ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்காவில் 19 குழந்தைகள் உட்பட 21 பேர் சுட்டுக் கொலை:18 வயது இளைஞரின் வெறிச்செயல்

Go down

அமெரிக்காவில் 19 குழந்தைகள் உட்பட 21 பேர் சுட்டுக் கொலை:18 வயது இளைஞரின் வெறிச்செயல் Empty அமெரிக்காவில் 19 குழந்தைகள் உட்பட 21 பேர் சுட்டுக் கொலை:18 வயது இளைஞரின் வெறிச்செயல்

Post by ayyasamy ram Thu May 26, 2022 6:32 am

அமெரிக்காவில் 19 குழந்தைகள் உட்பட 21 பேர் சுட்டுக் கொலை:18 வயது இளைஞரின் வெறிச்செயல் Tamil_News_large_3038459
ஹூஸ்டன்,-
இந்த ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் 212 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. அதில் மிகவும் மோசமான சம்பவம் டெக்சாஸ் மாகாணத்தில் நடந்துள்ளது. 18 வயது இளைஞர் வெறித்தனமாக சுட்டதில், 19 பள்ளி குழந்தைகள் உட்பட 21 பேர் கொல்லப்பட்டனர்.

போலீசார் அந்த இளைஞரை சுட்டுக் கொன்றனர்.அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் பரவி வருவது குறித்து தொடர்ந்து கவலை தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் மட்டும், 212 பெரிய துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

விரக்தி

இந்நிலையில், டெக்சாஸ் மாகாணம் உவால்டே நகரில் உள்ள ராப் துவக்கப் பள்ளிக்குள் நேற்று முன்தினம் காலையில் நுழைந்த, 18 வயது இளைஞர், சரமாரியாக சுடத் துவங்கியுள்ளார். ஏ.ஆர்., - 15 ரக துப்பாக்கியுடன் அவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்தனர். அந்த இளைஞரை பிடிக்க முயன்றனர். ஆனால், அவர் தொடர்ந்து குழந்தைகள் மீது சுட்டதால், போலீசார் அந்த நபரை சுட்டுக் கொன்றனர்.

இந்த சம்பவத்தில், 19 குழந்தைகள், ஒரு ஆசிரியர் கொல்லப்பட்டனர். இரண்டு போலீசார் படுகாயமடைந்துள்ளனர். இதைத் தவிர, பல குழந்தைகள் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.போலீசார் நடத்திய விசாரணையில், அந்த இளைஞரின் பெயர் சால்வடார் ரமோஸ் என்பது தெரியவந்துள்ளது.

இந்தப் பள்ளியில் தாக்குதல் நடத்துவதற்கு முன், வீட்டில் இருந்த தன் பாட்டியையும் அவர் சுட்டுக் கொன்றுஉள்ளார்.எதற்காக அவர் இந்த தாக்குதலில் ஈடுபட்டார் என்பதற்கான காரணம் தெரியவில்லை.

அதே நேரத்தில், பள்ளியில் தொடர்ந்து மாணவர்கள் கேலி, கிண்டல் செய்ததால், படிப்பை பாதியிலேயே கைவிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.மேலும், அவருடைய குடும்பத்திலும் சில பிரச்னைகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், தன் பாட்டியுடன் அவர் வசித்து வந்துள்ளார். இங்கும் அவர் மன அழுத்தம் மற்றும் விரக்தியில் இருந்து வந்துள்ளார் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடந்தது துவக்கப் பள்ளி என்பதால், 5 - 11 வயது குழந்தைகளே அங்கு படித்து வந்துள்ளனர். துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து கேள்விபட்டதும், அப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் அங்கு குவிந்தனர்.மாணவர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் பிறகே குழந்தைகள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதற்கிடையே, உயிரிழந்த குழந்தைகளின் பெயர்கள் குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை.அதிபர் ஆவேசம்இந்த சம்பவம் குறித்து, ஆசிய நாடான ஜப்பானில் இருந்து விமானத்தில் நாடு திரும்பிக் கொண்டிருந்த அதிபர் ஜோ பைடனுக்கு தெரிவிக்கப்பட்டது.இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:

துப்பாக்கி கலாசாரத்தை கட்டுப்படுத்துவதற்காக பல ஆண்டுகளாக நான் குரல் கொடுத்து வருகிறேன். இந்த விஷயத்தில் ஏன் நாம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க முடியாமல் திணறுகிறோம் என்று தெரியவில்லை.

தற்போது ஏற்பட்டுள்ள துயரமான சம்பவம், நாம் உடனடியாக செயலில் இறங்க வேண்டிய தேவையை உணர்த்துகிறது.சின்னக் குழந்தைகள் உயிரிழந்துள்ளது, இதயத்தை பிடுங்கி எறிவதுபோல் அமைந்துள்ளது. தன் நண்பர்கள் கொல்லப்பட்டதை நேரில் பார்த்த மற்ற குழந்தைகளின் மனநிலை எவ்வளவு பாதிக்கப்பட்டு இருக்கும்.

எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, துப்பாக்கி கட்டுப்பாடுகளை உடனடியாக தீவிரமாக்க வேண்டும்.உயிரிழந்த பள்ளி குழந்தைகள் நினைவாக நாடு முழுதும், வரும், 29ம் தேதி வரை தேசியக் கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
தினமலர்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum