புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Raji@123 | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழக அரசியல்வாதிகளும் அமலாக்கத் துறையும் | செய்தித் தொகுப்புகள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
தமிழக அரசியல் களம் மிகவும் வித்தியாசமாக தென்படுகின்றது, இது தமிழக வரலாற்றிலே மிகப் பெரும் திருப்பம்.
செந்தில்பாலாஜி, பொன்முடியினை தொடர்ந்து அனிதா ராதாகிருஷ்ணன் மேலான வழக்குகளும் தூசுதட்டபடுவது இனி அரசியலில் சம்பாதிக்கமுடியாது , பணம் சுருட்டும் அரசியல் முடிவுக்கு வருவது போல தோன்றுகின்றது.
பணம் ஒன்றுதான் திராவிட கொள்கையின் பலம் என்பதான் அதன் அடிமடியிலே வெட்டு விழுகின்றது.
பொன்முடி மேல் வெளிச்சம் கொடுக்கும் வழக்கு விவரங்கள் சாதாரணம் அல்ல, மண்குவாரியில் அவர் செய்திருக்கும் முறைகேடுகளும் இன்னும் பல குற்றச்சாட்டும் அதிரத்தான் வைக்கின்றன.
திராவிட திமுகவின் ஆணிவேரே மண் கடத்தல், கல்குவாரி நில ஆக்கிரமிப்பு என்பது ரகசியம் அல்ல...
அவ்வகையில் இந்த நகர்வுகள் இனி தமிழகத்தின் எல்லாப் பக்கமும் தாக்கத்தை ஏற்படுத்தலாம், மணல் கல் என அட்டகாசம் செய்யும் எல்லா தரப்புமேலும் பெரும் வழக்குகள் பாயலாம்.
ஆக புதுப் புது விவகாரங்கள் இனி வெடிக்கும், இதுகாலமும் சுகமாக இருந்தது சம்பாதித்தது போல் இனி அவர்கள் சுகமாகவும் இருக்கமுடியாது சம்பாதிக்கவும் முடியாது.
பொன்முடி விவகாரம் ஒரு தொடக்கம் போலத்தான் தெரிகின்றது, இனி அடுத்தடுத்து அதிரடிகள் தொடரலாம்..
எப்படியோ இம்மாதிரி சுரண்டல், ஊழல், சட்டவிரோத முறைகேடுகளெல்லாம் ஒழிந்து எதிர்காலத்தில் சுத்தமான அரசியலும் நல்ல தலைவர்களும் உருவாக வாய்ப்பிருப்பது போல் தெரிகின்றது...
நாம் முன்பே சொன்னதுபோல தன் வரலாற்றிலே முதன் முறையாக உண்மையான சவாலை திராவிடம் சந்திக்கின்றது, அதை கடப்பது எளிதானது போல் தெரியவில்லை...
"அமலாக்கத்துறைக்கு வாஷிங் மெஷின் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும்" - செந்தில் குமார், தி மு க,எம் பி. சரி! அப்படியானால், தி மு கவிற்கு ஊழல் அழுக்கு மூட்டை என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும். |
‘என் வீட்டுக்கு எப்ப வேணா வாங்க; இ.டி-க்கும் மோடிக்கும் பயப்பட மாட்டேன்’: உதயநிதி ஸ்டாலின்
என் வீட்டிற்கு எப்ப வேண்டுமானாலும் வாங்க. மோடிக்கும் பயப்பட மாட்டேன். இ.டி-க்கும் பயப்பட மாட்டேன் என தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழகத்தில் தி.மு.க அரசின் மூத்த அமைச்சர்கள் இருவரை, பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை (ED) விசாரணை செய்து வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில், திங்கள்கிழமை, தமிழக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி எம்.பி ஆகியோரின் வீடுகள் மற்றும் சொத்துக்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
சோதனைகளுக்குப் பிறகு, குற்றவியல் ஆவணங்கள், கணக்கில் வராத ரூ. 81.7 லட்சம் மற்றும் தோராயமாக 13 லட்ச ரூபாய்க்கு சமமான வெளிநாட்டு நாணயம் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறை கூறியது. மேலும், அவர்களின் வங்கி கணக்கில் உள்ள ரூ.41.9 கோடி முடக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சரும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின், அமலாக்கத்துறை என் வீட்டில் வேண்டுமானால் ரெய்டு செய்யட்டும், நான் வரவேற்பேன் என்று கூறினார்.
களக்குறிச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி, தான் மட்டுமல்ல தி.மு.க.,வினர் யாரும் அமலாக்கத்துறைக்கு பயப்படமாட்டார்கள் என்று கூறினார்.
“நேற்று, அமலாக்கத்துறையின் அடுத்த ரெய்டு எனது வீட்டில் நடக்கப் போகிறது என்று பா.ஜ.க தலைவர் ஒருவர் கூறியதைக் கேட்டேன். அவர்கள் வரவேற்கப்படுகிறார்கள், நான் அவர்களுக்கு எனது முகவரியை கொடுக்கிறேன். உங்கள் அமலாக்கத்துறைக்கு நான் பயப்படுவேன் என்று நினைக்கிறீர்கள்? நான் கலைஞர் (மு. கருணாநிதி) பேரன் மற்றும் மு.க.ஸ்டாலினின் மகன். நான் பயப்பட மாட்டேன்” என்று உதயநிதி கூறினார்.
மேலும், “நான் மோடியையோ அல்லது அமலாக்கத்துறையையோ கண்டு பயப்படவில்லை. நீங்கள் (ED) எப்போது வேண்டுமானாலும் வரலாம். நீங்கள் ரெய்டுக்கு வரும்போது எனக்குத் தெரியப்படுத்துங்கள், அதனால் நான் வீட்டில் இருக்க முடியும். நான் மட்டுமல்ல, ஒரு தி.மு.க பிரமுகர் கூட உங்களைப் பார்த்து பயப்பட மாட்டார்கள்,” என்றும் உதயநிதி கூறினார்.
தி.மு.க பல அடக்குமுறை சட்டங்களை சந்தித்த கட்சி, சலசலப்புகளுக்கு அஞ்சாது: மனோ தங்கராஜ்
தமிழக பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கூறுகையில், தமிழகத்தில் அமலாக்க துறை சோதனை நடத்தும் போது “ஓபன் சீக்ரெட்” ஆகும். இதில் ஒளிவு மறைவு எதுவும் இல்லை. ஏன் எனில் பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் மட்டுமே சோதனை நடத்தப்படுகிறது.
மேற்கு வங்காளம், டெல்லி, பெங்களூர் ஆகிய மாநிலங்களில் இத்தகைய சோதனைகள் நடக்கிறது. பா.ஜ.கஅமைச்சர்கள் பலபேர் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. ஆனால் பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் இத்தகைய சோதனைகள் நடக்கவில்லை.
நீண்ட நெடுங்கால பாரம்பரியமிக்க அமைப்புகளான சி.பி.ஐ, அமலாக்க துறை ஆகியவற்றை பா.ஜ.க அரசியல் கருவியாக பயன்படுத்தி வருகின்றது. தி.மு.க மிசா உள்ளிட்ட பல்வேறு அடக்குமுறைகளை கண்ட கட்சியாகும். எத்தகைய சவாலையும் சந்திக்க தயாராக உள்ளது.
தி.மு.க எதைகண்டும் அஞ்ச போவதில்லை. அமலாக்கத்துறை சோதனையால் பாதிக்கப்பட்டவர்கள் சட்ட ரீதியாக இதை அணுகுவார்கள். இத்தகைய சோதனை பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ளார்.
அ,தி,முக மீது குற்றஞ்சாட்டப்பட்ட கோப்புகளில் இதுவரை தமிழக ஆளுநர் ரவி கையெழுத்து இடாமல் வைத்துள்ளார். மத்திய அரசு தி.மு.கவிற்கான தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருவது எங்கள் கூட்டணியின் வேலையை, அலைச்சலை குறைத்துள்ளது” என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கில் இணைத்து கொள்ள அமலாக்கத்துறை மனு: நீதிமன்றம் முக்கிய உத்தரவு
2001-06 அதிமுக ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை 2006ம் ஆண்டில் வழக்குப்பதிவு செய்திருந்தது
இந்த வழக்கில் கூடுதல் ஆதாரங்கள் இருப்பதால் தஙகளையும் இணைத்து கொள்ள வேண்டும் என அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த மனு மீது இன்று விசாரணை நடந்தது.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணை 80% நிறைவடைந்துள்ளதால் அமலாக்கத்துறையை சேர்த்துக்கொள்ள முடியாது என லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் வாதம் செய்தது.
இந்த நிலையில் இந்த வழக்கில் தங்களையும் இணைக்க வேண்டும் என தூத்துக்குடி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவில் இருதரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி, வழக்கை ஆகஸ்ட் 2ம் தேதிக்கு ஒத்திவைத்தார்
செந்தில் பாலாஜி வழக்கு : உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை
செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ளது.
செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாக கூறி, அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. இதனையடுத்து 3வது நீதிபதி சி.வி. கார்த்திகேயன், செந்தில்பாலாஜி மீதான கைது நடவடிக்கை சட்டபூர்வமானது எனக்கூறி, ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல எனவும் தீர்ப்பளித்தார்.
இந்நிலையில், செந்தில்பாலாஜி மனைவி மேகலா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனுவை விரைவில் விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். இதனையடுத்து செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் நாளை விசாரணைக்கு வர உள்ளது. இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை சார்ப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
அமலாக்கத்துறை மிகவும் மெதுவாக ஆமை வேகத்தில் பதிந்த வழக்குகளை எடுத்துக்கொள்கிறதா?
அல்லது அரசு அங்கீகரிக்கப்பட்ட/ ஆதரிக்கப்பட்ட கிரிமினல்கள் அதிகம் பெருகிவருகின்றார்களா?
ஒண்ணுமே புரியலை
என்னவோ நடக்குது
மர்மா இருக்குது.
அல்லது அரசு அங்கீகரிக்கப்பட்ட/ ஆதரிக்கப்பட்ட கிரிமினல்கள் அதிகம் பெருகிவருகின்றார்களா?
ஒண்ணுமே புரியலை
என்னவோ நடக்குது
மர்மா இருக்குது.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
அமலாக்கத்துறை காவலை எதிர்த்து தான் மனுத்தாக்கல் செய்திருக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்
செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவின் விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையில் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு கைது செய்ய அதிகாரம் இல்லை என்றும் அவர்கள் சம்பந்தப்பட்டவர்களை காவல்துறையிடம் தான் ஒப்படைக்க வேண்டும் என்றும் செந்தில் பாலாஜியின் மனைவி தரப்பில் வாதாடப்பட்டது
இந்த வழக்கு கொடுத்த கருத்து தெரிவித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அமலாக்கத்துறை காவல் எதிர்த்து தான் மனு செய்திருக்க வேண்டும் என்றும் மாறாக ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருக்கக் கூடாது என்றும் கருத்து கூறினர்
இதனை அடுத்து இந்த வழக்கின் விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டது. நாளை பிற்பகல் 2 மணிக்கு இந்த வழக்கின் வாதங்கள் நிறைவு பெற்றவுடன் நீதிபதிகள் தீர்ப்பளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
சமீபத்திய செய்தி
புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. செந்தில் பாலாஜி தரப்பில் கபில் சிபல் ஆஜராகி தொடர்ந்து தனது வாதத்தை முன்வைத்தார். அவர் கூறியதாவது:- அமலாக்கத்துறைக்கு கைது செய்யும் அதிகாரம் இருந்தாலும், கைது செய்யப்படும் நபரை 24 மணி நேரத்திற்கு மேல் காவலில் வைத்திருக்க முடியாது. கைது செய்யப்படும் நபரை அமலாக்கத்துறை காவலில் எடுக்க வேண்டும் என்றால் அதன் அதிகாரிகளை காவல் அதிகாரிகளுக்கு இணையாக கருதவேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும். அவ்வாறு தீர்ப்பளிக்கும்பட்சத்தில் குற்றவியல் நடைமுறை சட்ட அதிகாரங்கள் அனைத்தும் அமலாக்கத்துறைக்கு கிடைத்துவிடும். சுங்க சட்டத்தின்படி கைது செயய்ப்படும் நபரை சுங்க அதிகாரிகள் காவலில் வைத்து விசாரிப்பதில்லை என்றும், போலீசார்தான் காவலில் எடுத்து விசாரிக்கின்றனர். கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்ற காவலில் இருக்கும்போது விசாரணை நடத்த எவ்வித தடையும் இல்லை. எனவே, சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரிக்க எதுவும் அமலாக்கத்துறைக்கு தடையாக இல்லை. தமிழ்நாடு காவல் நிலையாணை விதிகளின்படி, கைது செய்யப்படும் நபர் நீதிமன்ற காவலுக்கு முன் அவரது வழக்கறிஞர்கள் சந்திக்க அனுமதிக்கவேண்டும். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு கபில் சிபல் தெரிவித்தார். அமலாக்கத்துறை சார்பாக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறும்போது, அரசியல் ரீதியான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என்றும், சட்டரீதியான வாதங்களை மட்டுமே முன்வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதையடுத்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 1ம் தேதி நண்பகல் 12 மணிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
நன்றி மாலை மலர்.
புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. செந்தில் பாலாஜி தரப்பில் கபில் சிபல் ஆஜராகி தொடர்ந்து தனது வாதத்தை முன்வைத்தார். அவர் கூறியதாவது:- அமலாக்கத்துறைக்கு கைது செய்யும் அதிகாரம் இருந்தாலும், கைது செய்யப்படும் நபரை 24 மணி நேரத்திற்கு மேல் காவலில் வைத்திருக்க முடியாது. கைது செய்யப்படும் நபரை அமலாக்கத்துறை காவலில் எடுக்க வேண்டும் என்றால் அதன் அதிகாரிகளை காவல் அதிகாரிகளுக்கு இணையாக கருதவேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும். அவ்வாறு தீர்ப்பளிக்கும்பட்சத்தில் குற்றவியல் நடைமுறை சட்ட அதிகாரங்கள் அனைத்தும் அமலாக்கத்துறைக்கு கிடைத்துவிடும். சுங்க சட்டத்தின்படி கைது செயய்ப்படும் நபரை சுங்க அதிகாரிகள் காவலில் வைத்து விசாரிப்பதில்லை என்றும், போலீசார்தான் காவலில் எடுத்து விசாரிக்கின்றனர். கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்ற காவலில் இருக்கும்போது விசாரணை நடத்த எவ்வித தடையும் இல்லை. எனவே, சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரிக்க எதுவும் அமலாக்கத்துறைக்கு தடையாக இல்லை. தமிழ்நாடு காவல் நிலையாணை விதிகளின்படி, கைது செய்யப்படும் நபர் நீதிமன்ற காவலுக்கு முன் அவரது வழக்கறிஞர்கள் சந்திக்க அனுமதிக்கவேண்டும். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு கபில் சிபல் தெரிவித்தார். அமலாக்கத்துறை சார்பாக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறும்போது, அரசியல் ரீதியான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என்றும், சட்டரீதியான வாதங்களை மட்டுமே முன்வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதையடுத்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 1ம் தேதி நண்பகல் 12 மணிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
நன்றி மாலை மலர்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
கரூரில் ஐடி அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய பிரமுகர்கள் ஜாமீன் ரத்து
கரூரில் ஐ.டி அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய பிரமுகர்கள் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் அவர்களின் முன் ஜாமீனையும் ரத்து செய்து அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
திமுகவில் அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜிக்கு சொந்தமான் இடங்களில் வருமானவரித்துறை அதிகரிகள் கடந்த மே மாதம் 25 ந் தேதி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அவர் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்தது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது அமலாக்கத்துறையின் காவலில் உள்ளார்.
இதனிடையே வருமாவரித்துறை அதிகாரிகள் கரூரில் சோதனை மேற்கொள்ள வந்தபோது சிலர் அதிகாரிகள் மீது கடுமையான தாக்குதலவ் நடத்தினர். இது தொடர்பான வீடியோ பதிவு இணையத்தில் வைரலாக பரவியதை தொடர்ந்து வருமானவரித்துறை அதிகாரிகள் இந்த சம்பவம் தொடர்பான அளத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 19 பேர் மீது வழக்கு பதிவு கைது செய்திருந்தனர்.
இவர்கள் அனைவருக்கும் கரூர் குற்றவியல் நீதிமன்றம், ஜாமீன் வழங்கி விடுதலை செய்தது. கீழமை நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து வருமானவரித்துறை சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை, கீழமை நீதிமன்றம் வழங்கிய ஜாமீன் மற்றும் முன் ஜாமீனை ரத்து செய்த நிலையில், 3 நாட்களில் அனைவரும் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மேலும் இந்த வழக்கை கரூர் குற்றவியல் நீதிமன்றமே விசாரித்து தீர்ப்பு வழங்கவும் உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய திமுக நிர்வாகி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் வீரா. சாமிநாதனுக்கு சொந்தமான வீடு, தோட்டத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
வீரா.சாமிநாதன் வெளிமாநிலங்களில் பைனான்ஸ் தொழில், பழனியில் பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் ஆத்துமேடு கொங்கு நகரில் உள்ள வீடு, தமுத்துபட்டியில் உள்ள அவரது தோட்ட பங்களாவிலும் 2 குழுக்களாக அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர் சாமிநாதன் என்பதால் அதிகாரிகள் சோதனை என தகவல் வெளியாகியுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|