Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!by ayyasamy ram Today at 10:37 pm
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 pm
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 pm
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 pm
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 pm
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 pm
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 pm
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:26 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:50 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:25 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:04 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:48 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:19 am
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:53 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:31 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:23 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:58 am
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 3:56 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:35 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:23 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 2:39 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 pm
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 pm
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 9:57 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 6:29 am
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 4:50 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 2:29 am
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 am
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 am
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:09 pm
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:08 pm
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:07 pm
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:05 pm
» மீலாது நபி
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:02 pm
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:00 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
M. Priya | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சந்தித்த வேளை!
Page 1 of 1
சந்தித்த வேளை!
மிஸஸ் திவ்யா திவாகர்...'' என பிïன் அழைக்க வேகமாய் என் சான்றிதழ்களைத் தாங்கிய பையுடன் நடந்தேன் மேனேஜர் அறை நோக்கி. வேலைக்குச் செல்வது என்பது இன்றைய நாளில் பெண்களால் பல சமயங்களில் தவிர்க்க முடியாத விசயமாகி விட்டது. எனக்கும் அப்படித்தான்... திருமணத்திற்கு பிறகு வேலைக்கு போகவே கூடாது என்ற கொள்கையுடன் பிடிவாதமாய் இருந்தவளை, கணவரின் நச்சரிப்பு வேறுவழியில்லாமல் வேலைக்கு செல்ல தூண்டியது. இதோ.. இன்டர்விï...
``மே ஐ கம் இன் சார்..'' தயங்கியபடியே உள்ளே நுழைந்த நான், அங்கே நடுவராய் இருந்தவரை பார்த்து மலைத்துப் போய் நின்று விட்டேன். கண்டிப்பாக இந்த வேலை கிடைக்காது... பேசாமல் வந்த வழியே போவதுதான் புத்திசாலித்தனம்.
``எஸ். கமின்..'' என அவர் அழைத்தார். அவர் கண்கள் என்னை ஊடுருவியது. எல்.கே.ஜி.க்கு முதல் நாள் செல்லும் குழந்தையின் பயமும், தயக்கமும் என்னை ஆட்கொண்டன. தொண்டை வறண்டு போக.. நெஞ்சம் படபடவென அடித்துக் கொண்டது. ஆனால் அவரோ.. எதுவுமே நடக்காதவரைப் போல என்னுடைய பைலில் இருந்த சர்ட்டிபிகேட்டுகளை புரட்டிக் கொண்டு இருக்க... என் மனது பழைய நினைவுகளில் அலைமோதியது.
அப்போது எனக்கு திருமணமாகவில்லை. டிகிரி முடித்தவுடனே, நகரில் பிரபலமாய் இருக்கும் மோட்டார் கம்பெனியில் வேலை கிடைத்தது. வெளியே ஆர்டர் எடுத்துக் கொண்டு, நிறுவனத்திற்குத் தேவையான, அதாவது மோட்டார் அசம்பிள் செய்யத் தேவையான உதிரிபாகங்களை சிறுதொழில் செய்பவர்கள் செய்து தருவார்கள். அவர்கள் செய்து கொண்டு வரும் ஒவ்வொரு பாகத்தையும் இன்ஸ்பெக்ஷன் செய்வது எனது வேலை. அப்போது அறிமுகம் ஆனவர் தான்.. இன்றைய நடுவராய் அமர்ந்து கொண்டு இன்டர்விï செய்து கொண்டிருக்கும் சேகர். அப்போது அவர் வளர்ந்து கொண்டு இருக்கும் இளம் தொழிலதிபர். அவர் எங்கள் நிறுவனத்திற்குத் தேவையான உதிரிபாகங்களை செய்து கொண்டு வருவார்.
நான் இன்ஸ்பெக்ஷன் விசயத்தில் மிகவும் கண்டிப்புடன் நடந்து கொள்வேன். அப்போது அவர் கொண்டு வரும் உதிரிபாகங்களில் சில மறுபடியும் சரிசெய்வது போலவோ, இல்லை தரமில்லாததாகவோ இருக்கும். நான் அவற்றை ரிஜக்ட் செய்ய... அவர் கோபத்துடன் சென்று விடுவார். இவ்வாறு உதிரிபாகங்களுடன் வருபவர்களிடம் நான் நட்பு வைத்துக் கொள்ள மாட்டேன். காரணம், அந்த நட்பே நாளை என் வேலைக்கு இடைïறாகப் போய்விடுமோ என்ற பயம்தான். அதனால் என்னை கர்வம் பிடித்தவள்... திமிர் பிடித்தவள் என எழும் பேச்சுகள் என் மனதை பாதித்ததில்லை.
ஏனோ என் மனது என்னுடைய கொள்கைகளையும் மீறி அன்று சேகருடன் பேசியது. காரணம் அவர் கொண்டு வந்த பாகங்கள் அன்று ஒன்றுகூட தேறவில்லை.. சிலவற்றில் பழுது பார்க்க வேண்டியிருந்தது, சில ஒன்றுக்கும் உதவாது என்று ஒதுக்கித் தள்ளப்பட்டது. இதனால் அவருடைய முகம் கோபத்தால் சிவந்து போனது.
``என்னவோ நாலெழுத்து படிச்சிட்டு வந்துட்டா போதுமா? இது ஆகாது... அது சரியில்லேன்னு.. இது மாதிரி ஒவ்வொரு கம்பெனிக்கு ஒரு ஆள் இருந்தா போதும்.. எங்கள போலவங்க மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு கிளம்ப வேண்டியது தான்..'' என புலம்ப... அவர் வார்த்தைகள் என் மனதை சுட்டன. மறுநாளும் அந்த வார்த்தைகளே என் காதில் ஒலித்தன.
நான் என் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் வேலை செய்கிறேன்... என் நிறுவனத்திற்கு நியாயமானவளாய் இருக்கிறேன்... இவர்களுக்குப் பயந்து நான் செய்யும் சிறுதவறு நாளை பெரிய விபரீதத்தை உண்டாக்கலாம்... என என் மனதிற்குளே பல குரல்கள். இருந்தும் நேற்று அவருடைய முகம் கோபத்துடன் சிவந்ததை மறக்க முடியவில்லை. ஏதாவது செய்ய வேண்டும் என்று மட்டும் தோன்றியது.
அடுத்து வந்த நாட்களில் வேலைகளின் தீவிரத்தால் அவரை நினைக்கக் கூட நேரமில்லாமல் போனது.
ஒரு வாரம் போயிருக்கும். அன்று மாலை சேகர் வந்தார். நேராக எம்.டி.யின் அறைக்கு சென்று அவருடன் ஏதோ பேசினார். திரும்பிப் போகும் போது என்னிடம் வந்து "இனி நிம்மதியா வேலையப் பாரு.. நான் என் சொந்த ஊருக்கே போகிறேன்.. இனிமேல் உன்னைப் பார்க்கக்கூட விரும்பலை'' என்றார்.
``சார் ஒரு நிமிசம்.. நான் பேசலாமா..'' என்றேன்.
``ம்..'' என்றார் இறுக்கமான முகத்துடன்.
``உங்களுக்கும், எனக்கும் தனிப்பட்ட முறையிலே எந்த விருப்போ, வெறுப்போ கிடையாது. நான் என்னோட வேலையை என் மனசாட்சிக்கு விரோதமில்லாமலும், என் நிறுவனத்திற்கு நாணயமாகவும் செய்யறேன். அதேபோல நீங்களும் நல்ல ஒர்க்கர்ச வெச்ஸ் நல்ல முறையில் உங்களோட உதிரி பாகங்களைத் தந்தால் அதை நான் ஏன் தடுக்கறேன்? நல்லா யோசனை பண்ணிப் பாருங்க சார், நல்ல பொருளை இதுவரைக்கும் நான் வேண்டாம்னு தள்ளியிருக்கேனா.. இல்லையே..'' என்றேன்.
அன்று எதுவும் பேசாமல் யோசனையுடன் போனவர் தான். மீண்டும் அவர் வரவேயில்லை. அவரை சுத்தமாய் மறந்துபோனேன் நான். இரண்டு வருடங்களில்... இங்கே இவ்வளவு பெரிய நிறுவனத்தில் அவரை இந்த நிலையில் மீண்டும் பார்ப்பேன் என கொஞ்சமும் நினைக்கவில்லை. ``வாழ்க்கை என்பது வட்ட சாலை மீண்டும் சந்திப்போம்'' என்ற பாடல்வரிகள் என் நினைவிற்கு வந்தன.
``நீங்க போகலாம்'' என்ற அவருடைய குரல் என்னை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தது. மேசைமேல் அவர் வைத்த என் பைலை எடுத்துக் கொண்டு நடக்க, ``வெளியே வெயிட் பண்ணுங்க'' என்றார். என்ன மனுசன் இவர்.. போகலாம்கிறார்.. வெயிட் பண்ணுங்கிறார்.. எல்லாம் நேரம்.. திவாகரின் ஆசையால் வந்த தொல்லை. பாவி மனுசன் என்னை நிம்மதியா வீட்ல இருக்க விடுகிறாரா.. என மனது இயலாமையாலும், எதிர்பாராத அதிர்ச்சியாலும் புழுங்கித் தவித்தது.
அரைமணி நேரம் முடிந்தது. வந்திருந்தவர்கள் அனைவரும் இன்டர்விï முடிந்து போயிருக்க.. நான் மட்டுமே எஞ்சி நின்றேன்.
``சார் உங்கள கூப்பிடறாங்கம்மா'' பிïன் பவ்யமாய் சொல்லிவிட்டு நகர்ந்து போனார்.
``என்னம்மா ஆச்சர்யமா இருக்கா.. உன்னை நான் செலக்ட் செய்ய மாட்டேன்னு தானே நெனைச்சிருப்பே..'' என மெல்லிய புன்முறுவலுடன் அவர் கேட்க.. ``எஸ் சார்.. உங்களை நான்... இங்கே.. எதிர்பார்க்கலை'' என்றேன் தடுமாற்றத்துடன்.
``அன்றைக்கு நீ சொன்ன வார்த்தைகள் தான் இன்னைக்கு நான் இப்படி இருக்க காரணம்... எஸ்... சொந்தக்காரங்க பையன்.. நண்பர்கள் பையன் இப்படி தெரிஞ்சவங்க தான் அப்போ என்னோட ஓர்க்ஷாப்ல வேலைக்கு இருந்தாங்க... அவங்களை ரொம்ப அதட்டி வேலை வாங்க முடியல. அதுமட்டுமில்லாம என்னோட மகனுக்கும் இந்த ஊர் காலேஜ்ல மெரிட்ல சீட் கெடச்சிச்சு... அப்போ... வேற வழியில்லாம அந்த ஒர்க்ஷாப்ப காலி பண்ணிட்டு, இந்த ஊருக்கு வந்தேன்.
புது ஊர், புது மனுசங்க.. அதனால தயவு தாட்சண்யம் இல்லாத நல்ல ஆளுங்களை செலக்ட் பண்ணி வேலைக்கு வெச்சேன்.. இந்த ரெண்டு வருசத்துல நல்ல முன்னேற்றம்... ஒர்க்ஷாப் கம்பெனியா மாறிடிச்சி.. இங்க உன்னை மாதிரி நியாயமான ஆட்களுக்குத்தான் வேலை... ஓ.கே.மா.. இப்பவே போயி ஜாயிண்ட் பண்ணிக்க.. அன்னைக்கு இருந்த மாதிரியே... அதே கண்டிப்போட நீ நடப்பே.. நடக்கணும். ஓ.கே.'' என்றார். ஒரு பிரசங்கமே கேட்டது போல இருந்தது எனக்கு. வெளியே மெல்லிய காற்று வீசியது.
``மே ஐ கம் இன் சார்..'' தயங்கியபடியே உள்ளே நுழைந்த நான், அங்கே நடுவராய் இருந்தவரை பார்த்து மலைத்துப் போய் நின்று விட்டேன். கண்டிப்பாக இந்த வேலை கிடைக்காது... பேசாமல் வந்த வழியே போவதுதான் புத்திசாலித்தனம்.
``எஸ். கமின்..'' என அவர் அழைத்தார். அவர் கண்கள் என்னை ஊடுருவியது. எல்.கே.ஜி.க்கு முதல் நாள் செல்லும் குழந்தையின் பயமும், தயக்கமும் என்னை ஆட்கொண்டன. தொண்டை வறண்டு போக.. நெஞ்சம் படபடவென அடித்துக் கொண்டது. ஆனால் அவரோ.. எதுவுமே நடக்காதவரைப் போல என்னுடைய பைலில் இருந்த சர்ட்டிபிகேட்டுகளை புரட்டிக் கொண்டு இருக்க... என் மனது பழைய நினைவுகளில் அலைமோதியது.
அப்போது எனக்கு திருமணமாகவில்லை. டிகிரி முடித்தவுடனே, நகரில் பிரபலமாய் இருக்கும் மோட்டார் கம்பெனியில் வேலை கிடைத்தது. வெளியே ஆர்டர் எடுத்துக் கொண்டு, நிறுவனத்திற்குத் தேவையான, அதாவது மோட்டார் அசம்பிள் செய்யத் தேவையான உதிரிபாகங்களை சிறுதொழில் செய்பவர்கள் செய்து தருவார்கள். அவர்கள் செய்து கொண்டு வரும் ஒவ்வொரு பாகத்தையும் இன்ஸ்பெக்ஷன் செய்வது எனது வேலை. அப்போது அறிமுகம் ஆனவர் தான்.. இன்றைய நடுவராய் அமர்ந்து கொண்டு இன்டர்விï செய்து கொண்டிருக்கும் சேகர். அப்போது அவர் வளர்ந்து கொண்டு இருக்கும் இளம் தொழிலதிபர். அவர் எங்கள் நிறுவனத்திற்குத் தேவையான உதிரிபாகங்களை செய்து கொண்டு வருவார்.
நான் இன்ஸ்பெக்ஷன் விசயத்தில் மிகவும் கண்டிப்புடன் நடந்து கொள்வேன். அப்போது அவர் கொண்டு வரும் உதிரிபாகங்களில் சில மறுபடியும் சரிசெய்வது போலவோ, இல்லை தரமில்லாததாகவோ இருக்கும். நான் அவற்றை ரிஜக்ட் செய்ய... அவர் கோபத்துடன் சென்று விடுவார். இவ்வாறு உதிரிபாகங்களுடன் வருபவர்களிடம் நான் நட்பு வைத்துக் கொள்ள மாட்டேன். காரணம், அந்த நட்பே நாளை என் வேலைக்கு இடைïறாகப் போய்விடுமோ என்ற பயம்தான். அதனால் என்னை கர்வம் பிடித்தவள்... திமிர் பிடித்தவள் என எழும் பேச்சுகள் என் மனதை பாதித்ததில்லை.
ஏனோ என் மனது என்னுடைய கொள்கைகளையும் மீறி அன்று சேகருடன் பேசியது. காரணம் அவர் கொண்டு வந்த பாகங்கள் அன்று ஒன்றுகூட தேறவில்லை.. சிலவற்றில் பழுது பார்க்க வேண்டியிருந்தது, சில ஒன்றுக்கும் உதவாது என்று ஒதுக்கித் தள்ளப்பட்டது. இதனால் அவருடைய முகம் கோபத்தால் சிவந்து போனது.
``என்னவோ நாலெழுத்து படிச்சிட்டு வந்துட்டா போதுமா? இது ஆகாது... அது சரியில்லேன்னு.. இது மாதிரி ஒவ்வொரு கம்பெனிக்கு ஒரு ஆள் இருந்தா போதும்.. எங்கள போலவங்க மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு கிளம்ப வேண்டியது தான்..'' என புலம்ப... அவர் வார்த்தைகள் என் மனதை சுட்டன. மறுநாளும் அந்த வார்த்தைகளே என் காதில் ஒலித்தன.
நான் என் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் வேலை செய்கிறேன்... என் நிறுவனத்திற்கு நியாயமானவளாய் இருக்கிறேன்... இவர்களுக்குப் பயந்து நான் செய்யும் சிறுதவறு நாளை பெரிய விபரீதத்தை உண்டாக்கலாம்... என என் மனதிற்குளே பல குரல்கள். இருந்தும் நேற்று அவருடைய முகம் கோபத்துடன் சிவந்ததை மறக்க முடியவில்லை. ஏதாவது செய்ய வேண்டும் என்று மட்டும் தோன்றியது.
அடுத்து வந்த நாட்களில் வேலைகளின் தீவிரத்தால் அவரை நினைக்கக் கூட நேரமில்லாமல் போனது.
ஒரு வாரம் போயிருக்கும். அன்று மாலை சேகர் வந்தார். நேராக எம்.டி.யின் அறைக்கு சென்று அவருடன் ஏதோ பேசினார். திரும்பிப் போகும் போது என்னிடம் வந்து "இனி நிம்மதியா வேலையப் பாரு.. நான் என் சொந்த ஊருக்கே போகிறேன்.. இனிமேல் உன்னைப் பார்க்கக்கூட விரும்பலை'' என்றார்.
``சார் ஒரு நிமிசம்.. நான் பேசலாமா..'' என்றேன்.
``ம்..'' என்றார் இறுக்கமான முகத்துடன்.
``உங்களுக்கும், எனக்கும் தனிப்பட்ட முறையிலே எந்த விருப்போ, வெறுப்போ கிடையாது. நான் என்னோட வேலையை என் மனசாட்சிக்கு விரோதமில்லாமலும், என் நிறுவனத்திற்கு நாணயமாகவும் செய்யறேன். அதேபோல நீங்களும் நல்ல ஒர்க்கர்ச வெச்ஸ் நல்ல முறையில் உங்களோட உதிரி பாகங்களைத் தந்தால் அதை நான் ஏன் தடுக்கறேன்? நல்லா யோசனை பண்ணிப் பாருங்க சார், நல்ல பொருளை இதுவரைக்கும் நான் வேண்டாம்னு தள்ளியிருக்கேனா.. இல்லையே..'' என்றேன்.
அன்று எதுவும் பேசாமல் யோசனையுடன் போனவர் தான். மீண்டும் அவர் வரவேயில்லை. அவரை சுத்தமாய் மறந்துபோனேன் நான். இரண்டு வருடங்களில்... இங்கே இவ்வளவு பெரிய நிறுவனத்தில் அவரை இந்த நிலையில் மீண்டும் பார்ப்பேன் என கொஞ்சமும் நினைக்கவில்லை. ``வாழ்க்கை என்பது வட்ட சாலை மீண்டும் சந்திப்போம்'' என்ற பாடல்வரிகள் என் நினைவிற்கு வந்தன.
``நீங்க போகலாம்'' என்ற அவருடைய குரல் என்னை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தது. மேசைமேல் அவர் வைத்த என் பைலை எடுத்துக் கொண்டு நடக்க, ``வெளியே வெயிட் பண்ணுங்க'' என்றார். என்ன மனுசன் இவர்.. போகலாம்கிறார்.. வெயிட் பண்ணுங்கிறார்.. எல்லாம் நேரம்.. திவாகரின் ஆசையால் வந்த தொல்லை. பாவி மனுசன் என்னை நிம்மதியா வீட்ல இருக்க விடுகிறாரா.. என மனது இயலாமையாலும், எதிர்பாராத அதிர்ச்சியாலும் புழுங்கித் தவித்தது.
அரைமணி நேரம் முடிந்தது. வந்திருந்தவர்கள் அனைவரும் இன்டர்விï முடிந்து போயிருக்க.. நான் மட்டுமே எஞ்சி நின்றேன்.
``சார் உங்கள கூப்பிடறாங்கம்மா'' பிïன் பவ்யமாய் சொல்லிவிட்டு நகர்ந்து போனார்.
``என்னம்மா ஆச்சர்யமா இருக்கா.. உன்னை நான் செலக்ட் செய்ய மாட்டேன்னு தானே நெனைச்சிருப்பே..'' என மெல்லிய புன்முறுவலுடன் அவர் கேட்க.. ``எஸ் சார்.. உங்களை நான்... இங்கே.. எதிர்பார்க்கலை'' என்றேன் தடுமாற்றத்துடன்.
``அன்றைக்கு நீ சொன்ன வார்த்தைகள் தான் இன்னைக்கு நான் இப்படி இருக்க காரணம்... எஸ்... சொந்தக்காரங்க பையன்.. நண்பர்கள் பையன் இப்படி தெரிஞ்சவங்க தான் அப்போ என்னோட ஓர்க்ஷாப்ல வேலைக்கு இருந்தாங்க... அவங்களை ரொம்ப அதட்டி வேலை வாங்க முடியல. அதுமட்டுமில்லாம என்னோட மகனுக்கும் இந்த ஊர் காலேஜ்ல மெரிட்ல சீட் கெடச்சிச்சு... அப்போ... வேற வழியில்லாம அந்த ஒர்க்ஷாப்ப காலி பண்ணிட்டு, இந்த ஊருக்கு வந்தேன்.
புது ஊர், புது மனுசங்க.. அதனால தயவு தாட்சண்யம் இல்லாத நல்ல ஆளுங்களை செலக்ட் பண்ணி வேலைக்கு வெச்சேன்.. இந்த ரெண்டு வருசத்துல நல்ல முன்னேற்றம்... ஒர்க்ஷாப் கம்பெனியா மாறிடிச்சி.. இங்க உன்னை மாதிரி நியாயமான ஆட்களுக்குத்தான் வேலை... ஓ.கே.மா.. இப்பவே போயி ஜாயிண்ட் பண்ணிக்க.. அன்னைக்கு இருந்த மாதிரியே... அதே கண்டிப்போட நீ நடப்பே.. நடக்கணும். ஓ.கே.'' என்றார். ஒரு பிரசங்கமே கேட்டது போல இருந்தது எனக்கு. வெளியே மெல்லிய காற்று வீசியது.
***
-சு.ஹேமலதா
-சு.ஹேமலதா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» ‘சந்தித்த வேளை’ லேனா தமிழ்வாணன் பேட்டி
» தினமும் மூன்று வேளை உணவு, இரண்டு வேளை டீ காபி இலவசம்!!
» இடை வேளை
» மழை பெய்த வேளை.
» பசித்த வேளை
» தினமும் மூன்று வேளை உணவு, இரண்டு வேளை டீ காபி இலவசம்!!
» இடை வேளை
» மழை பெய்த வேளை.
» பசித்த வேளை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|