புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சித்தர் பாடல் சித்த மருத்துவம் Poll_c10சித்தர் பாடல் சித்த மருத்துவம் Poll_m10சித்தர் பாடல் சித்த மருத்துவம் Poll_c10 
32 Posts - 51%
heezulia
சித்தர் பாடல் சித்த மருத்துவம் Poll_c10சித்தர் பாடல் சித்த மருத்துவம் Poll_m10சித்தர் பாடல் சித்த மருத்துவம் Poll_c10 
29 Posts - 46%
mohamed nizamudeen
சித்தர் பாடல் சித்த மருத்துவம் Poll_c10சித்தர் பாடல் சித்த மருத்துவம் Poll_m10சித்தர் பாடல் சித்த மருத்துவம் Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சித்தர் பாடல் சித்த மருத்துவம் Poll_c10சித்தர் பாடல் சித்த மருத்துவம் Poll_m10சித்தர் பாடல் சித்த மருத்துவம் Poll_c10 
74 Posts - 57%
heezulia
சித்தர் பாடல் சித்த மருத்துவம் Poll_c10சித்தர் பாடல் சித்த மருத்துவம் Poll_m10சித்தர் பாடல் சித்த மருத்துவம் Poll_c10 
50 Posts - 38%
mohamed nizamudeen
சித்தர் பாடல் சித்த மருத்துவம் Poll_c10சித்தர் பாடல் சித்த மருத்துவம் Poll_m10சித்தர் பாடல் சித்த மருத்துவம் Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
சித்தர் பாடல் சித்த மருத்துவம் Poll_c10சித்தர் பாடல் சித்த மருத்துவம் Poll_m10சித்தர் பாடல் சித்த மருத்துவம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்தர் பாடல் சித்த மருத்துவம்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 28, 2008 2:35 pm

கோடா சூரி

"கோடக சாலைக்கு கொடியவனல் மேகமொடு
போடகங்கிரந்தி குட்டம் புண்ணாலும் - நாடகஞ்செய்யப்
பித்த வாய்வு மலர்வாய் பிரணமும் போம்
பொற்பற்ற பொன்னே! புகழ்"




கோட சூரியை அரைத்துக் கொப்புளம், கிரந்தி, குட்டம், புண் இவைகளுக்கு பூச குணமாகும். இதனால் வாய்ப்புண் நீங்கும், பித்த வாயு மேகம் போகும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 29, 2008 1:18 pm

ஆடு தீண்டாப் பாளை

"ஆடு தொடாப்பாளைக் கதக்கிருமிவன் சிலந்தி
நீடு கருங்குட்டம் நிறைகரப்பான் - ஆடிடச் செய்
எண்பது வாய்வும் இகல் குட்ட முந்நீரும்
திண்பெறு நற்றாது வுமாஞ் செப்பு"


கணைச்சூடு, முடிகொட்டிப் போதல், கரப்பான், கிரந்தி முதலிய நோய் நீங்கும்.

விதைகளைப் பொடித்து ஐந்து கிராம் எடுத்து 50 மில்லி சிற்றாமணக்கு எண்ணெயில் கலந்து கொடுக்க வயிற்று வலி, சூதகத் தடை, சூதகக் கட்டு, முறைசுரம், பிரசவ வேதனை ஆகியவை போகும். குடற்புழுக்கள் செத்து வெளியே வரும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 29, 2008 1:24 pm

நவமல்லிகை

"கண்ணொளியும் மெய்யிற்கமழ்மணமும் நீடழகும்
நண்ணும் வலி மூர்ச்சை நாசமாம் - பண்ணளியும்
கங்குறும் வாழ்வார் குழலே காரமொடு வெப்பு மிகத்
தங்கு மிருவாட்சி மரத்தால்"


இம்மூலிகைக்கு இருவாட்சி என்ற பெயரும் உண்டு. இது கண்ணொளி தருவதுடன் உடனுக்குடன் நன்மணத்தையும் வனப்பையும் உண்டுபண்ணும். மூர்ச்சை நோய் நீங்கும். இதன் இலையை மார்பில் வைத்து கட்ட பால்சுரப்பை நிறுத்தும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 29, 2008 1:28 pm

ஊசிப் பாலைக் கீரை

"மேகமகறும் விழி குளிரும் நாளத்தின்
வேகமகறுமங்க மேனியிடும் - நாளத்தின்
வாசிப் பாலைப் பருவ மாந்தரை வீக்குலங் கொடியே
ஊசிப் பாலைப் பன்னமுன்"


ஊசிப் பாலைக் கீரையை சமைத்து உண்டால் வெள்ளை நீர் எரிச்சல் நீக்கி கண் குளிர்ச்சி உண்டாக்கி தேக புஷ்டியும் உண்டாகும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 29, 2008 1:36 pm

அவுரி

"உரியலவுரித்துழைத்தான் ஓதுபதினெண்
அரிய நஞ்சைத் தின்றவர்க்கும் ஆகும் - தெரிவரிய
வாத வெப்பு காமாலை மைந்தர்குறு மாந்தஞ்
சீதம் அகற்றும் தெரி"


அவிரியிலையைக் குடிநீர் செய்து கொடுக்க நஞ்சு கீழ்வாதம் நீங்கும் எல்லாவகையான விஷங்களையும் முறிக்கும். வெட்டை குன்ம நோய் போக்கும்.


http://eegaraisivi.blogspot.com

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 29, 2008 1:43 pm

கல்யாண முருங்கை

"கருப்பாய் சயத்திற் கறுத்த தடித்தே
பகுத்த வுதிரத்தினை பஞ்சாய்த் துரத்தி விடும்
பண்முருக்கு மின்பமொழி பாவாய் உலகறிய
பிண் முருக்கம் பூவை மொழி"


கல்யாண முருங்கைக்கு முள் முருங்கை, கிஞ்சுகம் போன்ற பெயர்கள் உண்டு.

இக்கல்யாண முருங்கையால் சீதபேதி, கீழ்வாதம், சூதக நோய், மூத்திர எரிச்சல், மூத்திரத் தடை, கருப்பை நோய் நீங்கும்.

http://eegaraisivi.blogspot.com/

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 29, 2008 1:51 pm

சமுத்திரப் பச்சை

"ஐயமகற்று மரோசகத்தை மாற்றிவிடும்
பையுதிரவாயுவையும் பற்றறுக்கும் - மெய்யை
அமிழ்த்துகின்ற நீரையனிலத்தைப் போக்குஞ்
சமுத்திர நற் சோஹி விதைத்தான்"



சமுத்திரப் பச்சை இலையைக் கட்டிகள் மீது அடிப்புறமாக வைத்துக் கட்டினால் பழுத்து உடையும். மேல்புறமாக வைத்துக் கட்டினால் கட்டி கரையும்.

இதன் வேரை முறைப்படி குடிநீரிட்டு வாத வலிகளுக்கு கொடுத்து வரலாம். நரை திரை மூப்பின்றி வாழச் செய்யும் மூலிகை இது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 29, 2008 1:58 pm

குன்மக்கு டோரி

"சூளையோடிளை தொலையாக்க கங்கய நோய்
காலனென்ற குன்மங்கலக்குங்காண் - ஞாலமிசை
நன்மைக்குறிய குணநல்குலமென்றாற்றிறுக்
குன்மக்குடோரி தனக்கு"


இதனைக் குடி நீரிட்டு சாப்பிட்டு வர சூலை, சுவாசம், இருமல், இளைப்பு நோய், குன்ம நோய் போன்றவை நீங்கும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 02, 2008 5:48 pm

"மருந்திடுதல் போகுங்காண் வங்கிரந்தி வாய்வாம்
திருந்த அசனம் செரிக்கும்-வருந்தச்
சகத்திலெழு பித்தமது சாந்தியாம் நாளும்
அகத்தியிலை தின்னு மவர்க்கு."


இடுமருந்தின் தோடத்தை நீக்கும். உடலில் உண்டாகும் பித்தத்தை தணிக்கும். உணவைச் செரிப்பிக்கும். கடுவனையும், வாயுவையும் உண்டாக்கும்.

இக்கீரை இடுமருந்தை முரிப்பதுபோல் மற்ற மருந்துகளின் செய்கையையும் கெடுக்கும். எனவே நோயாளிகளுக்கு மருந்து கொடுக்கும் காலங்களில் இந்தக் கீரையை நீக்க வேண்டும். சாதாரணமாக நாள்தோறும் உணவாக உட்கொள்ளாமல், வேண்டும்பொழுது மட்டும் இதைக் கறியாகச் சமத்துண்ண, அகத்தியர் குணவாகடம் நூலில் கூறப்பட்ட நற்குணங்களைக் கொடுக்கும். வயிற்றுப்புழு நீங்கும்.

மேலும்,

1. கீரையின் சாற்றைப் பிழிந்து மூக்கில் ஒன்று இரண்டு துளிவிட நான்காம்முறைக் காச்சல் விலகும்.
2. கீரையின் சாற்றைத் தலையில் பூசித் தலைமுழுக, வெறி நீங்கும்.
3. சாறு ஒரு பங்கு, தேன் ஐந்து பங்கு கூட்டி, நன்றாய் உறவுபடக்கலந்து உச்சியில் விரலால் தடவ குழந்தைகளுக்குக் காணும் நீர்க்கோவைப் போகும்.
4. சாற்றை இரண்டு துளி மூக்கில் விட நீர்க்கோவை, தலைவலி நீங்கும்.
5. இலையை அரைத்துக் கற்கமாகஸ் செய்து காயங்களுக்கு வைத்துக் கட்டலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 02, 2008 5:49 pm

"புகைப்பித்த மும்மழலாற் பூரிக்கும் அந்த
வகைப்பித்த மும்மனலும் மாறும்-பகுத்துச்
சகத்தி லருந்தாத் தனியமிர்தே! நாளும்
அகத்தி மலருக் கறி."


பூவைச் சமத்துண்ண வெயிலினாலும், புகையிலை, புகப்பிடித்தல் போன்ற பழக்கங்களாலும் பிறந்த பித்தக்குற்றம், உடலில் தோன்றும் வெப்பு தணியும்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக