புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அணில் தேவதை! - (சிறுவர் மலர்) Poll_c10அணில் தேவதை! - (சிறுவர் மலர்) Poll_m10அணில் தேவதை! - (சிறுவர் மலர்) Poll_c10 
64 Posts - 50%
heezulia
அணில் தேவதை! - (சிறுவர் மலர்) Poll_c10அணில் தேவதை! - (சிறுவர் மலர்) Poll_m10அணில் தேவதை! - (சிறுவர் மலர்) Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
அணில் தேவதை! - (சிறுவர் மலர்) Poll_c10அணில் தேவதை! - (சிறுவர் மலர்) Poll_m10அணில் தேவதை! - (சிறுவர் மலர்) Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
அணில் தேவதை! - (சிறுவர் மலர்) Poll_c10அணில் தேவதை! - (சிறுவர் மலர்) Poll_m10அணில் தேவதை! - (சிறுவர் மலர்) Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
அணில் தேவதை! - (சிறுவர் மலர்) Poll_c10அணில் தேவதை! - (சிறுவர் மலர்) Poll_m10அணில் தேவதை! - (சிறுவர் மலர்) Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அணில் தேவதை! - (சிறுவர் மலர்) Poll_c10அணில் தேவதை! - (சிறுவர் மலர்) Poll_m10அணில் தேவதை! - (சிறுவர் மலர்) Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
அணில் தேவதை! - (சிறுவர் மலர்) Poll_c10அணில் தேவதை! - (சிறுவர் மலர்) Poll_m10அணில் தேவதை! - (சிறுவர் மலர்) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அணில் தேவதை! - (சிறுவர் மலர்) Poll_c10அணில் தேவதை! - (சிறுவர் மலர்) Poll_m10அணில் தேவதை! - (சிறுவர் மலர்) Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அணில் தேவதை! - (சிறுவர் மலர்)


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jun 03, 2022 10:15 am

அணில் தேவதை! - (சிறுவர் மலர்) E_1573188969
-
களத்துார் கிராமத்தில், பண்ணையார் ஒருவர் வாழ்ந்து வந்தார்;
அவருக்கு, நில புலன்கள் அதிகம். அவரது விளை நிலத்தில் தான்,
அவ்வூர் மக்கள் வேலை செய்து பிழைத்தனர்.

களத்து மேட்டிலிருந்து, கால்நடை பராமரிப்பு வரை,
வேலையாட்கள் நிறைந்திருந்தனர். ஆனால், அவர்களுக்கு
கொடுக்கும் கூலியோ மிகக் குறைவு; இதனால், மன வருத்தம்
இருந்தாலும், முதலாளியிடம் முறையிட, துணிச்சல் வரவில்லை.

ஒருநாள் -
அவரது பழ தோட்டத்தில், சில விலங்குகள் புகுந்தன. பழங்களை
தின்றும், மிதித்தும் பாழ்படுத்தின. அவற்றைப் பிடிக்க பொறிகள்
அமைக்கப்பட்டன.

பொறி ஒன்றில், அகப்பட்டது அணில்; மாலையில், காலாற உலாவ
வந்த பண்ணையார், அதைப் பார்த்தார். பின்னங்கால்கள்
பொறியில் சிக்கிய நிலையில், தவித்துக் கொண்டிருந்தது. ஒரு
கட்டையால், அதை அடிக்கப் போனார்.

அப்போது, 'ஐயா... உங்கள் செய்கை தவறானது; மண்ணின் வளத்தை
நீங்கள் பயன்படுத்துவது போல், உங்கள் தோட்டத்து கனிகளை
நாங்கள் பயன்படுத்துகிறோம்; அனைத்தும் இயற்கை தானே...
என்னைக் கொல்வது, எந்த வகையில் நியாயம்...' என்று துணிச்சலுடன்
கேட்டது.

பண்ணையார் திகைத்து விட்டார். அணிலின் கேள்விக்கு, அவரால்
பதில் கூற முடியவில்லை; அதை விடுவித்தார்.

அந்த அணில், ஒரு தேவதையாக மாறி, 'ஐயா... உங்களுக்கு என்றும்
கடமைப்பட்டிருக்கிறேன்...' என்று கூறியபடி துள்ளிக் குதித்து ஓடியது.

அதை தடுத்து, 'தேவதையே... உன் உயிரைக் காத்த எனக்கு, எதாவது
வரம் தரலாமே...' என்று கேட்டார்.

'வரம் கொடுப்பதில், எந்த சிக்கலும் இல்லை; ஆனால், பெறுவதற்கு,
சில தகுதிகள் வேண்டும்; அப்போது தான், அதை அனுபவிக்க முடியும்...'
'அப்படியா... வரம் பெற, நான் என்ன செய்ய வேண்டும்...'
'உங்கள் உடலை, சோம்பல் எனும் பிசாசு பிடித்துள்ளது; அதை விரட்ட
வேண்டும்; ஆறு மாத காலம், வியர்வை சிந்த உடல் உழைத்தால்,
அந்த பிசாசு ஓடி விடும்...' என்றது தேவதை.

மதிப்பு மிக்க வைரக்கற்களையும், நிலத்தையும் வரமாக கேட்கும்
ஆசையில், இதற்கு சம்மதித்தார்.

வயல்களில் நீர்ப் பாய்ச்சுவது, களையெடுப்பது, அறுவடை செய்வது,
கால்நடைகளை மேய்ப்பது, குளிப்பாட்டுவது, தீவனம் போடுவது,
கோழி முட்டைகளை சேகரிப்பது என, மற்றவர்களுடன் கடுமையாக
உழைத்தார்.

ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தது. நாளாக நாளாக, உழைப்பின் மீது
அவருக்குப் பற்று ஏற்பட்டது. அது, மகிழ்ச்சியான அனுபவமாக
மாறியது.

உடல், நலம் பெற்று, அவரது கட்டுப்பாட்டுக்குள் வந்தது; களைப்பு
ஏற்பட்டதால், நன்றாக உறங்கினார். பசியை உணர்ந்ததால், உண்ணும்
உணவில் சுவை கூடியதாக பட்டது.

உழைப்பிலுள்ள சிரமங்களை தெரிந்து கொண்டார். எனவே,
அனைவருக்கும் கூலியை உயர்த்தினார். பணியாளர்கள் மகிழ்ந்து,
மனதார வாழ்த்தினர்.

தேவதையை சந்திக்கும் நாள் வந்தது.

அன்று, 'தேவதையே... நான் நன்றாக உழைக்கிறேன்; வியர்வையில்
தினமும் நனைகிறேன்; வாழ்நாள் முழுவதும் உழைத்தபடியே இருப்பேன்.
என்னிடம் சோம்பல் அண்டவே அண்டாது. இப்போது எனக்கு வரம்
தரலாம்...' என்று பணிவாக கேட்டார்.

'ஐயா... நீங்கள் உழைக்க துவங்கியது மகிழ்ச்சி தருகிறது. ஆனால்,
உங்கள் மனம் இன்னும் தகுதியடையவில்லை. கோபத்தின் போது,
ஒரு கரடியின் மூர்க்கத்தை அடைகிறீர்; அதிலிருந்து, விலக
வேண்டும்...' என்றது தேவதை.

அதற்கு ஒப்புக் கொண்டு, வீடு திரும்பினார் பண்ணையார்.

திருக்குறள், கொன்றை வேந்தன் போன்ற, அற நுால்களைக் கற்க
துவங்கினார்; அறிவுரைகளை உணர்ந்து நடந்தார். அன்பும், பாசமும்
காட்டியதால், மக்கள் மத்தியில், மதிப்பும், மரியாதையும் கூடியது.

தேவைக்கு அதிகமாக இருந்தவற்றை, ஏழை எளியவர்களுக்கு
கொடுத்தார். மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அப்போது தேவதை, 'ஐயா... உங்களுக்கு அனைத்து தகுதிகளும்
உள்ளன; என்ன வரம் வேண்டுமானாலும் கேளுங்கள்...' என்றது.

யோசித்த பண்ணையார், 'என்னை நல்வழிப்படுத்திய அணில்
தேவதையே... தேவையான அனைத்தும், என்னிடமே இருப்பதாக
உணர்கிறேன். இந்த வாழ்க்கையை, என் ஆயுள் முழுவதும் நீடிக்கச்
செய்...' என்று வணங்கினார்.

பண்ணையாரை வாழ்த்தி மறைந்தது தேவதை.

செல்லங்களே... அனுபவம் சிறந்த ஆசிரியர் மட்டுமல்ல; நிறைந்த
செல்வமும் கூட... கடுமையாக உழைத்து, நல் அனுபவத்தை
பெறுங்கள்.

சிறுவர் மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக