புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வேரென நீ இருந்தாய்…! – சிறுகதை Poll_c10வேரென நீ இருந்தாய்…! – சிறுகதை Poll_m10வேரென நீ இருந்தாய்…! – சிறுகதை Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
வேரென நீ இருந்தாய்…! – சிறுகதை Poll_c10வேரென நீ இருந்தாய்…! – சிறுகதை Poll_m10வேரென நீ இருந்தாய்…! – சிறுகதை Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
வேரென நீ இருந்தாய்…! – சிறுகதை Poll_c10வேரென நீ இருந்தாய்…! – சிறுகதை Poll_m10வேரென நீ இருந்தாய்…! – சிறுகதை Poll_c10 
4 Posts - 3%
prajai
வேரென நீ இருந்தாய்…! – சிறுகதை Poll_c10வேரென நீ இருந்தாய்…! – சிறுகதை Poll_m10வேரென நீ இருந்தாய்…! – சிறுகதை Poll_c10 
4 Posts - 3%
Jenila
வேரென நீ இருந்தாய்…! – சிறுகதை Poll_c10வேரென நீ இருந்தாய்…! – சிறுகதை Poll_m10வேரென நீ இருந்தாய்…! – சிறுகதை Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
வேரென நீ இருந்தாய்…! – சிறுகதை Poll_c10வேரென நீ இருந்தாய்…! – சிறுகதை Poll_m10வேரென நீ இருந்தாய்…! – சிறுகதை Poll_c10 
1 Post - 1%
M. Priya
வேரென நீ இருந்தாய்…! – சிறுகதை Poll_c10வேரென நீ இருந்தாய்…! – சிறுகதை Poll_m10வேரென நீ இருந்தாய்…! – சிறுகதை Poll_c10 
1 Post - 1%
kargan86
வேரென நீ இருந்தாய்…! – சிறுகதை Poll_c10வேரென நீ இருந்தாய்…! – சிறுகதை Poll_m10வேரென நீ இருந்தாய்…! – சிறுகதை Poll_c10 
1 Post - 1%
jairam
வேரென நீ இருந்தாய்…! – சிறுகதை Poll_c10வேரென நீ இருந்தாய்…! – சிறுகதை Poll_m10வேரென நீ இருந்தாய்…! – சிறுகதை Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
வேரென நீ இருந்தாய்…! – சிறுகதை Poll_c10வேரென நீ இருந்தாய்…! – சிறுகதை Poll_m10வேரென நீ இருந்தாய்…! – சிறுகதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வேரென நீ இருந்தாய்…! – சிறுகதை Poll_c10வேரென நீ இருந்தாய்…! – சிறுகதை Poll_m10வேரென நீ இருந்தாய்…! – சிறுகதை Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
வேரென நீ இருந்தாய்…! – சிறுகதை Poll_c10வேரென நீ இருந்தாய்…! – சிறுகதை Poll_m10வேரென நீ இருந்தாய்…! – சிறுகதை Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
வேரென நீ இருந்தாய்…! – சிறுகதை Poll_c10வேரென நீ இருந்தாய்…! – சிறுகதை Poll_m10வேரென நீ இருந்தாய்…! – சிறுகதை Poll_c10 
8 Posts - 5%
prajai
வேரென நீ இருந்தாய்…! – சிறுகதை Poll_c10வேரென நீ இருந்தாய்…! – சிறுகதை Poll_m10வேரென நீ இருந்தாய்…! – சிறுகதை Poll_c10 
6 Posts - 4%
Jenila
வேரென நீ இருந்தாய்…! – சிறுகதை Poll_c10வேரென நீ இருந்தாய்…! – சிறுகதை Poll_m10வேரென நீ இருந்தாய்…! – சிறுகதை Poll_c10 
4 Posts - 2%
Rutu
வேரென நீ இருந்தாய்…! – சிறுகதை Poll_c10வேரென நீ இருந்தாய்…! – சிறுகதை Poll_m10வேரென நீ இருந்தாய்…! – சிறுகதை Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
வேரென நீ இருந்தாய்…! – சிறுகதை Poll_c10வேரென நீ இருந்தாய்…! – சிறுகதை Poll_m10வேரென நீ இருந்தாய்…! – சிறுகதை Poll_c10 
2 Posts - 1%
Baarushree
வேரென நீ இருந்தாய்…! – சிறுகதை Poll_c10வேரென நீ இருந்தாய்…! – சிறுகதை Poll_m10வேரென நீ இருந்தாய்…! – சிறுகதை Poll_c10 
2 Posts - 1%
viyasan
வேரென நீ இருந்தாய்…! – சிறுகதை Poll_c10வேரென நீ இருந்தாய்…! – சிறுகதை Poll_m10வேரென நீ இருந்தாய்…! – சிறுகதை Poll_c10 
1 Post - 1%
M. Priya
வேரென நீ இருந்தாய்…! – சிறுகதை Poll_c10வேரென நீ இருந்தாய்…! – சிறுகதை Poll_m10வேரென நீ இருந்தாய்…! – சிறுகதை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேரென நீ இருந்தாய்…! – சிறுகதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82033
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 03, 2022 8:16 pm

வேரென நீ இருந்தாய்…! – சிறுகதை Main-qimg-52528172f9b446c4eec6c4bdde607c10
-
ஊரிலிருந்து அப்பாவை பார்க்க அண்ணன், தம்பி இருவரும்
ஒன்றாக வந்திருந்தனர். நான்கு ஆண்டுகளாக எந்த
உணர்வும் இல்லாமல் படுக்கையில் ஜடமாகப் படுத்திருக்கும்
அப்பாவிடம் சிறிது நேரம் இருந்துவிட்டு வெளியே வந்தனர்.

”என்ன விஷயம் ரகு. நீயும், ராமுவும் திருச்சி,
கோயமுத்துாரிலிருந்து ஒண்ணா புறப்பட்டு வந்திருக்கீங்க?”

”இதென்னம்மா கேள்வி, உன்னையும் அப்பாவையும்
பார்த்துட்டுப் போகலாம்ன்னு வந்தோம்,” என்றான், ராமு.

அப்பாவுக்கு சாப்பாடு கொடுத்தவள், ”வாங்க சாப்பிடலாம்,”
மகன்களை அழைத்தாள்.

”சிக்கன் கிரேவி ரொம்ப நல்லாயிருந்துச்சும்மா. உன் கையால
சாப்பிட்டு எத்தனை நாளாச்சு. உன் கை சமையலுக்கு ருசி
அதிகம்,” என, ரகு சொல்ல, அவனைப் பார்த்துச் சிரித்தாள்.

”சரிம்மா, நீ சாப்பிட்டுட்டு ஹாலுக்கு வா… உன்கிட்டே சில
முக்கியமான விஷயம் பேசணும்,” என்றான், ராமு.

காரணத்தோடு தான் இருவரும் சேர்ந்து வந்திருப்பதாக
நினைத்து, எதுவும் சொல்லாமல் சமையலறை சென்றாள்.

முந்தானையில் ஈரக்கையைத் துடைத்தபடி, ”என்னப்பா
விஷயம் சொல்லுங்க,” என, அருகில் அமர்ந்தாள்.

”பாவம்மா நீ… நாலு வருஷமா அப்பாவோடு சிரமப்படறே.
அவர்கிட்டே எந்த மாற்றமுமில்லை. எந்த உணர்ச்சியுமில்லாத
ஜடமாகப் படுத்திருக்காரு,” என்றான், ராமு.

”என்னப்பா பண்றது… கடவுள் சில விஷயங்கள்
இப்படித்தான் நடக்கணும்ன்னு முடிவு பண்ணியிருக்கும் போது,
நாம் அதை ஏத்துக்க தானே வேணும். எனக்கு எந்த
கஷ்டமுமில்லப்பா.

”சமையலுக்கு ஆள், அப்பாவை கவனிக்க ஒரு ஆள்ன்னு
இருக்காங்க. என் பங்குக்கு நானும் அவரை நல்லபடியாக
கவனிச்சுக்கிறேன். அவ்வளவுதான்.”

ராமுவும், ரகுவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்
கொண்டனர்.

”இதே மாதிரி உணர்வு இல்லாமல், தான் யாருங்கிறது கூட
தெரியாமல் வியாதியில் படுத்தவங்களை பராமரிக்க
எத்தனையோ நல்ல, ‘ஹெல்த்கேர்’ நிறுவனங்கள் இருக்கும்மா…
மாசா மாசம் பணம் கட்டினால் போதும் பொறுப்பா கவனிப்பாங்க.

”அம்மா… நான் இப்படி சொல்றேன்னு தப்பா நினைக்காதே,
யதார்த்தத்தைச் சொன்னேன். அவருக்கு, தான் யாரு, எங்கே
இருக்கோம், பக்கத்தில் இருந்து கவனிப்பது யாரு. இப்படி
எதுவுமே தெரியாமல் உணர்ச்சியற்ற கட்டையாகக் கிடக்கிறாரு.

”அவரைப் பராமரிக்க இத்தனை ஆள்… அப்பாவை ஹோமில்
சேர்த்துட்டு, நீ எங்களோடு வந்து இரும்மா. வீட்டை வாடகைக்கு
விடலாம். நீயும் சிரமப்படாமல் இருக்கலாம். உனக்கும்
வயசாகுது. உன் உடம்பை கவனிக்க வேண்டாமா?

”உன் நல்லதுக்குதான் நானும், தம்பியும் சேர்ந்து இந்த
முடிவுக்கு வந்திருக்கோம். என்னம்மா சொல்ற?” என்றான்,
ராமு.

”நீங்க சொல்றது சரிதான். அப்பா ஒருத்தருக்காக நிறைய
செலவாகுது. ஆனா, இதெல்லாம் அவர் சம்பாதித்தது. இந்த
வீடு அவருடைய உழைப்பு. செலவுக்கு பணம் அவர் சேமிப்பும்,
அவருக்கு வருகிற பென்ஷனும் தான். எந்த விதத்திலும் உங்களை
நாங்க சிரமப்படுத்தலையே?”

”என்னம்மா இது, இப்படி பேசற. நாங்க சொல்ல வந்ததை
நீ சரியா புரிஞ்சுக்கலை.”

”முதலில் நான் சொல்றதை நீங்க புரிஞ்சுக்கங்க. அவருக்கு
உணர்வுகள் மறுத்து போயிருக்கலாம். நான் யாருங்கிற நினைப்பு
கூட இல்லாமல் இருக்கலாம். ஒரு பொம்மையாக, கட்டையாக,
ஜடமாக படுக்கையில் கிடக்கலாம். ஆனால், அவர் என்னை
தொட்டு தாலி கட்டியவர். இந்தக் குடும்பத்துக்காக உழைத்தவர்.

”இரண்டு பிள்ளைகளை பெத்து, அவர்கள் முன்னேற்றத்திற்காக
பாடுபட்டவர். என்னோடு, 40 ஆண்டுகளாக குடும்பம்
நடத்தியவர். அவருக்கு என்னை, அவர் மனைவின்னு
அடையாளம் தெரியலைன்னாலும், அவர் என் கணவர்ங்கிறது
எனக்கு தெரியும்பா.

உயிரோடு கலந்த அந்த உன்னதமான உறவை, உணர்ச்சியற்ற
ஜடம்ன்னு என்னால நினைக்க முடியாது.”

கண்களில் வரத்துடிக்கும் கண்ணீரை அடக்கி, விழி உயர்த்தி
இருவரையும் பார்த்து, ”அவர் உங்களைப் பெற்றவர். வளர்த்து
ஆளாக்கியவர். உங்களுடைய அப்பாங்கிறதை தாண்டி, உங்க
கண்ணுக்கு அவர் உணர்வில்லாத மனுஷனா தெரியலாம்.
என்னால் அப்படி மனதால் கூட நினைக்க முடியாது.

”என் உடம்பில் உயிர் இருக்கும் வரை, அவருக்காக பணிவிடை
செய்வேன். இதில் எனக்கு எந்த சங்கடமும், கஷ்டமும் இல்லை.
அவர் காலத்திற்குப் பிறகு, நீங்க என்ன சொல்றீங்களோ,
அதுபடி நடந்துக்கிறேன்.

”தயவுசெய்து, இனி இதுபற்றி எதுவும் பேச வேண்டாம்.
நான் போய் அப்பாவுக்கு காபி கலந்து தரணும். நீங்க இரவு
தங்கறதா இருந்தா டிபன் செய்ய சொல்றேன்,” என்றபடியே
அவர்களை நிமிர்ந்து கூட பார்க்காமல் சமையலறையின் உள்ளே
போக, இருவரும் தலைகுனிந்து அமர்ந்திருந்தனர்.

–பரிமளா ராஜேந்திரன்
நன்றி: வாரமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 03, 2022 8:59 pm

மனித மன வக்கிரங்கள். சோகம் சோகம்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக