புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
Page 49 of 60 •
Page 49 of 60 • 1 ... 26 ... 48, 49, 50 ... 54 ... 60
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5827
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
13.12.2021
நடிகை லட்சுமி அவர்கள் பிறந்த நாள் [1952]
நடிகை, TV நிகழ்ச்சி தொகுப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி படங்கள்ல நடிச்சார்.
அம்மா குமாரி ருக்மணி பழம்பெரும் நடிகை. அப்பா வரதராவ் சினிமா சம்பந்தப்பட்டவர். மகள் நடிகை ஐஸ்வர்யா.
லட்சுமி நடிச்ச முதல் படம் ஸ்ரீவள்ளி [1961]. குழந்தை நட்சத்திரம்.
தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள், தமிழ்நாடு, கர்நாடக மாநில விருதுகள் வாங்கினார்.
தொட்டாக்கா வெட்கம் வரும் நில்லு ராமையாஹா - LR ஈஸ்வரி & TMS
ஆசீர்வாதம் 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்
இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை - P சுசீலா & TMS
சங்கே முழங்கு 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்
எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மணங்கள் திருமணங்கள் - வாணி ஜெயராம் & TMS
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 1978 / MS விஸ்வநாதன் / ஜெயகாந்தன்
பேபி
13.12.2021
நடிகை லட்சுமி அவர்கள் பிறந்த நாள் [1952]
நடிகை, TV நிகழ்ச்சி தொகுப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி படங்கள்ல நடிச்சார்.
அம்மா குமாரி ருக்மணி பழம்பெரும் நடிகை. அப்பா வரதராவ் சினிமா சம்பந்தப்பட்டவர். மகள் நடிகை ஐஸ்வர்யா.
லட்சுமி நடிச்ச முதல் படம் ஸ்ரீவள்ளி [1961]. குழந்தை நட்சத்திரம்.
தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள், தமிழ்நாடு, கர்நாடக மாநில விருதுகள் வாங்கினார்.
தொட்டாக்கா வெட்கம் வரும் நில்லு ராமையாஹா - LR ஈஸ்வரி & TMS
ஆசீர்வாதம் 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்
இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை - P சுசீலா & TMS
சங்கே முழங்கு 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்
எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மணங்கள் திருமணங்கள் - வாணி ஜெயராம் & TMS
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 1978 / MS விஸ்வநாதன் / ஜெயகாந்தன்
பேபி
சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5827
இணைந்தது : 03/12/2017
18.07.2023
17.07.2023 - இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் பிறந்த நாள் [1941]
"என் இனிய தமிழ் மக்களே"னு அன்பா சொல்ற பாரதிராஜாவை சினிமா தன் உச்சீல வச்சு கொண்டாடும் இயக்குனர் இமயம்.
டைரக்ட்டர், நடிகர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர், டப்பிங் கலைஞர். சொந்த பேர் சின்னசாமி. படிக்கும்போதே இலக்கியம், நாடகம் எழுதுறது, நடிப்பு, டைரக் ஷன்னு ஆர்வமுள்ளவரா இருந்தார். சில நாடகங்களை எழுதி மேடையேற்றினார்.
நடிகர் மனோஜ் இவரோட மகன்.
பாரதிராஜா 1963ல பொது சுகாதார துறைல வேல செஞ்சார். அவருக்கு கலைல இன்ட்ரெஸ்ட் இருந்ததால கிராம திருவிழா நாடகங்களுக்கு வசனம் எழுதி, டைரக்ட்டி நடிக்கவும் செஞ்சார். அப்புறமா சினிமா கனவுகளோட சென்னைக்கு வந்தார். மேடை நாடகங்கள்ல நடிச்சார். பெட்ரோல் பங்க்ல வேல செஞ்சார். எப்படியோ ட்ரை செஞ்சு கன்னட சினிமா தயாரிப்பாளர் புட்டண்ணாகிட்ட உதவியாளராக சினிமா உலகத்துக்கு வந்தார். அப்புறமா சிலர்கிட்ட அசிஸ்டன்ட் டைரக்ட்டரா இருந்தார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களை டைரக்ட்டினார். ஸ்டூடியோக்குள்ளயே ஷூட்டிங் எடுத்துட்டு இருந்த காலத்தில, வெளிப்புற இடங்களுக்கு போயி ஷூட்டிங் ஆரம்பிச்ச டைரக்ட்டர்னு பெருமை இவருக்கு உண்டு. அநேகமா சென்ட்டிமென்ட்டான கிராமத்து கதைகளை படமா எடுத்தார். இசைஞானி இளையராஜா மியூஸிக்ல நிறைய படங்கள் எடுத்தார். பல கதாநாயகிகளை இன்ட்ரோ செஞ்சவர். ஓஹோ டைரக்ட்டர்களெல்லாம் இவர்கிட்ட உதவி டைரக்ட்டர்களா இருந்தவங்க. தானே சில படங்கள்ல நடிச்சிருக்கார். TV சீரியல்களை டைரக்ட்டியிருக்கார். 1994ல இவரோட கருத்தம்மா படத்தில மலேசியா வாசுதேவன் கூட சேந்து *"காட்டு பொட்டக்காடு செங்காத்து வீசும் காடு"* டைட்டில் பாட்டு பாடியிருக்கார்.
முதல்முதலா திரைக்கதை எழுதி, டைரக்ட்டின படம் 1977ல 16 வயதினிலே படம். மயிலையும், சப்பாணியையும் மறக்க முடியுமா? கிராமத்தையும், அதன் எழில் கொஞ்சும் அழகையும், அங்க வாழ்ற மக்களின் உணர்ச்சிகளையும் காட்டிய மாயக்காரன் பாரதிராஜாவின் முதல் படைப்பு. இந்த படம் தமிழ் சினிமா வரலாற்றுல ஒரு மைல்கல். அதுக்கப்புறமும் சில கிராமத்து படங்களை எடுத்தார். படு ஹிட்டான இந்த படங்கள்ல சொல்லப்பட்ட சமூக ப்ரச்னைகள், இவரை ஒரு நல்ல டைரக்ட்டராக, க்ராமிய தமிழ் படங்களை எடுப்பதுல வல்லவராக அடையாளம் காட்டுச்சு. இளைஞர்களின் இதயம் ஆனார் இந்த இயக்குனர் இமயம்.
இவர் இன்ட்ரோ செஞ்ச நடிகைகள் சிலரின் பேர் ர வரிசைல இருக்கு. ராதிகா, ரேவதி, ராதா, ரேகா, ரஞ்சிதா மாதிரி.
இப்படிப்பட்ட படங்களைத்தான் பாரதிராஜாவுக்கு எடுக்க தெரியுதுன்னு விமர்சனம் வர ஆரம்பிச்சுது. அதான் 1978ல சிகப்பு ரோஜாக்கள் என்ற மேற்கத்திய பாணீல எடுத்தார்.
விருதுகள்:
பத்மஸ்ரீ 2004
தேசிய சினிமா விருதுகள்:
முதல் மரியாதை 1986 - தயாரிப்பு & டைரக் ஷன் - சிறந்த படம்
வேதம் புதிது 1988 - டைரக் ஷன் - சமூக பிரச்னைகளை காட்டிய சிறந்த படம்
கருத்தம்மா 1995 - டைரக் ஷன் - குடும்ப நலன்களை குறித்த சிறந்த படம்
அந்திமந்தாரை 1996 - டைரக் ஷன் - சிறந்த தமிழ் படம்
கடல் பூக்கள் 2001 - கதாசிரியர் & டைரக் ஷன் - சிறந்த திரைக்கதை
ஒரு தெலுங்கு படம்
தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருதுகள்:
சிகப்பு ரோஜாக்கள் 1978 - சிறந்த தமிழ் டைரக்ட்டர்
வேதம் புதிது 1987 - சிறந்த தமிழ் படம் & சிறந்த தமிழ் டைரக்ட்டர்
கருத்தம்மா 1994 - சிறந்த தமிழ் படம்
தமிழ்நாடு மாநில சினிமா விருதுகள்:
16 வயதினிலே 1977 - சிறந்த டைரக்ட்டர்
புதிய வார்ப்புகள் 1979 - சிறந்த படத்துக்கான 2வது விருது
அலைகள் ஓய்வதில்லை 1981 - சிறந்த டைரக்ட்டர்
கருத்தம்மா 1994 - பெண்ணை பற்றி சொன்ன சிறந்த படம்
ஈர நிலம் 2003 - சிறந்த படம் முதல் விருது
அறிஞர் அண்ணா விருது 2001
நந்தி விருது
விஜய் விருதுகள்:
2012 - சினிமாவுக்கு செஞ்ச பங்களிப்புக்கு
2013 - பாண்டியநாடு - சிறந்த துணை நடிகர்
கல்லுக்குள் ஈரம் 1980 - சிறந்த தொழில் நுட்ப விருது
கௌரவ டாக்ட்டர் பட்டம் 2005 - சத்யபாமா பல்கலைக்கழகம் கொடுத்தது
SIIMA வாழ்நாள் சாதனையாளர் விருது 2015
புதிய வார்ப்புகள் - திரைக்கதை & டைரக் ஷன் - பாரதிராஜா
திருவிழா கூத்து
புதிய வார்ப்புகள் 1979 \ இளையராஜா \ கங்கை அமரன்
கருத்தம்மா - திரைக்கதை, டைரக் ஷன் & தயாரிப்பு - பாரதிராஜா
காடு பொட்டக்காடு செங்காத்து வீசும் காடு வீடு கீத்து வீடு எலியோடு எங்க பாடு ஹோ - TK கலா, பாரதிராஜா & மலேசியா வாசுதேவன்
கருத்தம்மா 1994 \ AR ரஹ்மான் \ வைரமுத்து
தாஜ்மஹால் - டைரக் ஷன் - பாரதிராஜா
சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹாலு கொட ஏதும் வேணாம் வா மாயா இருவரும் ஆளுக்கொரு குடையாவோம் - சுஜாதா மோகன்
தாஜ்மஹால் 1999 \ AR ரஹ்மான் \ வைரமுத்து
கிழக்கே போகும் ரயில் - திரைக்கதை & டைரக் ஷன் - பாரதிராஜா
பூவரசம்பூ பூத்தாச்சு பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு காவேரிபோல பொங்குற மனசு பாடாதோ - ஜானகி
கிழக்கே போகும் ரயில் 1978 / இளையராஜா \ கங்கை அமரன்
கல்லுக்குள் ஈரம் - திரைக்கதை & டைரக் ஷன் சூப்பர்விஷன் - பாரதிராஜா
சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும் இரு கண்மணி பொன் இமைகளில் தாள லயம் - ஜானகி & இளையராஜா
கல்லுக்குள் ஈரம் 1980 \ இளையராஜா \ கங்கை அமரன்
பேபி
17.07.2023 - இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் பிறந்த நாள் [1941]
"என் இனிய தமிழ் மக்களே"னு அன்பா சொல்ற பாரதிராஜாவை சினிமா தன் உச்சீல வச்சு கொண்டாடும் இயக்குனர் இமயம்.
டைரக்ட்டர், நடிகர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர், டப்பிங் கலைஞர். சொந்த பேர் சின்னசாமி. படிக்கும்போதே இலக்கியம், நாடகம் எழுதுறது, நடிப்பு, டைரக் ஷன்னு ஆர்வமுள்ளவரா இருந்தார். சில நாடகங்களை எழுதி மேடையேற்றினார்.
நடிகர் மனோஜ் இவரோட மகன்.
பாரதிராஜா 1963ல பொது சுகாதார துறைல வேல செஞ்சார். அவருக்கு கலைல இன்ட்ரெஸ்ட் இருந்ததால கிராம திருவிழா நாடகங்களுக்கு வசனம் எழுதி, டைரக்ட்டி நடிக்கவும் செஞ்சார். அப்புறமா சினிமா கனவுகளோட சென்னைக்கு வந்தார். மேடை நாடகங்கள்ல நடிச்சார். பெட்ரோல் பங்க்ல வேல செஞ்சார். எப்படியோ ட்ரை செஞ்சு கன்னட சினிமா தயாரிப்பாளர் புட்டண்ணாகிட்ட உதவியாளராக சினிமா உலகத்துக்கு வந்தார். அப்புறமா சிலர்கிட்ட அசிஸ்டன்ட் டைரக்ட்டரா இருந்தார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களை டைரக்ட்டினார். ஸ்டூடியோக்குள்ளயே ஷூட்டிங் எடுத்துட்டு இருந்த காலத்தில, வெளிப்புற இடங்களுக்கு போயி ஷூட்டிங் ஆரம்பிச்ச டைரக்ட்டர்னு பெருமை இவருக்கு உண்டு. அநேகமா சென்ட்டிமென்ட்டான கிராமத்து கதைகளை படமா எடுத்தார். இசைஞானி இளையராஜா மியூஸிக்ல நிறைய படங்கள் எடுத்தார். பல கதாநாயகிகளை இன்ட்ரோ செஞ்சவர். ஓஹோ டைரக்ட்டர்களெல்லாம் இவர்கிட்ட உதவி டைரக்ட்டர்களா இருந்தவங்க. தானே சில படங்கள்ல நடிச்சிருக்கார். TV சீரியல்களை டைரக்ட்டியிருக்கார். 1994ல இவரோட கருத்தம்மா படத்தில மலேசியா வாசுதேவன் கூட சேந்து *"காட்டு பொட்டக்காடு செங்காத்து வீசும் காடு"* டைட்டில் பாட்டு பாடியிருக்கார்.
முதல்முதலா திரைக்கதை எழுதி, டைரக்ட்டின படம் 1977ல 16 வயதினிலே படம். மயிலையும், சப்பாணியையும் மறக்க முடியுமா? கிராமத்தையும், அதன் எழில் கொஞ்சும் அழகையும், அங்க வாழ்ற மக்களின் உணர்ச்சிகளையும் காட்டிய மாயக்காரன் பாரதிராஜாவின் முதல் படைப்பு. இந்த படம் தமிழ் சினிமா வரலாற்றுல ஒரு மைல்கல். அதுக்கப்புறமும் சில கிராமத்து படங்களை எடுத்தார். படு ஹிட்டான இந்த படங்கள்ல சொல்லப்பட்ட சமூக ப்ரச்னைகள், இவரை ஒரு நல்ல டைரக்ட்டராக, க்ராமிய தமிழ் படங்களை எடுப்பதுல வல்லவராக அடையாளம் காட்டுச்சு. இளைஞர்களின் இதயம் ஆனார் இந்த இயக்குனர் இமயம்.
இவர் இன்ட்ரோ செஞ்ச நடிகைகள் சிலரின் பேர் ர வரிசைல இருக்கு. ராதிகா, ரேவதி, ராதா, ரேகா, ரஞ்சிதா மாதிரி.
இப்படிப்பட்ட படங்களைத்தான் பாரதிராஜாவுக்கு எடுக்க தெரியுதுன்னு விமர்சனம் வர ஆரம்பிச்சுது. அதான் 1978ல சிகப்பு ரோஜாக்கள் என்ற மேற்கத்திய பாணீல எடுத்தார்.
விருதுகள்:
பத்மஸ்ரீ 2004
தேசிய சினிமா விருதுகள்:
முதல் மரியாதை 1986 - தயாரிப்பு & டைரக் ஷன் - சிறந்த படம்
வேதம் புதிது 1988 - டைரக் ஷன் - சமூக பிரச்னைகளை காட்டிய சிறந்த படம்
கருத்தம்மா 1995 - டைரக் ஷன் - குடும்ப நலன்களை குறித்த சிறந்த படம்
அந்திமந்தாரை 1996 - டைரக் ஷன் - சிறந்த தமிழ் படம்
கடல் பூக்கள் 2001 - கதாசிரியர் & டைரக் ஷன் - சிறந்த திரைக்கதை
ஒரு தெலுங்கு படம்
தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருதுகள்:
சிகப்பு ரோஜாக்கள் 1978 - சிறந்த தமிழ் டைரக்ட்டர்
வேதம் புதிது 1987 - சிறந்த தமிழ் படம் & சிறந்த தமிழ் டைரக்ட்டர்
கருத்தம்மா 1994 - சிறந்த தமிழ் படம்
தமிழ்நாடு மாநில சினிமா விருதுகள்:
16 வயதினிலே 1977 - சிறந்த டைரக்ட்டர்
புதிய வார்ப்புகள் 1979 - சிறந்த படத்துக்கான 2வது விருது
அலைகள் ஓய்வதில்லை 1981 - சிறந்த டைரக்ட்டர்
கருத்தம்மா 1994 - பெண்ணை பற்றி சொன்ன சிறந்த படம்
ஈர நிலம் 2003 - சிறந்த படம் முதல் விருது
அறிஞர் அண்ணா விருது 2001
நந்தி விருது
விஜய் விருதுகள்:
2012 - சினிமாவுக்கு செஞ்ச பங்களிப்புக்கு
2013 - பாண்டியநாடு - சிறந்த துணை நடிகர்
கல்லுக்குள் ஈரம் 1980 - சிறந்த தொழில் நுட்ப விருது
கௌரவ டாக்ட்டர் பட்டம் 2005 - சத்யபாமா பல்கலைக்கழகம் கொடுத்தது
SIIMA வாழ்நாள் சாதனையாளர் விருது 2015
புதிய வார்ப்புகள் - திரைக்கதை & டைரக் ஷன் - பாரதிராஜா
திருவிழா கூத்து
புதிய வார்ப்புகள் 1979 \ இளையராஜா \ கங்கை அமரன்
கருத்தம்மா - திரைக்கதை, டைரக் ஷன் & தயாரிப்பு - பாரதிராஜா
காடு பொட்டக்காடு செங்காத்து வீசும் காடு வீடு கீத்து வீடு எலியோடு எங்க பாடு ஹோ - TK கலா, பாரதிராஜா & மலேசியா வாசுதேவன்
கருத்தம்மா 1994 \ AR ரஹ்மான் \ வைரமுத்து
தாஜ்மஹால் - டைரக் ஷன் - பாரதிராஜா
சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹாலு கொட ஏதும் வேணாம் வா மாயா இருவரும் ஆளுக்கொரு குடையாவோம் - சுஜாதா மோகன்
தாஜ்மஹால் 1999 \ AR ரஹ்மான் \ வைரமுத்து
கிழக்கே போகும் ரயில் - திரைக்கதை & டைரக் ஷன் - பாரதிராஜா
பூவரசம்பூ பூத்தாச்சு பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு காவேரிபோல பொங்குற மனசு பாடாதோ - ஜானகி
கிழக்கே போகும் ரயில் 1978 / இளையராஜா \ கங்கை அமரன்
கல்லுக்குள் ஈரம் - திரைக்கதை & டைரக் ஷன் சூப்பர்விஷன் - பாரதிராஜா
சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும் இரு கண்மணி பொன் இமைகளில் தாள லயம் - ஜானகி & இளையராஜா
கல்லுக்குள் ஈரம் 1980 \ இளையராஜா \ கங்கை அமரன்
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5827
இணைந்தது : 03/12/2017
18.07.2023
17.07.2023 - நடிகர் விஷ்ணு விஷால் பிறந்த நாள் 1984
நடிகர் & தயாரிப்பாளர். இந்த பிறந்த நாளுக்கு 'விஷ்ணு விஷால் நற்பணி மன்றம்' ஆரம்பிச்சிருக்கிறதா சொல்லியிருக்கார். இவரோட படம் ரிலீஸ் ஆகிற சமயத்லயும், பிறந்த நாளிலும் இவரோட ரசிகர்கள் ஜனங்களுக்கு உதவும் வகையில் பல நற்பணிகள் செய்றாங்க. அதுக்கு ஆதரவு கொடுக்கும் வகைல இந்த மன்றம் ஆரம்பிச்சிருக்கிறதா சொன்னார். விளையாட்டு துறை இவருக்கு ரொம்ப பிடிக்கும். விளையாட்டு வீரர்களுக்கு பல உதவிகள் செஞ்சுட்டு இருக்கார்.
ஆக்சுவலா க்ரிக்கெட் விளையாட்டு வீரரா ஆகணும்னு நெனைச்சார். கிரிக்கெட் விளையாடும் போது கால்ல அடிபட்டு, படுக்கைல இருக்கிற அளவுக்கு முடியாம போயிருச்சு. அந்த சமயத்தில படுத்துட்டே சினிமா நெறய பாக்க ஆரபிச்சு சினிமால நடிக்கும் ஆச வந்துருச்சு. கிரிக்கெட்டுக்கு முழுக்கு போட்டுட்டார். சொந்தக்காரர் ஒருவர் உதவியால நடிக்க போய்ட்டார். ஸ்போர்ட்ஸ் சம்பந்தமான சில படங்கள்ல நடிச்சிருக்கார்.
நடிச்ச முதல் படமே 2009ல வெண்ணிலா கபடி குழு. இந்த படத்ல நடிக்கிறதுக்கு மூணு மாசம் டெய்லி அஞ்சு மணி நேரம் கபடி கோச்சிங் எடுத்துகிட்டார். இப்ப 3 படங்கள்ல நடிச்சிட்ருக்கார்.
விருதுகள் :
எடிசன் விருது - வெண்ணிலா கபடி குழு 2009 - சிறந்த அறிமுக நடிகர்
இதே படத்துக்கு விஜய் விருதுக்கு நாமினேட் ஆனார்.
நீர்ப்பறவை 2012 படத்துல சிறந்த நடிகருக்கான SIIMA விருதுக்கு நாமினேட் ஆனார்.
படபடவென பறந்திட இன்று சிறகுகள் அடடா முளைக்கிறதே கடகடவென கடந்திட இன்று வானவில் வழியாய் விரிகிறதே - கார்த்திக்
வெண்ணிலா கபடி குழு 2009 \ V செல்வகணேஷ் \ கார்த்திக் நேத்தா
கண்ணோடு இல்லையே கண்ணீரின் திவலைகள் ஹேப்பி இன்று முதல் ஹேப்பி நெஞ்சோடு இல்லையே நான் கொண்ட கவலைகள் ஹேப்பி என்றுமே ஹேப்பி
பலே பாண்டியா 2010 / தேவன் ஏகாம்பரம் \ வாலி
மீனுக்கு சிறு மீனுக்கு நான் மீன் வலை விரித்தேன் தேவதை கடல் தேவதைவந்து விழுந்ததால் விழித்தேன்- ஹரிணி & விஜய் பிரகாஷ்
நீர்ப்பறவை 2012 \ NR ரகுநந்தன் \ வைரமுத்து
பேபி
17.07.2023 - நடிகர் விஷ்ணு விஷால் பிறந்த நாள் 1984
நடிகர் & தயாரிப்பாளர். இந்த பிறந்த நாளுக்கு 'விஷ்ணு விஷால் நற்பணி மன்றம்' ஆரம்பிச்சிருக்கிறதா சொல்லியிருக்கார். இவரோட படம் ரிலீஸ் ஆகிற சமயத்லயும், பிறந்த நாளிலும் இவரோட ரசிகர்கள் ஜனங்களுக்கு உதவும் வகையில் பல நற்பணிகள் செய்றாங்க. அதுக்கு ஆதரவு கொடுக்கும் வகைல இந்த மன்றம் ஆரம்பிச்சிருக்கிறதா சொன்னார். விளையாட்டு துறை இவருக்கு ரொம்ப பிடிக்கும். விளையாட்டு வீரர்களுக்கு பல உதவிகள் செஞ்சுட்டு இருக்கார்.
ஆக்சுவலா க்ரிக்கெட் விளையாட்டு வீரரா ஆகணும்னு நெனைச்சார். கிரிக்கெட் விளையாடும் போது கால்ல அடிபட்டு, படுக்கைல இருக்கிற அளவுக்கு முடியாம போயிருச்சு. அந்த சமயத்தில படுத்துட்டே சினிமா நெறய பாக்க ஆரபிச்சு சினிமால நடிக்கும் ஆச வந்துருச்சு. கிரிக்கெட்டுக்கு முழுக்கு போட்டுட்டார். சொந்தக்காரர் ஒருவர் உதவியால நடிக்க போய்ட்டார். ஸ்போர்ட்ஸ் சம்பந்தமான சில படங்கள்ல நடிச்சிருக்கார்.
நடிச்ச முதல் படமே 2009ல வெண்ணிலா கபடி குழு. இந்த படத்ல நடிக்கிறதுக்கு மூணு மாசம் டெய்லி அஞ்சு மணி நேரம் கபடி கோச்சிங் எடுத்துகிட்டார். இப்ப 3 படங்கள்ல நடிச்சிட்ருக்கார்.
விருதுகள் :
எடிசன் விருது - வெண்ணிலா கபடி குழு 2009 - சிறந்த அறிமுக நடிகர்
இதே படத்துக்கு விஜய் விருதுக்கு நாமினேட் ஆனார்.
நீர்ப்பறவை 2012 படத்துல சிறந்த நடிகருக்கான SIIMA விருதுக்கு நாமினேட் ஆனார்.
படபடவென பறந்திட இன்று சிறகுகள் அடடா முளைக்கிறதே கடகடவென கடந்திட இன்று வானவில் வழியாய் விரிகிறதே - கார்த்திக்
வெண்ணிலா கபடி குழு 2009 \ V செல்வகணேஷ் \ கார்த்திக் நேத்தா
கண்ணோடு இல்லையே கண்ணீரின் திவலைகள் ஹேப்பி இன்று முதல் ஹேப்பி நெஞ்சோடு இல்லையே நான் கொண்ட கவலைகள் ஹேப்பி என்றுமே ஹேப்பி
பலே பாண்டியா 2010 / தேவன் ஏகாம்பரம் \ வாலி
மீனுக்கு சிறு மீனுக்கு நான் மீன் வலை விரித்தேன் தேவதை கடல் தேவதைவந்து விழுந்ததால் விழித்தேன்- ஹரிணி & விஜய் பிரகாஷ்
நீர்ப்பறவை 2012 \ NR ரகுநந்தன் \ வைரமுத்து
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5827
இணைந்தது : 03/12/2017
20.07.2023
18.07.2023 - கிருஷ்ணன் [பஞ்சு] அவர்கள் பிறந்த நாள் [1909 - 1997]
சினிமால முதல் இரட்டை டைரக்ட்டர்கள் கிருஷ்ணன் பஞ்சு. கிருஷ்ணன் பஞ்சு பேர்ல தமிழ், தெலுங்கு ஹிந்தி படங்களை டைரக்ட்டினாங்க. கிருஷ்ணனை விட பஞ்சு ஆறு வயசு சின்னவர்.
ஆரம்பத்தில கிருஷ்ணன் கோவைல இருந்த பக்ஷிராஜா ஸ்டூடியில லேப்ல வேல செஞ்சார். பஞ்சுவின் மறைவுக்கு பின்னால கிருஷ்ணன் எந்த படத்தையும் டைரக்ட்டல. சினிமால ரெட்டையர்களா இருந்தவங்க ஒரு சில படங்கள்ல ஒண்ணா வேல செஞ்சுட்டு பிரிஞ்சுட்டாங்க. ஆனா கிருஷ்ணன்- பஞ்சு ரெட்டையர்கள் அப்டி இல்ல. பஞ்சு இருந்தவரை ரெண்டு பேரும் சேந்தேதான் வேல செஞ்சாங்க. ரெண்டு பேரையும் முதல் முதலா சேத்து வச்சது இவங்களோட ஸ்மோக்கிங் பழக்கம்தான். அப்போ சாமானியமா கிடைக்காத கோல்ட் ப்ளேக்.
கிருஷ்ணன் பஞ்சு பக்ஷிராஜா ஸ்டூடியோல வேல செஞ்சுட்டு இருக்கும்போது ஒரு அட்டகாசமான சமாச்சாரம் இருக்கு. இந்த கம்பெனி மூலமா டைரக்ட்டர் ராஜா சாண்டோ ஆராய்ச்சி மணின்னு ஒரு படம் எடுத்தார். மனுநீதி சோழன் கதை. இதுல ஒரு ஸீன். மாடு ஆராய்ச்சி மணியை அடிக்கணும். எவ்ளோ பிராக்டீஸ் செஞ்சும் மாடு சொன்ன பேச்ச கேக்கல. அந்த ஸீன் சாண்டோ எதிர்பாத்த மாதிரி எடுக்கவே முடீல. மாடு ஆராய்ச்சி மணியை முட்டி அடிக்கல. ராஜா சாண்டோ ஓஞ்சு போனார். கிருஷ்ணன் பஞ்சு "கந்தன் பணம் கரிகரியா ஆகப்போவுது"னு சொன்னத சாண்டோ காதுல விழுந்துருச்சு. அவங்கள கூப்ட்டு, "டேய் பசங்களா, என்ன , கிண்டலா? சரி நீங்க இந்த ஸீனை எடுத்து காட்டுங்க பாக்குறேன்"னு சொன்னார். இந்த சம்பவம் நடக்கும்போது கிருஷ்ணன் லேப் அசிஸ்டன்ட், பஞ்சு எடிட்டிங் அசிஸ்டன்ட்.
ரெண்டு பேரும் சேந்து அந்த ஸீனை எடுத்து முடிச்சாங்க. சாண்டோ வந்து அதை பாத்து ரெண்டு பேரையும் கட்டி புடிச்சிகிட்டார். "இனிமே நீங்க ரெண்டு பேர் இல்ல. ஒருத்தரே. என்னோட அடுத்த படம் பூம்பாவை. அதை நீங்க ரெண்டு பேரும்தான் அதை டைரக்ட்ட போறீங்க"ன்னு சொல்லிட்டார். விநியோகஸ்தர்களும் பாராட்டினாங்க. இப்படித்தான் கிருஷ்ணன் பஞ்சு சினிமா வாழ்க்கையை ஒண்ணா 1944ல ஆரம்பிச்சாங்க.
ஊமை படங்களாவது பொழுதுபோக்குக்கு இருக்குதேன்னு நெனச்சு ஜனங்கள் பாத்த அந்த காலத்தில, சினிமா பாக்குறது ரொம்ப பிடிச்ச கிருஷ்ணனும் படிக்கும்போதே ஊமை படங்களை பாத்து ரசிச்சார். படிப்பு முடிஞ்சதும், அப்பாவை போலவே மகன் கிருஷ்ணனுக்கும் ரெயில்வேல வேல கெடச்சுது. ஆனா வேலை அவருக்கு பாவக்காயா கசந்துச்சு. ஏன்னா சினிமா மேல இருந்த மோகம். அதுக்குள்ள சினிமால்லாம் பேச ஆரம்பிருச்சுதுங்க. கிருஷ்ணனுக்கு இப்போ சினிமா மேல ஆசை அதிகமாச்சுது. இவர் பாத்துட்டு இருந்த வேலைல கேரளால உள்ள கொச்சிக்கு மாற்றலாயிருச்சு. அங்க போயி வேல பாக்க இஷாட்டமில்லாம, வேலைய விட்டுட்டார். அதுக்கு அப்பா ஒண்ணும் சொல்லல.
கிருஷ்ணனின் அப்பாவின் குடும்ப நண்பர் கண்ணபிரான்னு ஒருத்தர் சினிமா உலகத்தில நல்ல செல்வாக்கு இருந்தவர். கிருஷ்ணன் வேலையில்லாம இருந்ததையும், சினிமா துறைக்கு வர ஆசைப்பட்டதையும் கேள்விப்பட்டு, ஒரு சிபாரிசு கடுதாசிய கொடுத்து, வேல் பிச்சர்ஸுக்கு அனுப்பினார். கிருஷ்ணனுக்கு லேப் வேல நல்லா தெரிஞ்சதால இங்கயும் லேப்ல வேல செஞ்சார். சில காரணங்களால அங்கேயிருந்து வெளியேறிட்டார்.
கோவைல பிரிமியர் சினிடோன் சினிமா ஸ்டூடியோவில் சொந்தக்காரர் மருதாசலம் செட்டியார். சினிமா ஸ்டூடியோ லேப் வேலை கிருஷ்ணன் நல்லா தெரிஞ்சவர்னு கேள்விப்பட்டு, அவரை தன் ஸ்டூடியோல லேப் பொறுப்பாளராக வேலைக்கு சேத்துக்கிட்டார். அப்போ கிருஷ்ணனுக்கு தெரியாது, கூட பிறக்காத சகோதரர் பஞ்சுகூட வினோதமான ஒரு முடிச்சு விழப்போகுதுனு. ரெண்டு பேரும் ஒரே ஸ்டூடியோல வேல பாக்குறதுக்கு சந்தர்ப்பம் அமஞ்சுது.
1944ல ரெண்டு பேரும் சேந்து டைரக்ட்ட ஆரம்பிச்ச முதல் படம் பூம்பாவை. அதுக்கப்புறம் 1947ல NS கிருஷ்ணனுக்காக பைத்தியக்காரன்னு படம் எடுத்தாங்க. லட்சுமிகாந்தன் கொலை வழக்குல ஜெயிலுக்கு போன NS கிருஷ்ணனுக்காகவும், கடன் தொல்லையால கஷ்ட்டப்பட்டுட்டு இருந்த அவரோட நாடக குழுவுக்காவும் இந்த படத்தை கிருஷ்ணன் பஞ்சு எடுத்தாங்க. இவங்களாலதான் 1952ல சிவாஜி கணேசன் என்ற அற்புத நடிகர் பராசக்தி படம் மூலம் சினிமா உலகத்துக்கு வந்தார்.
கிருஷ்ணன் பஞ்சுவின் திறமை மேல நம்பிக்கை வச்சு AV மெய்யப்ப செட்டியார் தயாரிச்ச ஹிந்தி படங்களை இவங்களை வச்சே தயாரிச்சார்.
கிருஷ்ணன் பஞ்சு பற்றிய வெவரங்கள் கதகதயா இன்னும் ஏகப்பட்டது இருக்கு.
விருதுகள் :
ஃபிலிம்ஃபேர் விருது - சர்வர் சுந்தரம் 1964 - சிறந்த தமிழ் படம்
நீல மலர்கள் - டைரக்ட்டர் - கிருஷ்ணன் பஞ்சு
இது இரவா பகலா நீ நிலவா கதிரா இது வனமா மாளிகையா நீ மலரா ஓவியமா - வாணி ஜெயராம் & ஜேசுதாஸ்
நீல மலர்கள் 1979 \ MS விஸ்வநாதன் \ கண்ணதாசன்
பேர் சொல்ல ஒரு பிள்ளை - டைரக்ட்டர் - கிருஷ்ணன் பஞ்சு
பாட சொல்லும் நெஞ்சம் நெஞ்சம் ஆட சொல்லும் கொஞ்சம் கொஞ்சம் நாணம் கொள்ளும் உள்ளம் உள்ளம் ஆசை வந்தால் துள்ளும் துள்ளும் - வாணி ஜெயராம்
பேர் சொல்ல ஒரு பிள்ளை 1978 \ விஜயபாஸ்கர் - கண்ணதாசன்
பராசக்தி - டைரக்ட்டர் - கிருஷ்ணன் பஞ்சு
புது பெண்ணின் மனசை தொட்டு போறவரே உங்க எண்ணத்தை சொல்லிவிட்டு போங்க இளம் மனசை தூண்டிவிட்டு போறவரே அந்த மர்மத்தை சொல்லிவிட்டு போங்க - MS ராஜேஸ்வரி
பராசக்தி 1952 \ R சுதர்சனம் \ KP காமாட்சிசுந்தரம்
ரத்தக் கண்ணீர் - டைரக்ட்டர் - கிருஷ்ணன் பஞ்சு
வால வயதாகி அழகாகி மதனாகி பணி வாணிபமோடாடி மருளாடி விளையாடி விழல் வாழ்வு சதமாகி வலிவாகி மாடகூடமொடு பொருள் தேடி - CS ஜெயராமன்
ரத்தக் கண்ணீர் 1954 \ CS ஜெயராமன் \ உடுமலையார்
அன்னை - டைரக்ட்டர் - கிருஷ்ணன் பஞ்சு
ஓ பக் பக் பக் பக்கும் பக்கும் மாடப்புறா பக்கம் நிக்கும் மாடப்புறா பருவகால கதைகள் சொல்வேன் வா - சுசீலா
அன்னை 1962 \ R சுதர்சனம் \ கண்ணதாசன்
பேபி
18.07.2023 - கிருஷ்ணன் [பஞ்சு] அவர்கள் பிறந்த நாள் [1909 - 1997]
சினிமால முதல் இரட்டை டைரக்ட்டர்கள் கிருஷ்ணன் பஞ்சு. கிருஷ்ணன் பஞ்சு பேர்ல தமிழ், தெலுங்கு ஹிந்தி படங்களை டைரக்ட்டினாங்க. கிருஷ்ணனை விட பஞ்சு ஆறு வயசு சின்னவர்.
ஆரம்பத்தில கிருஷ்ணன் கோவைல இருந்த பக்ஷிராஜா ஸ்டூடியில லேப்ல வேல செஞ்சார். பஞ்சுவின் மறைவுக்கு பின்னால கிருஷ்ணன் எந்த படத்தையும் டைரக்ட்டல. சினிமால ரெட்டையர்களா இருந்தவங்க ஒரு சில படங்கள்ல ஒண்ணா வேல செஞ்சுட்டு பிரிஞ்சுட்டாங்க. ஆனா கிருஷ்ணன்- பஞ்சு ரெட்டையர்கள் அப்டி இல்ல. பஞ்சு இருந்தவரை ரெண்டு பேரும் சேந்தேதான் வேல செஞ்சாங்க. ரெண்டு பேரையும் முதல் முதலா சேத்து வச்சது இவங்களோட ஸ்மோக்கிங் பழக்கம்தான். அப்போ சாமானியமா கிடைக்காத கோல்ட் ப்ளேக்.
கிருஷ்ணன் பஞ்சு பக்ஷிராஜா ஸ்டூடியோல வேல செஞ்சுட்டு இருக்கும்போது ஒரு அட்டகாசமான சமாச்சாரம் இருக்கு. இந்த கம்பெனி மூலமா டைரக்ட்டர் ராஜா சாண்டோ ஆராய்ச்சி மணின்னு ஒரு படம் எடுத்தார். மனுநீதி சோழன் கதை. இதுல ஒரு ஸீன். மாடு ஆராய்ச்சி மணியை அடிக்கணும். எவ்ளோ பிராக்டீஸ் செஞ்சும் மாடு சொன்ன பேச்ச கேக்கல. அந்த ஸீன் சாண்டோ எதிர்பாத்த மாதிரி எடுக்கவே முடீல. மாடு ஆராய்ச்சி மணியை முட்டி அடிக்கல. ராஜா சாண்டோ ஓஞ்சு போனார். கிருஷ்ணன் பஞ்சு "கந்தன் பணம் கரிகரியா ஆகப்போவுது"னு சொன்னத சாண்டோ காதுல விழுந்துருச்சு. அவங்கள கூப்ட்டு, "டேய் பசங்களா, என்ன , கிண்டலா? சரி நீங்க இந்த ஸீனை எடுத்து காட்டுங்க பாக்குறேன்"னு சொன்னார். இந்த சம்பவம் நடக்கும்போது கிருஷ்ணன் லேப் அசிஸ்டன்ட், பஞ்சு எடிட்டிங் அசிஸ்டன்ட்.
ரெண்டு பேரும் சேந்து அந்த ஸீனை எடுத்து முடிச்சாங்க. சாண்டோ வந்து அதை பாத்து ரெண்டு பேரையும் கட்டி புடிச்சிகிட்டார். "இனிமே நீங்க ரெண்டு பேர் இல்ல. ஒருத்தரே. என்னோட அடுத்த படம் பூம்பாவை. அதை நீங்க ரெண்டு பேரும்தான் அதை டைரக்ட்ட போறீங்க"ன்னு சொல்லிட்டார். விநியோகஸ்தர்களும் பாராட்டினாங்க. இப்படித்தான் கிருஷ்ணன் பஞ்சு சினிமா வாழ்க்கையை ஒண்ணா 1944ல ஆரம்பிச்சாங்க.
ஊமை படங்களாவது பொழுதுபோக்குக்கு இருக்குதேன்னு நெனச்சு ஜனங்கள் பாத்த அந்த காலத்தில, சினிமா பாக்குறது ரொம்ப பிடிச்ச கிருஷ்ணனும் படிக்கும்போதே ஊமை படங்களை பாத்து ரசிச்சார். படிப்பு முடிஞ்சதும், அப்பாவை போலவே மகன் கிருஷ்ணனுக்கும் ரெயில்வேல வேல கெடச்சுது. ஆனா வேலை அவருக்கு பாவக்காயா கசந்துச்சு. ஏன்னா சினிமா மேல இருந்த மோகம். அதுக்குள்ள சினிமால்லாம் பேச ஆரம்பிருச்சுதுங்க. கிருஷ்ணனுக்கு இப்போ சினிமா மேல ஆசை அதிகமாச்சுது. இவர் பாத்துட்டு இருந்த வேலைல கேரளால உள்ள கொச்சிக்கு மாற்றலாயிருச்சு. அங்க போயி வேல பாக்க இஷாட்டமில்லாம, வேலைய விட்டுட்டார். அதுக்கு அப்பா ஒண்ணும் சொல்லல.
கிருஷ்ணனின் அப்பாவின் குடும்ப நண்பர் கண்ணபிரான்னு ஒருத்தர் சினிமா உலகத்தில நல்ல செல்வாக்கு இருந்தவர். கிருஷ்ணன் வேலையில்லாம இருந்ததையும், சினிமா துறைக்கு வர ஆசைப்பட்டதையும் கேள்விப்பட்டு, ஒரு சிபாரிசு கடுதாசிய கொடுத்து, வேல் பிச்சர்ஸுக்கு அனுப்பினார். கிருஷ்ணனுக்கு லேப் வேல நல்லா தெரிஞ்சதால இங்கயும் லேப்ல வேல செஞ்சார். சில காரணங்களால அங்கேயிருந்து வெளியேறிட்டார்.
கோவைல பிரிமியர் சினிடோன் சினிமா ஸ்டூடியோவில் சொந்தக்காரர் மருதாசலம் செட்டியார். சினிமா ஸ்டூடியோ லேப் வேலை கிருஷ்ணன் நல்லா தெரிஞ்சவர்னு கேள்விப்பட்டு, அவரை தன் ஸ்டூடியோல லேப் பொறுப்பாளராக வேலைக்கு சேத்துக்கிட்டார். அப்போ கிருஷ்ணனுக்கு தெரியாது, கூட பிறக்காத சகோதரர் பஞ்சுகூட வினோதமான ஒரு முடிச்சு விழப்போகுதுனு. ரெண்டு பேரும் ஒரே ஸ்டூடியோல வேல பாக்குறதுக்கு சந்தர்ப்பம் அமஞ்சுது.
1944ல ரெண்டு பேரும் சேந்து டைரக்ட்ட ஆரம்பிச்ச முதல் படம் பூம்பாவை. அதுக்கப்புறம் 1947ல NS கிருஷ்ணனுக்காக பைத்தியக்காரன்னு படம் எடுத்தாங்க. லட்சுமிகாந்தன் கொலை வழக்குல ஜெயிலுக்கு போன NS கிருஷ்ணனுக்காகவும், கடன் தொல்லையால கஷ்ட்டப்பட்டுட்டு இருந்த அவரோட நாடக குழுவுக்காவும் இந்த படத்தை கிருஷ்ணன் பஞ்சு எடுத்தாங்க. இவங்களாலதான் 1952ல சிவாஜி கணேசன் என்ற அற்புத நடிகர் பராசக்தி படம் மூலம் சினிமா உலகத்துக்கு வந்தார்.
கிருஷ்ணன் பஞ்சுவின் திறமை மேல நம்பிக்கை வச்சு AV மெய்யப்ப செட்டியார் தயாரிச்ச ஹிந்தி படங்களை இவங்களை வச்சே தயாரிச்சார்.
கிருஷ்ணன் பஞ்சு பற்றிய வெவரங்கள் கதகதயா இன்னும் ஏகப்பட்டது இருக்கு.
விருதுகள் :
ஃபிலிம்ஃபேர் விருது - சர்வர் சுந்தரம் 1964 - சிறந்த தமிழ் படம்
நீல மலர்கள் - டைரக்ட்டர் - கிருஷ்ணன் பஞ்சு
இது இரவா பகலா நீ நிலவா கதிரா இது வனமா மாளிகையா நீ மலரா ஓவியமா - வாணி ஜெயராம் & ஜேசுதாஸ்
நீல மலர்கள் 1979 \ MS விஸ்வநாதன் \ கண்ணதாசன்
பேர் சொல்ல ஒரு பிள்ளை - டைரக்ட்டர் - கிருஷ்ணன் பஞ்சு
பாட சொல்லும் நெஞ்சம் நெஞ்சம் ஆட சொல்லும் கொஞ்சம் கொஞ்சம் நாணம் கொள்ளும் உள்ளம் உள்ளம் ஆசை வந்தால் துள்ளும் துள்ளும் - வாணி ஜெயராம்
பேர் சொல்ல ஒரு பிள்ளை 1978 \ விஜயபாஸ்கர் - கண்ணதாசன்
பராசக்தி - டைரக்ட்டர் - கிருஷ்ணன் பஞ்சு
புது பெண்ணின் மனசை தொட்டு போறவரே உங்க எண்ணத்தை சொல்லிவிட்டு போங்க இளம் மனசை தூண்டிவிட்டு போறவரே அந்த மர்மத்தை சொல்லிவிட்டு போங்க - MS ராஜேஸ்வரி
பராசக்தி 1952 \ R சுதர்சனம் \ KP காமாட்சிசுந்தரம்
ரத்தக் கண்ணீர் - டைரக்ட்டர் - கிருஷ்ணன் பஞ்சு
வால வயதாகி அழகாகி மதனாகி பணி வாணிபமோடாடி மருளாடி விளையாடி விழல் வாழ்வு சதமாகி வலிவாகி மாடகூடமொடு பொருள் தேடி - CS ஜெயராமன்
ரத்தக் கண்ணீர் 1954 \ CS ஜெயராமன் \ உடுமலையார்
அன்னை - டைரக்ட்டர் - கிருஷ்ணன் பஞ்சு
ஓ பக் பக் பக் பக்கும் பக்கும் மாடப்புறா பக்கம் நிக்கும் மாடப்புறா பருவகால கதைகள் சொல்வேன் வா - சுசீலா
அன்னை 1962 \ R சுதர்சனம் \ கண்ணதாசன்
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5827
இணைந்தது : 03/12/2017
20.07.2023
18.07.2023 - நடிகை சௌந்தர்யா பிறந்த நாள் [1972 - 2004]
MBBS ஒரு வருஷம் படிச்சு படிப்பை நிறுத்திட்டார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சார். தெலுங்குல சூப்பர் நடிகையாக வலம் வந்தார். இவரோட அப்பா கன்னட சினிமா எழுத்தாளர் & தயாரிப்பாளர்.
ஏழை பிள்ளைங்க படிக்கணும்ங்கிறதுக்காக அப்பா பேர்ல மூணு ஸ்கூல் நடத்தினார். அந்த ஸ்கூல்கள் இப்பவும் நடக்குது.
நடிச்ச முதல் தமிழ் படம் 1993ல பொன்னுமணி. 2001ல விஜயகாந்த் நடிச்ச தவசி படம் ஷூட்டிங்ல, விஜயகாந்த் ரொம்ப கோவக்காரர், அடிக்கடி கோவம் வரும், சரியா நடிக்கலேன்னா அடிக்கக்கூட செய்வார்னு கன்னாபின்னானு சொல்லி பயமுறுத்தி வச்சாங்க. அதனாலயே அந்த படத்தில நடிக்க போறதில்லேன்னு சொன்னார். இதை கேள்விப்பட்ட விஜயகாந்த் சௌந்தர்யாவை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரச்சொல்லி பேசினார். அதுக்கு பிறகு அவருக்கு விஜயகாந்த் மேல இருந்த பயம் போச்சு. விஜய்காந்த்கிட்ட மன்னிப்பு கேட்டார்.
விருதுகள் :
தெலுங்கு படங்கள்ல சிறந்த நடிகைக்கு :
3 தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருதுகள் 1995, 1998 & 1999
2 நந்தி விருதுகள் 1996 & 1998,
கன்னட படங்கள்ல சிறந்த நடிகைக்கு :
1 தேசிய விருது 2003
3 தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருதுகள் 2003 - 2 & 2004
2 கர்நாடக மாநில சினிமா விருதுகள் 1998 & 2003
தவசி 2001 & இவன் 2002 - சிறந்த தமிழ் நடிகைக்காக நாமினேட் செய்யப்பட்டார்.
நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா - ஜானகி & SPB
பொன்னுமணி 1993 \ இளையராஜா \ RV உதயகுமார்
மாத்தாடு மாத்தாடு மல்லிகே கிளி கிளி கிளி பச்ச பசுங்கிளி வழி வழி வழி விட்டு விலகடி இடுப்பு மடிப்பில் ஆள மடிக்கும் ஹே............. வேதவல்லி
அருணாச்சலம் 1997 \ தேவா \ பழனிபாரதி
தந்தன தந்தன தை மாசம் அது தந்தது தந்தது உன்ன தான் சந்தன சந்தன மல்லி வாசம் தேன் சிந்துது சிந்துது இப்ப தான் - சாதனா சர்கம் & ஜேசுதாஸ்
தவசி 2001 \ வித்யாசாகர் \ பா விஜய்
மடோனா பாடலா நீ மும்பையின் மாடலா நீ டாயானா சாயலா நீ அம்மா நீ அர்னால்டின் தேகம் என்ன கவிதா போட்வால் & கமல்ஹாசன்
காதலா காதலா 1998 / கார்த்திக் ராஜா \ வாலி
பேபி
18.07.2023 - நடிகை சௌந்தர்யா பிறந்த நாள் [1972 - 2004]
MBBS ஒரு வருஷம் படிச்சு படிப்பை நிறுத்திட்டார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சார். தெலுங்குல சூப்பர் நடிகையாக வலம் வந்தார். இவரோட அப்பா கன்னட சினிமா எழுத்தாளர் & தயாரிப்பாளர்.
ஏழை பிள்ளைங்க படிக்கணும்ங்கிறதுக்காக அப்பா பேர்ல மூணு ஸ்கூல் நடத்தினார். அந்த ஸ்கூல்கள் இப்பவும் நடக்குது.
நடிச்ச முதல் தமிழ் படம் 1993ல பொன்னுமணி. 2001ல விஜயகாந்த் நடிச்ச தவசி படம் ஷூட்டிங்ல, விஜயகாந்த் ரொம்ப கோவக்காரர், அடிக்கடி கோவம் வரும், சரியா நடிக்கலேன்னா அடிக்கக்கூட செய்வார்னு கன்னாபின்னானு சொல்லி பயமுறுத்தி வச்சாங்க. அதனாலயே அந்த படத்தில நடிக்க போறதில்லேன்னு சொன்னார். இதை கேள்விப்பட்ட விஜயகாந்த் சௌந்தர்யாவை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரச்சொல்லி பேசினார். அதுக்கு பிறகு அவருக்கு விஜயகாந்த் மேல இருந்த பயம் போச்சு. விஜய்காந்த்கிட்ட மன்னிப்பு கேட்டார்.
விருதுகள் :
தெலுங்கு படங்கள்ல சிறந்த நடிகைக்கு :
3 தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருதுகள் 1995, 1998 & 1999
2 நந்தி விருதுகள் 1996 & 1998,
கன்னட படங்கள்ல சிறந்த நடிகைக்கு :
1 தேசிய விருது 2003
3 தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருதுகள் 2003 - 2 & 2004
2 கர்நாடக மாநில சினிமா விருதுகள் 1998 & 2003
தவசி 2001 & இவன் 2002 - சிறந்த தமிழ் நடிகைக்காக நாமினேட் செய்யப்பட்டார்.
நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா - ஜானகி & SPB
பொன்னுமணி 1993 \ இளையராஜா \ RV உதயகுமார்
மாத்தாடு மாத்தாடு மல்லிகே கிளி கிளி கிளி பச்ச பசுங்கிளி வழி வழி வழி விட்டு விலகடி இடுப்பு மடிப்பில் ஆள மடிக்கும் ஹே............. வேதவல்லி
அருணாச்சலம் 1997 \ தேவா \ பழனிபாரதி
தந்தன தந்தன தை மாசம் அது தந்தது தந்தது உன்ன தான் சந்தன சந்தன மல்லி வாசம் தேன் சிந்துது சிந்துது இப்ப தான் - சாதனா சர்கம் & ஜேசுதாஸ்
தவசி 2001 \ வித்யாசாகர் \ பா விஜய்
மடோனா பாடலா நீ மும்பையின் மாடலா நீ டாயானா சாயலா நீ அம்மா நீ அர்னால்டின் தேகம் என்ன கவிதா போட்வால் & கமல்ஹாசன்
காதலா காதலா 1998 / கார்த்திக் ராஜா \ வாலி
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5827
இணைந்தது : 03/12/2017
20.07.2023
18.07.2023 நடிகை பூர்ணிமா பாக்கியராஜ் பிறந்த நாள் 1960
பாக்கியராஜின் மனைவின்னு எல்லாருக்கும் தெரியும்தானே. மகன் சாந்தனுவும் நடிகர்தான். பூர்ணிமா டான்ஸர் ஆகணும்னு நெனைச்சார். ஆனா நடிகை ஆயிட்டார். காலேஜ் படிக்கும்போதே டான்ஸ் க்ளாஸ்க்கு போனார். அதுதான் சினிமால அவருக்கு யூஸ்ஃபுல்லா இருந்துச்சு. மகன் சாந்தனு அம்மாவின் டான்ஸை பாத்து கேலி செஞ்சான். அதுக்கு பூர்ணிமா "ரஜினிகூடல்லாம் நா சினிமால டான்ஸ் ஆடியிருக்கேனாக்கும்"னு சொன்னார். அம்மாவும், பையனும் டான்ஸ் பற்றி பேசினாலே பாக்யராஜ் பக்கத்து ரூம்க்கு போயிருவாராம்.
பூர்ணிமாவும், பாக்யராஜும் ரெண்டு வருஷமா லவ்வி கல்யாணம் செஞ்சுக்கிட்டாங்க. பாக்யராஜ் ஒரு தடவ MGRகூட பேசிட்டு இருக்கும்போது, பாக்யராஜ் தன் கல்யாணத்தை பற்றி சொன்னார். MGRதான் அவங்க கல்யாணத்துக்கு நாள் குறிச்சு குதித்தார்.
தமிழ், மலையாள படங்கள்ல நடிச்சிருக்கார். ஒரு சில தெலுங்கு, ஹிந்தி படங்கள்ல நடிச்சார். சீரியல்கள்லயும் நடிச்சார். அதிகம் நடிச்சது நடிகர் மோகன்கூட.
தமிழ்ல நடிக்க ஆரம்பிச்சது 1981ல நெஞ்சில் ஒரு முள் படத்தில. 1985 வரை நடிச்சார். அதுக்கப்புறம் 2013லதான் நடிக்க வந்தார். இத்தன வருஷங்கள் நடிக்காம வேஸ்ட் செஞ்சுட்டதா நெனச்சு பூர்ணிமா வருத்தப்பட்டுக்கிட்டார்.
ராகம் புது ராகம் இனி நாளும் பாடலாம் நாதம் சுக நாதம் இதழோரம் கேட்கலாம் ராகம் - ஷைலஜா & தீபன் சக்கரவர்த்தி
நெஞ்சில் ஒரு முள் 1981 \ GK வெங்கடேஷ் \ புலமைப்பித்தன்
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா அலை போலவே உறவாடுமே சுகம் நூறாகுமே மண்மேலே துள்ளும் மான்போலே - ஜானகி
நீங்கள் கேட்டவை 1984 / இளையராஜா \ வைரமுத்து
சின்ன சின்ன கண்ணா சேதி சொல்லும் மன்னா உன்னில் என்னை என்னில் உன்னை காண கண்ணில் மின்ன நெஞ்சில் வைக்க எண்ண - சுசீலா
கிளிஞ்சல்கள் 1981 / ம்யூஸிக் & வரிகள் : T ராஜேந்தர்
பேபி
18.07.2023 நடிகை பூர்ணிமா பாக்கியராஜ் பிறந்த நாள் 1960
பாக்கியராஜின் மனைவின்னு எல்லாருக்கும் தெரியும்தானே. மகன் சாந்தனுவும் நடிகர்தான். பூர்ணிமா டான்ஸர் ஆகணும்னு நெனைச்சார். ஆனா நடிகை ஆயிட்டார். காலேஜ் படிக்கும்போதே டான்ஸ் க்ளாஸ்க்கு போனார். அதுதான் சினிமால அவருக்கு யூஸ்ஃபுல்லா இருந்துச்சு. மகன் சாந்தனு அம்மாவின் டான்ஸை பாத்து கேலி செஞ்சான். அதுக்கு பூர்ணிமா "ரஜினிகூடல்லாம் நா சினிமால டான்ஸ் ஆடியிருக்கேனாக்கும்"னு சொன்னார். அம்மாவும், பையனும் டான்ஸ் பற்றி பேசினாலே பாக்யராஜ் பக்கத்து ரூம்க்கு போயிருவாராம்.
பூர்ணிமாவும், பாக்யராஜும் ரெண்டு வருஷமா லவ்வி கல்யாணம் செஞ்சுக்கிட்டாங்க. பாக்யராஜ் ஒரு தடவ MGRகூட பேசிட்டு இருக்கும்போது, பாக்யராஜ் தன் கல்யாணத்தை பற்றி சொன்னார். MGRதான் அவங்க கல்யாணத்துக்கு நாள் குறிச்சு குதித்தார்.
தமிழ், மலையாள படங்கள்ல நடிச்சிருக்கார். ஒரு சில தெலுங்கு, ஹிந்தி படங்கள்ல நடிச்சார். சீரியல்கள்லயும் நடிச்சார். அதிகம் நடிச்சது நடிகர் மோகன்கூட.
தமிழ்ல நடிக்க ஆரம்பிச்சது 1981ல நெஞ்சில் ஒரு முள் படத்தில. 1985 வரை நடிச்சார். அதுக்கப்புறம் 2013லதான் நடிக்க வந்தார். இத்தன வருஷங்கள் நடிக்காம வேஸ்ட் செஞ்சுட்டதா நெனச்சு பூர்ணிமா வருத்தப்பட்டுக்கிட்டார்.
ராகம் புது ராகம் இனி நாளும் பாடலாம் நாதம் சுக நாதம் இதழோரம் கேட்கலாம் ராகம் - ஷைலஜா & தீபன் சக்கரவர்த்தி
நெஞ்சில் ஒரு முள் 1981 \ GK வெங்கடேஷ் \ புலமைப்பித்தன்
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா அலை போலவே உறவாடுமே சுகம் நூறாகுமே மண்மேலே துள்ளும் மான்போலே - ஜானகி
நீங்கள் கேட்டவை 1984 / இளையராஜா \ வைரமுத்து
சின்ன சின்ன கண்ணா சேதி சொல்லும் மன்னா உன்னில் என்னை என்னில் உன்னை காண கண்ணில் மின்ன நெஞ்சில் வைக்க எண்ண - சுசீலா
கிளிஞ்சல்கள் 1981 / ம்யூஸிக் & வரிகள் : T ராஜேந்தர்
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5827
இணைந்தது : 03/12/2017
20.07.2023
18.07.2023 - நடிகை கல்பனா பிறந்த நாள் [1943 - 1979]
கன்னட படங்கள்ல நெறைய நடிச்சார். சில தமிழ், தெலுங்கு, மலையாளம், துளு படங்கள்லயும் நடிச்சார். கன்னட சினிமா உலகத்தின் மின்னும் தாரகை, தவப்புதல்வி. நடிக்கும்போது போட்ட ஷிஃபான் சேலைகள், பெரிய கை, சின்ன கைகள்ல விதவிதமா ஃப்ரில் வச்சு தச்ச ப்ளவுஸ்கள், பெரிய காது வளையங்கள் எல்லாமே அப்ப தென்னிந்திய ஜனங்களுக்கிடையே ஃபேஷனா இருந்துச்சு.
20 வயசில கன்னட படங்கள்ல நடிக்க ஆரம்பிச்சார். மூணே வருஷத்திலே கன்னட சினிமால முன்னணி ஹீரோயின். 16 வருஷமா ஹீரோயினாவே நடிச்சார். தமிழ்ல ஹீரோயினா நடிச்ச முதல் படம் 1966ல மதறாஸ் TO பாண்டிச்சேரி. படங்கள்ல நடிச்சிட்டு இருந்தாலும், சின்ன வயசிலிருந்தே நடிச்சிட்டு இருந்த நாடகங்கள்ல நடிக்கிறதை விடல. நாடக குழுவிலும் இவர் முக்கிய நடிகை. அப்பவே பரதமும் கத்துக்கிட்டார். 1960கள்லியே சினிமா, நாடகங்கள்ல நடிக்கிறதை பற்றி கத்துக்கிட்டார். அப்பதான் டைரக்ட்டர் பந்துலு கல்பனாவை பாத்து கன்னட படத்தில நடிக்க வச்சார்.
இவருக்கு சுசீலா, ஜானகி இவங்கதான் பின்னணி பாடணும்னு கண்டிஷன் போட்டிருந்தார். நடிகை சரோஜாதேவி மாதிரி கல்பனா இன்னொரு கன்னடத்து பைங்கிளி.
விருதுகள் :
கன்னட படங்களின் சிறந்த நடிகைக்கான ஒரு ஃபிலிம்ஃபேர் விருது & 3 கர்நாடக மாநில சினிமா விருதுகளும் வாங்கினார்.
எந்த எந்த நெஞ்சுக்குள்ளே என்ன தோணுதோ அதில் என்ன மோதுதோ நம் இருவரையும் பார்த்து பார்த்து ஏக்கமாகுதோ ஓஹோ ஓஹோ ஓஹோ - சுசீலா & TMS
மதறாஸ் TO பாண்டிச்சேரி 1966 \ TK ராமமூர்த்தி \ பஞ்சு அருணாசலம்
நான் நல்லவர் இல்லறம் நலமுற வேண்டுகிறேன் நான் மங்கள கீதங்கள் ஆயிரம் பாடுகிறேன் நடந்தவை நடந்தவை ஆகட்டும் இனி நடப்பவை நல்லவை ஆகட்டும் - சுசீலா
கட்டிலா தொட்டிலா 1973 \ V குமார் \ வாலி [/color]
பேபி
18.07.2023 - நடிகை கல்பனா பிறந்த நாள் [1943 - 1979]
கன்னட படங்கள்ல நெறைய நடிச்சார். சில தமிழ், தெலுங்கு, மலையாளம், துளு படங்கள்லயும் நடிச்சார். கன்னட சினிமா உலகத்தின் மின்னும் தாரகை, தவப்புதல்வி. நடிக்கும்போது போட்ட ஷிஃபான் சேலைகள், பெரிய கை, சின்ன கைகள்ல விதவிதமா ஃப்ரில் வச்சு தச்ச ப்ளவுஸ்கள், பெரிய காது வளையங்கள் எல்லாமே அப்ப தென்னிந்திய ஜனங்களுக்கிடையே ஃபேஷனா இருந்துச்சு.
20 வயசில கன்னட படங்கள்ல நடிக்க ஆரம்பிச்சார். மூணே வருஷத்திலே கன்னட சினிமால முன்னணி ஹீரோயின். 16 வருஷமா ஹீரோயினாவே நடிச்சார். தமிழ்ல ஹீரோயினா நடிச்ச முதல் படம் 1966ல மதறாஸ் TO பாண்டிச்சேரி. படங்கள்ல நடிச்சிட்டு இருந்தாலும், சின்ன வயசிலிருந்தே நடிச்சிட்டு இருந்த நாடகங்கள்ல நடிக்கிறதை விடல. நாடக குழுவிலும் இவர் முக்கிய நடிகை. அப்பவே பரதமும் கத்துக்கிட்டார். 1960கள்லியே சினிமா, நாடகங்கள்ல நடிக்கிறதை பற்றி கத்துக்கிட்டார். அப்பதான் டைரக்ட்டர் பந்துலு கல்பனாவை பாத்து கன்னட படத்தில நடிக்க வச்சார்.
இவருக்கு சுசீலா, ஜானகி இவங்கதான் பின்னணி பாடணும்னு கண்டிஷன் போட்டிருந்தார். நடிகை சரோஜாதேவி மாதிரி கல்பனா இன்னொரு கன்னடத்து பைங்கிளி.
விருதுகள் :
கன்னட படங்களின் சிறந்த நடிகைக்கான ஒரு ஃபிலிம்ஃபேர் விருது & 3 கர்நாடக மாநில சினிமா விருதுகளும் வாங்கினார்.
எந்த எந்த நெஞ்சுக்குள்ளே என்ன தோணுதோ அதில் என்ன மோதுதோ நம் இருவரையும் பார்த்து பார்த்து ஏக்கமாகுதோ ஓஹோ ஓஹோ ஓஹோ - சுசீலா & TMS
மதறாஸ் TO பாண்டிச்சேரி 1966 \ TK ராமமூர்த்தி \ பஞ்சு அருணாசலம்
நான் நல்லவர் இல்லறம் நலமுற வேண்டுகிறேன் நான் மங்கள கீதங்கள் ஆயிரம் பாடுகிறேன் நடந்தவை நடந்தவை ஆகட்டும் இனி நடப்பவை நல்லவை ஆகட்டும் - சுசீலா
கட்டிலா தொட்டிலா 1973 \ V குமார் \ வாலி [/color]
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5827
இணைந்தது : 03/12/2017
20.07.2023
18.07.2023 - பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா பிறந்த நாள் [1982]
ஜாம்ஷெட்பூர்ல பிறந்தார். மாடலாக இருந்தவர். 2000ல உலக அழகி பட்டம் வாங்கினார். தமிழ்ல நடிச்ச ஒரே படம் 2002ல தமிழன். இதுல ஒரு பாட்டு விஜய்கூட பின்னணியும் பாடியிருக்கார். "உள்ளத்தை கிள்ளாதே கிள்ளிவிட்டு செல்லாதே"
அப்பா மிலிட்டரில டாக்ட்டரா வேல செஞ்சதால, குடும்பம் ஊர விட்டு ஊர் போக வேண்டிய சூழ்நிலை. அப்டியே அமெரிக்க ஒன்றியத்துக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆச்சு. பிரியங்கா அங்கேயே ஹைஸ்கூல்ல படிச்சார். அப்புறமா இந்தியா வந்தபோது, மிலிட்டரி ஸ்கூல்ல படிச்சார். பாம்பேல காலேஜ் படிச்சார். உலக அழகி பட்டத்துக்கப்புறம் படிக்கிறதை விட்டுட்டு, ஹிந்தி படங்கள்ல நடிக்க போயிட்டார். ஒண்ரெண்டு மராத்தி படங்களையும், சில இங்கிலீஷ் படங்கள்லயும் நடிச்சார். சில படங்களை தயாரிச்சார்.
விளம்பரங்கள்ல நடிச்சார். ம்யூஸிக் வீடியோக்கள் வெளியிட்டிருக்கார். வெப் சீரீஸ்ல நடிச்சார். ஸ்கூல் பிள்ளைங்களின் படிப்புக்காகவும், அவங்க உடல் நலத்துக்காவும் ஒரு அமைப்பை ஏற்படுத்தி உதவி செஞ்சார். அவர் சம்பாத்திக்கிறதுல பத்து சதவீதம் இப்டி தானம் செஞ்சார். இது தவிர பெண்கள் முன்னேற்றம், சமூக மேம்பாடு பற்றி பேசுறார். அதுக்கு என்னென்ன செய்ய முடியுமோ, அதைல்லாம் செய்றார். இப்டி சில கோணங்கள்ல கவனம் செலுத்துறார். நிறைய நிறைய நல்லது செய்றார்.
TV ரியாலிட்டி ஷோக்கள்ல ஜட்ஜா இருந்திருக்கார்.
விருதுகள் :
ஏஷியன் சினிமா விருது, பத்மஸ்ரீ, ஃபிலிம்ஃபேர் விருதுகள், தேசிய விருதுகள், ஸ்க்ரீன் விருதுகள், ஸ்ட்டார்டஸ்ட் விருதுகள் இன்னும் ஏகப்பட்ட விருதுகள் வாங்கியிருக்கார்.
உள்ளத்தை கிள்ளாதே கிள்ளி விட்டு செல்லாதே காயத்தில் முத்தம் வையப்பா.ஆ. - ப்ரியங்கா சோப்ரா & விஜய்
தமிழன் 2002 / D இமான் / வைரமுத்து
பேபி
18.07.2023 - பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா பிறந்த நாள் [1982]
ஜாம்ஷெட்பூர்ல பிறந்தார். மாடலாக இருந்தவர். 2000ல உலக அழகி பட்டம் வாங்கினார். தமிழ்ல நடிச்ச ஒரே படம் 2002ல தமிழன். இதுல ஒரு பாட்டு விஜய்கூட பின்னணியும் பாடியிருக்கார். "உள்ளத்தை கிள்ளாதே கிள்ளிவிட்டு செல்லாதே"
அப்பா மிலிட்டரில டாக்ட்டரா வேல செஞ்சதால, குடும்பம் ஊர விட்டு ஊர் போக வேண்டிய சூழ்நிலை. அப்டியே அமெரிக்க ஒன்றியத்துக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆச்சு. பிரியங்கா அங்கேயே ஹைஸ்கூல்ல படிச்சார். அப்புறமா இந்தியா வந்தபோது, மிலிட்டரி ஸ்கூல்ல படிச்சார். பாம்பேல காலேஜ் படிச்சார். உலக அழகி பட்டத்துக்கப்புறம் படிக்கிறதை விட்டுட்டு, ஹிந்தி படங்கள்ல நடிக்க போயிட்டார். ஒண்ரெண்டு மராத்தி படங்களையும், சில இங்கிலீஷ் படங்கள்லயும் நடிச்சார். சில படங்களை தயாரிச்சார்.
விளம்பரங்கள்ல நடிச்சார். ம்யூஸிக் வீடியோக்கள் வெளியிட்டிருக்கார். வெப் சீரீஸ்ல நடிச்சார். ஸ்கூல் பிள்ளைங்களின் படிப்புக்காகவும், அவங்க உடல் நலத்துக்காவும் ஒரு அமைப்பை ஏற்படுத்தி உதவி செஞ்சார். அவர் சம்பாத்திக்கிறதுல பத்து சதவீதம் இப்டி தானம் செஞ்சார். இது தவிர பெண்கள் முன்னேற்றம், சமூக மேம்பாடு பற்றி பேசுறார். அதுக்கு என்னென்ன செய்ய முடியுமோ, அதைல்லாம் செய்றார். இப்டி சில கோணங்கள்ல கவனம் செலுத்துறார். நிறைய நிறைய நல்லது செய்றார்.
TV ரியாலிட்டி ஷோக்கள்ல ஜட்ஜா இருந்திருக்கார்.
விருதுகள் :
ஏஷியன் சினிமா விருது, பத்மஸ்ரீ, ஃபிலிம்ஃபேர் விருதுகள், தேசிய விருதுகள், ஸ்க்ரீன் விருதுகள், ஸ்ட்டார்டஸ்ட் விருதுகள் இன்னும் ஏகப்பட்ட விருதுகள் வாங்கியிருக்கார்.
உள்ளத்தை கிள்ளாதே கிள்ளி விட்டு செல்லாதே காயத்தில் முத்தம் வையப்பா.ஆ. - ப்ரியங்கா சோப்ரா & விஜய்
தமிழன் 2002 / D இமான் / வைரமுத்து
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5827
இணைந்தது : 03/12/2017
21.07.2023
18.07.2023 - நடிகர் கல்கத்தா விஸ்வநாதன் பிறந்த நாள் [1929 - 2010]
சொந்த பேர் நாராயணன் விஸ்வநாதன். ஆர்ப்பாட்டமில்லாத நடிகர். தமிழ்நாட்டுல பிறந்த இவர் சின்ன வயசிலேயே கல்கத்தாக்கு போய்ட்டதால அந்த ஊரு இவர் பேர்கூட சேந்துகிச்சு. இது தவிர பூர்ணம் விஸ்வநாதன், விசு என்ற MR விஸ்வநாதன்னு நடிகர்கள் இருந்ததால, குழப்பம் தீரவும் கல்கத்தா விஸ்வநாதன் ஆயிட்டார். அங்கேயே வளந்து, படிச்சு சேவியர்ஸ் காலேஜ்ல இங்கிலிஷ் டீச்சரா 40 வருஷம் வேல பாத்தார். இந்த காலேஜ் இங்கிலிஷ் விவாதங்களுக்கு பேர் போனது. விஸ்வநாதன் பேச்சு போட்டிகள்ல கலந்துக்கிட்டு பரிசுகள் வாங்கினார். வேல பாத்துகிட்டே வங்காள படங்கள்ல நடிச்சார். அங்க பல தியேட்டர் க்ரூப்கள்ல மெம்பரா இருந்து, நடிகர்கள் குழு ஆரம்பிச்சார். பல நாடக குழூல தமிழ், வங்காளம், இங்கிலீஷ் ஷேக்ஸ்பியர் நாடகங்கள்ல நடிச்சார். வங்காள தூர்தர்ஷன் ரேடியோல இங்கிலிஷ் நியூஸ் வாசிப்பாளர். அது மட்டுமில்லாம வினாடி வினா நிகழ்ச்சிகளை நடத்தினார். ப்ரிட்டானிய ஆங்கில மொழி இவர் நாக்குல பூந்து வெளையாடுச்சு.
பேராசிரியர் வேல, நடிக்கிற வேல, விவாத மேடைகள், ஷேக்ஸ்பியர் நாடகங்கள், புத்தகங்களுக்கு மொழி பெயர்ப்பு உதவிகள்னு வேலை பளு கண்டுக்காம, எல்லாத்தையும் சமாளிச்சார். உணர்ச்சிபூர்வமான ஸீன்லயும் ஆர்ப்பாட்டமில்லாம நடிச்சார். பெரிய பெரிய டைரக்ட்டர்கள் படத்லல்லாம் நடிச்சவர் பாரதிராஜா படத்துல நடிக்க சான்ஸ் கிடைக்கல.
1970ல தமிழ் படங்கள்ல நடிக்க ஆரம்பிச்சார். இவர் நடிச்ச படங்கள் லலிதா 1976, மோகம் முப்பது வருஷம் 1976, எனக்குள் ஒருவன் 1984, மூன்று முடிச்சு 1976 படங்கள்ல ரஜினி, கமல்கூட நடிச்சார். நடிகர் திலகம்கூட படிக்காத பண்ணையார் 1985, கவரிமான் 1979, வெள்ளை ரோஜா 1983 படங்கள்ல நடிச்சார். பாலு மகேந்திராவின் மூடுபனி படத்தில நடிச்சார். இவர் நடிச்ச அநேக படங்கள்ல ஸ்டைலான பைப் வச்சு புகை பிடிக்கும் நடிப்புக்கு பேர் வாங்கினார்.
வேற சில படங்கள் :
கண் சிவந்தால் மண் சிவக்கும் 1983, நிலவு சுடுவதில்லை 1984, புதியவன் 1984, இரவுப் பூக்கள் 1986.
பேபி
18.07.2023 - நடிகர் கல்கத்தா விஸ்வநாதன் பிறந்த நாள் [1929 - 2010]
சொந்த பேர் நாராயணன் விஸ்வநாதன். ஆர்ப்பாட்டமில்லாத நடிகர். தமிழ்நாட்டுல பிறந்த இவர் சின்ன வயசிலேயே கல்கத்தாக்கு போய்ட்டதால அந்த ஊரு இவர் பேர்கூட சேந்துகிச்சு. இது தவிர பூர்ணம் விஸ்வநாதன், விசு என்ற MR விஸ்வநாதன்னு நடிகர்கள் இருந்ததால, குழப்பம் தீரவும் கல்கத்தா விஸ்வநாதன் ஆயிட்டார். அங்கேயே வளந்து, படிச்சு சேவியர்ஸ் காலேஜ்ல இங்கிலிஷ் டீச்சரா 40 வருஷம் வேல பாத்தார். இந்த காலேஜ் இங்கிலிஷ் விவாதங்களுக்கு பேர் போனது. விஸ்வநாதன் பேச்சு போட்டிகள்ல கலந்துக்கிட்டு பரிசுகள் வாங்கினார். வேல பாத்துகிட்டே வங்காள படங்கள்ல நடிச்சார். அங்க பல தியேட்டர் க்ரூப்கள்ல மெம்பரா இருந்து, நடிகர்கள் குழு ஆரம்பிச்சார். பல நாடக குழூல தமிழ், வங்காளம், இங்கிலீஷ் ஷேக்ஸ்பியர் நாடகங்கள்ல நடிச்சார். வங்காள தூர்தர்ஷன் ரேடியோல இங்கிலிஷ் நியூஸ் வாசிப்பாளர். அது மட்டுமில்லாம வினாடி வினா நிகழ்ச்சிகளை நடத்தினார். ப்ரிட்டானிய ஆங்கில மொழி இவர் நாக்குல பூந்து வெளையாடுச்சு.
பேராசிரியர் வேல, நடிக்கிற வேல, விவாத மேடைகள், ஷேக்ஸ்பியர் நாடகங்கள், புத்தகங்களுக்கு மொழி பெயர்ப்பு உதவிகள்னு வேலை பளு கண்டுக்காம, எல்லாத்தையும் சமாளிச்சார். உணர்ச்சிபூர்வமான ஸீன்லயும் ஆர்ப்பாட்டமில்லாம நடிச்சார். பெரிய பெரிய டைரக்ட்டர்கள் படத்லல்லாம் நடிச்சவர் பாரதிராஜா படத்துல நடிக்க சான்ஸ் கிடைக்கல.
1970ல தமிழ் படங்கள்ல நடிக்க ஆரம்பிச்சார். இவர் நடிச்ச படங்கள் லலிதா 1976, மோகம் முப்பது வருஷம் 1976, எனக்குள் ஒருவன் 1984, மூன்று முடிச்சு 1976 படங்கள்ல ரஜினி, கமல்கூட நடிச்சார். நடிகர் திலகம்கூட படிக்காத பண்ணையார் 1985, கவரிமான் 1979, வெள்ளை ரோஜா 1983 படங்கள்ல நடிச்சார். பாலு மகேந்திராவின் மூடுபனி படத்தில நடிச்சார். இவர் நடிச்ச அநேக படங்கள்ல ஸ்டைலான பைப் வச்சு புகை பிடிக்கும் நடிப்புக்கு பேர் வாங்கினார்.
வேற சில படங்கள் :
கண் சிவந்தால் மண் சிவக்கும் 1983, நிலவு சுடுவதில்லை 1984, புதியவன் 1984, இரவுப் பூக்கள் 1986.
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5827
இணைந்தது : 03/12/2017
21.07.2023
19.07.2023 - நடிகை மாளவிகா பிறந்த நாள் - 1979
சொந்த பேர் ஸ்வேதா கோனூர் மேனன். மாடல் அழகியா இருந்து நடிகையானார். சின்ன வயசிலேயே நடிக்கணும்னு ஆசப்பட்டார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார். 1999ல உன்னைத்தேடி படத்தில தமிழ்ல அறிமுகமானார். அப்போ அவருக்கு வயசு 19. சில படங்கள்ல ஒரு பாட்டுக்கு மட்டும் ஆடினார்.
தமிழ்ல ப்ரபலமானது 2000ல வெற்றி கொடி கட்டு படத்தில "கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு" பாட்ல. 2006ல சித்திரம் பேசுதடி படத்தில "வாள மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்".
மாளவிகா மாளவிகா மனம் பறித்தாள் மாளவிகா தென்றல் வந்து என்னைக் கேட்டு செல்லும் செல்லும் தேடி வந்து உன்னை தொட்டு சொல்லும் சொல்லும் - சித்ரா & ஹரிஹரன்
உன்னைத்தேடி 1999 / தேவா \ கலைகுமார்
என்ன இது என்ன இது என் மனது என்னை விட்டு தூரம் நின்று பார்க்கிறதே என்ன இது என்ன இது என் விழிகள் என்னை விட்டு உன் வழியில் கிடக்கிறதே - அனுராதா ஸ்ரீராம்
ரோஜாவனம் 1999 / பரத்வாஜ் \ வைரமுத்து
கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு அவன் கண்ணு ரெண்டும் என்ன மயக்கும்தவுசண்ட் வாட்ஸு பவரு - அனுராதா ஸ்ரீராம்
வெற்றிக்கு கொடி கட்டு 2000 \ தேவா \ பா விஜய்
அம்புலி மாமா அம்புலி மாமா அம்புலி மாமா நான்தானே வானத்து மதியை திருமதியாக்கி கைத்தலம் பற்றி கொண்டேனே - கார்த்திக்
பேரழகன் 2004 \ யுவன் சங்கர் ராஜா \ பழனிபாரதி
வினோதமானவளே என் வினோதமானவளே நான் கவிதை சொன்னேன் அதை உளறல் என்கிறாய் உளருவதை நீ கவிதை என்கிறாய் - சுஜாதா & ஹரிஹரன்
லவ்லி 2001 \ தேவா \ பா விஜய்
பேபி
19.07.2023 - நடிகை மாளவிகா பிறந்த நாள் - 1979
சொந்த பேர் ஸ்வேதா கோனூர் மேனன். மாடல் அழகியா இருந்து நடிகையானார். சின்ன வயசிலேயே நடிக்கணும்னு ஆசப்பட்டார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார். 1999ல உன்னைத்தேடி படத்தில தமிழ்ல அறிமுகமானார். அப்போ அவருக்கு வயசு 19. சில படங்கள்ல ஒரு பாட்டுக்கு மட்டும் ஆடினார்.
தமிழ்ல ப்ரபலமானது 2000ல வெற்றி கொடி கட்டு படத்தில "கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு" பாட்ல. 2006ல சித்திரம் பேசுதடி படத்தில "வாள மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்".
மாளவிகா மாளவிகா மனம் பறித்தாள் மாளவிகா தென்றல் வந்து என்னைக் கேட்டு செல்லும் செல்லும் தேடி வந்து உன்னை தொட்டு சொல்லும் சொல்லும் - சித்ரா & ஹரிஹரன்
உன்னைத்தேடி 1999 / தேவா \ கலைகுமார்
என்ன இது என்ன இது என் மனது என்னை விட்டு தூரம் நின்று பார்க்கிறதே என்ன இது என்ன இது என் விழிகள் என்னை விட்டு உன் வழியில் கிடக்கிறதே - அனுராதா ஸ்ரீராம்
ரோஜாவனம் 1999 / பரத்வாஜ் \ வைரமுத்து
கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு அவன் கண்ணு ரெண்டும் என்ன மயக்கும்தவுசண்ட் வாட்ஸு பவரு - அனுராதா ஸ்ரீராம்
வெற்றிக்கு கொடி கட்டு 2000 \ தேவா \ பா விஜய்
அம்புலி மாமா அம்புலி மாமா அம்புலி மாமா நான்தானே வானத்து மதியை திருமதியாக்கி கைத்தலம் பற்றி கொண்டேனே - கார்த்திக்
பேரழகன் 2004 \ யுவன் சங்கர் ராஜா \ பழனிபாரதி
வினோதமானவளே என் வினோதமானவளே நான் கவிதை சொன்னேன் அதை உளறல் என்கிறாய் உளருவதை நீ கவிதை என்கிறாய் - சுஜாதா & ஹரிஹரன்
லவ்லி 2001 \ தேவா \ பா விஜய்
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5827
இணைந்தது : 03/12/2017
21.07.2023
19.07.2023 நடிகை சிந்து துலானி பிறந்த நாள் - 1983
மும்பைல பிறந்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார். தமிழ்ல நடிச்ச முதல் படம் 2004ல சுள்ளான்.
கவிதை இரவு இரவு கவிதை எது நீ எது நான் என தெரியவில்லை நிலவின் கனவுகனவில் நிலவு எது நீ எது நான் என புரியவில்லை - சித்ரா & கார்த்திக்
சுள்ளான் / 2004 / வித்யாசாகர் / யுகபாரதி
ஐயாரெட்டு நாத்து கட்டு அய்யாவோடு கூத்து கட்டு யான கட்டி ஏறு பூட்டு வாய்க்கா வெட்டி பாட்டு கட்டு - அனுராதா ஸ்ரீராம் & சங்கர் மகாதேவன்
மஜா 2005 \ வித்யாசாகர் / பா விஜய்
பேபி
19.07.2023 நடிகை சிந்து துலானி பிறந்த நாள் - 1983
மும்பைல பிறந்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார். தமிழ்ல நடிச்ச முதல் படம் 2004ல சுள்ளான்.
கவிதை இரவு இரவு கவிதை எது நீ எது நான் என தெரியவில்லை நிலவின் கனவுகனவில் நிலவு எது நீ எது நான் என புரியவில்லை - சித்ரா & கார்த்திக்
சுள்ளான் / 2004 / வித்யாசாகர் / யுகபாரதி
ஐயாரெட்டு நாத்து கட்டு அய்யாவோடு கூத்து கட்டு யான கட்டி ஏறு பூட்டு வாய்க்கா வெட்டி பாட்டு கட்டு - அனுராதா ஸ்ரீராம் & சங்கர் மகாதேவன்
மஜா 2005 \ வித்யாசாகர் / பா விஜய்
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Page 49 of 60 • 1 ... 26 ... 48, 49, 50 ... 54 ... 60
Similar topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் அன்புத் தம்பி ரிபாஸுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் அன்புத் தம்பி ரிபாஸுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 49 of 60
|
|