Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
உக்ரைனில் இந்திய மருத்துவ மாணவர்கள்.+ மத்திய அரசின் நடவடிக்கை
2 posters
Page 1 of 1
உக்ரைனில் இந்திய மருத்துவ மாணவர்கள்.+ மத்திய அரசின் நடவடிக்கை
புதுடில்லி : உக்ரைனில் தமிழகம் உட்பட இந்திய மாணவர்கள் பலர் மருத்துவம் படிக்கின்றனர். இதில் பெரும்பாலோனார் ஹரியானா, பஞ்சாபை சேர்ந்தவர்கள்.
உக்ரைனில் வழங்கப்படும் எம்.பி.பி.எஸ்., படிப்பு, இந்திய மருத்துவ கவுன்சில், உலக சுகாதார கவுன்சில், ஐரோப்பா, பிரிட்டன் உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் அங்கீகரிக்கப்படுகிறது. மேலும் படிப்புக்கான செலவும் குறைவு. இதனால் இந்திய மாணவர்கள் பலர் மருத்துவம் படிக்க உக்ரைனுக்கு செல்கின்றனர்.
இதுகுறித்து பஞ்சாபின் ஜலந்தரை சேர்ந்த டாக்டர் அஷ்வனி குமார் கூறுகையில், ''இந்தியாவில் தனியார் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., படிக்க ஆண்டுக்கு 10 - 12 லட்ச ரூபாய் செலவாகும். நான்கரை ஆண்டுகளில் மொத்தம் 50 லட்ச ரூபாய் செலவாகும். உக்ரைனில் எம்.பி.பி.எஸ்., படிக்க ஆண்டுக்கு 4 - 5 லட்ச ரூபாய் மட்டுமே செலவாகும். இது பஞ்சாப் தனியார் கல்லுாரிகளில் ஆகும் செலவை விட மூன்று மடங்கு குறைவு,'' என்றார்.
நன்றி தினமலர்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: உக்ரைனில் இந்திய மருத்துவ மாணவர்கள்.+ மத்திய அரசின் நடவடிக்கை
புதுடில்லி : ரஷ்ய ராணுவத்தின் தாக்குதல்களை சந்தித்து வரும் உக்ரைனில், 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி உத்தரவின்படி, அவர்களை பாதுகாப்பாக மீட்கும் பணிகளில் வெளியுறவுத் துறை அமைச்சகம் முழுவீச்சில் இறங்கி உள்ளது. உக்ரைனில் வான்வழி மூடப்பட்டுள்ளதால், அதன் அண்டை நாடுகளுக்கு இந்தியர்களை வரவழைத்து, அங்கிருந்து விமானங்கள் வாயிலாக இந்தியாவுக்கு அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனை கைப்பற்றுவதற்காக, அதன் எல்லைக்குள் நுழைந்து ரஷ்ய வீரர்கள் போர் தொடுத்து வருகின்றனர்.
ஏவுகணை மற்றும் குண்டுமழை பொழிந்து தாக்குதல் நடத்தி வருவதால், அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.போருக்கு மத்தியில் உக்ரைனில், 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள். தமிழகத்தைச் சேர்ந்த 5,000 மாணவர்கள் அங்கு சிக்கி உள்ளனர். கேரளாவில் இருந்து 2,320; ஒடிசாவில் இருந்து 1,500; மஹாராஷ்டிராவில் இருந்து 1,200; ஜம்மு - காஷ்மீரில் இருந்து 200; கர்நாடகாவில் இருந்து 91; மத்திய பிரதேசத்தில் இருந்து 46 பேர் என, ஏராளமான மாணவர்கள் அங்கு உள்ளனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி உத்தரவின்படி அங்குள்ள இந்தியர்களை பாதுகாப்பாக அழைத்து வரும் பணியில், மத்திய வெளியுறவுத் துறை ஈடுபட்டு வருகிறது.இது தொடர்பாக நேற்று முன்தினம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன், பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசினார். அப்போது இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற ரஷ்ய அதிபர் உறுதி அளித்ததாக தகவல் வெளியாகின.
உக்ரைனின் வான்வழி மூடப்பட்டுள்ளதால், அதன் அண்டை நாடுகளான ஹங்கேரி மற்றும் ருமேனியாவின் எல்லைப் பகுதிகளுக்கு இந்திய அதிகாரிகளின் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. உக்ரைனில் உள்ள இந்தியர்கள், அந்த எல்லைப் பகுதிகளுக்கு வரவழைக்கப்பட்டு அங்கிருந்து சிறப்பு விமானங்கள் வாயிலாக, அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக நேற்று, ருமேனியாவுக்கு இரண்டு ஏர் இந்தியா விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. ருமேனியா எல்லைக்கு வந்து சேரும் மாணவர்கள், அதன் தலைநகர் புகாரெஸ்ட் நகருக்கு சாலை மார்க்கமாக அழைத்துச் சென்று, அங்கிருந்து இந்தியாவுக்கு விமானங்களில் அழைத்து வரப்படுவர். இந்த இரண்டு விமானங்களும் இன்று புகாரெஸ்டில் இருந்து புறப்படும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்கிடையே உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள இந்திய துாதரகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:உக்ரைனில் மோசமான சூழல் நிலவுகிறது. இந்த இக்கட்டான சூழலில், இந்தியர்கள் அனைவரும் மன உறுதியுடன் இருக்க வேண்டும். பாதுகாப்பாகவும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். இந்தியர்களுக்கு உதவ, 24 மணி நேரமும் துாதரக அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.
ருமேனியா மற்றும் ஹங்கேரி வாயிலாக மாற்று வழியில், இந்தியர்களை அழைத்துச் செல்ல, இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக உக்ரைன் - ஹங்கேரி இடையில் உள்ள சோப்ஜஹோனி எல்லைப் பகுதியிலும், உக்ரைன் - ருமேனியா இடையில் உள்ள பொரப்னேஸ்டிரட் எல்லையிலும் இந்திய அதிகாரிகள் காத்திருக்கின்றனர். அவர்கள் இந்தியர்கள் அனைவரையும் பாதுகாப்பாக அழைத்துச் செல்வர்.
அங்கு வரும் இந்தியர்கள், 'பாஸ்போர்ட்' வைத்திருக்க வேண்டும். அவசர செலவுக்காக அமெரிக்க டாலர்களில் பணம் மற்றும் தடுப்பூசி சான்றிதழையும் வைத்திருக்க வேண்டும்.பாதுகாப்பு நடவடிக்கையாக ஹங்கேரி, ருமேனியா எல்லைப் பகுதிக்கு பயணிக்கும்போது, இந்திய தேசிய கொடியை அச்சிட்டு, தாங்கள் பயணிக்கும் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களில் அதை ஒட்ட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே உக்ரைனில் இருந்து புறப்பட்ட இந்திய மாணவர்களின் முதல் குழு, ருமேனியா எல்லைக்கு நேற்று மாலை வந்தடைந்தது. மற்றொரு குழுவினர் பஸ் வாயிலாக போலந்து எல்லைக்கு புறப்பட்டனர். ஆனால், போலந்து எல்லைக்கு 8 கி.மீ.,க்கு முன்பாகவே, அவர்கள் இறக்கி விடப்பட்டனர். இதனால் அவர்கள் நடந்தே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
செலவை அரசு ஏற்கும்
உக்ரைனில் இருந்து, அதன் அண்டை நாடுகளுக்கு வரவழைக்கப்படும் இந்தியர்கள், 'ஏர் இந்தியா' விமானங்களில் இந்தியாவுக்கு அழைத்துவரப்படஉள்ளனர். இந்நிலையில், அந்த விமான பயணத்திற்கு ஆகும் முழு செலவையும் ஏற்றுக் கொள்ள, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சொத்து முடக்கம்?
உக்ரைன் மீது முழுவீச்சில் போர் தொடுத்து வரும் ரஷ்யா மீது, பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விதித்து வருகின்றன. இந்நிலையில் ரஷ்ய அதிபர் புடின் மற்றும் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோ ஆகியோருக்கு சொந்த மாக ஐரோப்பிய நாடுகளில் உள்ள சொத்துக்களை முடக்க, ஐரோப்பிய யூனியன் பரிசீலித்து வருகிறது.
திடீர் அழைப்பு
உக்ரைனுடன் பேச்சு நடத்த தயார் என ரஷ்யா நேற்று அறிவித்தது. அடுத்த சில மணி நேரங்களில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றொரு அறிவிப்பை வெளியிட்டார்.“உக்ரைனில் தற்போதுள்ள அரசை அகற்றிவிட்டு, ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றினால், பேச்சு நடத்தி எளிதில் தீர்வு காண முடியும்,” என புடின் தெரிவித்துள்ளார்.
தினமலர்
ஏவுகணை மற்றும் குண்டுமழை பொழிந்து தாக்குதல் நடத்தி வருவதால், அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.போருக்கு மத்தியில் உக்ரைனில், 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள். தமிழகத்தைச் சேர்ந்த 5,000 மாணவர்கள் அங்கு சிக்கி உள்ளனர். கேரளாவில் இருந்து 2,320; ஒடிசாவில் இருந்து 1,500; மஹாராஷ்டிராவில் இருந்து 1,200; ஜம்மு - காஷ்மீரில் இருந்து 200; கர்நாடகாவில் இருந்து 91; மத்திய பிரதேசத்தில் இருந்து 46 பேர் என, ஏராளமான மாணவர்கள் அங்கு உள்ளனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி உத்தரவின்படி அங்குள்ள இந்தியர்களை பாதுகாப்பாக அழைத்து வரும் பணியில், மத்திய வெளியுறவுத் துறை ஈடுபட்டு வருகிறது.இது தொடர்பாக நேற்று முன்தினம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன், பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசினார். அப்போது இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற ரஷ்ய அதிபர் உறுதி அளித்ததாக தகவல் வெளியாகின.
உக்ரைனின் வான்வழி மூடப்பட்டுள்ளதால், அதன் அண்டை நாடுகளான ஹங்கேரி மற்றும் ருமேனியாவின் எல்லைப் பகுதிகளுக்கு இந்திய அதிகாரிகளின் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. உக்ரைனில் உள்ள இந்தியர்கள், அந்த எல்லைப் பகுதிகளுக்கு வரவழைக்கப்பட்டு அங்கிருந்து சிறப்பு விமானங்கள் வாயிலாக, அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக நேற்று, ருமேனியாவுக்கு இரண்டு ஏர் இந்தியா விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. ருமேனியா எல்லைக்கு வந்து சேரும் மாணவர்கள், அதன் தலைநகர் புகாரெஸ்ட் நகருக்கு சாலை மார்க்கமாக அழைத்துச் சென்று, அங்கிருந்து இந்தியாவுக்கு விமானங்களில் அழைத்து வரப்படுவர். இந்த இரண்டு விமானங்களும் இன்று புகாரெஸ்டில் இருந்து புறப்படும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்கிடையே உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள இந்திய துாதரகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:உக்ரைனில் மோசமான சூழல் நிலவுகிறது. இந்த இக்கட்டான சூழலில், இந்தியர்கள் அனைவரும் மன உறுதியுடன் இருக்க வேண்டும். பாதுகாப்பாகவும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். இந்தியர்களுக்கு உதவ, 24 மணி நேரமும் துாதரக அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.
ருமேனியா மற்றும் ஹங்கேரி வாயிலாக மாற்று வழியில், இந்தியர்களை அழைத்துச் செல்ல, இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக உக்ரைன் - ஹங்கேரி இடையில் உள்ள சோப்ஜஹோனி எல்லைப் பகுதியிலும், உக்ரைன் - ருமேனியா இடையில் உள்ள பொரப்னேஸ்டிரட் எல்லையிலும் இந்திய அதிகாரிகள் காத்திருக்கின்றனர். அவர்கள் இந்தியர்கள் அனைவரையும் பாதுகாப்பாக அழைத்துச் செல்வர்.
அங்கு வரும் இந்தியர்கள், 'பாஸ்போர்ட்' வைத்திருக்க வேண்டும். அவசர செலவுக்காக அமெரிக்க டாலர்களில் பணம் மற்றும் தடுப்பூசி சான்றிதழையும் வைத்திருக்க வேண்டும்.பாதுகாப்பு நடவடிக்கையாக ஹங்கேரி, ருமேனியா எல்லைப் பகுதிக்கு பயணிக்கும்போது, இந்திய தேசிய கொடியை அச்சிட்டு, தாங்கள் பயணிக்கும் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களில் அதை ஒட்ட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே உக்ரைனில் இருந்து புறப்பட்ட இந்திய மாணவர்களின் முதல் குழு, ருமேனியா எல்லைக்கு நேற்று மாலை வந்தடைந்தது. மற்றொரு குழுவினர் பஸ் வாயிலாக போலந்து எல்லைக்கு புறப்பட்டனர். ஆனால், போலந்து எல்லைக்கு 8 கி.மீ.,க்கு முன்பாகவே, அவர்கள் இறக்கி விடப்பட்டனர். இதனால் அவர்கள் நடந்தே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
செலவை அரசு ஏற்கும்
உக்ரைனில் இருந்து, அதன் அண்டை நாடுகளுக்கு வரவழைக்கப்படும் இந்தியர்கள், 'ஏர் இந்தியா' விமானங்களில் இந்தியாவுக்கு அழைத்துவரப்படஉள்ளனர். இந்நிலையில், அந்த விமான பயணத்திற்கு ஆகும் முழு செலவையும் ஏற்றுக் கொள்ள, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சொத்து முடக்கம்?
உக்ரைன் மீது முழுவீச்சில் போர் தொடுத்து வரும் ரஷ்யா மீது, பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விதித்து வருகின்றன. இந்நிலையில் ரஷ்ய அதிபர் புடின் மற்றும் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோ ஆகியோருக்கு சொந்த மாக ஐரோப்பிய நாடுகளில் உள்ள சொத்துக்களை முடக்க, ஐரோப்பிய யூனியன் பரிசீலித்து வருகிறது.
திடீர் அழைப்பு
உக்ரைனுடன் பேச்சு நடத்த தயார் என ரஷ்யா நேற்று அறிவித்தது. அடுத்த சில மணி நேரங்களில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றொரு அறிவிப்பை வெளியிட்டார்.“உக்ரைனில் தற்போதுள்ள அரசை அகற்றிவிட்டு, ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றினால், பேச்சு நடத்தி எளிதில் தீர்வு காண முடியும்,” என புடின் தெரிவித்துள்ளார்.
தினமலர்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: உக்ரைனில் இந்திய மருத்துவ மாணவர்கள்.+ மத்திய அரசின் நடவடிக்கை
ரஷ்யா, உக்ரைனுக்கு விதிக்கும் நிபந்தனைகள்
* ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கிரீமியாவை ரஷ்ய பகுதியாக ஏற்க வேண்டும்.
* நேட்டோவில் இருந்து விலக வேண்டும்.
*மேலை நாடுகளில் இருந்து இராணுவ சாதனங்களை வாங்க கூடாது.
* ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கிரீமியாவை ரஷ்ய பகுதியாக ஏற்க வேண்டும்.
* நேட்டோவில் இருந்து விலக வேண்டும்.
*மேலை நாடுகளில் இருந்து இராணுவ சாதனங்களை வாங்க கூடாது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» உக்ரைனில் இந்திய மாணவர்கள் 2 பேர் குத்திக் கொலை
» மத்திய அரசின் 'இ-சஞ்சீவினி' திட்டம் : 'ஆன்லைன்' மூலம் மருத்துவ ஆலோசனை
» உக்ரைனில் இந்திய மாணவன் பலி
» மருத்துவ லைசென்ஸ் தேர்வை ரத்து செய்தது உக்ரைன்: இந்திய மாணவர்கள் நிம்மதி
» திருச்சி மாணவர்கள் மீது தாக்குதல் : நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர்கள் உண்ணாவிரதம்!
» மத்திய அரசின் 'இ-சஞ்சீவினி' திட்டம் : 'ஆன்லைன்' மூலம் மருத்துவ ஆலோசனை
» உக்ரைனில் இந்திய மாணவன் பலி
» மருத்துவ லைசென்ஸ் தேர்வை ரத்து செய்தது உக்ரைன்: இந்திய மாணவர்கள் நிம்மதி
» திருச்சி மாணவர்கள் மீது தாக்குதல் : நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர்கள் உண்ணாவிரதம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|