புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... Poll_c10துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... Poll_m10துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... Poll_c10 
7 Posts - 64%
heezulia
துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... Poll_c10துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... Poll_m10துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... Poll_c10 
2 Posts - 18%
வேல்முருகன் காசி
துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... Poll_c10துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... Poll_m10துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே...


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84145
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 07, 2022 6:45 am

துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... Tamil_News_large_3044709

ரோஷன் பாஞ்சா
சிறந்த ஆடிட்டர்,பாடுவதில் வல்லவர்,இசை கோர்ப்பாளர்,
நடிகை என்று பன்முகம் கொண்டவர்.

இப்போது 48 வயதாகும் இவர் தனது இரண்டாவது வயதில்
இருந்து டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்.

மும்பையில் பிறந்த ரோஷனிற்கு இரண்டு வயதாகும் போது
அவர் நீரிழிவு நோய் பாதிப்பிற்கு உள்ளானது தெரியவந்தது.
ரோஷனின் பெற்றோர் முதலில் கவலைப்பட்டாலும் தங்களது
கவலை மகளை பாதித்துவிடக்கூடாது என்பதற்காக
‛அடுத்து என்ன'? என்பதை நோக்கி சிந்தித்தனர்.

தினமும் இன்சுலின் ஊசி போடுவதைத் தவிர வேறு வழியில்லை
என்ற நிலையில் ரோஷனின் தந்தை மகளுக்கு ஊசி போட்டார்
அந்தக் காலகட்டத்தில் ஊசியின் அளவு பெரிதாக இருக்கும்
இரண்டு வயது மகளுக்கு வலிக்காமல் ஒவ்வொரு நாள் காலையிலும்
ஊசி போட்டு பழகினார்
மகளின் வலியை எல்லாம் மனதளவில் தான்வாங்கிக் கொண்டார்.

டிஸ்போஷபிள் ஊசி இல்லாத காலம் என்பதால் தடிமனான ஊசியை
கொதி நீரில் போட்டு தயார் செய்வது, அந்த ஊசியில் சரியான அளவு
மருந்து ஏற்றுவது என்பது ரோஷனின் தாயின் வேலை, மருந்து
ஏற்றப்பட்ட ஊசியை மகளுக்கு கதை சொல்லி சிரிக்கவைத்தபடி
போடவேண்டியது தந்தையின் கடமை.

இந்த கடமைக்காக ரோஷனின் பெற்றோர் எந்த ஊருக்கும்
சென்றதில்லை அதே போல சர்க்கரை நோயாளிக்கான கட்டுப்பாடான
வாழ்க்கை மற்றும் உணவை மகளுக்காக தங்கள் வீட்டு உணவாக
மாற்றிக்கொண்டனர், ரோஷனுக்கு இனிப்பு என்றால் என்னவென்றே
தெரியாமல் வளர்ந்தார்.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84145
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 07, 2022 6:48 am

துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... Gallerye_160602263_3044709
-
துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... Gallerye_160609584_3044709
ஒரு முறை பள்ளியில் சக மாணவியின் பிறந்த நாள் பரிசாக
வழங்கப்பட்ட சாக்லெட்டை சாப்பிட்டுவிட்டு வீட்டில் வந்து
சிரமப்பட்டார், விஷயமறிந்த ரோஷனின் தாய் மறுநாள்
பள்ளிக்கூடம் சென்று ரோஷனின் ஆசிரியையிடம் மகளின்
பிரச்னைபற்றி கூறி அங்கும் இனிப்பு சாப்பிட விடாமல் பார்த்துக்
கொண்டார்.

எட்டு வயதான போது ரோஷன் தனக்கு தானே இன்சுலின் போட்டுக்
கொள்ளும் அளவிற்கு முன்னேறினார்,கட்டுப்பாடான உணவு மற்றும்
வாழ்க்கை இவருக்கு பலவிஷயங்களை கற்றுக்கொள்ள நிறையவே
கைகொடுத்தது.

படிப்பில் கெட்டிக்காரரான இவர் ஆடிட்டர் படிப்பை முடித்த கையோடு
மும்பையில் பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்தது,அலுவலக
ரீதியாக சைரஸ் பாஞ்சா என்பவரை அடுத்தடுத்து சந்திக்க நேர்ந்த
போது சைரஸ் தன் காதலை தெரிவித்தார்.

தான் யார்? தனக்கு என்ன பிரச்னை? என்பதை ரோஷன் தெரிவித்தார்.

அதனால் தனக்கு பிரச்னை எதுவும் இல்லை தான் இப்போதுதான்
இன்னும் தீவிரமாக காதலிப்பதாக தெரிவித்தார்.ஒரு விஷயம் மட்டும்
நெருடல் தந்தது.

காதலர் சைரஸ் சென்னை வாசி, தானோ மும்பை வாசி எப்படி ஒன்றாக
குடும்பம் நடத்துவது என்று எண்ணினார்,தனது ‛பாஸை' சந்தித்து
விவரம் சொன்னார் ‛அதனால் என்ன? நீ சென்னை அலுவலகத்திற்கு
மாற்றல் வாங்கிக் கொள்' என்று சொல்லி, உடனே மாறுதலும் கொடுத்து
விட்டார்.

மும்பையைக் காலி செய்துவிட்டு சென்னை வந்தவருக்கு அடுத்த
பிரச்னை, தன்னையும் தனது சர்க்கரை நோய் பிரச்னையையும்
சிறுவயது முதலே அறிந்த டாக்டர்களை விட்டு வரவேண்டுமே என்று
நினைத்தார், அங்கு இருந்தவர்கள் சென்னையில் உள்ள டாக்டர்கள் சிலரை
சிபாரிசு செய்தனர்.

அந்த டாக்டர்களை ரோஷன் சென்று சந்தித்தார், அவர்கள் ஒரு டோஸ்
போதாது தினமும் மூன்று நான்கு டோஸ் ஊசி போடவேண்டும் என்றனர்
ஆனால் அதற்கு ரோஷனுக்கு உடன்பாடில்லை இந்த நிலையில்தான்
கோபாலபுரத்தில் உள்ள பிரபல நீரிழிவு மருத்துவரான டாக்டர் மோகனை
சந்தித்தார்.

அவர் ரோஷனின் மருத்துவ அறிக்கையைப் பார்த்துவிட்டு மிகவும்
கட்டுப்பாடான வாழ்க்கை முறையை கொண்டு இருக்கிறீர்கள் ஆகவே
நீங்கள் இதுவரை போட்டுக்கொண்டது போலவே தினமும் ஒரு டோஸ்
போட்டுக் கொண்டால் போதும் என்று சொல்லியிருக்கிறார்
அது முதல் டாக்டர் மோகன் இவரது குடும்ப டாக்டராகவும் நண்பராகவும்
வழிகாட்டியாகவும் மாறிவிட்டார்.

நான் உங்களை மாற்றவில்லை நீங்கள்தான் நீரிழிவால் பாதிக்கப்பட்ட
பலரது மனதை மாற்றி நம்பிக்கை கொடுத்து இருக்கிறீர்கள் சாதாரண
மக்கள் செய்யும் வேலைகளை விட அதிக வேலைகளையும்
திறமைகளையும் நீங்கள் கொண்டுள்ளீர்கள் நீரிழிவை வென்ற உங்க
ள் வாழ்க்கை கதையை எனது புத்தகத்தில் இடம் பெறச்செய்வேன்
அந்த புத்தகத்தை நீங்களே வந்து வெளியிடுங்கள் என்று டாக்டர் மோகன்
கூறியிருந்தார்.

அந்த நாளும் கடந்த வாரம் வந்தது ‛பாண்டிங் போஸ் அண்ட் பியாண்ட்'
என்ற நீரிழிவை வென்ற பலரின் நிஜக்கதையைக் கொண்ட ஆங்கில நுால்
வெளியீட்டு விழா நடைபெற்றது.நுாலை எழுதிய டாக்டர் மோகன்
பேசுகையில் நீரிழிவு நோயுடன் நுாறு வயதைக்கடந்து வாழும் பலரின்
சான்றுகளும் எங்களிடம் உள்ளது என்றார்.

நுாலைப் பெற்றுக் கொண்ட ரோஷன் பாஞ்சா,‛டாக்டர் என்னை நன்றாக
பார்த்துக் கொள்கிறார், எனது தலைக்கு மேல் வளர்ந்த இரண்டு குழந்தைகள்,
வேலைகள்,இசை ஆல்பம் தயாரிப்பு நடிப்பு என்று ரொம்பவே பிசியாக
இருக்கிறேன். இதற்கெல்லாம் காரணமான டாக்டர் மோகனுக்கு நன்றி
கூடுதலாகவும் இந்த இடத்தில் அவருக்கு இந்த இடத்தில் நன்றி கூறிக்
கொள்கிறேன்,

காரணம் எனக்கு பிரியமான மாம்பழம் சாப்பிடவும் இப்போது அளவுடன்
அனுமதித்திருக்கிறார்' என்றபோது அரங்கம் புன்னகை பூத்தது.

-எல்.முருகராஜ்
நன்றி-தினமலர்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 07, 2022 7:53 am

மிக நல்ல பதிவு ராம்.

ஞாயிறு அன்று தினமலரில் பார்த்த உடனேயே நகலெடுத்து, நம் உறவுகளுக்கு பகிர்ந்திட ஆசை.
எனோ அந்த செய்தியை நகலெடுக்க முடியவில்லை.

பகிர்வுக்கு நன்றி.

@ayyasamy ram
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jun 07, 2022 3:55 pm

துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... 3838410834 துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... 103459460



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக