ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொல்காப்பிய இலக்கணம் (619)

2 posters

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

Go down

தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 6 Empty தொல்காப்பிய இலக்கணம் (619)

Post by Dr.S.Soundarapandian Wed Feb 09, 2022 10:14 am

First topic message reminder :

தொல்காப்பிய இலக்கணம் (570)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

அடுத்ததாகத் தொல்காப்பியர் இடைச்சொற்களைப் பாகுபடுத்திக் காட்டுகிறார்:-

அவைதாம்
புணரியல் நிலையிடைப் பொருணிலைக் குதவுநவும்
வினைசெயன் மருங்கிற் காலமொடு வருநவும்
வேற்றுமைப் பொருள்வயின் உருபா குநவும்
அசைநிலைக் கிளவி யாகி வருநவும்
இசைநிறைக் கிளவி யாகி வருநவும்
தத்தங் குறிப்பிற் பொருள்செய் குநவும்
ஒப்பில் வழியாற் பொருசெய் குநவுமென்று
அப்பண் பினவே நுவலுங் காலை (இடையியல் 2)

‘புணரியல் நிலையிடைப் பொருள் நிலைக் குதவுநவும்’ – இரு சொற்கள் புணரும்போது, இடையே ஏதேனும் ஒரு பொருளுக்காக வருவனவும்,
‘வினைசெயன் மருங்கிற் காலமொடு வருநவும்’ – வினைச் சொல்லில் காலம் , பால்,இடம் காட்டுபவைகளும்,
‘வேற்றுமைப் பொருள்வயின் உருபா குநவும்’- வேற்றுமைப் பொருளைத் தரும் உருபுகளாக நிற்பவையும்,
‘அசைநிலைக் கிளவி யாகி வருநவும்’ – தனக்கெனப் பொருள் இலாது, தான் சார்ந்த பெயர் வினைகளோடு ஒட்டிநின்று அவற்றைச் சிறப்பிக்க உதவுவனவும்,
‘இசைநிறைக் கிளவி யாகி வருநவும்’ – செய்யுளில் இசையை நிறைக்க வருபவைகளும்,
‘தத்தங் குறிப்பிற் பொருள்செய் குநவும்’ – கூறுபவர்களின் குறிப்புப் பொருளை வெளிப்படுத்த நிற்பவைகளும்,
‘ஒப்பில் வழியாற் பொருள்செய் குநவும் என்று’ – வெவ்வேறு பொருட்களாக இருந்தாலும், ஏதோ ஒரு ஒப்புமையால் ஒன்றுபட்டு நிற்க உதவுபவைகளும்,
‘அப்பண் பினவே நுவலுங் காலை’ – ஆகத் திகழ்வதே இடைச்சொற்களாம்,உரைக்கப் புகின்!

இப்படி நடக்கும் இடைச்சொற்களுக்கு எடுத்துக்காட்டுகளைக் காண்போம்.

1 . ’ புணரியல் நிலையிடைப் பொருணிலைக் குதவுந’

பாட்டு +இன் + இனிமை = பாட்டின் இனிமை
இதில், ‘இன்’ எனும் சாரியை இடைச்சொல் , நடுவே வந்து , பொருளைத் தருகிறது; ‘பாட்டு’, ‘இனிமை’ என்று தனித் தனியாக நின்றால் பொருள் திரளாது என்பதைக் கவனிக்க!

2 . ‘வினைசெயன் மருங்கிற் காலமொடு வருந’
வாழ்+ வ்+ஆன் = வாழ்வான்
இங்கே, ’வ்’எனும் இடைச்சொல்லாகிய எதிர்கால இடைநிலை வந்ததால்தான் ‘வாழ்வான்’ என்ற வினைச்சொல்லுக்குப் பொருளே ஏற்படுவதைக் காண்கிறோம்.

3 . ‘வேற்றுமைப் பொருள்வயின் உருபாகுந’

குமணனை வாழ்த்தினான் – இங்கே, ‘ஐ’ எனும் இடைச்சொல்லாகிய வேற்றுமை உருபுதான் தொடர்ப் பொருளையே நல்குவதைக் காணலாம்; இல்லையேல், ‘குமணன் வாழ்த்தினான’ என நின்று , வாழ்த்தியவன் குமணன் எனும் தவறான பொருள் அல்லவா ஏற்படும்?

4 . ‘அசைநிலைக் கிளவி யாகி வருந’
சேனாவரையரின் விளக்கம்- “அசைத்தல் – சார்த்துதல். பொருளுணர்த்தாது பெயரொடும் வினையொடுஞ் சார்த்திச் சொல்லப்பட்டு நிற்றலின் அசைநிலை யாயிற்று.அவை ‘அந்தில்’ முதலாயின. ‘புகழ்ந்திகு மல்லரோ பெரிதே’, ‘உரைத்திசினோரே’ எனச் சார்ந்த மொழியை வேறுபடுத்து நிற்றலின்,அசைநிலைச் சொல்லாயின என்பாரு முளர்”

இங்கே ஒன்றை நான் தெளிவுபடுத்த வேண்டும்!

‘அசைநிலை’ வேறு, ‘அசைச் சொல்’ வேறா?
உரையாசிரியர் சிலரின் நடை இந்த ஐயத்தை நமக்குத் தோற்றுவிக்கிறது!

அசைநிலை வேறு, அசைச் சொல் வேறு எனத் தொல்காப்பியர் கருதியிருந்தால், இடைச் சொற்களைப் பாகுபடுத்திக் கூறும் அவரின் பட்டியலில், இரண்டும் அல்லவா இடம் பெற்றிருக்க வேண்டும்?பட்டியலில் ‘அசைநிலைக் கிளவி’ என்ற ஒன்று மட்டும்தானே உள்ளது?

‘மா’ எனும் சொல், வியங்கோளை அடுத்துவரும் ‘அசைச் சொல்’ எனத் தொல்காப்பியர்(இடை.25) கூறச் ,சேனாவரையர், “அது வியங்கோளைச் சார்ந்து, ‘அசைநிலையாய் வரும்’’என்றார்.
இதனால், அசைநிலையும் அசைச் சொல்லும் ஒன்றுதான் என்பது தெளிவாகிற தல்லவா?
ஆகவே,
அசைநிலைக் கிளவி =அசைநிலைச் சொல் = அசைநிலை= அசைச் சொல் !

மேற் சேனாவரையர் உரையிற் கண்ட இரு அசைநிலைகளை வருமாறு பார்க்கலாம்-

புகழ்ந்திகு மல்லரோ பெரிதே – இதில், ‘இகும்’ என்ற அசைநிலை இடைச்சொல் உள்ளது.
உரைத்திசினோரே - இதில், ‘இசின்’ என்ற அசைநிலை இடைச்சொல் உள்ளது.

5 . ‘ இசைநிறைக் கிளவி யாகி வருந ’

இசையை நிறைக்க வரும் சொல் , இசைநிறை இடைச்சொல் எனப்படும்.
இசையை நிறைக்க – யாப்புக் குறையைப் போக்க
‘கடாஅக் களிற்றின்மேல்’ – இந்த இரு சீர்களில், முதற்சீரிலுள்ள ‘அ’வை எடுத்துவிட்டால், ‘கடாக்’ என்று ஒரே ஒரு நிரைஅசையாக மட்டும் நிற்கும்; சீர் கிடைக்காது;யாப்பிலக்கணம் பிழையாகும். ஆகவே சீர் ஏற்பட்டு, யாப்பிலக்கணம் செம்மையாக, ‘அ’ சேர்க்கப்படுகிறது; இதுவே இசை நிறைக்கப்படுதல்.
இங்கே ‘அ’ , இசைநிறைக்கும் இடைச்சொல்.

இன்னோர் எடுத்துக்காட்டு:
‘காடிறந் தோரே’ – இதில், இரண்டாம் சீரின் ஈற்றில் உள்ள ஏகாரமே இசைநிறைக்க வந்த இடைச்சொல். ஏன்?
ஈற்று ஏகாரத்தை எடுத்துவிட்டால், ‘தோர்’ என்பது மட்டுமே மிஞ்சும்; இஃது ஓர் அசைதானே தவிரச் சீர் ஆகாது; சீர் ஆக்கவேண்டும் என்பதற்காகவே ஈற்றில், ‘ஏ’ சேர்க்கப்படுகிறது; அஃதாவது, யாப்பியல் நோக்கில் சேர்க்கப்படுகிறது; இதனால்தான் ‘இசை நிறை’ எனப்படுகிறது.
6 . தத்தங் குறிப்பிற் பொருள்செய்குந

‘சிறியகட் பெறினே எமக்கீயும் மன்னே’ (புறம்235)- இதில், ‘மன்’ எனும் இடைச்சொல் வந்துள்ளது. ‘சிறு அளவிலான கள் இருந்தால் அவன் எனக்குத் தந்துவிடுவான்! அப்படிப்பட்ட அரசன் அவன் ! அது ஒரு காலம்!’ எனக் கடந்துபோன (கழிந்துபோன) செயலைக் குறிப்பது எது? ‘மன்’அல்லவா? இதனால், ‘மன்’ எனும் இடைச்சொல், கழிவுப் பொருளைக் குறிப்பால் தருகிறது என்கிறோம்!

7 . ‘ஒப்பில் வழியாற் பொருசெய்குந’

இதற்கும் உரையாசிரியரிடையே வேறுபட்டு கருத்துகள் உண்டு!

நம் விளக்கத்தை வருமாறு வைக்கலாம்.

காளை மாடும் மணி என்ற மனிதனும் ஒன்றா?
வேறு வேறுதானே?
இரண்டையும் ஒன்று எனக் கூற முடியாது என்பதே , ‘ஒப்பில் வழி’!
ஆனால், இப்படிப்பட்ட ‘ஒப்பில்வழி’யாக இருப்பினும் , சில உருபுகளைப் போட்டுப் நாம் விரும்பிய பொருளை வெளிப்படுத்துகிறோம்! இந்த உருபுகளை நாம் உவம உருபுகள் என்கிறோம்! இவைகள் இடைச்சொற்களே!

காளை அன்ன மணி – இங்கே , ‘காளை’ , ‘மணி’ ஆகியன ஒப்பில்வழிச் சொற்கள்; ஆனால், ‘அன்ன’ எனும் இடைச்சொல்லால், நம்மால் ஓர் ஒப்பீட்டைத் தர முடிந்துள்ளது!இதைத்தான் தொல்காப்பியர் தன் நூற்பாவில் குறித்துள்ளார்!
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9751
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down


தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 6 Empty Re: தொல்காப்பிய இலக்கணம் (619)

Post by T.N.Balasubramanian Mon Apr 25, 2022 5:26 pm

நல்ல விளக்கம். நன்றி

[You must be registered and logged in to see this link.]


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 6 Empty Re: தொல்காப்பிய இலக்கணம் (619)

Post by Dr.S.Soundarapandian Tue May 03, 2022 11:07 am

நன்றி இரமணியன் அவர்களே !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9751
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 6 Empty தொல்காப்பிய இலக்கணம் (614)

Post by Dr.S.Soundarapandian Tue May 03, 2022 11:08 am

தொல்காப்பிய இலக்கணம் (614)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

‘விறப்பு’ என்ற உரிச்சொல்லைச் சற்றுமுன்பு பார்த்தோம்!

‘விறப்பு’ என்ற அந்த உரிச்சொல்லுக்கு வேறு பொருளும் இருப்பதை இப்போது தெரிவிக்கிறார் ஆசிரியர்:

அவற்றுள்
விறப்பே வெரூஉப் பொருட்டு மாகும் (உரி. 51)

விறப்பு (உரிச்சொல்) – வெரூஉதல் ; வெருவுதல்; அஞ்சுதல்

‘அஞ்சுதல்’ பொருளில் ‘விறப்பு’எனும் உரிச்சொல் வந்ததற்கு இளம்பூரணர் தந்த மேற்கோள்-
‘கோடு முற்றி யளந்த காரொடு விறந்தே’ என்றக்கால், வெரீஇ என்பதாம்.
கோடு – கொம்பு ; அளந்த – அமைந்த ; கார் – கரிய காளை; வெரீஇ- அஞ்சி.
கோடு முற்றி யளந்த காரொடு விறந்தே – கொம்பானது முதிர்ச்சியடைந்து அமைந்த கரியநிறக் காளைக்கு அஞ்சி.

‘அஞ்சுதல்’ பொருளில் ‘விறப்பு’எனும் உரிச்சொல் பயின்றதற்குச் சேனாவரையர் தந்த மேற்கோள்-

“அவலெறி யுலக்கைப் பாடு விறந்தயல (பெரும்பாண். 226) என விறப்பு என்பது செறிவே யன்றி வெருவுதற் குறிப்பும் உணர்த்தும் என்றவாறு”.
அவல் – நெற்பொரி இடியல் ; ‘வெறும் வாயை மெல்பவனுக்கு அவல் கிடைத்தால் எந்தமட்டு?’
உலக்கைப் பாடு – உலக்கையால் இடிபடும் ஓசை
அயல – அகல; நீங்க

அடுத்து , ஒரே மூச்சில் நான்கு இசைப்பொருண்மை உரிச்சொற்களக் காட்டுகிறார் தொல்காப்பியர்:

கம்பலை சும்மை கலியே யழுங்க
லென்றிவை நான்கு மரவப் பொருள (உரி. 52)

’அரவம்’ எனும் பொருள்தரும் நான்கு உரிச்சொற்கள் 1.கம்பலை 2.சும்மை 3.கலி 4.அழுங்கல்
அரவம் – சத்தம் (noise); ‘ஆள் அரவமே இல்லாமல் திருடிக்கொண்டு போய்விட்டான்’.

கம்பலை (பெயர்ச்சொல்) – அழுகை
கம்பலை (உரிச்சொல்) – ஆரவாரம்

சும்மை (பெயர்ச்சொல்) – சுமை (பிங்.நி.)
சும்மை (உரிச்சொல்) – ஆரவாரம்

கலி (பெயர்ச்சொல்) – சனிக் கோள்
கலி (உரிச்சொல்) – ஆரவாரம்

அழுங்கல் (பெயர்ச்சொல்) – உழல்தல் ; ‘கடனில் அழுந்துகிறான்!’
அழுங்கல் (உரிச்சொல்) - ஆரவாரம்

‘கம்பலை’ எனும் உரிச்சொல்லுக்கு, ‘அரவ’ப் பொருள் இருப்பதற்கு இளம்பூரணர் காட்டும் மேற்கோள்-
‘ஊர் கம்பலை யுடைத்து’ என்றக்கால், அரவம் உடைத்து என்பதாம்.

‘சும்மை’ எனும் உரிச்சொல், ‘அரவ’ப் பொருள் தருவதற்கு இளம்பூரணர் தரும் மேற்கோள்-
‘ஊர் சும்மை யுடைத்து’ என்பதும் அது.

‘கலி’, ‘அழுங்கல்’ அகிய உரிச்சொற்களுக்கு, ‘அரவ’ப் பொருள் இருப்பதற்கு இளம்பூரணர் காட்டும் மேற்கோள்-
‘கலிகெழு மூதூர்’ (அகம். 11), ‘அழுங்கல் மூதூர்’ (நற். 203) என்பனவும் ஒக்கும்.

‘அழுங்கல்’ உரிச்சொற் பொருளை இப்போது பார்த்தோமல்லவா? இதே உரிச்சொல்லுக்கு ‘இரக்கம்’ , ‘கேடு’ எனும் வேறு இரு பொருட்களும் இருப்பதை இப்போது வரைகிறார் ஆசிரியர்:

அவற்று
ளழுங்கல் லிரக்கமுங் கேடு மாகும் (உரி. 53)

‘அழுங்கல்’ உரிச்சொல்லுக்கான இரு கூடுதற் பொருட்கள் 1. இரக்கம் 2.கேடு

இரண்டுமே குறிப்புப் பொருண்மை நல்குவன.

‘அழுங்கல்’ எனும் உரிச்சொல், இரக்கப் பொருளில் வந்தமைக்கு இளம்பூரணரின் மேற்கோள் –
‘மகனை யிழந் தழுங்கினார்’ என்றக்கால், இரங்கினார் என்பதாம்.

‘அழுங்கல்’ எனும் உரிச்சொல், ‘கேடு’எனும் பொருளில் வந்தமைக்கு இளம்பூரணர் காட்டிய மேற்கோள் –
‘செல வழுங்கினார்’ என்றக்கால், செலவு கெடுத்தார் என்பதாம்.
செலவு – செல்லுகை; புறப்படுதல். வரவு செலவு அல்ல!
செலவு கெடுத்தார் – செல்லுதலைத் தடுத்தார்.

தொடர்வது, ‘கழும்’ எனும் குறிப்புப் பொருள் தரும் உரிச்சொல்!:
கழுமென் கிளவி மயக்கஞ் செய்யும் (உரி. 54)

கழும் (உரிச்சொல்) – மயங்கல்; கலத்தல்; ஒன்றுடன் ஒன்று சேர்தல்

‘கழும்’எனும் உரிச்சொல், மயக்கப் பொருள் தருவதற்கு இளம்பூரணரின் மேற்கோள் –
‘கழுமிய ஞாட்பினுள் மைந்திகழ்ந்தார் இட்ட’ (களவழி. 11 ) என்றக்கால், மயங்கிய ஞாட்பு என்பதாம்.
கழுமிய ஞாட்பினுள் மைந்திகழ்ந்தார் இட்ட – வீரர் பலர் ஒருவரோடு ஒருவர் கலந்து இட்ட போரில், வலிமையை இழந்தவர்கள் அஞ்சி, விட்டுச்சென்ற .
ஞாட்பு – போர் ; மைந்து – வலிமை ; இட்ட – விட்டுச்சென்ற.

‘கழும்’ என்பதே தொல்காப்பிய உரிச்சொல் எனச் சேனாவரையர் கூறக், ‘கழுமு’ என்பதே உரிச்சொல் வடிவம் என்றார் நச்சினார்க்கினியர்; எனினும் இரு வடிவங்களுக்கும் பொருள் ஒன்றே.
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9751
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 6 Empty தொல்காப்பிய இலக்கணம் (615)

Post by Dr.S.Soundarapandian Sat May 07, 2022 9:17 am

தொல்காப்பிய இலக்கணம் (615)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இப்போது, ‘செழுமை’ எனும் உரிச்சொல்!:

செழுமை வளனுங் கொழுப்பு மாகும் (உரி. 55)

செழுமை (பெயர்ச்சொல்) – மாட்சிமை (பிங்.நி.); ‘சட்ட திட்டங்கள் திருத்தப்பட்டு செழுமைப் படுத்தப்பட்டன’.
செழுமை (உரிச்சொல்) – 1. வளன் 2. கொழுப்பு
வளன் – வளம் (fertility)
வளமும் கொழுப்பும் கண்ணாற் காணக் கூடியவை ஆதலால், ‘செழுமை’, பண்புப் பொருல் உணர்த்தும் உரிச்சொல் ஆகும்.

‘செழுமை’ எனும் உரிச்சொல், வளத்தைக் குறிப்பதற்கு இளம்பூரணரின் எடுத்துக்காட்டு –
‘செழுஞ் செந்நெல் என்றக்கால், வளஞ் செந்நெல் என்பதாம்’.

‘செழுமை’ என்னும் உரிச்சொல், கொழுப்பைக் குறிப்பதற்கு இளம்பூரணரின் சான்று –
‘கொழுந்தடி தின்ற செந்நாய் ஏற்றை என்பது, கொழுந்தடி தின்ற என்பதாம்; கொழுப்பு என்பது ஊன் பற்றிய நிணம்’.
செந்நாய் ஏற்றை – ஆண் செந்நாய்
ஊன் – இறைச்சி ( ‘ஊண்’ அல்ல)
கொழுந்தடி – கொழுப்புள்ள தசை

தொடரும் உரிச்சொல் ‘விழுமம்’:

விழுமஞ் சீர்மையும் சிறப்பும் இடும்பையுமாம் (உரி. 56)

இந் நூற்பா , சேனாவரையர் கொண்ட பாடம்; ‘விழுமஞ் சீர்மையு மிடும்பையுஞ் செய்யும்’ என்பது இளம்பூரணர் பாடம். சேனாவரையர் பாடத்தையே தெய்வச்சிலையாரும் நச்சினார்க்கினியரும் கொண்டனர்.
வேறு ஒன்றுமில்லை! ‘விழுமம்’ எனும் உரிச்சொல்லுக்குச், ‘சிறப்பு’ என்ற பொருளைச் சேர்க்கவில்லை இளம்பூரணர்; அவ்வளவுதான்!
நூற்பா ஓசையானது, இளம்பூரணர் பாடத்திற்கே மிகப் பொருந்துவதாக உள்ளது.
தொல்காப்பிய உரையாசிரியர்களிற் காலத்தால் முற்பட்டவர் இளம்பூரணர் (கி.பி. 12 ஆம் நூ.ஆ.); ஆகவே , அவருக்குப் பின்னெழுந்த இலக்கியங்களிற் பயின்ற உரிச்சொற்களைப் பிந்தைய உரையாசிரியர்கள் , மாணவர்களுக்காகத்,த ஓலைச் சுவடி ஓரத்தில் சேர்க்க விழைந்திருக்க சிறு வாய்ப்பும் இல்லாமலில்லை. கால அடைவில் , அச் சுவடியைப் படிக்கும் மாணவர்கள் அச் சொல்லை மூலமாகக் கருதியிருக்கலாம். சுவடியியல் நோக்கில் (manuscriptology) இவ்வாறு ஆயச் சிறிது இடம் உண்டு.

‘விழு’ – இவ் வடிக்கு , ‘விழுதல்’என்பது போன்ற பொருள்களையே நாம் எதிர்பார்க்கலாம்; ஆனால், முற்றிலும் எதிர்பாரா வகையில், ‘சீர்மை’ப் பொருள் வந்துள்ளதால், ‘விழுமம்’ உரிச்சொல்லாயிற்று!

‘விழுமம்’ எனும் உரிச்சொல், ‘சீர்மை’ப் பொருள் தருவதற்கு இளம்பூரணர் வாக்கு –
‘விழுமியர் என்றக்கால், சீரியர் என்பதாம்’
சீரியர் – மேன்மையர் (the great)

‘விழுமம்’ என்னும் உரிச்சொல், ‘இடும்பை’ப் பொருள் நல்குவதற்கு இளம்பூரணர் காட்டு –
’விழும முற்றிருந்தார் என்றக்கால், இடும்பையுற் றிருந்தார் என்பதாம்’.
இடும்பை – துன்பம் (affliction)

‘விழுமம்’ எனும் உரிச்சொல், ‘சிறப்பு’ப் பொருள் தருவதற்குச் சேனாவரையர் காட்டு –
‘வேற்றுமை யில்லா விழுத்திணைப் பிறந்து’ (புறம். 27)
வேற்றுமை யில்லா விழுத்திணைப் பிறந்து – வேறுபாடில்லாத சிறப்பான குலத்திற் பிறந்து.
வேற்றுமை – சாதி வேற்றுமை; உயர் சாதி தாழ்ந்த சாதி என்ற வேறுபாடு.
உரைவேந்தர் ஔவை துரைசாமியார் , “வேற்றுமை யில்லா விழுத்திணை என்பது, வேற்றுமை மலிந்த இக்காலத் தமிழ் மக்கள் குறிக்கொண்டு போற்றத் தக்கதாகும்” என மனம் நொந்து, தமிழர்க்கு அறிவுரை நல்கியிருப்பது அறியத் தக்கது!
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9751
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 6 Empty தொல்காப்பிய இலக்கணம் (616)

Post by Dr.S.Soundarapandian Mon May 16, 2022 12:05 pm

தொல்காப்பிய இலக்கணம் (616)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

‘கருவி’ , நமக்குத் தெரியும்; ஆனால், இதே சொல்லுக்குத் ‘தொகுதி’ என்ற மருட்டும் பொருளும் உண்டு என்கிறது தொல்காப்பியம்!:

கருவி தொகுதி (உரி. 57)

கருவி (பெயர்ச்சொல்) – தொழில் செய்யப் பயன்படுத்தும் பொருள்(tool)
கருவி (உரிச்சொல்) – தொகுதி (collection)

இதற்கு இளம்பூரணரின் மேற்கோள் –
‘கருவி வானம் கதழுறை சிதறி (அகம். 4) என்றக்கால், ஈண்டு மின்னும் முழக்கும் காற்றும் என இத் தொடக்கத்தன வாயிற்று’.
கருவி வானம் கதழுறை சிதறி – மின்னல் , இடி, காற்று ஆகியன சேர்ந்து, மேகத்தின் நீரை வேகமாகக் கீழே சிதறி.
கதழ் – வேகமாக ; உறை – நீர்த்துளி

‘கருவி, தொகுதியாகிய குறிப்பு உணர்த்தும்’ – நச்சினார்க்கினியர்.

இப்போது உரிச்சொல் – ‘கமம்’:

கம நிறைந் தியலும் (உரி. 58)

கமம் – உரிச்சொல்லாகும் போது , நிறைவைக் குறிக்கும்; குறிப்புப் பொருளில் வந்துள்ளது.
கமம் – நிறைவு (fulness)
கமம் – பெயர்ச்சொல்லாகும் போது, வயலைக் குறிக்கும்.

‘கமம்’ , நிறைவைக் குறிக்கும் எடுத்துக்காட்டு –
கமஞ்சூழ் மாமழை (திருமுருகு. 7) – சேனாவரையரின் எடுத்துக்காட்டு.
கமஞ் சூல் – நிறைந்த சூல் ; சூல் – நீர் நிரம்பி யிருத்தல்.

அடுத்த உரிச்சொல் – ‘அரி’ :

அரியே ஐம்மை (உரி. 59)
ஐம்மை – மென்மை

அரி (பெயர்ச்சொல்) – நெல் ; அரிசி
அரி (உரிச்சொல்) – மென்மை ; குறிப்புப் பொருள் நல்கியது.

‘அரி’எனும் உரிச்சொல்லானது, மென்மையைக் குறிக்கும் என்பதற்கு இளம்பூரணரின் எடுத்துக்காட்டு –
‘அரிமயிர்த் திரள் முன்கை’ (புறம். 11)
அரிமயிர்த் திரள் முன்கை – மென்மையான உரோமத் திரள் கொண்ட முன்கை.

இப்போது வரும் உரிச்சொல் – ‘கவவு’:-

கவ வகத்திடுமே (உரி. 60)

அகத்திடுதல் – தழுவுதல்; குறிப்புப் பொருள்

பூண் கவைஇய கோல மார்பு – இளம்பூரணரின் காட்டு.
பூண் கவைஇய கோல மார்பு – பூணால் தழுவப்பட்ட அழகு மார்பு.

கழூஉ விளங்காரம் கவைஇ மார்ப – சேனாவரையரின் காட்டு.
கழூஉ விளங்காரம் கவைஇ மார்ப – கழுவப்பட்ட , விளங்கித் தோன்றும் மாலையால் தழுவப்பட்ட மார்பனே.

‘கவவு’ என்றதும் , ஏதோ ‘கவட்டை’ அல்லது ‘வாயால் கவ்வுதல்’ என்பது போன்ற ஒரு பொருள் இருக்கலாம் என்றால், இதற்கு ஓர் அரிய உரிப்பொருள் இருப்பது மேல் தொல்காப்பிய நூற்பாவால்தான் தெரிந்தது!
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9751
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 6 Empty தொல்காப்பிய இலக்கணம் (617)

Post by Dr.S.Soundarapandian Thu May 19, 2022 7:24 pm

தொல்காப்பிய இலக்கணம் (617)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மேலே குறிப்புப் பொருள் உணர்த்தும் சில உரிச்சொற்களைத்தானே பார்த்தோம்?
இப்போது ஒரே நூற்பாவில் நான்கு இசைப்பொருள் உணர்த்தும் உரிச்சொற்களை அறிமுகப்படுத்துகிறார் தொல்காப்பியர்!:-

துவைத்தலுஞ் சிலைத்தலு மியம்பலு மிரங்கலு
மிசைப்பொருட் கிளவி யென்மனார் புலவர் (உரி. 61)


‘துவைத்தல்’, ‘சிலைத்தல்’, ‘இயம்பல்’, ‘இரங்கல்’ – இந்த நான்கு உரிச்சொற்களுக்கும் ’ஒலித்தல்’ என்பதே பொருள்; ஆனால் நான்கும் ஒரே ஒலியைக் குறிப்பனவல்ல! தொடரில் சுட்டப்படும் ஒலியைத்தான் குறிக்கும்!

இந் நான்கு உரிச்சொற்களையும் காண்போம்!

1. ‘துவைத்தல்’

‘துவைத்தல்’ என்றால் நமக்குத் துணி துவைப்பதுதான் தெரியும்! ஆனால், இதற்கு நுட்பமான ஒலிப்பொருள் (இதுவே ‘இசைப்பொருள்’) ஒன்று இருப்பதைத் தொல்காப்பியரின் உரியியல் காட்டுகிறது!
‘துவைத்த’லுக்கு ஓசைப்பொருள் இருப்பதற்கு இளம்பூரணரின் எடுத்துக்காட்டு –
‘வரிவளை துவைப்ப என்றக்கால், சங்கு இசைப்ப என்பதாம்’.
வரிவளை – சங்கு

2 . ‘சிலைத்தல்’
‘சிலைத்தல்’ என்றால், ஏதோ சிலை செய்யும் சிற்ப ஆச்சாரி பணி என்பதுபோலத்தான் நாம் நினைப்போம்! ஆனால், இதற்கும் ’ஒலிக்கும்’ எனும் ஓர் உரிப்பொருள் இருப்பதை மேல் தொல்காப்பியர் நூற்பாவிற் பார்த்தோம்!

‘சிலைத்தல்’ எனும் உரிச்சொல்லுக்கு ஓசைப்பொருள் இருப்பதற்கு இளம்பூரணர் தந்த எடுத்துக்காட்டு –
‘கலையி னிரலை சிலைப்ப என்றக்கால், அதனது குரலிசைப்பச் சொல்லிற்றாம்’.
கலை – ஆண் மான் ; இரலை – புல்வாய் (மான் வகை)

3 . ‘இயம்பல்’
‘இயம்பல்’ என்றால் ‘சொல்லுதல்’ என்ற பொருள் நாமறிந்தது; ‘தமிழறிஞர் எடுத்தியம்பினார்’ .
இதற்கு ஒலிப்பொருண்மை ஒன்று இருப்பதற்கு இளம்பூரணர் எடுத்துக்காட்டு _
‘இயமரம் இயம்பும் எனவே ஒலிக்கும் என்பதாம்.’
இயமரம் - வாத்தியம்

4 . ‘இரங்கல்’
’இரங்கல்’ என்றால் , இரக்கப்படுதல் என்பது நாம் அறிந்தது!
‘இரங்கல்’ , உரிச்சொல்லாகும் போது, ஓசைப்பொருண்மை கொண்டு வரும்; இதற்கு இளம்பூரணர் எடுத்துக்காட்டு –
‘முரஞ்சிரங்கு முற்றம் என்றக்கால், இசைக்கும் என்பதாம்’ .
முரஞ்சிரங்கு முற்றம் – முரஞ்சு ஒலிக்கும் முற்றம்

இதே உரிச்சொல்லுக்கு நச்சினார்க்கினியரின் எடுத்துக்காட்டு –
‘கடிமனை இயம்ப’ (புறம். 36)
கடிமனை இயம்ப – அரண்மனையில் ஒலிக்க

அடுத்த நூற்பாவில் , இதே உரிச்சொல்லான ‘இரங்கல்’ என்பதற்கு ‘கழிவு’ப் பொருளும் உண்டு என்கிறார் தொல்காப்பியர்:

அவற்று
ளிரங்கல் கழிந்த பொருட்டு மாகும் (உரி. 62)

இதற்குச் சேனாவரையர் எடுத்துக்காட்டு –
‘செய்திரங்கா வினை’ (புறம். 10)
செய்திரங்கா வினை -ஒரு தீய செயலைச் செய்துவிட்டு , ‘அடடா ! தவறு செய்துவிட்டோமே’என்றெல்லாம் பின்னே வருந்தாத செய்கை.
‘இரங்கல்’ எனும் உரிச்சொல்லானது ‘கழிவு’ப் பொருளை உணர்த்தும்போது, இசைப்பொருண்மை சுட்டாது; குறிப்புப் பொருண்மையே சுட்டும்.

அடுத்ததாக , ‘இலம்பாடு’, ‘ஒற்கம்’ எனும் இரு உரிச்சொற்கள்!:-

இலம்பா டொற்க மாயிரண்டும் வறுமை (உரி. 63)

‘இலம்பாடு’, ‘ஒற்கம்’ – இரண்டுமே ‘வறுமை’ எனும் பொருளன. இரண்டுமே குறிப்புப் பொருள் உணர்த்துவன.

‘இலம்பாடு’ எனும் சொல்லானது, ‘இல்லை’ என்பது போன்ற பொருளைத் தருவது என்றுதான் நாம் நினைக்கிறோம்;ஆனால், இஃது ஓர் உரிச்சொல் என்றும் , இதன் பொருள் ‘வறுமை’ எனவும் நவில்கிறார் தொல்காப்பியர்! இதற்கு இளம்பூரணரின் மேற்கோள் –
‘இலம்படு புலவர்’ (மலைபடு. 576) என்றக்கால், வறுமைப்படும் புலவர் என்பதாம்.
திருக்குறள் (414) மூலமாக , ‘ஒற்கம்’ என்றால், ‘தளர்ச்சி’ என்பதை நாம் அறிந்துள்ளோம் ; ஆனால், ‘வறுமை’ப் பொருளையும் தருகிறது இச் சொல் என்று மேலை நூற்பாவில் தொல்காப்பியர் நவின்றுள்ளார்.
ஒற்கம் (பெயர்ச்சொல்) – தளர்ச்சி
ஒற்கம் (உரிச்சொல்) – வறுமை

‘ஒற்கம்’ , வறுமையைக் குறிக்க இளம்பூரணரின் எடுத்துக்காட்டு –
‘ஊரை ஒற்கம் தீர்க்கும் என்றக்கால், வறுமை தீர்க்கும் என்பதாம்.
தீர்க்கும் – அழிக்கும்
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9751
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 6 Empty Re: தொல்காப்பிய இலக்கணம் (619)

Post by T.N.Balasubramanian Fri May 20, 2022 8:30 am

துவைத்தல்’, ‘சிலைத்தல்’, ‘இயம்பல்’, ‘இரங்கல்’ – இந்த நான்கு உரிச்சொற்களுக்கும் ’ஒலித்தல்’ என்பதே பொருள்; ஆனால் நான்கும் ஒரே ஒலியைக் குறிப்பனவல்ல! தொடரில் சுட்டப்படும் ஒலியைத்தான் குறிக்கும்!

உதாரணங்களுடன் விளக்கியதற்கு  :வணக்கம்: :வணக்கம்:



[You must be registered and logged in to see this link.]


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 6 Empty Re: தொல்காப்பிய இலக்கணம் (619)

Post by Dr.S.Soundarapandian Fri May 20, 2022 3:05 pm

நன்றி இரமணியன் அவர்களே!

புரிந்துகொள்ளும் உங்கள் திறன் அபாரம்! மற்றவர்களுக்கு முன்மாதிரி!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9751
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 6 Empty தொல்காப்பிய இலக்கணம் (618)

Post by Dr.S.Soundarapandian Thu Jun 02, 2022 12:51 pm

தொல்காப்பிய இலக்கணம் (618)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

அடுத்த உரியியல் நூற்பா:
ஞெமிர்தலும் பாய்தலும் பரத்தற் பொருள (உரி. 64)

நூற்பா குறிக்கும் உரிச்சொற்கள் , 1. ஞெமிர்தல் 2. பாய்தல்
இரண்டு உரிச்சொற்களுக்கும் பொருள் - ‘பரத்தல்’ (spreading)

ஞெமிர்தல் (பெயர்ச்சொல்) – ஒடிதல் (செ.ப.த.பே. அகராதி)
ஞெமிர்தல் (உரிச்சொல்) – பரத்தல்

‘ஞெமிர்த’லுக்குப் ‘பரத்தல்’ எனும் பொருள் இருப்பதை இளம்பூரணர் இப்படிக் கூறுகிறார்-
தண்பெரும் பந்தர்த் தருமணன் ஞெமிரிய (நற். 143) என்றக்கால், பரப்பிய என்பதாம்.
தண்பெரும் – குளிர்ந்த பெரிய
பந்தர் – பந்தல்
தருமணல் – கொண்டுவந்து சேர்த்த மணல் (மணல் + ஞெமிரிய = மணன் ஞெமிரிய)
ஞெமிரிய – பரப்பிய

இப்போது – ‘பாய்தல்’
‘பாய்தல்’ என்றதும், புலியின் பாய்ச்சல் நமக்கு நினைவுக்கு வருகிறது!
ஆனால், இதே ‘பாய்த’லுக்குப் பரத்தற் பொருள் இருப்பதை மேல் நூற்பாவிற் கண்டோம்.இதற்கான இளம்பூரணர் விளக்கத் தொடர்-
‘புண்ணுமிழ் குருதிப் புனல் பாய்ந்து என்றக்கால், பரந்து என்பதாம்’ .
‘இரத்தப் பெருக்கு, புண்ணிலிருந்து வந்து பரவியது’ என்பது பொருள்.

‘ஞெமிர்தல்’, ‘பாய்தல்’ – இரண்டும் குறிப்புப் பொருள் உணர்த்துவன.

தொடரும் உரிச்சொல், ‘கவர்வு’.:-

கவர்வு விருப்பாகும் (உரி. 65)

‘கவர்வு’ என்றதும், பொருளைக் கவர்ந்துகொள்ளலே நினைவுக்கு வருகிறது! ஆனால் , இதற்கு ‘விருப்பு’ எனும் ஓர் உரிப்பொருள் உள்ளது என மேலை நூற்பா தெரிவிக்கிறது!
‘கவர்வு’ , விருப்புப் பொருள் தருவதற்கு இளம்பூரணர் காட்டிய எடுத்துக்காட்டு-
‘கொள்ளை மாந்தரின் ஆனாது கவரும்’ (அகம். 3) என்றக்கால்,விரும்பும் என்பதாம்.
கொள்ளை மாந்தர் – கள்வர் ; ஆனாது - ஒழியாது

‘கவர்வு’ , விருப்புப் பொருள் தருவதற்குத் தெய்வச்சிலையார் தந்த எடுத்துக்காட்டு-
‘கவர்நடைப் புரவி’ (அகம்.130)
கவர்நடைப் புரவி – விருப்பத்தைத் தருகிற நடையை உடைய குதிரை
கவர்வு – குறிப்புப் பொருள் நல்கிற்று.

தொடரும் உரிச்சொல் – ‘சேர்’:

சேரே திரட்சி (உரி. 66)

சேர் + ஏ = சேரே
சேர் – உரிச்சொல்; ஏ - இடைச்சொல்

‘சேர்’ என்றதும் ‘அங்குபோய்ச் சேர்’, ‘பள்ளியிற் சேர்’ என்பன போன்ற பொருண்மைகளே நாம் அறிந்தது!
ஆனால், ‘சேர்’ எனும் உரிச்சொல்லுக்குத் ‘திரட்சி’ எனும் பொருள் இருப்பதை மேல் நூற்பா வழிக் கண்டோம்!

‘சேர்’ எனும் உரிச்சொல்லுக்குத் ‘திரட்சி’ எனும் குறிப்புப் பொருள் இருப்பதை வரும் இளம்பூரணரின் எடுத்துக்காட்டால் தெளியலாம்:
‘சேர்ந்து செறிகுறங்கு (நற். 170) என்றக்கால், திரண்டு செறிகுறங்கு என்பதாம்’.
சேர்ந்து – திரண்டு ; செறி – செறிந்த ; குறங்கு – தொடை
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9751
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 6 Empty தொல்காப்பிய இலக்கணம் (619)

Post by Dr.S.Soundarapandian Thu Jun 09, 2022 12:21 pm

தொல்காப்பிய இலக்கணம் (619)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

அடுத்த உரிச்சொல் – ‘வியல்’:

வியலென் கிளவி யகலப் பொருட்டே (உரி. 67)

வியல் – உரிச்சொல் ; இதன் பொருள் – அகலம் ; இது குறிப்புப் பொருள்.

‘வியல்’ எனும் உரிச்சொல்லுக்கு ‘அகலம்’ எனும் உரிப்பொருள் இருப்பதற்கு இளம்பூரணர் கொடுத்த எடுத்துக்காட்டுத் தொடர்:
‘வியலிரு வானம் என்றக்கால், அகலிருவானம் என்பதாம்’.
இருவானம் = இரு + வானம்
இரு - பெரிய

‘வியல்’ எனும் உரிச்சொல்ல்லுக்கு ‘அகலம்’ எனும் உரிப்பொருள் இருப்பதற்குத் தெய்வச்சிலையார் கொடுத்த சான்று: ‘வியலுகம்’
வியலுலகம் – அகன்ற உலகம்

தொடரும் உரிச்சொற்கள் மூன்று- ‘பே’, ‘நாம்’, ‘உரும்’ :

பேநா முருமென வரூஉங் கிளவி
யாமுறை மூன்று மச்சப் பொருள (உரி. 68)

மேற் சொன்ன மூன்று உரிச்சொற்களும் ‘அச்சம்’ எனும் பொருள் நல்குவன;
மூன்றும் அச்சமாகிய குறிப்புப்பொருள் கொடுப்பன.

‘பே’ எனும் உரிச்சொல்லுக்கு ‘அச்ச’ப் பொருள் இருப்பதற்கு இளம்பூரணரின்
எடுத்துக்காட்டுத் தொடர் –
‘மன்ற மராஅத்த பேமுதிர் கடவுள் (குறுந்.87) என்பது அச்சம் முதிர் கடவுள் என்பதாம்.
மன்ற மராஅத்த பேமுதிர் கடவுள் – ஊரிலுள்ள பொது மன்றத்தில் உள்ள மராமரத்தின் கீழே உள்ள அச்சம் தரும் கடவுள்.

‘நாம்’ எனும் உரிச்சொல்லுக்கு ‘அச்சம்’ என்ற பொருள் இருப்பதற்கு இளம்பூரணர் காட்டிய தொடர்-
‘நாம்வருந் துறை சேர்ந்து என்பது அச்சமுடைய துறை போந்து என்பதாம்.’
போந்து – சேர்ந்து

‘உரும்’ என்னும் உரிச்சொல்லுக்கு ‘அச்ச’ப் பொருள் இருப்பதற்கு இளம்பூரணர் காட்டிய தொடர்-
’உருமில் சுற்றம்’ (பெரும்பாண். 447) என்பது அச்சமில் சுற்றம் என்பதாம்.
சுற்றம் – உறவினர்

சுவடியியல் (manuscriptology)நோக்கில் , இங்கே சிறிது ஆய இடம் உள்ளது.
பே – இளம்பூரணர் , சேனாவரையர் கொண்ட பாடம்
பேஎ – தெய்வச்சிலையார் கொண்ட பாடம்
பேம் – நச்சர் கொண்ட பாடம்

செய்யுளில் இசை இன்பத்திற்காக ‘எ’ எனும் அளபெடை சேர்த்தது(குறுந். 87), உரிச்சொல்லின் பாடமாகவும் ஆகியுள்ளது!

தொடரும் உரிச்சொல் – ‘வய’:-

வய வலியாகும் (உரி. 69)

வய (உரிச்சொல்) – வலிமை
‘வய’ என்றதும், ஏதோ வயப்படுத்துவது (வசப்படுத்துவது) தொடர்பான பொருள் இருக்கும் என்று நினைத்தோம்! ஆனால், இதற்கு ‘வலிமை’ என்றொரு உரிப்பொருள் இருப்பதைத் தொல்காப்பியம் கூறுகிறது!
‘வய’வுக்கு ‘வலிமை’ப் பொருள் இருப்பதை , இளம்பூரணர் வருமாறு காட்டுகிறார்:
’வாள்வரி வேங்கை வயப்புலி (அகம். 69) என்பது, வலியுள்ள புலி என்பதாம்’.
வாள்வரி – ஒளியுள்ள கோடுகள்
வேங்கை – புலியில் ஒரு வகை (Felis tigris)

வலிமை – குறிப்புப் பொருள்
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9751
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 6 Empty Re: தொல்காப்பிய இலக்கணம் (619)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum