ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓய்வு பெற்ற மறுநாளே தேர்தல் ஆணையராக நியமனம்.. -அரசியலுக்காக நியமிக்கப்படும் அதிகாரிகள் !

Go down

ஓய்வு பெற்ற மறுநாளே தேர்தல் ஆணையராக நியமனம்.. -அரசியலுக்காக நியமிக்கப்படும் அதிகாரிகள் ! Empty ஓய்வு பெற்ற மறுநாளே தேர்தல் ஆணையராக நியமனம்.. -அரசியலுக்காக நியமிக்கப்படும் அதிகாரிகள் !

Post by Guest Tue Nov 29, 2022 7:23 pm

2022 டிசம்பர் 31ம் வரை ஒன்றிய அமைச்சகத்தின் செயலாளராகப் பதவிக் காலம் இருக்கும் அருண் கோயல் விருப்ப ஓய்வு பெற்ற மறுநாளே தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

ஒன்றிய கனரகத் தொழில்துறை அமைச்சகத்தின் செயலாளராக இருந்த அருண் கோயல் கடந்த நவம்பர் 18ம் தேதி விருப்ப ஓய்வு பெற்றார். ஆனால், அதற்கு அடுத்தநாள் நவம்பர் 19ம் தேதி தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். நவம்பர் 21ம் தேர்தல் ஆணையராக அருண் கோயல் பதவியேற்று இருக்கிறார்.



இதையடுத்து, உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நபர்கள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, அவசர அவசரமாக ஒன்றிய அரசின் செயலாளர் அருண் கோயலை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டது குறித்து ஒன்றிய அரசிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தது.

கடந்த 2022 மே மாதத்தில் இருந்து காலியாக இருந்த தேர்தல் ஆணையரின் பதவியைக் குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நேரத்தில் அவசரமாக நியமிக்கப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

மேலும், தேர்தல் ஆணையரின் பதவிக்காக ஒன்றிய சட்டத்துறை அமைச்சகத்தால் பரிந்துரைக்கப்பட்ட 4 நபர்களின் பெயர்களும் எந்த அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்டது போன்ற கேள்விகளும் உச்ச நீதிமன்றத்தால் முன்வைக்கப்பட்டது.

அரசியல் சாசன விதிகளின்படி, தேர்தல் ஆணையராக நியமிக்கப்படும் நபர் 6 ஆண்டுகள் அல்லது அவருக்கு 65 வயது பூர்த்தியடையும் வரை அந்தப் பதவியில் இருக்க வேண்டும்.

ஆனால் தற்போது ஆளும் பாஜக அரசால் தேர்தல் ஆணையராக நியமிக்கப்படும் அருண் கோயல் 6 ஆண்டுகள் பூர்த்திச் செய்யும்படி இல்லை.

குஜராத், இமாச்சல பிரதேச மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நேரத்தில் ஒன்றிய அமைச்சகத்தில் செயலாளராக இருந்த ஒருவரை அவசரம் அவசரமாகத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டது தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத் தன்மையைக் கெடுக்கும் விதமாக உள்ளது.

எந்த அரசியல் இடையூறும் இன்றித் தன்னிச்சையாகச் செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையரின் பதவியை ஒன்றிய அமைச்சகத்தின் செயலாளராக இருந்த அருண் கோயல் என்பவரை இரண்டு நாளில் எந்த மதிப்பீடும் செய்யாமல் பாஜக அரசு நியமித்துள்ளது.

மற்ற பதவிகள் :

பாஜக அரசு தங்களுக்குச் சாதகமான அதிகாரிகளை முக்கியப் பொறுப்புகளில் நியமிப்பது அல்லது அவர்களது பணி காலத்தை நீட்டிப்புச் செய்வது என்பது புதிதல்ல.

ஓய்வு பெற்ற மறுநாளே தேர்தல் ஆணையராக நியமனம்.. -அரசியலுக்காக நியமிக்கப்படும் அதிகாரிகள் ! Bjp-3

அமலாக்கத்துறையின் தலைவராக இருந்த சஞ்சய் குமார் மிஸ்ரா ஓய்வு பெற வேண்டிய ஒரு நாளைக்கு முன் அவருடைய பதவி காலம் 2022 நவம்பர் 17ம் தேதி அன்று பாஜக அரசால் ஓர் ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டிருந்தது. அமலாக்கத்துறையின் தலைவராக இருக்கும் சஞ்சய் குமாரின் பதவிக் காலம் நீடிக்கப்படுவது இது 3வது முறையாகும். அமலாக்கத்துறையில் தலைவர் பொறுப்பில் வகிக்க வேறு எந்த அதிகாரிகளுக்கும் தகுதி இல்லையா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

அமலாக்கத்துறையைக் கையில் வைத்துக்கொண்டு எதிர் கட்சியினர் மீதும், எதிர் கருத்துகள் வைப்பவர்கள் மீதும் ஆளும் பாஜக அரசு நடவடிக்கை எடுப்பது அனைவரும் அறிந்ததே.

ஓய்வு பெற்ற மறுநாளே தேர்தல் ஆணையராக நியமனம்.. -அரசியலுக்காக நியமிக்கப்படும் அதிகாரிகள் ! Bjp-2

இதுமட்டுமின்றி, வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செயலாளராக இருந்த வினய் கவாதரா என்பவரின் பதவிக்காலம் 16 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற மறுநாளே தேர்தல் ஆணையராக நியமனம்.. -அரசியலுக்காக நியமிக்கப்படும் அதிகாரிகள் ! Bjp-1

கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் ஒன்றிய அமைச்சகத்தின் செயலாளராக இருந்த ராஜீவ் கவுபா என்பவரின் பதவிக்காலம் ஓர் ஆண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதே பதவியில் இது இரண்டாவது நீட்டிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் செயலாளராக இருந்த அஜய் குமார் பல்லா என்பவரின் பதிவிக்கலாம் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 3வது முறையாக அஜய் குமாரின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுதந்திரமாக வெளிப்படைத்தன்மையுடன் எந்தவித அரசியல் தலையீடுகளும் இன்றி செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையத்தின் பதவியை எந்தவித வெளிப்படைத்தன்மையும் இன்றி அவசர அவசரமாக எந்த மதிப்பீடும் செய்யாமல் நியமிக்கப்படுவது ஆளும் பாஜக அரசுக்கே சாதகமாக அமையும்.

ஆளும் பாஜக அரசுக்கு சாதகமான அதிகாரிகளை முக்கியமான அரசியல் சாசன பொறுப்புகளில் அமர வைப்பது ஜனநாயகத்துக்கு எதிரான ஒன்று.
(YT)
avatar
Guest
Guest


Back to top Go down

ஓய்வு பெற்ற மறுநாளே தேர்தல் ஆணையராக நியமனம்.. -அரசியலுக்காக நியமிக்கப்படும் அதிகாரிகள் ! Empty Re: ஓய்வு பெற்ற மறுநாளே தேர்தல் ஆணையராக நியமனம்.. -அரசியலுக்காக நியமிக்கப்படும் அதிகாரிகள் !

Post by Dr.S.Soundarapandian Wed Nov 30, 2022 12:07 pm

“அரசுக்கு சாதகமான அதிகாரிகளை முக்கியமான அரசியல் சாசன பொறுப்புகளில் அமர வைப்பது ஜனநாயகத்துக்கு எதிரான ஒன்று.
(YT)”.


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum