புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சந்தித்த வேளை! Poll_c10சந்தித்த வேளை! Poll_m10சந்தித்த வேளை! Poll_c10 
44 Posts - 63%
heezulia
சந்தித்த வேளை! Poll_c10சந்தித்த வேளை! Poll_m10சந்தித்த வேளை! Poll_c10 
20 Posts - 29%
வேல்முருகன் காசி
சந்தித்த வேளை! Poll_c10சந்தித்த வேளை! Poll_m10சந்தித்த வேளை! Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
சந்தித்த வேளை! Poll_c10சந்தித்த வேளை! Poll_m10சந்தித்த வேளை! Poll_c10 
2 Posts - 3%
viyasan
சந்தித்த வேளை! Poll_c10சந்தித்த வேளை! Poll_m10சந்தித்த வேளை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சந்தித்த வேளை! Poll_c10சந்தித்த வேளை! Poll_m10சந்தித்த வேளை! Poll_c10 
236 Posts - 43%
heezulia
சந்தித்த வேளை! Poll_c10சந்தித்த வேளை! Poll_m10சந்தித்த வேளை! Poll_c10 
217 Posts - 39%
mohamed nizamudeen
சந்தித்த வேளை! Poll_c10சந்தித்த வேளை! Poll_m10சந்தித்த வேளை! Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
சந்தித்த வேளை! Poll_c10சந்தித்த வேளை! Poll_m10சந்தித்த வேளை! Poll_c10 
21 Posts - 4%
prajai
சந்தித்த வேளை! Poll_c10சந்தித்த வேளை! Poll_m10சந்தித்த வேளை! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
சந்தித்த வேளை! Poll_c10சந்தித்த வேளை! Poll_m10சந்தித்த வேளை! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சந்தித்த வேளை! Poll_c10சந்தித்த வேளை! Poll_m10சந்தித்த வேளை! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சந்தித்த வேளை! Poll_c10சந்தித்த வேளை! Poll_m10சந்தித்த வேளை! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சந்தித்த வேளை! Poll_c10சந்தித்த வேளை! Poll_m10சந்தித்த வேளை! Poll_c10 
7 Posts - 1%
mruthun
சந்தித்த வேளை! Poll_c10சந்தித்த வேளை! Poll_m10சந்தித்த வேளை! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்தித்த வேளை!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 24, 2010 4:15 am

மிஸஸ் திவ்யா திவாகர்...'' என பிïன் அழைக்க வேகமாய் என் சான்றிதழ்களைத் தாங்கிய பையுடன் நடந்தேன் மேனேஜர் அறை நோக்கி. வேலைக்குச் செல்வது என்பது இன்றைய நாளில் பெண்களால் பல சமயங்களில் தவிர்க்க முடியாத விசயமாகி விட்டது. எனக்கும் அப்படித்தான்... திருமணத்திற்கு பிறகு வேலைக்கு போகவே கூடாது என்ற கொள்கையுடன் பிடிவாதமாய் இருந்தவளை, கணவரின் நச்சரிப்பு வேறுவழியில்லாமல் வேலைக்கு செல்ல தூண்டியது. இதோ.. இன்டர்விï...

``மே ஐ கம் இன் சார்..'' தயங்கியபடியே உள்ளே நுழைந்த நான், அங்கே நடுவராய் இருந்தவரை பார்த்து மலைத்துப் போய் நின்று விட்டேன். கண்டிப்பாக இந்த வேலை கிடைக்காது... பேசாமல் வந்த வழியே போவதுதான் புத்திசாலித்தனம்.

``எஸ். கமின்..'' என அவர் அழைத்தார். அவர் கண்கள் என்னை ஊடுருவியது. எல்.கே.ஜி.க்கு முதல் நாள் செல்லும் குழந்தையின் பயமும், தயக்கமும் என்னை ஆட்கொண்டன. தொண்டை வறண்டு போக.. நெஞ்சம் படபடவென அடித்துக் கொண்டது. ஆனால் அவரோ.. எதுவுமே நடக்காதவரைப் போல என்னுடைய பைலில் இருந்த சர்ட்டிபிகேட்டுகளை புரட்டிக் கொண்டு இருக்க... என் மனது பழைய நினைவுகளில் அலைமோதியது.

அப்போது எனக்கு திருமணமாகவில்லை. டிகிரி முடித்தவுடனே, நகரில் பிரபலமாய் இருக்கும் மோட்டார் கம்பெனியில் வேலை கிடைத்தது. வெளியே ஆர்டர் எடுத்துக் கொண்டு, நிறுவனத்திற்குத் தேவையான, அதாவது மோட்டார் அசம்பிள் செய்யத் தேவையான உதிரிபாகங்களை சிறுதொழில் செய்பவர்கள் செய்து தருவார்கள். அவர்கள் செய்து கொண்டு வரும் ஒவ்வொரு பாகத்தையும் இன்ஸ்பெக்ஷன் செய்வது எனது வேலை. அப்போது அறிமுகம் ஆனவர் தான்.. இன்றைய நடுவராய் அமர்ந்து கொண்டு இன்டர்விï செய்து கொண்டிருக்கும் சேகர். அப்போது அவர் வளர்ந்து கொண்டு இருக்கும் இளம் தொழிலதிபர். அவர் எங்கள் நிறுவனத்திற்குத் தேவையான உதிரிபாகங்களை செய்து கொண்டு வருவார்.

நான் இன்ஸ்பெக்ஷன் விசயத்தில் மிகவும் கண்டிப்புடன் நடந்து கொள்வேன். அப்போது அவர் கொண்டு வரும் உதிரிபாகங்களில் சில மறுபடியும் சரிசெய்வது போலவோ, இல்லை தரமில்லாததாகவோ இருக்கும். நான் அவற்றை ரிஜக்ட் செய்ய... அவர் கோபத்துடன் சென்று விடுவார். இவ்வாறு உதிரிபாகங்களுடன் வருபவர்களிடம் நான் நட்பு வைத்துக் கொள்ள மாட்டேன். காரணம், அந்த நட்பே நாளை என் வேலைக்கு இடைïறாகப் போய்விடுமோ என்ற பயம்தான். அதனால் என்னை கர்வம் பிடித்தவள்... திமிர் பிடித்தவள் என எழும் பேச்சுகள் என் மனதை பாதித்ததில்லை.

ஏனோ என் மனது என்னுடைய கொள்கைகளையும் மீறி அன்று சேகருடன் பேசியது. காரணம் அவர் கொண்டு வந்த பாகங்கள் அன்று ஒன்றுகூட தேறவில்லை.. சிலவற்றில் பழுது பார்க்க வேண்டியிருந்தது, சில ஒன்றுக்கும் உதவாது என்று ஒதுக்கித் தள்ளப்பட்டது. இதனால் அவருடைய முகம் கோபத்தால் சிவந்து போனது.

``என்னவோ நாலெழுத்து படிச்சிட்டு வந்துட்டா போதுமா? இது ஆகாது... அது சரியில்லேன்னு.. இது மாதிரி ஒவ்வொரு கம்பெனிக்கு ஒரு ஆள் இருந்தா போதும்.. எங்கள போலவங்க மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு கிளம்ப வேண்டியது தான்..'' என புலம்ப... அவர் வார்த்தைகள் என் மனதை சுட்டன. மறுநாளும் அந்த வார்த்தைகளே என் காதில் ஒலித்தன.

நான் என் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் வேலை செய்கிறேன்... என் நிறுவனத்திற்கு நியாயமானவளாய் இருக்கிறேன்... இவர்களுக்குப் பயந்து நான் செய்யும் சிறுதவறு நாளை பெரிய விபரீதத்தை உண்டாக்கலாம்... என என் மனதிற்குளே பல குரல்கள். இருந்தும் நேற்று அவருடைய முகம் கோபத்துடன் சிவந்ததை மறக்க முடியவில்லை. ஏதாவது செய்ய வேண்டும் என்று மட்டும் தோன்றியது.

அடுத்து வந்த நாட்களில் வேலைகளின் தீவிரத்தால் அவரை நினைக்கக் கூட நேரமில்லாமல் போனது.

ஒரு வாரம் போயிருக்கும். அன்று மாலை சேகர் வந்தார். நேராக எம்.டி.யின் அறைக்கு சென்று அவருடன் ஏதோ பேசினார். திரும்பிப் போகும் போது என்னிடம் வந்து "இனி நிம்மதியா வேலையப் பாரு.. நான் என் சொந்த ஊருக்கே போகிறேன்.. இனிமேல் உன்னைப் பார்க்கக்கூட விரும்பலை'' என்றார்.

``சார் ஒரு நிமிசம்.. நான் பேசலாமா..'' என்றேன்.

``ம்..'' என்றார் இறுக்கமான முகத்துடன்.

``உங்களுக்கும், எனக்கும் தனிப்பட்ட முறையிலே எந்த விருப்போ, வெறுப்போ கிடையாது. நான் என்னோட வேலையை என் மனசாட்சிக்கு விரோதமில்லாமலும், என் நிறுவனத்திற்கு நாணயமாகவும் செய்யறேன். அதேபோல நீங்களும் நல்ல ஒர்க்கர்ச வெச்ஸ் நல்ல முறையில் உங்களோட உதிரி பாகங்களைத் தந்தால் அதை நான் ஏன் தடுக்கறேன்? நல்லா யோசனை பண்ணிப் பாருங்க சார், நல்ல பொருளை இதுவரைக்கும் நான் வேண்டாம்னு தள்ளியிருக்கேனா.. இல்லையே..'' என்றேன்.

அன்று எதுவும் பேசாமல் யோசனையுடன் போனவர் தான். மீண்டும் அவர் வரவேயில்லை. அவரை சுத்தமாய் மறந்துபோனேன் நான். இரண்டு வருடங்களில்... இங்கே இவ்வளவு பெரிய நிறுவனத்தில் அவரை இந்த நிலையில் மீண்டும் பார்ப்பேன் என கொஞ்சமும் நினைக்கவில்லை. ``வாழ்க்கை என்பது வட்ட சாலை மீண்டும் சந்திப்போம்'' என்ற பாடல்வரிகள் என் நினைவிற்கு வந்தன.

``நீங்க போகலாம்'' என்ற அவருடைய குரல் என்னை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தது. மேசைமேல் அவர் வைத்த என் பைலை எடுத்துக் கொண்டு நடக்க, ``வெளியே வெயிட் பண்ணுங்க'' என்றார். என்ன மனுசன் இவர்.. போகலாம்கிறார்.. வெயிட் பண்ணுங்கிறார்.. எல்லாம் நேரம்.. திவாகரின் ஆசையால் வந்த தொல்லை. பாவி மனுசன் என்னை நிம்மதியா வீட்ல இருக்க விடுகிறாரா.. என மனது இயலாமையாலும், எதிர்பாராத அதிர்ச்சியாலும் புழுங்கித் தவித்தது.

அரைமணி நேரம் முடிந்தது. வந்திருந்தவர்கள் அனைவரும் இன்டர்விï முடிந்து போயிருக்க.. நான் மட்டுமே எஞ்சி நின்றேன்.

``சார் உங்கள கூப்பிடறாங்கம்மா'' பிïன் பவ்யமாய் சொல்லிவிட்டு நகர்ந்து போனார்.

``என்னம்மா ஆச்சர்யமா இருக்கா.. உன்னை நான் செலக்ட் செய்ய மாட்டேன்னு தானே நெனைச்சிருப்பே..'' என மெல்லிய புன்முறுவலுடன் அவர் கேட்க.. ``எஸ் சார்.. உங்களை நான்... இங்கே.. எதிர்பார்க்கலை'' என்றேன் தடுமாற்றத்துடன்.

``அன்றைக்கு நீ சொன்ன வார்த்தைகள் தான் இன்னைக்கு நான் இப்படி இருக்க காரணம்... எஸ்... சொந்தக்காரங்க பையன்.. நண்பர்கள் பையன் இப்படி தெரிஞ்சவங்க தான் அப்போ என்னோட ஓர்க்ஷாப்ல வேலைக்கு இருந்தாங்க... அவங்களை ரொம்ப அதட்டி வேலை வாங்க முடியல. அதுமட்டுமில்லாம என்னோட மகனுக்கும் இந்த ஊர் காலேஜ்ல மெரிட்ல சீட் கெடச்சிச்சு... அப்போ... வேற வழியில்லாம அந்த ஒர்க்ஷாப்ப காலி பண்ணிட்டு, இந்த ஊருக்கு வந்தேன்.

புது ஊர், புது மனுசங்க.. அதனால தயவு தாட்சண்யம் இல்லாத நல்ல ஆளுங்களை செலக்ட் பண்ணி வேலைக்கு வெச்சேன்.. இந்த ரெண்டு வருசத்துல நல்ல முன்னேற்றம்... ஒர்க்ஷாப் கம்பெனியா மாறிடிச்சி.. இங்க உன்னை மாதிரி நியாயமான ஆட்களுக்குத்தான் வேலை... ஓ.கே.மா.. இப்பவே போயி ஜாயிண்ட் பண்ணிக்க.. அன்னைக்கு இருந்த மாதிரியே... அதே கண்டிப்போட நீ நடப்பே.. நடக்கணும். ஓ.கே.'' என்றார். ஒரு பிரசங்கமே கேட்டது போல இருந்தது எனக்கு. வெளியே மெல்லிய காற்று வீசியது.
***
-சு.ஹேமலதா




சந்தித்த வேளை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக