ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜதந்திரத்தில் புடின் வெற்றி: சொதப்பிய பைடன்

Go down

ராஜதந்திரத்தில் புடின் வெற்றி: சொதப்பிய பைடன் Empty ராஜதந்திரத்தில் புடின் வெற்றி: சொதப்பிய பைடன்

Post by ayyasamy ram Fri Feb 25, 2022 9:45 am

ராஜதந்திரத்தில் புடின் வெற்றி: சொதப்பிய பைடன் Tamil_News_2_25_2022_74233646
அரசியலில் வரலாறு பெரும் முக்கியத்துவம் பெறுகிறது. அரசியல் தலைவர்கள் இந்த வரலாற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும். இதில் இருந்து பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும். அப்படி செய்யாத தலைவர்கள் தோல்வி அடைகின்றனர். இதற்கு தற்போதைய சிறந்த எடுத்துக்காட்டாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இருக்கிறார்.

நேட்டோ அமைப்பு கடந்த 2008ம் ஆண்டில் நடத்திய புகாரெஸ்ட் உச்சி மாநாட்டில், உக்ரைன், ஜார்ஜியா ஆகியவற்றை புதிய உறுப்பு நாடுகளாக சேர்க்கப்பட இருப்பதாக அறிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், அடுத்த ஒரு மாதத்திற்கு பிறகு ஜார்ஜியா மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து, உக்ரைனிலும் குழப்பங்களை ஏற்படுத்தினார். உக்ரைனில் 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் ஐரோப்பாவுக்கு எதிரான முதல் போராட்டம் வெடித்தது. இதையடுத்து, 2014 மார்ச்சில் கிரீமியாவிலும் போராட்டம் வெடித்தது. இவை அனைத்திலும் புடினுக்கு முக்கிய பங்குள்ளது. புகாரெஸ்ட் உச்சி மாநாட்டின் போது பைடன் அப்போதைய அதிபர் ஒபாமாவின் ஜனநாயக கட்சியின் போட்டியாளராகவும், கிரீமியா போராட்டத்தின் போது துணை அதிபராகவும், தற்போது 2022ல் டான்பாஸ் பிரச்னை நடக்கும் நிலையில் அதிபராகவும் இருக்கிறார்.

இவர் தனது வெளியுறவு கொள்கையை தீர்மானப்பதில் தோல்வி அடைந்து வருகிறார். உறுதியான முடிவு எடுக்க முடியாததால், பல சறுக்கல்களை சந்திக்கிறார். அவருடைய அனுபவ அறிவு வெற்றிக்கு உத்தரவாதம் அளிக்கவில்லை. உக்ரைன் விவகாரத்தை பொருத்தமட்டில், பெரும்பாலான அரசியல் நிபுணர்கள் பைடன் கிட்டத்தட்ட சேம்பர்லினை போன்று நடந்து கொண்டுள்ளதாக விமர்சித்துள்ளனர். யார் இந்த சேம்பர்லின்? எதற்காக அவர் நினைவு கூரப்படுகிறார்? நெவில் சேம்பர்லின் இங்கிலாந்தின் பிரதமராக கடந்த 1937 முதல் 1940ம் ஆண்டு வரை பதவி வகித்தவர். இவர் அடால்ப் ஹிட்லரால் முட்டாளாக்கப்பட்டார்.

சேம்பர்லின் 1938ல் ஹிட்லருடன் ஒரு சமாதான உடன்படிக்கை செய்து கொண்டார். அதன்படி, சுடென்ட்லேண்ட் என்றழைக்கப்படும் செகோஸ்லோவோகியாவுக்குள் ஜெர்மனி ஊடுருவக் கூடாது. இது உரிய நேரத்தில் ஏற்படுத்தப்பட்ட சமாதான உடன்படிக்கை என்று சேம்பர்லின் பறைசாற்றி கொண்டிருந்தார். ஆனால், அப்படி நடக்கவில்லை. அடுத்தாண்டே போலந்து மீது ஜெர்மனி தாக்குதல் தொடுத்தது.

இரண்டாம் உலகப் போர் ஆரம்பமானது. இதே கதைதான் உக்ரைன் விவகாரத்தில் நடக்கிறது. உக்ரைன் பிரச்னை தொடர்பாக பைடனும், புடினும் ஒப்பந்தம் எதுவும் செய்து கொள்ளாமல் இருந்திருக்கலாம். ஆனால், ஹிட்லரை போல் புடின் வகுத்துள்ள அதேபோன்ற தந்திர வலையில் பைடன் சிக்கி விட்டார். வெளியுறவு கொள்கைகளை எந்தளவுக்கு விரிவுபடுத்தினால் நல்லது என்று ஒரு அளவுகோல் இருக்கிறது. இந்த உத்திகளே நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும்.

அமெரிக்காவில் எதிர்க்கட்சியான குடியரசு கட்சியின் எம்பி.க்கள் பைடனின் வெளியுறவு கொள்கைகள் குறித்து ஏற்கனவே கவலை தெரிவித்துள்ளனர். இப்போது, உக்ரைன் மீது போர் தொடுத்ததற்காக ரஷ்யா தண்டிக்கப்படாவிட்டால், அது அமெரிக்காவின் மற்றொரு நட்பு நாடு அல்லது தைவான் போன்ற நாடுகளையும் இதே போன்ற நிலைக்கு தள்ளும் சூழலை உருவாக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

தைவானின் சுதந்திரம், ஜனநாயகத்தை பாதுகாக்க அமெரிக்கா உதவி வருகிறது. சீனா தைவானுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. தைவான் விவகாரத்தில் சீனா எப்படி நடந்து கொள்கிறதோ அதே போன்று உக்ரைன் பிரச்னையில் ரஷ்யா நடந்து கொள்கிறது என்று குடியரசுக் கட்சி எம்பி.க்கள் கூறுகின்றனர்.

பைடனின் பொருளாதாரம், வெளியுறவுக் கொள்கைகளுக்கு 40 சதவீத அமெரிக்கர்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். ரஷ்யா உடனான வெளியுறவு கொள்கையை 36 சதவீதத்தினர் மட்டுமே ஆதரித்துள்ளனர். ரஷ்யா விவகாரத்தில், புடினுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மக்கள் ஆதரவு அளிக்கின்றனர்.

ஆனால், பைடன் உக்ரைன் விவகாரத்தை கையாண்ட விதம் மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஜனவரி 19ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த பைடன், ‘உக்ரைன் மீது புடின் படையெடுக்கக் கூடாது. மீறி படையெடுத்தால், அது சிறிய அளவிலான ஊடுருவல் என்றால் சிறிய பொருளாதார தடைகள் மட்டுமே விதிக்கப்படும்,’ என்று கூறினார்.

ஆனால், ‘ஒரு தேர்ந்தெடுத்த அரசியல்வாதியாக அவர் முழுமையான விவரங்களை கூறி இருக்கக் கூடாது. இதன் மூலம், அவர் அமெரிக்காவின் எதிரியான ரஷ்யாவுக்கு உதவி உள்ளார். இது நடந்து 2 நாட்களுக்கு பிறகு வெள்ளை மாளிகை இது குறித்து கூறிகையில், எந்த படை எல்லையை கடந்தாலும் அது ஊடுருவல் என்று விளக்கம் அளித்தது.

ஆனால், இது மிகவும் தாமதமான அறிவிப்பாக அமைத்துள்ளது,’ என அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர். எதை தனது காதுகளால் கேட்டு உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும் என்று புடின் காத்திருந்தாரோ, அந்த செய்தி அவரை எட்டியது. சிறிய அளவிலான ஊடுருவலுக்கு சிறிய பொருளாதார தடைகள் என்பதே அது.

இதைத் தொடர்ந்தே, ரஷ்யா கிழக்கு உக்ரைன் எல்லைக்குள் ஊடுருவியது. அதன் பிறகு பைடன் பேசியும், மிரட்டியும், கடுமை பொருளாதார தடை விதிப்பதாக கூறியும் பார்த்தார். ஆனால், அவை அனைத்தும் விழலுக்கு இறைத்த நீரானது.
கடந்தாண்டு டிசம்பரில் புடினின் கை ஓங்கி இருந்தது. ஆனால், ஜனவரி இறுதியில் புடின் ஏதோ ஒரு விஷயத்தில் சறுக்கினார்.

பைடன் அதனை பயன்படுத்தி ரஷ்யா மீது சில பொருளாதார தடைகளை விதித்து இருக்கலாம். ஆனால், குழப்பத்தினால் சிறிய ஊடுருவல் சிறு பொருளாதார தடை, அமெரிக்க தூதரக அதிகாரிகள், அமெரிக்கர்களை உக்ரைனில் இருந்து வெளியேற உத்தரவிட்டது என பைடன் குழம்பினார். இவர் உறுதியான வெளியுறவு கொள்கைகளை பின்பற்றாததே, உக்ரைன் விவாகரத்தில் அவர் செய்த மிகப்பெரிய சொதப்பலாகும். அதே நேரம், அமெரிக்க குடியரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் அதிபருமான டிரம்ப், புடினின் முடிவு புத்திசாலிதனமானது என்று கூறியுள்ளார்.

-தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» "ரஷ்ய அதிபர் புடின் ஓர் இறைச்சி வியாபாரி " - ஜோ பைடன் காட்டம்
» உளவாளிகளுடன் புடின் ஆடிப்பாடி மகிழ்ச்சி
» பைடன் வெற்றி என எலக்டோரல் காலேஜ் அறிவித்தால் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன்; டிரம்ப் பேட்டி
» ஜோ பைடன் மனைவி ஜில் பைடன் கொள்கை முடிவு இயக்குனர் மாலா : யார் இவர்?
» ”ஆகஸ்டு 15 குடியரசு தினம்!!!”.. சொதப்பிய காவல்துறை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum