புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுகதை ஆராய்ச்சி Poll_c10சிறுகதை ஆராய்ச்சி Poll_m10சிறுகதை ஆராய்ச்சி Poll_c10 
45 Posts - 58%
heezulia
சிறுகதை ஆராய்ச்சி Poll_c10சிறுகதை ஆராய்ச்சி Poll_m10சிறுகதை ஆராய்ச்சி Poll_c10 
29 Posts - 38%
mohamed nizamudeen
சிறுகதை ஆராய்ச்சி Poll_c10சிறுகதை ஆராய்ச்சி Poll_m10சிறுகதை ஆராய்ச்சி Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுகதை ஆராய்ச்சி Poll_c10சிறுகதை ஆராய்ச்சி Poll_m10சிறுகதை ஆராய்ச்சி Poll_c10 
87 Posts - 60%
heezulia
சிறுகதை ஆராய்ச்சி Poll_c10சிறுகதை ஆராய்ச்சி Poll_m10சிறுகதை ஆராய்ச்சி Poll_c10 
50 Posts - 35%
mohamed nizamudeen
சிறுகதை ஆராய்ச்சி Poll_c10சிறுகதை ஆராய்ச்சி Poll_m10சிறுகதை ஆராய்ச்சி Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
சிறுகதை ஆராய்ச்சி Poll_c10சிறுகதை ஆராய்ச்சி Poll_m10சிறுகதை ஆராய்ச்சி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுகதை ஆராய்ச்சி


   
   
RAJA MUTTHIRULANDI
RAJA MUTTHIRULANDI
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 26/06/2022

PostRAJA MUTTHIRULANDI Sun Jun 26, 2022 2:06 pm

பாட்டிடையிட்ட பாரதியார் சிறுகதைகள் நூல் குறித்த இணையநூல் விமர்சனம். பார்வைக்கு.

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 66 (Post No.10,695)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,695

Date uploaded in London – – 27 FEBRUARY 2022

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 66 (Post No.10,695)

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 66
பாட்டிடையிட்ட பாரதியார் சிறுகதைகள்- முதல் தொகுப்பு
ச.நாகராஜன்

மஹாகவி பாரதியாரின் மிக முக்கியமான ஒரு பரிமாணத்தைத் தொட்டுக் காண்பிக்கும் இந்த நூலை எழுதியிருப்பவர் திரு இராஜ முத்திருளாண்டி.
160 பக்கங்கள் கொண்ட இந்த அருமையான நூல் பாரதியாரின் சிறுகதைகளை ஒரு சிறப்புப் பார்வை மூலம் அலசி ஆராய்கிறது. இது ஒரு பாரதியார் நினைவு நூற்றாண்டு வெளியீடு.
மஹாகவியை, ‘மஹாகவி’, ‘மஹாகவி’ என்றே அழைத்து வருவதால அவரது மகோன்னதமான சிறுகதை ஆசிரியர் என்ற பரிமாணம் இதுவரை பெரிய அளவில் சுட்டிக்காட்டப்படவில்லை. அந்தக் குறையைப் போக்கும் விதமாக ஒரு பிள்ளையார் சுழி புத்தகமாக இது மலர்ந்திருக்கிறது.
முதல் தொகுப்பு என்று புத்தகத் தலைப்பிலேயே இருப்பதால் மேலும் பல நல்ல தொகுப்புகள் வரும் என நம்பலாம்.
கதாசிரியர் (மஹாகவி என்ற பேருண்மையை சற்று நேரம் மறந்து விடலாம்)
பாரதியாரைச் சற்று ஊன்றிக் கவனிப்போம்!
“தமிழ் சிறுகதையின் வரலாற்றை நேர் செய்யலாம்” என்ற முனைப்பில், “பாரதிக்கு இழைக்கப்படீருக்கும் அநீதி” யை நீக்கும் நோக்கில் எழுதப்பட்டுள்ள நூலில் தமிழ் சிறுகதை வரலாற்றில் முதல் கதாசிரியராக வ.வே.சு. ஐயரை முன்னிலைப் படுத்திக் கூறுவது தவறு; அதற்கு முன்னமேயே பாரதியார் பல சிறுகதைகளை அற்புதமாக எழுதி இருக்கிறார் என்பதை ஆதாரங்களுடன் நிரூபிக்கிறார் நூலாசிரியர்.
போற்றப்பட வேண்டிய முயற்சி இது.
துளஸீ பாயி என்ற ரஜபுத்ர கன்னிகையின் சரித்திரம், புதிய கோணங்கி அதாவது குடுகுடுப்பைக்காரன், கடற்கரையாண்டி, செய்கை, சும்மா, கர்த்தப ஸ்வாமியைப் பாம்புப் பெண் வசப்படுத்தியது, காட்டுக் கோயில்ன் கதை 7 திண்ணன் கதை, கொட்டையசாமி, வேப்ப மரம், மழை, விடுதலை முத்தம்மா கதை ஆகிய 11 கதைகளை மிகவும் கஷ்டப்பட்டுத் தேடிக் கண்டு பிடித்து அவற்றை நம் முன் காண்பிக்கும் நூலாசிரியர் 11 கதைகளுக்கும் தோரணம் அமைத்து கதை பற்றிய ஒரு அறிமுகத்தை அற்புதமாக முதலில் தருகிறார்.
பின்னர், ‘வாங்க’ என்று அன்புடன் அழைத்து நுழைவாயிலில் நம்மை நுழைய வைக்கிறார்.
நுழைந்தால், நாம் காண்பது பாரதியாரின் அற்புதமான கதையை.
இதில் ஒரு விசேஷ அம்சம் என்னவெனில் இந்தக் கதைகள் பாட்டுடன் கூடியவை.
என்ன பாட்டு?
துளஸீ பாயி சரித்திரம் என்னும் கதையில் வரும் பாடல் இது:
‘மந்தமாருதம் வீசுறும் போதினும்
வானில் மாமதி தேசுறும் போதினும்” என்ற பாடல்.
‘மந்தமாருதத்து மயங்கினர்’ என்ற இளங்கோவடிகளின் சிலப்பதிகார அடியைச் சுட்டிக் காட்டும் இராஜ முத்திருளாண்டி, சேரன் தம்பி இசைத்த சிலம்பில் பாரதியார் எவ்வளவு பற்று கொண்டிருக்கிறார் என்பதை நிலை நாட்டுகிறார்.
அடுத்து, புதிய கோணங்கி அதாவது குடுகுடுப்பைக்காரன் என்ற கதையில் நாம் அனைவரும் அறிந்த,
“குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு
நல்ல காலம் வருகுது நல்ல காலம் வருகுது”
என்ற பாடலைச் சுட்டிக் காட்டுகிறார்.
கடற்கரையாண்டி கதையில் அருணகிரிநாதரின் பாடல்; செய்கையில் சைவ எல்லப்ப நாவலரின் பாடல்; சும்மா கதையில் தாயுமானவரின் பாடல்; கர்த்தப ஸ்வாமி கதையில் மாணிக்க வாசகரின் திருவாசக (சிவபுராண) வரிகள், மழை கதையில் நாம் அனைவரும் அறிந்த, ‘காற்றடிக்குது கடல் குமுறுது’ பாடல் – என இப்படி பாரதியாரின் கதைகளை, ‘பாட்டிடையிட்ட கதைகளாகச்’ சுவை பட புதுப் பார்வையுடன் நம் முன்னே காட்டுகிறார் நூலாசிரியர்.
நவதந்திரக் கதைகள் பாரதியாரின் படைப்பு; இது பற்றி அவ்வளவாக நிறைய செய்திகளை யாரும் இதுவரை தந்ததில்லை; ஆனால் ஆய்வு நோக்குடன் இது பற்றிய செய்திகளை நாம் இந்த நூலில் காண்கிறோம்.
பாரதியாரின் சுவையான எளிய அருமையான நடையில் அவரது படைப்புகளைப் படிக்கும் போது ஒரு பரவசம் ஏற்படுகிறது; அந்தப் பரவசத்தை இன்னும் அதிகம் கூட்டும் வகையில் ‘இலக்கிய போதையேற்றி’ விடுகிறார் தன் தமிழ் நடையாலும், பக்குவப்பட்ட பாரதி பக்தியினாலும் இராஜ முத்திருளாண்டி.
இந்த நூல் பலவகையில் ஒரு முன் மாதிரியாகத் திகழ்கிறது.
⦁ சிறுகதை தோற்றம் பற்றிய ஆராய்ச்சி; அதில் முன்னோடியாக பாரதியார் இலங்குகிறார் என்ற நிர்ணயம்
⦁ ரா.அ.பத்மநாபன், பெரியசாமி தூரன் உள்ளிட்ட ஆரம்ப கால பாரதி ஆய்வாளர்கள் தனது எல்லைக்குட்பட்ட ஆனால் அபாரமாக, பாரதி படைப்புகளை மிகவும் கஷ்டப்பட்டு உழைத்துத் தேடித் தந்த போதிலும் அதில் காலத்தினால் ஏற்பட்ட சில முரண்பாடுகளைச் சுட்டிக் காட்டும் திறம் (அவர்கள் மேல் கோபப் படக் கூடாது)
⦁ ஆங்காங்கே சிதறிக் கிடந்த கதைகளைத் திரட்டி, தோரணம் கட்டி நுழைவாயில் ஏற்படுத்தி அழைத்துச் செல்லும் பாங்கு
⦁ பாரதியாரின் கதைகளில் இடையிடையே வரும் பாடல்கள்; ஷேக்ஸ்பியர் உள்ளிட்டவர்களை பாரதியார் பயின்ற பாங்கு
⦁ ஏராளமான ஆய்வு நூல்களைப் படித்து, ‘கொள்ள வேண்டியவற்றைக் கொண்டு தள்ள வேண்டியவற்றைத் தள்ளியிருக்கும் தன்மை’
இப்படிப் பலவற்றைக் கூறலாம்.
ஆசிரியரின் நன்றி பாராட்டும் தன்மை நம்மைக் கவர்கிறது. ‘அறுபடை’ பேரக் குழந்தைகளைக் கூட மறந்து விடவில்லை என்றால் மற்றவரை மறப்பாரா என்ன! ஆறு பேருக்கும் ‘இடையறாக் கேள்விகள் கேட்டமைக்காக’ நன்றி பாராட்டுகிறார்.

நல்லவர். குழந்தைகளைக் கவர்வதில் வல்லவர். பாராட்டுகிறோம்.

‘வாங்க’ என்று தான் கட்டிய தோரணம் காட்டி, புதிய நுழைவாயில் வழியே, இவர் அடுத்து எப்போது நம்மை அழைக்கப் போகிறார் என்ற எண்ணத்தைத் தரும் இந்த நூலை பாரதி ஆர்வலர்கள் உடனடியாகப் படிக்க வேண்டும்.
அருமையான நூலை வெளியிட்டுள்ளோர்:
கலியாந்தூர் கர்ணம்
மு.பூ. இராஜகோபால் பிள்ளை – கதிராயி அம்மாள் நினைவு அறக்கட்டளை,
1 & 2ம் வெள்ளாளர் தெரு, பழையூர், திருப்பூவனம் – 630 311, சிவ கங்கை மாவட்டம்
மின்னஞ்சல் : rajkadirtrust@gmail.com

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jun 26, 2022 4:43 pm

வாழ்க பாரதி புகழ்! :வணக்கம்:



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

இராஜமுத்திருளாண்டி இந்த பதிவை விரும்பியுள்ளார்

இராஜமுத்திருளாண்டி
இராஜமுத்திருளாண்டி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 28/06/2022

Postஇராஜமுத்திருளாண்டி Tue Jun 28, 2022 2:13 pm

மகிழ்ச்சி முனைவர் சௌந்திரபாண்டியன்.


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக