புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் Poll_c10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் Poll_m10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் Poll_c10 
68 Posts - 40%
heezulia
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் Poll_c10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் Poll_m10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் Poll_c10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் Poll_m10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் Poll_c10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் Poll_m10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் Poll_c10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் Poll_m10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் Poll_c10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் Poll_m10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் Poll_c10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் Poll_m10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் Poll_c10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் Poll_m10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் Poll_c10 
2 Posts - 1%
manikavi
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் Poll_c10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் Poll_m10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் Poll_c10 
2 Posts - 1%
prajai
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் Poll_c10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் Poll_m10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் Poll_c10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் Poll_m10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் Poll_c10 
319 Posts - 50%
heezulia
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் Poll_c10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் Poll_m10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் Poll_c10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் Poll_m10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் Poll_c10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் Poll_m10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் Poll_c10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் Poll_m10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் Poll_c10 
22 Posts - 3%
prajai
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் Poll_c10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் Poll_m10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் Poll_c10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் Poll_m10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் Poll_c10 
3 Posts - 0%
manikavi
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் Poll_c10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் Poll_m10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் Poll_c10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் Poll_m10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் Poll_c10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் Poll_m10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்


   
   

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 27, 2008 2:12 am

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் Netaji10

பிறப்பு:  ஜனவரி 23, 1897

மறைவு: ஆகஸ்ட் 18 1945


#நேதாஜி #சுபாஸ் #சந்திரபோஸ் #சுதந்திரம் #இந்திய_சுதந்திர_போராட்டம் #நேதாஜி_சுபாஸ்_சந்திரபோஸ் #சுபாஷ்_சந்திர_போஸ் #Subhash_Chandra_bose #Netaji

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 27, 2008 2:14 am

நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் மரியாதையுடன் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் (ஜனவரி 23, 1897 - ஆகஸ்ட் 18 1945) இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் சமயத்தில் வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்க்கு எதிராக தாக்குதல் நடத்தியவர்.

இவர் 1945 ஆகஸ்ட் 18 அன்று தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாக கருதப்பட்டாலும், அவர் அப்போது இறக்கவில்லை என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. அவர் ரஷ்யாவிற்கு சென்று 1970களில் இறந்துவிட்டதாகவும், அல்லது ஒரு சன்னியாசியின் வடிவில் வட இந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985இல் இறந்து விட்டதாகவும் பல கருத்துக்கள் உள்ளன. 1945 ஆம் வருடம் ஆகஸ்ட் 14 முதல் செப்டம்பர் 20 வரை எந்த விமான விபத்தும் தைவானில் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்திருப்பது போஸ் அவ்வாண்டு இறக்கவில்லை என்ற வாதத்திற்கு வலுவூட்டியுள்ளது. இந்திய அரசால் நியமிக்கப்பட்டு இதைப்பற்றி விசாரித்து வரும் முகர்ஜி கமிஷன், தன் இறுதி அறிக்கையை 2005 நவம்பரில் வெளியிடும் என்று தெரிகிறது.


சுபாஷ் சந்திர போஸ் 1897 ஆம் வருடம் இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில்லுள்ள கட்டாக் என்ற இடத்தில் பிறந்தார். இவரது தந்தையார் ஜானகிநாத் போஸ். போஸ் ராகின்சேவ் காலேஜ் ஸ்கூல் - கட்டாக், ஸ்காடிஷ் சர்ச் ஸ்கூல், கல்கட்டா மற்றும் பிட்ஷ்வில்லியம் காலேஜ் ஆகிய இடங்களில் படித்தார். 1920 இல் இந்திய மக்கள் சேவை படிப்புக்கான நுழைவுத்தேர்வில் பங்கேற்ற அவர் இந்தியாவிலேயே நான்காவதாக வந்தார். எனினும் ஏப்ரல் 1891 இல் மதிப்புமிக்க இந்திய மக்கள் சேவையிலிருந்து வெளியேறிய அவர் இந்திய சுதந்திர போரட்டத்தில் பங்கேற்றார். (விக்கிபீடியா)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 27, 2008 2:14 am

நேதாஜி சுபாஷ் சந்திர போஸை வங்கம் தந்த சிங்கம் என்பார்கள். அவரைத் தந்தது வங்கம் என்றாலும், அவர் பாரதத்துக்கே சொந்தம். அவரது புற வாழ்க்கை சாகசங்களும் மர்மமும் நிறைந்ததுதான். ஆனால், அவரது அக வெளியில் நிறைந்திருந்தது அரவிந்தரும் விவேகானந்தரும் தந்த ஆன்மீக அமைதி. ஓர் ஆசிரியர் அவரைத் தொப்பி அணிந்த துறவி என்று வருணித்தது பொருத்தமே. எளியவர்க்கு இரங்கும் குணமும், “போற்றுபவர் போற்றட்டும், புழுதி வாரித் தூற்றுபவர் தூற்றட்டும், ஏற்றதொரு கருத்தை என் உள்ளம் என்றால் எடுத்துரைப்பேன் எவர் வரினும் நில்லேன் அஞ்சேன்” என்ற கண்ணதாசன் கவிதை வரிகளுக்கு இலக்கியமான அச்சமின்மையும் அவரோடு கூடப் பிறந்தவை.

அவரது வாழ்க்கை இந்திய சுதந்திரப் போராட்டத்தோடு பின்னிப் பிணைந்ததுதான். எனினும், தமது மெய்த்துணிவு காரணமாக, பிரதான நீரோட்டத்திலிருந்து பிரிந்து சென்று தமக்கென்று ஒரு தனிப் பாதையை வகுத்துக்கொண்டு, தலைமை தாங்கி நடத்தத் துணிந்த காவிய நாயகன் நம் நேதாஜி.

பரபரப்பான அவரது வாழ்க்கை படிக்கப் படிக்கச் சுவை குன்றாதது. இந்தப் படைப்பில் அவரது வரலாற்றினைக் கதை போலச் சொல்லுவதுடன் நில்லாமல், கடிதங்கள், உரைகள், உரையாடல்கள், மற்றும் முற்றுப்பெறாத அவரது சுய சரிதை மூலம் அவர் வெளிப்படுத்தியிருக்கும் அவரது ஆழ்ந்த மனச் சிந்தனைகளையும் கொண்டு வர முயல்கிறோம். அது மட்டும் இல்லாமல், அவர் வாழ்ந்த காலக்கட்டத்தில் நிகழ்ந்த சுதந்திரப் போராட்ட விவரங்களையும் ஓரளவு கொண்டு வர உத்தேசித்துள்ளோம்.

சுக்கைப்போல, மிளகைப் போல, சும்மா பெறவில்லை நாம் இந்த சுதந்திரத்தை என்ற பிரக்ஞையையும், நாட்டின் மேன்மைக்காக எந்தத் தியாகத்தையும் மேற்கொள்ளும் துணிவையும் இளைஞர்கள் மத்தியில் ஓரளவாவது சிலிர்த்தெழ வைக்க முடியுமானால் இந்த வீர வரலாற்றை எழுத முனைந்தது பயனுள்ளது என்றே கருதுவோம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 27, 2008 2:15 am

பிறப்பும் குடும்பப் பின்னணியும்

1897 ஜனவரி 23 சனிக்கிழமை. துந்துபிகள் முழங்கவில்லை. வீணைத் தந்திகள் தாமாக இசைக்கவில்லை. வானிலிருந்து ஒரு நட்சத்திரம் கீழிறங்கவில்லை. “வானத்து அமரன் இங்கு வந்தான்காண்" என்று குதூகலிக்க எந்த அறிகுறியும் இல்லை. கட்டாக்கைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜானகிநாத போசுக்கும் பிரபாவதி தேவிக்கும் ஒன்பதாவதாகப் பிறந்த குழந்தையே சுபாஷ் சந்திரன். ஆண் குழந்தைகளில் இவர் ஆறாவது. அவரது பெற்றோருக்கு மொத்தம் 14 குழந்தைகள். குழந்தைகள் அதிகம் என்பது மட்டுமல்லாமல், சித்தப்பா, மாமா போன்றோர் குடும்பங்களும் இணைந்த கூட்டுக்குடும்பமே அது. இதைத் தவிர, ஆடு, மாடு, கோழி, குருவி, மயில், குதிரை, கீரிப்பிள்ளை எல்லாம் நிறைந்த வசுதைவ குடும்பம் அவரது. காக்கை குருவி எங்கள் ஜாதி என்றது இவர் குடும்பத்துக்கு சரியாகவே பொருந்தும். இப்படி இருக்கையில் எப்படி அந்தக் குடும்பத்தில் ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக் கவனம் செலுத்த முடியும்? சுபாஷை முழுக்க முழுக்க கவனித்துக்கொண்டது சாரதா என்ற ஆயாதான். ராஜா என்று கூப்பிட்டு அவரை அன்பாகப் பார்த்துக்கொள்வார். இந்த நிலைமை பற்றி சுபாஷ் என்ன சொல்கிறார்?

“பெற்றோர் என் மீது அதிக அன்பு காட்ட முடியாமல் போனது அதிருஷ்டமாயிற்று. என் எதிர்காலத்துக்கு அதுவே நல்ல ஆரம்பமாயிற்று. இதனால்தான், நான் தூயவனானேன். சமுதாயத்துக்குச் சோம்பலின்றி உழைக்கும் ஊழியன் ஆனேன் என்றாலும், மனம் விட்டுப் பலரோடு கலகலப்பாகப் பழகும் பெரிய குடும்பத்தில் பிறந்திருந்தும் கூச்ச சுபாவம் என்னை விட்டு அகலவில்லை” என்று சுபாஷ் கூறிக்கொள்கிறார்.

சுபாஷ் போசின் பரம்பரை பெருமைப்பட்டுக் கொள்ளத் தக்க பரம்பரையே. அவரது தாத்தா ஹரநாத போஸ் துர்க்கைக்கு ஆடு வெட்டி பலியிட்டு திருவிழா நடத்தும் குறிப்பிட்ட வைணவப் பரம்பரையை சேர்ந்தவராயிருந்தும் அந்தப் பழக்கத்தையே அடியோடு நிறுத்தியவர். சுபாஷின் தந்தை ஜானகிநாத் வழக்கறிஞர், கல்லூரிப் பேராசிரியர் பணிகளை மேற்கொண்டிருக்கிறார். பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் ராவ் பஹதூர் பட்டம் பெற்றவர். 1930 ல் அரசாங்கத்தின் அடக்குமுறையைக் கண்டித்து அந்தப் பட்டத்தைத் துறந்தார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 27, 2008 2:15 am

கிராம சேவை, கல்விப்பணி இரண்டிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். 1921ல் ஒத்துழையாமை இயக்கம் நடந்த போது காந்தியடிகளின் காதி, தேசிய கல்வித் திட்டம் இவற்றின் மேம்பாட்டுக்காகத் தமது ஒத்துழைப்பை நல்கினார். தமது தாயாரைப் பற்றி சுபாஷ் சொல்வது: “குறிப்பிடத்தக்க பெண்மணி. உறுதியான மனமும், காரிய சாத்தியமான அனுபவமும் எவரும் மரியாதை காட்டும் பண்பும் என் தாயிடம் நிரம்பவே உண்டு.”

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 27, 2008 2:16 am

ஒரு இந்திய யாத்திரிகனின் சில சிந்தனைகள்

சுபாஷின் இளமைப்பருவம் பற்றி நாம் தெரிந்துகொள்ள உதவுவது முற்றுப்பெறாத அவரது சுய சரிதைதான். இதன் தலைப்பு, “ஒருஇந்திய யாத்திரிகன்”. இதனைத் தமிழில் சக்திமோஹன் என்பவர் அழகாக மொழிபெயர்த்திருக்கிறார். இந்த சுய சரிதத்தில் அவர் இந்தியா அடிமைப்பட்டு நிலைகுலைந்து போனதன் காரணங்களைப்பற்றி சிந்தித்து எழுதியுள்ளார்.

‘பிரிட்டிஷ் ஆட்சி இந்த நாட்டில் அடியிட்டதன் காரணம் அவர்களது சொந்த சக்தியோ, சாதுர்யமோ அல்ல. நமது நாட்டுப் பங்காளிகளில் சிலர் ஒத்துழைத்ததால்தான் அந்த ஆட்சி அமைந்தது என்பதை யாரும் எந்தச் சந்தர்ப்பத்திலும் மறந்துவிடக்கூடாது. இப்படித் தனது ஆட்சியை இந்தியாவில் நிறுவிய பிரிட்டன் இந்துக்களையும் முஸ்லிம்களையும் வேறு வேறாக்கி தனது ஆட்சி வளர வழி ஏற்படுத்திக்கொண்டது. இத்தகைய இழிநிலைக்குக் காரணம் பிரிட்டனின் சக்தியா, நமது ஆராயும் திறனை நாம் பயன்படுத்தத் தவறியதா என்பதை ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ள வேண்டும்’ என்று அவர் எழுதுகிறார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 27, 2008 2:16 am

வங்கப் பிரிவினை

சுபாஷுக்கு எட்டு வயதே ஆகியிருந்தபோது - 1905 ல் வங்கப் பிரிவினை காரணமாக, நாட்டில் பெரியதொரு எழுச்சி ஏற்பட்டது. வங்காளம் அந்தக் காலத்தில் ஒரிஸாவையும் பீஹாரையும் உள்ளடக்கிய பெரியதொரு மாகாணமாக இருந்தது. திறமையான நிர்வாக வசதி என்று காரணம் சொல்லி கல்கத்தாவின் ஆதிக்கத்தில் இருந்த கிழக்கு மாநிலங்களைப் பிரிப்பது என்று வைஸ்ராய் கர்ஸன் பிரபு முடிவு செய்து விட்டார். 1905 அக்டோபர் 16ம் தேதி இந்தப் பிரிவினை அமலுக்கு வந்துவிட்டது. கர்ஸன் பிரபு சொன்ன காரணத்தை வங்க மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. கிழக்கு வங்காளத்தில் இருந்த முஸ்லிம்களையும், மேற்கு வங்காளத்தில் இருந்த இந்துக்களையும் பிரிக்க முயல்வதே உள்நோக்கம் என்று இரு மதத்தினரும் நம்பினார்கள். வங்க மக்களை அடக்கி ஒடுக்குவதற்கான இந்த முயற்சியைக் கண்டித்து வங்கமே திரண்டது. இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து கல்கத்தா வீதிகளில் வந்தே மாதரம் என்று கோஷித்தபடி ஊர்வலம் வந்தார்கள். இந்தியா முழுவதுமே இந்தப் போரில் கலந்துகொண்டது. 1905 காசி காங்கிரஸுக்குத் தலைமை வகித்த கோகலே, “தேசிய உணர்ச்சியை நம்மவர்களிடையே எழுப்ப கர்ஸன் பெரும் உதவி செய்திருக்கிறார்” என்றார். இந்த வங்கப் பிரிவினையைப் பற்றி எழுதுகையில் அரசியலில் ஈடுபடும் ஒருவன் மேற்கொள்ளவேண்டிய நெறிகளைப் பற்றி சுபாஷ் எழுதிச் சொல்கிறார். “அரசியலுக்குத் தன்னை அர்ப்பணிக்க வேண்டும் என எண்ணுகிற ஒருவன், முதலில் தன்னைத் தூய்மைப்படுத்தி எந்தவிதக் கொடுமைகளையும் தாங்கிக் கொள்கிற சக்தியையும் மனத் திண்மையையும் திரட்டிக்கொள்ள வேண்டும். ஏனென்றால் அரசியலில் அந்த அளவுக்குப் புனிதத் தன்மை கலந்திருக்கிறது. அரசியலைக் கடைசி வரை தியாக நோக்கோடு வகிக்க வேண்டுமானால் மனதை ஒருங்குபடுத்தி போக்கை நெறிப்படுத்திக்கொள்ள வேண்டும். தனது வாழ்க்கையில் ஏதேனும் ஒரு கொள்கையை அனுசரிக்க வேண்டும் என்று விரும்பினால் கடைசிவரை அதையே வழுவாமல் தொடர வேண்டும். இடையில் ஏற்படும் இன்னல்களுக்காக கொண்ட கொள்கையை இடையிலே துவள விடக்கூடாது.” சுபாஷ் தமது பிற்கால வாழ்க்கையில் கைக்கொண்ட செயல்பாடுகள் அவர் வகுத்துக்கொண்ட நெறிமுறைக்கு ஒத்துவருவதை உரிய சந்தர்ப்பத்தில் காண்போம்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Oct 31, 2008 3:14 am

ஆரம்பக்கல்வி

1902 ல் சுபாஷின் பள்ளிப் படிப்பு தொடங்கியது. அவரது வாழ்க்கையே ஒரு போராட்டக் களமாக இருக்கப் போகிறது என்பதன் முன் அறிவிப்பாகவோ என்னவோ பள்ளிக்குக் கிளம்பிய முதல் நாளே அவருக்கு விபத்தும் ரத்தக்காயமும் ஏற்பட்டன. வண்டியில் ஏறப்போன தருணம். வண்டி புறப்பட்டு விட்டது. தலை குப்புற விழுந்து இரண்டு நாள் படுத்த படுக்கை. மூன்றாம் நாளே பள்ளிக்குச் செல்ல முடிந்தது.

ஆங்கிலக் கல்வியை பாரதியார் "அல்லல் மிக்கதோர் மண்படு கல்வி" என்பார். "சூதிலாத உளத்தினன் எந்தைதான் சூழ்ந்தெனக்கு நலன் செய நாடியே" ஆங்கிலப் பள்ளியில் சேர்த்ததாக பாரதி சொல்லுவார். இதே நிலைதான் சுபாஷுக்கும். ஆங்கிலம் படித்தவர்களுக்குத் தனியரு மதிப்பும் மரியாதையும் இருந்தது அந்த நாளில் (நாளிலும்?). சுபாஷ் சேர்ந்த பாப்டிஸ்ட் மிஷன் பள்ளியில் கல்வி ஆங்கில வழிதான். வங்காளி ஒரு பாடமாகக் கூடக் கிடையாது. அந்தப் பள்ளியில் சேர்க்கை ஐரோப்பியர்களுக்கும் ஆங்கிலோ இந்தியர்களுக்கும் மட்டும்தான். இடம் இருந்தால் 15%க்கு மேற்படாமல் இந்தியக் குழந்தைகளைச் சேர்த்துக்கொள்வார்கள். இந்திய மாணவர்கள் பாரபட்சமாகவே அந்தப் பள்ளியில் நடத்தப்பட்டார்கள். அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தால் கூட அவர்களுக்கு உபகாரச் சம்பளம் பெறும் தகுதிக்கான பரீட்சை எழுத அனுமதி கிடையாது. தொண்டர் படையணி, துப்பாக்கிப் பயிற்சி இந்திய மாணவர்களுக்குக் கிடையாது.

இந்தியாவில் இந்தியப் பணத்தைக் கொண்டு நடக்கும் இத்தகைய பள்ளிகளில் இப்படி பாரபட்சமாக நடந்துகொள்வது நாடெங்கும் ஒரு எழுச்சியை ஏற்படுத்தத்தான் செய்தது. தாய்மொழி பயிலவேண்டும் என்றதொரு தாகமும் விழிப்புணர்ச்சியும் ஏற்பட்டன. இதன் விளைவாக கல்கத்தா பல்கலைக்கழகத்தில் மெட்ரிக்குலேஷன், இண்டர்மீடியட், பட்டப் படிப்புகளுக்கு வங்காளப்பாடம் கட்டாயமாக்கப்பட்டது. இதுவே சுபாஷுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது. வங்காளி மொழி கற்றுக்கொள்ளும் அவசியத்துக்காக, பெற்றோர்கள் அவரை 1909ம் ஆண்டு கட்டாக்கிலுள்ள ராவென்ஷா பள்ளியில் சேர்த்தார்கள்.

மிஷன் பள்ளியில் சுபாஷுக்கு நண்பர்கள் யாரும் கிடையாது. ஏழாண்டுகள் பயின்ற பள்ளியை விட்டுப் போனதில் தமக்கு எந்த விதப் பிரிவாற்றாமையும் தோன்றவில்லை என்கிறார் சுபாஷ். மிஷனரிப் பள்ளியில் தமது அன்புக்கும் மரியாதைக்கும் உரியவராகி இருந்த ஒரே ஆசிரியை என்று சாரா லாரென்ஸ் என்பவரைக் குறிப்பிடுகிறார் அவர். குழந்தைகளின் மனதறிந்து, அவரவர் திறமையைக் கண்டுபிடித்து அதற்கேற்ப பாடம் போதிப்பதில் வல்லவர் அந்தப் பெண்மணி.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Oct 31, 2008 3:15 am

புதிய சூழ்நிலை

ஆங்கிலப் பள்ளியில் படித்திருந்தது காரணமாகப் பெற்றிருந்த சிறந்த ஆங்கிலத் திறமை அவருக்கு நல்ல மதிப்பைப் பெற்றுத் தந்தது. ஆனால், வங்காளி மொழியிலோ அவரது அறிவு ஏறத்தாழ பூஜ்யம். அந்தப் பள்ளி மாணவர்களோ பெரும் திறமை பெற்று விளங்கினார்கள். சுபாஷ் வெட்கப்பட்டு வேதனைப் படும்படியான ஒரு சம்பவம் நடந்தது. வங்காள மொழியில் பசு என்பது பற்றி ஒரு கட்டுரை வரையச் சொல்லி ஒரு தேர்வு. வரைந்து தள்ளினார் நம் சுபாஷ் தமக்குத் தெரிந்த தாய்மொழியில். ஆசிரியர் அதை வகுப்பில் படித்துக்காட்ட வகுப்பு முழுதும் ஒரே சிரிப்பு. வெட்கித் தலைகுனிந்தார் சுபாஷ். அந்த நிமிஷமே ஒரு உறுதி எடுத்துக்கொண்டார். சில வாரங்கள் இரவு பகலாகத் தீவிரமாகப் படித்து வங்காள மொழியின் அடிப்படைகளைத் தெரிந்துகொண்டு விட்டார். விரைவிலேயே, மொழியில் மற்றவர்களுக்கு ஈடான தேர்ச்சி பெற்று விட்டார். இது மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் இவருக்கு நன்மதிப்பைப் பெற்றுத் தந்தது.

படிப்பில் சூரராக இருந்த சுபாஷுக்கு விளையாட்டில் ஈடுபாடு இல்லை. அவரது ஆர்வமெல்லாம் இயற்கை எழிலில் லயித்திருப்பதிலும், தோட்ட வேலையிலும்தான். இவற்றுக்கான சூழ்நிலையும் வாய்ப்பும் அவரது வீட்டில் நிறையவே இருந்தன.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Oct 31, 2008 3:15 am

வேணி மாதவதாஸ்

ராவென்ஷா பள்ளியில் சுபாஷைக் கவர்ந்தவர் தலைமை ஆசிரியர் வேணி மாதவதாஸ். பார்த்தவர்களைப் பாசத்தோடு வணங்க வைக்கும் அவரது தோற்றப் பொலிவு சுபாஷைப் பெரிதும் ஈர்த்தது. தமது எதிர்கால லட்சியத்துக்கும் ஒழுக்கம் நிறைந்த வாழ்வுக்கும் ஆதர்ச புருஷராக அவரை மானசீகமாக ஏற்றுக்கொண்டார். அவரிடம் பயின்ற மாணவர்கள் உதவாக்கரையாகப் போகவே முடியாது என்ற அளவுக்கு தெய்வீக சக்தி படைத்தவராக அவரைக் கருதினார். அவரது வகுப்புகளை ஆவலுடன் எதிர்நோக்குவார். அவர் மாற்றலாகிப் போனபோது பீறிட்டு வந்த அழுகையை சுபாஷால் அடக்கவே முடியவில்லை. தாசுக்கும் ஏறத்தாழ அதே நிலைதான். நெடுநாளைக்கு இருவரும் கடிதப் போக்குவரத்து வைத்துக் கொண்டிருந்தார்கள். புதிய சிந்தனைகளுடன், எதிர்காலத்தின் ஏற்றமிகு குடிமகனாக வருவதற்கான ஆலோசனைகளையும், உந்துதல்களையும் தாராளமாக வழங்கி வந்தார் தாஸ். இயற்கையை விரும்பித் துதிப்பதன்மூலம் வாழ்க்கைக்கு வேண்டிய அளவு தூய நெறியைப் பெறலாம் என்பது சுபாஷுக்கு அவர் வழங்கிய அறிவுரைகளில் ஒன்று.

Sponsored content

PostSponsored content



Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக