புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழர் திருநாள், உழவர் திருநாள் என இலக்கியத்தில் எதுவுமில்லை Poll_c10தமிழர் திருநாள், உழவர் திருநாள் என இலக்கியத்தில் எதுவுமில்லை Poll_m10தமிழர் திருநாள், உழவர் திருநாள் என இலக்கியத்தில் எதுவுமில்லை Poll_c10 
53 Posts - 42%
heezulia
தமிழர் திருநாள், உழவர் திருநாள் என இலக்கியத்தில் எதுவுமில்லை Poll_c10தமிழர் திருநாள், உழவர் திருநாள் என இலக்கியத்தில் எதுவுமில்லை Poll_m10தமிழர் திருநாள், உழவர் திருநாள் என இலக்கியத்தில் எதுவுமில்லை Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
தமிழர் திருநாள், உழவர் திருநாள் என இலக்கியத்தில் எதுவுமில்லை Poll_c10தமிழர் திருநாள், உழவர் திருநாள் என இலக்கியத்தில் எதுவுமில்லை Poll_m10தமிழர் திருநாள், உழவர் திருநாள் என இலக்கியத்தில் எதுவுமில்லை Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
தமிழர் திருநாள், உழவர் திருநாள் என இலக்கியத்தில் எதுவுமில்லை Poll_c10தமிழர் திருநாள், உழவர் திருநாள் என இலக்கியத்தில் எதுவுமில்லை Poll_m10தமிழர் திருநாள், உழவர் திருநாள் என இலக்கியத்தில் எதுவுமில்லை Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
தமிழர் திருநாள், உழவர் திருநாள் என இலக்கியத்தில் எதுவுமில்லை Poll_c10தமிழர் திருநாள், உழவர் திருநாள் என இலக்கியத்தில் எதுவுமில்லை Poll_m10தமிழர் திருநாள், உழவர் திருநாள் என இலக்கியத்தில் எதுவுமில்லை Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
தமிழர் திருநாள், உழவர் திருநாள் என இலக்கியத்தில் எதுவுமில்லை Poll_c10தமிழர் திருநாள், உழவர் திருநாள் என இலக்கியத்தில் எதுவுமில்லை Poll_m10தமிழர் திருநாள், உழவர் திருநாள் என இலக்கியத்தில் எதுவுமில்லை Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
தமிழர் திருநாள், உழவர் திருநாள் என இலக்கியத்தில் எதுவுமில்லை Poll_c10தமிழர் திருநாள், உழவர் திருநாள் என இலக்கியத்தில் எதுவுமில்லை Poll_m10தமிழர் திருநாள், உழவர் திருநாள் என இலக்கியத்தில் எதுவுமில்லை Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழர் திருநாள், உழவர் திருநாள் என இலக்கியத்தில் எதுவுமில்லை Poll_c10தமிழர் திருநாள், உழவர் திருநாள் என இலக்கியத்தில் எதுவுமில்லை Poll_m10தமிழர் திருநாள், உழவர் திருநாள் என இலக்கியத்தில் எதுவுமில்லை Poll_c10 
304 Posts - 50%
heezulia
தமிழர் திருநாள், உழவர் திருநாள் என இலக்கியத்தில் எதுவுமில்லை Poll_c10தமிழர் திருநாள், உழவர் திருநாள் என இலக்கியத்தில் எதுவுமில்லை Poll_m10தமிழர் திருநாள், உழவர் திருநாள் என இலக்கியத்தில் எதுவுமில்லை Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
தமிழர் திருநாள், உழவர் திருநாள் என இலக்கியத்தில் எதுவுமில்லை Poll_c10தமிழர் திருநாள், உழவர் திருநாள் என இலக்கியத்தில் எதுவுமில்லை Poll_m10தமிழர் திருநாள், உழவர் திருநாள் என இலக்கியத்தில் எதுவுமில்லை Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
தமிழர் திருநாள், உழவர் திருநாள் என இலக்கியத்தில் எதுவுமில்லை Poll_c10தமிழர் திருநாள், உழவர் திருநாள் என இலக்கியத்தில் எதுவுமில்லை Poll_m10தமிழர் திருநாள், உழவர் திருநாள் என இலக்கியத்தில் எதுவுமில்லை Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
தமிழர் திருநாள், உழவர் திருநாள் என இலக்கியத்தில் எதுவுமில்லை Poll_c10தமிழர் திருநாள், உழவர் திருநாள் என இலக்கியத்தில் எதுவுமில்லை Poll_m10தமிழர் திருநாள், உழவர் திருநாள் என இலக்கியத்தில் எதுவுமில்லை Poll_c10 
21 Posts - 3%
prajai
தமிழர் திருநாள், உழவர் திருநாள் என இலக்கியத்தில் எதுவுமில்லை Poll_c10தமிழர் திருநாள், உழவர் திருநாள் என இலக்கியத்தில் எதுவுமில்லை Poll_m10தமிழர் திருநாள், உழவர் திருநாள் என இலக்கியத்தில் எதுவுமில்லை Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
தமிழர் திருநாள், உழவர் திருநாள் என இலக்கியத்தில் எதுவுமில்லை Poll_c10தமிழர் திருநாள், உழவர் திருநாள் என இலக்கியத்தில் எதுவுமில்லை Poll_m10தமிழர் திருநாள், உழவர் திருநாள் என இலக்கியத்தில் எதுவுமில்லை Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
தமிழர் திருநாள், உழவர் திருநாள் என இலக்கியத்தில் எதுவுமில்லை Poll_c10தமிழர் திருநாள், உழவர் திருநாள் என இலக்கியத்தில் எதுவுமில்லை Poll_m10தமிழர் திருநாள், உழவர் திருநாள் என இலக்கியத்தில் எதுவுமில்லை Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
தமிழர் திருநாள், உழவர் திருநாள் என இலக்கியத்தில் எதுவுமில்லை Poll_c10தமிழர் திருநாள், உழவர் திருநாள் என இலக்கியத்தில் எதுவுமில்லை Poll_m10தமிழர் திருநாள், உழவர் திருநாள் என இலக்கியத்தில் எதுவுமில்லை Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
தமிழர் திருநாள், உழவர் திருநாள் என இலக்கியத்தில் எதுவுமில்லை Poll_c10தமிழர் திருநாள், உழவர் திருநாள் என இலக்கியத்தில் எதுவுமில்லை Poll_m10தமிழர் திருநாள், உழவர் திருநாள் என இலக்கியத்தில் எதுவுமில்லை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழர் திருநாள், உழவர் திருநாள் என இலக்கியத்தில் எதுவுமில்லை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 13, 2023 7:51 am

தமிழர் திருநாள், உழவர் திருநாள் என இலக்கியத்தில் எதுவுமில்லை Fb_img15


தைமாதம் உழவர் பண்டிகையா என்றால் அப்படி ஒரு குறிப்போ , அடையாளமோ எந்த சங்க இலக்கியத்திலுமில்லை கல்வெட்டிலுமில்லை செப்பேடுகளிலுமில்லை

தமிழர் திருநாள், உழவர் திருநாள் என எங்கும் எதுவுமில்லை

அது சூரியவழிபாட்டு நாளாக இருந்திருக்கின்றது, அந்த ஆண்டின் கடைசி அறுவடையாகவும் இருந்திருகின்றது

பொங்கல் மட்டும்தான் அறுவடைநாள் என்பதல்ல, முப்போகம் என விளைச்சலை சொல்வது ஒவ்வொரு நான்கு மாதத்துக்கும் ஒருமுறை நடக்கும் அறுவடை, அப்படி தைமாதம் நடப்பது ஆண்டின் கடைசி அறுவடை

அதனால் அது சிறப்பாயிற்று,அப்படியே இன்னும் பல காரணங்கள் உண்டு

உழவர்களின் காவலன் என அறியபட்டவனும், ஆடுமாடு மேய்ப்போருக்கு அடையாளம் கொடுத்து அரசு கொடுத்த கண்ணனை போல உழவர்க்கு முழு பலமுமாய் இருந்த பலராமனின் சிற்ப்பினை சொல்லி அந்நாள் கொண்டாடபட்டது என்பதும் ஒரு கோணம்

பனை மர கொடியும், ஏர் ஆயுதமுமாக கொண்டபலராம வழிபாடே தைதிங்களில் இன்றும் பிரதானமாக தெரியும்

பலராமன் கண்ணனுக்கு அண்ணனாக அவதரித்தவன், பெரும் வீரன் கண்ணனோடு பல போர்களை புரிந்தவன், அவன் கதாயுத சண்டையில் வல்லவன், ஒரு கட்டத்தில் எல்லா அதர்மககாரர்களை கொன்று தனி அரசு அமைத்து ஏர்கலப்பை சின்னத்துடன் பனைகொடியோடு அரசனாக ஆண்டு கொண்டிருந்தவன்

பீமனுக்கும் துரியோதனனுக்கும் அவனே கதாயுத பயிற்சி கொடுத்தான், அதனாலே மகாபாரத யுத்தத்தில் இருவருக்கும் பொதுவாக ஒதுங்கி நின்றான், கடைசியில் பீமன் துரியன் தொடையில் அடித்ததை கண்டித்து பீமனை தண்டிக்க வந்த அவனுக்கு உண்மையினை உணர்த்தினான் கண்ணன்

அதன்பின் தான் யாரென புரிந்த பலராமன் அமைதியாகி இன்னும் ஏகபட்ட உழவர்களை வாழவைத்து வைகுண்டம் ஏகினான், இன்றும் உழவருக்கு தெய்வம் அவனே" என சுருக்கமாக முடிகின்றது அவன் வரலாறு

ஒரு காலத்தில் கண்ணனுக்கு நிகராக அவனும் இந்துக்களால் இந்துஸ்தானம் முழுக்க கொண்டாடபட்டிருக்கின்றான், யாதவருக்கு கண்ணன் போல உழவருக்கு அவன் தனி அடையாளமாக நின்றிருக்கின்றான்

அப்படிபட்ட பலராம வழிபாடு இந்தியா முழுக்க இருந்திருகின்றது, தமிழகத்தில் எப்படியெல்லாம் பலராமன் கொண்டாடபட்டு வழிபடபட்டான் என்பதை பல சங்க பாடல்கள் தெளிவாக சொல்கின்றன.

திணைமாலை நூற்றம்பைது "கண்ணனின் முன்னோன்" என பலராமனை முன்மொழிகின்றது

நக்கீரன் "பனைகொடியோன்" என பலராமனை தெளிவாக தன் பாடல்களில் சொல்கின்றார்,

தொல்காப்பியரும் "பனைகொடி" பலராமனுடையது என்பதை அழுத்தமாக பதிவு செய்கின்றார்

புறநானூற்று பாடலில் 58ம் பாடல் கண்ணனுக்கும் பலராமனுக்கும் எல்லா ஆலயங்களிலும் இரட்டை சன்னதி இருந்ததை தெளிவாக சொல்கின்றது

பூம்புகாரின் பெரும் புலவரான காரிகண்ணன் அந்த பாடலில் சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனும், பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் நெருக்கமான நண்பர்களாக இருந்ததை "கண்ணனும் பலராமனும்" என பாடி வைத்ததில் தெரிகின்றது பலராமனின் பிரசித்தி

"“பால்நிற உருவின் பனைக்கொடியோனும்
நீல்நிற உருவின் நேமியோனும் என்று
இரு பெருந்தெய்வமும் உடன் நின்றா அங்கு
உருகெழு தோற்றமொடு உட்குவர விளங்கி
இன்னீர் ஆகலின் இனியவும் உளவோ?”" என்கின்றார்

அதாவது வெண்மை நிறமான பால்ராமன் பனனைகொடி தாங்கியிருப்பவன் அவனும் நீல நிறமான கண்ணனும் இருபெரும் தெய்வங்களாக விளங்குவதை போல பாண்டியனும் சொழனும் வீற்றிருக்கின்றார்கள் என அழகாக பாடுகின்றார் புலவர்

அதாவது கண்ணனோடு பலராம வழிபாடு இருந்ததை இங்கே குறிப்பிடுகின்றார்

நற்றிணையில் கபிலர் பலராம வழிபாட்டை தெளிவாக சொல்கின்றார், நற்றிணையில் அவர் எழுதிய 32ம் பாடல் இதோ

"மாயோன் அன்ன மால் வரைக் கவாஅன்
வாலியோன் அன்ன வயங்கு வெள்ளருவி
அம்மலை கிழவோன் நம் நயந்து என்றும்
வருந்தினன் என்பதோர் வாய்ச்சொல் தேறாய்
நீயும் கண்டு நுமரொடும் எண்ணி
அறிவறிந்து அளவல் வேண்டும் மறுதரற்கு
அரிய தோழி வாழி பெரியோர்
நாடி நட்பின் அல்லது
நட்டு நாடார் தம் ஒட்டியோர் திறத்தே" எனும் பாடல் அது

அதாவது மாயோனைப் போல் கரு நிறம் கொண்டு ஓங்கி உயர்ந்து நிற்கும் மலையின் ஒரு பக்கத்தில் மாயோனின் முன்னவனாகத் தோன்றிய பலராமன் என்னும் வாலியோனின் நிறம் போல் வெள்ளை நிறம் கொண்ட அழகிய அருவி இருக்கிறது என்பது பொருள்

வாலியோன் என்பது பலராமனின் இன்னொரு பெயராகின்றது

இளம்பெரும் வழுதியார் எனும் புலவர் புறநானூற்று பாடலில் பாடுகின்றார் இப்படி

"சிறந்தது கல் அறை கடாம் கானலும் போலவும்,
புல்லிய சொல்லும் பொருளும் போலவும்,
எல்லாம் வேறு வேறு உருவின் ஒரு தொழில் இருவர்த்
தாங்கும் நீள் நிலை ஓங்கு இருங்குன்றம்.
நாறு இணர்த் துழாயோன் நல்கின் அல்லதை"

வேறு வேறு தொழிலை செய்யும் இருவர் என அவர் சொல்வது பலராமனையும் கண்ணனயுமாகும. மலையில் இருந்த கோவிலை அதாவது கண்ணனுகும் பலராமனுக்கும் இருந்த வழிபாட்டை சொல்கின்றார்

"ஒருகுழை அவள் மார்பில் ஒண்தார் போல ஒளிமிக", "காதில் குழை மார்பில் சிவந்த மணலை உடைய நம்பி மூத்தபிரான் (பலராமன்)" என்கின்றது கலிதொலை

"பாலன்ன மேனியான்", "வானுற ஓங்கிய வயங்கொளிர் பனைக்கொடி பால்நிற வண்ணன்போல் பழி தீர்த்த வெள்ளையும்ஆயரெல்லாம் சேரத்திரண்டு விளங்குகின்ற வானில் எறியும்படி ஓங்கிய ஒளிபெருகுகின்ற பாலின் நிறம் உடைய பனைக்கொடியோன்" என்பதும் கலிதொகை வரிகளே

"விறல்மிகு வலியலி பொலிபகழ் புழுதியின் நிறனுழும் வளைவாய் நாஞ்சிலோனும்" என்கின்றது பரிபாடல்

"வாய்விளங்கும் வளைநாஞ்சில் ஒருகுழை ஒருவனை", "வளையடு புரையும் வாலியோன்" எனவும் பரிபாடல் பல இடங்களில் சொல்கின்றது

பாலராமனுக்கு தமிழகமெங்கும் கோவில்கள் இருந்திருக்கின்றன, வழிபாடும் பூஜையும் இருந்திருக்கின்றது, விவசாயிகளின் தனிபெரும் தெய்வமாக காவலாக அவன் கொண்டாடபட்டிருக்கின்றான்

அவனுக்கு எந்த வரிசையில் கோவில் இருந்தது என்பதை இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் சொல்கின்றார்
" பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்
அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும்
வால்வளை மேனி வாலியோன் கோயிலும்
நீல மேனி நெடியோன் கோயிலும்
மாலை வெண்குடை மன்னவன் கோயிலும்"

அதாவது பிறப்பே இல்லா மகாதேவன் கோவிலும், முருகன் கோவிலும், பலராமன் கோவிலும், கண்ணன் கோவிலும், இந்திரன் கோவிலும் இருந்தன என்கின்றார்

"புகர்வெள்ளை நாகர்தம் கோட்டம் வெள்ளை நாகர்" என்பதும் இளங்கோ வரியே

ஆண்டாள் பலராமன் வழிபாட்டை தெளிவாக பல இடங்களில் சொல்கின்றாள் "செம்பொன் கழலடி செல்வன் பலதேவனை" என்பது அவளின் தெளிவான வரி

மதுரையில் பலராமன் வழிபாடு இருந்ததை "மேழிவலனு யர்த்த வெள்ளை நகரமும்" என்ற வரி தெளிவாக சொல்கின்றது, மேழி என்றால் ஏர்கலப்பை , வெள்ளை நகரம் என்றால் பலராமனின் வெள்ளை நிறத்தை குறிப்பது

(இன்றும் தமிழ்நாட்டில் நாச்சியார்கோவில் சீனுவாசபெருமாள் கோவிலில் சங்கர்ஷனர் என்ற பெயருடன், கருவறையில் இருந்தபடி பலராமர் அருள்பாலிக்கிறார், இப்படி வெகுசில கோவில்களே பண்டைய தொடர்ச்சியாக எஞ்சியிருக்கின்றன)

கண்ணனின் மேனி கருநீலம், அவ்வகையில் கருப்பன், நீலமேகம், கார்மேகம் என கண்ணனை குறிக்கும் பெயர்கள் இன்றுவரை தமிழகத்தில் உண்டு

பலராமனின் நிறம் வெண்மை, அவனை வேண்டி அக்காலத்தில் இடபட்ட பெயர்தான் வெள்ளைச்சாமி, வெள்ளையன் போன்றவை

ஆம் வெள்ளச்சாமி என்பது பலராமனின் பெயரில் இருந்து வந்ததே

கருப்பசாமி, கருப்பன் என்பதெல்லாம் கண்ணனை குறிக்கும் பெயர்போல வெள்ளையன், வெள்ளைய தேவன்,
வெள்ளச்சாமி என்பதெல்லாம் பலராமனின் நினைவாக வந்த பெயர்களே

இப்படி பலராமனுக்கும் தமிழகத்துக்கும் நெருங்கியதொடர்பு உண்டு, இந்தியா முழுக்க கொண்டாடபட்ட பலராமன் தமிழகத்திலும் கொண்டாடபட்டான்

பின்னாளில் பவுத்தமும் சமணமும் இந்துக்களை குழப்பி இந்துமதத்தை சரித்து போட்டன, பின் இந்துமதம் மீண்டபொழுது சில தொடர்புகள் அற்றுபோயின அதில் பலராம வழிபாடும் ஒன்று

விவசாயிகளின் தெய்வமான அவனுக்கு தைமாதம் விழா கொண்டாடபட்டது, தமிழகத்தில் எல்லா இந்து தெய்வங்களுக்கும் விழா இருந்தது

இந்திரனுக்கு இந்திர விழா இருந்தது போல பலராமனுக்கும் விழா இருந்தது

அந்த தைமாத தொடக்கத்தில் சூரியனை வணங்கும்பொழுது விவசாயிகளின் காவலான பலராமனையும் வணங்கினார்கள் இந்துக்கள்

அவனின் ஏர்கலப்பை வைத்து அவன் கொண்டாடபட்டான், அவனின் பனைகொடியிடன் பனை பொருட்களும் வைத்து வணங்கபட்டன‌

அப்பொழுது மார்கழி நோன்பு முடிந்து அணங்கதேவன் எனும் காமதேவனுக்குமான நோன்பு காலங்களாகவும் அவை இருந்தன, இதனால் கரும்பு வைத்து வழிபடும் வழக்கமும் அன்று இருந்தது

இதனை ஆண்டாள் பாடல்களில் காணலாம், அக்கால பாவையரின் நோன்பு மார்கழியில் மட்டும் முடிவதல்ல, அந்த நோன்பு பின்பு அணங்க தேவனுக்கும் தைமாதம் தொடர்ந்தது

அணங்கன் எனும் மன்மதன் என்றால் வயாக்ராவோ இல்லை திராவிட கும்பல் சொல்லும் தத்துவமும் அல்ல, ஒரு ஆண் பெண்ணின் இதயத்தை வலுவான அன்பால் பிணைப்பவன் அணங்க தேவன், பரிபூரணமாக இருவரையும் அன்பால் கட்டி வைத்திருப்பவன் என அவனுக்கு பெயர்

மணம் செய்யபோகும் கணவன் தன்மேல் அப்படி அன்பாய் இருக்க அக்கால பாவையர் தைமாதம் நோன்பு நோற்பது உண்டு, ஆண்டாளின் நாச்சியார் திருமொழி அதைத்தான் சொல்கின்றது

இப்படி முழுக்க இந்துக்களின் பாரம்பரிய விழாவாக இருந்ததுதான் தைமாதம்

இதுதான் தைமாதம் 1ம் தேதி கலப்பை, பனங்கிழங்கு, கரும்பு என வைத்து வழிபடும் வழமையாயிற்று

பலராமன் குழந்தை வரத்துக்கும் பெயர் பெற்றவன், பலராம வழிபாடு நல்ல ஆண்குழந்தைகளை தரும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாய் இருந்ததால் மார்கழி நோன்பு முடிந்து அணங்கதேவன் நோன்புக்கு வரும் பெண்கள் பலராமனையும் தைமாத தொடக்கத்தில் மறக்காமல் வழிபட்டார்கள்

(இன்றும் இந்த வழிபாடு வடக்கே உண்டு, பலராமன் ஜெயந்தியில் நல்ல ஆண்குழந்தைக்காக தவமிருக்கும் தாய்மார்கள் உண்டு)

தைமாத முதல்நாள் வழிபாடு விவசாயிகளின் காவலனான பலராமனுக்கே, விளைச்சலின் பலனை விவசாயிகளின் காவலனான அவனுக்கு படைத்து மகிழ்ந்தார்கள்

விவசாயிகளின் துயர் துடைக்க வந்த அவதாரம் அவன், விவசாயிகளை தனி அரசாக ஆள வைத்து ஏர்கலப்பையினை சின்னமாக வைத்து உயர்த்தியவன் அவனே

இப்படி பலராமனின் கொண்டாட்டமாக இருந்த பண்டிகை பின்னாளில் பவுத்த சமணத்தால் வீழ்த்தபட்டு பின் வந்த நாட்களில் வெறும் தைமாத கொண்டாட்டமாக மாறிற்று

18ம் நூற்றாண்டு ஐரோப்பிய கும்பலின் மடைமாற்றலில் அது "உழவர் திருநாள்" என மாறி பின்னாளில் "தமிழர் திருநாள்" எனவும் இன்று திசைமாறிற்று

உலகில் மலையாளி திருநாள், கன்னடர் திருநாள் , சிங்களர் திருநாள் என ஒருநாள் இல்லாதபொழுது தமிழனுக்கு மட்டும் ஏன் திருநாள் என யாரும் கேட்கவே இல்லை

தமிழன் உழுது உண்டான் என்றால் மற்ற இனமெல்லாம் நீரை குடித்தா வாழ்ந்தது? எல்லா இனமும் உழுதது விதைத்தது அறுத்தது உண்டது வாழ்ந்தது என்றாலும் பதில் இல்லை

ஆம், இங்கு ஏர்கலப்பையுடன் அந்த கொண்டாட்டம் வந்ததன் மூலம் பலராமன் வழிபாடே, பலராமன் வழிபாடு இங்கு பெரும் கொண்டாட்டமும் கோவிலும் சன்னதியுமாய் இருந்தது

கண்ணனுக்கு இருந்த எல்லா வழிபாடும் பலராமனுக்கும் இருந்தது

தைமாதம் விளைச்சல் காலத்தில் அவன் பிரத்யோகமாக கொண்டாடபட்டான், அவனுக்கு விவசாயிகள் செலுத்திய நன்றியே, விவசாயிகளும் எல்லா உரிமையும் சலுகையும் பெற்று வாழ அவன் அவதரித்து வந்து அரசமைத்து காத்த நன்றியே தை திங்கள் கொண்டாட்டமாகி பின் உருமாறி நிற்கின்றது

இந்நாளில் அந்த பலராமனையும் ஆண்டாள் சொன்ன அந்த அணங்க நோன்பும் நல்ல இந்துவுக்கு நினைவுக்கு வராமல் போக கூடாது

விவசாயிகளின் காவலான் பலராமனையும், பக்தியின் உருவாகவும் அந்நாளைய இந்துக்களின் மரபை சொல்பவளுமான ஆண்டாளை சூரிய தேவனோடு சேர்ந்து வணங்கி கொண்டாடலாம்..

பிரம்ம ரிஷி - முகநூல்





தமிழர் திருநாள், உழவர் திருநாள் என இலக்கியத்தில் எதுவுமில்லை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக