புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜோதிடம் – எண் கணிதம் – கைரேகை Poll_c10ஜோதிடம் – எண் கணிதம் – கைரேகை Poll_m10ஜோதிடம் – எண் கணிதம் – கைரேகை Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
ஜோதிடம் – எண் கணிதம் – கைரேகை Poll_c10ஜோதிடம் – எண் கணிதம் – கைரேகை Poll_m10ஜோதிடம் – எண் கணிதம் – கைரேகை Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
ஜோதிடம் – எண் கணிதம் – கைரேகை Poll_c10ஜோதிடம் – எண் கணிதம் – கைரேகை Poll_m10ஜோதிடம் – எண் கணிதம் – கைரேகை Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
ஜோதிடம் – எண் கணிதம் – கைரேகை Poll_c10ஜோதிடம் – எண் கணிதம் – கைரேகை Poll_m10ஜோதிடம் – எண் கணிதம் – கைரேகை Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ஜோதிடம் – எண் கணிதம் – கைரேகை Poll_c10ஜோதிடம் – எண் கணிதம் – கைரேகை Poll_m10ஜோதிடம் – எண் கணிதம் – கைரேகை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜோதிடம் – எண் கணிதம் – கைரேகை Poll_c10ஜோதிடம் – எண் கணிதம் – கைரேகை Poll_m10ஜோதிடம் – எண் கணிதம் – கைரேகை Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
ஜோதிடம் – எண் கணிதம் – கைரேகை Poll_c10ஜோதிடம் – எண் கணிதம் – கைரேகை Poll_m10ஜோதிடம் – எண் கணிதம் – கைரேகை Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
ஜோதிடம் – எண் கணிதம் – கைரேகை Poll_c10ஜோதிடம் – எண் கணிதம் – கைரேகை Poll_m10ஜோதிடம் – எண் கணிதம் – கைரேகை Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
ஜோதிடம் – எண் கணிதம் – கைரேகை Poll_c10ஜோதிடம் – எண் கணிதம் – கைரேகை Poll_m10ஜோதிடம் – எண் கணிதம் – கைரேகை Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ஜோதிடம் – எண் கணிதம் – கைரேகை Poll_c10ஜோதிடம் – எண் கணிதம் – கைரேகை Poll_m10ஜோதிடம் – எண் கணிதம் – கைரேகை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜோதிடம் – எண் கணிதம் – கைரேகை


   
   
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Mon Apr 19, 2010 5:44 pm

சுத்த சன்மார்க்கத்தின் பிரதான நோக்கமே மரணமில்லாப் பெருவாழ்வை பெறுவதாகும். அதற்கு ஜோதிடம் எண் கணிதம், கைரேகை போன்ற சாஸ்திர முறைகள் தேவையா, இல்லையா என்பது பலரின் கேள்வி நிலையாக உள்ளது. இதில் ஒருசாரர் இதுபோன்ற சாஸ்திர வரைமுறைகள் வாழ்வியலுக்கு தேவையென கருதுகின்றனர். சிலர் சுத்த சன்மார்க்கத்திற்கு இவையெல்லாம தடை என்று கூறுகின்றனர். இந்த முரண்பாடான கருத்துகளிலிருந்து நாம் தெளிவடைய இந்த சாஸ்திரங்களைப் பற்றி சில அடிப்படை கருத்துகளை தெரிந்துக் கொண்டால் பின்னர் அவரவர் விருப்பப்படி தெளிவான முடிவுக்கு வரலாம்.

ஜோதிடம்

ஜோதிடம் வானவியல் கோள்களின் இயக்கத்தை ஞான அறிவால் உணர்ந்த ஞானிகள் அந்தந்த கோள்களின் கதிர்வீச்சு அடிப்படையில் பூமியில் வாழும் உயிர்களுக்கு ஏற்படும் பலாபலன்களை கணித முறையில் கணக்கிட்டுச் சொல்வது. மேலும், கோள்களின் அளவு, அவற்றின் தட்பவெட்பநிலை, அவற்றில் அடங்கியுள்ள தாதுக்களின் அடைப்படையில் தான் அவற்றின் கதிர்வீச்சுகள் வெளிப்படும். அதேபோல் உலகில் தோன்றி வாழும் உயிரினங்களின் உடலில் உள்ள தாதுக்கள் அந்த கதிர்வீச்சை எந்த அளவு கிரகிக்கிறதோ அதற்கேற்றாற்போல் நன்மை, தீமைகளை அடையும் நிலை உள்ளதாக ஜோதிடம் பொதுவாகக் கூறுகிறது. இந்தியா, இத்தாலி, ஜப்பான் மற்றும் சில ஆசிய நாடுகள் இந்த முறையை சற்று அதிகமாக நம்புகின்றன.

கோள்கள் சுற்றி வரும் பாதையை வட்டவடிவமாகக் கொண்டு அந்த வட்டத்தை 30º என்ற முறையில் பிரித்து 360º (டிகிரிக்கு) 12 ராசிகளாகப் பிரித்து அதன் அடிப்படையில், பலாபலன்களை தெரிந்து சொல்லுவதாக அமைக்கப்பட்டுள்ளது. “சோதிடம்” சோதித்து, திடமாக கூறுதல் என்று பொருள். அதாவது, வானவியலில் சூரியனை மையமாகக் கொண்டு மற்ற கிரகங்களின் இருப்பிடத்தை கணக்கிட்டு, ஒருவர் பிறந்த நேரத்தில சூரியனது நேர்கிரகணங்கள் எந்த கிரகத்துடன் இணைகிறதோ அதை லக்னம் எனவும் கணக்கிட்டு, குறிப்பிடுவது வழக்கம். அதேபோல் மற்ற கிரக நிலைகளையும், கிரக கூட்டு நிலைகளையும் கணக்கிடுவது வழக்கம். இந்த நிலையில் பலாபலன்கள் சொல்லப்படுவது காலங்காலமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் பலாபலன்களை துல்லியமாக கணித்து கூறியவர்கள் பாலஜோதிட நிபுணர்கள். விஞ்ஞான காலத்திற்கு முன்பே இருந்துள்ளார்கள். அதாவது விஞ்ஞான அறிவு செயல்படுவதற்கு முன் மெய்ஞான அறிவின் ஒருபகுதியாக இந்த ஜோதிடம் இருந்திருக்கிறது என்பது உண்மை.



ஒரு வரலாற்றுச் சான்று

உஜ்ஜயினியை ஆண்ட மன்னனிடத்தில் வானவியல் சாஸ்திரத்தில் மிகவும் தேர்ச்சி பெற்றவராய் அக்காலத்தில் புகழ்பெற்று விளங்கியவர் ‘வராகமிகரர்’ என்ற ஞானி. உஜ்ஜயினி மன்னனுக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. அப்பொழுது, அந்த குழந்தையின் ஜாதகத்தை கணித்த வராகமிகரர், ‘இந்த குழந்தை 16 வயதில் காட்டுப் பன்றியால் மரணமடைவது உறுதி’ என கூறுகிறார். அரசனுக்கு ஒருபுறம் வருத்தமும், கோபமும் உண்டாகிறது. பின்னர் பல ஞானிகளின் கருத்துப்படி அரசகுமாரனுக்கு மரணமில்லை என்றும், அப்படியே மரணமடைந்தாலும், நம்மிடம் மகாகவி காளிதாசர் உள்ளார். அவர் கவி பாடி உயிர்ப்பித்து விடுவார் எனக் கூறினர். ஆனால், வராகமிகரர் தனது ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள அசையாத நம்பிக்கையின் அடிப்படையில் அரசகுமாரன் இறப்பது உறுதியெனக் கூறி அரச சபையை விட்டு வெளியேறி விடுகிறார். பின்னர், 16 வருடங்களுக்குப் பிறகு அரசகுமாரனைக் காக்க அநேக பணியாட்களை அமர்த்தி, எந்த விலங்குகளும் செல்லாத அரச மாளிகையில் வைத்து பாதுகாத்து வந்தான். ஒருநாள் அரசகுமாரன் உப்பரிகையில் (மேல்மாடியில்) நண்பர்களுடன் விளையாடும் பொழுது, மேலே தொங்கவிடப்பட்டிருந்த ‘காட்டுப்பன்றி வெண்கலச்சிலை’ அறுந்து விழுந்து அரசகுமாரன் இறந்து விடுகிறான். காட்டுப்பன்றி தான் அந்த நாட்டின் தேசிய விலங்கு. எனவே அதை சிலையாக வடித்து அரண்மனையின் பல இடங்களில் தொங்கவிடப்பட்டிருந்தான் மன்னன். இங்கே வராகமிகரரின் ஜோதிட சாஸ்திரம் உண்மையானது.



உடனடியாக அரசன் மகாகவி காளிதாசரை வரவழைத்து கவிபாடி அரசகுமாரனை எழுப்பக் கூறினார். அவரும் விரைந்து வந்து இறந்து கிடந்த அரசகுமாரனைப் பார்த்து, நான் பாடினாலும் அரசகுமாரன் எழுந்திருப்பது சாத்தியமில்லை எனக் கூறிவிடுகிறார். அதுகேட்டு அரசனும், மற்றவர்களும் துடிதுடித்து ஏன் என வினவ, அரசகுமாரனின் தலை முற்றிலும் சிதைந்து விட்டதால் உயிப்பிப்பது இயலாத காரியம் எனக் கூறி விடுகிறார்.



இந்த நிகழ்ச்சி நடந்ததற்கு வரலாற்றுச் சான்றுகள் மிக அதிகமாக உள்ளது. இந்நிகழ்ச்சியிலிருந்து ஒரு செய்தி நமக்கு தெளிவாகிறது. வராகமிகரர் தனது அரசவை பதவியை விட்டுச் சென்றார். அதாவது அவர் உண்மையான பற்றற்ற நிலையில் வாழ்ந்தவர். அப்பேர்ப்பட்ட ஞானியர் கணித்துக் கூறுவது முற்றிலும் உண்மையாக நடக்கும் என்பதே.



மகாபாரதத்தில் சில செய்திகளைக் காண்போம். மகாபாரதப் போருக்கு களபலி பூஜை செய்ய நல்லதொரு நாளான ‘அமாவாசை’ தினத்தை சகாதேவன், துரியோதனனுக்கு குறித்துக் கொடுத்ததாகவும், அதை கிருஷ்ணன் அறிந்து அமாவாசை தினத்தையே மாற்றி அமைத்ததாகவும் புராணம் கூறுகிறது. அதனால் போரில் கௌரவப்படை தோற்று, பாண்டவர்கள் வென்றதாக கூறப்படுகிறது. இதில் சகாதேவனும், துரியோதனன் பகைவன் எனத் தெரிந்தும், சரியான நாளைத்தான் குறித்துத் தந்தான். ஆனால், இங்கு ஜோதிட சாஸ்திரம் பொய்த்து விட்டது. சகாதேவனும் பற்றற்ற நிலையில் தான் கூறியுள்ளார்.

உஜ்ஜயினி அரசன் விஷயத்தில் மிகவும் இயற்கையாக நடக்க உள்ள நிகழ்வை கணித்துக் கூறியுள்ளார்.

மகாபாரதத்தில் அதர்மத்தையே சரியென கூறி வாதாடும் துரியோதனனுக்கு சரியான நாளை குறித்துக் கொடுத்தது தர்மத்திற்கு விரோதம் என்பதை உணர்த்த கிருஷ்ணன் அமாவாசையை மாற்றி அமைத்ததாக கூறப்பட்டுள்ளது.

இதில் மற்றொரு கருத்தும் தெளிவிக்கப்படுகிறது. தர்மத்திற்கு எதிராக எந்த ஒரு சாஸ்திரமும் தவிடு பொடியாகி விடும் என்பது தான்.

எனவே, வானவியல் சாஸ்திரம் என்பது கலைநிகழ்வுகளைக் கூறும் கலையறிவு தான்; அது மட்டுமே முழுமையான வாழ்க்கையென நம்பிவிடக் கூடாது என்பது தான். எனவே ஜோதிடம் சில குறிப்புகளை அறிந்து சொல்ல உதவும் என்பதில் ஐயமில்லை.



இந்திய சாஸ்திரத்தில் ஜோதிடத்தையே மிகப்பெரிய விலையாக மக்கள் வாழ்க்கையுடன், பின்னி பிணைத்து மக்களை மூட நம்பிக்கையில் வாழும்படி செய்து விட்டனர் பிற்கால ஜோதிட வல்லுநர்கள். இதற்கு காரணம் ஜோதிடத்தை ஒரு தொழிலாகக் கொண்டவர்கள் செய்த சூழ்ச்சி. அனைத்துவித சாஸ்திர பாதிப்புகளுக்கும் (தோசங்களுக்கும்) ஒரே நிவாரணம், தயவுதான். அதன் அடிப்படையில் கூறப்படும் ‘ஜீவகாருண்யம் தான்’ என்பதை வெளிப்பட மக்களுக்கு எவரும் தெரிவிக்கவில்லை.



ஆனால் சுத்த சன்மார்க்க நிலையைக் கூறிய வள்ளற் பெருமான் ஜீவகாருண்யப் பகுதியில் கூறும்போது, சில உபாய அறிவுகளால் ஆயுள் குறைவென்று தெரிந்து கொண்டவர்கள், ஆதரவற்ற, ஏழை எளியவர்க்கு உணவளிப்பதையே விரதமாகக் கொண்டு செயல்பட்டால் எப்பேர்ப்பட்ட ஆபத்துகளும் நீங்கும் என பெருமான் கூறுகிறார்.



இதிலிருந்து நாம் ஒருசில விசயங்களை தெளிவுப்படுத்திக் கொள்ளலாம். ஜோதிடம், எண்கணிதம், கைரேகை சாஸ்திரம் இவையெல்லாம் இவ்வுலக பற்றியலில் உள்ளமட்டும் ஓரளவு பயன்படும்.



ஆனால் சுத்த சன்மார்க்கத்தின் அனுபவநிலைகளை உள்நோக்கும் பொழுது திருஅகவலில் (எண் 1561 முதல் 1570 வரை)



உலகியல் சிறிதும் உளம்பிடியா வகை

அலகில் பேரருளால் அறிவது விளக்கி

சிறுநெறி செல்லாத் திறனளித்து அழியாது

உறுநெறி உணர்ச்சி தந்து ஒளியுறப் புரிந்து

சாகாக் கல்வியின் தரமெலாம் உணர்த்திச்

சாகாவரத்தையும் தந்து மேல் மேலும்

அன்பையும் விளைவித்து அருட்பே ரொளியால்

இன்பையும் நிறைவித்து என்னையும் நின்னையும்



என்று திடமாகக் கூறுகிறார். எனவே சன்மார்க்க மேல்நிலை அனுபவமான ‘சித்திநிலையை’ அடைய முயற்சி செய்வதே சன்மார்க்க அன்பர்களின் வாழ்வியல். அதற்கு ஜோதிடம் போன்றவற்றை உபாய அறிவாக மட்டுமே கொள்ள வேண்டும். பரிகாரம் என்று வரும்பொழுது ‘ஜீவகாருண்யமே’ முதன்மையானது என உணர்ந்து பல்வேறு சாஸ்திர முறையில் சொல்லப்பட்டவைகளை, பரிகாரங்களை செய்யாமல் இருப்பது நலம்.



வாஸ்து சாஸ்திரம் (மனையடி சாஸ்திரம்)



வாஸ்து சாஸ்திரம் பஞ்சபூத நிலைகள், மற்ற கிரகங்களின் பகுதிநிலை வேறுபாட்டை வைத்து கூறப்படுவது. இது சாலை விதிகள் (டிராபிக் ரூல்) போன்றது. சாலையில் செல்பவர்கள் வலதுபக்கம் திரும்புவது, இடது பக்கம் திரும்புவது, மேலும் எங்கு சாலையைக் கடப்பது போன்ற விதிகளைப் போல் (சட்ட அடிப்படையைப் போல்) கடைப்பிடிக்கலாம். இதில் தவறில்லை. ஆனால் அதுவே சிறந்த வாழ்க்கையை தந்துவிடாது.



இதற்கான சில உதாரணங்களை காண்போம். மகாபாரதத்தில், இந்திரப்பிரஸ்தம் என்ற இடத்தில் தேவர்களுக்கு கட்டிடம் அமைக்கும் கட்டிட விற்பன்னரே நேரில் வந்து அந்த மாளிகையை கட்டியதாக கூறப்படுகிறது. அப்படி அவர் கட்டிய கட்டிடம் முற்றிலும் 100 சதவிகிதம் சாஸ்திர முறைப்படி தான் கட்டப்பட்டது. ஆனால் சில நாட்களிலேயே அவர்களது அரசாட்சியே சூதாட்டத்தில் பறிபோய்விடுகிறது. பதிமூன்று ஆண்டுகள் வனவாசம் செல்ல வேண்டியதாயிற்று. பஞ்சபாண்டவர்கள் நல்லவர்கள் தான். ஆனால் அவர்களே துன்பப்பட வேண்டிய நிலைகள் ஏற்பட்டது. இது மிகவும் சிந்திக்க வேண்டிய ஒரு கட்டம். மகாபாரத குறிப்புகளில் அன்னதானம் பற்றி எங்குமே அவ்வளவாக சிறப்பித்து கூறப்படவில்லை. எனவே ஜீவகாருண்யம் இல்லாதவர்கள் துன்பப்படுவது உறுதி என்பது விளங்கும். எனவே வாஸ்து மிகச்சரியாக இருந்தாலும், உலகியல் பற்றுகளில் சிக்கியவர்களும், தயவு இல்லாதவரும் அதை கடைப்பிடித்து பயனில்லை.



வாஸ்து ஒரு இல்லத்தில் குறைவாக இருந்தாலும், அவர்கள் ஜீவகாருண்யமுடைய அதாவது கொலை, புலை தவிர்த்து, ஆதரவற்ற ஏழை எளியவர்க்கு உணவு வழங்குவதையே வாழ்வியலாகக் கொண்டால் எந்தவித பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்பில்லை. ஏனெனில் ‘ஜீவகாருண்யத்தின்’ பெரும்பலனாக பெருமான் கூறம் போது, “ஊழ்வினைகளால் ஏற்படும் தீமைகளிலிருந்தும், உலகியல் அஜாக்கிரதையால் ஏற்படும் ஆபத்துகளிலிருந்தும் காப்பாற்றப்படுவார்கள்” எனக் கூறுகிறார். எனவே ஜீவகாருண்யமே அனைத்து துன்பங்களிலிருந்தும் மனிதனைக் காப்பாற்றும் உண்மைவழி என்பதை உணர்வோம்.



எண் கணிதம்



எண்கணிதம் மேலை நாட்டவர்களால் பெரும்பாலும் நம்பப்படுகிறது. இது பொதுவான பலாபலன்களையே கூறுகிறது. இது உலகியலில் வியாபார ரீதியாக பயன்படுத்தப்படுகிறது.



கைரேகை



கைரேகை மற்ற சாஸ்திர நிலைகளிலிருந்து வேறுபட்டது. இது பெரும்பாலும், விஞ்ஞான காலத்தில் உருவான கலை. சிலர் வாழ்வியலை ஆராய்ந்து, அவர்களின் கைரேகைப்படி ஒப்பிட்டு எழுதப்பட அனுபவ நூல்.



இந்த அனுபவங்கள் ஒவ்வொருவரும் சற்று மாற்றிச் சொல்வது வழக்கம். மேலைநாட்டு விஞ்ஞானியான ‘கெய்ரோ’ என்பவர் அவரது கைரேகையின் ஆராய்ச்சி அடிப்படையில் ஒரு மரணதண்டனை கைதி நிச்சயமாக விடுதலை செய்யப்படுவான் என்று கூறி, அதை நிரூபித்து காட்டியதன் விளைவாக இது உலகியர் பலரால் சாதி, சமய வேறுபாடின்றி கடைப்பிடிக்கப்படுகிறது. பொதுவாக கைரேகை சாஸ்திரம் என்பது புராண காலங்களிலும், வரலாற்று குறிப்புகளிலும் இல்லை. இந்த கைரேகை மனிதனுக்கு மனிதன் வேறுபடுவதால் தெளிவாக கைரேகை பார்க்கத் தெரிந்தவர்களால் மட்டும் ஒருசில நன்மை தீமைகளை சற்று கூற இயலும். இதற்கும் பரிகாரம் ‘ஜீவகாருண்யம்’ தான்.



ஆனால் ஒரு உண்மையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். மனிதன் இறைநிலையை அடைய இந்த சாஸ்திரங்கள் எந்த அளவிலும் குறித்துத் தர இயலவில்லை. எனவே தான், சாத்திரக் குப்பையென இவற்றை பெருமான் திருவருட்பாவில் சாடுகிறார். எனவே தான் சமயங்களிலும் எவ்வித பற்றும் கூடாது என்கிறார். ஏனெனில் இவ்வித சாஸ்திரங்களும, சாதி, சமய வாழ்க்கையும் உலகியல் பற்றை மேலும், மேலும் பலப்படுத்தி சிலந்திவலையில் சிக்கிய பூச்சியைப் போல மனிதன் வாழ்க்கை ஆகி விடும். பின்பு மரணமடைந்து, பிறந்து பிறந்து உழல வேண்டியது தான். பிறவிக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த சாஸ்திரங்களிலும், சமய மத வழிபாடுகளிலும் எந்தவித நிலையான வழிமுறைகளும் இல்லை. எனவே சன்மார்க்க அன்பர்கள் மேற்படி சாஸ்திர முறைகளை ஓரளவு தெரிந்து கொள்ளலாம். ஆனால் அவற்றையே முழுமையான வாழ்வியலாக கருதுவது அறியாமையாகும்.



இப்படி சாஸ்திர முறைகளை அதிகமாக கடைபிடிப்பவர்கள் பெருமான் கூறக்கூடிய சுத்த சன்மார்க்க நெறியில் வாழவில்லை என்பதே பொருள். எனவே இக்கட்டுரையில் உள்ள செய்திகளை உள்வாங்கி சுத்த சன்மார்க்க வாழ்வியலுக்கு வர முயற்சி செய்யலாம். மேலும், பெரும்பாலான சன்மார்க்க அன்பர்கள் சாதாரணமாக ஏழை எளியவர்க்கும், நம் போன்ற சன்மார்க்க அன்பர்களுக்கும் உணவளித்து விட்டு ‘ஜீவகாருண்யம்’ சரணமாகி விடுவதாகக் கருதுவது சரியல்ல. இவையெல்லாம் திருக்குறளில் கூறப்பட்டது போல் ‘விருந்தோம்பல்’ செயல்களாகும்.



உண்மையான ஜீவகாருண்யம் என்பது பெருமான் கூறியபடி “ஆதரவற்ற ஏழை எளியவர்க்கு (அதாவது அநாதையாக வாழ்பவர்கள், ஆதரவின்றி உறவினர்களால் கைவிடப்பட்டவர் ஏழைகள்) உணவு வழங்குவதே உண்மையான ஜீவகாருண்யமாகும்.” எனவே நன்கொடை கொடுக்கும் அன்பர்கள் இதை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். பல கருணை இல்லங்கள் புலால் உணவு கொடுக்கின்றனர். எனவே இவற்றை தவிர்த்து பொதுநிலையில் செயல்படும் கருணை இல்லங்களுக்கு கொடுத்து உதவலாம். ஏனெனில் மற்ற அமைப்புகளுக்கு சாதி மத பிடிப்பு உள்ளவரும், பிற இனத்தவராகிய சன்மார்க்கம் சாராதவரும் உதவ உள்ளனர்.

selva_84k
selva_84k
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 48
இணைந்தது : 16/11/2009

Postselva_84k Wed Apr 21, 2010 5:40 pm

ஜோதிடம் – எண் கணிதம் – கைரேகை 677196

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Apr 21, 2010 6:15 pm

ஜோதிடம் – எண் கணிதம் – கைரேகை 677196 .......... ஜோதிடம் – எண் கணிதம் – கைரேகை 678642



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 30, 2010 9:33 pm

POOJITHA wrote:

இதற்கான சில உதாரணங்களை காண்போம். மகாபாரதத்தில், இந்திரப்பிரஸ்தம் என்ற இடத்தில் தேவர்களுக்கு கட்டிடம் அமைக்கும் கட்டிட விற்பன்னரே நேரில் வந்து அந்த மாளிகையை கட்டியதாக கூறப்படுகிறது. அப்படி அவர் கட்டிய கட்டிடம் முற்றிலும் 100 சதவிகிதம் சாஸ்திர முறைப்படி தான் கட்டப்பட்டது. ஆனால் சில நாட்களிலேயே அவர்களது அரசாட்சியே சூதாட்டத்தில் பறிபோய்விடுகிறது. பதிமூன்று ஆண்டுகள் வனவாசம் செல்ல வேண்டியதாயிற்று. பஞ்சபாண்டவர்கள் நல்லவர்கள் தான். ஆனால் அவர்களே துன்பப்பட வேண்டிய நிலைகள் ஏற்பட்டது. இது மிகவும் சிந்திக்க வேண்டிய ஒரு கட்டம். மகாபாரத குறிப்புகளில் அன்னதானம் பற்றி எங்குமே அவ்வளவாக சிறப்பித்து கூறப்படவில்லை. எனவே ஜீவகாருண்யம் இல்லாதவர்கள் துன்பப்படுவது உறுதி என்பது விளங்கும். எனவே வாஸ்து மிகச்சரியாக இருந்தாலும், உலகியல் பற்றுகளில் சிக்கியவர்களும், தயவு இல்லாதவரும் அதை கடைப்பிடித்து பயனில்லை.

வாஸ்து ஒரு இல்லத்தில் குறைவாக இருந்தாலும், அவர்கள் ஜீவகாருண்யமுடைய அதாவது கொலை, புலை தவிர்த்து, ஆதரவற்ற ஏழை எளியவர்க்கு உணவு வழங்குவதையே வாழ்வியலாகக் கொண்டால் எந்தவித பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்பில்லை. ஏனெனில் ‘ஜீவகாருண்யத்தின்’ பெரும்பலனாக பெருமான் கூறம் போது, “ஊழ்வினைகளால் ஏற்படும் தீமைகளிலிருந்தும், உலகியல் அஜாக்கிரதையால் ஏற்படும் ஆபத்துகளிலிருந்தும் காப்பாற்றப்படுவார்கள்” எனக் கூறுகிறார். எனவே ஜீவகாருண்யமே அனைத்து துன்பங்களிலிருந்தும் மனிதனைக் காப்பாற்றும் உண்மைவழி என்பதை உணர்வோம்.


மனதை தொடவரிகளை இங்கு குறித்து உள்ளேன் . மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக