ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்

Go down

தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள் Empty தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்

Post by ayyasamy ram Tue Aug 16, 2022 7:59 pm

தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள் Vikatan%2F2019-05%2F7e0d8766-65e0-4359-9dbf-df9a723a1241%2Fhoneymoon600.jpg?auto=format%2Ccompress&dpr=1
--
திருமணம் முடித்த கையோடு இளம் ஜோடி செல்லக்கூடிய தேனிலவுப் பயணம் என்பது, அவர்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத இன்ப தருணமாக அமையும். சரியான இடங்களைத் தேர்வு செய்தால் மட்டுமே, தேனிலவுப் பயணம் இனிதாக அமையும். கூடுதலாக கொஞ்சம் திட்டமிட்டால் விதவிதமான அனுபவங்கள் கிடைக்கும்.

ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி என தமிழகத்தில் பல ஜில்லிடவைக்கும் தேனிலவு மையங்கள் இருப்பது தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு நன்கு தெரியும். ஆனால், தமிழ்நாட்டை ஒட்டிய கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில், புதுமண தம்பதிகளின் தேனிலவைத் தித்திப்பாக்க ஏராளமான இடங்கள் உள்ளன. அவற்றில் டாப் 10 இடங்களை இங்கு அறிமுகப்படுத்துகிறோம்.

1. வர்க்கலா

‘கடவுளின் தேசம்’ என்று அழைக்கப்படும் கேரளாவில் தேனிலவைக் கொண்டாட எழில்கொஞ்சும் பல கடற்கரைகள் உள்ளன. அவற்றில் ஒன்று வர்க்கலா. பப்பில் ஏரியில் போட்டிங் போகலாம். ஜோடியாக கைகோர்த்துக்கொண்டு அந்தக் கடற்கரையின் பேரழகை ரசித்தவாறு நடந்து செல்லலாம். வர்க்கலாவில் காஃபி ஷாப்-கள் மிகவும் பிரபலம். அங்கு கிடைக்கும் காஃபியின் வாசனையோடு சூரியன் அஸ்தமனமாகும் அழகையும் பருகலாம். அங்கு விற்பனையாகும் வெள்ளி நகைகள், உடைகள், ஆபரணங்கள் ஆகியவற்றை நினைவுப்பொருட்களாக வாங்கி வரலாம். விமானம், ரயில், கார் மூலமாகவும் வர்க்கலாவுக்குச் செல்லலாம். வர்க்கலாவுக்கு அருகே திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையமும், ஷிவகிரி ரயில் நிலையமும் உள்ளன. நம் பட்ஜெட்டுக்கு ஏற்ப ஆடம்பர ஹோட்டல்களும், குறைந்த கட்டணத்தில் தங்கக்கூடிய ஹோட்டல்களும் நிறைய உள்ளன.

2. பெக்கல்

கேரள மாநிலத்தில் உள்ள அழகான இடம். கடற்கரையும் கோட்டை நகரமும் ஒருங்கே அமைந்த இந்த இடம், நகரங்களின் பரபரப்புமிக்க வாழ்க்கையில் இருந்து நன்கு இளைப்பாறுவதற்கு அமைதியாக இடம் இது. நகரத்தில் உள்ள வசதிகளையும், இயற்கையின் அழகையும் ஒருசேர அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிற புதுமணத்தம்பதிகள் இங்கு தேனிலவு செல்லலாம். பெக்கல் கோட்டையில் இருந்து அரபிக்கடலில் சூரியன்மறையும் அற்புத அழகை ரசிக்கலாம். நொம்பிளி ஆறு மற்றும் அமைதியான கழிமுகப்பகுதியில் படகு சவாரி போகலாம். காசர்கோடு ரயில் நிலையமும், மங்களூர் விமான நிலையமும் பெக்கல் அருகில் அமைந்துள்ளன. தேனிலவு தம்பதிகள் தங்குவதற்கு நம் பட்ஜெட்டுக்கு ஏற்ப நிறைய ஓட்டல்கள் உள்ளன.

3. குமரகம்

தேனிலவு தம்பதிகளுக்கான சொர்க்கபூமி என்று கேரளாவில் உள்ள குமரகத்தைச் சொல்லலாம். காண்பவர் நெஞ்சை கொள்ளையடிக்கும் கழிமுகப்பகுதியில் படகு உலா போகலாம். பெரும்பாலும் இங்கு வரும் தேனிலவுத்தம்பதிகள், உலகத்தரம் வாய்ந்த படகு வீடுகளில் ஒரு நாள் முழுவும் தங்குகிறார்கள். கொச்சின் சர்வதேச விமான நிலையமும், கோட்டயம் ரயில் நிலையமும் குமரகம் அருகில் உள்ளன. நம் பட்ஜெட்டுக்கு ஏற்ப தங்கும் விடுதிகள் உள்ளன. குறைந்த கட்டணத்தில் கெஸ்ட் ஹவுஸ்கள் நிறைய உள்ளன.

4. கோவளம்

கேரளாவின் இந்த அழகிய கடற்கரை, தென் இந்தியாவின் சிறந்த தேனிலவு மையங்களில் ஒன்று. சூரியன் மறையும் அழகுக்காட்சியை ரசித்தவாறு கலங்கரை விளக்கம் பகுதியில் நடந்து செல்வது சுகானுபவம். சூரிய குளியலுக்கு சிறந்த இடம். புதுமணத்தம்பதிகள், மெழுவர்த்தியின் மங்களான வெளிச்சத்தில் அமர்ந்தவாறு விதவிதமான கடல் உணவு வகைகளை ருசிக்கலாம். ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மற்றும் நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் போகலாம். திருவனந்தபுரம் விமான நிலையம், திருவனந்தபுரம் ரயில் நிலையம் அருகில் உள்ளன. நம் பட்ஜெட்டுக்கு ஹோட்டல்களும், கெஸ்ட் ஹவுஸ்களும் உள்ளன.

5. ஆழப்புழா

தென் மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இந்த கேரளப் பகுதிக்கு விரும்பி வருகிறார்கள். குறிப்பாக தேனிலவு கொண்டாடுவதற்கு புதுமண ஜோடிகள் இங்கு நிறைய வருகிறார்கள். படகு வீடுகளுக்கு பிரபலமான இடம் இது. இயற்கை சூழ்ந்த பேக்வாட்டரில் மிதக்கும் படகு வீடுகளில் பகலிலும், இரவிலும் பொழுதை அனுபவிக்கலாம். அது நம் வாழ்நாளில் மறக்க முடியாத பொழுதாக நிச்சயம் மாறும். கொச்சின் சர்வதேச விமான நிலையமும், ஆழப்புழா ரயில் நிலையமும் அருகில் உள்ளன. பட்ஜெட்டுக்கு ஏற்ப விதவிதமான படகு வீடுகள் உள்ளன. நம் விருப்பப்படி அதைத் தேர்வு செய்யலாம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள் Empty Re: தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்

Post by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm


6. தேக்கடி

தேனிலவு கொண்டாட சிறந்த இடங்களில் இதுவும் ஒன்று. தமிழ்நாடு-கேரளா எல்லையில் உள்ளது. இங்கு, பெரியார் வனஉயிரியல் சரணாலயம் உள்ளது. இந்தியாவிலேயே மிகப்பெரிய வனஉயிரியல் சரணாலயம் இதுதான். பல புதுமண ஜோடிகளின் கனவுப்பிரதேசம் இது. இயற்கையை ரசித்தவாறு அமைதியாக தேனிலவைக் கொண்டாடலாம். தேயிலை தோட்டங்கள் வழியாக ஜோடியாக நடந்து செல்வது சுகமான அனுபவம். ஜீப் சவாரி மற்றும் படகு சவாரியும் செய்யலாம். மதுரை விமான நிலையமும், கோட்டயம் ரயில் நிலையமும் அருகில் உள்ளன. நம் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு ஹோட்டல்களும், கெஸ்ட் ஹவுஸ்களும் உள்ளன. வீடுகளில் பேயிங் கெஸ்ட்டாக தங்கும் வசதியும் உண்டு.

7. வயநாடு

கேரளாவில் அடர்த்தியான வனப்பகுதி இது. முழுக்க முழுக்க இயற்கை சூழ்ந்த பகுதியாக இருப்பதால், தேனிலவுக்கு உகந்த இடம். வாசனைமிக்க தோட்டங்கள் வழியாக ஜோடியாக நடந்து செல்வது சுகமான அனுபவம். ஒன்றாக டிரெக்கிங் போகலாம். கோழிக்கோடு சர்வதேச விமான நிலையமும், கோழிக்கோடு ரயில் நிலையமும் அருகில் உள்ளன. நம் பட்ஜெட்டுக்கு ஏற்ப தங்கும் இடங்கள் உள்ளன. ஹோட்டல்கள் முதல் வீடுகளில் பேயிங் கெஸ்டாக தங்குவது வரை பலவிதமான தங்கும் இடங்கள் உள்ளன.

8. ருஷிகொண்டா

ஆந்திராவில் உள்ள அழகிய கடந்கரை. பாறைகளால் அமைந்த கடற்கரை. மேல் பகுதியில் பசுமைப் பிரதேசம் காட்சியளிக்கிறது. அமைதியை விரும்பும் புதுமணத்தம்பதிகள் சென்றுவர தகுந்த இடம். விசாகப்பட்டினத்துக்கு மிக அருகில் அமைந்துள்ள இந்தக் கடற்கரையில் இளம் ஜோடிகள் கைகோத்து உலாவுவது சுகானுபவம். ஜோடியாக கடலில் குளிக்கலாம். விசாகப்பட்டினம் சர்வதேச விமான நிலையமும், விசாகப்பட்டினம் ரயில் நிலையமும் அருகில் உள்ளன.

9. கபினி

கர்நாடகா மாநிலத்தில் உள்ளது. வனம் சூழ்ந்த அழகான தேனிலவுப் பிரதேசம். கபினி ஆற்றை ஒட்டிய வனப்பகுதி. பெங்களூரில் இருந்து 275 கி.மீ தொலைவில் உள்ளது. பந்திப்பூர் வனப்பகுதியின் அழகை ரசித்துக்கொண்டே த்ரில்லான பயணம் போகலாம். அமைதியும், அழகும் நிறைந்த இடம். நம் அன்புக்கு உரியவர்களுடன் அனுபவிப்பதற்கு உகந்த இடம். புதுமணத்தம்பதிகள் தோளில் கைபோட்டுக்கொண்டு கபினி ஆற்றங்கரையில் நடந்து செல்வது ஆனந்தமான அனுபவம். மைசூர் விமான நிலையம் 90 கி.மீ தூரத்தில் உள்ளது. மைசூர் ரயில் நிலையத்தில் இறங்கியும் செல்லலாம். இது ரொம்ப காஸ்ட்லியான இடம். குறைந்த கட்டணத்தில் தங்குவதற்கான ஓட்டல்கள் மிகக்குறைவு. நாள் ஒன்றுக்கு ரூ.16 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையிலான ரூம்களே அதிகம்.

10. கூர்க்

கர்நாடகா மாநிலத்தில் உள்ளது. தேனிலவு தம்பதிகளின் சொர்க்கம். இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும். அட்வெஞ்சரை விரும்பும் தம்பதிகளாக இருந்தால், தேனிலவு பயணத்தில் கொஞ்சம் த்ரில் அனுபவிக்கவும் வாய்ப்புகள் உள்ளன. ஏராளமான காபி தோட்டங்கள் உள்ளன. அதன் வழியாக டிரக்கிங் போகலாம். காவிரி ஆற்றில் பரிசல் பயணம் போகலாம். அரிய வகை பறவைகள் மற்றும் தாவரங்களைப் புகைப்படங்கள் எடுத்து ரசிக்கலாம். அபி அருவியில் குளித்து மகிழலாம். தேயிலை தோட்டங்களுக்கு மத்தியில் ஓர் இரவு தங்குவது த்ரில்லான அனுபவம். மைசூர் விமான நிலையம், மைசூர் ரயில் நிலையம் அருகில் அமைந்துள்ளன. நம் பட்ஜெட்டை பொறுத்து தங்குவதற்கான இடங்கள் உள்ளன. விருந்தினரை உபசரிப்பது, நட்பாகப் பழகுவுது ஆகியவற்றுக்கு கூர்க் மக்கள் புகழ்பெற்றவர்கள். அவர்களின் வீடுகளில் பேயிங் கெஸ்ட் ஆக தங்கலாம்.
-
நன்றி: விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum