெளியைப் பயன்படுத்த தடை விதித்துள்ளது.
(ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா உதவி செய்யும் பொழுதும் இதே பிரச்சனையைத்தான் கொடுத்தார்கள். துருக்கிக்கும் இதே நிலை.)
26 ஜனவரி 2001 ல் குஜராத்தில் நடந்த பூகம்பத்தில் 20000 பேர் இறந்தனர். உலக நாடுகள் அனைத்தும் உதவி செய்த பொழுது துருக்கி ம்ட்டும் உதவி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 1900-க்கும் மேற்பட்டோர் பலி
![துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 1900-க்கும் மேற்பட்டோர் பலி ZNj8q8O](https://i.imgur.com/ZNj8q8O.jpg)
70 பேர் கொண்ட குழுவை மீட்புப் பணிக்காக மலேசியா துருக்கிக்கு அனுப்பியுள்ளது.
சிரியாவுக்கு ஈரான் மற்றும் ஈராக் தவிர மற்ற நாடுகள் இதுவரை உதவி செய்ய முன்வரவில்லை.
Page 1 of 4 • 1, 2, 3, 4
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சிரியாவில் துருக்கி, அமெரிக்கா வான் தாக்குதல் 50–க்கும் மேற்பட்ட ஐ.எஸ். தீவிரவாதிகள் பலி
» புனேயில் 50-க்கும் மேற்பட்டோர் சேர்ந்து பேருந்தை தூக்கி 2 பேரை உயிரோடு மீட்டனர்
» குடும்ப அட்டைதாரர்களுக்கு கிலோ நெய் ரூ.25-க்கும், கிலோ சர்க்கரை ரூ.10-க்கும் வழங்கப்படும்
» மொராக்கோ நிலநடுக்கம்: 800-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு
» பேரழிவு) க்கும் ,பெரும்பேரழிவு க்கும் உள்ள வித்தியாசம்
» புனேயில் 50-க்கும் மேற்பட்டோர் சேர்ந்து பேருந்தை தூக்கி 2 பேரை உயிரோடு மீட்டனர்
» குடும்ப அட்டைதாரர்களுக்கு கிலோ நெய் ரூ.25-க்கும், கிலோ சர்க்கரை ரூ.10-க்கும் வழங்கப்படும்
» மொராக்கோ நிலநடுக்கம்: 800-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு
» பேரழிவு) க்கும் ,பெரும்பேரழிவு க்கும் உள்ள வித்தியாசம்
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|