ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நினைவுப் பாதை’

Go down

சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நினைவுப் பாதை’ Empty சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நினைவுப் பாதை’

Post by Dr.S.Soundarapandian Sat Jul 16, 2022 7:50 pm

சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நினைவுப் பாதை’

1 . மனைவி இறந்தபின் ஒரு கணவனின் நினைவுப் பாதைதான் கதைக் கரு.

2. வள்ளியம்மை ஆச்சி தான் இறந்த மனைவி; பறிகொடுத்த கணவன் – மேலச்செவல் என்ற ஊரைச் சேர்ந்த வைரவன் பிள்ளை.; ஐம்பது ஆண்டுகள் வாழ்க்கை நடத்தியவர் ஆச்சியோடு.

3 . வள்ளியம்மை ஆச்சி எப்படி இறந்தாள்?
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நினைவுப் பாதை’ WzHg3gF

ஆக அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை , வீடுவாசல் கட்டி வாழ்பவர்கள் , வயதானவுடன் கால்வழுக்கிப் படுப்பது, பிறகு எழுவதே இல்லை என்பதுதான் நிலை! அண்மையில் கூட என் நண்பரும் ஆங்கிலப் பேராசிரியருமான எம்.எஸ். நாகராஜன் அவர்கள் (80க்கு மேல் வயது) குளியலறையில் கால் வழுக்கி, மூன்று மாதங்கள் படுக்கையிலேயே இருந்தார் பாவம்! ஆனால் குணமாகிவிட்டார். ஆனாலும் மக்கள் அந்த வழுவழுக் கற்களையே தளத்தில் பதிக்கின்றனர்!

4 . வயதில் மூத்தவர் இறந்தால், அந்த வீட்டிலுள்ளோர் அழுவது பொதுவாக நமக்குத் தெரியும்! ஆனால், அவர்களில் பெண்கள் அழுகை, அவர் வாய்ச்சொற்கள் இவற்றைக் கவனித்திருக்க மாட்டோம்! அந்த நுட்பம்!:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நினைவுப் பாதை’ AKiqhR1

பார்த்தீர்களா?
அழுகை இருக்குமாம் , ஆனால் வருத்தம் இருக்காதாம்! சொல்லியழும்போது , சொற்கள் முத்துமுத்தாக இருக்குமாம்!இடையே கண்ணீர்த் துளிகள் காணப்படுமாம்! ஆனால். அவை தத்தம் சொந்த இழப்புகளை நினைத்து வருவதால்!
இதுதான் சமுதாய நுட்பம் என்பது! தமிழ் தெரிந்த எல்லோரும் எழுத்தாளராகிவிட முடியாது ! சமுதாய நுணுக்கம் அறிந்திருக்கவேண்டும்!
இழவு வீட்டில் அழும் பெண், ஒப்பாரி வைக்கையில், வீட்டின் பாகற் கொடியைப் பார்த்துவிட்டாள்! அப்போது எப்படிப் பாடினாள்? ‘பந்தலிலே பாவக்காய்! பந்தலிலே பாவக்காய்!’ என்று தன்னுடன் ஒப்புவைத்தவளுக்குச் சாடை கூறினாள்! கேட்டவள், ‘போகும்போது பாத்துக்குவோம்! போகும்போது பாத்துக்குவோம்!’என்று பதிலுக்குப் பாடினாளாம்! இதைக் கேட்ட வீட்டுக்காரி , அவள் இலேசுப்பட்டவாளா? அவள் , ‘ஐயையோ! ஐயையோ! நன் விதைக்கில்ல விட்டிருக்கேன்! விதைக்கில்ல விட்டிருக்கேன்!’ என்று இசை பாடினாளாம்! நான் பள்ளிக் காலத்தில் கேட்டுள்ளேன்! புதுமைப்பித்தனின் மேலை வரிகள் சரிதான்!

5. ஒவ்வொரு சிறுகதை ஆசிரியனுள்ளும் ஒரு கவிஞன் ஒளிந்திருப்பான்! ’இன்னும் விடியாத’ அந்த நேரத்தில் வானத்து வெள்ளி எப்படி இருந்ததாம்? :
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நினைவுப் பாதை’ Chw2qRO

6 . ஒரு செய்தியைச் சிறுகதை ஆசிரியர் எப்படிச் சொல்லவேண்டும் என்பதற்குப் புதுமைப்பித்தனின் இந்த இடத்தைக் கூறலாம்!:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நினைவுப் பாதை’ ES6auBE

‘வயரவன் பிள்ளை வெளியில் உட்கார்ந்திருந்தார் ’ – இதுதானே செய்தி? ஆனால் இப்படி எழுதினால் ‘கதைச்சுவை’ கிடைக்காது!அதனால்தான் மேற்கண்டவாறு வரையலானார் புதுமைப்பித்தன்! (குறடு – வீட்டின் வெளிப்புறத் தின்ணை; குறட்டைத் தாண்டி உள்ளே வந்தால் இருக்கும் வீட்டுத் திண்ணை அல்ல)

7 . மனிதனின் மன ஓட்டத்தின் பின்னே ஆசிரியர் விரட்டிச் சென்று , அது நிற்குமிடத்தில் தானும் நின்று , நம்மை அழைத்துக் காட்டும் வித்தை புதுமைப்பித்தனுடையது! மனைவி இறந்த மறுநாள் காலையில், கணவன் வயிரவன் பிள்ளையின் மன ஓட்டம்!:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நினைவுப் பாதை’ WxJii5f

8 . வயிரவன் பிள்ளை - ஐம்பதாண்டுக் காலம் மனைவியோடு வாழ்ந்த வயிரவன் பிள்ளை - இப்போது அவள் இறந்துவிட்ட பிறகு என்னென்ன நினைப்பார்? என்னென்ன அவரின் முன் தோன்றும்?:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நினைவுப் பாதை’ F5ctyhF

படித்ததும் ஒவ்வொருவரும் ஒரு வயிரவன் பிள்ளையாக மாறுகிறோம்!
நெஞ்சை உருக்கும் நடை எப்படி இருக்கும் என்பதற்கு இந்த இடம் சான்று!

9 . வயிரவன் பிள்ளை மனது அல்லாடுகையில் , வள்ளியம்மை ஆச்சியின் நகை மீது கண்ணாக இருக்கிறது உறவுப் பெண்களிடம்!
மனைவியைப் பறிகொடுத்த கணவனின் நினைவுப் பாதை வேறு! அம் மனைவியின் நகைகள் மீது வீட்டுப் பெண்களின் நினைவுப் பாதை வேறு! ஒருத்தி சொல்கிறாள் பாருங்கள்!:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நினைவுப் பாதை’ WmrYGMI

10 . பொதுவாகவே, வயதானவர்களுக்குச் சிறார்கள் மீது ஒரு பிரியம் ஏற்படும்! மனைவியை இழந்த துக்கத்தில் வயிரவன்பிள்ளை இருந்தாலும் , தன் பக்கத்தில் வந்த சிறுவனை அணைத்துக் கொள்கிறார் ! :
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நினைவுப் பாதை’ CjdmknY

11 . ஆச்சி இறந்ததை நினைவிற்கொண்டு, ஒருவர் அச் சிறுவனிடம் ‘எலே எங்கடா உங்க ஆச்சி?’ எனக் கேட்கிறார்; அதற்கு அச் சிறுவன் சொன்னது:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நினைவுப் பாதை’ OfJbuPO

‘அர்த்தமில்லமல்’ என்பதைக் கவனியுங்கள்! சிறுவனுக்கு மனித இறப்பு பற்றித் தெரியாது! அவனது நினைவுப் பாதை வேறு!

12 . இழவுக்கு வந்தவர்கள் அடுத்தடுத்த சடங்குகளிலேயே கவனமாக உள்ளனர்! அவர்களது நினைவுப் பாதை அது!:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நினைவுப் பாதை’ MSt021m

13. மொட்டைபோட்ட தலையுடன் சுடுகாட்டிற்குச் செல்லும் தன் மகன் , எந்தக் கவலையும் இல்லாமல் , செல்கிறான்; ஆனால், மனைவியை இழந்த வயிரவன்பிள்ளையின் நடை தள்ளாடுகிறது!:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நினைவுப் பாதை’ SqZN0La

14. வயிரவன்பிள்ளையின் நினைவுப் பாதையில், இறந்த தன் மனைவி, அன்று மணக்கோலத்தில் வந்த காட்சி இந்த நேரத்தில் கண்முன் நின்றது! :
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நினைவுப் பாதை’ UCl54fO

சரியான இடத்தில் சரியான சித்திரத்தைக் காட்டவேண்டியது சிறுகதை உத்தி! இதைத்தான் கையாண்டுள்ளார் புதுமைப்பித்தன்!

15 . சுடுகாட்டில், இப்போது சடங்குகள் தொடங்கப் போகின்றன! ஆனால், இப்போது நடக்க இருப்பவை பற்றி நினைத்துப் பார்க்க வயிரவன்பிள்ளையால் இயலவில்லை! அவரது நினைவுப் பாதையின் உச்சம் (climax) இதுதான்! துக்கத்தின் உச்சம்!
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நினைவுப் பாதை’ FpVji3Z

16 . புதுமைப்பித்தனுக்கு , ‘வயிரவன்பிள்ளையின் துயர நெஞ்சைச் சரிவரச் சொன்னோமா? ’ என்ற கீறல் ஒன்று அவரில் விழுந்தது போலும்! அதனால், மேலும் தீட்டுகிறார்!:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நினைவுப் பாதை’ WWKaYXU

பேரனுக்கு அங்கு நடப்பது எதுவும் புரியவில்லை! அதனால் அவன் மற்றவர்களைவிட மிகப் பின்தங்கி, ஒரு வேடிக்கையாக வந்துள்ளான்!

இது, வயிரவன்பிள்ளையின் கனத்த நினைவுப் பாதையை அடிக்கோடிட்டுக் காட்டும் சிறுகதை உத்தி!
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9813
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum