ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆழ்வார் ஆயிரம்!

Go down

ஆழ்வார் ஆயிரம்! Empty ஆழ்வார் ஆயிரம்!

Post by சிவா Sun Jan 24, 2010 2:53 am

ஆழ்வார் ஆயிரம்! Temple1

ஸ்ரீவைஷ்​ணவ சம்​பி​ர​தாய குரு பரம்​பரை பெரிய பெரு​மா​ளான அரங்​கன்,​​ பெரிய பிராட்​டி​யான தாயாரி​லி​ருந்து ஆரம்​பித்து வழி வழி​யாக நாத​மு​னி​கள்,​​ ஆள​வந்​தார்,​​ ராமா​னு​ஜர் என்று வளர்ந்து மண​வாள மாமு​னி​க​ளு​டன் நிறைவு பெறு​கி​றது.​ மேற்​படி குரு​ப​ரம்​ப​ரை​யில் பக​வத் ராமா​னு​ஜ​ரின் முதல் சீட​ராக விளங்​கி​ய​வர் கூரத்​தாழ்​வார்.​ அவர் அவ​த​ரித்த ஆயி​ர​மா​வது ஜயந்தி உற்​ச​வம் நெருங்​கும் இவ்​வே​ளை​யில்,​​ அம்​ம​கா​னைப் பற்றி இங்கு காண்​போம்.​

கூரத்​தாழ்​வார்,​​ காஞ்​சி​பு​ரத்​திற்கு அரு​கில் அமைந்​துள்ள "கூரம்' என்ற சிறு கிரா​மத்​தில்,​​ கலி​யு​கம் 4180 ஆண்டு ​(செüம்ய வரு​டம்)​ தை மாதம் ஹஸ்த நட்​சத்​தி​ரத்​தில் அவ​த​ரித்​தார்.​ இவ​ருக்கு பெற்​றோர்​கள் இட்ட பெயர் "திரு​மறு மார்​பன்' என்​ப​தா​கும்.​

தக்க காலத்​தில் தகுந்த சாஸ்​தி​ரங்​க​ளில் தேர்ச்சி பெற்ற இவ​ருக்கு திரு​ம​ணம் செய்து வைக்க பெற்​றோர்​கள் முயற்​சித்​த​னர்.​ அப்​போது,​​ தான் பிரம்​ம​ச​ரி​யத்​தைக் கடை​பி​டிக்​கப் போவ​தா​கச் சொல்லி மறுத்​து​விட்​டார் திரு​மறு மார்​பன்.​ மேலும் காஞ்​சிப் பேர​ரு​ளா​ள​னுக்கு ​(வர​த​ரா​ஜப் பெரு​மாள்)​ ஆல​வட்​டக் ​(விசிறி வீசு​தல்)​ கைங்​கர்​யம் செய்து கொண்​டி​ருந்த திருக்​கச்சி நம்​பி​க​ளின் அபி​மா​னத்​தைப் பெற்று வைண​வத்​தில் ஈடு​பட்டு வாழப் போவ​தா​க​வும் கூறி​னார்.​ உடனே இவ​ரது பெற்​றோர்​கள் கூரம் நாட்​டுப் பத​வியை இவ​ரி​டம் ஒப்​ப​டைத்​து​விட்டு திருப்​பதி சென்று வாழத்​தொ​டங்​கி​னர்.​

அர​ச​னா​கிய திரு​மறு மார்​பன்,​​ நள்​ளி​ர​வில் வழக்​க​மாக நகர சோத​னைக்​குச் சென்​றார்.​ அப்​போது ஓர் இரவு,​​ அந்​த​ணர் ஒரு​வர் வீட்​டில் சிலர் உரக்க வாதா​டிக் கொண்​டி​ருப்​ப​தைக் கேட்​டார்.​ அவ்​வீட்​ட​ரு​கில் நின்று காது கொடுத்​துக் கேட்டு விஷ​யங்​களை அறிந்​தார்.​ அதன்​படி அந்​தக் குடும்​பத்​தில் திரு​மண வய​தில் ஒரு பெண் இருப்​ப​தை​யும்,​​ ஆனால் ஜோதி​டர்​க​ளின் கருத்​துப்​படி அவ​ளுக்கு திரு​ம​ணம் செய்து வைத்​தால் மண​ம​க​னுக்கு உடன் மர​ணம் ஏற்​ப​டும்;​ இவ​ளும் வித​வை​யா​கி​வி​டு​வாள் என்​பது பற்​றி​யும் அவ்​வீட்​டி​னர் விவா​தித்​துக் கொண்​டி​ருந்​தது,​​ அர​ச​ரின் காது​க​ளில் விழுந்​தது.​

மறு​நாள் அக்​கு​டும்​பத்​தி​னரை தன் அவைக்கு அழைத்​தார் திரு​மறு மார்​பன்.​ அவர்​க​ளின் மகளை தானே மணம் முடிக்​கச் சித்​த​மா​யி​ருப்​ப​தா​கக் கூறி​னார்.​ இருந்த போதி​லும் தங்​க​ளுக்​குள் தாம்​பத்ய உறவு இருக்​காது என்று கூறி,​​ "ஆண்​டாள்' என்ற பெய​ரு​டைய அந்​தப் பெண்​ணைக் கல்​யா​ணம் செய்து கொண்​டார்.​ தான் அளித்த வாக்​கு​று​திப்​படி,​​ பிரம்​ம​ச​ரிய நெறி தவ​றா​மல் வாழ்ந்​தார்.​ ​

அர​சுப் பத​வி​யும்,​​ உயர்ந்த செல்​வ​மும் நிறைந்து விளங்​கிய போதி​லும் ஓர் துற​வி​யா​கவே வாழ்ந்​தார் திரு​மறு மார்​பன்.​ தன் செல்​வங்​க​ளை​யெல்​லாம் ஏழை எளி​யோர்​க​ளுக்கு அள்​ளித் தந்​தார்.​

தின​மும் இவ​ரின் அரண்​மனை வாயிற் கத​வு​கள்,​​ காஞ்சி வர​த​ரா​ஜப் பெரு​மா​ளின் அர்த்த ஜாம​பூஜை முடிந்​த​வு​டன்​தான் மூடப்​ப​டும்.​ ​ ஒரு நாள் தற்​செ​ய​லாக தன் அரண்​மனை வாயிற்​க​த​வு​கள் மூடப்​பட்ட பின் காஞ்​சிப் பெரு​மா​னின் திருக்​கோ​யில் வாயிற் கத​வு​கள் மூடப்​பட்ட ஓசையை மன்​னர் கேட்​டார்.​ உடனே,​​ "ஏதோ தவறு நேர்ந்​து​விட்​டது என்று வருந்​தி​னார்.​

அதே சம​யம் காஞ்​சி​யில் வர​த​ரா​ஜப் பெரு​மா​னுக்கு கூரத்​தில் அரண்​ம​னைக் கதவு மூடப்​ப​டும் ஓசை கேட்க,​​ அவர் தம்​மி​டம் அள​வ​ளா​விக் கொண்​டி​ருந்த திருக்​கச்சி நம்​பி​க​ளி​டம்,​​ "அது என்ன ஓசை?​' என்று கேட்​டார்.​

நம்​பி​க​ளும் திரு​மறு மார்​ப​னின் அரண்​மனை வாயிற்​க​த​வு​கள் மூடப்​பட்ட சத்​தம் ​(அரண்​மனை வாயிற்​க​த​வு​க​ளில் பெரிய வெங்​கல மணி​கள் கட்​டப்​பட்​டி​ருக்​கும்)​ என்று கூறி,​​ திரு​மறு மார்​ப​னின் சிறப்​பி​யல்​பு​களை வர்​ணித்​தார்.​ உடனே வர​த​ரா​ஜப் பெரு​மாள்,​​ "ஆழ்​வா​னின் செல்​வமோ நம்மை வியக்க வைத்​தது?​' என்று கேட்​டா​ராம்.​

இதை​ய​றிந்த ​ திரு​ம​று​மார்​பன்,​​ தம் செல்​வங்​க​ளை​யெல்​லாம் அனை​வ​ருக்​கும் வாரி வழங்​கி​னார்;​ "இனி வைணவ நெறிப்​படி வாழ்​வே​னே​யன்றி அர​ச​னாக இருக்​க​மாட்​டேன்' என்று கூறி​னார்.​ தன் மனை​வி​யு​டன் காஞ்சி நோக்கி நடைப் பய​ண​மாக இரவு வேளை​யில் கிளம்​பி​னார்.​ அவர் மனைவி,​​ "வழி​யில் கள்​ளர் பயம் உள்​ளதோ?​' எனக் கேட்​டாள்.​ அவள் அப்​ப​டிக் கேட்​ட​தற்​கான கார​ணத்தை விசா​ரித்​தார் ​ திரு​மறு மார்​பன்.​ அப்​போது ஆண்​டாள்,​​ "என் மடி​யில் உமது ​ உப​யோ​கத்​திற்​காக தங்க வட்​டில் ஒன்றை எடுத்து வந்​துள்​ளேன்' என்று கூறி​னாள்.​ இது கேட்ட திரு​மறு மார்​பன்,​​ அந்​தத் தங்​கப் பாத்​தி​ரத்​தினை வாங்கி தூரத்​தில் வீசி எறிந்​தார்.​ பின் மனை​வி​யி​டம் "மடி​யில் கனம் இருந்​தால்​தானே வழி​யில் பயம்?​' என்று கூறி,​​ பய​ணத்​தைத் தொடர்ந்து,​​ காஞ்​சி​பு​ரத்தை அடைந்​தார்.​ ​

விடிந்​த​தும்,​​ அங்​கி​ருந்த ராமா​னு​ஜரை சர​ண​டைந்​தார்.​ அவ​ரும் இவரை ஏற்று,​​ "கூரத்து ஆழ்​வார்' என்று புதுப்​பெ​யர் சூட்டி,​​ தம் சீட​ராக ஏற்​றுக் கொண்​டார்.​ ​(அது முதல்​தான் இவர் "கூரத்​தாழ்​வார்' என்று அழைக்​கப்​ப​டு​கி​றார்.)​

அதே காலத்​தில் முத​லி​யாண்​டான் என்​பா​ரும் ராமா​னு​ஜரை ஸர​ண​டைந்து சீட​ரா​னார்.​ ​

பின்​னர் ஸ்ரீரங்​கம் சென்​றார் கூரத்​தாழ்​வார்.​ அங்கே ஒரு நாள் உண்ண உண​வே​தும் கிடைக்​கா​த​தால் பசி​யால் களைப்​பு​டன் இருந்​தார்.​ இத​னால் அவர் மனைவி ஆண்​டாள் வருந்தி,​​ ஸ்ரீரங்​க​நா​தனை மன​மு​ருக வேண்​டி​னாள்.​

"உன் தொண்​டன் பசி​யோடு இருக்​கும்​போது நீர் அருள் செய்​யா​மல் இருப்​ப​தேன்?​' என்று மன​துக்​குள் நினைத்​தாள்.​ அந்​தச் சம​யம் அரங்​க​னுக்கு இரவு பூஜை மணி அடித்​தது.​ ஆண்​டா​ளின் வருத்​தத்தை அறிந்த அரங்​கன்,​​ அர்ச்​ச​கர்​கள் மூலம் தான் அமுது செய்த பிர​சா​தங்​களை ஆழ்​வா​ரின் இல்​லத்​துக்கு அனுப்பி வைத்​தார்.​ பிர​சா​தங்​களை எடுத்து வந்த அர்ச்​ச​கர்​க​ளைக் கண்டு ஆழ்​வார்,​​ நடந்​ததை ஊகித்​த​றிந்​தார்.​ ஆண்​டா​ளி​டம்,​​ "நீ அரங்​க​னி​டம் குறைப்​பட்​டுக் கொண்​டாயா?​' என்று கோபித்​துக் கொண்​டார்.​

அந்த அளவு,​​ இறை​வ​னி​டம்​கூட எதை​யும் யாசித்​துப் பெறக் கூடாது என்​றெண்​ணிய திட பக்​தர் கூரத்​தாழ்​வார்.

அரங்​க​னின் அரு​ளால் ஆழ்​வா​ருக்கு இரண்டு பிள்​ளை​கள் அவ​த​ரித்​தார்​கள்.​ அவர்​களே வேத வியாச பட்​டர் மற்​றும் பரா​சர பட்​டர் என்று பிற்​கா​லத்​தில் பிர​ப​ல​மாக விளங்​கி​னார்​கள்.​

ஒரு சம​யம் கிருமி கண்​ட​சோழ மன்​ன​ரால் ராமா​னு​ஜ​ருக்கு உயி​ரா​பத்து ஏற்​பட்​டது.​ அப்​போது கூரத்​தாழ்​வா​ரும்,​​ பெரிய நம்​பி​க​ளும் ​(இவர் ராமா​னு​ஜ​ரின் ஆசார்​யர்​க​ளில் ஒரு​வர்)​ சோழ​னி​டம் சென்று,​​ "நாரா​ய​ணனே உயர்ந்த தெய்​வம்' என்று வாதிட்​டார்​கள்.​ ராமா​னு​ஜ​ரைக் காக்க வேண்டி அவ​ரின் காவி உடை​யை​யும்,​​ முக்​கோ​லை​யும் தானே தரித்து மன்​னர் சபைக்​குச் சென்ற கூரத்​தாழ்​வாரை ராமா​னு​ஜரே என்று நினைத்​தார் சோழ மன்​னர்;​ அவ​ரு​டைய கண்​க​ளைப் பிடுங்​கி​விட உத்​த​ர​விட்​டான்.​ ஆனால் கூரத்​தாழ்​வாரோ,​​ "உன்​னைப் போன்ற பாவி​க​ளைக் காணா​மல் இருப்​பதே மேல்' என்று தன் கண்​களை தாமே பிடுங்​கிக் கொண்​டார்.​ பெரிய நம்​பி​க​ளும் அப்​ப​டியே செய்​தார்.​ ​

பிறகு திரு​மா​லி​ருஞ்​சோலை சென்​ற​டைந்து அங்கே சில காலம் வசித்​தார் கூரத்​தாழ்​வார்.​ முன்​ன​தாக கூரத்​தாழ்​வார் சொல்​படி ராமா​னு​ஜர் மேலக்​கோட்​டைக்​குச் சென்று 12 ஆண்டு காலம் வசித்​தார்;​ அங்கு திரு​நா​ரா​ய​ண​னுக்கு கோயில் கட்டி வைண​வம் வளர்த்​தார்.​

சுமார் 12 வரு​டங்​கள் கழித்து ராமா​னு​ஜ​ரும்,​​ கூரத்​தாழ்​வா​ரும் காஞ்​சி​யில் சந்​தித்​துக் கொண்​டார்​கள்.​ கூரத்​தாழ்​வா​ரின் பார்​வை​யற்ற நிலை​ய​றிந்த ராமா​னு​ஜர்,​​ காஞ்சி வர​த​ரா​ஜப் பெரு​மாள் அரு​ளால் கூரத்​தாழ்​வா​ருக்கு மீண்​டும் கண்​கள் கிடைக்​கும்​படி செய்​தார்.​

கூரத்​தாழ்​வா​ரு​டைய உத​வி​யில்​லா​மல் போனால் ராமா​னு​ஜர்,​​ ஸ்ரீபாஷ்​யத்​திற்கு சிறப்​பான பொருளை எழு​தி​யி​ருக்க முடி​யாது.​

பின்​னாட்​க​ளில் அரங்​க​னி​டம் முக்​திப் பேறைத் தரு​மாறு வேண்​டி​னார் கூரத்​தாழ்​வார்.​ பெரு​மா​ளும் ஒப்​புக் கொண்​டார்.​ ​ இதை​ய​றிந்த ராமா​னு​ஜர்,​​ "ஏன் இப்​ப​டிச் செய்​தீர்?​ எனக்கு முன்​பாக நீர் முக்தி அடைந்​து​விட்​டால் நான் எப்​படி வாழ்​வது?​' என்று கூரத்​தாழ்​வா​ரி​டம் ​ வருத்​தப்​பட்​டார்.​

ஆழ்​வாரோ,​​ "உங்​க​ளுக்கு முன்​னால் வைகுண்​டப் பதவி பெற்று,​​ நீங்​கள் பிறகு வரும்​போது அங்கே உங்​களை எதிர்​கொண்​ட​ழைக்​கும் பாக்​கி​யம் எனக்​குக் ​ கிடைக்​குமே' என்று கூறி ராமா​னு​ஜரை சமா​தா​னப்​ப​டுத்​தி​னார்.​ அது போலவே ஆழ்​வார் சீக்​கி​ரமே பர​ம​ப​தம் அடைந்​தார்.​ ராமா​னு​ஜர் நில உல​கில் 120 ஆண்​டு​கள் வாழ்ந்​தி​ருந்​தார்.​

கூரத்​தாழ்​வார்,​​ "பஞ்ச ஸ்த​வம்' என்ற நூலை அரு​ளிச் செய்​துள்​ளார்.​ இவ்​வ​ரு​டம் இவ​ருக்கு ஆயி​ர​மா​வது ஆண்​டாக அமை​கி​றது.​ ​(3.2.2010).​

கூரத்​தாழ்​வா​ரின் அவ​தா​ரத் தல​மான கூரம்,​​ காஞ்​சியி​லி​ருந்து சுமார் 8 கி.மீ.​ தொலை​வில் அமைந்​துள்​ளது.​ இவ​ரின் ஆயி​ர​மா​வது அவ​தா​ரப் பெரு​விழா,​​ அத்​த​லத்​தி​லும் மற்​றைய திரு​மால் தலங்​க​ளி​லும் சிறப்​பா​கக் கொண்​டா​டப்​ப​ட​வுள்​ளது.​ அன்​பர்​கள் அவ​சி​யம் இவ்​வை​ப​வங்​க​ளில் கலந்து கொண்டு குரு​வ​ருள் பெற வேண்​டும்


ஆழ்வார் ஆயிரம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum