புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சதாம் உசேன் Poll_c10சதாம் உசேன் Poll_m10சதாம் உசேன் Poll_c10 
11 Posts - 46%
ayyasamy ram
சதாம் உசேன் Poll_c10சதாம் உசேன் Poll_m10சதாம் உசேன் Poll_c10 
9 Posts - 38%
Guna.D
சதாம் உசேன் Poll_c10சதாம் உசேன் Poll_m10சதாம் உசேன் Poll_c10 
1 Post - 4%
mruthun
சதாம் உசேன் Poll_c10சதாம் உசேன் Poll_m10சதாம் உசேன் Poll_c10 
1 Post - 4%
Sindhuja Mathankumar
சதாம் உசேன் Poll_c10சதாம் உசேன் Poll_m10சதாம் உசேன் Poll_c10 
1 Post - 4%
mohamed nizamudeen
சதாம் உசேன் Poll_c10சதாம் உசேன் Poll_m10சதாம் உசேன் Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சதாம் உசேன் Poll_c10சதாம் உசேன் Poll_m10சதாம் உசேன் Poll_c10 
86 Posts - 51%
ayyasamy ram
சதாம் உசேன் Poll_c10சதாம் உசேன் Poll_m10சதாம் உசேன் Poll_c10 
54 Posts - 32%
mohamed nizamudeen
சதாம் உசேன் Poll_c10சதாம் உசேன் Poll_m10சதாம் உசேன் Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
சதாம் உசேன் Poll_c10சதாம் உசேன் Poll_m10சதாம் உசேன் Poll_c10 
4 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சதாம் உசேன் Poll_c10சதாம் உசேன் Poll_m10சதாம் உசேன் Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
சதாம் உசேன் Poll_c10சதாம் உசேன் Poll_m10சதாம் உசேன் Poll_c10 
3 Posts - 2%
mruthun
சதாம் உசேன் Poll_c10சதாம் உசேன் Poll_m10சதாம் உசேன் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சதாம் உசேன் Poll_c10சதாம் உசேன் Poll_m10சதாம் உசேன் Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
சதாம் உசேன் Poll_c10சதாம் உசேன் Poll_m10சதாம் உசேன் Poll_c10 
2 Posts - 1%
manikavi
சதாம் உசேன் Poll_c10சதாம் உசேன் Poll_m10சதாம் உசேன் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சதாம் உசேன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 08, 2010 3:16 am

சதாம் உசேன் 240px-Saddam_Hussein_at_trial%2C_July_2004


சதாம் உசேன் அப்த் அல்-மஜித் அல்-திக்ரிதி (அரபு மொழி: صدام حسين عبد المجيد التكريتي), (பிறப்பு: ஏப்ரல் 28, 1937 1, இறப்பு: டிசம்பர் 30, 2006) முன்னாள் ஈராக் நாட்டின் அதிபராவார். இவர் ஜூலை 16, 1979ல் இருந்து ஏப்ரல் 9 2003 வரை அமெரிக்கா தலைமையிலான ஈராக் படையெடுப்பு வரையில் இவர் அந்நாட்டின் அதிபராக இருந்தார்.

ஈராக்கின் பாத் கட்சியின் முக்கிய நபரான சதாம் 2 1968ல் அக்கட்சி நடத்திய அதிகார கைப்பற்றலில் முக்கியப் பங்கு வகித்தார். தனது நெருங்கிய உறவினரான ஜெனரல் அகமது பாக்கரின் (أحمد حسن البكر) கீழ் துணை அதிபராகப் பணியாற்றிய சதாம், அரசுக்கும் ஆயுதப் படைகளுக்கும் இடையேயான பிரச்சினைகளை கடுமையாக அடக்கி ஆண்டு, அரசு இயந்திரத்தின் மீதான தன் கட்டுப்பாட்டை வலுவாக்கிக் கொண்டார்.

அதிபராகப் பொறுப்பு வகித்த சதாம், யதேச்சிகார அரசை (authoritarian government) நடத்தினார். ஈரான்-ஈராக் போர் (1980–1988) மற்றும் பெர்சியக் குடாப் போர் (1991) நடந்ந காலங்களிலும் அதிகாரத்தை தன் கைப்படியில் வைத்திருந்தார். இக்காலகட்டங்களில் ஈராக் மக்களின் வாழ்க்கைத் தரம் குறைந்ததோடு அவர்களின் மனித உரிமைகளுக்கும் பங்கம் ஏற்பட்டது. சதாமின் அரசு, விடுதலை அல்லது தன்னாட்சியை வலியுறுத்திய, இனம் அல்லது சமயம் சார் இயக்கங்களை மட்டுப்படுத்தியது.

மேலை நாடுகளிடம், குறிப்பாக ஐக்கிய அமெரிக்க மாநிலங்களிடம், அவர் காட்டிய எதிர்ப்பை மெச்சி, பல அராபிய மக்கள் அவரை ஒரு பிரபலத் தலைவராகக் கருதினாலும், அனைத்துலக சமுதாயத்தினர் பலரும் அவரை சந்தேகக்கண் கொண்டே நோக்கினர். அதுவும் 1991 பெர்சிய குடாப் போருக்கு அடுத்து சில ஈராக்கி குழுக்கள் சதாமின் பாதுக்காப்பு படை குறித்த அச்சத்துடன் வாழ்ந்தனர்.

ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள் மற்றும் அதன் கூட்டாளிகள் இணைந்து மேற்கொண்ட 2003 ஈராக் போருக்கு பிறகு சதாமின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. டிசம்பர் 13, 2003 அன்று திக்ரித்துக்கு வெளியே உள்ள பாதாள அறை ஒன்றில் ஒளிந்திருந்த சதாமை அமெரிக்கப் படையினர் கைது செய்தனர். பல மனித உரிமை மீறல் வழக்குகள் தொடர்பாக இடைக்கால ஈராக் அரசு அமைத்திருக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சதாம் விசாரிக்கப்பட்டார். நவம்பர் 5, 2006 இல் அவருக்கு தூக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

டிசம்பர் 26, 2006 இல் சதாமின் மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டு மரணதண்டனை உறுதி செய்யப்பட்டது. டிசம்பர் 30, 2006 உள்ளூர் நேரம் 06:05 மணிக்கு அவர் தூக்கிலிடப்பட்டார்.



சதாம் உசேன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 08, 2010 3:21 am

எதிரிகளின் பார்வையில் அவர் ஒரு அரக்கன், சர்வாதிகாரி. எதிரிகளை ஈவு இரக்கமின்றி கொன்றுவிடும் சுபாவம் உடையவர். ஆனாலும், ஈராக் மக்களுடைய ஆதரவுடன், சுமார் 20 ஆண்டுகள் ஆட்சியை நடத்திய சதாம், தற்போது அமெரிக்கப் படைகளின் பிடியில். அவருடைய வாழ்க்கையை ஒருமுறை அலசிப் பார்க்கும்போது, நமக்கு கிடைத்தவை:

குழந்தை பருவம் :

1937 ஏப்ரல் 28 தேதியன்று திக்ரித்திற்கு பக்கத்திலுள்ள "அல்_ஒளஜா" என்ற கிராமத்தில் சதாம் பிறந்தார். அவருடைய குழந்தை பருவம் பல கஷ்டங்களுடன் இருந்தது. தாய் சுபா கர்ப்பமாக இருக்கும்போதே, அப்பா இறந்தார். சதாம் பிறந்த பிறகு, சுபா மற்றொருவரை மணக்க, அந்த மாற்றான் தந்தை சதாமை பல கொடுமைகளுக்கு ஆளாக்கினான். சிறு வயதிலேயே ஆடுகளை மேய்க்கவும், திருடவும் சதாமை அனுப்புவார் அந்த மாற்றாந்தந்தை. இதனால் சதாம் தன்னுடைய 10ஆவது வயதில், வீட்டிலிருந்து வெளியேறி, தாய் மாமன் கைருல்லா தல்பாவிடம் தஞ்சம் புகுந்தார்.

படிப்பு :

சதாம் உசேனுக்கு பத்து வயது வரைக்கும் "அ, ஆ..." கூட தெரியாது. மாமன் கைருல்லாதான் சதாமுக்கு படிப்பு சொல்லித் தந்தார். பாக்தாத் பல்கலைக்கழகத்தில் சதாம் படிப்பு நடந்தது. ஈஜிப்ட் நாட்டில் தலைமறைவாக வாழும்போது, சட்டப் படிப்பை முடித்தார். அங்குதான் ஸ்டாலின் பற்றி முழுமையாகப் படித்தார். அவருடைய மேசையிலும், பீரோக்களிலும் ஸ்டாலின் பற்றிய புத்தகங்கள்தான் அதிகமாக இருக்குமென்று சொல்வார்கள். அரபு தேசீய வாதத்தை சதாமிற்கு சொல்லிக் கொடுத்தது மாமன் கைருல்லா தலாஃபாதான் என்பார்கள்.

குடும்பம்:

சதாம் எத்தனை பேரை கல்யாணம் செய்து-கொண்டாரென்பதைப் பற்றி யாருக்கும் தெரியாது. ஆனால், இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் இருப்பதாக உலகத்துக்குத் தெரியும். மகன்கள் காஸே உசேன், உதய் உசேன் சதாமுக்கு இடது, வலது கைகள் போன்றவர்கள். அமெரிக்கப் படையெடுப்பின்போது, இவர்கள் கொல்லப்பட்டனர். மருமகன் உசேன் கமால், பல விஷயங்களில் மாமாவுக்கு துணையாக இருந்தார். ஆனால், குடும்பத் தகராறில் மகள்கள், மருமகன்களும் ஜோர்டான் நாட்டுக்கு ஓடிப்போனார்கள்.

சுபாவம் :

ஆரம்பத்திலிருந்து சதாம் உசேன் போராட்ட குணம் உடையவர்தான். அந்த போராட்ட குணத்துடனே, கொடூர குணமும் இருந்தது. தன்னை எதிர்த்தவரை ஈவு இரக்கமின்றி கொல்வதுதான் சதாமின் ஸ்டைல். தன்னை அதிபர் பதவியிலிருந்து விலகச் சொன்ன சுகாதார அமைச்சரைக் கொன்றதும், புரட்சி செய்த குர்த்துக்களின் மேல் இராசாயன ஆயுதங்களை பிரயோகித்ததும் இந்த கொடூரம்தான். சதாமுக்கு சிறு வயதலிருந்தே மேற்கத்திய நாடுகள் என்றால் அறவே பிடிக்காது. அரபு நாடுகளையெல்லாம் ஒரே குடையின்கீழ் கொண்டு வரவேண்டுமென்பது அவருடைய கனவு.

அரசியலில்...

மாமன் கைருல்லாவிடம் அரசியலை பற்றி கற்றுக் கொண்ட சதாம், 1957_ல் பாத் கட்சியில் சேர்ந்தார். சுயநலத்துடன், நம்பியதைத் துணிச்லாக செய்யும் யுக்தியுடன், பாத் கட்சியின் துணைத் தலைவராக வளர்ந்தார். 1979_ல் ஈராக் நாட்டின் தலைவராக பொறுப்பேற்றார். அன்றிலிருந்து 2-0 வருடங்கள் ஜனாதிபதியாக இருந்தார். ஈராக்கில் பாத் கட்சியை பட்டித்தொட்டியிலும் பரப்பவிட்ட புகழ், சதாம் உசேனைத்தான் சேரும்.

புரட்சிகள்:

1956 ஈராக் மன்னர் ஃபைஜல்_2க்கு எதிரான புரட்சியில் சதாம் பங்கேற்றார். 1959_ல் ஈராக் ஆட்சிப் பொறுப்பிலிருந்த ஜெனரல் காசிம்மை கொல்ல முயற்சி செய்து, அந்த முயற்சியில் தோல்வியுற்றார். அப்போது தன் காலில் பாய்ந்த புல்லட்டை கத்தியுடன் அவரே அகற்றினார். இருந்தாலும், அவருக்கு ஒரு தலைவனாக மதிப்பு கிடைத்தது. பிறகு கைரோவுக்கு ஓடிப்போனார். 1963_ல் தன் சொந்த நாட்டுக்குள் நுழைந்தார். அதிபரான பிறகு, ஈராக்கில் ஷியாக்களின் புரட்சியை வடக்கு ஈராக்கில் குர்த்துக்களின் புரட்சியை இரும்பு கரங்களுடன் அடக்கினார்.

யுத்தங்கள்:

சதாம் உசேன் அரபு நாடுகளுடன் தோழமையுடன்தான் இருந்தார். ஆனால், அரபு நாடுகள்தான் அவரை தூரமாக வைத்திருந்தன. பக்கத்திலுள்ள குவைத் நாட்டின் மேல் படையெடுத்து, அந்நாட்டிற்கு எதிரியானார். சௌதீ அரேபியாவுடனும் வைரம்தான். சிரியா, ஜோர்டன் நாடுகளுக்-கு நல்ல நண்பன். இஸ்ரேல் யூத ஐக்கிய வாதமென்றால், எரிச்சல். அமெரிக்கா, இங்கிலாந்தைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அதிபரான ஓராண்டிற்குள்ளேயே, ஈரானுடன் போர் தொடங்கினார். அந்தப் போர் 8 ஆண்டுகள் தொடர்ந்தது. 1990 ஆகஸ்ட் 2ம் தேதியன்று சதாம் படைகள் குவைத் நாட்டை ஆக்கிரமித்தன.

1991_ல் அமெரிக்கப் படைகள் தோழமை நாடுகளின் உதவியுடன் ஈராக்கின் மேல் படையெடுத்து குவைத் நாட்டை மீட்டுவிட்டன. ஆனால், அந்தப் போரினால் ஈராக் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்தது. இந்த ஆண்டு மார்ச் 20 தேதியன்று, அமெரிக்கப் படையெடுப்பின் காரணமாக சதாம் தலைமறைவானார்.

சதாம் உசேன் எப்படி பிடிபட்டார்?!



எங்கே : சொந்த ஊர் திக்ரிட் பட்டணத்திற்கு 16 கி.மீ. தொலைவிலுள்ள அத்வரில்.... தன்னுடைய பண்ணை வீட்டின் சுரங்கத்தில் தூங்கிக் கொண்டு.

எப்போது : சனிக்கிழமை இரவு 11 மணி அளவில்.

எப்படி : கடந்த பத்து நாட்களாக அமெரிக்கா படைகள் சதாம் பந்துக்களை இண்டராகேட் செய்து வருகின்றன. அவர்கள் கொடுத்த தகவலின்படி, அங்கு சென்ற அமெரிக்க படைகளுக்கு சில கற்கள், மண்ணும் தெரிந்தன. அந்த மண்ணை எடுத்தபோது, அங்கு ஒரு குழி தெரிந்தது. அங்கு 7_8 அடி ஆழத்தில், சதாம் தூங்கிக் கொண்டிருந்தார். எந்தவிதமான சத்தமும் செய்யாமல், அமெரிக்க படைகள் சதாமை பிடித்தன.

சதாம்தானா? : ஈராக்கின் முன்னாள் வெளியுறவுத்துரை அமைச்சர் தாரீக் அஜீஜ் சதாம் உசேனை அடையாளம் கண்டுகொண்டார். வாயிலிருந்து சாம்பில்ஸ் எடுத்து பிடிபட்டவர் சதாம்தான் என்று உறுதிப்படுத்தினார்கள்.



சதாம் உசேன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
musris
musris
பண்பாளர்

பதிவுகள் : 64
இணைந்தது : 03/01/2010

Postmusris Fri Jan 08, 2010 3:23 am

சிவா அண்ணா நீங்கள் ஒரு பொது நூலகம் நிறைய விசயங்கள் கற்றுக்கொள்ள முடியும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக