ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
மலேசியாவில் ஜனநாயகம் அதல பாதாளத்தை நோக்கிச் செல்கிறதா? Poll_c10மலேசியாவில் ஜனநாயகம் அதல பாதாளத்தை நோக்கிச் செல்கிறதா? Poll_m10மலேசியாவில் ஜனநாயகம் அதல பாதாளத்தை நோக்கிச் செல்கிறதா? Poll_c10 
Dr.S.Soundarapandian
மலேசியாவில் ஜனநாயகம் அதல பாதாளத்தை நோக்கிச் செல்கிறதா? Poll_c10மலேசியாவில் ஜனநாயகம் அதல பாதாளத்தை நோக்கிச் செல்கிறதா? Poll_m10மலேசியாவில் ஜனநாயகம் அதல பாதாளத்தை நோக்கிச் செல்கிறதா? Poll_c10 
heezulia
மலேசியாவில் ஜனநாயகம் அதல பாதாளத்தை நோக்கிச் செல்கிறதா? Poll_c10மலேசியாவில் ஜனநாயகம் அதல பாதாளத்தை நோக்கிச் செல்கிறதா? Poll_m10மலேசியாவில் ஜனநாயகம் அதல பாதாளத்தை நோக்கிச் செல்கிறதா? Poll_c10 
i6appar
மலேசியாவில் ஜனநாயகம் அதல பாதாளத்தை நோக்கிச் செல்கிறதா? Poll_c10மலேசியாவில் ஜனநாயகம் அதல பாதாளத்தை நோக்கிச் செல்கிறதா? Poll_m10மலேசியாவில் ஜனநாயகம் அதல பாதாளத்தை நோக்கிச் செல்கிறதா? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியாவில் ஜனநாயகம் அதல பாதாளத்தை நோக்கிச் செல்கிறதா?

Go down

மலேசியாவில் ஜனநாயகம் அதல பாதாளத்தை நோக்கிச் செல்கிறதா? Empty மலேசியாவில் ஜனநாயகம் அதல பாதாளத்தை நோக்கிச் செல்கிறதா?

Post by சிவா Sun Apr 12, 2009 3:27 pm

அண்மைய அரசியல் நிகழ்வுகளையும் அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்ட விதத்தையும் பார்க்கையில் மலேசியாவில் ஜனநாயகம் அதல பாதாளத்தை நோக்கிச் செல்வதை உணர முடிகிறது.

முதலாவதாக,மூன்று அமைச்சர்களும் ஆறு துணை அமைச்சர்களும் தேர்தலில் வெற்றி பெறாமல் ‘பின்புற வாசல்வழியாக’ அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கிறார்கள்.அப்படியானால், பாரிசான் நேசனலிடம் திறமை வாய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லையா?

ஒரு வேளை, இந்த செனட்டர்களிடம் வழக்கத்துக்கு மாறான திறமைகளும் விவேகமும் ஓளிந்து கிடக்கிறதோ.அப்படி இருந்தால் அது அப்துல்லா அகமட் படாவி, ஜைட் இப்ராகிமை நியமனம் செய்ததுபோல் பாராட்டத்தக்க செயல்தான்.

ஆனால், இவர்கள் தோற்றுப் போனவர்கள். 12-வது பொதுத்தேர்தலில் பொதுமக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள்.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதுதான் அரசாங்கம். அப்படியிருக்க மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் அமைச்சர்களாவது எவ்விதம்?

இது நம் தேர்தல்முறையையே கேலி செய்கிறது. மக்களிடமிருந்து அதிகாரம் பறிக்கப்பட்டிருக்கிறது எனலாம்.

மேலும், அம்னோ இளைஞர் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கைரி ஜமாலுடின் அமைச்சராக நிய்மிக்கப்படாதது அம்னோ தேர்தலைக் கேலி செய்கிறது.

இரண்டாவதாக, தேசிய ஒருமைப்பாட்டை மேற்பார்வை செய்ய ஓர் அமைச்சு உருவாக்கப்பட்டிருப்பது.மலேசியர்கள் பக்காத்தானுக்கு வாக்களித்ததை ‘ஒற்றுமையற்ற’ செயலாக அரசாங்கம் கருதுகிறா? அவ்வாறு மீண்டும் நிகழாதிருப்பதை உறுதி செய்யத்தான் இந்த அமைச்சு உருவாக்கப்பட்டதா?

பாரிசான் உறுப்புக்கட்சிகள் ஒவ்வொன்றிலும் உறுப்பினர்களின் ஒற்றுமையைப் பாதுகாக்க ‘ஒற்றுமை விவகாரப் பிரிவு’ அமைப்பது நல்லதாக இருக்குமே.

மூன்றாவதாக, ஹிஷாமுடின் உசேன், உள்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டது. அது பாரிசானுக்கே கெடுதலாக அமையலாம்

அவரது ஆற்றலைக் குறைத்துக்கூற விரும்பவில்லை.கிரீஸ் கத்தியை உயரத் தூக்கி அசைத்துக்காட்டியது, இசா சட்டத்துக்கு அவர் கொடுத்து ஆதரவு ஆகியவை நினைவுக்கு வருவதால் அவரது நியமனத்தை நல்லதாக நினைக்க முடியவில்லை.

‘எனக்காக வேலை செய்ய வேண்டாம், என்னுடன் சேர்ந்து வேலை செய்யுங்கள்’ என்று அப்துல்லா அகமட் படாவி கூறினார்.

மிகத் தாராள மனப்போக்குக் கொண்டவராக அப்துல்லா இருந்தபோதும் அவரின் அம்னோ சகாக்கள் அவருடன் சேர்ந்து வேலை செய்ய விரும்பவில்லை.

புதிய பிரதமரும் அவரின் அமைச்சர்களும் ‘வேண்டியவர்களுக்கே முன்னுரிமை கொடுப்பது,வேலைசெய்யாமலேயே வேலை செய்வதுபோல் காட்டிக்கொள்வது’ போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால், என்னதான் அரசியல் அடக்குமுறைகளைக் கொண்டு வந்தாலும் அவற்றையும் மீறி மக்கள் ஜன்நாயகக் கோட்பாடுகளை நிலைநிறுத்த முயல்வார்கள் என்று எச்சரிக்கிறோம்.



-கடிதம் ஹார் வை முன் (Har Wai Mun)
- மலேசியா இன்று
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியாவில் ஜனநாயகம் அதல பாதாளத்தை நோக்கிச் செல்கிறதா? Empty Re: மலேசியாவில் ஜனநாயகம் அதல பாதாளத்தை நோக்கிச் செல்கிறதா?

Post by சிவா Sun Apr 12, 2009 3:29 pm

மஇகா அமைச்சரவையிலிருந்து வெளியேறுகிறதா?

புதிய நிர்வாகம் இந்திய சமூகத்துக்கு உரிய மதிப்பை அளிக்கவில்லை என்பதால், மஇகா அமைச்சரவையிலிருந்து விலகுவது பற்றி ஆலோசித்து வருவதாகக் கட்சி வட்டாரமொன்று தெரிவித்தது.

இப்படி நடப்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை.என்றாலும் மஇகா பாரிசான் நேசனலுக்குள் தனித்து நின்று இந்திய சமூகத்தை ஒற்றுமைப்படுத்துவதில் கவனம் செலுத்தும் என்று அவர் கூறினார்.

“இதன் தொடர்பில் விரைவில் முடிவு செய்யப்படும்.இம்மாதப் பிற்பகுதியில் நடைபெறும் அடுத்த மஇகா செயலவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்படலாம்”, என்றாரவர்.

இந்தியர்கள் ‘இன்னமும் இரண்டாம் தர. மூன்றாம் தரக் குடிமக்களாக நடத்தப்படுவதை’கட்சி மிகப் பெரிய குறைபாடாகக் கருதுகிறது.

இரண்டாவதாக, மஇகா-வுக்கு உயர்நிலை அமைச்சர் பதவி கொடுக்கப்படாதது. அமைச்சரவையிலிருந்து வெளியேறுவதற்கு இது முக்கிய காரணமாகக் கூட இருக்கலாம்.பொதுப் பணி அமைச்சு மஇகா-வுக்கு வழங்கப்பட வேண்டும் என்று முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமட் படாவியிடமும் நடப்புப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடமும் திரும்பத் திரும்ப வலியுறுத்தியும்கூட அது ஏற்கப்படவில்லை.

பொதுப் பணி அமைச்சு எப்போதுமே மஇகாவுக்குத்தான் வழங்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் மார்ச் 8 தேர்தலில் மஇகா தலைவர் ச.சாமிவேலு தோல்வி அடைந்ததை அடுத்து அது கைமாறியது. மஇகாவுக்கு மனித வள அமைச்சு கொடுக்கப்பட்டது.

இப்போது மஇகாவின் ஒரே அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம்.அவர் மனிதவள அமைச்சராக மீண்டும் நியமிக்கப்பட்டிருக்கிறார். இரு துணை அமைச்சர்கள் உள்ளனர்.சரவணன் (கூட்டரசுப் பிரதேசம்), எஸ்.கே.தேவமணி (பிரதமர் துறை).

மனிதவள அமைச்சர் என்பது ஒரு ‘ஜூனியர்’ பதவி என்றும் அது மஇகா, பாரிசான் நேசனலின் மூன்றாவது பெரிய கட்சி என்பதைப் பிரதிபலிக்கவில்லை என்றும் அந்த கட்சி வட்டாரம் தெரிவித்தது.

“மஇகாவின் கடின உழைப்பின் காரணமாக புக்கிட் செலாம்பாவிலும், புக்கிட் கந்தாங்கிலும் இந்திய வாக்காளர்கள் பலர் பாரிசானுக்குத் திரும்பி வந்தும்கூட கட்சி நியாயமாக நடத்தப்படவிலலை.

“நாங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறோம். இது பாரிசான் அரசாங்கத்துக்கு இந்தியர்களின் ஆதரவு மேலும் சரிவதற்குக் காரணமாக அமைந்துள்ளது.

“பாரிசானுக்கு நீண்டகாலமாகவாகவே ஆதரவு காட்டாத சமூகங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதை இந்திய சமூகம் பார்க்கிறது”. மசீசவுக்கு நான்கு அமைச்சர் பதவிகள் திரும்பக் கொடுக்கப்பட்டிருப்பதுடன் கூடுதலாக துணை அமைச்சர் பதவி ஒன்றும் கொடுக்கப்பட்டிருப்பதைக் குறிப்பிட்டு அவர் அவ்வாறு கூறினார்.

இதன் தொடர்பில் சாமிவேலுவுடன் தொடர்புகொண்டபோது அவர் கருத்துரைக்க மறுத்து விட்டார்.ஆனால் நடப்பு நிலவரத்தில் அவருக்கு மனத் திருப்தி இல்லை என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறினர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum