ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாக்டர் ஏ பி ஜே அப்துல்கலாமின் பொன்மொழிகள்!

Go down

டாக்டர் ஏ பி ஜே அப்துல்கலாமின் பொன்மொழிகள்! Empty டாக்டர் ஏ பி ஜே அப்துல்கலாமின் பொன்மொழிகள்!

Post by ayyasamy ram Sat Oct 08, 2022 10:37 pm

டாக்டர் ஏ பி ஜே அப்துல்கலாமின் பொன்மொழிகள்! Sayings-of-Dr.-A.P.J.-Abdul-Kalam
-
காலத்தின் மணற்பரப்பில் உன் காலடிச் சுவடுகளை பதிக்க
விரும்பினால் உனது கால்களை இழுத்து இழுத்து நடக்காதே.
-
நீண்ட நாள் முழுவதும் கணத்திற்கு கணம் நேர்மையாய்
துணிவாய் உண்மையாய் உழைக்கிறவர்கள் கரங்களே அழகிய
கரங்கள்.
-
கனவுகளை எண்ணங்களாக மாற்றுங்கள். எண்ணங்களை
செயல்களாக மாற்றுங்கள்.
-
நட்பு என்பது நண்பர்களின் நிலையறிந்து அவர்களுக்கு
உதவுவது தான்.
-
பொறுப்புடன் கூடிய சுதந்திரம் மட்டுமே தனிப்பட்ட மகிழ்ச்சியின்
அடித்தளம்.
-
வெற்றி பெற வேண்டுமென்றால் பதற்றம் இல்லாமல்
இருப்பது தான் வெற்றிக்கு வழி.
-
உங்கள் குறிக்கோளில் நீங்கள் வெற்றிபெற வேண்டும் என்றால்
உங்கள் இலக்கில் இம்மியும் விலகாமல் குறி வைத்து அதே
சிந்தனையுடன் செயல்பட வேண்டும்.
-
ஒரு தலைவர் எந்த அளவு சிறந்தவர் என்பதற்கு அளவுகோல் எது?
அவர் எந்த அளவுக்கு தனது சகாக்களையும் அவர் தம் ஈடுபாட்டையும்
பங்கேற்றுக் கொள்கிறாரோ அந்த அளவிற்கே அவர் சிறந்தவர்.
-
சிந்தனை ஆற்றல் கொண்ட ஒரு ஜீவனின் வாழ்க்கையாக எனது
வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருப்பவன் நான்.
-
நம் தவறுகளிலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடமே உயர்வான
வாழ்க்கைக்கு நம்மை இட்டுச் செல்லும்.
-
வாழ்வில் உயர்ந்தவர்கள் அனைவரும் நேர்மறை எண்ணம்
கொண்டவர்களே.
-
அபாரமான சாதனைகளை நிகழ்த்துவதில் ஆழமான ஈடுபாடு
கொள்ளுங்கள். உடனே கிடைக்கும் செயற்கையான சந்தோசத்தை
துரத்தி அலையாதீர்கள்.
-
எதை வைத்து ஒருவரை சாதிக்கும் தலைவர் என்று சொல்வது.
எனது பார்வையில் சாதிக்கும் தலைவர் என்பவர் ஊழியர்களை
அணிதிரட்டிக் கொள்வதில் கைதேர்ந்தவராக இருந்தாக வேண்டும்.
-
நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டி
இடுவது இல்லை.
-
தனது இலக்கை குறிவைத்து தொடர்ந்து செயல்பட்டுக்
கொண்டிருக்கும் ஒவ்வொரு சின்னப் புள்ளியும் பெரும்புள்ளி தான்.
எனவே சளைக்காமல் முயற்சித்துக் கொண்டிருங்கள்.
-
ஈடுபாடு, பங்கேற்பு, பொறுப்புணர்வு ஆகிய இந்த மூன்று அம்சங்கள்
தான் செயல் திட்டத்தின் தாரக மந்திரங்கள்.
-
நன்றி: இணையம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84201
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

டாக்டர் ஏ பி ஜே அப்துல்கலாமின் பொன்மொழிகள்! Empty Re: டாக்டர் ஏ பி ஜே அப்துல்கலாமின் பொன்மொழிகள்!

Post by ayyasamy ram Sat Oct 08, 2022 10:39 pm


-
கற்றலின் ஒரு அங்கமாக தவறுகளை அனுமதிக்க வேண்டும்.
தவறே செய்யக் கூடாது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.
துணிச்சலான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது தான்
முக்கியம்.
-
உலகளாவிய உணர்வு என்னும் அடித்தளத்தின் மீதுதான் இந்திய
நாகரிகத்தின் பாரம்பரியம் எழுப்ப பட்டுள்ளது. உலகிற்கு தனது
நேசக் கரங்களை நீட்டுகிறது.
-
வாழ்க்கையை நாம் எதிர்கொண்டு சமாளிப்பதை விட்டுவிட்டு அதை
ஆராய்ந்துகொண்டு இருப்பது தான் பிரச்சினையாகிவிடுகிறது.
-
நீங்கள் எங்கே போய்க் கொண்டிருக்கிறீர் என்பதை தெரிந்து
கொள்ளுங்கள். நாம் எங்கே நின்று கொண்டிருக்கிறோம் என்பதனை
விரிவாகத் தெரிந்துகொள்வது ஒன்றும் இந்த உலகத்தில் முக்கியமல்ல.
எந்த திசையில் நாம் நடைபோட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதுதான்
முக்கியம்.
-
எவ்வளவு தூரம் நான் கடந்து வந்திருக்கிறேன் என்பதைவிட இன்னும்
எவ்வளவு தூரத்தைக் கடக்க வேண்டியிருக்கிறது என்பதில் கவனம்
செலுத்துவதுதான் எப்போதுமே என்னுடைய ஊக்க சக்தியின்
அச்சாணியாகும்.
-
எதைச் செய்தாலும் மனப்பூர்வமாக ஈடுபட்டு அதில் உங்களின்
அதிகபட்ச ஆர்வத்தையும் சக்தியையும் வெளிப்படுத்துங்கள். அது
உங்களை சுற்றி அன்பையும் மகிழ்ச்சியையும் பரவச் செய்யும்.
-
உண்மையைத் தேடு. தடைகளில் இருந்து அது உன்னை விடுவிக்கும்.
-
வெற்றிகரமான சாதனைகளுக்கு நான்கு அடிப்படை அம்சங்கள்
அவசியம். அவை இலக்கு நிர்ணயம், ஆக்கப்பூர்வமான சிந்தனை,
கற்பனைக் கண்ணோட்டம், நம்பிக்கை என நான்காகும்.
-
கடந்த காலத்தின் மீது மரியாதை இல்லாமலும் எதிர்காலத்தின் மீது
நம்பிக்கை இல்லாமலும் நமக்குள் சண்டையிட்டுக் கொள்வோமேயானால்
தோல்வி அதிருப்தி தவிர வேறென்ன நமக்குக் கிடைக்கும்.
-
வேலை நாட்களில் அன்றாட அலைச்சல் குழப்பம் சந்தடியெல்லாம்
அடங்கியதும் ஆற அமர சிந்தித்து அடுத்து வரப்போகும் புத்தம்புது
நாளை எதிர்கொள்வதற்கு உன்னைச் செம்மையாக தயார் செய்து
கொண்டால் எதிர்காலத்தில் நீ வெற்றிகரமான தலைவர் தான்.
-
மூன்று நாட்களுக்குள் முடிக்க வேண்டும். இல்லையென்றால்
உதவித்தொகை நிறுத்தப்படும். அதுதான் எனது வாழ்வு. உழைத்தேன்.
படித்தேன் பாராட்டினர்.
-
அலட்டிக் கொள்ளாமல் இருக்கும்போது அபாரமான செயல்பாட்டிற்குப்
பலன் கிடைக்கும். விஷயங்கள் எப்நடி வருகின்றனவோ அதை அப்படியே
எடுத்தூக் கொள்ள வேண்டும்.
-
கோவிலில் நடக்கும் பிரார்த்தனையும் மசூதியில் நடக்கும் தொழுகையும்
ஒரே இடத்தில் தான் போய்ச் சேர்கின்றன.
-
இறைவனை நோக்கி இப்படிப் பிரார்த்தனை செய்யுங்கள்! இறைவனே எ
ன்னைச் சோதனை செய்யுங்கள். என் சக்தியை நிரூபிக்கச் செய்யுங்கள்.
-
வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான எல்லா ஆதாரங்களும் மனதில்
மறைந்துக் கிடக்கின்றன. உணர்வு நிலையில் உறைந்து கிடக்கும்
சிந்தனைகள் வெளிக்கிளர்ந்து செழித்தோங்கி நிஜமாவதற்கான வாய்ப்பு
கிடைத்தால் வெற்றி மீது வெற்றி வந்து சேரும்.

சிக்கல்களை எதிர்கொள்ளூம்போது கூடவே பல திறமைகளும்
வெளிப்படுகின்றன.
-
நமது எண்ணங்கள் சுயநலத்துக்குள் சுருங்கிவிடாமல் பொதுநலமாக விரிய
வேண்டும். அப்போதுதான் நாம் எதிர்பார்க்கும் வளர்ச்சியைத் திட்டமிட்டபடி
நிறைவேற்றி நமது நாட்டை சர்வதேச அளவில் ஒவ்வொரு அம்சத்திலும்
முதல் நாடாக மாற்றமுடியும்.
-
தனிமனிதன் கட்சி அமைப்பு என்றில்லாமல் நாட்டு நலனை மட்டுமே
முக்கியமாக கருதுவோம். வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் வெற்றி
பெற்று ஒற்றுமையான சிந்தனையை நாம் பெற வேண்டும்.
-
வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை நிர்ணயிப்பதுதான்
பிரச்சினை. வாட்டி வதைத்தாலும் கடுமையாகப் பாடுபட்டால் தான்
பிரச்சினைகளோடு மல்லுக்கு நின்று தீர்வு காண முடியும்.
-
நன்றி: இணையம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84201
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum