புதிய பதிவுகள்
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிருஷ்ணாவதாரம்  Poll_c10கிருஷ்ணாவதாரம்  Poll_m10கிருஷ்ணாவதாரம்  Poll_c10 
55 Posts - 63%
heezulia
கிருஷ்ணாவதாரம்  Poll_c10கிருஷ்ணாவதாரம்  Poll_m10கிருஷ்ணாவதாரம்  Poll_c10 
17 Posts - 20%
dhilipdsp
கிருஷ்ணாவதாரம்  Poll_c10கிருஷ்ணாவதாரம்  Poll_m10கிருஷ்ணாவதாரம்  Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
கிருஷ்ணாவதாரம்  Poll_c10கிருஷ்ணாவதாரம்  Poll_m10கிருஷ்ணாவதாரம்  Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
கிருஷ்ணாவதாரம்  Poll_c10கிருஷ்ணாவதாரம்  Poll_m10கிருஷ்ணாவதாரம்  Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
கிருஷ்ணாவதாரம்  Poll_c10கிருஷ்ணாவதாரம்  Poll_m10கிருஷ்ணாவதாரம்  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கிருஷ்ணாவதாரம்  Poll_c10கிருஷ்ணாவதாரம்  Poll_m10கிருஷ்ணாவதாரம்  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கிருஷ்ணாவதாரம்  Poll_c10கிருஷ்ணாவதாரம்  Poll_m10கிருஷ்ணாவதாரம்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
கிருஷ்ணாவதாரம்  Poll_c10கிருஷ்ணாவதாரம்  Poll_m10கிருஷ்ணாவதாரம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிருஷ்ணாவதாரம்  Poll_c10கிருஷ்ணாவதாரம்  Poll_m10கிருஷ்ணாவதாரம்  Poll_c10 
50 Posts - 63%
heezulia
கிருஷ்ணாவதாரம்  Poll_c10கிருஷ்ணாவதாரம்  Poll_m10கிருஷ்ணாவதாரம்  Poll_c10 
15 Posts - 19%
mohamed nizamudeen
கிருஷ்ணாவதாரம்  Poll_c10கிருஷ்ணாவதாரம்  Poll_m10கிருஷ்ணாவதாரம்  Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
கிருஷ்ணாவதாரம்  Poll_c10கிருஷ்ணாவதாரம்  Poll_m10கிருஷ்ணாவதாரம்  Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
கிருஷ்ணாவதாரம்  Poll_c10கிருஷ்ணாவதாரம்  Poll_m10கிருஷ்ணாவதாரம்  Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
கிருஷ்ணாவதாரம்  Poll_c10கிருஷ்ணாவதாரம்  Poll_m10கிருஷ்ணாவதாரம்  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கிருஷ்ணாவதாரம்  Poll_c10கிருஷ்ணாவதாரம்  Poll_m10கிருஷ்ணாவதாரம்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
கிருஷ்ணாவதாரம்  Poll_c10கிருஷ்ணாவதாரம்  Poll_m10கிருஷ்ணாவதாரம்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கிருஷ்ணாவதாரம்  Poll_c10கிருஷ்ணாவதாரம்  Poll_m10கிருஷ்ணாவதாரம்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிருஷ்ணாவதாரம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84193
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 21, 2022 4:20 pm

மஹா விஷ்ணுவின் அவதாரங்களில் மிகவும்
சுவாரசியமான அவதாரம் என்றால் அது
கிருஷ்ணாவதாரம் தான்.

கண்னன் என்றாலே மகிழ்ச்சி அவனை படிக்கும் போதும்
அதே மகிழ்வை தரும்.
கிருஷ்ணாவதாரம்  Main-qimg-7e69a5ac1bf67814073520d08363ebe3-lq
ஒவ்வொரு அவதாரத்திலும் மஹாவிஷ்ணு ஏதேனும் ஒரு அ
சுரனை வதைக்க அவதரிப்பார். ஆனால் , கிருஷ்ணாவதாரத்தில்
ஏராளமான அசுரர்களை அழிப்பார்.

மற்ற அவதாரத்தில் நேர்மையான குண நிலங்களை கொண்ட
விஷ்ணு இந்த அவதாரத்தில் சூழ்ச்சி உள்பட அனைத்து
குணத்தையும் பெற்றுள்ளார். ஒரு மனிதர் எவ்வாறு வாழ
வேண்டும் என்று உதாரண புருஷனாக இருந்த ராமாவதாரத்தில்
முழுவதும் விஷ்ணு கடுந்துயர் பட்டிருப்பார் .

கிருஷ்ணவதாரத்தில் கிருஷ்ணர் பிறந்ததிலிருந்து துன்பம் விலக
ஆரம்பிக்கும் . கிருஷ்ணர் மகிழ்வின் அடையாளம் .

வட இந்தியாவில் கிருஷ்ணன் என்றால் தமிழகத்தில் கண்ணன்.
கண்ணன் மட்டும் அல்ல கள்ள மாயன் அவன் . கள்ளர்களின்
தலைவனாக அழகர் மலையில் வீற்றிருப்பவனும் அவனே.

முல்லை நிலக் கடவுள் . பாரதம் தமிழகத்தில் நடந்தது என்றும்
கூறுவர் சில அறிஞர்கள் . அது உண்மையா என்று என்னால்
உறுதிபடுத்த முடியாது.

ஆனால் , சிதம்பரம் அருகே ஒரு ஊரின் பெயரில் மதுரா
முன்னால் வரும் . பக்கத்து ஊரின் பெயர் கெளரவர்களால்
ஆனது. சற்று தள்ளி நந்தவனம் என்ற இடம் உண்டு. அங்குள்ள
ஆற்றைக் கடந்தால் அவ்வூரின் முன்னாள் பெயர் சந்திரமலை ,
அதற்கடுத்து சிறிது தொலைவில் பெரிய சிவன் கோவில் உண்டு .
அங்கு தான் அர்ஜூனன் பாசுபதேஸ்திரம் பெற்ற இடம் என்று
கூறுவர்.

பாரதத்தில் வரும் அரவான் பலி நிகழ்ச்சி திருவிழாவாக அங்கே
ஒவ்வொரு வருடமும் நடைபெறும் . அதன் அருகில் உள்ள ஊரின்
பெயர் திருவேட்களம் . பாரதப் போர் நிகழ்ந்த இடம் என்று
கூறுகிறார்கள். எவ்வளவு அழகாக இவ்வூரில் பாரதம்
இணைந்துள்ளது.

இலக்கியங்களை ஆராய்ந்தால் மாயோன் பண்புகள் தமிழர்களை
ஒத்தது தான்.



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84193
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 21, 2022 4:24 pm

கிருஷ்ணாவதாரம்  Main-qimg-f2f7cfc898a04f496a455ec7b5754698-lq
-
புராணத்திற்கு வருவோம்.

விருஷ்ணி குலத்தில்(யாதவ) சூரசேனனின் மகன்
வசுதேவருக்கும் - அரசர் உக்கிரசேனனின் தம்பி தேவகன்
மனைவி தேவகிக்கும் பிறந்தவரே கடவுள் ஸ்ரீ கிருஷ்ணர்.

உக்கிரசேனன் மகன் கம்சன் சகோதரி தேவகியின் மீதுள்ள
அன்பால் அவர்களின் திருமண வைபவத்தில் தேரோட்டினான்.
அப்போது வானத்திலிருந்து அசரீரி கேட்டது.

" நீ மகிழ்வுடன் யாரை தேரில் அமர வைத்து ஊர்வலம் வந்து
கொண்டாடுகிறாயோ , அந்த தேவகியின் வயிற்றில் பிறக்கும்
எட்டாவது குழந்தை உன்னைக் கொல்லும் காலன் ஆவான்"
என்றது.

அக்கணமே பாசம் மறந்து வாளை உருவி கம்சன் தேவகியை
கொல்லப் பாய்ந்தான். அதை தடுத்த வாசுதேவர் தன் எட்டுக்
குழந்தைகளையுமே கம்சனிடம் ஒப்படைப்பதாகவும்
தேவகியை கொல்லாதிருக்குமாறு வேண்டினார். அதை ஏற்று
அவர்களை சிறையிலைடத்தான் கம்சன்.

மதுரா நகரில் கம்சனின் கொடுமைகள் அதிகமாகின .
வசுதேவர் சொன்னதை போல் ஒவ்வொரு குழந்தையையும்
முறையே கம்சனிடம் ஒப்படைத்தார். அக்குழந்தைகளை
கொன்றான் கம்சன். அக்குழந்தைகள் அஷ்டவசுக்கள்
எனப்பட்டனர்.

இவர்கள் ஒரு சாபத்தின் விளைவாக பூமியில் பிறந்து, உடனே
இறந்து இறைவனை அடைய விரும்பினர். அதன்படி அவர்களில்
ஆறுபேர் இறையடி சேர்ந்து விட்டனர். இப்படியிருக்க, ஏழாவது
குழந்தையாக தேவகியின் வயிற்றில் பிறக்க கிருஷ்ணர்
தன்னைத் தாங்கும் அனந்தனை (நாகம்) அனுப்பி வைத்தார்.

கிருஷ்ணாவதாரத்துக்கு முந்தைய அவதாரத்தில், அனந்தன்,
ராமனின் தம்பி லட்சுமணனாகப் பிறந்து, சேவை செய்தார் ,
இப் பிறப்பில் தனது அண்ணனாக அனந்தனை அனுப்பினார்.
இவரே பலராமர் எனப்பட்டார் .

கிருஷ்ணர் யோகமாயாவை அழைத்து தேவகியின் வயிற்றில்
வளரும் கருவை வசுதேவரின் முதல் மனைவி ரோகிணியின்
கருவில் வைத்து விடு. நந்த கோபரின் மனைவி யசோதையின்
கருவில் யோகமாயாவை ஐக்கியமாக சொன்னார்.ரோகிணி
நந்தகோபரின் வீட்டில் தங்கியிருந்தார்.

கோகுலத்தில் முதலில் பலராமர் பிறந்தார். பின்னர் கண்ணன்
சிறையில் அவதரித்தார். தேவகியின் வயிற்றில் மாயா பிறந்தார்.
உலகம் ஒரு கணம் சிலையாகிப் போனது. கண்ணன் தன் அவதார
நோக்கம் வசுதேவரிடம் உரைத்து தன்னை யசோதையிடம்
விட்டுட்டு யசோதையின் மகளை தேவகியிடம் கொடுக்க
சொன்னார்.

கடுமழையும் புயலும் அடித்த வேளையில் சிறைக்கதவுகள் தானாக
திறக்க கை விலங்குகள் அறுபட யமுனை நதி வழிவிட வசுதேவர்
கூடையில் கண்ணனை சுமந்து கோகுலம் சென்றார்.

ஆதிசேஷன் கண்ணன் நனையாமல் குடை பிடித்து சென்றார்.
அனைத்து நடந்தேற மீண்டும் சிறைக்குள் வசுதேவர் வர இடையில்
நடந்த அனைத்தயும் வாசுதேவரை மறக்கச் செய்தார் கிருஷ்ணர்.

சிறையில் மாயாவின் அழுகுரல் கேட்ட காவலர்கள் கம்சனிடம்
விபரம் கூற சிறைக்கே வந்தான் கம்சன். தேவகியின் ஏழாவது
சிசு கர்ப்பத்தில் கரைந்தது என்று எண்ணினான்.

தேவகி எவ்வளவோ கெஞ்சியும் கேளாது குழந்தை பறித்து சுவற்றில்
ஓங்கி அடித்தான். அக்குழந்தை சாகாது விண்ணில் விஸ்வரூபம்
எடுத்தது வைஷ்னவி தேவியாக , ஏ மூடனே உன் அழிவு விரைவில் ,
உன் காலன் ஒளிந்து வளர்கிறான் உன்னை அழிக்காமல் விட
மாட்டான் என்று மறைந்தது.



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84193
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 21, 2022 4:26 pm

கிருஷ்ணாவதாரம்  Main-qimg-8eafe5adb9e6e0159b93958ba0148687-lq
-
கோகுலத்தில் கண்ணனை யசோதை மிகுந்த அன்புடன்
வளர்த்தாள். கோகுலம் ஆயர்பாடிகளின் வசிப்பிடம் .
ஆயர்களின் தலைவன் நந்தகோபாலன் .

கிருஷ்ணனோடு அங்கே பலராமனும் வளர்ந்தார். ஆயர்களின்
குலத்தொழில் ஆடு மாடு மேய்ப்பது , பால் , தயிர் , வெண்ணை
விற்பது . குழந்தையான கண்ணன் செய்த சேட்டைகள்
குறைவில்லாது. கண்ணனை கோகுலத்தில் கொண்டாடினர்.

கண்ணனைக் கொல்ல கம்சன் பூதனா என்ற அரக்கியை
அனுப்பினான். விஷப்பால் கொடுத்து கண்ணனைக் கொல்ல
அழகிய உருவில் வந்தாள். கண்ணனு விஷப்பால் கொடுக்க
அவரோ ரத்தத்தோடு உயிரையும் சேர்த்துக் குடித்தார்.

கண்ணனுக்கு தன் பால் கொடுத்ததால் விஷமாகினும் பேறு
பெற்று வைகுண்டம் அடைந்தாள் .

அடுத்ததாக கம்சன், த்ருணாவர்த்தன் என்ற கொடிய அரக்கனை
அனுப்பினான். இவன் பறக்கும் வல்லமையுள்ளவன் .
சூறாவளியாக கண்ணனை தூக்கி பறந்த அசுரனை கழுத்தை
நெறித்து கொன்றுவிட்டு அவன் உடல் மேல் ஒன்றும் அறியாததை
போல் விளையாடினான் கண்ணன்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84193
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 21, 2022 4:28 pm

கிருஷ்ணாவதாரம்  Main-qimg-95b92f426d558446d473c254913208ef-lq
-
கண்ணன் மண்ணை அள்ளி தின்ன யசோதை கண்ணனை
அதட்டி , பசியில் மண் திங்கிறான் என பால் கொடுக்க
முயன்றார்.கண்ணன் விடாமல் மண் திங்கவே , வாயை
பிடித்து திறந்தாள் யசோதை அதில் உலகமே தெரிந்தது.

ஒரு புறம் அதிசயமாய் யசோதைக்கு இருந்தாலும் மறுபுறம்
மிகுந்த அன்புடன் கண்ணனை வளர்த்தாள். கண்ணன்
வீட்டில் வெண்ணை தாழியை உடைத்து வெண்ணை
திருடுவது , பலராமர் , மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து
கன்றை அவிழ்த்து பால் குடிக்க செய்வது.

இதனால் கோபாலர்கள் பால் கிடைக்காமல் தவிப்பர்.
கண்ணன் கோகுலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் வெண்ணை
திருடுவான். வெண்ணை தாழிகளை உடைப்பதும்
கண்ணனின் பொழுது போக்கு. கண்ணன் மீது கோபாலர்கள்
அதீத அன்பு வைத்திருந்தாலும் அவ்வப்போது தேவகியிடம்
குறை கூறுவதும் உண்டு.

சில நேரங்களில் கண்ணன் சேட்டைகள் அதிகமானால்
உரலில் வைத்து கண்னனை கட்டி விடுவாள் தேவகி.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84193
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 21, 2022 4:29 pm

கிருஷ்ணாவதாரம்  Main-qimg-b12d3beafb69d538d8937858f79d9bda-lq
-
அப்போதும் கண்ணன் அடங்குபவன் இல்லை.
கட்டிய உரலோடு வீதியெங்கும் ஓடுவான் . ஒருமுறை அவ்வாறு
ஓடும்போது இரு மரங்களை உடைத்து நவகூவரன் ,
மணிக்கிரிவன் ஆகியோருக்கு சாபவிமோசனம் அளித்தார்.

கண்ணனுக்கு தொடர்ச்சியாக அரக்கர்களால் தொல்லைகள்
வந்ததால் கோகுலத்தை விட்டு ஊரோடு பிருந்தாவனத்திற்கு
இடம் பெயர்ந்தார் நந்த கோபாலன்.
அங்கு மாடுமேய்க்க அதிக வளம் இருப்பாதாலும் நகர்ந்தனர்.

செல்வ வளம் இருந்தாலும் குலத்தொழிலான மாடு மேய்க்க
கண்ணன் பயிற்றுவிக்கப் பட்டான். அங்கு மாடு மேய்க்கும்
போது புல்லாங்குழல் வாசிப்பதும் , சிறுவர்களுடன்
விளையாடியும் மகிழ்ச்சியாகவே களித்தார் கண்ணன்.

கன்றுக்குட்டியாக வந்த வத்ஸாசுரனையும் , வாத்தாக வந்த
பகாசுரனையும் நாகமாக வந்த அகாசுரனையும் கொன்றார்
கண்ணன். கண்ணன் அற்புறங்கள் கண்டு ஆயர்கள் வியந்தாலும்
பாலானாக நினைத்தே அன்பை பொழிந்தனர்.

அகாசுரன் கண்ணனைக் கொல்லக் கூடாது என்று ஆயர்பாடி
சிறுவர்கள் அகாசுரன் வாய்க்குள் நுழைந்துக் கொண்டனர்.
உயிர் பற்றி கவலையில்லாது கண்ணனைக் காத்தனர்.
கண்ணனும் அவர்களைக் காப்பாற்றினான். காளிங்கன் மீது
நடனம் ஆடி கொட்டம் அடக்கினான். கோவர்த்தன மலையை
தூக்கி இந்திரன் செருக்கை அழித்தார்.



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84193
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 21, 2022 4:31 pm

கிருஷ்ணாவதாரம்  Main-qimg-5722461022c498974e852661a0de327e-lq
-
கோபியர்கள் குளிக்கும் போது அவர்களின் ஆடையை
மறைத்து வைத்து விளையாடுவான் கண்ணன். கோபியையர்கள்
கண்ணன் மீது காதலாய் இருந்தனர்.
ராதையின் மீது கண்ணன் காதல் கொண்டான்.

மதுரா சென்ற கண்ணன் குவாலய பீட யானையை வீழ்த்தி
கம்சனையும் கொன்றார். கம்சனின் சகோதரர்களை பலராமன்
வீழ்த்தினார். பின்னர் வசுதேவரையும் தேவகியையும்
சிறையிலிருந்து மீட்டனர் . நந்த கோபரையும் யசோதையையும்
பிரிந்து மதுராவில் இருந்தனர்.

சாந்திபனி முனிவரிடம் இருவரும் கல்வி கற்றனர்.
பாரதப்போரில் அர்ஜூனனுக்கு கீதையை உபதேசித்தார் கண்ணன்.
கண்ணன் தன்னை நினைக்கும் எவரையும் கைவிட்டதில்லை .
அது கோபியர் ஆகட்டும் , திரவுபதை ஆகட்டும் , அர்ஜூனன்
ஆகட்டும் , சுதாமா ஆகட்டும் ருக்மணி ஆகட்டும் எவரையும்
கைவிட வில்லை .
-
சுருக்கமாக வி.ராஜமருதவேல்.
நன்றி: தமிழ் ‘கோரா’

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 21, 2022 7:24 pm

நல்ல பகிர்வு.

நன்றி.
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக