Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
இரட்டை இலை சின்னம் --உச்ச நீதிமன்றத்திற்கு தேர்தல் ஆணையம் பதில்
3 posters
Page 1 of 1
இரட்டை இலை சின்னம் --உச்ச நீதிமன்றத்திற்கு தேர்தல் ஆணையம் பதில்
புதுடெல்லி: தனது கையொப்பமிட்ட வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் ஏற்க உத்தரவிடக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் தொடர்ந்துள்ள வழக்கில், இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவெடுப்பார் என்று தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதி மகேஷ்வரி தினேஷ் தலைமையிலான அமர்வு முன்பு கடந்த வாரம் அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஒரு முறையீடு செய்யப்பட்டது. அதில், “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எங்களது தரப்பில் தனியாக வேட்பாளரை நிறுத்த விரும்புகிறோம். ஆனால், கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் என்ற முறையில் எனது கையொப்பத்துடன் அனுப்பக் கூடிய வேட்பாளரின் பெயரை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்க மறுக்கிறது. எனவே, இந்த விண்ணப்பத்தை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” என்று முறையிடப்பட்டது.
ஜனவரி 30-ம் தேதியன்று, தனது கையொப்பமிட்ட வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் ஏற்க உத்தரவிடக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த மனு தொடர்பான விவரங்களை ஓபிஎஸ் மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்திடம் பகிர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு உத்தரவிட்டது. மேலும், மனு தொடர்பாக ஓபிஎஸ் மற்றும் தேர்தல் ஆணையம் பதிலளிக்கவும் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கில், இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை (பிப்.2) பதில் மனு தாக்கல் செய்தது. அதில், “வாக்காளர் பட்டியலை தயாரித்தல், தேர்தலை கண்காணித்தலே தேர்தல் ஆணையத்தின் பணி. தேர்தல் ஆணையம் ஒரு கட்சியின் உள் விவகாரங்களில் தலையிடுவது இல்லை. மேலும், ஒரு கட்சியின் செயல்பாடுகளை கண்காணிப்பதோ, முறைப்படுத்துவதோ இல்லை.
கையெழுத்திடும் அதிகாரமுள்ளவர் என்று தேர்தல் ஆணைய ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளவரின் கையெழுத்தைக் கொண்ட வேட்புமனுக்களை ஏற்க முடியும். இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்தை யாரும் அணுகவில்லை. எனவே, இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவெடுப்பார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த வழக்கில் ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்படிருந்த பதில் மனுவில், “பொதுக்குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், இடையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்க கூடாது. மேல்முறையீட்டு வழக்கில் அனைத்து விவகாரங்களும் அடங்கியுள்ள நிலையில், இடைக்கால மனு என்பது விசாரணைக்கு உகந்தது அல்ல.
![இரட்டை இலை சின்னம் --உச்ச நீதிமன்றத்திற்கு தேர்தல் ஆணையம் பதில் 937807](https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/02/xlarge/937807.jpg)
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் காலாவதியாகிவிட்டது என்பதை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கு மூலமே மேற்கண்ட பதவிகள் ரத்தாகிவிட்டதா, இல்லையா என்பது முடிவாகும். அதுவரை எடப்பாடி பழனிசாமிக்கு கட்சியில் அதிகாரம் கேட்டு உரிமை கோர முடியாது. எனவே, அவர் தரப்பில், தற்போது தாக்கல் செய்துள்ள மனுவை ஏற்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தால் அது பொதுக்குழு வழக்கின் தீர்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
நன்றி தமிழ் ஹிந்து.
உச்ச நீதிமன்ற நீதிபதி மகேஷ்வரி தினேஷ் தலைமையிலான அமர்வு முன்பு கடந்த வாரம் அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஒரு முறையீடு செய்யப்பட்டது. அதில், “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எங்களது தரப்பில் தனியாக வேட்பாளரை நிறுத்த விரும்புகிறோம். ஆனால், கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் என்ற முறையில் எனது கையொப்பத்துடன் அனுப்பக் கூடிய வேட்பாளரின் பெயரை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்க மறுக்கிறது. எனவே, இந்த விண்ணப்பத்தை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” என்று முறையிடப்பட்டது.
ஜனவரி 30-ம் தேதியன்று, தனது கையொப்பமிட்ட வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் ஏற்க உத்தரவிடக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த மனு தொடர்பான விவரங்களை ஓபிஎஸ் மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்திடம் பகிர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு உத்தரவிட்டது. மேலும், மனு தொடர்பாக ஓபிஎஸ் மற்றும் தேர்தல் ஆணையம் பதிலளிக்கவும் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கில், இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை (பிப்.2) பதில் மனு தாக்கல் செய்தது. அதில், “வாக்காளர் பட்டியலை தயாரித்தல், தேர்தலை கண்காணித்தலே தேர்தல் ஆணையத்தின் பணி. தேர்தல் ஆணையம் ஒரு கட்சியின் உள் விவகாரங்களில் தலையிடுவது இல்லை. மேலும், ஒரு கட்சியின் செயல்பாடுகளை கண்காணிப்பதோ, முறைப்படுத்துவதோ இல்லை.
கையெழுத்திடும் அதிகாரமுள்ளவர் என்று தேர்தல் ஆணைய ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளவரின் கையெழுத்தைக் கொண்ட வேட்புமனுக்களை ஏற்க முடியும். இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்தை யாரும் அணுகவில்லை. எனவே, இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவெடுப்பார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த வழக்கில் ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்படிருந்த பதில் மனுவில், “பொதுக்குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், இடையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்க கூடாது. மேல்முறையீட்டு வழக்கில் அனைத்து விவகாரங்களும் அடங்கியுள்ள நிலையில், இடைக்கால மனு என்பது விசாரணைக்கு உகந்தது அல்ல.
![இரட்டை இலை சின்னம் --உச்ச நீதிமன்றத்திற்கு தேர்தல் ஆணையம் பதில் 937807](https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/02/xlarge/937807.jpg)
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் காலாவதியாகிவிட்டது என்பதை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கு மூலமே மேற்கண்ட பதவிகள் ரத்தாகிவிட்டதா, இல்லையா என்பது முடிவாகும். அதுவரை எடப்பாடி பழனிசாமிக்கு கட்சியில் அதிகாரம் கேட்டு உரிமை கோர முடியாது. எனவே, அவர் தரப்பில், தற்போது தாக்கல் செய்துள்ள மனுவை ஏற்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தால் அது பொதுக்குழு வழக்கின் தீர்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
நன்றி தமிழ் ஹிந்து.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: இரட்டை இலை சின்னம் --உச்ச நீதிமன்றத்திற்கு தேர்தல் ஆணையம் பதில்
என்னவாகும் இரட்டை இலை?
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் அதிமுகவில் இபிஎஸ்-ஓபிஎஸ் என இரு அணிகளும் வேட்பாளா்களை அறிவித்துள்ள நிலையில், இரட்டை இலை சின்னம் என்னவாகும் என்கிற கேள்வி எழுந்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் பிப். 27-இல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, பிப். 7-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். பிப். 8-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறும். வேட்புமனுவை திரும்பப் பெற பிப். 10-ஆம் தேதி கடைசி நாள். அன்றைய தினமே இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்படும்.
எப்போதும் வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள் வரும் வரை தாமதித்து வேட்பாளரை அறிவிக்கும் காங்கிரஸ், இம்முறை முன்கூட்டியே வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை அறிவித்து ஒரு வாரத்துக்கும் மேலாக தோ்தல் களத்தில் முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. முன்கூட்டியே வேட்பாளரை அறிவித்து தோ்தல் களத்தில் பம்பரமாகச் சுழலும் அதிமுக, இம்முறை நீண்ட காத்திருப்புக்குப் பின் வேட்பாளரை அறிவித்துள்ளது.
இரு அணிகளும் போட்டி: அதிமுகவில் இபிஎஸ், ஓபிஎஸ் என இரு அணிகளும் வேட்பாளா்களை அறிவித்துள்ளதால் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடப்போவது யாா் அல்லது யாருக்கும் கிடைக்காமல் இரட்டை இலை முடங்கிவிடுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
அதிமுக பொதுக் குழு விவகார வழக்கு விசாரிக்கப்பட்டு தீா்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்திருந்த நிலையில், இடைத்தோ்தலை காரணம் காட்டி இபிஎஸ் தரப்பினா் தாக்கல் செய்த இடையீட்டு மனு வெள்ளிக்கிழமை (பிப். 3) விசாரணைக்கு வரும்போது இரட்டை இலை சின்னம் என்னவாகும் என்பதற்கான விடை தெரியக்கூடும்.
அதிமுக தலைமை விவகாரத்தில் தோ்தல் ஆணையம் தனது பதிலை வெள்ளிக்கிழமைக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், ஜூலை 11-இல் நடைபெற்ற அதிமுக பொதுக் குழு விவகார வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால், இபிஎஸ் தரப்பில் இடைக்கால நிவாரணம் கோருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இரட்டை இலை சின்னம் தொடா்பாக இடைத்தோ்தல் தொகுதியின் தோ்தல் அலுவலா்தான் இறுதி முடிவை எடுப்பாா் என்றும் பதில் மனுவை தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை (பிப்.2) தாக்கல் செய்தது.
இபிஎஸ் தரப்பை பொருத்தவரை உச்சநீதிமன்றம் தீா்ப்பை ஒத்திவைத்திருப்பதால், சென்னை உயா்நீதிமன்றம் உறுதி செய்த தீா்ப்பை தோ்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள வேண்டும்; இதை தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவாக பிறப்பிக்க வேண்டும்; இது நடந்துவிட்டால் இடைக்கால பொதுச் செயலா் என்ற அடிப்படையில் இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்கான ஏ, பி படிவங்களில் கையொப்பமிடும் உரிமை இபிஎஸ்ஸு-க்கு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் உள்ளனா்.
ஓபிஎஸ் தரப்பை பொருத்தவரை உச்சநீதிமன்றம் தீா்ப்பை ஒத்திவைத்திருப்பதால், உயா்நீதிமன்றத் தீா்ப்பை தோ்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள முடியாது; தங்களிடம் இப்போது இருக்கும் ஆவணங்களின்படி ஒருங்கிணைப்பாளா்-இணை ஒருங்கிணைப்பாளா் என்பதுதான் அதிமுக தலைமைப் பொறுப்பாக உள்ளது என தோ்தல் ஆணையம் தொடா்ந்து தெரிவித்து வருகிறது. எனவே, இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்கான படிவங்களில் கையொப்பமிடும் உரிமை இருவருக்கும் (ஓபிஎஸ்-இபிஎஸ்) தொடரும் என்பது ஓபிஎஸ் தரப்பினரின் நம்பிக்கை.
இடைக்கால தீா்ப்பு கிடைக்குமா?: தோ்தல் ஆணையம் தனது பதில் மனுவைத் தாக்கல் செய்துள்ள நிலையில், உச்சதிமன்றம் என்ன முடிவு செய்யப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும்.
இவ்வழக்கில் இடைக்காலத் தீா்ப்பு அல்லது இறுதித் தீா்ப்பை உச்சநீதிமன்றம் வெளியிடக்கூடும் என்பது சட்டவல்லுநா்களின் கருத்தாக உள்ளது.
இந்திய தோ்தல் ஆணையத்தால் தில்லியில் அண்மையில் நடத்தப்பட்ட ரிமோட் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் தொடா்பான ஆலோசனைக் கூட்டத்துக்கான அழைப்பில் அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி என்றுதான் கடிதம் அனுப்பியிருந்தது. தோ்தல் ஆணையத்தின் இணையதளத்திலும் இதே நிலைதான் நீடிக்கிறது.
சுயேச்சை சின்னத்துக்கு தயாராகும் இபிஎஸ்-ஓபிஎஸ்: ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரும் இணைந்த இரட்டைத் தலைமைதான் அதிமுக என தோ்தல் ஆணையம் பதில் தெரிவித்துள்ளதால், இபிஎஸ் இடைக்கால மனு மீது உச்சநீதிமன்றம் இடைக்கால தீா்ப்பை வெளியிட்டாலும் அதனால் இடைத்தோ்தலில் இரட்டை இலை சின்னம் கிடைக்குமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.
இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்கான ஏ, பி படிவங்களில் கையொப்பமிட ஓபிஎஸ் தயாராக இருந்தாலும், இபிஎஸ் தயாராக இல்லை என்பதால் யாருக்கும் இரட்டை இலை சின்னம் கிடைக்காது. பிப். 10-ஆம் தேதி இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்படவுள்ள நிலையில், அதற்குள் தீா்ப்பு வராவிட்டாலும் இரட்டை இலை சின்னம் யாருக்கும் கிடைக்காமல் போகலாம்.
எனவே, ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலைப் பொருத்தவரை இபிஎஸ்-ஓபிஎஸ் என யாராவது ஒரு தரப்புக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்க வாய்ப்புகள் மிகக் குறைவுதான்.
இந்த இடைத்தோ்தலைப் பொருத்தவரை அதிமுகவில் எந்தத் தரப்புக்கும் ஆதரவாக பாஜக இல்லை என்றும், இடைத்தோ்தல் நெருக்கடியால் இரு தரப்பினருக்கும் இடையே சமரசம் ஏற்பட வாய்ப்பு உருவாகலாம் என பாஜக தேசியத் தலைமை கணக்குப் போட்டிருக்கக்கூடும் என்றும் தெரிகிறது.
‘இரட்டை இலை கிடைக்காவிட்டாலும் தனிச் சின்னத்தில் போட்டியிட்டு தனது பலத்தைக் காட்ட இபிஎஸ் தயாராகிவிட்டாா்; ஓபிஎஸ்ஸுடன் சமரசம் செய்து அரசியல் ரீதியாக பின்னடைவைச் சந்திக்கத் தயாராக இல்லை என்றும், இபிஎஸ் பெறும் வாக்கில் மூன்றில் ஒரு பங்கு வாக்குகளைப் பெற்றுவிட வேண்டும் என்ற இலக்குடன் சுயேச்சை சின்னத்தில் களம் இறங்க ஓபிஎஸ் தரப்பு தயாராகி வருகிறது’ என்றும் கூறுகின்றனா் அரசியல் நோக்கா்கள்.
எம்ஜிஆா், ஜெயலலிதா மறைவுக்குப் பின் இரண்டு முறை முடக்கப்பட்ட இரட்டை இலை, ஓபிஎஸ்-இபிஎஸ் அதிகார யுத்தத்தால் மூன்றாவது முறையாக முடங்குமா அல்லது ஏதாவது ஒரு தரப்புக்கு கிடைக்குமா என்பதற்கான விடை பிப். 10-ஆம் தேதி கிடைத்துவிடும்.
தினமணி
Re: இரட்டை இலை சின்னம் --உச்ச நீதிமன்றத்திற்கு தேர்தல் ஆணையம் பதில்
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிப்பதில் சிக்கல்: தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் பதில் மனு
» இரட்டை இலை சின்னம்: தேர்தல் கமிஷன் விசாரணைக்கு தடையில்லை
» இரட்டை இலை யாருக்கும் இல்லை: முடக்கியது தேர்தல் ஆணையம்
» இரட்டை இலை சின்னம் யாருக்கு? தேர்தல் கமிஷன் விசாரணை 6–ந் தேதிக்கு ஒத்திவைப்பு
» டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் வழங்க உத்தரவிட முடியாது: தலைமை தேர்தல் ஆணையம்
» இரட்டை இலை சின்னம்: தேர்தல் கமிஷன் விசாரணைக்கு தடையில்லை
» இரட்டை இலை யாருக்கும் இல்லை: முடக்கியது தேர்தல் ஆணையம்
» இரட்டை இலை சின்னம் யாருக்கு? தேர்தல் கமிஷன் விசாரணை 6–ந் தேதிக்கு ஒத்திவைப்பு
» டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் வழங்க உத்தரவிட முடியாது: தலைமை தேர்தல் ஆணையம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|