Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
3 posters
Page 46 of 60
Page 46 of 60 • 1 ... 24 ... 45, 46, 47 ... 53 ... 60
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
First topic message reminder :
13.12.2021
நடிகை லட்சுமி அவர்கள் பிறந்த நாள் [1952]
நடிகை, TV நிகழ்ச்சி தொகுப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி படங்கள்ல நடிச்சார்.
அம்மா குமாரி ருக்மணி பழம்பெரும் நடிகை. அப்பா வரதராவ் சினிமா சம்பந்தப்பட்டவர். மகள் நடிகை ஐஸ்வர்யா.
லட்சுமி நடிச்ச முதல் படம் ஸ்ரீவள்ளி [1961]. குழந்தை நட்சத்திரம்.
தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள், தமிழ்நாடு, கர்நாடக மாநில விருதுகள் வாங்கினார்.
தொட்டாக்கா வெட்கம் வரும் நில்லு ராமையாஹா - LR ஈஸ்வரி & TMS
ஆசீர்வாதம் 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்
இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை - P சுசீலா & TMS
சங்கே முழங்கு 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்
எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மணங்கள் திருமணங்கள் - வாணி ஜெயராம் & TMS
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 1978 / MS விஸ்வநாதன் / ஜெயகாந்தன்
பேபி
13.12.2021
நடிகை லட்சுமி அவர்கள் பிறந்த நாள் [1952]
நடிகை, TV நிகழ்ச்சி தொகுப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி படங்கள்ல நடிச்சார்.
அம்மா குமாரி ருக்மணி பழம்பெரும் நடிகை. அப்பா வரதராவ் சினிமா சம்பந்தப்பட்டவர். மகள் நடிகை ஐஸ்வர்யா.
லட்சுமி நடிச்ச முதல் படம் ஸ்ரீவள்ளி [1961]. குழந்தை நட்சத்திரம்.
தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள், தமிழ்நாடு, கர்நாடக மாநில விருதுகள் வாங்கினார்.
தொட்டாக்கா வெட்கம் வரும் நில்லு ராமையாஹா - LR ஈஸ்வரி & TMS
ஆசீர்வாதம் 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்
இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை - P சுசீலா & TMS
சங்கே முழங்கு 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்
எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மணங்கள் திருமணங்கள் - வாணி ஜெயராம் & TMS
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 1978 / MS விஸ்வநாதன் / ஜெயகாந்தன்
பேபி
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4942
இணைந்தது : 03/12/2017
சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
04.07.2023
03.07.2023 - பழம்பெரும் பாடகி ML வசந்தகுமாரி அவர்கள் பிறந்த நாள் [1928 - 1990]
![பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 46 PEWHI5O](https://i.imgur.com/pEWHI5O.jpg)
ராகங்களின் அரசி. கர்னாடக இசை பாடகி. பின்னணியும் பாடினார். எல்லாரும் இவரை MLVனு செல்லமா, அன்பா கூப்ட்டாங்க. அம்மா, அப்பா ரெண்டு பேருமே இசை கலைஞர்கள்.
மெடிக்கல்சுக்கு போணும்னு நெனச்சவரை, ரெண்டாம் உலகப்போர் காரணமாக படிக்க முடியாம போச்சு. கர்நாட இசைல வல்லவரான GN பாலசுப்ரமணியத்தின் முயற்சியால இசை உலகத்துக்கு வந்தார். அவர்கிட்ட 12 வயசிலிருந்தே ம்யூஸிக் கத்துக்க ஆரம்பிச்சுட்டார் வசந்தகுமாரி. 10 வருஷங்கள் பயிற்சி பெற்றார்.
தமிழ் படங்கள்ல நிறையவும், அப்பப்ப தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்லயும் பாடினார். இவர் மகள் நடிகை ஸ்ரீவித்யா. இவரும், சுதா ரகுநாதனும், இன்னும் சிலரும் வசந்தகுமாரிகிட்ட ம்யூஸிக் கத்துக்கிட்டவங்க. வசந்தகுமாரி, பட்டம்மாள், சுப்புலட்சுமி இந்த மூணு பேரையும் இசையின் மும்மணிகள்ன்னு சொன்னாங்க.
கச்சேரிகளுக்கு போனபோது, பங்கச்சுவாலிட்டி இவரோட ஸ்பெஷாலிட்டி. சபாக்களின் முன்னேற்றம், நிறுவனங்கள் தொடங்க, ராணுவ வீரர்களின் நல்வாழ்வு நிதிக்காகவும் விளம்பரம் இல்லாம, பணம் வாங்காம நிறைய கச்சேரிகள்ல பாடினார். 1964ல சீன ஆக்கிரமிப்பின் போது, அவர் போட்டிருந்த நகைகளை கழற்றி கொடுத்த வகையில, நாட்டுப்பற்றுள்ள பெண்மணியாக இருந்தார். ஏழை மாணவர்களின் படிப்பு, ஏழை மக்களின் கல்யாணம் இதுக்கெல்லாம்கூட நிறைய உதவிகள் செஞ்சார்.
ஆண் பக்க வாத்தியக்காரங்ககூட பெண் பாடகிகள் பாடாத காலத்தில, இவர் பாடும்போது மிருதங்க மாமேதை பாலக்காடு மணி அய்யர் பக்க வாத்தியம் வாசிச்சார். கற்பனை வளம் மிக்கவர் வசந்தகுமாரினு இவரோட குரு GN பாலசுப்பிரமணியன் பாராட்டினார்.
குருவை போலவே இவரும் ஒரு நல்லாசிரியர். 1988ல சாகுந்தலம் நாட்டிய நாடகத்தை சென்னை ம்யூஸிக் அகாடமில தன் சொந்த முயற்சியில நடத்தினார். இசை பள்ளி, கல்லூரியில கௌரவ ப்ரொஃபஸரா வேல செஞ்சார். பல உலக நாடுகள்ல கர்னாடக சங்கீதத்தை பரப்பினார். சங்கீதத்தை பொழுதுபோக்காக நினைக்காம, மனப்பூர்வமா நினைக்கணும்னு வளரும் இசை கலைஞர்களுக்கு சொன்னார். சினிமா பாட்டு மூலமா கர்னாடக இசையையும் ஜனங்கள் ரசிக்க முடியும்னு நிரூபிச்சு காட்டியவர் வசந்தகுமாரி.
கெடச்ச பட்டங்கள் :
சங்கீத ரத்னாகரம், சங்கீதவாணி, திருப்பாவை மணி, இசை செல்வம், சங்கீத கலாசிகாமணி, மதுரகலா ப்ரவீணா
விருதுகள் :
சங்கீத கலாநிதி விருது 1977 - கொஞ்ச வயசில் இந்த விருது வாங்கிய பெண் கலைஞர்
சங்கீத நாடக அகடமி விருது 1970
பத்மபூஷண் விருது 1977
கௌரவ டாக்ட்டர் பட்டம் - மைசூர் பல்கலைக்கழகம் 1976
இசை பேரறிஞர் விருது 1978 - தமிழ் இசை சங்கம்
சங்கீத கலாசிகாமணி விருது 1987 - Indian Fine Arts Society, Chennai
ஆடாத மனமும் உண்டோ நடை அலங்காரமும் அழகு சிங்காரமும் கண்டு ஆடாத மனமும் உண்டோ - ML வசந்தகுமாரி & TMS
மன்னாதி மன்னன் 1960 / விஸ்வநாதன் - ராமமூர்த்தி / மருதகாசி
வந்தால் வரட்டும் போடி வண்ண குமரன் வந்தால் வரட்டும் போடி வண்ண குமரன் வாசம் தாங்கும் - ML வசந்தகுமாரி
மணமகன் தேவை 1957 / G ராமநாதன் \ மருதகாசி
கனியோ பாகோ கற்கண்டோ காதில் பாயும் மதுரமொழி கனவோ நனவோ இதுவெல்லாம் கதையில் காணும் கற்பனையோ - ML வசந்தகுமாரி & PB ஸ்ரீனிவாஸ்
கற்புக்கரசி 1957 / G ராமநாதன் \ உடுமலையார்
எந்தன் இன்பம் கொள்ளை கொள்ள வந்த நீலி யாரோ வஞ்சனையாலே வலை வீசியே எந்தன் இன்பம் கொள்ளை கொள்ள வந்த நீலி யாரோ - ML வசந்தகுமாரி
சக்கரவர்த்தித் திருமகள் 1957 \ G ராமநாதன் \ கு மா பாலசுப்ரமணியம்
மஞ்சள் வெயில் மாலையிலே வண்ண பூங்காவிலே பஞ்சவர்ண கிளிகள் கொஞ்சும் பரவசம் பார் அஞ்சுகத்தின் பாஷையிலே ஆணும் பெண்ணும் பேசையிலே - ML வசந்தகுமாரி & CS ஜெயராமன்
காவேரி 1955 / G ராமநாதன் \ உடுமலையார்
பேபி
03.07.2023 - பழம்பெரும் பாடகி ML வசந்தகுமாரி அவர்கள் பிறந்த நாள் [1928 - 1990]
![பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 46 FeCBx6Z](https://i.imgur.com/feCBx6Z.jpg)
![பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 46 CWDpAJt](https://i.imgur.com/cWDpAJt.jpg)
![பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 46 PEWHI5O](https://i.imgur.com/pEWHI5O.jpg)
ராகங்களின் அரசி. கர்னாடக இசை பாடகி. பின்னணியும் பாடினார். எல்லாரும் இவரை MLVனு செல்லமா, அன்பா கூப்ட்டாங்க. அம்மா, அப்பா ரெண்டு பேருமே இசை கலைஞர்கள்.
மெடிக்கல்சுக்கு போணும்னு நெனச்சவரை, ரெண்டாம் உலகப்போர் காரணமாக படிக்க முடியாம போச்சு. கர்நாட இசைல வல்லவரான GN பாலசுப்ரமணியத்தின் முயற்சியால இசை உலகத்துக்கு வந்தார். அவர்கிட்ட 12 வயசிலிருந்தே ம்யூஸிக் கத்துக்க ஆரம்பிச்சுட்டார் வசந்தகுமாரி. 10 வருஷங்கள் பயிற்சி பெற்றார்.
தமிழ் படங்கள்ல நிறையவும், அப்பப்ப தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்லயும் பாடினார். இவர் மகள் நடிகை ஸ்ரீவித்யா. இவரும், சுதா ரகுநாதனும், இன்னும் சிலரும் வசந்தகுமாரிகிட்ட ம்யூஸிக் கத்துக்கிட்டவங்க. வசந்தகுமாரி, பட்டம்மாள், சுப்புலட்சுமி இந்த மூணு பேரையும் இசையின் மும்மணிகள்ன்னு சொன்னாங்க.
கச்சேரிகளுக்கு போனபோது, பங்கச்சுவாலிட்டி இவரோட ஸ்பெஷாலிட்டி. சபாக்களின் முன்னேற்றம், நிறுவனங்கள் தொடங்க, ராணுவ வீரர்களின் நல்வாழ்வு நிதிக்காகவும் விளம்பரம் இல்லாம, பணம் வாங்காம நிறைய கச்சேரிகள்ல பாடினார். 1964ல சீன ஆக்கிரமிப்பின் போது, அவர் போட்டிருந்த நகைகளை கழற்றி கொடுத்த வகையில, நாட்டுப்பற்றுள்ள பெண்மணியாக இருந்தார். ஏழை மாணவர்களின் படிப்பு, ஏழை மக்களின் கல்யாணம் இதுக்கெல்லாம்கூட நிறைய உதவிகள் செஞ்சார்.
ஆண் பக்க வாத்தியக்காரங்ககூட பெண் பாடகிகள் பாடாத காலத்தில, இவர் பாடும்போது மிருதங்க மாமேதை பாலக்காடு மணி அய்யர் பக்க வாத்தியம் வாசிச்சார். கற்பனை வளம் மிக்கவர் வசந்தகுமாரினு இவரோட குரு GN பாலசுப்பிரமணியன் பாராட்டினார்.
குருவை போலவே இவரும் ஒரு நல்லாசிரியர். 1988ல சாகுந்தலம் நாட்டிய நாடகத்தை சென்னை ம்யூஸிக் அகாடமில தன் சொந்த முயற்சியில நடத்தினார். இசை பள்ளி, கல்லூரியில கௌரவ ப்ரொஃபஸரா வேல செஞ்சார். பல உலக நாடுகள்ல கர்னாடக சங்கீதத்தை பரப்பினார். சங்கீதத்தை பொழுதுபோக்காக நினைக்காம, மனப்பூர்வமா நினைக்கணும்னு வளரும் இசை கலைஞர்களுக்கு சொன்னார். சினிமா பாட்டு மூலமா கர்னாடக இசையையும் ஜனங்கள் ரசிக்க முடியும்னு நிரூபிச்சு காட்டியவர் வசந்தகுமாரி.
கெடச்ச பட்டங்கள் :
சங்கீத ரத்னாகரம், சங்கீதவாணி, திருப்பாவை மணி, இசை செல்வம், சங்கீத கலாசிகாமணி, மதுரகலா ப்ரவீணா
விருதுகள் :
சங்கீத கலாநிதி விருது 1977 - கொஞ்ச வயசில் இந்த விருது வாங்கிய பெண் கலைஞர்
சங்கீத நாடக அகடமி விருது 1970
பத்மபூஷண் விருது 1977
கௌரவ டாக்ட்டர் பட்டம் - மைசூர் பல்கலைக்கழகம் 1976
இசை பேரறிஞர் விருது 1978 - தமிழ் இசை சங்கம்
சங்கீத கலாசிகாமணி விருது 1987 - Indian Fine Arts Society, Chennai
ஆடாத மனமும் உண்டோ நடை அலங்காரமும் அழகு சிங்காரமும் கண்டு ஆடாத மனமும் உண்டோ - ML வசந்தகுமாரி & TMS
மன்னாதி மன்னன் 1960 / விஸ்வநாதன் - ராமமூர்த்தி / மருதகாசி
வந்தால் வரட்டும் போடி வண்ண குமரன் வந்தால் வரட்டும் போடி வண்ண குமரன் வாசம் தாங்கும் - ML வசந்தகுமாரி
மணமகன் தேவை 1957 / G ராமநாதன் \ மருதகாசி
கனியோ பாகோ கற்கண்டோ காதில் பாயும் மதுரமொழி கனவோ நனவோ இதுவெல்லாம் கதையில் காணும் கற்பனையோ - ML வசந்தகுமாரி & PB ஸ்ரீனிவாஸ்
கற்புக்கரசி 1957 / G ராமநாதன் \ உடுமலையார்
எந்தன் இன்பம் கொள்ளை கொள்ள வந்த நீலி யாரோ வஞ்சனையாலே வலை வீசியே எந்தன் இன்பம் கொள்ளை கொள்ள வந்த நீலி யாரோ - ML வசந்தகுமாரி
சக்கரவர்த்தித் திருமகள் 1957 \ G ராமநாதன் \ கு மா பாலசுப்ரமணியம்
மஞ்சள் வெயில் மாலையிலே வண்ண பூங்காவிலே பஞ்சவர்ண கிளிகள் கொஞ்சும் பரவசம் பார் அஞ்சுகத்தின் பாஷையிலே ஆணும் பெண்ணும் பேசையிலே - ML வசந்தகுமாரி & CS ஜெயராமன்
காவேரி 1955 / G ராமநாதன் \ உடுமலையார்
பேபி
![மீண்டும் சந்திப்போம்](/users/1813/71/41/02/smiles/68516.gif)
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4942
இணைந்தது : 03/12/2017
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
04.07.2023
03.07.2023 - பழம்பெரும் நடிகர் SV ரங்காராவ் அவர்கள் பிறந்த நாள் [1918 - 1974]
![பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 46 G0w8LiV](https://i.imgur.com/G0w8LiV.jpg)
![பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 46 RS6EC7U](https://i.imgur.com/rS6EC7U.jpg)
நடிகர், டைரக்ட்டர், தயாரிப்பாளர். கண்ணியமான தோற்றம், அலட்டல் இல்லாத நடிப்பு, கணீர் குரல், ஆஜானுபாகு தோற்றம் இதெல்லாம் இவர் சினிமால சிறந்த நடிகராக வலம் வர காரணமாயிருந்துச்சு. 12 வயசிலியே மேடை நாடகங்கள்ல நடிக்க ஆசப்பட்டார். ஆனா பட்டப்படிப்பு முடிச்ச பிறகு, தீயணைப்பு துறைல வேல செஞ்சார். ஆனா நடிப்பு மேல இருந்த ஆசை போகல. 20 வயசில நாடகங்கள்ல நடிக்க ஆரம்பிச்சார். அந்த வயசிலேயே வயசான ரோல்ல நடிச்சு, நாடகத்தை பாத்தவங்க அசந்து போனாங்க. நெறைய நாடங்கள்ல நடிச்சார். அப்ப நடிகை அஞ்சலிதேவியின் கணவர் ஆதி நாராயணராவ் பழக்கம் ஏற்பட்டுச்சு.
சொந்தக்காரர் ஒருத்தர் தெலுங்கு படமெடுத்தார்னு, அதுல ரங்காராவ் நடிச்சார். படம் ஓடல. நடிப்பா வேலையானு யோசிச்ச ரங்காராவ் நடிக்கணும்னு முடிவெடுத்துட்டார்.
தமிழ், தெலுங்கு படங்கள்ல நடிச்சார். 1949ல தெலுங்கு படத்தில சின்ன ரோல்ல நடிக்க ஆரம்பிச்சார். ப்ரபலமானது 1951ல பாதாள பைரவி படத்தில நடிச்சு, தமிழ்லயும், தெலுங்குலயும்.அநேகமா இவர் வயசானவரா நடிச்சு, அந்த கேரக்ட்டருக்கு தன் நடிப்பால உயிரோட்டம் கொடுத்தார். 1952ல கல்யாணம் பண்ணிப் பார் படத்தில 60 வயசானவரா சாவித்திரியின் அப்பாவா நடிச்சார். அப்போ அவருக்கு வயசு 34தானே. புராண படங்கள்ல அவர் நடிச்ச அந்தந்த கேரக்ட்டருக்கு அவர் தோற்றம் கனகச்சிதமா பொருந்தியிருந்துச்சு. மாயா பஜார் படத்தில கடோத்கஜனா நடிச்ச "கல்யாண சமையல் சாதம்" பாட்ட மறக்கமுடியுமா? சர்வர் சுந்தரம் படத்தில காமெடி டைரக்ட்டர். இன்னும் எத்தனையோ சொல்லலாம். அவர்கூட நடிக்க சான்ஸ் கெடக்கலேன்னு கமல்ஹாசனுக்கு மனக்குறையாம்.
ஒண்ணு சொல்லணும். 1950ல மந்திரிகுமாரி படத்தில MGR ஹீரோவா இருந்தாலும், ஒட்டுமொத்த படத்துலயும் ஜனங்களை கவர்ந்தவர் வில்லனா நடிச்ச SA நடராஜன். 2000க்கப்புறம் வந்த படங்களை சொல்லணும்னா, 2003ல வின்னர் படத்தில ப்ரஷாந்த் ஹீரோ. ஆனா பேர் வாங்கினது வடிவேலுதானே. இதே மாதிரி ரங்காராவ் நடிச்ச படங்கள்ல ரங்காராவ்தான் முக்கியமான குணசித்திர நடிகர். எந்த படத்துலயும் அவர் கேரக்ட்டர் சோடை போனதேயில்ல. நடிச்சார்னு சொல்றதவிட, குணசித்திர ரோல்ல நடிச்சாலும், அந்தந்த கேரக்ட்டர்ல, வாழ்ந்தார்னுதான் சொல்லணும். வில்லனாவும் நடிச்சார்.
இளமையிலேயே முன் வழுக்கை. வயதுக்கு மீறிய உடல் பருமன். கொஞ்சம் வயசான தோற்றம். இது தவிர நெட்டையான உருவம். வித்தியாசமான குரல் வளம். இதெல்லாம்தான் அவர் நடிப்பில் முன்னேற பெரிய பலமாயிருந்துச்சு. டயலாக் டெலிவரி, எந்த ரோலாக இருந்தாலும் அசால்ட்டா நடிச்சது பாத்த தெலுங்கு படக்காரங்க அவரை அலேக்கா தூக்கி தெலுங்கு பட உலகத்தில வளச்சு போட்டுக்கிட்டாங்க. புராண, இதிகாச படங்கள்ல வசனங்களை தெறிக்க விட்ட ரங்காராவ், சமூக படங்கள்ல குணசித்திர ரோல்ல நடிச்சபோது, அப்டியே ஆப்போஸிட்டா கனிவா பேசி நடிச்சு பேர் வாங்கினார். சின்ன வயசில வயசானவர் ரோல்ல நடிக்க வேண்டியதிருக்கேன்னு கவலைப்படாம நடிச்சி பின்னி பெடலெடுத்தவர் ரங்காராவ். நெறைய படங்கள்ல இவர் ரோல் பக்கபலமா, செம்ம க்ளாஸிக்கா இருந்துச்சு. காமெடி அப்பா, பணக்கார அப்பா, வில்லத்தன அப்பா எல்லா நடிப்பும் ஆஹா, ஓஹோ, பேஷ், பேஷ்.
2013ல இவரை கௌரவப்படுத்துறதுக்கு, இந்திய அரசு இவரோட ஸ்டாம்ப் வெளியிட்டுச்சு.
தெலுங்கின் டைரக்ட்டின ரெண்டு படங்களுக்கு நந்தி விருது கெடச்சுது. இன்னும் இவரை பற்றி எழுத ஏகப்பட்டது இருக்கு. அந்த அளவுக்கு சூப்பரான நடிகர்
முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக அன்பாலே இனைந்து வந்தோம் ஒண்ணுக்குள் ஒண்ணாக - கண்டசாலா
அன்பு சகோதரர்கள் 1973 / KV மகாதேவன் \ கண்ணதாசன்
கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் ப்ரமாதம் அந்த கௌரவ ப்ரசாதம் இதுவே எனக்கு போதும் அஹஹ்ஹஹ்ஹா - திருச்சி லோகநாதன்
மாயா பஜார் 1957 / கண்டசாலா \ தஞ்சையார்
ரங்காராவ் டைரக்ட்டரா நடிச்ச சர்வர் சுந்தரம் 1964
பேபி
03.07.2023 - பழம்பெரும் நடிகர் SV ரங்காராவ் அவர்கள் பிறந்த நாள் [1918 - 1974]
![பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 46 WoLG63R](https://i.imgur.com/WoLG63R.jpg)
![பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 46 G0w8LiV](https://i.imgur.com/G0w8LiV.jpg)
![பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 46 RS6EC7U](https://i.imgur.com/rS6EC7U.jpg)
நடிகர், டைரக்ட்டர், தயாரிப்பாளர். கண்ணியமான தோற்றம், அலட்டல் இல்லாத நடிப்பு, கணீர் குரல், ஆஜானுபாகு தோற்றம் இதெல்லாம் இவர் சினிமால சிறந்த நடிகராக வலம் வர காரணமாயிருந்துச்சு. 12 வயசிலியே மேடை நாடகங்கள்ல நடிக்க ஆசப்பட்டார். ஆனா பட்டப்படிப்பு முடிச்ச பிறகு, தீயணைப்பு துறைல வேல செஞ்சார். ஆனா நடிப்பு மேல இருந்த ஆசை போகல. 20 வயசில நாடகங்கள்ல நடிக்க ஆரம்பிச்சார். அந்த வயசிலேயே வயசான ரோல்ல நடிச்சு, நாடகத்தை பாத்தவங்க அசந்து போனாங்க. நெறைய நாடங்கள்ல நடிச்சார். அப்ப நடிகை அஞ்சலிதேவியின் கணவர் ஆதி நாராயணராவ் பழக்கம் ஏற்பட்டுச்சு.
சொந்தக்காரர் ஒருத்தர் தெலுங்கு படமெடுத்தார்னு, அதுல ரங்காராவ் நடிச்சார். படம் ஓடல. நடிப்பா வேலையானு யோசிச்ச ரங்காராவ் நடிக்கணும்னு முடிவெடுத்துட்டார்.
தமிழ், தெலுங்கு படங்கள்ல நடிச்சார். 1949ல தெலுங்கு படத்தில சின்ன ரோல்ல நடிக்க ஆரம்பிச்சார். ப்ரபலமானது 1951ல பாதாள பைரவி படத்தில நடிச்சு, தமிழ்லயும், தெலுங்குலயும்.அநேகமா இவர் வயசானவரா நடிச்சு, அந்த கேரக்ட்டருக்கு தன் நடிப்பால உயிரோட்டம் கொடுத்தார். 1952ல கல்யாணம் பண்ணிப் பார் படத்தில 60 வயசானவரா சாவித்திரியின் அப்பாவா நடிச்சார். அப்போ அவருக்கு வயசு 34தானே. புராண படங்கள்ல அவர் நடிச்ச அந்தந்த கேரக்ட்டருக்கு அவர் தோற்றம் கனகச்சிதமா பொருந்தியிருந்துச்சு. மாயா பஜார் படத்தில கடோத்கஜனா நடிச்ச "கல்யாண சமையல் சாதம்" பாட்ட மறக்கமுடியுமா? சர்வர் சுந்தரம் படத்தில காமெடி டைரக்ட்டர். இன்னும் எத்தனையோ சொல்லலாம். அவர்கூட நடிக்க சான்ஸ் கெடக்கலேன்னு கமல்ஹாசனுக்கு மனக்குறையாம்.
ஒண்ணு சொல்லணும். 1950ல மந்திரிகுமாரி படத்தில MGR ஹீரோவா இருந்தாலும், ஒட்டுமொத்த படத்துலயும் ஜனங்களை கவர்ந்தவர் வில்லனா நடிச்ச SA நடராஜன். 2000க்கப்புறம் வந்த படங்களை சொல்லணும்னா, 2003ல வின்னர் படத்தில ப்ரஷாந்த் ஹீரோ. ஆனா பேர் வாங்கினது வடிவேலுதானே. இதே மாதிரி ரங்காராவ் நடிச்ச படங்கள்ல ரங்காராவ்தான் முக்கியமான குணசித்திர நடிகர். எந்த படத்துலயும் அவர் கேரக்ட்டர் சோடை போனதேயில்ல. நடிச்சார்னு சொல்றதவிட, குணசித்திர ரோல்ல நடிச்சாலும், அந்தந்த கேரக்ட்டர்ல, வாழ்ந்தார்னுதான் சொல்லணும். வில்லனாவும் நடிச்சார்.
இளமையிலேயே முன் வழுக்கை. வயதுக்கு மீறிய உடல் பருமன். கொஞ்சம் வயசான தோற்றம். இது தவிர நெட்டையான உருவம். வித்தியாசமான குரல் வளம். இதெல்லாம்தான் அவர் நடிப்பில் முன்னேற பெரிய பலமாயிருந்துச்சு. டயலாக் டெலிவரி, எந்த ரோலாக இருந்தாலும் அசால்ட்டா நடிச்சது பாத்த தெலுங்கு படக்காரங்க அவரை அலேக்கா தூக்கி தெலுங்கு பட உலகத்தில வளச்சு போட்டுக்கிட்டாங்க. புராண, இதிகாச படங்கள்ல வசனங்களை தெறிக்க விட்ட ரங்காராவ், சமூக படங்கள்ல குணசித்திர ரோல்ல நடிச்சபோது, அப்டியே ஆப்போஸிட்டா கனிவா பேசி நடிச்சு பேர் வாங்கினார். சின்ன வயசில வயசானவர் ரோல்ல நடிக்க வேண்டியதிருக்கேன்னு கவலைப்படாம நடிச்சி பின்னி பெடலெடுத்தவர் ரங்காராவ். நெறைய படங்கள்ல இவர் ரோல் பக்கபலமா, செம்ம க்ளாஸிக்கா இருந்துச்சு. காமெடி அப்பா, பணக்கார அப்பா, வில்லத்தன அப்பா எல்லா நடிப்பும் ஆஹா, ஓஹோ, பேஷ், பேஷ்.
2013ல இவரை கௌரவப்படுத்துறதுக்கு, இந்திய அரசு இவரோட ஸ்டாம்ப் வெளியிட்டுச்சு.
தெலுங்கின் டைரக்ட்டின ரெண்டு படங்களுக்கு நந்தி விருது கெடச்சுது. இன்னும் இவரை பற்றி எழுத ஏகப்பட்டது இருக்கு. அந்த அளவுக்கு சூப்பரான நடிகர்
முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக அன்பாலே இனைந்து வந்தோம் ஒண்ணுக்குள் ஒண்ணாக - கண்டசாலா
அன்பு சகோதரர்கள் 1973 / KV மகாதேவன் \ கண்ணதாசன்
கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் ப்ரமாதம் அந்த கௌரவ ப்ரசாதம் இதுவே எனக்கு போதும் அஹஹ்ஹஹ்ஹா - திருச்சி லோகநாதன்
மாயா பஜார் 1957 / கண்டசாலா \ தஞ்சையார்
ரங்காராவ் டைரக்ட்டரா நடிச்ச சர்வர் சுந்தரம் 1964
பேபி
![மீண்டும் சந்திப்போம்](/users/1813/71/41/02/smiles/68516.gif)
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4942
இணைந்தது : 03/12/2017
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
04.07.2023
03.07.2023 - பழம்பெரும் ம்யூஸிக் டைரக்ட்டர் TR பாப்பா அவர்கள் பிறந்த நாள் [1923 - 2004]
![பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 46 0bb3FcU](https://i.imgur.com/0bb3FcU.jpg)
தமிழ், தெலுங்கு, சிங்கள படங்களுக்கு ம்யூஸிக் போட்டார். சிறந்த வயலின் வித்வானாக இருந்து ம்யூஸிக் டைரக்ட்டராக வந்தார். அப்பாவும் வயலின் கலைஞர்.
படிக்கிறதுக்கு வசதியில்ல. திருவையாறு தியாகராஜர் உற்சவத்துக்கு வருஷா வருஷம் பாப்பாவை கூட்டிட்டு போனார் அவரோட அப்பா. சினிமால வாத்தியங்கள் வாசிக்கும் ஒருத்தர் பழக்கம் கெடச்சுது. அவர் ஷூட்டிங்க்கு போனபோது, பாப்பாவை கூட்டிட்டு போனார்.
1938ல பாப்பா தனியா வயலின் கச்சேரி செஞ்சார். நல்ல வரவேற்பு கெடச்சுது. தொடர்ந்து சினிமாவுக்கு வாத்தியங்கள் இசைக்கும் சான்ஸ் கெடச்சுது. பிடில் வாசிச்சார். அங்க ம்யூஸிக்கை பற்றியும், இசை கருவிகளை பற்றியும் நல்லா கத்துக்கிட்டார். உதவி செஞ்சவர், சினிமா ஆரம்பிக்கிறதுக்கு முன்னாலேயே பாடகராகவும், மேடை நடிகராவும் இருந்த SG கிட்டப்பாவின் அண்ணன் காசி ஐயர். காசி அய்யர்கிட்ட உதவியாளராக இருந்தார் பாப்பா. ஒரு சில நடன நிகழ்ச்சிகள்ல MS விஸ்வநாதன் பின்னணி பாட, பாப்பா வயலின் வாசிச்சார்.
1940களின் பிற்பகுதியில பாப்பாவும், TK ராமமூர்த்தியும் அதிக சம்பளம் வாங்கிய வயலின் கலைஞர்கள்.
ஆரம்பத்தில படங்களுக்கு வயலின் வாசிக்க தொடங்கினார் பாப்பா. 1952ல மலையாள படத்துக்கு பாப்பா ம்யூஸிக் போட ஆரம்பிச்சார். இந்த படத்தின் டைரக்ட்டர் ஜோசப் தளியத் அதே படத்தை தமிழ்ல எடுத்து, தமிழ்லயும் பாப்பாவையே ம்யூஸிக் வச்சார். அப்புறமா ஜோசப் தளியத்கிட்ட மத்தவங்க, "உங்க படத்தின் ஹீரோ யார்"னு கேட்டா, "என் படங்களுக்கெல்லாம் ஹீரோ என் ம்யூஸிக் டைரக்ட்டர் பாப்பாதான்"னு பெரும்மையா சொன்னார். அந்த அளவுக்கு பாப்பாவின் ம்யூஸிக் மேல ஜோசப்புக்கு தனி மரியாதை இருந்துச்சு. அந்த அளவுக்கு பாப்பாவின் ம்யூஸிக்கின் தனித்துவம்தான் காரணம்.
வைரம் [1974] படத்தில ஜெயலலிதாவை SPBகூட ஒரு பாட்டு பாட வச்சார். பாடி முடிச்சு வெளியே வந்ததும் ஜெயலலிதா நெகிழ்ச்சியுடன் இப்டி சொன்னார்,
"என் வாழ்க்கைல இது மறக்க முடியாத பாட்டு. நான் பாடினது எனக்கே ரொம்ப பிடிச்சிருக்கு. ரொம்ப நன்றி".
தமிழ் இசை சங்கம் பாப்பாவுக்கு இசை பேரறிஞர் பட்டத்தை கொடுத்துச்சு.
இரு மாங்கனிபோல் இதழோரம் ஏங்குது மோகம் மணி மாளிகை போல் ஒரு தேகம் பாடுது ராகம் கண்மணி ராஜா பொங்குது நாணம் பார்த்தது போதும் ஓ ஹோ ஹோ காளைக்கு யோகம் - ஜெயலலிதா & SPB
வைரம் 1974 \ TR பாப்பா \ கண்ணதாசன்
கண்ணன் எனக்கொரு பிள்ளை நான் கன்னிதான் இன்னும் தாயாகவில்லை - சூலமங்கலம் ராஜலட்சுமி
ஏன் 1970 / TR பாப்பா \ கண்ணதாசன்
கனவில் நின்ற திருமுகம் கன்னியிவள் புதுமுகம் கண்களுக்கும் நெஞ்சினுக்கும் அறிமுகம் - TMS
டீச்சரம்மா 1968 / TR பாப்பா \ கண்ணதாசன்
சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள் சிந்திய கண்ணீர் மாறியதாலே சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள் - சுசீலா & சீர்காழியார்
நல்லவன் வாழ்வான் 1961 TR பாப்பா \ வாலி
ஏடி பூங்கொடி ஏனிந்த பார்வை கோடி கோடியோ நீ கொண்ட ஆசை தேடி வந்த தெய்வம் யாரடி - MR விஜயா
மறுபிறவி 1973 / TR பாப்பா \ கண்ணதாசன்
பேபி
03.07.2023 - பழம்பெரும் ம்யூஸிக் டைரக்ட்டர் TR பாப்பா அவர்கள் பிறந்த நாள் [1923 - 2004]
![பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 46 UMWyp6K](https://i.imgur.com/UMWyp6K.jpg)
![பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 46 0bb3FcU](https://i.imgur.com/0bb3FcU.jpg)
தமிழ், தெலுங்கு, சிங்கள படங்களுக்கு ம்யூஸிக் போட்டார். சிறந்த வயலின் வித்வானாக இருந்து ம்யூஸிக் டைரக்ட்டராக வந்தார். அப்பாவும் வயலின் கலைஞர்.
படிக்கிறதுக்கு வசதியில்ல. திருவையாறு தியாகராஜர் உற்சவத்துக்கு வருஷா வருஷம் பாப்பாவை கூட்டிட்டு போனார் அவரோட அப்பா. சினிமால வாத்தியங்கள் வாசிக்கும் ஒருத்தர் பழக்கம் கெடச்சுது. அவர் ஷூட்டிங்க்கு போனபோது, பாப்பாவை கூட்டிட்டு போனார்.
1938ல பாப்பா தனியா வயலின் கச்சேரி செஞ்சார். நல்ல வரவேற்பு கெடச்சுது. தொடர்ந்து சினிமாவுக்கு வாத்தியங்கள் இசைக்கும் சான்ஸ் கெடச்சுது. பிடில் வாசிச்சார். அங்க ம்யூஸிக்கை பற்றியும், இசை கருவிகளை பற்றியும் நல்லா கத்துக்கிட்டார். உதவி செஞ்சவர், சினிமா ஆரம்பிக்கிறதுக்கு முன்னாலேயே பாடகராகவும், மேடை நடிகராவும் இருந்த SG கிட்டப்பாவின் அண்ணன் காசி ஐயர். காசி அய்யர்கிட்ட உதவியாளராக இருந்தார் பாப்பா. ஒரு சில நடன நிகழ்ச்சிகள்ல MS விஸ்வநாதன் பின்னணி பாட, பாப்பா வயலின் வாசிச்சார்.
1940களின் பிற்பகுதியில பாப்பாவும், TK ராமமூர்த்தியும் அதிக சம்பளம் வாங்கிய வயலின் கலைஞர்கள்.
ஆரம்பத்தில படங்களுக்கு வயலின் வாசிக்க தொடங்கினார் பாப்பா. 1952ல மலையாள படத்துக்கு பாப்பா ம்யூஸிக் போட ஆரம்பிச்சார். இந்த படத்தின் டைரக்ட்டர் ஜோசப் தளியத் அதே படத்தை தமிழ்ல எடுத்து, தமிழ்லயும் பாப்பாவையே ம்யூஸிக் வச்சார். அப்புறமா ஜோசப் தளியத்கிட்ட மத்தவங்க, "உங்க படத்தின் ஹீரோ யார்"னு கேட்டா, "என் படங்களுக்கெல்லாம் ஹீரோ என் ம்யூஸிக் டைரக்ட்டர் பாப்பாதான்"னு பெரும்மையா சொன்னார். அந்த அளவுக்கு பாப்பாவின் ம்யூஸிக் மேல ஜோசப்புக்கு தனி மரியாதை இருந்துச்சு. அந்த அளவுக்கு பாப்பாவின் ம்யூஸிக்கின் தனித்துவம்தான் காரணம்.
வைரம் [1974] படத்தில ஜெயலலிதாவை SPBகூட ஒரு பாட்டு பாட வச்சார். பாடி முடிச்சு வெளியே வந்ததும் ஜெயலலிதா நெகிழ்ச்சியுடன் இப்டி சொன்னார்,
"என் வாழ்க்கைல இது மறக்க முடியாத பாட்டு. நான் பாடினது எனக்கே ரொம்ப பிடிச்சிருக்கு. ரொம்ப நன்றி".
தமிழ் இசை சங்கம் பாப்பாவுக்கு இசை பேரறிஞர் பட்டத்தை கொடுத்துச்சு.
இரு மாங்கனிபோல் இதழோரம் ஏங்குது மோகம் மணி மாளிகை போல் ஒரு தேகம் பாடுது ராகம் கண்மணி ராஜா பொங்குது நாணம் பார்த்தது போதும் ஓ ஹோ ஹோ காளைக்கு யோகம் - ஜெயலலிதா & SPB
வைரம் 1974 \ TR பாப்பா \ கண்ணதாசன்
கண்ணன் எனக்கொரு பிள்ளை நான் கன்னிதான் இன்னும் தாயாகவில்லை - சூலமங்கலம் ராஜலட்சுமி
ஏன் 1970 / TR பாப்பா \ கண்ணதாசன்
கனவில் நின்ற திருமுகம் கன்னியிவள் புதுமுகம் கண்களுக்கும் நெஞ்சினுக்கும் அறிமுகம் - TMS
டீச்சரம்மா 1968 / TR பாப்பா \ கண்ணதாசன்
சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள் சிந்திய கண்ணீர் மாறியதாலே சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள் - சுசீலா & சீர்காழியார்
நல்லவன் வாழ்வான் 1961 TR பாப்பா \ வாலி
ஏடி பூங்கொடி ஏனிந்த பார்வை கோடி கோடியோ நீ கொண்ட ஆசை தேடி வந்த தெய்வம் யாரடி - MR விஜயா
மறுபிறவி 1973 / TR பாப்பா \ கண்ணதாசன்
பேபி
![மீண்டும் சந்திப்போம்](/users/1813/71/41/02/smiles/68516.gif)
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4942
இணைந்தது : 03/12/2017
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
05.07.2023
04.07.2023 - ம்யூசிக் டைரக்ட்டர் மரகதமணி பிறந்த நாள் [1961]
![பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 46 AwMtgaL](https://i.imgur.com/awMtgaL.jpg)
மரகதமணி கீரவாணி. ம்யூஸிக் டைரக்ட்டர், பாடலாசிரியர், பாடகர். இவரோட ரெண்டு மகன்களும் பாடகர்கள்.
தமிழ் சினிமால மரகதமணி. கீரவாணினு ஒரு இசை. இது இவரோட அப்பாவுக்கு ரொம்ப பிடிக்கும். அதனால மகனுக்கு கீரவாணினு பேர் வச்சுட்டார். அதனால கீரவாணிக்கு ம்யூஸிக் மேல ஈர்ப்பு வந்துச்சு. 2 வருஷத்துல வீணை கத்துக்கிட்டார். டான்ஸ், துறுதுறு இசை இதனால ஜனங்கள் துள்ளல் ம்யூஸிக்லாம் ரசிக்கிறாங்க. ஆனா மெலடி பாட்டுதான் ஜனங்களோட மனசுல நிக்கும்னு ஒரு இண்ட்டர்வ்யூல மரகதமணி சொன்னார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்களுக்கு ம்யூஸிக் போட்டிருக்கார். 1987ல தெலுங்கு ம்யூசிக் டைரக்ட்டர் சக்கரவர்த்திகிட்டயும், மலையாள ம்யூஸிக் டைரக்ட்டர் C ராஜாமணிகிட்டயும் உதவியாளராக இருந்தார். ப்ரசாத் ஸ்டூடியோல ம்யூஸிக்கை பற்றிய நுணுக்கங்களை கத்துக்கிட்டார்.
1990ல தெலுங்கு படத்துக்கு முதல்முதலா ம்யூஸிக் போட ஆரம்பிச்சார். தமிழ்ல ஆரம்பிச்சது 1991ல K பாலசந்தரின் அழகன் படத்துக்காக. அவர்தான் மரகதமணீனு பேர் வச்சார். அதுல இருந்து பாலசந்தரின் ஆஸ்த்தான ம்யூஸிக் டைரக்ட்டரா இருந்தார். இதே மாதிரி தெலுங்குல டைரக்ட்டர் ராஜமௌலியின் ஆஸ்தான ம்யூஸிக் டைரக்ட்டர். தெலுங்கு படங்கள்லதான் கொடி கட்டி பறந்துட்டு இருக்கார். இவரோட பாட்டுக்களை கேட்டவங்கள்ல, அந்த பாட்டுக்கள் இளையராஜாவோடதுன்னு நெனச்சவங்களும் இருக்காங்க. அழகன் பட பாட்டுக்களை அப்டித்தான் நெனச்சாங்க.
டைரக்ட்டர் ராஜமௌலி, ம்யூஸிக் டைரக்ட்டர் ஸ்ரீலேகா மரகதமணியின் உறவினர்கள்.
தமிழ்ல மரகதமணி, தெலுங்குல கீரவாணி மாதிரி ஹிந்தி படங்கள்ல இவர் பேர் க்ரீம்.
இளையராஜா, ஒரு அமெரிக்க ம்யூஸிக் டைரக்ட்டர், பாகிஸ்தான் பாடகர் ஒருத்தர் இவங்கல்லாம்தான் தனக்கு ம்யூஸிக் மேல பிடிப்பு வர காரணம்னு மரகதமணி சொல்லியிருக்கார்.
ஆஸ்கார் விருது வாங்கிய ரெண்டாவது ம்யூஸிக் டைரக்ட்டர் மரகதமணி. முதல்வர் AR ரஹ்மான்.
விருதுகள் :
தேசிய விருது - தெலுங்கு படம் 1997
ஃபிலிம்ஃபேர் விருதுகள் 8 - தெலுங்கு படங்கள்
நந்தி விருதுகள் 11
தமிழ்நாடு மாநில விருது - அழகன் 1991
பத்மஸ்ரீ விருது 2023
SIIMA - 2 தெலுங்கு படங்கள் 2018 & 2021
என்னை காதலிக்க பிறந்தவனே நீதான் என்று கைகள் கோர்த்து என் தோள் சாயும் தோழன் என்றுஎனக்கு தோன்றியதாலே எல்லாம் மாறியதாலே உன் கண்ணுக்குள்ளே காதலனே விழுந்து எழுகிறேன் - சித்ரா & SPB சரண்
ஸ்டுடண்ட் நம்பர்1 / மரகதமணி \ நா முத்துக்குமார்
அட வாடா வயசு பையா புது வழக்கொண்ணு இருக்குதையா நீ எங்க ஊரு பொண்ண தொட்டுட்டே இப்ப நட்டநடு ஆத்தில் விட்டுட்டே - மரகதமணி
வானமே எல்லை 1992 / சிற்பி \ வைரமுத்து
கம்பன் எங்கு போனான் ஷெல்லி என்ன ஆனான் நம்மை பாடாமல் லைலா செத்துப் போனாள் மஜ்னு செத்துப் போனான் நம்மை பாராமல் கண்ணீரே இல்லாத காதல் சூத்திரம் - சித்ரா & SPB
ஜாதி மல்லி 1992 / மரகதமணி / வைரமுத்து
யார் எந்தன் ராகம் அறிந்தவன் யார் எந்தன் தாகம் தெரிந்தவன் நீ ஒருவன்தான் சபைகள் பெரிதும் வழியும் பொழுது உன்னை நான் தேடுவேன் உண்மை சபையும் நிறையும் பொழுது என்ன நான் பாடுவேன் - சித்ரா
பாட்டொன்று கேட்டேன் 1991 / மரகதமணி \ வைரமுத்து
பாட்டு வரிகளே இல்லாம வெறுமனே ஸ்வரங்களை மட்டும் வச்சு ஒரு பாட்டு. சூப்பரா இருக்கு - SPB
நீ பாதி நான் பாதி 1991 / மரகதமணி \ வாலி
பேபி
04.07.2023 - ம்யூசிக் டைரக்ட்டர் மரகதமணி பிறந்த நாள் [1961]
![பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 46 8qhDH0e](https://i.imgur.com/8qhDH0e.png)
![பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 46 AwMtgaL](https://i.imgur.com/awMtgaL.jpg)
மரகதமணி கீரவாணி. ம்யூஸிக் டைரக்ட்டர், பாடலாசிரியர், பாடகர். இவரோட ரெண்டு மகன்களும் பாடகர்கள்.
தமிழ் சினிமால மரகதமணி. கீரவாணினு ஒரு இசை. இது இவரோட அப்பாவுக்கு ரொம்ப பிடிக்கும். அதனால மகனுக்கு கீரவாணினு பேர் வச்சுட்டார். அதனால கீரவாணிக்கு ம்யூஸிக் மேல ஈர்ப்பு வந்துச்சு. 2 வருஷத்துல வீணை கத்துக்கிட்டார். டான்ஸ், துறுதுறு இசை இதனால ஜனங்கள் துள்ளல் ம்யூஸிக்லாம் ரசிக்கிறாங்க. ஆனா மெலடி பாட்டுதான் ஜனங்களோட மனசுல நிக்கும்னு ஒரு இண்ட்டர்வ்யூல மரகதமணி சொன்னார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்களுக்கு ம்யூஸிக் போட்டிருக்கார். 1987ல தெலுங்கு ம்யூசிக் டைரக்ட்டர் சக்கரவர்த்திகிட்டயும், மலையாள ம்யூஸிக் டைரக்ட்டர் C ராஜாமணிகிட்டயும் உதவியாளராக இருந்தார். ப்ரசாத் ஸ்டூடியோல ம்யூஸிக்கை பற்றிய நுணுக்கங்களை கத்துக்கிட்டார்.
1990ல தெலுங்கு படத்துக்கு முதல்முதலா ம்யூஸிக் போட ஆரம்பிச்சார். தமிழ்ல ஆரம்பிச்சது 1991ல K பாலசந்தரின் அழகன் படத்துக்காக. அவர்தான் மரகதமணீனு பேர் வச்சார். அதுல இருந்து பாலசந்தரின் ஆஸ்த்தான ம்யூஸிக் டைரக்ட்டரா இருந்தார். இதே மாதிரி தெலுங்குல டைரக்ட்டர் ராஜமௌலியின் ஆஸ்தான ம்யூஸிக் டைரக்ட்டர். தெலுங்கு படங்கள்லதான் கொடி கட்டி பறந்துட்டு இருக்கார். இவரோட பாட்டுக்களை கேட்டவங்கள்ல, அந்த பாட்டுக்கள் இளையராஜாவோடதுன்னு நெனச்சவங்களும் இருக்காங்க. அழகன் பட பாட்டுக்களை அப்டித்தான் நெனச்சாங்க.
டைரக்ட்டர் ராஜமௌலி, ம்யூஸிக் டைரக்ட்டர் ஸ்ரீலேகா மரகதமணியின் உறவினர்கள்.
தமிழ்ல மரகதமணி, தெலுங்குல கீரவாணி மாதிரி ஹிந்தி படங்கள்ல இவர் பேர் க்ரீம்.
இளையராஜா, ஒரு அமெரிக்க ம்யூஸிக் டைரக்ட்டர், பாகிஸ்தான் பாடகர் ஒருத்தர் இவங்கல்லாம்தான் தனக்கு ம்யூஸிக் மேல பிடிப்பு வர காரணம்னு மரகதமணி சொல்லியிருக்கார்.
ஆஸ்கார் விருது வாங்கிய ரெண்டாவது ம்யூஸிக் டைரக்ட்டர் மரகதமணி. முதல்வர் AR ரஹ்மான்.
விருதுகள் :
தேசிய விருது - தெலுங்கு படம் 1997
ஃபிலிம்ஃபேர் விருதுகள் 8 - தெலுங்கு படங்கள்
நந்தி விருதுகள் 11
தமிழ்நாடு மாநில விருது - அழகன் 1991
பத்மஸ்ரீ விருது 2023
SIIMA - 2 தெலுங்கு படங்கள் 2018 & 2021
என்னை காதலிக்க பிறந்தவனே நீதான் என்று கைகள் கோர்த்து என் தோள் சாயும் தோழன் என்றுஎனக்கு தோன்றியதாலே எல்லாம் மாறியதாலே உன் கண்ணுக்குள்ளே காதலனே விழுந்து எழுகிறேன் - சித்ரா & SPB சரண்
ஸ்டுடண்ட் நம்பர்1 / மரகதமணி \ நா முத்துக்குமார்
அட வாடா வயசு பையா புது வழக்கொண்ணு இருக்குதையா நீ எங்க ஊரு பொண்ண தொட்டுட்டே இப்ப நட்டநடு ஆத்தில் விட்டுட்டே - மரகதமணி
வானமே எல்லை 1992 / சிற்பி \ வைரமுத்து
கம்பன் எங்கு போனான் ஷெல்லி என்ன ஆனான் நம்மை பாடாமல் லைலா செத்துப் போனாள் மஜ்னு செத்துப் போனான் நம்மை பாராமல் கண்ணீரே இல்லாத காதல் சூத்திரம் - சித்ரா & SPB
ஜாதி மல்லி 1992 / மரகதமணி / வைரமுத்து
யார் எந்தன் ராகம் அறிந்தவன் யார் எந்தன் தாகம் தெரிந்தவன் நீ ஒருவன்தான் சபைகள் பெரிதும் வழியும் பொழுது உன்னை நான் தேடுவேன் உண்மை சபையும் நிறையும் பொழுது என்ன நான் பாடுவேன் - சித்ரா
பாட்டொன்று கேட்டேன் 1991 / மரகதமணி \ வைரமுத்து
பாட்டு வரிகளே இல்லாம வெறுமனே ஸ்வரங்களை மட்டும் வச்சு ஒரு பாட்டு. சூப்பரா இருக்கு - SPB
நீ பாதி நான் பாதி 1991 / மரகதமணி \ வாலி
பேபி
![மீண்டும் சந்திப்போம்](/users/1813/71/41/02/smiles/68516.gif)
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4942
இணைந்தது : 03/12/2017
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
05.07.2023
04.07.2023 - நவரச திலகம் முத்துராமன் பிறந்த நாள் [1929 - 1981]
![பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 46 Muthur12](https://i.servimg.com/u/f13/20/50/10/64/muthur12.jpg)
![பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 46 Muthur13](https://i.servimg.com/u/f13/20/50/10/64/muthur13.jpg)
![பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 46 Muthur11](https://i.servimg.com/u/f13/20/50/10/64/muthur11.png)
இவரோட குடும்பத்தினருக்கும், நடிப்புக்கும் இத்தனூண்டுக்கூட சம்பந்தமே இல்ல. அப்பா வக்கீல். குடும்பத்தில உள்ளவங்க கம்ப்பெல் செஞ்சதால முத்துராமன் அரசாங்க வேலைக்கு போனார்.
முத்துராமனுக்கு ஸ்கூல்ல படிக்கும்போதே நாடகத்தில நடிக்க ஆச. இது அம்மா, அப்பாவுக்கு பிடிக்கல. வீட்டை விட்டு ஓடி போய்ட்டார். முத்துராமன் நடிப்புன்னு போனது மொதல்ல நாடகங்கள்ல நடிக்க ஆரம்பிச்சார். 1947ல மனோரமாகூட வைரம் நாடக சபால நடிச்சார். லட்சிய நடிகர் SS ராஜேந்திரனின் நாடக மன்றத்துல, சகஸ்ரநாமம் நாடக சபால சேந்து பல நாடகங்கள்ல நடிச்சார். இப்டி ஒவ்வொரு நாடக சபால ஏறி இறங்கி சான்ஸ் கேட்டு, சின்ன சின்ன ரோல்ல நடிச்சார். மகாகவி பாரதியாரின் கவிதை வரி நாடகத்தில நடிச்சு ப்ரபலமானார். குரல் வளம், நடிப்பு பாத்தவங்களுக்கு பிடிச்சிருந்துச்சு. பல நாடகங்கள்ல நடிச்சார். சினிமால நடிக்க ஆரம்பிச்சது ரொம்ப லேட்டாத்தான். குலதெய்வம் ராஜகோபால் போன்ற நடிகர்களுடன் சேந்து வைரம் நாடக சபால பல நாடகங்களை நடத்தினாங்க.
அப்பா நவரச திலகம்னா, இவரோட மகன் கார்த்திக் நவரச நாயகன். நல்லா இருக்குல்ல!!! பேரன் கௌதம் கார்த்திக்கும் நடிகர்.
அதிகமா KR விஜயா கூட ஹீரோவா நடிச்சார். மெய்ன் ஹீரோ, ரெண்டாவது ஹீரோ, குணசித்திர நடிகர், ஒண்ரெண்டு படங்கள்ல வில்லன்னு முத்துராமன் நடிச்சார். அதிகமா நடிச்சது ரெண்டாவது கதாநாயகன் ரோல்ல.
1956ல ரங்கூன் ராதா நடிகர் திலகம் படத்தில வக்கீல் ரோல்ல முதல் முதலா நடிக்க ஆரம்பிச்சார். புரட்சி நடிகர் படத்தில முதல்ல நடிச்சது அரசிளங்குமரி 1961. "ஏற்றமுன்னா ஏற்றம்" பாட்ல வந்தார்.
நான் என்றால் அது அவளும் நானும் அவள் என்றால் அது நானும் அவளும் நான் சொன்னால் அது அவளின் வேதம் அவள் சொன்னால் - ஜெயலலிதா & SPB
சூரியகாந்தி 1973/ MS விஸ்வநாதன் / வாலி
கண்ணுக்கு தெரியாத அந்த சுகம் நெஞ்சுக்கு தெரிகின்ற இன்ப சுகம் ஒரு முறையா இரு முறையா உன்னை கேட்க சொல்லும் - LR ஈஸ்வரி & PB ஸ்ரீனிவாஸ்
என் அண்ணன் 1970\ KV மகாதேவன் \ வாலி
ராஜராஜஸ்ரீ ராணி வந்தாள் ராஜபோகம் தர வந்தாள் கண்ணொரு பாவனை கையொரு பாவனை சிந்த கன்னமிரண்டு இன்னொரு ரகசியம் - LR ஈஸ்வரி & PB ஸ்ரீனிவாஸ்
ஊட்டி வரை உறவு 1967 \ MS விஸ்வநாதன் \ கண்ணதாசன்
போக போக தெரியும் இந்த பூவின் ஆசை புரியும் ஒரு ராகம் நெஞ்சினில் விளையும் சிறு தாளம் அதிலே இணையும் - சுசீலா & TMS
சர்வர் சுந்தரம் 1964 \ விஸ்வநாதன் - ராமமூர்த்தி \ கண்ணதாசன்
மௌனமே பார்வையால் ஒரு பாட்டு பாட வேண்டும் நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேசவேண்டும் - PB ஸ்ரீனிவாஸ்
கொடி மலர் 1966 / MS விஸ்வநாதன் \ கண்ணதாசன்
பேபி
04.07.2023 - நவரச திலகம் முத்துராமன் பிறந்த நாள் [1929 - 1981]
![பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 46 Muthur12](https://i.servimg.com/u/f13/20/50/10/64/muthur12.jpg)
![பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 46 Muthur13](https://i.servimg.com/u/f13/20/50/10/64/muthur13.jpg)
![பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 46 Muthur11](https://i.servimg.com/u/f13/20/50/10/64/muthur11.png)
இவரோட குடும்பத்தினருக்கும், நடிப்புக்கும் இத்தனூண்டுக்கூட சம்பந்தமே இல்ல. அப்பா வக்கீல். குடும்பத்தில உள்ளவங்க கம்ப்பெல் செஞ்சதால முத்துராமன் அரசாங்க வேலைக்கு போனார்.
முத்துராமனுக்கு ஸ்கூல்ல படிக்கும்போதே நாடகத்தில நடிக்க ஆச. இது அம்மா, அப்பாவுக்கு பிடிக்கல. வீட்டை விட்டு ஓடி போய்ட்டார். முத்துராமன் நடிப்புன்னு போனது மொதல்ல நாடகங்கள்ல நடிக்க ஆரம்பிச்சார். 1947ல மனோரமாகூட வைரம் நாடக சபால நடிச்சார். லட்சிய நடிகர் SS ராஜேந்திரனின் நாடக மன்றத்துல, சகஸ்ரநாமம் நாடக சபால சேந்து பல நாடகங்கள்ல நடிச்சார். இப்டி ஒவ்வொரு நாடக சபால ஏறி இறங்கி சான்ஸ் கேட்டு, சின்ன சின்ன ரோல்ல நடிச்சார். மகாகவி பாரதியாரின் கவிதை வரி நாடகத்தில நடிச்சு ப்ரபலமானார். குரல் வளம், நடிப்பு பாத்தவங்களுக்கு பிடிச்சிருந்துச்சு. பல நாடகங்கள்ல நடிச்சார். சினிமால நடிக்க ஆரம்பிச்சது ரொம்ப லேட்டாத்தான். குலதெய்வம் ராஜகோபால் போன்ற நடிகர்களுடன் சேந்து வைரம் நாடக சபால பல நாடகங்களை நடத்தினாங்க.
அப்பா நவரச திலகம்னா, இவரோட மகன் கார்த்திக் நவரச நாயகன். நல்லா இருக்குல்ல!!! பேரன் கௌதம் கார்த்திக்கும் நடிகர்.
அதிகமா KR விஜயா கூட ஹீரோவா நடிச்சார். மெய்ன் ஹீரோ, ரெண்டாவது ஹீரோ, குணசித்திர நடிகர், ஒண்ரெண்டு படங்கள்ல வில்லன்னு முத்துராமன் நடிச்சார். அதிகமா நடிச்சது ரெண்டாவது கதாநாயகன் ரோல்ல.
1956ல ரங்கூன் ராதா நடிகர் திலகம் படத்தில வக்கீல் ரோல்ல முதல் முதலா நடிக்க ஆரம்பிச்சார். புரட்சி நடிகர் படத்தில முதல்ல நடிச்சது அரசிளங்குமரி 1961. "ஏற்றமுன்னா ஏற்றம்" பாட்ல வந்தார்.
நான் என்றால் அது அவளும் நானும் அவள் என்றால் அது நானும் அவளும் நான் சொன்னால் அது அவளின் வேதம் அவள் சொன்னால் - ஜெயலலிதா & SPB
சூரியகாந்தி 1973/ MS விஸ்வநாதன் / வாலி
கண்ணுக்கு தெரியாத அந்த சுகம் நெஞ்சுக்கு தெரிகின்ற இன்ப சுகம் ஒரு முறையா இரு முறையா உன்னை கேட்க சொல்லும் - LR ஈஸ்வரி & PB ஸ்ரீனிவாஸ்
என் அண்ணன் 1970\ KV மகாதேவன் \ வாலி
ராஜராஜஸ்ரீ ராணி வந்தாள் ராஜபோகம் தர வந்தாள் கண்ணொரு பாவனை கையொரு பாவனை சிந்த கன்னமிரண்டு இன்னொரு ரகசியம் - LR ஈஸ்வரி & PB ஸ்ரீனிவாஸ்
ஊட்டி வரை உறவு 1967 \ MS விஸ்வநாதன் \ கண்ணதாசன்
போக போக தெரியும் இந்த பூவின் ஆசை புரியும் ஒரு ராகம் நெஞ்சினில் விளையும் சிறு தாளம் அதிலே இணையும் - சுசீலா & TMS
சர்வர் சுந்தரம் 1964 \ விஸ்வநாதன் - ராமமூர்த்தி \ கண்ணதாசன்
மௌனமே பார்வையால் ஒரு பாட்டு பாட வேண்டும் நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேசவேண்டும் - PB ஸ்ரீனிவாஸ்
கொடி மலர் 1966 / MS விஸ்வநாதன் \ கண்ணதாசன்
பேபி
![மீண்டும் சந்திப்போம்](/users/1813/71/41/02/smiles/68516.gif)
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4942
இணைந்தது : 03/12/2017
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
05.07.2023
நடிகை மும்தாஜ் பிறந்த நாள் [1980]
கவர்ச்சி நடிகை. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார். தமிழ்ல நடிச்ச முதல் படம் 1999ல மோனிஷா என் மோனலிசா. சில படங்கள்ல ஒரு பாட்டுக்கு மட்டும் ஆடினார். TVல 2 டான்ஸ் போட்டிகள்ல ஜட்ஜா இருந்தார்.
மும்பைல பிறந்து, அங்கேயே படிச்சார். ஸ்கூல்ல ஒரு டான்ஸ் ப்ரோக்ராம்ல இவரோட டான்ஸை பாத்த ஒரு ஹிந்தி பட ப்ரொட்யூஸர், மும்தாஜை ஹிந்தி படங்கள்ல நடிக்க வைக்க நெனச்சார். ஆனா முடியல. மும்தாஜ் நடிப்பு க்ளாஸுக்கு போக ஆரம்பிச்சார்.
நடிக்க ஆரம்பிச்ச பிறகு படங்கள்ல ஐட்டம் பாட்டுக்களுக்கு டான்ஸ் ஆடி இளசுகளின் மனசை குஷிப்படுத்தி, கொள்ளையடித்தவர். இல்லேனா கெஸ்ட் ரோல்ல நடிச்சுட்டு போனார்.
இவர் வீட்ல தன் ரூம் முழுக்க ஸ்ரீதேவி போட்டாவை ஒட்டி வச்சிருக்கார். அவர் போட்டாவை ஒட்டி வச்சுகிட்டு, தன்னை ஒரு ஹீரோயினியா நெனச்சு கனவுலகில வாழ்ந்தார். சினிமா மோகத்தில வளந்த மும்தாஜ், ஸ்கூலுக்கு போகும்போதுகூட, நடிகை, நடிகர்களை பாக்க முடியுமான்னு நெனச்சுட்டே போனார். இந்த ஆர்வம்தான் அவரை சினிமாக்குள்ள தள்ளி விட்டுருச்சு. இன்னும் இவருக்கு சினிமால நடிக்க ஆசைதான். ஆனாலும் அவர் விரும்புற கேரக்ட்டர் கிடைக்காததால் நடிக்கல. கல்யாணம் பண்ணிக்காமயே, குடும்பத்துடன் சந்தோஷமா வாழ்ந்துட்டு இருக்கார்.
இன்னிக்கி இவர் பொறந்த நாளக்கி, சோஷியல் மீடியால இருக்கிற தன் ரசிகர்களுக்கு தன்னை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களையும், நடிச்ச படங்களின் காட்சிகளையும் போட்டுட்டு இருக்கார்.
சுப்பம்மா சுப்பம்மா ஏ சூலூரு சுப்பம்மா நீ செப்பம்மா செப்பம்மா ஒரு நல்வாக்கு செப்பம்மா ஆணிடம் பொண்ணுக்கு என்ன பிடிக்கும் - லால்குடி சுபா & மாணிக்க விநாயகம்
ரோஜா கூட்டம் 2002 / பரத்வாஜ் / வைரமுத்து
லக்ஸு பாப்பா லக்ஸு பாப்பா லஞ்ச் குடுப்பா கண்ணு கின் தான் அப்பா கன்னம் பன் தான் அப்பா அவ பன் மேல கின்ன ஊத்தி குடுப்பா தப்பு தப்பா தோணுதப்பா - சுவர்ணலதா & SPB
ஏழுமலை 2002 \ மணி சர்மா \ வாலி
பேபி
நடிகை மும்தாஜ் பிறந்த நாள் [1980]
![பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 46 KQhfeR6](https://i.imgur.com/kQhfeR6.jpg)
கவர்ச்சி நடிகை. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார். தமிழ்ல நடிச்ச முதல் படம் 1999ல மோனிஷா என் மோனலிசா. சில படங்கள்ல ஒரு பாட்டுக்கு மட்டும் ஆடினார். TVல 2 டான்ஸ் போட்டிகள்ல ஜட்ஜா இருந்தார்.
மும்பைல பிறந்து, அங்கேயே படிச்சார். ஸ்கூல்ல ஒரு டான்ஸ் ப்ரோக்ராம்ல இவரோட டான்ஸை பாத்த ஒரு ஹிந்தி பட ப்ரொட்யூஸர், மும்தாஜை ஹிந்தி படங்கள்ல நடிக்க வைக்க நெனச்சார். ஆனா முடியல. மும்தாஜ் நடிப்பு க்ளாஸுக்கு போக ஆரம்பிச்சார்.
நடிக்க ஆரம்பிச்ச பிறகு படங்கள்ல ஐட்டம் பாட்டுக்களுக்கு டான்ஸ் ஆடி இளசுகளின் மனசை குஷிப்படுத்தி, கொள்ளையடித்தவர். இல்லேனா கெஸ்ட் ரோல்ல நடிச்சுட்டு போனார்.
இவர் வீட்ல தன் ரூம் முழுக்க ஸ்ரீதேவி போட்டாவை ஒட்டி வச்சிருக்கார். அவர் போட்டாவை ஒட்டி வச்சுகிட்டு, தன்னை ஒரு ஹீரோயினியா நெனச்சு கனவுலகில வாழ்ந்தார். சினிமா மோகத்தில வளந்த மும்தாஜ், ஸ்கூலுக்கு போகும்போதுகூட, நடிகை, நடிகர்களை பாக்க முடியுமான்னு நெனச்சுட்டே போனார். இந்த ஆர்வம்தான் அவரை சினிமாக்குள்ள தள்ளி விட்டுருச்சு. இன்னும் இவருக்கு சினிமால நடிக்க ஆசைதான். ஆனாலும் அவர் விரும்புற கேரக்ட்டர் கிடைக்காததால் நடிக்கல. கல்யாணம் பண்ணிக்காமயே, குடும்பத்துடன் சந்தோஷமா வாழ்ந்துட்டு இருக்கார்.
இன்னிக்கி இவர் பொறந்த நாளக்கி, சோஷியல் மீடியால இருக்கிற தன் ரசிகர்களுக்கு தன்னை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களையும், நடிச்ச படங்களின் காட்சிகளையும் போட்டுட்டு இருக்கார்.
சுப்பம்மா சுப்பம்மா ஏ சூலூரு சுப்பம்மா நீ செப்பம்மா செப்பம்மா ஒரு நல்வாக்கு செப்பம்மா ஆணிடம் பொண்ணுக்கு என்ன பிடிக்கும் - லால்குடி சுபா & மாணிக்க விநாயகம்
ரோஜா கூட்டம் 2002 / பரத்வாஜ் / வைரமுத்து
லக்ஸு பாப்பா லக்ஸு பாப்பா லஞ்ச் குடுப்பா கண்ணு கின் தான் அப்பா கன்னம் பன் தான் அப்பா அவ பன் மேல கின்ன ஊத்தி குடுப்பா தப்பு தப்பா தோணுதப்பா - சுவர்ணலதா & SPB
ஏழுமலை 2002 \ மணி சர்மா \ வாலி
பேபி
![மீண்டும் சந்திப்போம்](/users/1813/71/41/02/smiles/68516.gif)
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4942
இணைந்தது : 03/12/2017
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
06.07.2023
நடிகை வடிவுக்கரசி பிறந்த நாள் [1962]
![பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 46 Vadivu10](https://i.servimg.com/u/f13/20/50/10/64/vadivu10.png)
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார். டப்பிங் குரல் கொடுத்திருக்கார். ஹீரோயின், குணசித்திர நடிகை, அம்மா, பாட்டி, ஏன் வில்லியாகூட நடிச்சிருக்கார்.
வசதியா வாழ்ந்த குடும்பம். ஏதோ சூழ்நிலைல வறுமை. படிச்சு முடிச்சுட்டு டீச்சரா வேல பாத்தார். சம்பளம் போதலேன்னு வேற வேற வேல செஞ்சார். அப்போதான் நடிக்கிற சான்ஸ் கெடச்சுது. நடிக்க ஆரம்பிச்சபோது, லவ் ஸீன், டான்ஸலாம் வராது, அக்கா, அம்மா ரோல்ல நடிக்கிறதா அவரே கேட்டு வாங்கி நடிச்சார். அதுலயும் அவருக்கு முக்கியத்துவம் இருந்த ரோல்ல மட்டுமே நடிச்சார். அதிக சம்பளம் வேணும்னு கெடுபிடி செஞ்சதில்ல. 1979ல ஹீரோயினா நடிச்ச கன்னிப் பருவத்திலே படத்துக்கப்புறம் தமிழலையும், தெலுங்குலயும் ஹீரோயின் சான்ஸ் கெடச்சுது.
வாழ்க்கைல நிறைய ப்ரச்னைகளை சந்திச்சார். கல்யாண வாழ்க்கையும் சரியில்ல.
TV சீரியல்கள்ல நடிச்சார். இப்பவும் நடிச்சிட்டு இருக்கார். டைரக்ட்டர் AP நாகராஜன் இவரோட பெரியப்பா. அதனால நடிப்பு சம்பந்தமா கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கிட்டார். ஒரு ஸ்டூடியோல வடிவுக்கரசியின் போட்டோவை பாத்தா டைரக்ட்டர் பாரதிராஜா சிகப்பு ரோஜாக்கள் படத்ல நடிக்க வச்சார். சின்ன ரோல்தான். ஆனாலும் அடாவடி, மாடர்ன் பொண்ணு. சூப்பரா நடிச்சார். வடிவுக்கரசியே தன்னோட இந்த நடிப்பை அவர்தான் நடிச்சாரான்னு பாத்து ஆச்சரியப்பட்டு போனார்.
பெரிய பெரிய கேரக்ட்டர்ல நடிச்சு ஆக்டிங்க்ல பெரிய பேர் வாங்கணும், விருதுகள் வாங்கணும்னு ஆசைலாம் இல்லேன்னு சொன்னார். குடும்பத்தை காப்பாத்த நடிச்சுதான் ஆகணும்னு நிலையில நடிச்சார். படங்கள்ல நடிக்கும்போது பல டைரக்ட்டர்கள் உங்களுக்கு இம்ப்பார்ட்டன்ஸ் கொடுக்கிற மாதிரி கேரக்ட்டர் குடுக்க முடியலென்னும் சொன்னாங்க. சினிமா சான்ஸ் குறைய ஆரம்பிச்சபோது, அவருக்கு கை குடுத்தது பல TV சீரியல்கள். வயசானாகூட, மனசளவுல ஆக்ட்டிவாக இருப்பதாவும், அதனால இப்ப உள்ள இளம் நடிகர்கள்கூட நடிக்க ஆவலோடு இருப்பதாவும் சொல்லியிருக்கார்.
அடி அம்மாடி சின்னப்பொண்ணு ஆசப்பட்டா அவ நெஞ்சுக்குள்ள அது என்னாச்சு சம்மதம் வந்தாச்சு பச்ச கிளிய தொட்டு தழுவ மச்சா வாராண்டி - ஜானகி
கன்னிப் பருவத்திலே 1979 / சங்கர் - கணேஷ்
மன்மதனின் வீணையிலே மயக்கம் எனும் ராகம் ஒன்று மாலை எனும் நேரத்திலே மந்திரங்கள் கோடி உண்டு இந்திரனின் மோகம் உண்டு - வாணி ஜெயராம் & ஜெயசந்திரன்
அழைத்தால் வருவேன் 1980 / MS விஸ்வநாதன் \/ கண்ணதாசன்
மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சை தாலாட்ட மேனி ஒரு பூவாக மெல்லிசையின் பாவாக கோதை மலர் பூம்பாதம் வாவென்னுதே - ஜானகி & இளையராஜா
மெட்டி 1982 / இளையராஜா \ கங்கை அமரன்
லக்ஷ்மி வந்தாள் மகராணிபோல் எனையாளவே நன்னாளிதே வானோடு மேகங்கள் வாழ்த்துக்கள் கூறுங்கள் - ஷைலஜா & SPB
பணம் பெண் பாசம் 1980 \ சங்கர் - கணேஷ் \ கண்ணதாசன்
இவ மச்சமுள்ள சிங்காரி எவன் பெத்தெடுத்த கைகாரி இவ வாயாடி இல்ல பேயாடி இந்த ஒய்யாரி வ்யாபாரி - மலேசியா வாசுதேவன்
நிழல் தேடும் நெஞ்சங்கள் 1982 \ இளையராஜா \ வைரமுத்து
பேபி
நடிகை வடிவுக்கரசி பிறந்த நாள் [1962]
![பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 46 T8tZ7fU](https://i.imgur.com/T8tZ7fU.png)
![பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 46 Vadivu10](https://i.servimg.com/u/f13/20/50/10/64/vadivu10.png)
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார். டப்பிங் குரல் கொடுத்திருக்கார். ஹீரோயின், குணசித்திர நடிகை, அம்மா, பாட்டி, ஏன் வில்லியாகூட நடிச்சிருக்கார்.
வசதியா வாழ்ந்த குடும்பம். ஏதோ சூழ்நிலைல வறுமை. படிச்சு முடிச்சுட்டு டீச்சரா வேல பாத்தார். சம்பளம் போதலேன்னு வேற வேற வேல செஞ்சார். அப்போதான் நடிக்கிற சான்ஸ் கெடச்சுது. நடிக்க ஆரம்பிச்சபோது, லவ் ஸீன், டான்ஸலாம் வராது, அக்கா, அம்மா ரோல்ல நடிக்கிறதா அவரே கேட்டு வாங்கி நடிச்சார். அதுலயும் அவருக்கு முக்கியத்துவம் இருந்த ரோல்ல மட்டுமே நடிச்சார். அதிக சம்பளம் வேணும்னு கெடுபிடி செஞ்சதில்ல. 1979ல ஹீரோயினா நடிச்ச கன்னிப் பருவத்திலே படத்துக்கப்புறம் தமிழலையும், தெலுங்குலயும் ஹீரோயின் சான்ஸ் கெடச்சுது.
வாழ்க்கைல நிறைய ப்ரச்னைகளை சந்திச்சார். கல்யாண வாழ்க்கையும் சரியில்ல.
TV சீரியல்கள்ல நடிச்சார். இப்பவும் நடிச்சிட்டு இருக்கார். டைரக்ட்டர் AP நாகராஜன் இவரோட பெரியப்பா. அதனால நடிப்பு சம்பந்தமா கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கிட்டார். ஒரு ஸ்டூடியோல வடிவுக்கரசியின் போட்டோவை பாத்தா டைரக்ட்டர் பாரதிராஜா சிகப்பு ரோஜாக்கள் படத்ல நடிக்க வச்சார். சின்ன ரோல்தான். ஆனாலும் அடாவடி, மாடர்ன் பொண்ணு. சூப்பரா நடிச்சார். வடிவுக்கரசியே தன்னோட இந்த நடிப்பை அவர்தான் நடிச்சாரான்னு பாத்து ஆச்சரியப்பட்டு போனார்.
பெரிய பெரிய கேரக்ட்டர்ல நடிச்சு ஆக்டிங்க்ல பெரிய பேர் வாங்கணும், விருதுகள் வாங்கணும்னு ஆசைலாம் இல்லேன்னு சொன்னார். குடும்பத்தை காப்பாத்த நடிச்சுதான் ஆகணும்னு நிலையில நடிச்சார். படங்கள்ல நடிக்கும்போது பல டைரக்ட்டர்கள் உங்களுக்கு இம்ப்பார்ட்டன்ஸ் கொடுக்கிற மாதிரி கேரக்ட்டர் குடுக்க முடியலென்னும் சொன்னாங்க. சினிமா சான்ஸ் குறைய ஆரம்பிச்சபோது, அவருக்கு கை குடுத்தது பல TV சீரியல்கள். வயசானாகூட, மனசளவுல ஆக்ட்டிவாக இருப்பதாவும், அதனால இப்ப உள்ள இளம் நடிகர்கள்கூட நடிக்க ஆவலோடு இருப்பதாவும் சொல்லியிருக்கார்.
அடி அம்மாடி சின்னப்பொண்ணு ஆசப்பட்டா அவ நெஞ்சுக்குள்ள அது என்னாச்சு சம்மதம் வந்தாச்சு பச்ச கிளிய தொட்டு தழுவ மச்சா வாராண்டி - ஜானகி
கன்னிப் பருவத்திலே 1979 / சங்கர் - கணேஷ்
மன்மதனின் வீணையிலே மயக்கம் எனும் ராகம் ஒன்று மாலை எனும் நேரத்திலே மந்திரங்கள் கோடி உண்டு இந்திரனின் மோகம் உண்டு - வாணி ஜெயராம் & ஜெயசந்திரன்
அழைத்தால் வருவேன் 1980 / MS விஸ்வநாதன் \/ கண்ணதாசன்
மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சை தாலாட்ட மேனி ஒரு பூவாக மெல்லிசையின் பாவாக கோதை மலர் பூம்பாதம் வாவென்னுதே - ஜானகி & இளையராஜா
மெட்டி 1982 / இளையராஜா \ கங்கை அமரன்
லக்ஷ்மி வந்தாள் மகராணிபோல் எனையாளவே நன்னாளிதே வானோடு மேகங்கள் வாழ்த்துக்கள் கூறுங்கள் - ஷைலஜா & SPB
பணம் பெண் பாசம் 1980 \ சங்கர் - கணேஷ் \ கண்ணதாசன்
இவ மச்சமுள்ள சிங்காரி எவன் பெத்தெடுத்த கைகாரி இவ வாயாடி இல்ல பேயாடி இந்த ஒய்யாரி வ்யாபாரி - மலேசியா வாசுதேவன்
நிழல் தேடும் நெஞ்சங்கள் 1982 \ இளையராஜா \ வைரமுத்து
பேபி
![மீண்டும் சந்திப்போம்](/users/1813/71/41/02/smiles/68516.gif)
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4942
இணைந்தது : 03/12/2017
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
06.07.2023
பழம்பெரும் பின்னணி பாடகர் பாலமுரளிகிருஷ்ணா அவர்கள் பிறந்த நாள் [1930 - 2016]
![பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 46 8HqFAAP](https://i.imgur.com/8HqFAAP.png)
முரளிகிருஷ்ணா. ஹரிகதை மேதை முசூநூரி சூரியநாராயண மூர்த்தி *பால* என்ற பேரை சேத்ததால பாலமுரளிகிருஷ்ணா ஆயிட்டார்.
கர்நாடக இசை பாடகர், பின்னணி பாடகர், ம்யூஸிக் டைரக்ட்டர், குணசித்திர நடிகர். 8 மொழிகள்ல பாடினார். தியாகராஜரின் மாணவர். மூன்று தலைமுறைக்கும் மேலாக கர்னாடக சங்கீதத்தில ஒரு ராஜாங்கத்தையே நடத்திய மேதை. "கர்னாடக சங்கீதம், மேற்கத்திய இசைன்னு தனித்தனியா இருக்கிறதா நா நெனக்கல. காதுக்கு இனிமையா இருக்கிற சங்கீதம் எல்லாமே கர்னாடக சங்கீதம்தான்"னு சொன்னார்.
அம்மா வீணை கலைஞர். அப்பா புல்லாங்குழல் கலைஞர். பாலமுரளி ஒம்போது வயசிலேயே இசை கச்சேரி செஞ்சார். சின்ன வயசில இசை மேதைன்னு பேர் வாங்கினார். இது மட்டுமில்ல, குழந்தை கலைஞராக இருந்தபோதே, ஆல் இண்டியா ரேடியோ இவர் பேரை முதல் தர இசை கலைஞர்களின் பட்டியல்ல சேத்துச்சு.
11 வயசில திருவையாறு தியாகராஜர் உற்சவத்தில ஒண்ணர மணி நேரம் பாடினார். ஒரு இளம் பாடகன் திருவையாறு கச்சேரில இப்டி ஒண்ணர மணி நேரம் பாடினது முதல் தடவ. தன் வாழ்நாள்ல உலகம் முழுசுலயும் ஏறத்தாழ 25,000 கச்சேரிகள் நடத்தினார்.
1988ல 14 மொழிகள்ல ஒரு தேசபக்தி பாட்டு உருவாச்சு. ஒவ்வொரு மொழி பகுதியையும் ஒவ்வொருத்தர் பாடினாங்க. இதுல தமிழ் பகுதியை பாலமுரளி பாடினார். முன்னணி இசை கலைஞர்களுக்கு பக்க வாத்தியமாக வயலின் வாசிச்சார். அப்பா வயலின் வாசிச்சதை கவனிச்சு இவரும் வயலின் வாசிக்க கத்துக்கிட்டார். வயலின் தவிர, புல்லாங்குழல், வீணை, மிருதங்கம் போன்ற இன்ஸ்ட்ருமென்ட்டையும் வாசிக்கும் திறமை இருந்துச்சு.
சமஸ்கிருதம் எழுத தெரியாது. ஆனா பாடினார். பல புதுப்புது ராகங்களை உருவாக்கினார். முன்னணி ம்யூஸிக் டைரக்ட்டர்களுக்கு ராகம் பற்றிய சந்தேகம் வந்தா பாலமுரளியைத்தான் தேடினாங்க. MS விஸ்வநாதன் இவரை தன்னோட ம்யூஸிக் டீச்சரா நெனச்சார். நெறைய தடவ MSVயும்கூட சந்தேகங்களை கேட்டு தெரிஞ்சுக்கிட்டார்.
K பாலசந்தர் டைரக்ட் செஞ்ச அபூர்வ ராகங்கள் படத்துக்கு MSV ம்யூஸிக்.
பாலசந்தர் சொன்னார், "இந்த படத்தில புது ராகத்தில ஒரு பாட்டு வேணும்".
MSV பாலமுரளிகிட்ட உதவி கேட்டார். அவரும் அரிதான ராகங்களை உருவாக்கி கொடுத்தார்.
அந்த பாட்டு "அதிசய ராகம் ஆனந்த ராகம்".
மெய்யப்ப செட்டியார் கேட்டுக்கிட்டதால முதல் முதலா தெலுங்கு படத்தில நாரதரா நடிக்க ஆரம்பிச்சார். முதல் முதலா பின்னணி பாடியதும் தெலுங்கு படத்லதான். இந்த படம் தமிழ், கன்னடம், ஹிந்தி மொழிகள்ல டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆச்சு. அதுக்கப்புறம் கெடச்சதும் நாரதர் மாதிரி கேரக்ட்டர். அதனால வந்த சான்ஸை வேணான்னுட்டார். ரொம்ப வருஷம் கழிச்சு மலையாள படத்தில பாடகராக நடிச்சார்.
ம்யூஸிக் சம்பந்தமா இன்னும் நிறைய நிறைய சாதனைகள் செஞ்சார்.
பாலமுரளியின் மாணவர்கள் :
P லீலா, கமல்ஹாசன், ஜெயலலிதா, வைஜயந்திமாலா, SP ஷைலஜா
பாலமுரளியின் வாழ்க்கை வரலாறை ராணிமைந்தன் என்பவர் எழுதினார்.
விருதுகள் :
பத்மஸ்ரீ 1971 ; பத்மபூஷன் ; பத்மவிபூஷன் 1991 ; செவாலியே விருது 2005 - பிரான்ஸ் நாடு கொடுத்தது
தேசிய விருதுகள்:
சிறந்த கன்னட ஆண் பின்னணி பாடகர் 1975
சிறந்த ம்யூஸிக் டைரக்ட்டர் - கன்னட படம் 1986
கேரள மாநில விருது 2
தமிழ்நாடு மாநில விருது - சிறந்த ஆண் பின்னணி பாடகர் - பசங்க 2009
இன்னும் ஏகப்பட்ட விருதுகள்
சின்ன கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி - பாலமுரளிகிருஷ்ணா
கவிக்குயில் 1977 \ இளையராஜா \ பஞ்சு அருணாசலம்
குருவிக்கார மச்சானே நம்ம கடவுள் சேத்து வச்சானே கோழி கூவும் வரையிலே நம்ம கொண்டாட்டம்தான் அறையிலே - வாணி ஜெயராம் & பாலமுரளிகிருஷ்ணா
நவரத்தினம் 1977 / குன்னக்குடி வைத்தியநாதன் / வாலி
தங்க ரதம் வந்தது வீதியிலே ஒரு தளிர்மேனி வந்தது தேரினிலே மரகத தோரணம் அசைந்தாட நல்ல மாணிக்க மாலைகள் கவி பாட - சுசீலா & பாலமுரளிகிருஷ்ணா
கலைக்கோயில் 1965 \ விஸ்வநாதன் - ராமமூர்த்தி \ கண்ணதாசன்
ஒரு நாள் போதுமா இன்றொரு நாள் போதுமா நான் பாட இன்றொரு நாள் போதுமா நாதமா கீதமா அதை நான் பாட இன்றொரு நாள் போதுமா - பாலமுரளிகிருஷ்ணா
திருவிளையாடல் 1965 \ KV மகாதேவன் \ கண்ணதாசன்
மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே ஆயிரம் நினைவாகி ஆனந்த கனவாகி காரியம் தவறானால் கண்களில் நீராகி - பாலமுரளிகிருஷ்ணா
நூல்வேலி 1979 / MS விஸ்வநாதன் \ கண்ணதாசன்
அதிசய ராகம் ஆனந்த ராகம் அழகிய ராகம் அபூர்வ ராகம் - KJ யேசுதாஸ்
அபூர்வ ராகங்கள் 1975 \ MS விஸ்வநாதன் \ கண்ணதாசன்
பேபி
பழம்பெரும் பின்னணி பாடகர் பாலமுரளிகிருஷ்ணா அவர்கள் பிறந்த நாள் [1930 - 2016]
![பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 46 DSNUkBM](https://i.imgur.com/dSNUkBM.jpg)
![பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 46 8HqFAAP](https://i.imgur.com/8HqFAAP.png)
முரளிகிருஷ்ணா. ஹரிகதை மேதை முசூநூரி சூரியநாராயண மூர்த்தி *பால* என்ற பேரை சேத்ததால பாலமுரளிகிருஷ்ணா ஆயிட்டார்.
கர்நாடக இசை பாடகர், பின்னணி பாடகர், ம்யூஸிக் டைரக்ட்டர், குணசித்திர நடிகர். 8 மொழிகள்ல பாடினார். தியாகராஜரின் மாணவர். மூன்று தலைமுறைக்கும் மேலாக கர்னாடக சங்கீதத்தில ஒரு ராஜாங்கத்தையே நடத்திய மேதை. "கர்னாடக சங்கீதம், மேற்கத்திய இசைன்னு தனித்தனியா இருக்கிறதா நா நெனக்கல. காதுக்கு இனிமையா இருக்கிற சங்கீதம் எல்லாமே கர்னாடக சங்கீதம்தான்"னு சொன்னார்.
அம்மா வீணை கலைஞர். அப்பா புல்லாங்குழல் கலைஞர். பாலமுரளி ஒம்போது வயசிலேயே இசை கச்சேரி செஞ்சார். சின்ன வயசில இசை மேதைன்னு பேர் வாங்கினார். இது மட்டுமில்ல, குழந்தை கலைஞராக இருந்தபோதே, ஆல் இண்டியா ரேடியோ இவர் பேரை முதல் தர இசை கலைஞர்களின் பட்டியல்ல சேத்துச்சு.
11 வயசில திருவையாறு தியாகராஜர் உற்சவத்தில ஒண்ணர மணி நேரம் பாடினார். ஒரு இளம் பாடகன் திருவையாறு கச்சேரில இப்டி ஒண்ணர மணி நேரம் பாடினது முதல் தடவ. தன் வாழ்நாள்ல உலகம் முழுசுலயும் ஏறத்தாழ 25,000 கச்சேரிகள் நடத்தினார்.
1988ல 14 மொழிகள்ல ஒரு தேசபக்தி பாட்டு உருவாச்சு. ஒவ்வொரு மொழி பகுதியையும் ஒவ்வொருத்தர் பாடினாங்க. இதுல தமிழ் பகுதியை பாலமுரளி பாடினார். முன்னணி இசை கலைஞர்களுக்கு பக்க வாத்தியமாக வயலின் வாசிச்சார். அப்பா வயலின் வாசிச்சதை கவனிச்சு இவரும் வயலின் வாசிக்க கத்துக்கிட்டார். வயலின் தவிர, புல்லாங்குழல், வீணை, மிருதங்கம் போன்ற இன்ஸ்ட்ருமென்ட்டையும் வாசிக்கும் திறமை இருந்துச்சு.
சமஸ்கிருதம் எழுத தெரியாது. ஆனா பாடினார். பல புதுப்புது ராகங்களை உருவாக்கினார். முன்னணி ம்யூஸிக் டைரக்ட்டர்களுக்கு ராகம் பற்றிய சந்தேகம் வந்தா பாலமுரளியைத்தான் தேடினாங்க. MS விஸ்வநாதன் இவரை தன்னோட ம்யூஸிக் டீச்சரா நெனச்சார். நெறைய தடவ MSVயும்கூட சந்தேகங்களை கேட்டு தெரிஞ்சுக்கிட்டார்.
K பாலசந்தர் டைரக்ட் செஞ்ச அபூர்வ ராகங்கள் படத்துக்கு MSV ம்யூஸிக்.
பாலசந்தர் சொன்னார், "இந்த படத்தில புது ராகத்தில ஒரு பாட்டு வேணும்".
MSV பாலமுரளிகிட்ட உதவி கேட்டார். அவரும் அரிதான ராகங்களை உருவாக்கி கொடுத்தார்.
அந்த பாட்டு "அதிசய ராகம் ஆனந்த ராகம்".
மெய்யப்ப செட்டியார் கேட்டுக்கிட்டதால முதல் முதலா தெலுங்கு படத்தில நாரதரா நடிக்க ஆரம்பிச்சார். முதல் முதலா பின்னணி பாடியதும் தெலுங்கு படத்லதான். இந்த படம் தமிழ், கன்னடம், ஹிந்தி மொழிகள்ல டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆச்சு. அதுக்கப்புறம் கெடச்சதும் நாரதர் மாதிரி கேரக்ட்டர். அதனால வந்த சான்ஸை வேணான்னுட்டார். ரொம்ப வருஷம் கழிச்சு மலையாள படத்தில பாடகராக நடிச்சார்.
ம்யூஸிக் சம்பந்தமா இன்னும் நிறைய நிறைய சாதனைகள் செஞ்சார்.
பாலமுரளியின் மாணவர்கள் :
P லீலா, கமல்ஹாசன், ஜெயலலிதா, வைஜயந்திமாலா, SP ஷைலஜா
பாலமுரளியின் வாழ்க்கை வரலாறை ராணிமைந்தன் என்பவர் எழுதினார்.
விருதுகள் :
பத்மஸ்ரீ 1971 ; பத்மபூஷன் ; பத்மவிபூஷன் 1991 ; செவாலியே விருது 2005 - பிரான்ஸ் நாடு கொடுத்தது
தேசிய விருதுகள்:
சிறந்த கன்னட ஆண் பின்னணி பாடகர் 1975
சிறந்த ம்யூஸிக் டைரக்ட்டர் - கன்னட படம் 1986
கேரள மாநில விருது 2
தமிழ்நாடு மாநில விருது - சிறந்த ஆண் பின்னணி பாடகர் - பசங்க 2009
இன்னும் ஏகப்பட்ட விருதுகள்
சின்ன கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி - பாலமுரளிகிருஷ்ணா
கவிக்குயில் 1977 \ இளையராஜா \ பஞ்சு அருணாசலம்
குருவிக்கார மச்சானே நம்ம கடவுள் சேத்து வச்சானே கோழி கூவும் வரையிலே நம்ம கொண்டாட்டம்தான் அறையிலே - வாணி ஜெயராம் & பாலமுரளிகிருஷ்ணா
நவரத்தினம் 1977 / குன்னக்குடி வைத்தியநாதன் / வாலி
தங்க ரதம் வந்தது வீதியிலே ஒரு தளிர்மேனி வந்தது தேரினிலே மரகத தோரணம் அசைந்தாட நல்ல மாணிக்க மாலைகள் கவி பாட - சுசீலா & பாலமுரளிகிருஷ்ணா
கலைக்கோயில் 1965 \ விஸ்வநாதன் - ராமமூர்த்தி \ கண்ணதாசன்
ஒரு நாள் போதுமா இன்றொரு நாள் போதுமா நான் பாட இன்றொரு நாள் போதுமா நாதமா கீதமா அதை நான் பாட இன்றொரு நாள் போதுமா - பாலமுரளிகிருஷ்ணா
திருவிளையாடல் 1965 \ KV மகாதேவன் \ கண்ணதாசன்
மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே ஆயிரம் நினைவாகி ஆனந்த கனவாகி காரியம் தவறானால் கண்களில் நீராகி - பாலமுரளிகிருஷ்ணா
நூல்வேலி 1979 / MS விஸ்வநாதன் \ கண்ணதாசன்
அதிசய ராகம் ஆனந்த ராகம் அழகிய ராகம் அபூர்வ ராகம் - KJ யேசுதாஸ்
அபூர்வ ராகங்கள் 1975 \ MS விஸ்வநாதன் \ கண்ணதாசன்
பேபி
![மீண்டும் சந்திப்போம்](/users/1813/71/41/02/smiles/68516.gif)
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4942
இணைந்தது : 03/12/2017
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
07.07.2023
06.07.2023 - காமெடி நடிகர் சிங்கம்புலி பிறந்த நாள் [1968]
![பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 46 GcFHsuO](https://i.imgur.com/gcFHsuO.jpg)
![பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 46 Mayand10](https://i.servimg.com/u/f13/20/50/10/64/mayand10.png)
மாயாண்டி குடும்பத்தார் 2009
நடிகர், டைரக்ட்டர், வசனகர்த்தா. சின்ன வயசிலிருந்தே நடிக்க பிடிக்கும். இணை இயக்குனராவும் இருந்திருக்கார். டப்பிங் குரல் கொடுத்திருக்கார். பெங்களூர்ல எஞ்சினியருக்கு படிச்சிட்டு சினிமா சான்ஸ் தேடி சென்னைக்கு வந்தார். ரஜினியின் அருணாசலம் படம் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தார். இவரை பாத்த ரஜினிகாந்த் சுந்தர் C கிட்ட, "இந்த பையன உங்ககூட வச்சுக்கோங்க"ன்னு சொன்னார்.
டைரக்ட்டர் சுந்தர் Cகிட்ட ஏற்கனவே 19 பேர் அசிஸ்டன்ட் டைரக்ட்டரா இருந்திருக்காங்க. அவங்களோட 20வது ஆளா சேந்துட்டார் சிங்கம்புலி. அவரோட படங்களுக்கு வசனம், கதை எழுதி சுந்தர் Cயின் செல்லப் பிள்ளையாவே மாறிட்டார். அஜீத் நடிச்ச உன்னைத்தேடி படத்துக்கு முழு ஸ்க்ரிப்ட்டையும் எழுதி கொடுத்தார். படம் 100 நாளுக்கு மேல ஓடுச்சு. 100வது நாள் விழால, அஜீத் சொன்னார், "NIC Arts தயாரிப்பு நிறுவனத்துக்கு போங்க. படம் பண்ணலாம்".
சிங்கம்புலியும் போனார். ரெட் படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதினார். சென்ட்டிமென்ட், ஆக் ஷன்னு படம் தூள் கெளப்புற மாதிரி டைரக்ட்டும் செஞ்சார். அஜீத் ஹீரோ. இந்த படத்தில சிங்கம்புலிங்கிற பேரை டைரக்ட்டர் ராம்சத்யானு மாத்தினார்.
இவரோட படங்கள்ல வசனங்கள்ல காமெடி கொஞ்சம் தூக்கலாவே சேத்தார். இவரோட வெற்றிக்கு காரணம் சுந்தர் C தான்னு பல மேடைகள்ல சொன்னார் சிங்கம்புலி. சுந்தர் C தன்னோட படங்கள்ல சீரியஸ்னெஸ் இருந்தாலும், காமெடியும் கலந்து கொடுத்தார். இவரோட 8 படங்களுக்கு வசனகர்த்தா சிங்கம்புலிதான். நெஜமா நடக்கிற காமெடிய, தன்னோட காமெடியையும் சேத்து தன்னோட படத்தில காமெடி ட்ராக்குக்கு ஏத்தமாதிரி மாத்தி சேத்துக்கிறதுல புலிதான்.
ஆரம்பத்தில ரெண்டு படங்கள்ல வில்லனுக்கு அடியாளா நடிச்சார். நடிகரா அறிமுகமானது 2009ல நான் கடவுள் படத்தில. அதுக்கப்புறம் காமெடியனாக நடிச்சார். சந்திரபாபுவின் குரலுக்கு ஒரு ஸ்பெஷாலிட்டி இருக்கிற மாதிரி சிங்கம்புலியின் குரலுக்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கு.
விருதுகள் :
ஆனந்த விகடன் விருது - சிறந்த காமெடியன் - மாயாண்டி குடும்பத்தார் 2009
ரெட் - கதை, திரைக்கதை, வசனம் & டைரக் ஷன் - ராம் சத்யா என்ற சிங்கம்புலி
ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி ஒட்டிக்கிட்டா உடும்புக்காரி சடையில் அடிச்சே என்னை சாச்சுப்புட்டா ஆஆ ஆஆஆஆ முத்தாங்கனி தொட்டுப்புட்டா - அனுராதா ஸ்ரீராம் & KK
ரெட் 2002 / தேவா \ வைரமுத்து
மாயாவி - கதை, திரைக்கதை & டைரக் ஷன் - சிங்கம்புலி
ஹே காத்தாடி போல ஏன்டி என்ன சுத்துற சூ மந்திர காளி போட்டு சுத்த வைக்கிற என்னாடி வுட்டுபுட்டா ரொம்ப பேசுற கண்ணாடி நெஞ்சு மேல கல்ல வீசுற - கல்பனா & புஷ்பவனம் குப்புசாமி
மாயாவி 2005 \ தேவிஸ்ரீ ப்ரசாத் \ நா முத்துகுமார்
பேபி
06.07.2023 - காமெடி நடிகர் சிங்கம்புலி பிறந்த நாள் [1968]
![பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 46 Si9W9iv](https://i.imgur.com/Si9W9iv.jpg)
![பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 46 GcFHsuO](https://i.imgur.com/gcFHsuO.jpg)
![பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 46 Mayand10](https://i.servimg.com/u/f13/20/50/10/64/mayand10.png)
மாயாண்டி குடும்பத்தார் 2009
நடிகர், டைரக்ட்டர், வசனகர்த்தா. சின்ன வயசிலிருந்தே நடிக்க பிடிக்கும். இணை இயக்குனராவும் இருந்திருக்கார். டப்பிங் குரல் கொடுத்திருக்கார். பெங்களூர்ல எஞ்சினியருக்கு படிச்சிட்டு சினிமா சான்ஸ் தேடி சென்னைக்கு வந்தார். ரஜினியின் அருணாசலம் படம் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தார். இவரை பாத்த ரஜினிகாந்த் சுந்தர் C கிட்ட, "இந்த பையன உங்ககூட வச்சுக்கோங்க"ன்னு சொன்னார்.
டைரக்ட்டர் சுந்தர் Cகிட்ட ஏற்கனவே 19 பேர் அசிஸ்டன்ட் டைரக்ட்டரா இருந்திருக்காங்க. அவங்களோட 20வது ஆளா சேந்துட்டார் சிங்கம்புலி. அவரோட படங்களுக்கு வசனம், கதை எழுதி சுந்தர் Cயின் செல்லப் பிள்ளையாவே மாறிட்டார். அஜீத் நடிச்ச உன்னைத்தேடி படத்துக்கு முழு ஸ்க்ரிப்ட்டையும் எழுதி கொடுத்தார். படம் 100 நாளுக்கு மேல ஓடுச்சு. 100வது நாள் விழால, அஜீத் சொன்னார், "NIC Arts தயாரிப்பு நிறுவனத்துக்கு போங்க. படம் பண்ணலாம்".
சிங்கம்புலியும் போனார். ரெட் படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதினார். சென்ட்டிமென்ட், ஆக் ஷன்னு படம் தூள் கெளப்புற மாதிரி டைரக்ட்டும் செஞ்சார். அஜீத் ஹீரோ. இந்த படத்தில சிங்கம்புலிங்கிற பேரை டைரக்ட்டர் ராம்சத்யானு மாத்தினார்.
இவரோட படங்கள்ல வசனங்கள்ல காமெடி கொஞ்சம் தூக்கலாவே சேத்தார். இவரோட வெற்றிக்கு காரணம் சுந்தர் C தான்னு பல மேடைகள்ல சொன்னார் சிங்கம்புலி. சுந்தர் C தன்னோட படங்கள்ல சீரியஸ்னெஸ் இருந்தாலும், காமெடியும் கலந்து கொடுத்தார். இவரோட 8 படங்களுக்கு வசனகர்த்தா சிங்கம்புலிதான். நெஜமா நடக்கிற காமெடிய, தன்னோட காமெடியையும் சேத்து தன்னோட படத்தில காமெடி ட்ராக்குக்கு ஏத்தமாதிரி மாத்தி சேத்துக்கிறதுல புலிதான்.
ஆரம்பத்தில ரெண்டு படங்கள்ல வில்லனுக்கு அடியாளா நடிச்சார். நடிகரா அறிமுகமானது 2009ல நான் கடவுள் படத்தில. அதுக்கப்புறம் காமெடியனாக நடிச்சார். சந்திரபாபுவின் குரலுக்கு ஒரு ஸ்பெஷாலிட்டி இருக்கிற மாதிரி சிங்கம்புலியின் குரலுக்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கு.
விருதுகள் :
ஆனந்த விகடன் விருது - சிறந்த காமெடியன் - மாயாண்டி குடும்பத்தார் 2009
ரெட் - கதை, திரைக்கதை, வசனம் & டைரக் ஷன் - ராம் சத்யா என்ற சிங்கம்புலி
ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி ஒட்டிக்கிட்டா உடும்புக்காரி சடையில் அடிச்சே என்னை சாச்சுப்புட்டா ஆஆ ஆஆஆஆ முத்தாங்கனி தொட்டுப்புட்டா - அனுராதா ஸ்ரீராம் & KK
ரெட் 2002 / தேவா \ வைரமுத்து
மாயாவி - கதை, திரைக்கதை & டைரக் ஷன் - சிங்கம்புலி
ஹே காத்தாடி போல ஏன்டி என்ன சுத்துற சூ மந்திர காளி போட்டு சுத்த வைக்கிற என்னாடி வுட்டுபுட்டா ரொம்ப பேசுற கண்ணாடி நெஞ்சு மேல கல்ல வீசுற - கல்பனா & புஷ்பவனம் குப்புசாமி
மாயாவி 2005 \ தேவிஸ்ரீ ப்ரசாத் \ நா முத்துகுமார்
பேபி
![மீண்டும் சந்திப்போம்](/users/1813/71/41/02/smiles/68516.gif)
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4942
இணைந்தது : 03/12/2017
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
07.07.2023
06.07.2023 - நடிகர் ஜீவன் பிறந்த நாள் [1975]
![பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 46 MPj02JA](https://i.imgur.com/mPj02JA.jpg)
![பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 46 9jvi1zE](https://i.imgur.com/9jvi1zE.png)
சொந்த பேர் விஜயபாஸ்கர் ரங்கராஜ். ஹாலிவுட் சினிமா ஸ்டூடியோல 21\2 வருஷம் நடிப்பு படிச்சார். அங்க Pubல வேல செஞ்சார்.
நடிச்ச முதல் படம் 2002ல யுனிவர்சிடி. 2003ல சூர்யா நடிச்ச படத்தில வில்லனா நடிச்சு மிரட்டினார். சூர்யாவும், ஜீவனும் ஒண்ணா படிச்சவங்க. அப்புறமா 2006ல ஜீவன் நாலஞ்சு படங்கள்ல ஹீரோவா நடிச்சார். 2009க்கு அப்புறம் நடிக்கல. 2015ல ஒரு படம் நடிச்சார். அதிபர்னு பேர்.
இவர் நடிச்ச ரெண்டு படம் ரிலீஸ் ஆகுற நிலைல இருக்கு. ஒரு படம் தயாரிப்புல இருக்கு.
விருதுகள் :
ஃபிலிம்ஃபேர் விருது - சிறந்த வில்லன் - காக்க காக்க 2003
சர்வதேச தமிழ் சினிமா விருது - சிறந்த வில்லன் - காக்க காக்க 2003
பொய் சொல்ல போறேன் பொய் சொல்ல போறேன் நீ ரொம்ப அழகியடி பொய் சொல்ல போறேன் பொய் சொல்ல போறேன் நான் கொஞ்சம் அசிங்கம்டி - KK
திருட்டு பயலே 2006 / பரத்வாஜ் / வைரமுத்து
ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம் ஏன் எனக்கு என்ன ஆச்சு ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம் ஏன் இந்த மேல் மூச்சு ஹே
நான் அவனில்லை 2007 / விஜய் ஆண்டனி & இமான் / பா விஜய்
வயசுப் பொண்ணுக்கு பொண்ணுக்கு பொண்ணுக்கு என்னப்போல் பொண்ணுக்கு பொண்ணுக்கு பொண்ணுக்கு - மகாலட்சுமி அய்யர்
மச்சக்காரன் 2007 / யுவன் சங்கர் ராஜா \ பா விஜய்
முகம் பூ மனம் பூ விரல் பூ நகம் பூ நடக்கும் முதல் பூ சிரிப்பு திகைப்பு நினைப்பூ தவிப்பு எனக்குள் கொழுப்பு நடை கூடும் மலர்க்காடே - சின்மயி & நரேஷ் அய்யர்
தோட்டா 2008 \ ஸ்ரீகாந்த் தேவா \ பா விஜய்
பேபி
06.07.2023 - நடிகர் ஜீவன் பிறந்த நாள் [1975]
![பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 46 TKjrC0U](https://i.imgur.com/tKjrC0U.jpg)
![பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 46 MPj02JA](https://i.imgur.com/mPj02JA.jpg)
![பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 46 9jvi1zE](https://i.imgur.com/9jvi1zE.png)
சொந்த பேர் விஜயபாஸ்கர் ரங்கராஜ். ஹாலிவுட் சினிமா ஸ்டூடியோல 21\2 வருஷம் நடிப்பு படிச்சார். அங்க Pubல வேல செஞ்சார்.
நடிச்ச முதல் படம் 2002ல யுனிவர்சிடி. 2003ல சூர்யா நடிச்ச படத்தில வில்லனா நடிச்சு மிரட்டினார். சூர்யாவும், ஜீவனும் ஒண்ணா படிச்சவங்க. அப்புறமா 2006ல ஜீவன் நாலஞ்சு படங்கள்ல ஹீரோவா நடிச்சார். 2009க்கு அப்புறம் நடிக்கல. 2015ல ஒரு படம் நடிச்சார். அதிபர்னு பேர்.
இவர் நடிச்ச ரெண்டு படம் ரிலீஸ் ஆகுற நிலைல இருக்கு. ஒரு படம் தயாரிப்புல இருக்கு.
விருதுகள் :
ஃபிலிம்ஃபேர் விருது - சிறந்த வில்லன் - காக்க காக்க 2003
சர்வதேச தமிழ் சினிமா விருது - சிறந்த வில்லன் - காக்க காக்க 2003
பொய் சொல்ல போறேன் பொய் சொல்ல போறேன் நீ ரொம்ப அழகியடி பொய் சொல்ல போறேன் பொய் சொல்ல போறேன் நான் கொஞ்சம் அசிங்கம்டி - KK
திருட்டு பயலே 2006 / பரத்வாஜ் / வைரமுத்து
ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம் ஏன் எனக்கு என்ன ஆச்சு ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம் ஏன் இந்த மேல் மூச்சு ஹே
நான் அவனில்லை 2007 / விஜய் ஆண்டனி & இமான் / பா விஜய்
வயசுப் பொண்ணுக்கு பொண்ணுக்கு பொண்ணுக்கு என்னப்போல் பொண்ணுக்கு பொண்ணுக்கு பொண்ணுக்கு - மகாலட்சுமி அய்யர்
மச்சக்காரன் 2007 / யுவன் சங்கர் ராஜா \ பா விஜய்
முகம் பூ மனம் பூ விரல் பூ நகம் பூ நடக்கும் முதல் பூ சிரிப்பு திகைப்பு நினைப்பூ தவிப்பு எனக்குள் கொழுப்பு நடை கூடும் மலர்க்காடே - சின்மயி & நரேஷ் அய்யர்
தோட்டா 2008 \ ஸ்ரீகாந்த் தேவா \ பா விஜய்
பேபி
![மீண்டும் சந்திப்போம்](/users/1813/71/41/02/smiles/68516.gif)
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4942
இணைந்தது : 03/12/2017
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Page 46 of 60 • 1 ... 24 ... 45, 46, 47 ... 53 ... 60
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் செல்ல மருமகள் வர்ஷாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் செல்ல மருமகள் வர்ஷாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
Page 46 of 60
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|