ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 14:35

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:03

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:38

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 13:02

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூவெல்லாம் கேட்டுப்பார் என் பேர் சொல்லும்..

2 posters

Go down

பூவெல்லாம் கேட்டுப்பார் என் பேர் சொல்லும்.. Empty பூவெல்லாம் கேட்டுப்பார் என் பேர் சொல்லும்..

Post by ayyasamy ram Sat 5 Mar 2022 - 9:30

பூவெல்லாம் கேட்டுப்பார் என் பேர் சொல்லும்.. Tamil_News_large_2966719
-


சென்னை பேசின் பிரிட்ஜ் பக்கம் உள்ள வடக்கு மண்டல மாநகராட்சி
அலுவலகம்,
மாடியில் வளர்ந்த நிலையில் காணப்பட்ட வாழை மரங்கள் வந்து என்னைப்
பாரேன் என்று அழைத்தது

தரையில் தண்ணீர் விட்டு வளர்த்தாலே வரமாட்டேன் என்று அடம்பிடிக்கும்
வாழை, கான்கீரிட் கட்டிடத்தின் மாடியில் செழித்து வளர்ந்து காணப்படுகிறதே,
பக்கத்தில் போய் பார்த்து விடுவது என்று மொட்டை மாடிக்கு சென்றால்
அங்கே செடி கொடிகள் நிறைந்த ஒரு சோலைவனமே காட்சி தந்தது.

அவைகளை பராமரித்துவரும் மாநகராட்சி ஊழியர் எஸ்.ராஜிதான் இதற்கு
காரணமானவர். சில வருடங்களுக்கு முன் இங்கு பொறியாளராக பணியாற்றிய
ஜெயராமன் என்பவர்தான், இவ்வளவு பெரிய மொட்டை மாடியை மாடித்தோட்டம்
போட பயன்படுத்தலாமே என யோசனை சொல்லி அதற்கான உதவிகளும்
வழங்கினார்.

இதைப் பார்த்துக் கொள்ள ஆர்வம் உள்ள ஒரு ஊழியர் வேண்டுமே என்று
யோசித்த போது எதிலுமே ஒரு ஈடுபாட்டுடன் செயல்படக்கூடிய என்னை
நியமித்தனர்.

ஆரம்பத்தில் அழகுதரும் செடிகள் வளர்த்தேன் அதன் பின்னர் கத்திரி வெண்டை
அவரை புடலை உள்ளீட்ட செடிகளும் வாழை,பப்பாளி,சப்போட்டோ,கொய்யா
போன்ற மரங்களும் செம்பருத்தி,ரோஜா போன்ற மலர்ச் செடிகளும் வைத்தேன் .

நல்ல பலன் கிடைத்தது அதன் பிறகு நார்த்தங்காய்.எலுமிச்சை என்று பலவித
செடி கொடிகளை வளர்த்துவருகிறோம்.பயன் கிடைப்பதுடன் கண்ணுக்கும்
கட்டிடத்திற்கும் குளிர்சியாக இருப்பதால் இப்போது கட்டிடத்தின் மாடிப்படிகள்
மற்றும் வராண்டா என்று பல இடங்களில் செடிகள் வைத்துள்ளோம்.இப்போது
மொட்டை மாடி முழுவதும் செடி கொடி மரம் கீரை வகைகள் வளர்த்து வருகிறோம்,

காலையில் மாடிக்கு வந்து இந்த செடிகொடிகளுக்கு தண்ணீர் விடுவது உரமிடுவது
உள்ளீட்ட பராமரிப்பு பணிகளை பார்த்து முடிப்பதற்குள் மாலை வந்துவிடும்.


Last edited by ayyasamy ram on Sat 5 Mar 2022 - 9:33; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84008
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பூவெல்லாம் கேட்டுப்பார் என் பேர் சொல்லும்.. Empty Re: பூவெல்லாம் கேட்டுப்பார் என் பேர் சொல்லும்..

Post by ayyasamy ram Sat 5 Mar 2022 - 9:30

பூவெல்லாம் கேட்டுப்பார் என் பேர் சொல்லும்.. Gallerye_201233192_2966719
-

-
செயற்கை உரமே கிடையாது
செடிகளுக்கு விடும் தண்ணீர் தரைக்கு போய் தரையை பாழாக்கிவிடக்கூடாது
என்பதற்காக தேங்காய் நார் போட்டு அதன் மேல் செம்மண்,ஆற்று மண்,
மண்புழு உரமிட்டு செடிகளை வளர்க்கிறோம்

இதில் வளரும் வெண்டை கத்திரி உள்ளீடட்டவை நல்ல ருசியாக இருப்பதுடன்
ஆரோக்கியத்தையும் அள்ளித்தரும்

விளைந்த காய்கறி கீரைகளை இங்குள்ள எங்கள் அலுவலர்களுக்கு பகிர்ந்து
கொடுத்துவிடுவோம் இதனால் எல்லோரும் சந்தோஷமாக இங்கு வந்து
செடிகொடிகளை பார்த்து தங்களாலான உதவிகளை வழங்குவர்

எனக்கான பங்கை இதுவரை நான் வீட்டிற்கு எடுத்துச் சென்றது இல்லை
வழியில் எதிர்படும் ஏழை பெண்களிடம் கொடுத்துவிடுவேன் அவர்களுக்கு
அப்படி ஒரு சந்தோஷப்படுவர், மறுநாள் பார்க்கும் போது காய் அவ்வளவு
ருசிம்மா என பாராட்டவும் செய்வர்.

ஒவ்வொரு செடி கொடிகளையும் அது வளர்ந்து வருவதைப் பார்க்கும் போது
அவ்வளவு ஆனந்தமாக இருக்கும், நீ ஒரே ஆளா இவ்வளவையும் பராமரிக்கிறாய்
என எல்லோரும் ஆச்சரியமாக கேட்பர் நான் இதை வேலையாக பார்த்தால்தானே
சோர்வுவரும் என் பிள்ளைகளா பார்க்கும் போது ஆனந்தம்தானே வரும்.

பிள்ளைகளுக்கு ஆகாரமே தண்ணீர்தானே ஆகவே விடுமுறை நாள் என்றெல்லாம்
பார்க்கமாட்டேன் விடிந்ததும் செடிகளை பார்க்க வந்துவிடுவேன் நான் வரும்போது
வாடியிருக்கும் செடிகள் என்னைக்கண்டதும் மலர்ந்து சிரிக்கிற மாதிரியே இருக்கும்
இது எல்லாம் சொன்னால் புரியாது அனுபவித்தால்தான் தெரியும்.

அவ்வளவு ஏன் என் மகளுக்கு தலைப்பிரசவம் கூடவே இருந்து தாய்தான் பார்க்கணும்
ஆனா நான் செடி கொடிகள் மீது வச்சிருக்கிற பாசம் என் மகளுக்கு தெரியும் அவளே
அம்மா என்னைப்பார்த்துக்க ஆள் இருக்கு ஆனா நீ வச்ச செடியப்பார்க்க உன்னை
விட்டா ஆள் இல்ல போய்ட்டு வாம்மா என்று அனுப்பிவைத்தார்

நல்லா மழை பெஞ்சா இரண்டு மூணு நாளைக்கு செடிக்கு தண்ணீர்விட வேண்டிய
தேவை இருக்காது அந்த நேரம் பார்த்து போகவேண்டிய இடத்திற்கு போய்ட்டு
வந்துருவேன் எங்கே போனாலும் நினைப்பு என்னவோ இங்கதான் இருக்கு,இருக்கும்..
-
-எல்.முருகராஜ்
நன்றி-தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84008
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பூவெல்லாம் கேட்டுப்பார் என் பேர் சொல்லும்.. Empty Re: பூவெல்லாம் கேட்டுப்பார் என் பேர் சொல்லும்..

Post by T.N.Balasubramanian Sat 5 Mar 2022 - 11:17

வாழ்ந்திடுவோம் ராஜிதனை. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பூவெல்லாம் கேட்டுப்பார் என் பேர் சொல்லும்.. Empty Re: பூவெல்லாம் கேட்டுப்பார் என் பேர் சொல்லும்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum