புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தாய்மண், ஆனால் அகதிகள்!  | காஷ்மீர் பண்டிட்களின் நிலை   Poll_c10தாய்மண், ஆனால் அகதிகள்!  | காஷ்மீர் பண்டிட்களின் நிலை   Poll_m10தாய்மண், ஆனால் அகதிகள்!  | காஷ்மீர் பண்டிட்களின் நிலை   Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
தாய்மண், ஆனால் அகதிகள்!  | காஷ்மீர் பண்டிட்களின் நிலை   Poll_c10தாய்மண், ஆனால் அகதிகள்!  | காஷ்மீர் பண்டிட்களின் நிலை   Poll_m10தாய்மண், ஆனால் அகதிகள்!  | காஷ்மீர் பண்டிட்களின் நிலை   Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
தாய்மண், ஆனால் அகதிகள்!  | காஷ்மீர் பண்டிட்களின் நிலை   Poll_c10தாய்மண், ஆனால் அகதிகள்!  | காஷ்மீர் பண்டிட்களின் நிலை   Poll_m10தாய்மண், ஆனால் அகதிகள்!  | காஷ்மீர் பண்டிட்களின் நிலை   Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
தாய்மண், ஆனால் அகதிகள்!  | காஷ்மீர் பண்டிட்களின் நிலை   Poll_c10தாய்மண், ஆனால் அகதிகள்!  | காஷ்மீர் பண்டிட்களின் நிலை   Poll_m10தாய்மண், ஆனால் அகதிகள்!  | காஷ்மீர் பண்டிட்களின் நிலை   Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
தாய்மண், ஆனால் அகதிகள்!  | காஷ்மீர் பண்டிட்களின் நிலை   Poll_c10தாய்மண், ஆனால் அகதிகள்!  | காஷ்மீர் பண்டிட்களின் நிலை   Poll_m10தாய்மண், ஆனால் அகதிகள்!  | காஷ்மீர் பண்டிட்களின் நிலை   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தாய்மண், ஆனால் அகதிகள்!  | காஷ்மீர் பண்டிட்களின் நிலை   Poll_c10தாய்மண், ஆனால் அகதிகள்!  | காஷ்மீர் பண்டிட்களின் நிலை   Poll_m10தாய்மண், ஆனால் அகதிகள்!  | காஷ்மீர் பண்டிட்களின் நிலை   Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
தாய்மண், ஆனால் அகதிகள்!  | காஷ்மீர் பண்டிட்களின் நிலை   Poll_c10தாய்மண், ஆனால் அகதிகள்!  | காஷ்மீர் பண்டிட்களின் நிலை   Poll_m10தாய்மண், ஆனால் அகதிகள்!  | காஷ்மீர் பண்டிட்களின் நிலை   Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
தாய்மண், ஆனால் அகதிகள்!  | காஷ்மீர் பண்டிட்களின் நிலை   Poll_c10தாய்மண், ஆனால் அகதிகள்!  | காஷ்மீர் பண்டிட்களின் நிலை   Poll_m10தாய்மண், ஆனால் அகதிகள்!  | காஷ்மீர் பண்டிட்களின் நிலை   Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
தாய்மண், ஆனால் அகதிகள்!  | காஷ்மீர் பண்டிட்களின் நிலை   Poll_c10தாய்மண், ஆனால் அகதிகள்!  | காஷ்மீர் பண்டிட்களின் நிலை   Poll_m10தாய்மண், ஆனால் அகதிகள்!  | காஷ்மீர் பண்டிட்களின் நிலை   Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
தாய்மண், ஆனால் அகதிகள்!  | காஷ்மீர் பண்டிட்களின் நிலை   Poll_c10தாய்மண், ஆனால் அகதிகள்!  | காஷ்மீர் பண்டிட்களின் நிலை   Poll_m10தாய்மண், ஆனால் அகதிகள்!  | காஷ்மீர் பண்டிட்களின் நிலை   Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய்மண், ஆனால் அகதிகள்! | காஷ்மீர் பண்டிட்களின் நிலை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 11, 2023 8:35 pm

காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து பயங்கரவாதிகளால் துரத்தப்பட்டு ஜம்மு பகுதியில் வாழும் லட்சக்கணக்கான காஷ்மீர் பண்டிட் சமூகத்தினரின் வேதனைகள் தொடர்கின்றன. அவர்களை மறுகுடியமர்த்தும் மத்திய அரசின் திட்டங்கள் பயங்கரவாதிகளின் திடீர்த் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

தற்போது ஜம்மு-காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்கள், முன்பு ஜம்மு-காஷ்மீர் என்கிற தனி மாநிலமாக இருந்தது. 1989-95 காலகட்டத்தில் காஷ்மீர் பயங்கரவாதிகளின் மதரீதியான தொடர் தாக்குதல்களால் 700-க்கும் மேற்பட்ட காஷ்மீர் பண்டிட் சமூகத்தைச் சார்ந்த ஹிந்துக்கள் பலியாகினர். மண்ணின் மைந்தர்களான அவர்கள் தங்கள் உயிரையும் குடும்பத்தையும் பாதுகாக்க, வீடுகளையும் சொத்துகளையும் கைவிட்டு, காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து வெளியேறி ஜம்முவில் அடைக்கலம் புகுந்தனர். அன்று முதல் இன்று வரை அவர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகள் போல வாழ்கின்றனர். இவ்வாறு ஜம்முவில் குடிபெயர்ந்த அகதி பண்டிட்களின் எண்ணிக்கை சுமார் 3.5 லட்சம். இவர்களது வீடுகளும் சொத்துகளும் பயங்கரவாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டன.

இந்த இனப்படுகொலை தொடர்பான வழக்குகளில் பெரும்பாலானவை இதுவரை முழுமை பெறவில்லை; குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படவில்லை. இந்த விவகாரத்தை பாஜக ஆரம்பத்திலிருந்தே நாடு முழுவதிலும் பிரசாரம் செய்து வருகிறது. ஜம்மு-காஷ்மீரில் சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்களின் பாதுகாப்பு குறித்து, தேசிய அளவில் சிறுபான்மையினர் நலன் குறித்துப் பேசும் எந்தக் கட்சியும் பேசுவதில்லை என்பது பாஜகவின் பிரதான குற்றச்சாட்டு. எனவேதான், மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்தவுடன், காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து வெளியேறிய காஷ்மீர் பண்டிட் சமூகத்தினரை மீண்டும் அங்கு குடியமர்த்தும் பணிகளைத் தொடங்கியது. ஆனால் வாழ்வாதாரம் தொலைந்து 33 ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில், பண்டிட்கள் அங்கு செல்லத் தயங்குகின்றனர்.

எனவே, காஷ்மீர் பண்டிட் சமூகத்தினரின் மறுகுடியமர்வுக்காக பிரதமரின் மேம்பாட்டுத் திட்டம் 2015-இல் தொடங்கப்பட்டது. அதன்படி, ஜம்மு - காஷ்மீரில் உள்ள அரசுப் பணியிடங்களில் 3,000 இடங்கள் காஷ்மீர் அகதி பண்டிட்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. கடந்த ஐந்தாண்டுகளில் இத்திட்டத்தின் கீழ் 2,639 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதனிடையே காஷ்மீர் மாநிலத்துக்கு அரசியல் சாசனத்தின் 370-ஆவது பிரிவின்கீழ் வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தும் 2019-இல் நீக்கப்பட்டது. மத்திய அரசின் திட்டங்கள் வெற்றி பெற்றால் தங்கள் பிரிவினை எண்ணம் பலிக்காது என்பதை உணர்ந்த பயங்கரவாதிகள், 2020 முதல் அங்கு அரசுப் பணியில் அமரும் காஷ்மீர் பண்டிட்களைத் தாக்கி வருகின்றனர்.

கடந்த ஆண்டில் காஷ்மீர் பண்டிட்கள் மூவர் உள்ளிட்ட சிறுபான்மை மதத்தினர் 14 பேர் ஜம்மு-காஷ்மீரில் கொல்லப்பட்டிருப்பதாக, மாநிலங்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் தெரிவித்திருக்கிறார். லஷ்கர்-ஏ-தொய்பா பிரி வினைவாத இயக்கம், இந்தத் தாக்குதல்களுக்குப் பின்னணியில் இருந்து செயல்படுவதாக உளவுத்துறை தகவல்கள் கூறுகின்றன. கடந்த மே மாதம் பட்காம் அருகில் வட்டாட்சியர் அலுவலக ஊழியர் ராகுல் பட்டும், குல்காம் அருகில் பள்ளி ஆசிரியை ரஜினி பாலாவும் பணியிடத்திலேயே பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அதையடுத்து, ஜம்மு-காஷ்மீரில் தங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லாததால் அங்கு வழங்கப்பட்ட அரசுப் பணியைத் தொடர மறுத்து, ஜம்முவிலேயே தங்களுக்கு பணியிட மாற்றம் கோரி வருகின்றனர் காஷ்மீர் பண்டிட்கள். எனவே, இவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய மாதாந்திர ஊதியம் கடந்த ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது. தவிர, தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்கிற அரசின் உறுதியை பண்டிட் மக்கள் நம்பத் தயாராக இல்லை.

அரசை ஆதரிக்கும் உள்ளூர் இஸ்லாமிய மக்களையே கொல்லத் துணிந்த பயங்கரவாதிகள் தங்களை விட்டு வைப்பார்களா என்பதுதான் பண்டிட் மக்களின் ஐயம். இதனிடையே டிசம்பர் 5-ஆம் தேதி, காஷ்மீரில் பணியாற்றும் பண்டிட் சமூக அரசு ஊழியர்கள் 56 பேரின் பட்டியலை வெளியிட்டு அவர்களைக் கொல்லப்போவதாக, எதிர்ப்பு முன்னணி (டி.ஆர்.எஃப்.) என்ற பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்தது. ஆனால், காஷ்மீர் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் தங்களுக்கு பணி வழங்கப்பட்ட இடத்தில் பணி புரியாதவரை அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படமாட்டாது என்று ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா எச்சரித்திருக்கிறார். இதுநாள் வரை பாஜகவின் ஆதரவாளர்களாக இருந்த காஷ்மீர் பண்டிட்கள், இந்தத் தொடர் நிகழ்வுகளால் தற்போது அக்கட்சியின் தீவிர எதிர்ப்பாளர்களாக மாறி வருகின்றனர்.

காஷ்மீர் விவகாரத்தில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து மத்திய அரசு விளையாடுவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இவ்வாறாக சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழும் காஷ்மீர் பண்டிட்களின் நிலை பரிதாபத்துக்குரியதாக மாறி இருக்கிறது. ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதம் முடிவுக்குக் கொண்டுவரப்படாதவரை, அங்கு அமைதியை நிலைநாட்டுவது பகல் கனவாகவே இருக்கும். அங்குள்ள பயங்கரவாதிகளுக்குத் துணைபுரியும் அண்டைநாடான பாகிஸ்தான் திருந்தாதவரை, பண்டிட் மக்களின் வாழ்க்கை நிலையற்றதாகவே தொடரும்.

தினமணி




தாய்மண், ஆனால் அகதிகள்!  | காஷ்மீர் பண்டிட்களின் நிலை   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக