புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Today at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடனா? சொத்தா? (சிறு கதை )
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கடனா? சொத்தா?
"அடியேய் தனலட்சுமி, அமெரிக்காவிலிருந்து நம்ம பையன் ரகு கூரியரில் லெட்டர் அனுப்பியிருக்கிறான்....வாவா...." அவசரமாக கணவர் கத்தினார்.நான் என்ன வாசுகியா.... வள்ளுவர் கூப்பிட்டதும் கிணற்று வாளியை அப்படியே அந்தரத்தில் நிறுத்திவிட்டு ஓடுவதுபோல்....கேஸ் அடுப்பில் இரும்புக் கரண்டியில் ரசத்துக்குத் தாளிக்க நெய் ஊற்றி வைத்திருக்கிறேன்....அப்படியே ஓடினால் என்ன ஆகும்....நெய் பத்திண்டு....அய்யய்யோ வேண்டாண்டா சாமி....வயசானதுகள் ரெண்டும் இப்படியா கவனமில்லாமல் இருப்பான்னு ஏச்சும் பேச்சும் கேட்டுக்கணும்....இருக்கட்டுமே கொஞ்சநாழி....
நெய் காய்ந்ததும் கடுகைப் போட்டேன். பட பட வென்று வெடித்து முடித்ததும் காத்திருந்து.... சிலருக்கு என்ன அவசரமோ.... கடுகை வெடிக்க விடறதே இல்லை அப்படி பண்ணினா சமையலே ருசிக்காது.... ஹும் இத்தனை வருஷமா சமைச்சும் நமக்கு அந்தப்பக்குவம் மாறாம பண்ணனும் என்றுதான் தோன்றது....தாளித்த கடுகில் பெருங்காயம் போட்டு கிள்ளி வைத்த கருவேப்பிலையையும் போட்டு குலுக்கி ரசத்தில் கொட்டி மூடினேன் அப்பத்தானே ரசம் வாசனையாய் இருக்கும்....கூடத்திற்கு வந்தேன்.
"ரகு இப்பல்லாம் போனே பண்றதில்ல....ஸ்கைப்பிலேயும் வரதில்ல....அப்படியென்ன பிசியோ....இப்ப ஏன் லெட்டர் போடணும்....பிரிச்சு படியுங்களேன்...." என்றேன் கையில் கவருடன் உட்கார்ந்திருந்த கணவரிடம்.
நான் சொன்னதும் பிரித்து படிக்க படிக்க அவர் முகம் கோனிக் கோணி எப்படியெல்லாமோ மாறி....அழுகையை அடக்குகிறமாதிரி.... ஏன்....ஏன்....என் பிள்ளைக்கு என்ன ஏதாவது சிக்கலா....மனம் பதை பதைத்தது.
"ஏங்க, என்னாச்சு," அவரைப் பிடித்து உலுக்கினேன்.
"இந்தா"....மேலே பேசமுடியாமல் கடிதத்தை நீட்டியவரின் கண்களில் தளும்பியது கண்ணீர். இப்படி இவர் மனம் உடைந்து நான் பார்த்ததே இல்லையே....அப்படி என்ன தான் எழுதி இருப்பான்....அவசரமாக வாங்கி படிக்க ஆரம்பித்தேன்.
"அன்புள்ள பெற்றோருக்கு....(அம்மா அப்பான்னு கூட எழுதலியே) ரகு எழுதுவது....வர வர உங்களுக்கு போன்செய்யவோ ஸ்கைப்பில் கூப்பிடவும் பயமா இருக்கு....எங்கள் தொடர்பு கிடைத்தாலே போதும்....லீவுக்கு எங்களை வரச்சொல்லி வரச்சொல்லி தொந்தரவு செய்கிறீர்கள் அதனால் தான் இத்தனை நாளா வாளா இருந்தேன். எங்களால் இனிமேல் அங்கெல்லாம் வர முடியாது. குழந்தைகள் அஜய், அஜித் இருவருக்கும் இந்தியாவுக்கு வர இஷ்டமில்லை. மனைவி கிரிஜாவோட அம்மா அப்பாவும் க்ரீன் கார்டு வாங்கிக்கொடுத்து விட்டதால் இங்கேயே இருக்கிறார்கள் அதனால் அவளுக்கும் பெருசா அங்கே ஒன்றும் இல்லை....எனக்கும் வேலை சரியாயிருக்கு. நாங்கள் இங்கே தனியா இருக்கிறோமே....இரண்டு வருஷத்துக்கொரு முறையாவது வந்து பார்க்க வேண்டாமா....என்றெல்லாம் நீட்டி முழக்காதீர்கள். நான் முடிவுசெய்துவிட்டேன் என்னுடைய வீட்டை,
அதான் நீங்கள் இருக்கிறீர்களே அதைத் தெரிந்தவர் மூலம் விற்றுவிட்டேன்....
தொடரும்.....
"அடியேய் தனலட்சுமி, அமெரிக்காவிலிருந்து நம்ம பையன் ரகு கூரியரில் லெட்டர் அனுப்பியிருக்கிறான்....வாவா...." அவசரமாக கணவர் கத்தினார்.நான் என்ன வாசுகியா.... வள்ளுவர் கூப்பிட்டதும் கிணற்று வாளியை அப்படியே அந்தரத்தில் நிறுத்திவிட்டு ஓடுவதுபோல்....கேஸ் அடுப்பில் இரும்புக் கரண்டியில் ரசத்துக்குத் தாளிக்க நெய் ஊற்றி வைத்திருக்கிறேன்....அப்படியே ஓடினால் என்ன ஆகும்....நெய் பத்திண்டு....அய்யய்யோ வேண்டாண்டா சாமி....வயசானதுகள் ரெண்டும் இப்படியா கவனமில்லாமல் இருப்பான்னு ஏச்சும் பேச்சும் கேட்டுக்கணும்....இருக்கட்டுமே கொஞ்சநாழி....
நெய் காய்ந்ததும் கடுகைப் போட்டேன். பட பட வென்று வெடித்து முடித்ததும் காத்திருந்து.... சிலருக்கு என்ன அவசரமோ.... கடுகை வெடிக்க விடறதே இல்லை அப்படி பண்ணினா சமையலே ருசிக்காது.... ஹும் இத்தனை வருஷமா சமைச்சும் நமக்கு அந்தப்பக்குவம் மாறாம பண்ணனும் என்றுதான் தோன்றது....தாளித்த கடுகில் பெருங்காயம் போட்டு கிள்ளி வைத்த கருவேப்பிலையையும் போட்டு குலுக்கி ரசத்தில் கொட்டி மூடினேன் அப்பத்தானே ரசம் வாசனையாய் இருக்கும்....கூடத்திற்கு வந்தேன்.
"ரகு இப்பல்லாம் போனே பண்றதில்ல....ஸ்கைப்பிலேயும் வரதில்ல....அப்படியென்ன பிசியோ....இப்ப ஏன் லெட்டர் போடணும்....பிரிச்சு படியுங்களேன்...." என்றேன் கையில் கவருடன் உட்கார்ந்திருந்த கணவரிடம்.
நான் சொன்னதும் பிரித்து படிக்க படிக்க அவர் முகம் கோனிக் கோணி எப்படியெல்லாமோ மாறி....அழுகையை அடக்குகிறமாதிரி.... ஏன்....ஏன்....என் பிள்ளைக்கு என்ன ஏதாவது சிக்கலா....மனம் பதை பதைத்தது.
"ஏங்க, என்னாச்சு," அவரைப் பிடித்து உலுக்கினேன்.
"இந்தா"....மேலே பேசமுடியாமல் கடிதத்தை நீட்டியவரின் கண்களில் தளும்பியது கண்ணீர். இப்படி இவர் மனம் உடைந்து நான் பார்த்ததே இல்லையே....அப்படி என்ன தான் எழுதி இருப்பான்....அவசரமாக வாங்கி படிக்க ஆரம்பித்தேன்.
"அன்புள்ள பெற்றோருக்கு....(அம்மா அப்பான்னு கூட எழுதலியே) ரகு எழுதுவது....வர வர உங்களுக்கு போன்செய்யவோ ஸ்கைப்பில் கூப்பிடவும் பயமா இருக்கு....எங்கள் தொடர்பு கிடைத்தாலே போதும்....லீவுக்கு எங்களை வரச்சொல்லி வரச்சொல்லி தொந்தரவு செய்கிறீர்கள் அதனால் தான் இத்தனை நாளா வாளா இருந்தேன். எங்களால் இனிமேல் அங்கெல்லாம் வர முடியாது. குழந்தைகள் அஜய், அஜித் இருவருக்கும் இந்தியாவுக்கு வர இஷ்டமில்லை. மனைவி கிரிஜாவோட அம்மா அப்பாவும் க்ரீன் கார்டு வாங்கிக்கொடுத்து விட்டதால் இங்கேயே இருக்கிறார்கள் அதனால் அவளுக்கும் பெருசா அங்கே ஒன்றும் இல்லை....எனக்கும் வேலை சரியாயிருக்கு. நாங்கள் இங்கே தனியா இருக்கிறோமே....இரண்டு வருஷத்துக்கொரு முறையாவது வந்து பார்க்க வேண்டாமா....என்றெல்லாம் நீட்டி முழக்காதீர்கள். நான் முடிவுசெய்துவிட்டேன் என்னுடைய வீட்டை,
அதான் நீங்கள் இருக்கிறீர்களே அதைத் தெரிந்தவர் மூலம் விற்றுவிட்டேன்....
தொடரும்.....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உடனே பதறாதீர்கள்....என்னை நீங்கள் பெற்று வளர்த்திருக்கிறீர்கள். அந்த 'பெற்றகடனுக்கு' நான் உங்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற கடமையை நான் நிறைவேற்றுவேன். நான் ஒரு முடிவு செய்திருக்கிறேன். நீங்கள் இருவரும் போய் தங்குவதற்கு வசதியாக நல்லதொரு உயர்ந்த சீனியர் சிட்டிசன் இல்லத்தில் பேசி முடித்திருக்கிறேன். மாதம் ஐம்பதாயிரம் ரூபாய் அவர்களுக்கு கொடுத்துவிடுவேன். பிறகென்ன உங்களுக்கு....ராஜ மரியாதை கிடைக்கும்.... தங்க வசதியான இடம் நல்ல சாப்பாடு..தேவையானால் மருத்துவம்....இத்யாதி என்று சகலமும்.... தனியாக இருக்கிறோம் என்ற குறையே உங்களுக்கு இருக்காது. அடுத்த வாரம் வீட்டை வாங்கியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அதனால் நாளைக்கே கூட அங்கு போய் சேர்ந்துவிடலாம். வீட்டிலிருந்து உங்களுக்கு தேவையான சாமான்களை எடுத்து கொண்டு போகலாம்.
இப்படிக்கு,
ரகு
பின்குறிப்பு:- இத்துடன் ஐம்பதாயிரம் ரூபாய்க்கான காசோலையும் இல்லத்தின் விலாசமும் இணைத்திருக்கிறேன்.
படித்து முடித்து நிமிர்ந்தேன்.... எங்கள் அருமைபிள்ளையா இப்படி ஊசி குத்தற மாதிரி வெடுக் வெடுக்கென்று எழுதியிருக்கிறான்.
ஆண் பிள்ளை.... அவராலேயே அடக்க முடியவில்லை....என்னால் எப்படி....குலுங்கி குலுங்கி நான் அழுவதையே பார்த்துக்கொண்டு ப்ரஹ்மமாய் உட்கார்ந்திருந்தார். நேரம் ஆமை வேகத்தில் நகர்ந்தது. எங்களது சாப்பாடு நேரம் தாண்டினது கூட தெரியவில்லை. நான்தான் கொஞ்சம் சுதாரித்துக் கொண்டேன் சொல்வார்களே....சுகமோ துக்கமோ.... பெண்கள் தான் கற்பூர புத்தி காரர்கள் என்று.... சூழ்நிலைக்கு ஏற்றபடி சமாளிப்பதில்.....
"ஏங்க, ஏன் இப்படி இடி விழுந்ததுபோல் உட்கார்ந்து கொண்டிருக்கணும்.... எழுந்து வாருங்கள்.... சாப்பிடலாம்" கணவர் தோள்பற்றி உலுக்கினேன்.
"என்னமோ நான்தான் கதிகலங்கிப் போன மாதிரி.... நீ மட்டும் இத்தனை நேரம் எப்படி இருந்தே.... அது சரி நம்ம ரகு ஏன் இப்படியெல்லாம் எழுதியிருக்கான்....நாம அவனுக்கு அப்பா அம்மாங்கற பாசமே இல்லையா.... கடன் என்கிறான்....கடமை என்கிறான்.... புதுசு புதுசா எப்படி இப்படியெல்லாம் எழுத முடியறது அவனால...." தாபமும் ஏக்கமும் மிதமிஞ்சின குரலில் கேட்டார்.
தொடரும்....
இப்படிக்கு,
ரகு
பின்குறிப்பு:- இத்துடன் ஐம்பதாயிரம் ரூபாய்க்கான காசோலையும் இல்லத்தின் விலாசமும் இணைத்திருக்கிறேன்.
படித்து முடித்து நிமிர்ந்தேன்.... எங்கள் அருமைபிள்ளையா இப்படி ஊசி குத்தற மாதிரி வெடுக் வெடுக்கென்று எழுதியிருக்கிறான்.
ஆண் பிள்ளை.... அவராலேயே அடக்க முடியவில்லை....என்னால் எப்படி....குலுங்கி குலுங்கி நான் அழுவதையே பார்த்துக்கொண்டு ப்ரஹ்மமாய் உட்கார்ந்திருந்தார். நேரம் ஆமை வேகத்தில் நகர்ந்தது. எங்களது சாப்பாடு நேரம் தாண்டினது கூட தெரியவில்லை. நான்தான் கொஞ்சம் சுதாரித்துக் கொண்டேன் சொல்வார்களே....சுகமோ துக்கமோ.... பெண்கள் தான் கற்பூர புத்தி காரர்கள் என்று.... சூழ்நிலைக்கு ஏற்றபடி சமாளிப்பதில்.....
"ஏங்க, ஏன் இப்படி இடி விழுந்ததுபோல் உட்கார்ந்து கொண்டிருக்கணும்.... எழுந்து வாருங்கள்.... சாப்பிடலாம்" கணவர் தோள்பற்றி உலுக்கினேன்.
"என்னமோ நான்தான் கதிகலங்கிப் போன மாதிரி.... நீ மட்டும் இத்தனை நேரம் எப்படி இருந்தே.... அது சரி நம்ம ரகு ஏன் இப்படியெல்லாம் எழுதியிருக்கான்....நாம அவனுக்கு அப்பா அம்மாங்கற பாசமே இல்லையா.... கடன் என்கிறான்....கடமை என்கிறான்.... புதுசு புதுசா எப்படி இப்படியெல்லாம் எழுத முடியறது அவனால...." தாபமும் ஏக்கமும் மிதமிஞ்சின குரலில் கேட்டார்.
தொடரும்....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விடுங்க....அவன் பேனாவில் மசி ஊற்றி எழுதவில்லை. அமிலத்தை கொட்டி எழுதியிருக்கிறான் என்று தோன்றுகிறது அதான் இப்படியெல்லாம் வார்த்தைகள்...நம் வாழ்க்கையில் இப்பொழுது ஒரு திருப்பம்.... அதை நாம்தான் கடக்கணும்."
"அவன் சொல்றபடி அந்த இல்லத்திற்குப் போய்விடலாம் என்கிறாயா?" பரிதாபமாக இருந்தது அவர் கேட்டது....
"வேண்டாங்க....நம்மைத்தான் அவன் 'கடன்' என்று நினைக்கிறான் நாம் ஏன் மேலும் மேலும் அவனுக்குப் பாரமா இருந்து அவனைக் கடனாளியாக்க வேண்டும்....நம் குறைவாழ்க்கைக்கு வழியை நாமே தேடிக்கலாம்.... கவலை படாதீர்கள்"
"எப்படி தனம் இவ்வளவு தைரியமா தெம்பாப் பேசறே....நம்ப ரகுவை எவ்வளவு ஆசையா ஒசத்தியா வளர்த்தோம். அவன் இப்ப எழுதி இருக்கிறதைப் பார்த்து உனக்கு ஏதாவது ஆயிடுமோன்னு நான் உள்ளுக்குள் நடுங்கிப் போய்ட்டேன்....என்னையும் விட நீ அவன் ஆசைப் பட்டதெல்லாம் நடத்திக் கொடுக்கணும்னு எவ்வளவு அதிகமாக உழைச்சு, அவன் விருப்பப்படி டாக்டருக்கு படிக்கவெச்சு, மேல்நாட்டுக்கு அனுப்பிவெச்சு....அதெல்லாம் எப்படி நம்ப பிள்ளை மறந்து போனான்...."
"அது அப்படித்தாங்க....என்னிக்கும் வேர் தாங்க விழுதைத்தாங்கும்.... விழுது வேர் கிட்ட வருமா....என்ன....நாம் அவனை அவ்வளவு உயர்வாக பொத்தி பொத்தி வளர்த்ததை.... நம் பாசத்தை.... கடன் அது இதுன்னு கொச்சைப் படுத்திட்டானே....அதுதான் கொஞ்சம் மனசை இம்சிக்கிறது.... சரி இப்போ எனக்கு ஒரு யோஜனை தோணறது.... நீங்கள் என்ன சொல்கிறீர்கள்...." என்று நான் நினைத்ததை, என் மனசுக்கு சரின்னு பட்டதை, அதுதான் எங்களுக்கு ஏற்ற மீதிவாழ்க்கைக்கு வழி என்று தோன்றியதை சொன்னேன்....
"தனம்மா....நம்மால முடியுமா....இந்த வயசுக் காலத்திலே...." அவருடய தயக்கத்தையும் பயத்தையும் போக்கித் தெளியவைப்பதற்காக நான் அவருக்கு நிறைய பேசி கவுன்சிலிங் செய்து சம்மதிக்க வைத்தேன். அடுத்த இரண்டு நாட்களும் வெளியே போக வரன்னு எங்களுக்கு வேலை சரியாக இருந்தது.நாங்களும்தான் பிஸி....
நாங்கள் திட்டம் போட்டபடி எல்லாம் எங்களுக்கு சாதகமாகவே அமைந்தது.... "ஆனாலும் உனக்கு நெஞ்சுதைர்யம் ஜாஸ்திதான் தனம்...." என்று என்னவர் மனதார பாராட்டினார்....கூடவே நம்ம ரகுவுக்குச் சொல்ல வேண்டாமா....போன் பண்ணிடலாமா என்றவரை அடக்கினேன்" அவனை போலவே நாமும் கூரியரில் பதில் அனுப்பிவிடலாம் என்று எழுத தொடங்கினேன்.
தொடரும்....
"அவன் சொல்றபடி அந்த இல்லத்திற்குப் போய்விடலாம் என்கிறாயா?" பரிதாபமாக இருந்தது அவர் கேட்டது....
"வேண்டாங்க....நம்மைத்தான் அவன் 'கடன்' என்று நினைக்கிறான் நாம் ஏன் மேலும் மேலும் அவனுக்குப் பாரமா இருந்து அவனைக் கடனாளியாக்க வேண்டும்....நம் குறைவாழ்க்கைக்கு வழியை நாமே தேடிக்கலாம்.... கவலை படாதீர்கள்"
"எப்படி தனம் இவ்வளவு தைரியமா தெம்பாப் பேசறே....நம்ப ரகுவை எவ்வளவு ஆசையா ஒசத்தியா வளர்த்தோம். அவன் இப்ப எழுதி இருக்கிறதைப் பார்த்து உனக்கு ஏதாவது ஆயிடுமோன்னு நான் உள்ளுக்குள் நடுங்கிப் போய்ட்டேன்....என்னையும் விட நீ அவன் ஆசைப் பட்டதெல்லாம் நடத்திக் கொடுக்கணும்னு எவ்வளவு அதிகமாக உழைச்சு, அவன் விருப்பப்படி டாக்டருக்கு படிக்கவெச்சு, மேல்நாட்டுக்கு அனுப்பிவெச்சு....அதெல்லாம் எப்படி நம்ப பிள்ளை மறந்து போனான்...."
"அது அப்படித்தாங்க....என்னிக்கும் வேர் தாங்க விழுதைத்தாங்கும்.... விழுது வேர் கிட்ட வருமா....என்ன....நாம் அவனை அவ்வளவு உயர்வாக பொத்தி பொத்தி வளர்த்ததை.... நம் பாசத்தை.... கடன் அது இதுன்னு கொச்சைப் படுத்திட்டானே....அதுதான் கொஞ்சம் மனசை இம்சிக்கிறது.... சரி இப்போ எனக்கு ஒரு யோஜனை தோணறது.... நீங்கள் என்ன சொல்கிறீர்கள்...." என்று நான் நினைத்ததை, என் மனசுக்கு சரின்னு பட்டதை, அதுதான் எங்களுக்கு ஏற்ற மீதிவாழ்க்கைக்கு வழி என்று தோன்றியதை சொன்னேன்....
"தனம்மா....நம்மால முடியுமா....இந்த வயசுக் காலத்திலே...." அவருடய தயக்கத்தையும் பயத்தையும் போக்கித் தெளியவைப்பதற்காக நான் அவருக்கு நிறைய பேசி கவுன்சிலிங் செய்து சம்மதிக்க வைத்தேன். அடுத்த இரண்டு நாட்களும் வெளியே போக வரன்னு எங்களுக்கு வேலை சரியாக இருந்தது.நாங்களும்தான் பிஸி....
நாங்கள் திட்டம் போட்டபடி எல்லாம் எங்களுக்கு சாதகமாகவே அமைந்தது.... "ஆனாலும் உனக்கு நெஞ்சுதைர்யம் ஜாஸ்திதான் தனம்...." என்று என்னவர் மனதார பாராட்டினார்....கூடவே நம்ம ரகுவுக்குச் சொல்ல வேண்டாமா....போன் பண்ணிடலாமா என்றவரை அடக்கினேன்" அவனை போலவே நாமும் கூரியரில் பதில் அனுப்பிவிடலாம் என்று எழுத தொடங்கினேன்.
தொடரும்....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எங்கள் அன்பு மகனுக்கு, உன்னை பெற்ற, நீ விரும்பாத, பெற்றவர்கள் எழுதும் கடிதம். ஆமாம் நீ எங்களை எப்படி நினைத்தாலும்....எங்களுக்கு நீ அன்பு மகன் தான் .... எங்கள் பாசம் பூராவும் உன் மேல் தான் குவிந்துகிடக்கிறது. அதை இந்த ஜென்மத்தில் மாற்ற முடியாது....நீ பட்ட 'கடன்' நாங்கள் என்று எழுதியிருக்கிறாய்....ஆனால் உன்னை நாங்கள் பெற்ற 'சொத்து' என்றுதான் நினைத்து வந்திருக்கோம். அந்த சொத்தை விருத்தியாக்கி நல்ல விதமாக காப்பாத்தணும் என்று நாங்கள் உன்னை வளர்க்கப் பட்ட பாட்டை கொஞ்சம் ரீவைண்டு பண்ணிக் காட்டணும் என்று எனக்குத் தோன்றுகிறது. உன் அப்பாவிற்கு ஒன்றும் வொய்ட்காலர் ஜாப் கிடையாது. காலையில் கையில் ஜாரிணிக் கரண்டியுடன் சமையல் வேலைக்கு கிளம்பினால் செத்துச் சுண்ணாம்பாகி இரவு தான் வீடு வந்து சேருவார். படுத்தால் போதும் என்ற அலுப்பிலும் உன்னைத்தூக்கி கொஞ்சி சிறிது நேரமாவது விளையாடுவது தான் அவருடய அன்றைய நாளின் இனிமையான நேரம். நீ வளர வளர உன் படிப்புச் செலவும் அதிகமாக தொடங்க, நானும் கொஞ்சம் வீட்டிலேயே வடாம் அப்பளம் என்று உழைப்பைக் கையில் எடுத்தேன். அதுவும் நீ டாக்டருக்கு படிக்க வேண்டும் என்று தீவிரமாக ஆசை பட்ட போது உன்னுடைய படிப்புத் தகுதிக்கு மெடிக்கல் சீட்டும் கிடைத்ததும் , உன் ஆசையை அழிக்க எங்களுக்கு மனம் வரவில்லை.... ஆனால் எங்கள் நிலை....எங்களின் ஒரே சந்தோஷம், சொத்து நீ தானே....எங்கள் சக்திக்கு மீறிய உன் விருப்பத்தை நிறைவேற்றியே ஆகணும் என்று எங்களுக்கு ஒரே உத்வேகம்....அதனால் நானும் உன் அப்பாவுடன் கூட போய் வேலை செய்து மாலை திரும்பி வந்து முறுக்கு, கல்யாண பக்ஷணங்கள் என்று எந்நேரமும் அடுப்படியிலேயே வாசம் செய்யத் தொடங்கினேன்.
எங்கள் குழந்தை டாக்டருக்கு படிக்கிறான். நாளைக்கு பெரிய டாக்டராக வருவான்....என்ற இந்த சந்தோஷம் தான் எங்களுக்கு பலமும் தெம்பும். எல்லாம் நன்றாகவே நடந்தது. நீ அமெரிக்கா போவதற்கும் எங்கள் உழைப்பு தான் கை கொடுத்தது. நீ ஆசை பட்டது எல்லாவற்றையும் நாங்களும் ஆசை பட்டு நிறைவேற்றியதில், உன் கல்யாண விஷயம் தான் சரியாக வரவில்லை. நம் தகுதிக்கு ஏற்ற இடம் இல்லை ,பெரிய இடம் என்று தடுத்து உனக்கு டென்ஷன் கொடுக்க கூடாது என்று தான் கல்யாணத்திற்குச் சம்மதித்தோம். ஆனால் அதன் பிறகு தான் நீ படி படியாக மாறிப் போனாய்....ஏழைப் பெற்றவர்களுக்கு தங்கள் குழந்தைகளை நல்ல நிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்ற ஆசை இருக்க கூடாதா....இப்பொழுதெல்லாம் துணி துவைப்பவரின் பெண், மீனவருடைய பெண், ஆட்டோ டிரைவரின் பெண் பிள்ளை என்று படிப்பவர்கள் எப்படி வெறியுடன் படித்து முதல் வரிசையில் இடம் பெறுகிறார்கள் தெரியுமா....நம் வாழ்க்கையில் எந்த உயர்வுக்கு போனாலும் ஆரம்ப காலகட்டத்தை மறக்கக்கூடாது.
நீ எங்களுக்காக தேர்ந்தெடுத்திருக்கிற உயர்ந்த இடம் எங்களுக்கு ஒவ்வாதது. அதில் சேர்ந்து, நாங்கள் மேலும் மேலும் உன்னைக் கடனாளியாக்க விரும்பவில்லை. அதனால் நாங்கள் ஒரு முடிவு எடுத்து விட்டோம். நீ சொல்வது போல் எங்கள் வாழ்க்கை இனி முதியோரில்லத்தில் தான். ஆனால் நாங்கள் ஒரு சாதாரண இல்லத்திற்கு தான் போகப்போகிறோம். அதுவும் அங்கு போய் சும்மா இருக்கவோ, யாரையாவது எதிர் பார்த்தோ கிடையாது. எங்கள் உடம்பில் இன்னும் தெம்பு இருக்கிறது. உழைத்து உழைத்து உரமேறியது எங்கள் உடம்பு....அதனால் நாங்கள் போகும் இல்லத்தின் சமையல் வேலையை ஏற்றுக் கொண்டிருக்கிறோம். இருக்க இடம் வேளைக்குச் சாப்பாடு இவை போதும் என்று சொல்லி விட்டோம். மேலும் அவர்களிடம் ஒரு வேண்டுகோளும் வைத்திருக்கிறோம்....எங்களின் கடைசி காலத்தில் எங்களைக் கரை ஏற்றி விடணும் என்று.நாளையே நாங்கள் அங்கு செல்லப்போகிறோம். தேவையான சாமான்களை எடுத்துச்செல்லலாம் என்று நீ அனுமதி கொடுத்திருக்கிறாய்....எங்களுக்கு என்ன பெரிய தேவை....எங்களின் உடமைகள் என்ற துணிமணிகள் எல்லாவற்றையும் , வேறு யாரும் உபயோகப்படுத்தமாட்டீர்கள்....அதனால் எடுத்து போகிறோம், சில புத்தகங்கள் , சாமிபடங்கள் அவ்வளவே. தயவு செய்து நீ எங்களை கடன் சுமையாக நினைக்காதே. எங்கள் வழியை நாங்கள் பார்த்து கொள்கிறோம். உன் மனைவி குழந்தைகள் எல்லோருக்கும் எங்கள் மனப்பூர்வமான ஆசிகள்.
இப்படிக்கு,
உன்னைப் பெற்றவர்கள்
பின்குறிப்பு:-இத்துடன் நீ அனுப்பிய காசோலையையும் நீ சொன்ன சீனியர் இல்லத்தின் முகவரியையும் அப்படியே திருப்பி அனுப்பியிருக்கிறேன். பத்திரமாக வைத்துக்கொள்.
அலர்மேலு
இது ஒரு வாட்ஸப் பகிர்வு!
எங்கள் குழந்தை டாக்டருக்கு படிக்கிறான். நாளைக்கு பெரிய டாக்டராக வருவான்....என்ற இந்த சந்தோஷம் தான் எங்களுக்கு பலமும் தெம்பும். எல்லாம் நன்றாகவே நடந்தது. நீ அமெரிக்கா போவதற்கும் எங்கள் உழைப்பு தான் கை கொடுத்தது. நீ ஆசை பட்டது எல்லாவற்றையும் நாங்களும் ஆசை பட்டு நிறைவேற்றியதில், உன் கல்யாண விஷயம் தான் சரியாக வரவில்லை. நம் தகுதிக்கு ஏற்ற இடம் இல்லை ,பெரிய இடம் என்று தடுத்து உனக்கு டென்ஷன் கொடுக்க கூடாது என்று தான் கல்யாணத்திற்குச் சம்மதித்தோம். ஆனால் அதன் பிறகு தான் நீ படி படியாக மாறிப் போனாய்....ஏழைப் பெற்றவர்களுக்கு தங்கள் குழந்தைகளை நல்ல நிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்ற ஆசை இருக்க கூடாதா....இப்பொழுதெல்லாம் துணி துவைப்பவரின் பெண், மீனவருடைய பெண், ஆட்டோ டிரைவரின் பெண் பிள்ளை என்று படிப்பவர்கள் எப்படி வெறியுடன் படித்து முதல் வரிசையில் இடம் பெறுகிறார்கள் தெரியுமா....நம் வாழ்க்கையில் எந்த உயர்வுக்கு போனாலும் ஆரம்ப காலகட்டத்தை மறக்கக்கூடாது.
நீ எங்களுக்காக தேர்ந்தெடுத்திருக்கிற உயர்ந்த இடம் எங்களுக்கு ஒவ்வாதது. அதில் சேர்ந்து, நாங்கள் மேலும் மேலும் உன்னைக் கடனாளியாக்க விரும்பவில்லை. அதனால் நாங்கள் ஒரு முடிவு எடுத்து விட்டோம். நீ சொல்வது போல் எங்கள் வாழ்க்கை இனி முதியோரில்லத்தில் தான். ஆனால் நாங்கள் ஒரு சாதாரண இல்லத்திற்கு தான் போகப்போகிறோம். அதுவும் அங்கு போய் சும்மா இருக்கவோ, யாரையாவது எதிர் பார்த்தோ கிடையாது. எங்கள் உடம்பில் இன்னும் தெம்பு இருக்கிறது. உழைத்து உழைத்து உரமேறியது எங்கள் உடம்பு....அதனால் நாங்கள் போகும் இல்லத்தின் சமையல் வேலையை ஏற்றுக் கொண்டிருக்கிறோம். இருக்க இடம் வேளைக்குச் சாப்பாடு இவை போதும் என்று சொல்லி விட்டோம். மேலும் அவர்களிடம் ஒரு வேண்டுகோளும் வைத்திருக்கிறோம்....எங்களின் கடைசி காலத்தில் எங்களைக் கரை ஏற்றி விடணும் என்று.நாளையே நாங்கள் அங்கு செல்லப்போகிறோம். தேவையான சாமான்களை எடுத்துச்செல்லலாம் என்று நீ அனுமதி கொடுத்திருக்கிறாய்....எங்களுக்கு என்ன பெரிய தேவை....எங்களின் உடமைகள் என்ற துணிமணிகள் எல்லாவற்றையும் , வேறு யாரும் உபயோகப்படுத்தமாட்டீர்கள்....அதனால் எடுத்து போகிறோம், சில புத்தகங்கள் , சாமிபடங்கள் அவ்வளவே. தயவு செய்து நீ எங்களை கடன் சுமையாக நினைக்காதே. எங்கள் வழியை நாங்கள் பார்த்து கொள்கிறோம். உன் மனைவி குழந்தைகள் எல்லோருக்கும் எங்கள் மனப்பூர்வமான ஆசிகள்.
இப்படிக்கு,
உன்னைப் பெற்றவர்கள்
பின்குறிப்பு:-இத்துடன் நீ அனுப்பிய காசோலையையும் நீ சொன்ன சீனியர் இல்லத்தின் முகவரியையும் அப்படியே திருப்பி அனுப்பியிருக்கிறேன். பத்திரமாக வைத்துக்கொள்.
அலர்மேலு
இது ஒரு வாட்ஸப் பகிர்வு!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
படித்ததும் மனம் மிகவும் கனத்து விட்டது........ வர வர இப்படி கேள்விப் படுவது அதிகமாகிக் கொண்டே வருகிறது...... ஏன் இப்படி பசங்க ஒட்டுதலே இல்லாமல் போகிறார்கள்?????????
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|