ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளின் மொழி

Go down

கடவுளின் மொழி Empty கடவுளின் மொழி

Post by சிவா Sat Jan 28, 2023 4:34 am


அறிவியல் வரலாற்றில் பெரிய புரட்சியை ஏற்படுத்தியவர் ஐம்பத்தாறே வயதான விஞ்ஞானி பிரான்ஸிஸ் காலின்ஸ்! 2000ம் ஆண்டில் மனித மரபணு பற்றிய முதல் முன்வரைவு வடிவத்தைத் தயாரித்த மாபெரும் விஞ்ஞானி இவர்! மரபணு ஆய்விற்காக இவருக்கு வழங்கப்பட்ட தொகை 48 கோடி டாலர்கள்! அதாவது சுமார் 1920 கோடி ரூபாய்கள்!! மரபணு பற்றிய பிரமிக்கத் தக்க செய்திகளை வழங்கிய இந்த விஞ்ஞானியின் மனம் இப்போது கடவுளைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு விட்டது.

#கடவுள் இருக்கிறாரா, இல்லையா? இல்லை என்றால் எப்படி நிரூபிப்பது? இருக்கிறார் என்றால் அதற்கான ஆதாரம் என்ன?

காலின்ஸ் பயபக்தி வாய்ந்த ஒரு கிறிஸ்தவர். தனது ஆராய்ச்சியின் முடிவை ஒரு புத்தகமாக எழுதி அண்மையில் (செப்டம்பர் 2007 வெளியீடு) வெளியிட்டிருக்கிறார். புத்தகத்தின் பெயர் :- கடவுளின் மொழி – இறை நம்பிக்கைக்கு ஒரு விஞ்ஞானி ஆதாரம் தருகிறார் (The Language of God – A Scientist Presents Evidence for Belief) வலுவான அறிவியலுடன் தெய்வீகமான இறைவன் முரண்பாடின்றி சேர்ந்து இருக்க முடியும் என்று காலின்ஸ் வலியுறுத்துகிறார். கடவுளுக்கும், விஞ்ஞானத்திற்கும் யுத்தம் இல்லை என்று ஓங்கி உரத்த குரலில் கூறும் இந்த விஞ்ஞானி ஒரு புதிய சமரஸம் உருவாகி விட்டது என்று அறிவிக்கிறார்.

ஆரம்பத்தில் இவர் ஒரு #நாத்திகர். வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் மிகப் பெரிய கணித சூத்திரங்களில் அடக்கி விடலாம் என அவர் நினைத்தார். ஆனால் கடவுள் வேறு விதமாக நினைத்து விட்டார் போலும்! எழுபதுகளில் சப்பல்ஹில் என்னுமிடத்தில் மருத்துவம் பயிலும் போது ஏராளமான நோயாளிகள் தங்கள் இறை நம்பிக்கை மூலம் பெரும் வலிமையைப் பெறுவதைக் கண்டு அதிசயித்தார்.

சரி, இறைவன் இல்லை என்று சொல்வதற்கு முன்னர் அவன் இருக்கிறான் என்பதற்கான அனைத்து ஆதாரங்களையும் படித்து முடித்து விடலாம் என்று எண்ணி பைபிளைப் படிக்க ஆரம்பித்தார். 27ம் வயதில் இவர் மனதில் ஒரு பெரும் மாற்றம் நிகழ்ந்தது! இறை நம்பிக்கையுடன் போட்டி மிகுந்த அறிவியல் உலகில் முன்னேறலானார்.

ரொபாட்டுகளும், கணிணிகளும் மரபணு பற்றிய (ஜீன்ஸ்) வரைபடத்தை இப்போது வெகு வேகமாக உருவாக்குகிறது. ஆனால் ஆரம்ப காலத்தில் காலின்ஸும் அவரது சகாக்களும் வெறும் கையால் எழுதி எழுதி அனைத்து மரபணுக்களையும் அவை சம்பந்தப்பட்ட நோய்களையும் தொகுக்க ஆரம்பித்தனர்.

கடவுள் படைத்த மனிதன் பற்றிய மரபணு புத்தகம் எவ்வளவு பெரியது என்பதை முதலில் அவர் தான் கண்டார்! 3.1 பில்லியன் – 310 கோடி எழுத்துக்கள் உள்ள செய்முறை வழிகாட்டி புத்தகம் அது! மனிதன் பற்றிய மர்மம், மனித குலம் பற்றிய புதிர் ஆகியவற்றை விடுவிக்கும் புத்தகம் அது. பக்கம் பக்கமாக அதைப் புரட்டிய அவரால் மலைக்காமல் இருக்க முடியவில்லை!

ஆஹா! கடவுளைக் கண்டேன்! அவரது மொழியையும் கண்டேன்! என்று கூறினார் அவர். கடவுளின் மனதில் இருப்பதில் ஒரு சிறு துளியையே இதில் நான் காண்கிறேன் என்கிறார் அவர்.

எந்த மாதிரி சமுதாயம் அமைந்த உலகத்தை நாம் விரும்புகிறோம்? அறிவியலை மட்டுமே எடுத்துக் கொண்டு ஆன்மீகத்தை இழக்கப் போகிறோமா? அல்லது அறிவியலை சந்தேகக் கண் கொண்டு பார்த்து மனிதனின் துன்பத்தைத் துடைக்காமல் இருக்கபோகிறோமா? – இது தான் அவரது கேள்வி! ஆன்மீகம் உடைய அறிவியல் சமுதாயத்தை இவர் விரும்புகிறார். ஜெனோம் புராஜக்டே கடவுளின் புராஜக்ட்! அவரைக் கோவிலிலும் கும்பிடலாம்; சோதனைச் சாலையிலும் கும்பிடலாம் என்பதே காலின்ஸின் திடமான கருத்து!

மனித #மரபணு ஒவ்வொன்றிலும் ஒரு ரகசியம் அடங்கி இருக்கிறது. ஒரு தத்துவம் இருக்கிறது. இப்படி ஒரு மரபணுவை வடிவமைத்த பேரறிவை வியக்காமல் இருக்க முடியவில்லை என்று கூறி பிரமிக்கிறார் அவர். 310 கோடி எழுத்துக்கள் கொண்ட கடவுளின் மொழி ஒரு அறிவியல் அதிசயம் என்றால் அதைப் படித்து பிரமித்த விஞ்ஞானியின் கூற்று இன்னொரு பெரும் அறிவியல் அதிசயம் ஆகி விட்டது. கடவுளை நம்பலாம் இனிமேல் – அறிவியல் ஆமோதிப்புடன்!

நன்றி : பாக்யா தீபாவளி மலர் 2007
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum