Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சு தேர்வு; சென்னை முதலில் பேட்டிங்!/முதல் வெற்றி
2 posters
Page 1 of 1
டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சு தேர்வு; சென்னை முதலில் பேட்டிங்!/முதல் வெற்றி
15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை டாக்டர் டிஒய் பாட்டீல்
மைதானத்தில் இன்று இரவு நடைபெறும் 22-வது லீக் ஆட்டத்தில்
சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள்
மோதுகின்றன.
நடப்பு சாம்பியனான சென்னை 4 தொடர் தோல்வியை சந்தித்து
துவண்டுள்ளது. ஒரு போட்டியில் பேட்டிங், ஒரு போட்டியில் பந்துவீச்சில்
என மாறி சொதப்பியுள்ளது.
எனினும், இது போன்ற இக்கட்டான தருணங்களை அந்த அணி கடந்து
வந்துள்ளது. தற்போது சென்னை அணியில் களமிறங்கும் வீரர்கள்
பதற்றமின்றி தங்களது பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டிய
கட்டாயத்தில் உள்ளனர். மேலும், வெற்றிக்கணக்கை தொடங்காத
சென்னை அணி எஞ்சிய ஆட்டங்கள் அனைத்திலும் வெற்றி பெற்றால்
தான் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு சிக்கலின்றி தகுதி பெற முடியும் என்கிற
நெருக்கடியிலும் உள்ளது.
எனவே, அதற்கேற்ப வியூகங்களுடன் அணி களம் இறங்கும்.
நடப்பு தொடரில் ஒரு தோல்வி மட்டும் பெற்றுள்ள ஃபாஃப் டு பிளெசிஸ்
தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஹாட்ரிக் வெற்றியை
ருசித்த உற்சாகத்தில் உள்ளது. அந்த அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு
வரிசையின் பலம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது.
இருப்பினும், சகோதரியின் மரணம் காரணமாக பயோ பபுளில் இருந்து
வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் (6 விக்கெட்) வெளியேறியுள்ளார்.
அவர் வெளியேறி இருப்பது அந்த அணிக்கு ஒரு பின்னடைவாக கருதப்படுகிறது.
ஆனாலும், வலுவான அணியாகவே இருக்கும் பெங்களூருவை சென்னை
சமாளித்து எழுச்சி பெறுமா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
வெற்றிக்கணக்கை தொடங்க சென்னை அணியும், உத்வேகத்தை தொடர
பெங்களூரு அணியும் கடுமையாக போராடும் என்பதால் இன்றைய ஆட்டத்தில்
பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
-இந்தியன் எக்ஸ்பிரஸ்
Re: டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சு தேர்வு; சென்னை முதலில் பேட்டிங்!/முதல் வெற்றி
ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு CSK அணி 216 ரன்கள் எடுத்துள்ளனர்.
RCB முதல் விக்கெட்டை இழந்துள்ளது. டு ப்ளசிஸ் 8 ரன்னுக்கு அவுட்...
ஆட்டம் தொடருகிறது,
RCB முதல் விக்கெட்டை இழந்துள்ளது. டு ப்ளசிஸ் 8 ரன்னுக்கு அவுட்...
ஆட்டம் தொடருகிறது,
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சு தேர்வு; சென்னை முதலில் பேட்டிங்!/முதல் வெற்றி
கெத்து காட்டிய சிஎஸ்கே.. ஆர்சிபி வீரர்களை ஓட விட்ட உத்தப்பா..துபே சிக்சர் மழை..
சிஎஸ்கே புதிய சாதனை
மும்பை: ஐபிஎல் 15வது சீசனில் ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே
பேட்ஸ்மேன்கள் வாண வேடிக்கை காட்டினர்.
நவி மும்பையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸை இழந்த சிஎஸ்கே அணி,
ஆர்சிபி அணியால் பேட்டிங் செய்ய பணித்தது. பவுலிங் படுமோசம் என்பதால்
பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள்
எதிர்கொண்டனர்.
ருத்துராஜ் ஏமாற்றம்
தொடக்கத்தில் சிஎஸ்கே வீரர் கெய்க்வாட் அதிரடியாக விளையாட முற்பட்டார்.
3 பவுண்டரிகளை விளாசிய அவர் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் பின்
மொயின் அலி களத்துக்கு வந்தார். ஆனால் அவர் 3 ரன்கள் எடுத்திருந்த போது,
ஆர்சிபி வீரரின் சிறப்பான ஃபில்டிங்கால் ரன் அவுட் ஆனார்
சிஎஸ்கே அணி 32 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்து தடுமாறியது.
சிக்சர் மழை
இதன் பின்னர் ராபின் உத்தப்பா தனது வழக்கமான அதிரடியை காட்டினார் .
முதலில் அவ்வப்போது பவுண்டரி அடித்த இந்த ஜோடியால் சிஎஸ்கே அணி
10 ஓவரில் 60 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது.
அதன் பின்னர் தான் இந்த ஜோடி பீஸ்ட் மோடுக்கு சென்றது. மேக்ஸ்வெல்
வீசிய 13வது ஓவரில் உத்தப்பா 3 சிக்சர்களை விளாசினார்.
சதம் மிஸ் சிவம் துபேவும் அதிரடியில் இணைய, இந்த ஜோடி அடுத்தடுத்து
அரைசதம் கடந்தது.
இதனால் 15வது ஓவரில் சிஎஸ்கே அணி 133 ரன்கள் என்ற இலக்கை எட்டியது.
இதன் பின்னரும், இந்த ஜோடி அதிரடியை நிறுத்தவில்லை. ஓவ்வொரு
ஓவரிலும் 12 ரன்கள், 15 ரன்கள் என இந்த ஜோடி அடித்தது. சிறப்பாக விளையாடிய
உத்தப்பா 89 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
சிஎஸ்கே சாதனை இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 165 ரன்கள் சேர்த்தது.
துபே 18 ஓவரில் சிக்சர், பவுண்டரி என விளாச ஸ்கோர் 200 ரன்களை தாண்டியது.
ஜடேஜா டக் அவுட்டாக அதிரடி காட்டிய துபே 46 பந்துகளில் 95 ரன்கள் விளாசினார்.
இதன் மூலம் சிஎஸ்கே அணி நடப்பு சீசனின் அதிகபட்ச ஸ்கோராக 216 ரன்கள்
எடுத்தது.
இந்த போட்டியில் சிஎஸ்கே மொத்தமாக 17 சிக்சர் விளாசியது.
இது சிஎஸ்கேவின் அதிகபட்ச சிக்சராகும்
-
நன்றி- தமிழ் மேகேல் (mykhel).காம்
Re: டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சு தேர்வு; சென்னை முதலில் பேட்டிங்!/முதல் வெற்றி
மும்பை: ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 216 ரன்களை குவித்தது. ஷிவம் துபே, ராபின் உத்தப்பா கூட்டணி நாலாபுறமும் பந்துகளை பறக்கவிட்டு அதிரடி காட்டினர்.
15-வது ஐபிஎல் சீசனின் இன்றைய 22-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ஃபாப் டூ பிளசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, ருத்ராஜ் கெய்வாட்டும், ராபின் உத்தப்பாவும் சென்னை அணியின் இன்னிங்ஸை தொடங்கினர். 17 ரன்கள் எடுத்திருந்த ருத்ராஜை 3-வது ஓவரிலேயே ஹேசில்வுட் வெளியேற்றினார். பின்னர் வந்த மொயின் அலியை 6-வது ஓவரில் மேக்ஸ்வெல் ரன் அவுட் செய்தார். இதனால் 3 ரன்களிலேயே பெவிலியன் திரும்பினார் மொயின் அலி. 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்திருந்த சென்னை அணி 60 ரன்களை சேர்த்திருந்தது.
அடுத்ததாக களமிறங்கிய ஷிவம் துபே, ராபின் உத்தப்பாவுடன் வலுவான கூட்டணி அமைக்க இருவரும் அடித்து ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இவர்களின் பாட்னர்ஷிப்பை உடைக்க முடியாமல் ஆர்சிபி பவுலர்கள் திணறினர். 50 பந்துகளில் 88 ரன்களை குவித்திருந்த ராபின் உத்தப்பாவை, வனிந்து ஹசரங்கா வெளியேற்றினார். அடுத்து வந்த ஜடேஜா முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்து விட்டு ரன் எதுவும் எடுக்காமல் நடையைக்கட்டினார்.
அதிரடியாக ஆடிய ஷிவம் துபே 20-வது ஓவரின் கடைசி பந்தில் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். 46 பந்துகளை சந்திருந்த அவர் 96 ரன்கள் குவித்து மிரட்டினார். இதையடுத்து 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து சென்னை அணி 216 ரன்களை குவித்தது. பெங்களூரு அணி தரப்பில், ஹசரங்கா 2 , ஹேசில்வுட் 1 விக்கெட் எடுத்திருந்தனர்.
நன்றி தமிழ் ஹிந்து
15-வது ஐபிஎல் சீசனின் இன்றைய 22-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ஃபாப் டூ பிளசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, ருத்ராஜ் கெய்வாட்டும், ராபின் உத்தப்பாவும் சென்னை அணியின் இன்னிங்ஸை தொடங்கினர். 17 ரன்கள் எடுத்திருந்த ருத்ராஜை 3-வது ஓவரிலேயே ஹேசில்வுட் வெளியேற்றினார். பின்னர் வந்த மொயின் அலியை 6-வது ஓவரில் மேக்ஸ்வெல் ரன் அவுட் செய்தார். இதனால் 3 ரன்களிலேயே பெவிலியன் திரும்பினார் மொயின் அலி. 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்திருந்த சென்னை அணி 60 ரன்களை சேர்த்திருந்தது.
அடுத்ததாக களமிறங்கிய ஷிவம் துபே, ராபின் உத்தப்பாவுடன் வலுவான கூட்டணி அமைக்க இருவரும் அடித்து ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இவர்களின் பாட்னர்ஷிப்பை உடைக்க முடியாமல் ஆர்சிபி பவுலர்கள் திணறினர். 50 பந்துகளில் 88 ரன்களை குவித்திருந்த ராபின் உத்தப்பாவை, வனிந்து ஹசரங்கா வெளியேற்றினார். அடுத்து வந்த ஜடேஜா முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்து விட்டு ரன் எதுவும் எடுக்காமல் நடையைக்கட்டினார்.
அதிரடியாக ஆடிய ஷிவம் துபே 20-வது ஓவரின் கடைசி பந்தில் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். 46 பந்துகளை சந்திருந்த அவர் 96 ரன்கள் குவித்து மிரட்டினார். இதையடுத்து 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து சென்னை அணி 216 ரன்களை குவித்தது. பெங்களூரு அணி தரப்பில், ஹசரங்கா 2 , ஹேசில்வுட் 1 விக்கெட் எடுத்திருந்தனர்.
நன்றி தமிழ் ஹிந்து
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சு தேர்வு; சென்னை முதலில் பேட்டிங்!/முதல் வெற்றி
கேப்டனாக முதல் வெற்றி... ஜடேஜா
-
-
ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 22வது லீக் ஆட்டத்தில்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனில் தனது முதல்
வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடந்து வரும் நிலையில் நேற்று
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ
அணிகள் மோதின. பெங்களூரு அணி டாஸ் வென்று பீல்டிங்
தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய சென்னை 20 ஓவர்
முடிவில் 4 விக்கெட்டுக்கு 216 ரன்கள் குவித்தது.
ராபின் உத்தப்பா 88 ரன்னில் அவுட்டானார்.
ஷிவம் துபே 95 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இவர்கள் இருவரும் தான் பெங்களூரு அணிக்கு இந்த இமாலய
இலக்கை நிர்ணயித்தவர்கள்.
துவக்கம் முதலே சிறப்பாக ஆட வேண்டும் என்ற முனைப்பில்
களமிறங்கிய பெங்களூரூ அணி 193 ரன்கள் மட்டுமே எடுத்தது.
தொடர்ந்து 4 தோல்விக்கு பிறகு சென்னை அணி முதல் வெற்றியைப் ப
திவு செய்துள்ளது. இது குறித்து சென்னை அணியின் கேப்டன் ஜடேஜா
கூறியதாவது,
இந்த வெற்றி நான் கேப்டனாக பெறும் முதல் வெற்றி.
இது எப்போதும் எனக்கு சிறப்பானது. எனவே, முதல் வெற்றியை எனது
மனைவிக்கு அர்ப்பணிக்கிறேன்.
முந்தைய நான்கு ஆட்டங்களில் எங்களால் எல்லையை கடக்க
முடியவில்லை. ஆனால் ஒரு குழுவாக நாங்கள் நன்றாக மீண்டு
வந்துள்ளோம். நான் இன்னும் கற்றுக்கொண்டு ஒவ்வொரு
விளையாட்டிலும் சிறப்பாக செயல்பட முயற்சிக்கிறேன் என
தெரிவித்தார்.
-
தமிழ் வெப்துனியா
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Similar topics
» இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி; டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு
» டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு
» இந்தியா இலங்கை நேரடி வர்ணனை
» டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் தேர்வு
» உலகக்கோப்பை அரையிறுதி: நியூசிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு
» டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு
» இந்தியா இலங்கை நேரடி வர்ணனை
» டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் தேர்வு
» உலகக்கோப்பை அரையிறுதி: நியூசிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|