புதிய பதிவுகள்
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய பாதை! Poll_c10புதிய பாதை! Poll_m10புதிய பாதை! Poll_c10 
28 Posts - 53%
heezulia
புதிய பாதை! Poll_c10புதிய பாதை! Poll_m10புதிய பாதை! Poll_c10 
12 Posts - 23%
Dr.S.Soundarapandian
புதிய பாதை! Poll_c10புதிய பாதை! Poll_m10புதிய பாதை! Poll_c10 
6 Posts - 11%
T.N.Balasubramanian
புதிய பாதை! Poll_c10புதிய பாதை! Poll_m10புதிய பாதை! Poll_c10 
3 Posts - 6%
kavithasankar
புதிய பாதை! Poll_c10புதிய பாதை! Poll_m10புதிய பாதை! Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
புதிய பாதை! Poll_c10புதிய பாதை! Poll_m10புதிய பாதை! Poll_c10 
1 Post - 2%
prajai
புதிய பாதை! Poll_c10புதிய பாதை! Poll_m10புதிய பாதை! Poll_c10 
1 Post - 2%
rajuselvam
புதிய பாதை! Poll_c10புதிய பாதை! Poll_m10புதிய பாதை! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய பாதை! Poll_c10புதிய பாதை! Poll_m10புதிய பாதை! Poll_c10 
216 Posts - 43%
heezulia
புதிய பாதை! Poll_c10புதிய பாதை! Poll_m10புதிய பாதை! Poll_c10 
200 Posts - 40%
Dr.S.Soundarapandian
புதிய பாதை! Poll_c10புதிய பாதை! Poll_m10புதிய பாதை! Poll_c10 
24 Posts - 5%
i6appar
புதிய பாதை! Poll_c10புதிய பாதை! Poll_m10புதிய பாதை! Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
புதிய பாதை! Poll_c10புதிய பாதை! Poll_m10புதிய பாதை! Poll_c10 
14 Posts - 3%
Anthony raj
புதிய பாதை! Poll_c10புதிய பாதை! Poll_m10புதிய பாதை! Poll_c10 
13 Posts - 3%
T.N.Balasubramanian
புதிய பாதை! Poll_c10புதிய பாதை! Poll_m10புதிய பாதை! Poll_c10 
12 Posts - 2%
prajai
புதிய பாதை! Poll_c10புதிய பாதை! Poll_m10புதிய பாதை! Poll_c10 
5 Posts - 1%
Guna.D
புதிய பாதை! Poll_c10புதிய பாதை! Poll_m10புதிய பாதை! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
புதிய பாதை! Poll_c10புதிய பாதை! Poll_m10புதிய பாதை! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய பாதை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82967
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 03, 2022 8:15 pm

புதிய பாதை! 261021299_2104453176368589_4265475359164042800_n.jpg?_nc_cat=106&ccb=1-5&_nc_sid=8bfeb9&_nc_ohc=yDix5B-PD9MAX8CK1W1&_nc_ht=scontent.fmaa3-2
-

புதிய பாதை


"ஏங்க, நம்ம பையனும், பெண்ணும் பம்பாய், டில்லின்னு
செட்டில் ஆயிட்டாங்க. அவங்க யாரும் இந்த கிராமத்துக்கு
வரப்போறதுல்ல. நமக்கும் வயசாயிக்கிட்டே வருது.

இப்ப எதுக்கு இந்தத் தோட்டத்தை வாங்கறீங்க? நமக்கு
அப்புறம் யார் இந்த ஊருக்கு வந்து இந்தத் தோட்டத்தைப்
பராமரிக்கப் போறாங்க?" என்றாள் அகிலா.

"ஆத்தங்கரைப் பக்கத்தில அமைஞ்சிருக்கிற அருமையான
இடம் அது. பெரிய தோட்டம். வாழை மரம், தென்னை மரம்,
மாமரம், கொய்யா மரம்னு நிறைய மரங்கள் இருக்கு.
பொன்னுசாமி உயிரோட இருக்கறப்பவே கேட்டேன். அவர்
கொடுக்க மாட்டேன்னுட்டாரு.

இப்ப அவர் போனதும், வெளியூர்ல இருக்கற அவர் பையங்க
எல்லா சொத்தையும் விக்கப் போறதாகச் சொன்னதால
அந்தத் தோட்டத்தை நாம வாங்கலாம்னு நினைச்சேன்"
என்றார் கணபதி.

"அதான் எதுக்குன்னு கேக்கறேன். நமக்கு இருக்கிற
நிலபுலன்களை நாம பாத்துக்கிட்டாய் போதாதா?"
"ஒரு நல்ல முதலீடா இருக்கட்டுமேன்னுதான்" என்றார்
கணபதி.

"நீங்க இப்படியெல்லாம் முதலீடு, லாபம்னு அலைய ஆள்
இல்லையே?" என்றாள் அகிலா கொஞ்சம் வியப்புடன்.
கணபதி பதில் சொல்லவில்லை.
சில நாட்களில் கணபதி அந்தத் தோட்டத்தை வாங்கி விட்டார்.
-
பத்திரப் பதிவு முடிந்த சில நாட்களில், கணபதி தோட்டத்தின்
மத்தியில் ஒரு பாதையை அமைத்து இரண்டு புறமும் வேலி
கட்டினார். அதற்குப் பிறகு, தோட்டம் மூன்று பகுதிகளாகக்
காட்சி அளித்தது. இரண்டு புறமும் வேலிக்குள் தோட்டங்கள்,
நடுவில் ஒரு பாதை என்று.
"எதுக்கு இப்படிப் பண்றீங்க?" என்றாள் அகிலா.
-
"தோட்டத்துக்கு நடுவில, ரெண்டு மூணு பேர் நடந்து போற
அகலத்துக்கு ஒரு பாதை அமைச்சிருக்கேன்" என்றார் கணபதி.
"அதான் எதுக்குன்னு கேக்கறேன்?'
-
"அகிலா! தோட்டத்துக்கு ஒரு பக்கம் ரோடு இருக்கு. இன்னொரு
பக்கம் ஆத்தங்கரை. நம் ஊர்ப்பெண்கள் ஆத்துக்குத் தண்ணி
எடுக்கப் போகறப்ப கிட்டத்தட்ட ஒரு மைல் சுத்திப் போக வேண்டி
இருக்கு. இப்ப நம் தோட்டத்துக்கு நடுவில இருக்கற பாதை வழியா
அவங்க ஆத்துக்குப் போகலாம். ஒரு மைல் சுத்திப் போக வேண்டி
இருக்காது."
-
"அது எப்படி? அது நம் நிலமாச்சே! அது வழியா ஊர்க்காரங்கல்லாம்
எப்படிப் போக முடியும்?"
-
"அதுக்குத்தான் தோட்டத்தை மூணாப் பிரிச்சு, ரெண்டு பக்கம்
தோட்டம், நடுவில பாதைன்னு உண்டாக்கி இருக்கேன். அந்தப்
பாதையை இந்த ஊர்ப் பஞ்சாயத்து பேர்ல பதிவு பண்ணிடப்
போறேன். அப்புறம் அது ஊருக்குப் பொது இடமா ஆயிடும்.
அதில யார் வேணா நடந்து போகலாம்."
-
"ஏங்க, நம்ப நிலத்தில, இருநூறு முன்னூறு சதுர அடி பொதுவுக்குப்
போயிடுமே! காசு கொடுத்து நிலத்தை வாங்கிட்டு எதுக்கு இப்படி
தானம் பண்றீங்க?" என்றாள் அகிலா சற்று வருத்தத்துடனும்,
கோபத்துடனும்.

"நம் ஊர் ஜனங்க, குறிப்பா பெண்கள் குளிக்கவும், தண்ணி எடுக்கவும்
ஒரு நாளைக்கு ரெண்டு மூணு தடவை ஆத்துக்குப் போறாங்க.
ஒவ்வொரு தடவையும் ஒரு மைல் தூரம் சுத்திப் போக வேண்டி இருக்கு.
வெயில், மழைன்னு பாக்காம தண்ணிக் குடத்தைத் தூக்கிக்கிட்டு
சின்னவங்க, பெரியவங்க, வயசானவங்க, உடம்பு சரியில்லாதவங்கன்னு
எல்லாரும் கஷ்டப்படறதை பாக்க எனக்கு எப்பவுமே மனசுக்குக் கஷ்டமா
இருக்கும்.

"பொன்னுசாமி கிட்ட இந்தத் தோட்டம் இருந்தப்ப, தோட்டத்துக்கு
நடுவில ஜனங்க ஆத்துக்குப் போக ஒரு பாதை போட்டுக் கொடுக்கச்
சொல்லி அவர்கிட்ட கேட்டேன். அவரு ஒத்துக்கல. சரி, நாம தோட்டத்தை
விலைக்கு வாங்கி, பாதை அமைச்சு கொடுக்கலாம்னு நினைச்சு
அவர்கிட்ட தோட்டத்தை விலைக்குக் கேட்டேன். அவரு கொடுக்க
மாட்டேன்னுட்டாரு.

இப்ப அவர் இறந்ததும், அவர் பசங்க அதை விக்கறாங்கன்னதும்,
அதை வாங்கி நான் நினைச்ச மாதிரி ஊர் ஜனங்களுக்குப் பாதை
போட்டுக் கொடுத்திருக்கேன்!" என்றார் கணபதி.

"நாம நம்ம வீட்டுக் கிணத்துத் தண்ணியைத்தான் பயன்படுத்தறோம்.
நீங்களோ நானோ தண்ணி எடுக்கவோ, குளிக்கவோ ஆத்துக்குப்
போறதில்ல. யாரோ கஷ்டப்படறாங்கங்கறதுக்காக இப்படி ஒரு
காரியத்தைப் பண்ணி இருக்கீங்க?" என்றாள் அகிலா வியப்புடனும்,
பிரமிப்புடனும்.

"கஷ்டப்படறது மத்தவங்களா இருந்தா என்ன? அவங்களோட
கஷ்டத்தை நம்மால உணர முடியாதா? அதுக்கு நாம எதுவும் செய்யக்
கூடாதா?" என்றார் கணபதி.
-
நீதி :
-
பிறர் துன்பத்தைத் தன் துன்பம் போல் ஒருவன் உணர்ந்து நடந்து
கொள்ளாவிட்டால், அவனுடைய அறிவினால் அவனுக்கு என்ன பயன்?
-
நன்றி: முகநூல்- லட்சம் கதைகள்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக