Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
3 posters
Page 18 of 60
Page 18 of 60 • 1 ... 10 ... 17, 18, 19 ... 39 ... 60
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
First topic message reminder :
13.12.2021
நடிகை லட்சுமி அவர்கள் பிறந்த நாள் [1952]
நடிகை, TV நிகழ்ச்சி தொகுப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி படங்கள்ல நடிச்சார்.
அம்மா குமாரி ருக்மணி பழம்பெரும் நடிகை. அப்பா வரதராவ் சினிமா சம்பந்தப்பட்டவர். மகள் நடிகை ஐஸ்வர்யா.
லட்சுமி நடிச்ச முதல் படம் ஸ்ரீவள்ளி [1961]. குழந்தை நட்சத்திரம்.
தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள், தமிழ்நாடு, கர்நாடக மாநில விருதுகள் வாங்கினார்.
தொட்டாக்கா வெட்கம் வரும் நில்லு ராமையாஹா - LR ஈஸ்வரி & TMS
ஆசீர்வாதம் 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்
இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை - P சுசீலா & TMS
சங்கே முழங்கு 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்
எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மணங்கள் திருமணங்கள் - வாணி ஜெயராம் & TMS
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 1978 / MS விஸ்வநாதன் / ஜெயகாந்தன்
பேபி
13.12.2021
நடிகை லட்சுமி அவர்கள் பிறந்த நாள் [1952]
நடிகை, TV நிகழ்ச்சி தொகுப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி படங்கள்ல நடிச்சார்.
அம்மா குமாரி ருக்மணி பழம்பெரும் நடிகை. அப்பா வரதராவ் சினிமா சம்பந்தப்பட்டவர். மகள் நடிகை ஐஸ்வர்யா.
லட்சுமி நடிச்ச முதல் படம் ஸ்ரீவள்ளி [1961]. குழந்தை நட்சத்திரம்.
தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள், தமிழ்நாடு, கர்நாடக மாநில விருதுகள் வாங்கினார்.
தொட்டாக்கா வெட்கம் வரும் நில்லு ராமையாஹா - LR ஈஸ்வரி & TMS
ஆசீர்வாதம் 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்
இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை - P சுசீலா & TMS
சங்கே முழங்கு 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்
எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மணங்கள் திருமணங்கள் - வாணி ஜெயராம் & TMS
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 1978 / MS விஸ்வநாதன் / ஜெயகாந்தன்
பேபி
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017
சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
12.03.2022
நடிகை தீபா பிறந்த நாள் [1962]
மலையாள நடிகை. மலையாள படங்கள்ல உன்னி மேரி. பரதநாட்டிய கலைஞர்.
தீபாவின் அம்மா நடத்திட்டு இருந்த விக்ட்டோரியா பாலே டான்ஸ் ட்ரூப்ல இருந்து தீபா நிறைய டான்ஸ் நிகழ்ச்சிகள்ல இந்தியாலயும், வெளிநாடுகள்லயும் டான்ஸ் ஆடினார்.
தமிழ், தெலுங்கு, கன்னட படங்கள்லயும் நடிச்சிருக்கார். தமிழ்ல நடிச்ச முதல் படம் அந்தரங்கம் [1975]. ப்ரபலமானது முந்தானை முடிச்சு படத்ல அ ............ ஆ................... சொல்லி கொடுத்த டீச்சரா நடிச்சு. 1990களில் இளசுகளின் மனசை கொள்ளையடித்த நடிகைகள்ல இவரும் ஒருத்தர். தமிழ்ல மட்டும் 25 படங்களுக்கும் மேல நடிச்சார்.
முந்தானை முடிச்சு
பூவும் மலர்ந்திருக்கு காயும் கனிஞ்சிருக்கு பொண்ணே இன்னும் என்ன தயக்கம்
மாந்தோப்பு கிளியே 1979 / சங்கர் கணேஷ் / MA காஜா
ஹே ஓராயிரம் மலர்களே மலர்ந்தது உலகிலே சுகமே இதுதானோ
மீண்டும் கோகிலா 1981 / இளையராஜா / பஞ்சு அருணாச்சலம்
கிளுகிளுப்பா இருக்குதே ஏ மாமா மாமா பரபரப்பா துடிக்குதே அதுதானா அதுதானா
வேடனை தேடிய மான் 1980 / சக்கரவர்த்தி / அவினாசிமணி
தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல் கேட்டாலும் போதும் இளநெஞ்சங்கள் பாடும்
உல்லாச பறவைகள் 1980 / இளையராஜா / பஞ்சு அருணாசலம்
பேபி
நடிகை தீபா பிறந்த நாள் [1962]
மலையாள நடிகை. மலையாள படங்கள்ல உன்னி மேரி. பரதநாட்டிய கலைஞர்.
தீபாவின் அம்மா நடத்திட்டு இருந்த விக்ட்டோரியா பாலே டான்ஸ் ட்ரூப்ல இருந்து தீபா நிறைய டான்ஸ் நிகழ்ச்சிகள்ல இந்தியாலயும், வெளிநாடுகள்லயும் டான்ஸ் ஆடினார்.
தமிழ், தெலுங்கு, கன்னட படங்கள்லயும் நடிச்சிருக்கார். தமிழ்ல நடிச்ச முதல் படம் அந்தரங்கம் [1975]. ப்ரபலமானது முந்தானை முடிச்சு படத்ல அ ............ ஆ................... சொல்லி கொடுத்த டீச்சரா நடிச்சு. 1990களில் இளசுகளின் மனசை கொள்ளையடித்த நடிகைகள்ல இவரும் ஒருத்தர். தமிழ்ல மட்டும் 25 படங்களுக்கும் மேல நடிச்சார்.
முந்தானை முடிச்சு
பூவும் மலர்ந்திருக்கு காயும் கனிஞ்சிருக்கு பொண்ணே இன்னும் என்ன தயக்கம்
மாந்தோப்பு கிளியே 1979 / சங்கர் கணேஷ் / MA காஜா
ஹே ஓராயிரம் மலர்களே மலர்ந்தது உலகிலே சுகமே இதுதானோ
மீண்டும் கோகிலா 1981 / இளையராஜா / பஞ்சு அருணாச்சலம்
கிளுகிளுப்பா இருக்குதே ஏ மாமா மாமா பரபரப்பா துடிக்குதே அதுதானா அதுதானா
வேடனை தேடிய மான் 1980 / சக்கரவர்த்தி / அவினாசிமணி
தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல் கேட்டாலும் போதும் இளநெஞ்சங்கள் பாடும்
உல்லாச பறவைகள் 1980 / இளையராஜா / பஞ்சு அருணாசலம்
பேபி
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
14.03.2022
பழம்பெரும் இசையமைப்பாளர் திரை இசைத்திலகம் KV மகாதேவன் அவர்கள் பிறந்த நாள் [1918 - 2001]
கிருஷ்ணன்கோயில் வெங்கடாசலம் மகாதேவன். நாகர்கோவில்ல பிறந்தவர். இசை உலகத்தில அன்பா எல்லாரும் இவரை மாமான்னு கூப்பிட்டாங்க. எல்லாருக்கும் செல்ல மாமா.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களுக்கு 1500 படங்களுக்கு மேல் ம்யூஸிக் போட்டார்.இதுல 218 தமிழ் படங்கள். முதல் தமிழ் படம் 1942ல மனோன்மணி.
தாத்தா ராம பாகவதர், திருவிதாங்கூர் அரண்மனைல சங்கீத வித்வானாக இருந்தவர். அப்பா வெங்கடாசல பாகவதர் கோட்டு வாத்திய கலைஞர். சின்ன வயசிலேயே மகாதேவன் அவர்களுக்கு படிப்புல இன்ட்ரெஸ்ட் இல்லாம ம்யூஸிக் மேல ஆச வந்துச்சு.
பாலகந்தர்வ நாடக சபைல சேந்து, பெண் வேஷம் போட்டு, பாடி நடிச்சார். ஆரம்பத்தில அப்பாட்ட ம்யூஸிக் கத்துக்க ஆரம்பிச்சார். அப்புறமா பூதப்பாண்டி அருணாலச கவிராயர்ட்ட கத்துக்கிட்டு, அங்கரை விஸ்வநாத பாகவதர் ம்யூஸிக் குழூல சேந்து, பம்பாய், ஹைதராபாத், டெல்லி, நாக்பூர் போன்ற ஊர்கள்ல கச்சேரி செஞ்சார். தனியா கச்சேரி செய்ற அளவுக்கு திறமை வந்துச்சு. அந்த காலத்தில ம்யூஸிக் தெரிஞ்ச இளைஞர்களின் சரணாலயம் பாய்ஸ் கம்பெனி. இந்த கம்பெனில ஏதோ காரணத்தால KVM சேர முடியல. பொழப்பு நடத்தணுமே. அதனால ஹோட்டல்ல வேல செஞ்சார்.
மெதுவா சினிமால சான்ஸ் கெடச்சுது. அப்ப இருந்த ம்யூஸிக் டைரக்ட்டர்கள் TA கல்யாணம், SV வெங்கடராமன்ட்ட உதவியாளராக இருந்தார். இவரோட சினிமா வாழ்க்கை தொடங்கியது 1942ல மாடர்ன் தியேட்டர்ஸ்ல. அப்ப TR சுந்தரம் மனோன்மணியம் என்ற படத்தை தயாரிச்சிட்டு இருந்தார். TA கல்யாணம் படத்துக்கு ம்யூஸிக் போட்டார். தன்கிட்ட உதவியாளராக இருந்த மகாதேவனுக்கு ஒரு பாட்டு கொடுத்தார். மோகனாங்க வதனி னு ஒரு பாட்டு. அந்த பாட்டுக்கு மட்டும் மகாதேவன் முதல் பாட்டாக ம்யூஸிக் போட ஆரம்பிச்சார். முழு படத்துக்கு ம்யூஸிக் போட்டது 1947ல தன அமராவதி என்ற படம்.
1953ல மதனமோகினி போன்ற படங்கள்ல பாடவும் செஞ்சார். பாட்டுல கர்நாடக சங்கீதத்தை புது மெருகேற்றி போட்டார். மண்வாசனை அள்ளி கொடுத்த பாட்டுக்கள். ப்ரபலமடஞ்சது 1955ல டவுன் பஸ் படத்ல. நாமகிரிப்பேட்டை கிருஷ்ணனை நாதஸ்வரம் வாசிக்க வச்சார். சாண்டோ சின்னப்பதேவர் கூட கூட்டணி சேர்ந்தது 1956ல MGR நடிச்ச தாய்க்குப் பின் தாரம் படத்ல. இந்த படத்துக்குக்கப்புறம் தேவர் ஃபிலிம்ஸின் எல்லா படங்களுமே திரை இசை திலகத்தின் ம்யூஸிக்தான்.
மெட்டுக்கு பாட்டுன்னு இருந்த காலம் போச்சு. KVM அதை பாட்டுக்குதான் மெட்டு போடணும்னு மாத்தினார். TK புகழேந்தி இவரோட உதவி ம்யூஸிக் டைரக்ட்டர்.
கதாசிரியர் ஆரூர்தாஸ் KVM பற்றி பறவைகள் எழுப்புகிற ஒலிக்குக்கூட ஸ்வரம் சொல்லக்கூடியவர்னு சொன்னார்.
டைரக்ட்டர் K ராகவேந்திரராவ் மாமா மகாதேவன் ஒரு சரஸ்வதி புத்திரன்னு சொன்னார்.
ம்யூஸிக் டைரக்ட்டர் சக்கரவர்த்தி, ஏகலைவன்னு சொன்னார்.
விருதுகள் :
தேசிய விருதுகள் : கந்தன் கருணை [1967], சங்கராபரணம் [1980]
தமிழ்நாடு மாநில விருது : அடிமைப்பெண் [1969]
ஆடவேணும் பாடவேணும் இன்பமாக தினம் ஆணும் பெண்ணும்
பணம் பந்தியிலே 1961 / KV மகாதேவன் / கா மு ஷெரிஃப்
கொல்லிமலை காட்டுக்குள்ளே குடியிருந்தவண்டா
ஞானகுழந்தை 1979 / KV மகாதேவன்
கொறத்தி வாடி ஏங்குப்பி ஞாங் ஞாங் ஞாங் ஞாங்
குறத்தி மகன் 1972 / KV மகாதேவன் / கண்ணதாசன்
புத்தம் புதிய புத்தகமே உன்னை புரட்டி பார்க்கும் புலவன் நான்
அரச கட்டளை 1967 / KV மகாதேவன் / வாலி
மன்னவன் வந்தானடி தோழி மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்து
திருவருட்ச்செல்வர் 1967 / KV மகாதேவன் / கண்ணதாசன்
பேபி
பழம்பெரும் இசையமைப்பாளர் திரை இசைத்திலகம் KV மகாதேவன் அவர்கள் பிறந்த நாள் [1918 - 2001]
கிருஷ்ணன்கோயில் வெங்கடாசலம் மகாதேவன். நாகர்கோவில்ல பிறந்தவர். இசை உலகத்தில அன்பா எல்லாரும் இவரை மாமான்னு கூப்பிட்டாங்க. எல்லாருக்கும் செல்ல மாமா.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களுக்கு 1500 படங்களுக்கு மேல் ம்யூஸிக் போட்டார்.இதுல 218 தமிழ் படங்கள். முதல் தமிழ் படம் 1942ல மனோன்மணி.
தாத்தா ராம பாகவதர், திருவிதாங்கூர் அரண்மனைல சங்கீத வித்வானாக இருந்தவர். அப்பா வெங்கடாசல பாகவதர் கோட்டு வாத்திய கலைஞர். சின்ன வயசிலேயே மகாதேவன் அவர்களுக்கு படிப்புல இன்ட்ரெஸ்ட் இல்லாம ம்யூஸிக் மேல ஆச வந்துச்சு.
பாலகந்தர்வ நாடக சபைல சேந்து, பெண் வேஷம் போட்டு, பாடி நடிச்சார். ஆரம்பத்தில அப்பாட்ட ம்யூஸிக் கத்துக்க ஆரம்பிச்சார். அப்புறமா பூதப்பாண்டி அருணாலச கவிராயர்ட்ட கத்துக்கிட்டு, அங்கரை விஸ்வநாத பாகவதர் ம்யூஸிக் குழூல சேந்து, பம்பாய், ஹைதராபாத், டெல்லி, நாக்பூர் போன்ற ஊர்கள்ல கச்சேரி செஞ்சார். தனியா கச்சேரி செய்ற அளவுக்கு திறமை வந்துச்சு. அந்த காலத்தில ம்யூஸிக் தெரிஞ்ச இளைஞர்களின் சரணாலயம் பாய்ஸ் கம்பெனி. இந்த கம்பெனில ஏதோ காரணத்தால KVM சேர முடியல. பொழப்பு நடத்தணுமே. அதனால ஹோட்டல்ல வேல செஞ்சார்.
மெதுவா சினிமால சான்ஸ் கெடச்சுது. அப்ப இருந்த ம்யூஸிக் டைரக்ட்டர்கள் TA கல்யாணம், SV வெங்கடராமன்ட்ட உதவியாளராக இருந்தார். இவரோட சினிமா வாழ்க்கை தொடங்கியது 1942ல மாடர்ன் தியேட்டர்ஸ்ல. அப்ப TR சுந்தரம் மனோன்மணியம் என்ற படத்தை தயாரிச்சிட்டு இருந்தார். TA கல்யாணம் படத்துக்கு ம்யூஸிக் போட்டார். தன்கிட்ட உதவியாளராக இருந்த மகாதேவனுக்கு ஒரு பாட்டு கொடுத்தார். மோகனாங்க வதனி னு ஒரு பாட்டு. அந்த பாட்டுக்கு மட்டும் மகாதேவன் முதல் பாட்டாக ம்யூஸிக் போட ஆரம்பிச்சார். முழு படத்துக்கு ம்யூஸிக் போட்டது 1947ல தன அமராவதி என்ற படம்.
1953ல மதனமோகினி போன்ற படங்கள்ல பாடவும் செஞ்சார். பாட்டுல கர்நாடக சங்கீதத்தை புது மெருகேற்றி போட்டார். மண்வாசனை அள்ளி கொடுத்த பாட்டுக்கள். ப்ரபலமடஞ்சது 1955ல டவுன் பஸ் படத்ல. நாமகிரிப்பேட்டை கிருஷ்ணனை நாதஸ்வரம் வாசிக்க வச்சார். சாண்டோ சின்னப்பதேவர் கூட கூட்டணி சேர்ந்தது 1956ல MGR நடிச்ச தாய்க்குப் பின் தாரம் படத்ல. இந்த படத்துக்குக்கப்புறம் தேவர் ஃபிலிம்ஸின் எல்லா படங்களுமே திரை இசை திலகத்தின் ம்யூஸிக்தான்.
மெட்டுக்கு பாட்டுன்னு இருந்த காலம் போச்சு. KVM அதை பாட்டுக்குதான் மெட்டு போடணும்னு மாத்தினார். TK புகழேந்தி இவரோட உதவி ம்யூஸிக் டைரக்ட்டர்.
கதாசிரியர் ஆரூர்தாஸ் KVM பற்றி பறவைகள் எழுப்புகிற ஒலிக்குக்கூட ஸ்வரம் சொல்லக்கூடியவர்னு சொன்னார்.
டைரக்ட்டர் K ராகவேந்திரராவ் மாமா மகாதேவன் ஒரு சரஸ்வதி புத்திரன்னு சொன்னார்.
ம்யூஸிக் டைரக்ட்டர் சக்கரவர்த்தி, ஏகலைவன்னு சொன்னார்.
விருதுகள் :
தேசிய விருதுகள் : கந்தன் கருணை [1967], சங்கராபரணம் [1980]
தமிழ்நாடு மாநில விருது : அடிமைப்பெண் [1969]
ஆடவேணும் பாடவேணும் இன்பமாக தினம் ஆணும் பெண்ணும்
பணம் பந்தியிலே 1961 / KV மகாதேவன் / கா மு ஷெரிஃப்
கொல்லிமலை காட்டுக்குள்ளே குடியிருந்தவண்டா
ஞானகுழந்தை 1979 / KV மகாதேவன்
கொறத்தி வாடி ஏங்குப்பி ஞாங் ஞாங் ஞாங் ஞாங்
குறத்தி மகன் 1972 / KV மகாதேவன் / கண்ணதாசன்
புத்தம் புதிய புத்தகமே உன்னை புரட்டி பார்க்கும் புலவன் நான்
அரச கட்டளை 1967 / KV மகாதேவன் / வாலி
மன்னவன் வந்தானடி தோழி மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்து
திருவருட்ச்செல்வர் 1967 / KV மகாதேவன் / கண்ணதாசன்
பேபி
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
15.03.2022
பழம்பெரும் நடிகர் SA நடராஜன் அவர்கள் பிறந்த நாள் [1919 - ? ]
நாடகம், சினிமா நடிகர், தயாரிப்பாளர், டைரக்ட்டர். சிரிச்சிட்டே வசனம் பேசும் வில்லன் நடிகர். ஆறாங்ளாஸ் வரை படிச்சார். 1933ல நவாப் ராஜமாணிக்கம் நாடகக்குழு நடத்தின நாடகங்களை பாத்து, நடராஜனுக்கும் நாடகங்கள்ல நடிக்க ஆசப்பட்டார். அம்மாவுக்கு தெரியாம நாடக கம்பெனில சேந்து நடிக்க ஆரம்பிச்சார். அநேகமா பெண் வேஷத்துல நடிச்சார். இந்த நாடக குழூல நம்பியாரும், KS கோபாலகிருஷ்ணன் போன்றவங்க நடிச்சிட்டு இருந்தார். ஒரு தடவ ஒரு நாடகத்தில நம்பியார் நடிக்க முடியல. அவருக்கு பதிலா நடராஜன் நடிச்சார்.
மெதுவா மெதுவா நடராஜனுக்கு சினிமால நடிக்கிற ஆச வந்துச்சு. அதனால நாடக கம்பெனியை விட்டு விலகினார். ஒடனேயா சினிமா சான்ஸ் கெடச்சிறப்போவுது. மறுபடியும் நாடக கம்பெனிதான். மங்களகான சபா, சேலம் பாய்ஸ் கம்பெனீல சேந்துட்டார். கொஞ்ச காலம் மறுபடியும் நாடக நடிப்புதான்.
சேலம் நாடக கம்பெனில நடிச்சிட்டு இருக்கும்போது, TR சுந்தரம் 1942ல டைரக்ட்டின சதி சுகன்யா படத்ல சின்ன ரோல்ல நடிக்க ஆரம்பிச்சார். அதுக்கப்புறம் சான்ஸ் இல்ல. 1949லதான் சான்ஸ் கெடச்சுது. கன்னியின் காதலி படத்தில வசந்தபுரி ராஜாவா நடிச்சார்.
ப்ரபலமானது 1950ல MGR நடிச்ச மந்திரிகுமாரி படத்ல ராஜகுருவின் மகனாக நடிச்சு. வில்லன். இந்த படத்ல ராஜகுருவாக நடிச்ச நம்பியாரையே தூக்கி சாப்ட்ட வில்லன் நடிகர். கலைஞரின் வசனங்களை அனாயாசமா பேசி பேர் வாங்கியவர். 1954ல சிவாஜி கணேசன் நடிச்ச மனோகரா படத்லயும் வில்லனா நடிச்சு பேர் வாங்கினார். இவரோட தயாரிப்பு நிறுவனம் Forward Fine Films. இதன் மூலம் நல்ல தங்கைனு ஒரு படத்தை 1955ல தயாரிச்சு, டைரக்ட்டி, நடிச்சார். படம் நல்லா ஓடுச்சு. அப்புறமா சில படங்கள்ல ஹீரோவாவும், குணசித்திர நடிகராகவும் நடிச்சார். 30க்கும் மேல் படங்கள்ல நடிச்சார். சில படங்களை தயாரிச்சு, டைரக்ட் செஞ்சதுல நஷ்ட்டம்.
தமிழ் சினிமா கண்ட முக்கிய வில்லன் இந்த SA நடராஜன். கலைமாமணி விருது வாங்கினார்.
மனோகரா 1954
ABCD படிக்கிறேன் EFGH எழுதுறேன் ஆபீசரு போல நடிக்கிறேன்
நல்ல தங்கை 1955 - நடிப்பு, தயாரிப்பு, டைரக் ஷன் - SA நடராஜன்
G ராமநாதன் / A மருதகாசி
பேபி
பழம்பெரும் நடிகர் SA நடராஜன் அவர்கள் பிறந்த நாள் [1919 - ? ]
நாடகம், சினிமா நடிகர், தயாரிப்பாளர், டைரக்ட்டர். சிரிச்சிட்டே வசனம் பேசும் வில்லன் நடிகர். ஆறாங்ளாஸ் வரை படிச்சார். 1933ல நவாப் ராஜமாணிக்கம் நாடகக்குழு நடத்தின நாடகங்களை பாத்து, நடராஜனுக்கும் நாடகங்கள்ல நடிக்க ஆசப்பட்டார். அம்மாவுக்கு தெரியாம நாடக கம்பெனில சேந்து நடிக்க ஆரம்பிச்சார். அநேகமா பெண் வேஷத்துல நடிச்சார். இந்த நாடக குழூல நம்பியாரும், KS கோபாலகிருஷ்ணன் போன்றவங்க நடிச்சிட்டு இருந்தார். ஒரு தடவ ஒரு நாடகத்தில நம்பியார் நடிக்க முடியல. அவருக்கு பதிலா நடராஜன் நடிச்சார்.
மெதுவா மெதுவா நடராஜனுக்கு சினிமால நடிக்கிற ஆச வந்துச்சு. அதனால நாடக கம்பெனியை விட்டு விலகினார். ஒடனேயா சினிமா சான்ஸ் கெடச்சிறப்போவுது. மறுபடியும் நாடக கம்பெனிதான். மங்களகான சபா, சேலம் பாய்ஸ் கம்பெனீல சேந்துட்டார். கொஞ்ச காலம் மறுபடியும் நாடக நடிப்புதான்.
சேலம் நாடக கம்பெனில நடிச்சிட்டு இருக்கும்போது, TR சுந்தரம் 1942ல டைரக்ட்டின சதி சுகன்யா படத்ல சின்ன ரோல்ல நடிக்க ஆரம்பிச்சார். அதுக்கப்புறம் சான்ஸ் இல்ல. 1949லதான் சான்ஸ் கெடச்சுது. கன்னியின் காதலி படத்தில வசந்தபுரி ராஜாவா நடிச்சார்.
ப்ரபலமானது 1950ல MGR நடிச்ச மந்திரிகுமாரி படத்ல ராஜகுருவின் மகனாக நடிச்சு. வில்லன். இந்த படத்ல ராஜகுருவாக நடிச்ச நம்பியாரையே தூக்கி சாப்ட்ட வில்லன் நடிகர். கலைஞரின் வசனங்களை அனாயாசமா பேசி பேர் வாங்கியவர். 1954ல சிவாஜி கணேசன் நடிச்ச மனோகரா படத்லயும் வில்லனா நடிச்சு பேர் வாங்கினார். இவரோட தயாரிப்பு நிறுவனம் Forward Fine Films. இதன் மூலம் நல்ல தங்கைனு ஒரு படத்தை 1955ல தயாரிச்சு, டைரக்ட்டி, நடிச்சார். படம் நல்லா ஓடுச்சு. அப்புறமா சில படங்கள்ல ஹீரோவாவும், குணசித்திர நடிகராகவும் நடிச்சார். 30க்கும் மேல் படங்கள்ல நடிச்சார். சில படங்களை தயாரிச்சு, டைரக்ட் செஞ்சதுல நஷ்ட்டம்.
தமிழ் சினிமா கண்ட முக்கிய வில்லன் இந்த SA நடராஜன். கலைமாமணி விருது வாங்கினார்.
மனோகரா 1954
ABCD படிக்கிறேன் EFGH எழுதுறேன் ஆபீசரு போல நடிக்கிறேன்
நல்ல தங்கை 1955 - நடிப்பு, தயாரிப்பு, டைரக் ஷன் - SA நடராஜன்
G ராமநாதன் / A மருதகாசி
பேபி
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
15.03.2022
பழம்பெரும் ம்யூஸிக் டைரக்ட்டர் SM சுப்பையா நாயுடு அவர்கள் பிறந்த நாள் [1914 - 1979]
சுப்பராயுலு முனுசாமி சுப்பையா நாயுடு. தமிழ், ஒண்ரெண்டு தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களுக்கு ம்யூஸிக் போட்டார். மெல்லிசைக்கும், கர்னாடக இசைக்கும் முன்னோடி. தமிழ் இசையில இவருக்கு செல்ல பேர் சங்கீதய்யா. வெஸ்டர்ன் ம்யூஸிக் பிடிக்காது.
OP நய்யர்னு புகழ்பெற்ற பாலிவுட் ம்யூஸிக் டைரக்ட்டர் இருந்தார். நாயுடுவை தென்னிந்திய OP நய்யர்னு தமிழ் இசை உலகத்துல சொன்னாங்க.
வீட்டுக்கு தெரியாம சிங்கப்பூருக்கு ஓடிப்போய் பொழப்பு நடத்தலாம்னு வீட்டை விட்டு ஓடி போனார். ஆனா சிங்கப்பூர் போக முடியல. பல பிரச்னைகளுக்கு நடுவே, ஜெகந்நாத அய்யரின் நாடக கம்பெனீல சேர்ற சான்ஸ் கெடச்சுது. நவாப் ராஜமாணிக்கம் பிள்ளைகிட்டயிருந்து சங்கீத அறிவை வளத்துகிட்டார். நவாப் ராஜமாணிக்கம் கம்பெனீலதான் CS ஜெயராமன் நடிகரா இருந்தார். அவர் இசை பயிற்சி செய்யும்போது, அதை கேட்டுட்டு இருந்த சுப்பையா நாயுடு மேலும் சங்கீதத்தை பற்றி தெரிஞ்சிக்கிட்டார். இசைக்கலைஞர் TN சுப்பிரமணிய பாகவதர்ட்ட கீர்த்தனையும், ராஜகோபால் அய்யர்ட்ட ஆர்மோனியமும் கத்துக்கிட்டார்.
மெல்ல மெல்ல அந்த நாடக கம்பெனீல முழுநேர ஆர்மோனிய கலைஞரானார். அதுக்கப்புறம் கோவை சென்ட்ரல் ஸ்டூடியோல மாத சம்பளத்துக்கு ஆர்மோனிய கலைஞரா வேல செஞ்சார். இந்த சென்ட்ரல் ஸ்டூடியோவுக்கு, பக்ஷிராஜா ஸ்டூடியோவுக்கு ஆஸ்தான ம்யூஸிக் டைரக்ட்டர் நாயுடு. ஜூப்பிட்டர் பிக்ச்சர்சின் நிறைய படங்களுக்கு ம்யூஸிக் போட்டார். ஆரம்பத்ல SV வெங்கடராமன், CR சுப்பாராமன், G ராமநாதன், TG லிங்கப்பா போன்ற சில ம்யூஸிக் டைரக்ட்டர்கள் கூட சேந்து படங்களுக்கு ம்யூஸிக் போட்டார்.
முதல் முதலா தனியா ம்யூஸிக் போட்ட படம் ராஜகுமாரி [1947]. இந்த படத்தின் மூலம்தான் நாயுடுவுக்கு MGR ஐ ரொம்ப புடிச்சுப்போச்சு.
*** 1947ல மந்திரிகுமாரி படத்தில முதல் முதலா திருச்சி லோகநாதனை "காட்டினிலே நாங்கள் வாழ்வதோ சுக வாழ்வுதான்" பாட்டை பாடவச்சார்.
*** 1949ல கவிஞர் கண்ணதாசன் எழுதிய முதல் பாட்டு "கலங்காதிரு மனமே" கன்னியின் காதலி படத்துக்கு நாயுடு ம்யூஸிக் போட்டார்.
*** 1954ல மலைக்கள்ளன் படத்தில ஒரு ஸீன்ல டாக்டரா நடிச்சார் நாயுடு.
*** 1959ல மரகதம் படத்ல "குங்கும பூவே கொஞ்சும் புறாவே" பாட்டை சந்திரபாபுவை பாடவச்சு அவரை சிறந்த பாடகராக்கினார்.
*** 1961ல திருடாதே படத்ல "என்னருகே நீயிருந்தால்" னு ஒரு பாட்டு. இந்த பாட்டு மெல்லிசை மன்னர்களால் வேற ஒரு படத்துக்கு ம்யூஸிக் போடப்பட்ட பாட்டு. ஆனா அந்த படத்தில இந்த பாட்டை சேக்கல. தயாரிப்பாளர் AL ஸ்ரீனிவாசன் சொல்லி அந்த பாட்டை தான் ம்யூஸிக் போட்ட திருடாதே படத்ல சேத்துக்கிட்டார் நாயுடு.
*** 1962ல ஜானகியை பாட வச்சு "சிங்கார வேலனே தேவா" பாட்டை மறக்க முடியுமா?
*** MS விஸ்வநாதனும், கவிஞர் கண்ணதாசனும் சேந்து, நாயுடுவின் 60வது பிறந்த நாளை க்ராண்டா கொண்டாடினாங்க. இந்த கொண்டாட்டத்துல Chief கெஸ்ட்டாக கலந்துக்கிட்ட நடிகர் திலகமும், புரட்சி நடிகரும் நாயுடுவின் இசை சேவையை பாராட்டி அவருக்கு ஒரு கணிசமான தொகையை கொடுத்தாங்க.
மெல்லிசை மன்னர்கள் பல மேடைகள்ல இப்டி நெகிழ்ந்து சொன்னாங்க :
"எங்களுக்கு மெல்லிசை மன்னர்கள்னு பட்டம் கொடுத்தாங்க. ஆனா அந்த மெல்லிசை எப்டி இருக்கணும்னு நாங்க சுப்பையா நாயுடு, G ராமநாதன் இவங்ககிட்டதான் கத்துக்கிட்டோம். அவங்க ரெண்டு பேரையும் எங்க குருவாக நெனச்சு போற்றுறோம்".
GK வெங்கடேஷும் நாயுடூட்ட உதவியாளராக இருந்தவர்தான்.
TM சௌந்தர்ராஜனை அன்பா "வாய்யா ஹீரோ"னுதான் கூப்டுவார். நாயுடுவுக்கு TMS ஐ பாத்தா ஒரு நட்பு, அன்பு. MGR க்காக முதல் முதலா "எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்" பாட்டை பாட வச்சார்.
இளையராஜா மெல்லிசை மன்னரை தன் குருவாக நெனச்சார். அதே மாதிரி மெல்லிசை மன்னர் சுப்பையா நாயுடுவை தன் குருவாக நெனச்சார். 1979ல மெல்லிசை மன்னர் ஒரு இன்னிசை கச்சேரி நடத்தினார். இந்த கச்சேரியை தனக்காக நடத்தல. கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் கலெக் ஷன் ஆச்சு. இந்த தொகையை மெல்லிசை மன்னர் தனக்காக எடுத்துக்கல. அந்த சமயத்ல ஒடம்பு சரியில்லாம இருந்த சுப்பையா நாயுடுவுக்காக அந்த இன்னிசை கச்சேரி நடத்தி, கெடச்ச ஒரு லட்சம் பணத்தையும், சுப்பையா நாயுடுவின் சிகிச்சைக்காகவும், அவரோட குடும்பத்துக்கும் கொடுத்தார்.
ராதா ராதா ராதா கொஞ்சம் நில்லு உன் காதோடு சொல்ல ஒரு சேதி இருக்கு
குல கௌரவம் 1976 / SM சுப்பையா நாயுடு / வாலி
மாலையிட்ட கணவன் நாளை வருவான் இந்த முத்துவண்ண சித்திரத்தின் முகம் பார்க்க
முத்துச்சிப்பி 1969 / SM சுப்பையா நாயுடு / வாலி
நன்றி சொல்ல வேண்டும் இறைவனுக்கு நல்ல வழி சொன்னான் இருவருக்கு
தேரோட்டம் 1971 / SM சுப்பையா நாயுடு / கண்ணதாசன்
நீ எங்கே என் நினைவுகள் அங்கே நீ ஒரு நாள் வரும் வரையில்
மன்னிப்பு 1969 / SM சுப்பையா நாயுடு / வாலி
என்னை காதலித்தால் மட்டும் போதுமா உன் கைகளில் வரவும் வேண்டுமா
ஆசை முகம் 1965 / SM சுப்பையா நாயுடு / வாலி
பேபி
பழம்பெரும் ம்யூஸிக் டைரக்ட்டர் SM சுப்பையா நாயுடு அவர்கள் பிறந்த நாள் [1914 - 1979]
சுப்பராயுலு முனுசாமி சுப்பையா நாயுடு. தமிழ், ஒண்ரெண்டு தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களுக்கு ம்யூஸிக் போட்டார். மெல்லிசைக்கும், கர்னாடக இசைக்கும் முன்னோடி. தமிழ் இசையில இவருக்கு செல்ல பேர் சங்கீதய்யா. வெஸ்டர்ன் ம்யூஸிக் பிடிக்காது.
OP நய்யர்னு புகழ்பெற்ற பாலிவுட் ம்யூஸிக் டைரக்ட்டர் இருந்தார். நாயுடுவை தென்னிந்திய OP நய்யர்னு தமிழ் இசை உலகத்துல சொன்னாங்க.
வீட்டுக்கு தெரியாம சிங்கப்பூருக்கு ஓடிப்போய் பொழப்பு நடத்தலாம்னு வீட்டை விட்டு ஓடி போனார். ஆனா சிங்கப்பூர் போக முடியல. பல பிரச்னைகளுக்கு நடுவே, ஜெகந்நாத அய்யரின் நாடக கம்பெனீல சேர்ற சான்ஸ் கெடச்சுது. நவாப் ராஜமாணிக்கம் பிள்ளைகிட்டயிருந்து சங்கீத அறிவை வளத்துகிட்டார். நவாப் ராஜமாணிக்கம் கம்பெனீலதான் CS ஜெயராமன் நடிகரா இருந்தார். அவர் இசை பயிற்சி செய்யும்போது, அதை கேட்டுட்டு இருந்த சுப்பையா நாயுடு மேலும் சங்கீதத்தை பற்றி தெரிஞ்சிக்கிட்டார். இசைக்கலைஞர் TN சுப்பிரமணிய பாகவதர்ட்ட கீர்த்தனையும், ராஜகோபால் அய்யர்ட்ட ஆர்மோனியமும் கத்துக்கிட்டார்.
மெல்ல மெல்ல அந்த நாடக கம்பெனீல முழுநேர ஆர்மோனிய கலைஞரானார். அதுக்கப்புறம் கோவை சென்ட்ரல் ஸ்டூடியோல மாத சம்பளத்துக்கு ஆர்மோனிய கலைஞரா வேல செஞ்சார். இந்த சென்ட்ரல் ஸ்டூடியோவுக்கு, பக்ஷிராஜா ஸ்டூடியோவுக்கு ஆஸ்தான ம்யூஸிக் டைரக்ட்டர் நாயுடு. ஜூப்பிட்டர் பிக்ச்சர்சின் நிறைய படங்களுக்கு ம்யூஸிக் போட்டார். ஆரம்பத்ல SV வெங்கடராமன், CR சுப்பாராமன், G ராமநாதன், TG லிங்கப்பா போன்ற சில ம்யூஸிக் டைரக்ட்டர்கள் கூட சேந்து படங்களுக்கு ம்யூஸிக் போட்டார்.
முதல் முதலா தனியா ம்யூஸிக் போட்ட படம் ராஜகுமாரி [1947]. இந்த படத்தின் மூலம்தான் நாயுடுவுக்கு MGR ஐ ரொம்ப புடிச்சுப்போச்சு.
*** 1947ல மந்திரிகுமாரி படத்தில முதல் முதலா திருச்சி லோகநாதனை "காட்டினிலே நாங்கள் வாழ்வதோ சுக வாழ்வுதான்" பாட்டை பாடவச்சார்.
*** 1949ல கவிஞர் கண்ணதாசன் எழுதிய முதல் பாட்டு "கலங்காதிரு மனமே" கன்னியின் காதலி படத்துக்கு நாயுடு ம்யூஸிக் போட்டார்.
*** 1954ல மலைக்கள்ளன் படத்தில ஒரு ஸீன்ல டாக்டரா நடிச்சார் நாயுடு.
*** 1959ல மரகதம் படத்ல "குங்கும பூவே கொஞ்சும் புறாவே" பாட்டை சந்திரபாபுவை பாடவச்சு அவரை சிறந்த பாடகராக்கினார்.
*** 1961ல திருடாதே படத்ல "என்னருகே நீயிருந்தால்" னு ஒரு பாட்டு. இந்த பாட்டு மெல்லிசை மன்னர்களால் வேற ஒரு படத்துக்கு ம்யூஸிக் போடப்பட்ட பாட்டு. ஆனா அந்த படத்தில இந்த பாட்டை சேக்கல. தயாரிப்பாளர் AL ஸ்ரீனிவாசன் சொல்லி அந்த பாட்டை தான் ம்யூஸிக் போட்ட திருடாதே படத்ல சேத்துக்கிட்டார் நாயுடு.
*** 1962ல ஜானகியை பாட வச்சு "சிங்கார வேலனே தேவா" பாட்டை மறக்க முடியுமா?
*** MS விஸ்வநாதனும், கவிஞர் கண்ணதாசனும் சேந்து, நாயுடுவின் 60வது பிறந்த நாளை க்ராண்டா கொண்டாடினாங்க. இந்த கொண்டாட்டத்துல Chief கெஸ்ட்டாக கலந்துக்கிட்ட நடிகர் திலகமும், புரட்சி நடிகரும் நாயுடுவின் இசை சேவையை பாராட்டி அவருக்கு ஒரு கணிசமான தொகையை கொடுத்தாங்க.
மெல்லிசை மன்னர்கள் பல மேடைகள்ல இப்டி நெகிழ்ந்து சொன்னாங்க :
"எங்களுக்கு மெல்லிசை மன்னர்கள்னு பட்டம் கொடுத்தாங்க. ஆனா அந்த மெல்லிசை எப்டி இருக்கணும்னு நாங்க சுப்பையா நாயுடு, G ராமநாதன் இவங்ககிட்டதான் கத்துக்கிட்டோம். அவங்க ரெண்டு பேரையும் எங்க குருவாக நெனச்சு போற்றுறோம்".
GK வெங்கடேஷும் நாயுடூட்ட உதவியாளராக இருந்தவர்தான்.
TM சௌந்தர்ராஜனை அன்பா "வாய்யா ஹீரோ"னுதான் கூப்டுவார். நாயுடுவுக்கு TMS ஐ பாத்தா ஒரு நட்பு, அன்பு. MGR க்காக முதல் முதலா "எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்" பாட்டை பாட வச்சார்.
இளையராஜா மெல்லிசை மன்னரை தன் குருவாக நெனச்சார். அதே மாதிரி மெல்லிசை மன்னர் சுப்பையா நாயுடுவை தன் குருவாக நெனச்சார். 1979ல மெல்லிசை மன்னர் ஒரு இன்னிசை கச்சேரி நடத்தினார். இந்த கச்சேரியை தனக்காக நடத்தல. கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் கலெக் ஷன் ஆச்சு. இந்த தொகையை மெல்லிசை மன்னர் தனக்காக எடுத்துக்கல. அந்த சமயத்ல ஒடம்பு சரியில்லாம இருந்த சுப்பையா நாயுடுவுக்காக அந்த இன்னிசை கச்சேரி நடத்தி, கெடச்ச ஒரு லட்சம் பணத்தையும், சுப்பையா நாயுடுவின் சிகிச்சைக்காகவும், அவரோட குடும்பத்துக்கும் கொடுத்தார்.
ராதா ராதா ராதா கொஞ்சம் நில்லு உன் காதோடு சொல்ல ஒரு சேதி இருக்கு
குல கௌரவம் 1976 / SM சுப்பையா நாயுடு / வாலி
மாலையிட்ட கணவன் நாளை வருவான் இந்த முத்துவண்ண சித்திரத்தின் முகம் பார்க்க
முத்துச்சிப்பி 1969 / SM சுப்பையா நாயுடு / வாலி
நன்றி சொல்ல வேண்டும் இறைவனுக்கு நல்ல வழி சொன்னான் இருவருக்கு
தேரோட்டம் 1971 / SM சுப்பையா நாயுடு / கண்ணதாசன்
நீ எங்கே என் நினைவுகள் அங்கே நீ ஒரு நாள் வரும் வரையில்
மன்னிப்பு 1969 / SM சுப்பையா நாயுடு / வாலி
என்னை காதலித்தால் மட்டும் போதுமா உன் கைகளில் வரவும் வேண்டுமா
ஆசை முகம் 1965 / SM சுப்பையா நாயுடு / வாலி
பேபி
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
16.03.2022
ஒளிப்பதிவாளர் ஆர்தர் எ வில்சன் பிறந்த நாள் [1968]
தமிழ், தெலுங்கு படங்களுக்கு ஒளிப்பதிவு செஞ்சிருக்கார். தமிழ்ல கமல்ஹாசன், டைரக்ட்டர்கள் பாலா, KS ரவிகுமார் படங்கள்ல ஒளிப்பதிவு செஞ்சார். MGR Government Film and Television Training Institute ல டிப்ளமா கோர்ஸ் பிடிச்சார்.
1990ல இணைந்த கைகள் படத்ல உதவியாளராக இருந்தார். ஆனாலும் வில்சன் தன் சொந்த அனுபவத்துல முன்னேறினார். ஒளிப்பதிவு செஞ்ச முதல் படம் 1996ல சுந்தர புருஷன். இந்த படத்ல வேல செய்யும்போது, வில்சன்கிட்ட இப்ப உள்ளது மாதிரி மேம்பட்ட கேமரா உபகரணங்கள்ல்லாம் இல்ல. ஆனாலும் தந்திரங்களால "செட்டப்ப மாத்தி" பாட்டை எடுத்தார்.
VIP படத்தில "சவுக்குத்தோப்புல குயிலொண்ணு கவுக்கப்பாக்குது" பாட்டு எல்லாரும் பாராட்டும்படியா இருந்துச்சு. தயாரிப்பாளர் AVM இந்த பாட்டை பாத்துட்டு வில்சனை பாராட்டி, எந்த லொக்கேஷன்ல எடுத்ததுனு கேட்டார். வில்சன் அந்த பாட்டை வெளிய எங்கயும் போய் எடுக்கல, ஸ்டூடியோலியே எடுத்ததுனு சொன்னார். அந்த அளவுக்கு படங்களை ஒளிப்பதிவு செஞ்சவர்.
கமல் கூட சேந்தது 2002ல KS ரவிக்குமாரின் பஞ்சதந்திரம் படத்ல. முதல் முதலா டைரக்ட் செஞ்ச டைரக்ட்டர்கள் எல்லாரும் வில்சனை பாராட்டும்படி இருந்துச்சு வில்சனின் ஒளிப்பதிவு.
சவுக்கு தோப்புல குயிலொண்ணு கவுக்கப்பாக்குது சிறுசு இன்னு
வி.ஐ.பி. 1997 / ரஞ்சித் ப்ரோட்
செட்டப்ப மாத்தி கெட்டப்ப மாத்தி அப்பன் வச்ச பேர மாத்தி
சுந்தர புருஷன் 1996 / சிற்பி / SJ சூர்யா
நதியே அடி நைல் நதியே நனைந்தேன் உன் அழகினிலே
வானத்தைப்போல 2000 / SA ராஜ்குமார் / பா விஜய்
பேபி
ஒளிப்பதிவாளர் ஆர்தர் எ வில்சன் பிறந்த நாள் [1968]
தமிழ், தெலுங்கு படங்களுக்கு ஒளிப்பதிவு செஞ்சிருக்கார். தமிழ்ல கமல்ஹாசன், டைரக்ட்டர்கள் பாலா, KS ரவிகுமார் படங்கள்ல ஒளிப்பதிவு செஞ்சார். MGR Government Film and Television Training Institute ல டிப்ளமா கோர்ஸ் பிடிச்சார்.
1990ல இணைந்த கைகள் படத்ல உதவியாளராக இருந்தார். ஆனாலும் வில்சன் தன் சொந்த அனுபவத்துல முன்னேறினார். ஒளிப்பதிவு செஞ்ச முதல் படம் 1996ல சுந்தர புருஷன். இந்த படத்ல வேல செய்யும்போது, வில்சன்கிட்ட இப்ப உள்ளது மாதிரி மேம்பட்ட கேமரா உபகரணங்கள்ல்லாம் இல்ல. ஆனாலும் தந்திரங்களால "செட்டப்ப மாத்தி" பாட்டை எடுத்தார்.
VIP படத்தில "சவுக்குத்தோப்புல குயிலொண்ணு கவுக்கப்பாக்குது" பாட்டு எல்லாரும் பாராட்டும்படியா இருந்துச்சு. தயாரிப்பாளர் AVM இந்த பாட்டை பாத்துட்டு வில்சனை பாராட்டி, எந்த லொக்கேஷன்ல எடுத்ததுனு கேட்டார். வில்சன் அந்த பாட்டை வெளிய எங்கயும் போய் எடுக்கல, ஸ்டூடியோலியே எடுத்ததுனு சொன்னார். அந்த அளவுக்கு படங்களை ஒளிப்பதிவு செஞ்சவர்.
கமல் கூட சேந்தது 2002ல KS ரவிக்குமாரின் பஞ்சதந்திரம் படத்ல. முதல் முதலா டைரக்ட் செஞ்ச டைரக்ட்டர்கள் எல்லாரும் வில்சனை பாராட்டும்படி இருந்துச்சு வில்சனின் ஒளிப்பதிவு.
சவுக்கு தோப்புல குயிலொண்ணு கவுக்கப்பாக்குது சிறுசு இன்னு
வி.ஐ.பி. 1997 / ரஞ்சித் ப்ரோட்
செட்டப்ப மாத்தி கெட்டப்ப மாத்தி அப்பன் வச்ச பேர மாத்தி
சுந்தர புருஷன் 1996 / சிற்பி / SJ சூர்யா
நதியே அடி நைல் நதியே நனைந்தேன் உன் அழகினிலே
வானத்தைப்போல 2000 / SA ராஜ்குமார் / பா விஜய்
பேபி
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
18.03.2022
17.03.2022 - பழம்பெரும் டைரக்ட்டர் K சங்கர் அவர்கள் பிறந்த நாள் [1926 - 2006]
டைரக்ட்டர், திரைக்கதாசிரியர். கேரளால பிறந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தினு 80 படங்களுக்கும் மேல் டைரக்ட்டினார்.
அவருக்கு 2 வயசாகும்போது அவரோட குடும்பத்தினர் கோயம்புத்தூருக்கு வந்துட்டாங்க. கோவைல ஏழாங்க்ளாஸ் வரை படிச்சார். அப்பாவுக்கு ஒடம்பு சரியில்லாம போனதால மேல படிக்க முடியல. வேலைக்கு போனார்.
இங்கிலீஷ்காரங்க ஆட்சியில திரையிடப்பட்ட இங்கிலிஷ் படங்களை பார்த்து ரசிச்ச சங்கர் அவர்களுக்கு அப்பவே டைரக்ட்டராகணும் ஆச வந்துச்சு.
1939ல கோவை சென்ட்ரல் ஸ்டூடியோல எடிட்டர் உதவியாளராக சேந்து சினிமா வாழ்க்கைய ஆரம்பிச்சார். நெகட்டிவ் ஃபிலிம்ஸை சுத்தப்படுத்தணும். அதுக்கப்புறம் கோவை பட்சிராஜா ஸ்டூடியோல போய் சேந்தார்.
காரைக்குடியில இருந்த AVM ஸ்டூடியோல இருந்து, பட எடிட்டிங்காக கோவை பட்சிராஜா ஸ்டூடியோவுக்கு சிலர் வந்தாங்க. அங்க சங்கரின் சுறுசுறுப்பை பாத்த அசிஸ்டன்ட் டைரக்ட்டர் MV ராமன், சங்கரை AVM ஸ்டூடியோவுக்கு தாங்கூட கூட்டிட்டு போய்ட்டார்.
காரைக்குடி ஏவிஎம் ஸ்டூடியோல அப்போ வேதாள உலகம் படம் எடுத்துட்டு இருந்தாங்க. அங்க திடீர்னு தீ விபத்து. தீ எரிஞ்சிட்டு இருக்கும்போதே சங்கர் ஜன்னல் வழியா எடிட்டிங் ரூமுக்குள்ள குதிச்சு, அங்க இருந்த வேதாள உலகம் படத்தின் நெகட்டிவ் ஃபிலிம்களை எடுத்துட்டு வந்து AVM செட்டியார்ட்ட கொடுத்து நல்ல பேர் வாங்கினார்.
AVM ஸ்டூடியோ சென்னைக்கு ஷிஃப்ட் ஆச்சு. சங்கரையும் கூட கூட்டிட்டு போய்ட்டாங்க. அதுவரைக்கும் உதவி எடிட்டராக இருந்த சங்கருக்கு AVM ஸ்டூடியோல எடிட்டரா ப்ரமோஷன் கெடச்சுது. ரீல்களை கச்சிதமா வெட்டி, திரைப்படங்களை அட்டகாசமா அமச்சு கொடுத்த திறமைசாலி சங்கர் அவர்கள். அப்புறமாத்தான் அவர் லட்சியபடி டைரக்ட் செய்ய தொடங்கினார். முதல் முதலா டைரக்ட்டினது AVM தயாரிச்ச ஒரு சிங்கள படம். படம் ஓஹ்ஹோ. தொடர்ந்து படங்களை டைரக்ட் செஞ்சார்.
மக்கள் திலகம் MG ராமசந்திரன், கலைச்செல்வி ஜெயலலிதா, NT ராமராவ் ஆகிய மூணு முதல்வர்களை டைரக்ட்டின பெருமை இவருக்கு உண்டு.
நடிச்சவங்களை சங்கர் சும்மா விட்டதில்ல. ஷூட்டிங்ல அவருக்கு முழு திருப்த்தி கிடைக்கும்வரை நடிச்சவங்களை பெண்ட் நிமித்தினார். 12 வருஷம் AVM ல வேல செஞ்சுட்டு வெளிய வந்து, முதல்ல டைரக்ட்டின படம் வாசுமேனன் தயாரிச்ச ஒரே வழி [1959].
1951ல ஒரு தெலுங்கு படம் நிரபராதி என்ற பேர்ல தமிழ்ல டப் செஞ்சாங்க. அந்த சமயத்ல சங்கர் AVMல எடிட்டரா இருந்தார். தெலுங்கு படத்ல நடிச்ச ஹீரோ முக்காமலா கிருஷ்ணமூர்த்திக்கு தமிழ் தெரியாது. அவருக்கு தமிழ்ல டப் செஞ்சது யார் தெரியுமோ? நடிகர் திலகம்.
பராசக்தி படம் AVM ஸ்டூடியோல தயாரானதால, நடிகர் திலகமும், சங்கரும் நெருங்கிய நண்பர்களானாங்க. சங்கரை விட சிவாஜி ஒரு வயசு சின்னவர். ஆனாலும் சங்கரை சிவாஜி வாடா போடான்னு பேசினார். அவ்ளோ க்ளோஸ்.
சிவாஜியின் ஆலயமணி படத்தையும், MGRஇன் பணத்தோட்டம் படத்தையும் ஒரே சமயத்தில டைரக்ட்டினார். இது தனக்கு கெடச்ச பாக்கியம்னு சங்கர் சொன்னார். படங்களை எடிட் செஞ்ச விதமே அலாதியானது. அதுவும் பாட்டுக்கள், சொல்லவே வேணாம் அவ்ளோ அட்டகாசமா இருக்கும் பாக்க.
பாலிவுட் சினிமாவின் கனவுக்கன்னி ஹேமமாலினியை தமிழ்ல 1963ல இது சத்தியம் படத்ல ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடி நடிக்க வச்சவர் சாட்சாத் சங்கர்தான்.
பாரதிதாசன் கவிதைகளின் பிரியர் சங்கர். கலங்கரை விளக்கம் படத்ல சங்கே முழங்கு, சந்திரோதயம் படத்ல புதியதோர் உலகம் செய்வோம், பல்லாண்டு வாழ்க படத்தில வேற ட்யூன்ல புதியதோர் உலகம் செய்வோம் பாட்டுக்கள். மெல்லிசை மன்னர்கள் பிரிஞ்சு, மெல்லிசை மன்னராக MS விஸ்வநாதன் ம்யூஸிக் போட்டது சங்கரின் கலங்கரை விளக்கம் படத்துக்கு. கலைச்செல்வி ஜெயலலிதாவை முதல் முதலாக அடிமைப்பெண் படத்ல "அம்மா என்றால் அன்பு" பாட்டை பாட வச்சார்.
அப்புறமா பக்தி படங்கள் எடுக்க ஆரம்பிச்சார். அதுக்காகவே 'இறையருள் செல்வர்'னு பட்டம் குடுத்தாங்க.
மான் கண்டேன் மான் கண்டேன் மானேதான் நான் கண்டேன்
ராஜரிஷி 1985 - டைரக் ஷன் & எடிஷன் இளையராஜா / புலமைப்பித்தன்
எங்கிருந்தோ ஆசைகள் எண்ணத்திலே ஓசைகள்
சந்திரோதயம் 1966 MS விஸ்வநாதன் / வாலி
இரவு முடிந்துவிடும் முடிந்தால் பொழுதும் விடிந்துவிடும்
அன்புக் கரங்கள் 1965 / R சுதர்சனம் / வாலி
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
ஆண்டவன் கட்டளை 1964 மெல்லிசை மன்னர்கள் / கண்ணதாசன்
பெண்கள் இல்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்
ஆடிப்பெருக்கு 1962 / AM ராஜா / கொத்தமங்கலம் சுப்பு
பேபி
17.03.2022 - பழம்பெரும் டைரக்ட்டர் K சங்கர் அவர்கள் பிறந்த நாள் [1926 - 2006]
டைரக்ட்டர், திரைக்கதாசிரியர். கேரளால பிறந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தினு 80 படங்களுக்கும் மேல் டைரக்ட்டினார்.
அவருக்கு 2 வயசாகும்போது அவரோட குடும்பத்தினர் கோயம்புத்தூருக்கு வந்துட்டாங்க. கோவைல ஏழாங்க்ளாஸ் வரை படிச்சார். அப்பாவுக்கு ஒடம்பு சரியில்லாம போனதால மேல படிக்க முடியல. வேலைக்கு போனார்.
இங்கிலீஷ்காரங்க ஆட்சியில திரையிடப்பட்ட இங்கிலிஷ் படங்களை பார்த்து ரசிச்ச சங்கர் அவர்களுக்கு அப்பவே டைரக்ட்டராகணும் ஆச வந்துச்சு.
1939ல கோவை சென்ட்ரல் ஸ்டூடியோல எடிட்டர் உதவியாளராக சேந்து சினிமா வாழ்க்கைய ஆரம்பிச்சார். நெகட்டிவ் ஃபிலிம்ஸை சுத்தப்படுத்தணும். அதுக்கப்புறம் கோவை பட்சிராஜா ஸ்டூடியோல போய் சேந்தார்.
காரைக்குடியில இருந்த AVM ஸ்டூடியோல இருந்து, பட எடிட்டிங்காக கோவை பட்சிராஜா ஸ்டூடியோவுக்கு சிலர் வந்தாங்க. அங்க சங்கரின் சுறுசுறுப்பை பாத்த அசிஸ்டன்ட் டைரக்ட்டர் MV ராமன், சங்கரை AVM ஸ்டூடியோவுக்கு தாங்கூட கூட்டிட்டு போய்ட்டார்.
காரைக்குடி ஏவிஎம் ஸ்டூடியோல அப்போ வேதாள உலகம் படம் எடுத்துட்டு இருந்தாங்க. அங்க திடீர்னு தீ விபத்து. தீ எரிஞ்சிட்டு இருக்கும்போதே சங்கர் ஜன்னல் வழியா எடிட்டிங் ரூமுக்குள்ள குதிச்சு, அங்க இருந்த வேதாள உலகம் படத்தின் நெகட்டிவ் ஃபிலிம்களை எடுத்துட்டு வந்து AVM செட்டியார்ட்ட கொடுத்து நல்ல பேர் வாங்கினார்.
AVM ஸ்டூடியோ சென்னைக்கு ஷிஃப்ட் ஆச்சு. சங்கரையும் கூட கூட்டிட்டு போய்ட்டாங்க. அதுவரைக்கும் உதவி எடிட்டராக இருந்த சங்கருக்கு AVM ஸ்டூடியோல எடிட்டரா ப்ரமோஷன் கெடச்சுது. ரீல்களை கச்சிதமா வெட்டி, திரைப்படங்களை அட்டகாசமா அமச்சு கொடுத்த திறமைசாலி சங்கர் அவர்கள். அப்புறமாத்தான் அவர் லட்சியபடி டைரக்ட் செய்ய தொடங்கினார். முதல் முதலா டைரக்ட்டினது AVM தயாரிச்ச ஒரு சிங்கள படம். படம் ஓஹ்ஹோ. தொடர்ந்து படங்களை டைரக்ட் செஞ்சார்.
மக்கள் திலகம் MG ராமசந்திரன், கலைச்செல்வி ஜெயலலிதா, NT ராமராவ் ஆகிய மூணு முதல்வர்களை டைரக்ட்டின பெருமை இவருக்கு உண்டு.
நடிச்சவங்களை சங்கர் சும்மா விட்டதில்ல. ஷூட்டிங்ல அவருக்கு முழு திருப்த்தி கிடைக்கும்வரை நடிச்சவங்களை பெண்ட் நிமித்தினார். 12 வருஷம் AVM ல வேல செஞ்சுட்டு வெளிய வந்து, முதல்ல டைரக்ட்டின படம் வாசுமேனன் தயாரிச்ச ஒரே வழி [1959].
1951ல ஒரு தெலுங்கு படம் நிரபராதி என்ற பேர்ல தமிழ்ல டப் செஞ்சாங்க. அந்த சமயத்ல சங்கர் AVMல எடிட்டரா இருந்தார். தெலுங்கு படத்ல நடிச்ச ஹீரோ முக்காமலா கிருஷ்ணமூர்த்திக்கு தமிழ் தெரியாது. அவருக்கு தமிழ்ல டப் செஞ்சது யார் தெரியுமோ? நடிகர் திலகம்.
பராசக்தி படம் AVM ஸ்டூடியோல தயாரானதால, நடிகர் திலகமும், சங்கரும் நெருங்கிய நண்பர்களானாங்க. சங்கரை விட சிவாஜி ஒரு வயசு சின்னவர். ஆனாலும் சங்கரை சிவாஜி வாடா போடான்னு பேசினார். அவ்ளோ க்ளோஸ்.
சிவாஜியின் ஆலயமணி படத்தையும், MGRஇன் பணத்தோட்டம் படத்தையும் ஒரே சமயத்தில டைரக்ட்டினார். இது தனக்கு கெடச்ச பாக்கியம்னு சங்கர் சொன்னார். படங்களை எடிட் செஞ்ச விதமே அலாதியானது. அதுவும் பாட்டுக்கள், சொல்லவே வேணாம் அவ்ளோ அட்டகாசமா இருக்கும் பாக்க.
பாலிவுட் சினிமாவின் கனவுக்கன்னி ஹேமமாலினியை தமிழ்ல 1963ல இது சத்தியம் படத்ல ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடி நடிக்க வச்சவர் சாட்சாத் சங்கர்தான்.
பாரதிதாசன் கவிதைகளின் பிரியர் சங்கர். கலங்கரை விளக்கம் படத்ல சங்கே முழங்கு, சந்திரோதயம் படத்ல புதியதோர் உலகம் செய்வோம், பல்லாண்டு வாழ்க படத்தில வேற ட்யூன்ல புதியதோர் உலகம் செய்வோம் பாட்டுக்கள். மெல்லிசை மன்னர்கள் பிரிஞ்சு, மெல்லிசை மன்னராக MS விஸ்வநாதன் ம்யூஸிக் போட்டது சங்கரின் கலங்கரை விளக்கம் படத்துக்கு. கலைச்செல்வி ஜெயலலிதாவை முதல் முதலாக அடிமைப்பெண் படத்ல "அம்மா என்றால் அன்பு" பாட்டை பாட வச்சார்.
அப்புறமா பக்தி படங்கள் எடுக்க ஆரம்பிச்சார். அதுக்காகவே 'இறையருள் செல்வர்'னு பட்டம் குடுத்தாங்க.
மான் கண்டேன் மான் கண்டேன் மானேதான் நான் கண்டேன்
ராஜரிஷி 1985 - டைரக் ஷன் & எடிஷன் இளையராஜா / புலமைப்பித்தன்
எங்கிருந்தோ ஆசைகள் எண்ணத்திலே ஓசைகள்
சந்திரோதயம் 1966 MS விஸ்வநாதன் / வாலி
இரவு முடிந்துவிடும் முடிந்தால் பொழுதும் விடிந்துவிடும்
அன்புக் கரங்கள் 1965 / R சுதர்சனம் / வாலி
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
ஆண்டவன் கட்டளை 1964 மெல்லிசை மன்னர்கள் / கண்ணதாசன்
பெண்கள் இல்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்
ஆடிப்பெருக்கு 1962 / AM ராஜா / கொத்தமங்கலம் சுப்பு
பேபி
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
18.03.2022
17.03.2022 - டைரக்ட்டர் ரவிச்சந்திரன் பிறந்த நாள் [1971]
டைரக்ட்டின முதல் படம் கண்ணெதிரே தோன்றினாள் [1998]. படம் நல்லா ஓடுச்சு. மொத்தமே 5 படம்தான் டைரக்ட்டினார்.
1. கண்ணெதிரே தோன்றினாள் [1998]
2. சந்தித்த வேளை [2000]
3. மஜ்னு [2001]
4. உற்சாகம் [2007]
5. நட்பதிகாரம் 79 [2016]
சந்தா ஓ சந்தா இவள் சம்மதம் தந்தா உள்ளுக்குள் காதல் கொடி வளர்த்தாள்
கண்ணெதிரே தோன்றினாள் [1998]தேவா / வைரமுத்து
கோபப்படாதே முனீமா கோபப்படாதே
சந்தித்த வேளை 2000 / தேவா / பொன்னியின் செல்வன்
பேபி
17.03.2022 - டைரக்ட்டர் ரவிச்சந்திரன் பிறந்த நாள் [1971]
டைரக்ட்டின முதல் படம் கண்ணெதிரே தோன்றினாள் [1998]. படம் நல்லா ஓடுச்சு. மொத்தமே 5 படம்தான் டைரக்ட்டினார்.
1. கண்ணெதிரே தோன்றினாள் [1998]
2. சந்தித்த வேளை [2000]
3. மஜ்னு [2001]
4. உற்சாகம் [2007]
5. நட்பதிகாரம் 79 [2016]
சந்தா ஓ சந்தா இவள் சம்மதம் தந்தா உள்ளுக்குள் காதல் கொடி வளர்த்தாள்
கண்ணெதிரே தோன்றினாள் [1998]தேவா / வைரமுத்து
கோபப்படாதே முனீமா கோபப்படாதே
சந்தித்த வேளை 2000 / தேவா / பொன்னியின் செல்வன்
பேபி
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
18.03.2022
நடிகர் ஜெய் ஆகாஷ் பிறந்த நாள் [1981]
இலங்கை தமிழர். நடிகர், டைரக்ட்டர், தயாரிப்பாளர். நெஜ பேர் ஜெய் சதீஷ். தமிழ், ஒண்ரெண்டு தெலுங்கு, மலையாளம், கன்னடம் படங்கள்ல நடிச்சிருக்கார்.
தமிழ்ல நடிச்ச முதல் படம் இயக்குனர் சிகரம் K பாலசந்தர் தயாரிச்ச ரோஜாவனம் [1999]. இந்த படத்துக்கு பாலசந்தர் துணை நடிகருக்காக புதுமுகம் தேடினார். அப்போ ஆகாஷின் போட்டாவை இணையத்தில பாத்து, அவரை செலெக்ட் செஞ்சார். இந்த படத்தில அவர் பேர் ஆகாஷ்னு அறிமுகப் படுத்தினார். அந்த சமயத்தில அரவிந்த் ஆகாஷ்னு ஒரு நடிகர் இருந்தார். அதனால் இவருக்கு ஜெய் ஆகாஷ்னு பேரை மாத்திட்டாங்க.
ஆகாஷ் இப்போ Zee Tamil TV சீரியல் 'நீதானே எந்தன் பொன்வசந்தம்'ல நடிச்சிட்டிருக்கார். தெலுங்கு படங்கள்ல சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர் சிறந்த அறிமுக நடிகர் னு விருதுகள் வாங்கினார்.
அடடா என்ன அழகு 2009
விருப்பமில்லையா திருடா விருப்பமில்லையா
பேபி
நடிகர் ஜெய் ஆகாஷ் பிறந்த நாள் [1981]
இலங்கை தமிழர். நடிகர், டைரக்ட்டர், தயாரிப்பாளர். நெஜ பேர் ஜெய் சதீஷ். தமிழ், ஒண்ரெண்டு தெலுங்கு, மலையாளம், கன்னடம் படங்கள்ல நடிச்சிருக்கார்.
தமிழ்ல நடிச்ச முதல் படம் இயக்குனர் சிகரம் K பாலசந்தர் தயாரிச்ச ரோஜாவனம் [1999]. இந்த படத்துக்கு பாலசந்தர் துணை நடிகருக்காக புதுமுகம் தேடினார். அப்போ ஆகாஷின் போட்டாவை இணையத்தில பாத்து, அவரை செலெக்ட் செஞ்சார். இந்த படத்தில அவர் பேர் ஆகாஷ்னு அறிமுகப் படுத்தினார். அந்த சமயத்தில அரவிந்த் ஆகாஷ்னு ஒரு நடிகர் இருந்தார். அதனால் இவருக்கு ஜெய் ஆகாஷ்னு பேரை மாத்திட்டாங்க.
ஆகாஷ் இப்போ Zee Tamil TV சீரியல் 'நீதானே எந்தன் பொன்வசந்தம்'ல நடிச்சிட்டிருக்கார். தெலுங்கு படங்கள்ல சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர் சிறந்த அறிமுக நடிகர் னு விருதுகள் வாங்கினார்.
அடடா என்ன அழகு 2009
விருப்பமில்லையா திருடா விருப்பமில்லையா
பேபி
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
18.03.2022
பின்னணி பாடகி மேகா பிறந்த நாள் [1987]
ஹரிணி ராமச்சந்திரன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல பாடியிருக்கார். பழம்பெரும் ம்யூஸிக் டைரக்ட்டர் பாபநாசம் சிவன் அவர்களின் கொள்ளுப்பேத்தி. லண்டன் ட்ரினிட்டி காலேஜ்ல வெஸ்டன் ம்யூஸிக்கை கத்துக்கிட்டார். School Of Excellance நிறுவனத்தின் துணை நிறுவனர்.
2007ல ம்யூஸிக் டைரக்ட்டர் விஜய் ஆண்டனி நான் அவனில்லை படத்ல மேகாவை இன்ட்ரோ செஞ்சார். மேகா AR ரஹ்மானின் பெரிய விசிறி. இவர் ம்யூஸிக்கை கேட்டு வளந்ததாகவும் சொல்லியிருக்கார்.
இவர் செஞ்ச உலக சுற்றுப்பயணத்தின்போது ம்யூஸிக் டைரக்ட்டர் ஹாரிஸ் ஜெயராஜ் கூட நெறைய இசை நிகழ்ச்சிகள், நட்சத்திர இரவுகள் நடத்தினார்.
புயலே புறப்படு வெடியாய் வெடித்திடு உனக்கு தடையில்லை உலகிலே
காதலில் விழுந்தேன் 2007 / பிரியன் / விஜய் ஆண்டனி
துப்பாக்கி பெண்ணே சூடான கண்ணே உலகம் பிறந்தது உனக்காக
பேராண்மை 2009 / வித்யாசாகர் / வைரமுத்து
ஹேய் ஒரு வார்த்தை மொழியால் என்னை உருக வைத்தாள்
சிங்கம் 2010 / தேவிஸ்ரீ பிரசாத் நா முத்துக்குமார் & மேகா
பேபி
பின்னணி பாடகி மேகா பிறந்த நாள் [1987]
ஹரிணி ராமச்சந்திரன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல பாடியிருக்கார். பழம்பெரும் ம்யூஸிக் டைரக்ட்டர் பாபநாசம் சிவன் அவர்களின் கொள்ளுப்பேத்தி. லண்டன் ட்ரினிட்டி காலேஜ்ல வெஸ்டன் ம்யூஸிக்கை கத்துக்கிட்டார். School Of Excellance நிறுவனத்தின் துணை நிறுவனர்.
2007ல ம்யூஸிக் டைரக்ட்டர் விஜய் ஆண்டனி நான் அவனில்லை படத்ல மேகாவை இன்ட்ரோ செஞ்சார். மேகா AR ரஹ்மானின் பெரிய விசிறி. இவர் ம்யூஸிக்கை கேட்டு வளந்ததாகவும் சொல்லியிருக்கார்.
இவர் செஞ்ச உலக சுற்றுப்பயணத்தின்போது ம்யூஸிக் டைரக்ட்டர் ஹாரிஸ் ஜெயராஜ் கூட நெறைய இசை நிகழ்ச்சிகள், நட்சத்திர இரவுகள் நடத்தினார்.
புயலே புறப்படு வெடியாய் வெடித்திடு உனக்கு தடையில்லை உலகிலே
காதலில் விழுந்தேன் 2007 / பிரியன் / விஜய் ஆண்டனி
துப்பாக்கி பெண்ணே சூடான கண்ணே உலகம் பிறந்தது உனக்காக
பேராண்மை 2009 / வித்யாசாகர் / வைரமுத்து
ஹேய் ஒரு வார்த்தை மொழியால் என்னை உருக வைத்தாள்
சிங்கம் 2010 / தேவிஸ்ரீ பிரசாத் நா முத்துக்குமார் & மேகா
பேபி
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Page 18 of 60 • 1 ... 10 ... 17, 18, 19 ... 39 ... 60
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் செல்ல மருமகள் வர்ஷாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் செல்ல மருமகள் வர்ஷாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
Page 18 of 60
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|