புதிய பதிவுகள்
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிதை காதலர்களுக்கு மட்டும்
Page 1 of 1 •
பிரம்மராஜனின் அதி அற்புத கவிதைகள்
பழைய மிருகத்துடன் ஒரு புதிய மனிதன் சில குறிப்புகள்
சொல்லில் கிடைத்த சங்கிலியைக்
கழுத்தில் கட்டி
இழுத்துக்கொண்டலைந்தேன் அம்மிருகத்தை.
கிளைகளுடன் உரையாடித் திரும்பிய
மனநிலைகளில் விநோதப் பறவைகள் பற்றி
வண்ண வண்ணமாய்க் கதைகள் சொல்லிற்று
கேட்டவர் உறங்க.
கண்களில் நெருப்பு ஜொலித்தாலும்
பிடறியைத் தூண்டி நானை வளர்த்த பெண்களிடம்
நன்றி என்றது
குளிர் காற்றைப் பார்வையில் கொணர்ந்து.
கோடுகளைத் தாண்டிக்
காடுகளில் அலைந்து
சிறகு போல் இலகுவாய்
மாடிமேலிருந்து பறந்திறங்கிப்
பஸ் பிடிக்கக் கூச்சலிட்டுப் பிறாண்டிய மனிதர்களைக்
கேலிசெய்தது.
அலைதலில் அளவற்றுத்
தளர்வுற்றுத் தகர்ந்தபோது
சோடா உடைத்து நுரை நீரில் முகம் கழுவி
டாக்ஸி பிடித்து
வீடு சேர்ப்பித்தேன்.
தொல்லை போதும் காட்சி சாலையில் விடு என்றவர்க்குச்
சொன்னேன்
காட்சியே மறையும் விரைந்து
சாட்சியாய் ஒரு சொல் மட்டும்
நானென்று நிற்கும்.
இறப்புக்கு முன் சில படிமங்கள்
ஜன்னலில் அடைத்த வானம்.
குறுக்கிடும் பூச்செடிகளுடன்
சுப்ரபாதம் இல்லையென்றாலும்கூட
மங்களமான பனிப்புகையில்
விடியல்.
நரைத்து உடைந்த இரவின் சிதறல்கள்
நேரம் உண்டாகவே வந்துவிட்ட
தோட்டியின் கால்கள் முன்.
மண் தின்று எஞ்சிய
எலும்பின் கரைகளில் சிற்பத்தின் வாசனை
காற்றைத் தவிர
அவனுக்கு மட்டும்.
பியானேவென இசைத்து ஒலித்து
உறங்காமல் திரிந்த
மணிக்கூண்டு உணர்விழந்துவிட்டது
உறையும் குளிரில்.
பறந்த பறவைகள் வானில் கீறிய ஓவியம்
பார்த்ததில்
பந்தயம் இழந்தது நேற்று.
விரலிடுக்கில் வழிந்த காலத்தின்
துளிகளை
மற்றெரு கையில் ஏந்த
கணங்களை முழுவதும் எரித்தாகி விட்டது.
அவன் இறந்துவிட்டான்.
இன்றெதற்கு இரண்டாம் மாடியில்
அழகான அறை ?
அங்கு
பூக்கள் நிஜமாய் மலராது.
எதிர்கொள்ளல்
அரங்கத்தில் அடிக்கடி இருள்.
எங்கோ ஒரு நாள்
நரம்புகளின் லயத்துடன் இழைகிறது
வானவில்.
காதுகள் அற்றவர் அசைவில்
கழுதைகளை
மனதில் நிறுத்திவிட்டு மறைகின்றனர்.
அன்னையின் கைகள்
சிரசில் ஊர்வதை மீண்டும் எக்கிக் கேட்பதுபோல்
வீணையின் விரலில்
தரிசனம் தேடி வருகையில்
காலில் சகதி.
குவித்த விரல்களின் குவளையில்
கங்கை நீர்.
தகரத்தின் பிய்ந்த குரல்கள்
கழுவாத முகங்கள் போன்ற கட்டிடங்களின்
வாயில் நாறும் .
ஆயினும் மீட்டலொன்று போதும்.
குருதி கசியும்
மனதின் சுவர்களில்
தளிர்கள்
உதயமாகும்.
இப்பொழுது
கற்சிலையின் பாரம் உருகிக் கரைந்ததில்
புதியதொரு ஜனனம்.
காற்றைப் போல் மென்மை
அச்சிசுவின் காலெட்டில்.
நேற்று விழுந்த சருகுகள் நீருக்கு
நிறம் தரும்.
சுவை மாற
அலைகளும் உறங்காது.
உடனே புதிய ஊற்றுகளின்
கதவைத் தட்டு.
சற்றுமுன் சிறு விரல்களில் தந்த
மலர்
இப்பொழுது வாடும்.
மாற்று புதியதொன்றை மணத்துடன்.
நாளைக்கென்று நீளாத
தெருக்களில் நடக்கவிடு.
பார்வை விரியப் பாதை வளரட்டும்.
முன்பே ஒன்றிருந்தால்
உடைத்த கைகள், உளி
கல் துகள், கண்ணீர்,
இடது முலையில் இதழ்கள்,
சக்கரம், நெரிசல், மரங்கள்,
கார்கள், கார்பன் மோனாக்சைட்,
விடியலில் பறவைகளின் குரல்,
எல்லாமே
பளிச்சென்று ஜ்வலிக்க
கண் முன்
எப்பொழுதும் தா.
கூப்பிட்ட குரல்
மாலைக்கு மேல் வேளை கெட்டு வந்தால்
விபரீதம் தோற்றுவிக்கும்
பனங்காடுகள் தாண்டிப்
பண்ணை பூத்த விதவை நிலங்களுக்கும்
அப்பால்
கீற்று நிலா வெற்றுத்தனமாய்க் காயும்
மயிரற்ற ஆண் மார்புகளாய்க் கிடக்கும்
குன்றுகள் தாண்டித்
தனித்துப் போய்த் தனக்குத் தானே
சலசலக்கும் ஒற்றை அரசமரத்திற்கும்
அப்பால்
முகமற்ற குரலொன்று
அழைத்தது.
பாதைத் திருப்பமொன்றின் பாதியிருளில்
வீற்றிருந்தது
மனிதக் கைகளே கிளைகளாய்
வாவெனப் பரிவுடன் வீசிய
கனவின் மரம்
அப்பால்
அங்கிருக்கும்.
பாதுகை தேய்ந்தறுந்தும்
கட்டிய மணிப்பொறி விட்டெறிந்தும்
கலையாமல் தொடர்கிறது பயணம்
குரல் தேடி.
ஒரு யுகம் வேண்டும் முகம் தேட.
அறிந்த நிரந்தரம்
ரேடியம் முட்களெனச் சுடர்விடுகிறது விழிப்பு.
இரவெனும் கருப்புச் சூரியன்
வழிக் குகையில் எங்கோ சிக்கித் தவிக்கிறது.
நெட்டித் தள்ளியும் நகராத காலம்
எண்ணற்ற நத்தைகளாய்க் கூரையில் வழிகிறது.
அரைத் தூக்கத்தில் விழித்த காகம்
உறங்கும் குழந்தையின் ரோஜாப் பாதங்களைக்
கேட்காமல் மறதியில் கரைகிறது.
இதோ வந்தது முடிவென்ற
சாமச் சேவலின் கூவல்
ஒலிக்கிறது ஒரு ஸிம்பனியாக.
இரண்டாம் தஞ்சம்
பொய் முகம் உலர்ந்தன ஏரிகள்.
நாதியற்றுப்போன நாரைகள்
கால்நடைகளின் காலசைப்பில்
கண் வைத்துக் காத்திருக்கும்.
எப்பொழுது பறக்கும் வெட்டுக்கிளிகள்?
தன் புதிய அறைச்சுவர்களுடன் கோபித்த
மனிதன் ஒருவன்
ஒட்டடை படிந்த தலையுடன்
வாசல் திறந்து வருகிறான்
கோதும் விரல்களிடம்.
காயும் நிலவிலும் கிராமக் குடிசை
இருள் மூலைகள் வைத்திருக்கும்
மறக்காமல்
மின்மினிக்கு.
வாழும் பிரமைகள்
காலம் அழிந்து
கிடந்த நிலையில்
கடல் வந்து போயிருக்கிறது.
கொடிக்கம்பியும் அலமாரியும்
அம்மணமாய்ப் பார்த்து நிற்க
வாசலில் மட்டும் பாதம் தட்டி உதறிய மணல்.
நினைவின் சுவடாய் உதட்டில் படிந்த கரிப்பும்
காற்றில் கரைந்துவிட
வந்ததோ எனச் சந்தேகம் கவியும்.
பெண்ணுடல் பட்டுக் கசங்கிய ஆடைகள்
மறந்த மனதின்
இருண்ட மூலைகளினின்று
வெளிப்பட்டு
உடல் தேடி அலைவதால்
எங்கும் துணியின் சரசரப்பு.
அன்று பக்கவாட்டில் நடந்து வந்த மஞ்சள் நிலா
தசைகளின் சுடரை
நகல் எடுக்க முயன்று
கோட்டுக் கோலங்களைச் செதுக்கியது.
இறந்த நாள்களின்
குளிர் நீளக் கைகள்
நீண்டு வந்து
மறதியைக் கொண்டு தூர்த்துவிட
கற்பனைக்கும் சொந்தமில்லை
கோலங்கள்.
இளம் இரவில் இறந்தவர்கள்
இளம் இரவில் இறந்தவர்கள்
பிண வாடை மிதி வண்டியில் தொற்றி வந்து
அறைச் சுவர்களில் ஒட்டடையாய்த் தொங்கும்.
அடுத்த நாள்
நாசித் துவாரங்களில்
சாம்பல் நிறத்தில் காளான்கள் பூக்கும்.
அடிக்கடி கொடி மின்னல்கள்
வலியெனப் படர்வதால்
இதயச் சுவர்கள் காரை உதிர்க்கும்.
இரவறுத்தும் ஓயாத சிள் வண்டுகள்
இலையுதிரும் காலைகளில்
குயில்களின் பாட்டில் குரல் நீட்டிக் குறுக்கிடும்.
கானக மரங்கள் மூளைச் சாலைகளில்
படை எடுக்கும்.
லாரி என்ஜின்களின் நடை துவள
ஒரு ஸிம்பனியின் உச்சம் முற்றுப் பெறும்.
இறந்த இலைகள்
நடைக்கு அடியில் கிசுகிசுக்கும்.
சாணைக்கல் நெருப்புக் கம்பிகள் தெறித்து விழக்
காடு கருகி
உடல் நாற்றம் வீசும்.
நூலறுந்த பட்டமொன்று
யோனியில் நீந்தும் விந்தின் நினைவோடு
பூத்து நிற்கும் முருங்கையில் வால் துடிக்கும்.
நாளைக்கும் காற்று வரும்.
நிலைப்பாடு
பசிகொண்டு நிதம் செல்லும் பாதங்கள்
தொலைவற்ற தூரம் கேட்கும்.
சாலை மரங்கள் சற்றே
உரங்கிப்போவென்று சொல்லும்
தாம் தந்த நிழலுக்காய்.
கால்களில் தீப்பொறி குதிரைகளின் கனைப்பை
நினைவுக்குள் புகை மூட்டும்.
நிழல் தின்று ஆறாது பசியெனினும்
ஒரு கிளை பிடித்து
குடையெனப் பாவனைசெய்ய
தொடரும் பயணம்.
நினைவுக்கென வெட்டிக் கொடுத்து
பின் காயங்களில் சாசுவதம் கண்டு
வரும் நாள்கள் கழியும்.
வேர்கொள்ளாக் கால்கள்
பகற் கானலில் சாம்பலாகும்
கட்டிடங்களுக்கு அப்பால்
நீலத் தொடுவானம் தேடிச் செல்ல
வழி மரங்கள் தாம் பெற்ற
ராகங்களின் நிரந்தரமாறியாது
உடல் சிலிர்த்துப் பாதையை
நிறைக்கும்
கந்தல் நிழல் கொண்டு.
சுடர் அரங்கும்நத்தை ஓடுகளும்
அடுத்த மழைக்குக் காத்திராமல்
ஓடைக்கரையில் ஒதுங்கிய
நத்தை ஓடுகளுக்குத் தெரியாது.
விண்ணில் ஏகிய குதிரை வீரர்கள்
விட்டுச் சென்ற
பட்டாக் கத்திகள் குல்மொஹர் மரங்களில் தொங்கக்
கோடை நெருப்பில்
சிவப்புக் கலவரத்தில்
திக்கெங்கும் முன்னங்கால்களில் தாவும்
வேட்டை நாய்கள்
தலை உதறிச் சிலிர்த்த பனித்துளிகள்
துருவங்களில் விழுந்து
பூமியைச் சிறைபிடிக்க
நெஞ்சில் சுடருடன்
நடனம் காட்டுகின்றன
இவ்வறையின் தேய்த்த கண்ணாடிகள் மட்டும்.
இரவை உதறிய பறவையின் சிறு குரல்
சூரியனின் சாய்ந்த ஒளிக்கற்றையில் சரிய
சுவரில் சாய்ந்த மிருதங்கம் உருகி
உறை கழலுகிறது.
உறைந்த புல்லாங்குழலும்
கூடடைந்த பறவைச் சிறகில் ஆர்கனும்
முன் விழித்து
சமன் செய்துகொள்வதால்
எடுத்த அடியிலும்
பிடித்த முத்திரையிலும்
நடனம் தொடர்கிறது.
இல்லாமல் இருந்தது ஒன்றுதான்
இல்லாமல் இருந்தது ஒன்றுதான்.
மகிழ்ச்சியான கடல் அது.
தவிர
பறவைக் குரல்களாலும் உடைபடாமல்
தடுப்பவர்களற்றுக்
காலடியில் சுழன்று கொண்டிருந்தது
ஓர் ஆரஞ்சுப் பழமென அச்சாம்ராஜ்யம்.
புலர் பொழுதுகளில்
வெண்மையாய் விழித்தது
மலர்ந்த குளங்களில்.
வெறுக்காமல் மறுத்துப் புறப்பட்டபோது
சகுனம் பாராதிருந்தும்
மழை மரங்களின் மாலைச் சிந்தனையாகப்
பின்னிய கிளைகளில் சிக்கி நின்றது
மௌனமாய் மஞ்சள் சூரியன்.
வந்த நிலத்தில் அன்று
மழையில் நனைந்தது தொடக்கம்.
தேவையென்று கொண்டுவந்த நாள்களின்
எச்சம்
பாக்கெட்டில் நிறைந்த
வார்த்தைகள் மேல் பூத்தது.
மத்தாப்புக் கம்பிகளும் நனைந்திருந்தன.
மின்கம்பிகளின் தொய்வில்
இன்று உறக்கமின்மை ஊஞ்சல் பயில
நரம்பின் முடிச்சுகளில் கண்கூசும் வெளிச்சம்.
மீட்சிக்கு முயற்சியற்றுப் போயினும்
தாறுமாறாய்க் கிடக்கும் வார்த்தைகளை
உலுக்கிஎழுப்ப வேண்டும்.
கூண்டுகள்
புதிய இலக்குகளை மனதில் வைத்து
எம்பிப் பறந்ததில்
சிக்கிக்கொண்டது என் சிறகின் ஒரு மூலை
முழுமையடையாத
விடுதலையின் கம்பிகளில்.
அறுத்துக்கொண்டு அரைச் சொர்க்கத்திலிருந்து
படபடக்க யத்தனிக்கையில்
உன் நினைவு
ஒற்றை இறகாய்
பாரம் அறியாமல் இறங்கியது.
உன் விடுதலைக்காய் நான் இறைத்த வார்த்தைகள்
பாதை பாவாமல்
சிதறி வழியடைத்தன.
நாலெட்டில் உனது இலக்கு என
நான் நினைத்தபோதிலும்
இடைவெளியில் புகுந்து புறப்பட்டது
உன் பயணம்.
கால்களின் அளப்புக்கு மிஞ்சிய
என் பாதையில்
நானே பதிக்கவில்லை ஒரு பாதமும்.
நிழல் விளையாட்டு
கனவிலும் சாதுவாய்
வருகிற
கோழையைப் போல்
வளர்ந்துவிட்ட இந்நிழல் விளையாட்டிலும்
உனக்குக் கண்ணாமூச்சி.
நான் நான் இல்லையென்று
நீ மட்டும் நீதான் என்றும்
கற்பனை அரண்கட்டி
என்னைக் கை விரல்களுக்கப்பால் மறைத்து
என்னில் ஒரு பூனைக்குட்டியைப் பிரித்தெடுத்து
உனக்கு விளையாட்டு.
பால் எனக்கு என்றும் போல்.
கால்களும் பஞ்சல்லவென்பதால்
குவளைகள் உடைவதில்லை.
உன் சிதறல்களில் விழும் ஆச்சர்யம்
வளையல் துண்டுகளில் உருவிழக்கும்.
மனக்கூட்டில் வந்தடையும் சோகம்.
வளர்ந்த பின்னும்
மழலையே பேச்சென்றால்
நிறைய உண்டு
மரப்பாச்சிகள்
உனக்கு.
பழைய மிருகத்துடன் ஒரு புதிய மனிதன் சில குறிப்புகள்
சொல்லில் கிடைத்த சங்கிலியைக்
கழுத்தில் கட்டி
இழுத்துக்கொண்டலைந்தேன் அம்மிருகத்தை.
கிளைகளுடன் உரையாடித் திரும்பிய
மனநிலைகளில் விநோதப் பறவைகள் பற்றி
வண்ண வண்ணமாய்க் கதைகள் சொல்லிற்று
கேட்டவர் உறங்க.
கண்களில் நெருப்பு ஜொலித்தாலும்
பிடறியைத் தூண்டி நானை வளர்த்த பெண்களிடம்
நன்றி என்றது
குளிர் காற்றைப் பார்வையில் கொணர்ந்து.
கோடுகளைத் தாண்டிக்
காடுகளில் அலைந்து
சிறகு போல் இலகுவாய்
மாடிமேலிருந்து பறந்திறங்கிப்
பஸ் பிடிக்கக் கூச்சலிட்டுப் பிறாண்டிய மனிதர்களைக்
கேலிசெய்தது.
அலைதலில் அளவற்றுத்
தளர்வுற்றுத் தகர்ந்தபோது
சோடா உடைத்து நுரை நீரில் முகம் கழுவி
டாக்ஸி பிடித்து
வீடு சேர்ப்பித்தேன்.
தொல்லை போதும் காட்சி சாலையில் விடு என்றவர்க்குச்
சொன்னேன்
காட்சியே மறையும் விரைந்து
சாட்சியாய் ஒரு சொல் மட்டும்
நானென்று நிற்கும்.
இறப்புக்கு முன் சில படிமங்கள்
ஜன்னலில் அடைத்த வானம்.
குறுக்கிடும் பூச்செடிகளுடன்
சுப்ரபாதம் இல்லையென்றாலும்கூட
மங்களமான பனிப்புகையில்
விடியல்.
நரைத்து உடைந்த இரவின் சிதறல்கள்
நேரம் உண்டாகவே வந்துவிட்ட
தோட்டியின் கால்கள் முன்.
மண் தின்று எஞ்சிய
எலும்பின் கரைகளில் சிற்பத்தின் வாசனை
காற்றைத் தவிர
அவனுக்கு மட்டும்.
பியானேவென இசைத்து ஒலித்து
உறங்காமல் திரிந்த
மணிக்கூண்டு உணர்விழந்துவிட்டது
உறையும் குளிரில்.
பறந்த பறவைகள் வானில் கீறிய ஓவியம்
பார்த்ததில்
பந்தயம் இழந்தது நேற்று.
விரலிடுக்கில் வழிந்த காலத்தின்
துளிகளை
மற்றெரு கையில் ஏந்த
கணங்களை முழுவதும் எரித்தாகி விட்டது.
அவன் இறந்துவிட்டான்.
இன்றெதற்கு இரண்டாம் மாடியில்
அழகான அறை ?
அங்கு
பூக்கள் நிஜமாய் மலராது.
எதிர்கொள்ளல்
அரங்கத்தில் அடிக்கடி இருள்.
எங்கோ ஒரு நாள்
நரம்புகளின் லயத்துடன் இழைகிறது
வானவில்.
காதுகள் அற்றவர் அசைவில்
கழுதைகளை
மனதில் நிறுத்திவிட்டு மறைகின்றனர்.
அன்னையின் கைகள்
சிரசில் ஊர்வதை மீண்டும் எக்கிக் கேட்பதுபோல்
வீணையின் விரலில்
தரிசனம் தேடி வருகையில்
காலில் சகதி.
குவித்த விரல்களின் குவளையில்
கங்கை நீர்.
தகரத்தின் பிய்ந்த குரல்கள்
கழுவாத முகங்கள் போன்ற கட்டிடங்களின்
வாயில் நாறும் .
ஆயினும் மீட்டலொன்று போதும்.
குருதி கசியும்
மனதின் சுவர்களில்
தளிர்கள்
உதயமாகும்.
இப்பொழுது
கற்சிலையின் பாரம் உருகிக் கரைந்ததில்
புதியதொரு ஜனனம்.
காற்றைப் போல் மென்மை
அச்சிசுவின் காலெட்டில்.
நேற்று விழுந்த சருகுகள் நீருக்கு
நிறம் தரும்.
சுவை மாற
அலைகளும் உறங்காது.
உடனே புதிய ஊற்றுகளின்
கதவைத் தட்டு.
சற்றுமுன் சிறு விரல்களில் தந்த
மலர்
இப்பொழுது வாடும்.
மாற்று புதியதொன்றை மணத்துடன்.
நாளைக்கென்று நீளாத
தெருக்களில் நடக்கவிடு.
பார்வை விரியப் பாதை வளரட்டும்.
முன்பே ஒன்றிருந்தால்
உடைத்த கைகள், உளி
கல் துகள், கண்ணீர்,
இடது முலையில் இதழ்கள்,
சக்கரம், நெரிசல், மரங்கள்,
கார்கள், கார்பன் மோனாக்சைட்,
விடியலில் பறவைகளின் குரல்,
எல்லாமே
பளிச்சென்று ஜ்வலிக்க
கண் முன்
எப்பொழுதும் தா.
கூப்பிட்ட குரல்
மாலைக்கு மேல் வேளை கெட்டு வந்தால்
விபரீதம் தோற்றுவிக்கும்
பனங்காடுகள் தாண்டிப்
பண்ணை பூத்த விதவை நிலங்களுக்கும்
அப்பால்
கீற்று நிலா வெற்றுத்தனமாய்க் காயும்
மயிரற்ற ஆண் மார்புகளாய்க் கிடக்கும்
குன்றுகள் தாண்டித்
தனித்துப் போய்த் தனக்குத் தானே
சலசலக்கும் ஒற்றை அரசமரத்திற்கும்
அப்பால்
முகமற்ற குரலொன்று
அழைத்தது.
பாதைத் திருப்பமொன்றின் பாதியிருளில்
வீற்றிருந்தது
மனிதக் கைகளே கிளைகளாய்
வாவெனப் பரிவுடன் வீசிய
கனவின் மரம்
அப்பால்
அங்கிருக்கும்.
பாதுகை தேய்ந்தறுந்தும்
கட்டிய மணிப்பொறி விட்டெறிந்தும்
கலையாமல் தொடர்கிறது பயணம்
குரல் தேடி.
ஒரு யுகம் வேண்டும் முகம் தேட.
அறிந்த நிரந்தரம்
ரேடியம் முட்களெனச் சுடர்விடுகிறது விழிப்பு.
இரவெனும் கருப்புச் சூரியன்
வழிக் குகையில் எங்கோ சிக்கித் தவிக்கிறது.
நெட்டித் தள்ளியும் நகராத காலம்
எண்ணற்ற நத்தைகளாய்க் கூரையில் வழிகிறது.
அரைத் தூக்கத்தில் விழித்த காகம்
உறங்கும் குழந்தையின் ரோஜாப் பாதங்களைக்
கேட்காமல் மறதியில் கரைகிறது.
இதோ வந்தது முடிவென்ற
சாமச் சேவலின் கூவல்
ஒலிக்கிறது ஒரு ஸிம்பனியாக.
இரண்டாம் தஞ்சம்
பொய் முகம் உலர்ந்தன ஏரிகள்.
நாதியற்றுப்போன நாரைகள்
கால்நடைகளின் காலசைப்பில்
கண் வைத்துக் காத்திருக்கும்.
எப்பொழுது பறக்கும் வெட்டுக்கிளிகள்?
தன் புதிய அறைச்சுவர்களுடன் கோபித்த
மனிதன் ஒருவன்
ஒட்டடை படிந்த தலையுடன்
வாசல் திறந்து வருகிறான்
கோதும் விரல்களிடம்.
காயும் நிலவிலும் கிராமக் குடிசை
இருள் மூலைகள் வைத்திருக்கும்
மறக்காமல்
மின்மினிக்கு.
வாழும் பிரமைகள்
காலம் அழிந்து
கிடந்த நிலையில்
கடல் வந்து போயிருக்கிறது.
கொடிக்கம்பியும் அலமாரியும்
அம்மணமாய்ப் பார்த்து நிற்க
வாசலில் மட்டும் பாதம் தட்டி உதறிய மணல்.
நினைவின் சுவடாய் உதட்டில் படிந்த கரிப்பும்
காற்றில் கரைந்துவிட
வந்ததோ எனச் சந்தேகம் கவியும்.
பெண்ணுடல் பட்டுக் கசங்கிய ஆடைகள்
மறந்த மனதின்
இருண்ட மூலைகளினின்று
வெளிப்பட்டு
உடல் தேடி அலைவதால்
எங்கும் துணியின் சரசரப்பு.
அன்று பக்கவாட்டில் நடந்து வந்த மஞ்சள் நிலா
தசைகளின் சுடரை
நகல் எடுக்க முயன்று
கோட்டுக் கோலங்களைச் செதுக்கியது.
இறந்த நாள்களின்
குளிர் நீளக் கைகள்
நீண்டு வந்து
மறதியைக் கொண்டு தூர்த்துவிட
கற்பனைக்கும் சொந்தமில்லை
கோலங்கள்.
இளம் இரவில் இறந்தவர்கள்
இளம் இரவில் இறந்தவர்கள்
பிண வாடை மிதி வண்டியில் தொற்றி வந்து
அறைச் சுவர்களில் ஒட்டடையாய்த் தொங்கும்.
அடுத்த நாள்
நாசித் துவாரங்களில்
சாம்பல் நிறத்தில் காளான்கள் பூக்கும்.
அடிக்கடி கொடி மின்னல்கள்
வலியெனப் படர்வதால்
இதயச் சுவர்கள் காரை உதிர்க்கும்.
இரவறுத்தும் ஓயாத சிள் வண்டுகள்
இலையுதிரும் காலைகளில்
குயில்களின் பாட்டில் குரல் நீட்டிக் குறுக்கிடும்.
கானக மரங்கள் மூளைச் சாலைகளில்
படை எடுக்கும்.
லாரி என்ஜின்களின் நடை துவள
ஒரு ஸிம்பனியின் உச்சம் முற்றுப் பெறும்.
இறந்த இலைகள்
நடைக்கு அடியில் கிசுகிசுக்கும்.
சாணைக்கல் நெருப்புக் கம்பிகள் தெறித்து விழக்
காடு கருகி
உடல் நாற்றம் வீசும்.
நூலறுந்த பட்டமொன்று
யோனியில் நீந்தும் விந்தின் நினைவோடு
பூத்து நிற்கும் முருங்கையில் வால் துடிக்கும்.
நாளைக்கும் காற்று வரும்.
நிலைப்பாடு
பசிகொண்டு நிதம் செல்லும் பாதங்கள்
தொலைவற்ற தூரம் கேட்கும்.
சாலை மரங்கள் சற்றே
உரங்கிப்போவென்று சொல்லும்
தாம் தந்த நிழலுக்காய்.
கால்களில் தீப்பொறி குதிரைகளின் கனைப்பை
நினைவுக்குள் புகை மூட்டும்.
நிழல் தின்று ஆறாது பசியெனினும்
ஒரு கிளை பிடித்து
குடையெனப் பாவனைசெய்ய
தொடரும் பயணம்.
நினைவுக்கென வெட்டிக் கொடுத்து
பின் காயங்களில் சாசுவதம் கண்டு
வரும் நாள்கள் கழியும்.
வேர்கொள்ளாக் கால்கள்
பகற் கானலில் சாம்பலாகும்
கட்டிடங்களுக்கு அப்பால்
நீலத் தொடுவானம் தேடிச் செல்ல
வழி மரங்கள் தாம் பெற்ற
ராகங்களின் நிரந்தரமாறியாது
உடல் சிலிர்த்துப் பாதையை
நிறைக்கும்
கந்தல் நிழல் கொண்டு.
சுடர் அரங்கும்நத்தை ஓடுகளும்
அடுத்த மழைக்குக் காத்திராமல்
ஓடைக்கரையில் ஒதுங்கிய
நத்தை ஓடுகளுக்குத் தெரியாது.
விண்ணில் ஏகிய குதிரை வீரர்கள்
விட்டுச் சென்ற
பட்டாக் கத்திகள் குல்மொஹர் மரங்களில் தொங்கக்
கோடை நெருப்பில்
சிவப்புக் கலவரத்தில்
திக்கெங்கும் முன்னங்கால்களில் தாவும்
வேட்டை நாய்கள்
தலை உதறிச் சிலிர்த்த பனித்துளிகள்
துருவங்களில் விழுந்து
பூமியைச் சிறைபிடிக்க
நெஞ்சில் சுடருடன்
நடனம் காட்டுகின்றன
இவ்வறையின் தேய்த்த கண்ணாடிகள் மட்டும்.
இரவை உதறிய பறவையின் சிறு குரல்
சூரியனின் சாய்ந்த ஒளிக்கற்றையில் சரிய
சுவரில் சாய்ந்த மிருதங்கம் உருகி
உறை கழலுகிறது.
உறைந்த புல்லாங்குழலும்
கூடடைந்த பறவைச் சிறகில் ஆர்கனும்
முன் விழித்து
சமன் செய்துகொள்வதால்
எடுத்த அடியிலும்
பிடித்த முத்திரையிலும்
நடனம் தொடர்கிறது.
இல்லாமல் இருந்தது ஒன்றுதான்
இல்லாமல் இருந்தது ஒன்றுதான்.
மகிழ்ச்சியான கடல் அது.
தவிர
பறவைக் குரல்களாலும் உடைபடாமல்
தடுப்பவர்களற்றுக்
காலடியில் சுழன்று கொண்டிருந்தது
ஓர் ஆரஞ்சுப் பழமென அச்சாம்ராஜ்யம்.
புலர் பொழுதுகளில்
வெண்மையாய் விழித்தது
மலர்ந்த குளங்களில்.
வெறுக்காமல் மறுத்துப் புறப்பட்டபோது
சகுனம் பாராதிருந்தும்
மழை மரங்களின் மாலைச் சிந்தனையாகப்
பின்னிய கிளைகளில் சிக்கி நின்றது
மௌனமாய் மஞ்சள் சூரியன்.
வந்த நிலத்தில் அன்று
மழையில் நனைந்தது தொடக்கம்.
தேவையென்று கொண்டுவந்த நாள்களின்
எச்சம்
பாக்கெட்டில் நிறைந்த
வார்த்தைகள் மேல் பூத்தது.
மத்தாப்புக் கம்பிகளும் நனைந்திருந்தன.
மின்கம்பிகளின் தொய்வில்
இன்று உறக்கமின்மை ஊஞ்சல் பயில
நரம்பின் முடிச்சுகளில் கண்கூசும் வெளிச்சம்.
மீட்சிக்கு முயற்சியற்றுப் போயினும்
தாறுமாறாய்க் கிடக்கும் வார்த்தைகளை
உலுக்கிஎழுப்ப வேண்டும்.
கூண்டுகள்
புதிய இலக்குகளை மனதில் வைத்து
எம்பிப் பறந்ததில்
சிக்கிக்கொண்டது என் சிறகின் ஒரு மூலை
முழுமையடையாத
விடுதலையின் கம்பிகளில்.
அறுத்துக்கொண்டு அரைச் சொர்க்கத்திலிருந்து
படபடக்க யத்தனிக்கையில்
உன் நினைவு
ஒற்றை இறகாய்
பாரம் அறியாமல் இறங்கியது.
உன் விடுதலைக்காய் நான் இறைத்த வார்த்தைகள்
பாதை பாவாமல்
சிதறி வழியடைத்தன.
நாலெட்டில் உனது இலக்கு என
நான் நினைத்தபோதிலும்
இடைவெளியில் புகுந்து புறப்பட்டது
உன் பயணம்.
கால்களின் அளப்புக்கு மிஞ்சிய
என் பாதையில்
நானே பதிக்கவில்லை ஒரு பாதமும்.
நிழல் விளையாட்டு
கனவிலும் சாதுவாய்
வருகிற
கோழையைப் போல்
வளர்ந்துவிட்ட இந்நிழல் விளையாட்டிலும்
உனக்குக் கண்ணாமூச்சி.
நான் நான் இல்லையென்று
நீ மட்டும் நீதான் என்றும்
கற்பனை அரண்கட்டி
என்னைக் கை விரல்களுக்கப்பால் மறைத்து
என்னில் ஒரு பூனைக்குட்டியைப் பிரித்தெடுத்து
உனக்கு விளையாட்டு.
பால் எனக்கு என்றும் போல்.
கால்களும் பஞ்சல்லவென்பதால்
குவளைகள் உடைவதில்லை.
உன் சிதறல்களில் விழும் ஆச்சர்யம்
வளையல் துண்டுகளில் உருவிழக்கும்.
மனக்கூட்டில் வந்தடையும் சோகம்.
வளர்ந்த பின்னும்
மழலையே பேச்சென்றால்
நிறைய உண்டு
மரப்பாச்சிகள்
உனக்கு.
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
யாருப்பா எழுதுனது இந்த கவிதையை படிக்கவே 1 வாரம் ஆகும் போல..........
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
இவரோட கவிதைய படிக்கற அளவுக்கு எனக்கு ஞானம்
இல்லைன்னு நேனைக்றேன்
இல்லைன்னு நேனைக்றேன்
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
றொம்ப பெரிசு முடியல
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|