புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிருகுநந்தி நாடி & சப்தரிஷி நாடி
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
வாழ்க வளமுடன்
அனைவருக்கும் வணக்கம்
இங்கு பிருகு நந்தி நாடி மற்றும் சப்த ரிஷி நாடி ஆகிய ஜோதிட முறைகளைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்
பிருகு நந்தி நாடி
பிருகு நந்தி நாடியில் கிரகங்களின் காரகதத்துவம், கிரகங்கள் நின்ற ராசியின் காரகதத்துவம் இவை இரண்டின் அடிப்படையிலேயே ஒரு ஜாதகப் பலன் நிர்ணயிக்கப் படுகிறது. கிரகங்களின் ஆதிபத்தியம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.
பராசரர் முறை(பாரம்பரிய ஜோதிட முறை)யில் உள்ளதுபோல, பிருகு நந்தி நாடியில், கிரகங்களில் இயற்கை சுபர், இயற்கை பாவி என்ற பாகுபாடு இல்லை. நவகிரகங்கள் அனைத்தும் சுபம் அசுபம் இரண்டும் கலந்ததே. அந்தந்த கிரகங்களுடன் சேர்ந்த கிரகங்களைப் பொருத்தே அவற்றின் தன்மை வேறுபடுகிறது.
கிரக காரகத்துவங்களில் ஒரு சில விஷயங்களைத் தவிர மற்ற அனைத்தும் பராசரர் முறை(பாரம்பரிய ஜோதிட முறை)யில் உள்ளபடியே எடுத்துக்கொள்ளப் படுகிறது.
உதாரணமாக பாரம்பரிய ஜோதிடத்தில் ஆண், பெண் இருபாலருக்கும் வாழ்க்கைத் துணையை குறிக்கும் கிரகம் சுக்கிரன் ஒருவரே.
ஆனால் நாடி முறையில் ஆணுக்கு சுக்கிரன், பெண்ணுக்கு செவ்வாய் என்று எடுத்துக்கொள்ளப் படுகிறது. இப்படி மாறுபடக்கூடிய விஷயங்களை அவ்வப்போது குறிப்பிடப்படும்.
சப்தரிஷி நாடி
சப்த ரிஷி நாடியில் பிருகு நந்தி நாடியில் உள்ளது போலவே கிரகங்களின் காரகதத்துவம், கிரகங்கள் நின்ற ராசியின் காரகதத்துவம் இவற்றுடன் கிரகங்களின் ஆதிபத்தியங்களையும் எடுத்துக்கொள்ளப் படுகிறது.
பிருகு நந்தி நாடி சப்தரிஷி நாடி இரண்டு முறைகளுக்கும் உள்ள வித்தியாசம், பிருகு நந்தி நாடியில் கிரகங்களின் ஆதிபத்தியங்கள் எடுத்துக்கொள்ளப் படுவதில்லை. சப்த ரிஷி நாடியில் கிரகங்களின் ஆதிபத்தியங்கள் எடுத்துக்கொள்ளப் படுகின்றன.
உதாரணமாக ஒரு பெண்ணின் திருமண யோகத்தைப் பற்றி ஆய்வு செயும்போது பிருகு நந்தி நாடியில் செவ்வாயையும் அதனுடன் சேர்க்கை பெற்ற கிரகங்களையும் எடுத்துக்கொள்ளப்படும்.
ஆனால் சப்தரிஷி நாடியில் ஏழாம் அதிபதி மற்றும் செவ்வாய் ஆகிய இரண்டையும் அவற்றுடன் சேர்க்கை பெற்ற கிரகங்களையும் எடுத்துக்கொள்ளப் படும்.
மேற்படி இரண்டு முறைகளுக்கும் பிருகு நந்தி நாடி விதிகளே அடிப்படையானது.
இனி பிருகு நந்தி நாடியின் அடிப்படை விதிகளையும் அவற்றிற்கான விளக்கங்களையும் பற்றி பார்க்கலாம்.
பிருகு நந்தி நாடி விதிகள் :
விதி 1 : நாம் ஆய்வு செய்யக் கூடிய ஜாதகத்தில் ராசிக்கட்டத்தில், ஒரே ராசியில் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் இருந்தால் அந்த கிரகங்களை பாத சார அடிப்படையில் வரிசைப்படுத்தி அந்தந்த ராசியில் குறித்துக் கொள்ள வேண்டும். சில கிரகங்கள் தனித்தும் இருக்கலாம், அவர்கள் நின்ற நட்சத்திர பாதம் என்ன என்பதையும் குறித்துக்கொள்ள வேண்டும்.
முக்கியமான குறிப்பு : ஒவ்வொரு கிரகமும் அந்தந்த ராசியில் எத்தனையாவது பாதத்தில் உள்ளது என்பதை குறித்துக்கொள்ள வேண்டும். ஒரு ராசிக்கு ஒன்பது பாதங்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
உதாரணமாக கீழ்க்கண்ட ஜாதகத்தைப் பாருங்கள். இது ஒரு ஆண் ஜாதகம்.
மேற்படி ஜாதகத்தில் மீனத்தில் புதனும் கேதுவும் இருக்கிறார்கள், இவர்களில் புதன் ரேவதி 2 லும் (மீனத்தில் 7-ம் பாதத்திலும்), கேது உத்திரட்டாதி 3 லும் (மீனத்தில் 4-ம் பாதத்திலும்) இருக்கிறார்கள். அதாவது மீனத்தில் முதலில் கேதுவும் இரண்டாவதாக புதனும் இருக்கிறார்கள். ஆனால் ஜாதகத்தில் முதலில் புதன் பிறகு கேது என்று இருக்கிறது.
மேஷத்தில் சூரியன் அசுவனி 2 லும் (மேஷத்தில் 2 ம் பாதத்திலும்), சுக்கிரன் கார்த்திகை 1லும் (மேஷத்தில் 9 ம் பாதத்திலும்) இருக்கிறார்கள். அதாவது முதலில் சூரியன் பிறகு சுக்கிரன் இருக்கிறார்கள். ஜாதகத்திலும் சரியாகவே குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மிதுனத்தில் குரு திருவாதிரை 1 ல் (மிதுனத்தில் 3 ம் பாதத்தில்) இருக்கிறார்.
கடகத்தில் செவ்வாய் பூசம் 3 ல் (கடகத்தில் 4 ம் பாதத்தில்) இருக்கிறார்.
சிம்மத்தில் சனி மகம 1 ல் (சிம்மத்தில் 1 ம் பாதத்தில்) இருக்கிறார்.
கண்ணியில் சந்திரன் உத்திரம் 2 ம் பாதத்திலும் (கண்ணியில்ல் 1 ம் பாதத்திலும்) ராகு அஸ்தம் 1 ம் பாதத்திலும் (கண்ணியில்ல் 4 ம் பாதத்திலும்) உள்ளார்கள். அதாவது முதலில் சந்திரன் பிறகு ராகு இருக்கிறார்கள். ஜாதகத்திலும் சரியாகவே குறிப்பிடப்பட்டிருகிறது.
இந்த ஜாதகம் கீழ்க்கண்டபடி அமையும்
இரண்டாம் விதியை அடுத்த பதிவில் பார்க்கலாம்.
குறிப்பு : மேற்படி விஷயங்களிலோ இனி வரும் பதிவுகளிலோ சந்தேகம் ஏற்பட்டால் உங்கள் சந்தேகங்களை பதிவு செய்யவும். எனக்குத் தெரிந்த வரை விளக்கம் தருகிறேன்.
அனைவருக்கும் வணக்கம்
இங்கு பிருகு நந்தி நாடி மற்றும் சப்த ரிஷி நாடி ஆகிய ஜோதிட முறைகளைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்
பிருகு நந்தி நாடி
பிருகு நந்தி நாடியில் கிரகங்களின் காரகதத்துவம், கிரகங்கள் நின்ற ராசியின் காரகதத்துவம் இவை இரண்டின் அடிப்படையிலேயே ஒரு ஜாதகப் பலன் நிர்ணயிக்கப் படுகிறது. கிரகங்களின் ஆதிபத்தியம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.
பராசரர் முறை(பாரம்பரிய ஜோதிட முறை)யில் உள்ளதுபோல, பிருகு நந்தி நாடியில், கிரகங்களில் இயற்கை சுபர், இயற்கை பாவி என்ற பாகுபாடு இல்லை. நவகிரகங்கள் அனைத்தும் சுபம் அசுபம் இரண்டும் கலந்ததே. அந்தந்த கிரகங்களுடன் சேர்ந்த கிரகங்களைப் பொருத்தே அவற்றின் தன்மை வேறுபடுகிறது.
கிரக காரகத்துவங்களில் ஒரு சில விஷயங்களைத் தவிர மற்ற அனைத்தும் பராசரர் முறை(பாரம்பரிய ஜோதிட முறை)யில் உள்ளபடியே எடுத்துக்கொள்ளப் படுகிறது.
உதாரணமாக பாரம்பரிய ஜோதிடத்தில் ஆண், பெண் இருபாலருக்கும் வாழ்க்கைத் துணையை குறிக்கும் கிரகம் சுக்கிரன் ஒருவரே.
ஆனால் நாடி முறையில் ஆணுக்கு சுக்கிரன், பெண்ணுக்கு செவ்வாய் என்று எடுத்துக்கொள்ளப் படுகிறது. இப்படி மாறுபடக்கூடிய விஷயங்களை அவ்வப்போது குறிப்பிடப்படும்.
சப்தரிஷி நாடி
சப்த ரிஷி நாடியில் பிருகு நந்தி நாடியில் உள்ளது போலவே கிரகங்களின் காரகதத்துவம், கிரகங்கள் நின்ற ராசியின் காரகதத்துவம் இவற்றுடன் கிரகங்களின் ஆதிபத்தியங்களையும் எடுத்துக்கொள்ளப் படுகிறது.
பிருகு நந்தி நாடி சப்தரிஷி நாடி இரண்டு முறைகளுக்கும் உள்ள வித்தியாசம், பிருகு நந்தி நாடியில் கிரகங்களின் ஆதிபத்தியங்கள் எடுத்துக்கொள்ளப் படுவதில்லை. சப்த ரிஷி நாடியில் கிரகங்களின் ஆதிபத்தியங்கள் எடுத்துக்கொள்ளப் படுகின்றன.
உதாரணமாக ஒரு பெண்ணின் திருமண யோகத்தைப் பற்றி ஆய்வு செயும்போது பிருகு நந்தி நாடியில் செவ்வாயையும் அதனுடன் சேர்க்கை பெற்ற கிரகங்களையும் எடுத்துக்கொள்ளப்படும்.
ஆனால் சப்தரிஷி நாடியில் ஏழாம் அதிபதி மற்றும் செவ்வாய் ஆகிய இரண்டையும் அவற்றுடன் சேர்க்கை பெற்ற கிரகங்களையும் எடுத்துக்கொள்ளப் படும்.
மேற்படி இரண்டு முறைகளுக்கும் பிருகு நந்தி நாடி விதிகளே அடிப்படையானது.
இனி பிருகு நந்தி நாடியின் அடிப்படை விதிகளையும் அவற்றிற்கான விளக்கங்களையும் பற்றி பார்க்கலாம்.
பிருகு நந்தி நாடி விதிகள் :
விதி 1 : நாம் ஆய்வு செய்யக் கூடிய ஜாதகத்தில் ராசிக்கட்டத்தில், ஒரே ராசியில் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் இருந்தால் அந்த கிரகங்களை பாத சார அடிப்படையில் வரிசைப்படுத்தி அந்தந்த ராசியில் குறித்துக் கொள்ள வேண்டும். சில கிரகங்கள் தனித்தும் இருக்கலாம், அவர்கள் நின்ற நட்சத்திர பாதம் என்ன என்பதையும் குறித்துக்கொள்ள வேண்டும்.
முக்கியமான குறிப்பு : ஒவ்வொரு கிரகமும் அந்தந்த ராசியில் எத்தனையாவது பாதத்தில் உள்ளது என்பதை குறித்துக்கொள்ள வேண்டும். ஒரு ராசிக்கு ஒன்பது பாதங்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
உதாரணமாக கீழ்க்கண்ட ஜாதகத்தைப் பாருங்கள். இது ஒரு ஆண் ஜாதகம்.
மேற்படி ஜாதகத்தில் மீனத்தில் புதனும் கேதுவும் இருக்கிறார்கள், இவர்களில் புதன் ரேவதி 2 லும் (மீனத்தில் 7-ம் பாதத்திலும்), கேது உத்திரட்டாதி 3 லும் (மீனத்தில் 4-ம் பாதத்திலும்) இருக்கிறார்கள். அதாவது மீனத்தில் முதலில் கேதுவும் இரண்டாவதாக புதனும் இருக்கிறார்கள். ஆனால் ஜாதகத்தில் முதலில் புதன் பிறகு கேது என்று இருக்கிறது.
மேஷத்தில் சூரியன் அசுவனி 2 லும் (மேஷத்தில் 2 ம் பாதத்திலும்), சுக்கிரன் கார்த்திகை 1லும் (மேஷத்தில் 9 ம் பாதத்திலும்) இருக்கிறார்கள். அதாவது முதலில் சூரியன் பிறகு சுக்கிரன் இருக்கிறார்கள். ஜாதகத்திலும் சரியாகவே குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மிதுனத்தில் குரு திருவாதிரை 1 ல் (மிதுனத்தில் 3 ம் பாதத்தில்) இருக்கிறார்.
கடகத்தில் செவ்வாய் பூசம் 3 ல் (கடகத்தில் 4 ம் பாதத்தில்) இருக்கிறார்.
சிம்மத்தில் சனி மகம 1 ல் (சிம்மத்தில் 1 ம் பாதத்தில்) இருக்கிறார்.
கண்ணியில் சந்திரன் உத்திரம் 2 ம் பாதத்திலும் (கண்ணியில்ல் 1 ம் பாதத்திலும்) ராகு அஸ்தம் 1 ம் பாதத்திலும் (கண்ணியில்ல் 4 ம் பாதத்திலும்) உள்ளார்கள். அதாவது முதலில் சந்திரன் பிறகு ராகு இருக்கிறார்கள். ஜாதகத்திலும் சரியாகவே குறிப்பிடப்பட்டிருகிறது.
இந்த ஜாதகம் கீழ்க்கண்டபடி அமையும்
இரண்டாம் விதியை அடுத்த பதிவில் பார்க்கலாம்.
குறிப்பு : மேற்படி விஷயங்களிலோ இனி வரும் பதிவுகளிலோ சந்தேகம் ஏற்பட்டால் உங்கள் சந்தேகங்களை பதிவு செய்யவும். எனக்குத் தெரிந்த வரை விளக்கம் தருகிறேன்.
மனதோடு கோபம நீ வளர்த்தாலும் பாவம்
மெய்யான அன்பே தெய்வீகம் ஆகும்.
நாளை உயிர் போகும் இன்று போனாலும்
கொள்கை நிறைவேற்று.
விதி 2 : ஒரே ராசியில் உள்ள கிரகங்களை சேர்க்கை பெற்ற கிரகங்களாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
மேற்படி உதாரண ஜாதகத்தில் மேஷத்தில் சூரியன் சுக்கிரனுடன் இணைவு பெற்றதாக கருத வேண்டும். அதே சமயம் சூரியன் சுக்கிரனோடு ஒரே ராசியில் இணைவு பெற்றிருந்தாலும் சூரியனுடைய பாதிப்பு சுக்கிரனுக்கு முழுமையாக இருக்காது.
சுக்கிரனுடைய பாதிப்புதான் சூரியனுக்கு முழுமையாக இருக்கும்.
காரணம் : சூரியன் சுக்கிரனை நோக்கி நகர்கிறது. சுக்கிரன் சூரியனிலிருந்து விலகிச் செல்கிறது.
கண்ணியில் ராகு சந்திரன் இரண்டு கிரகங்களும் ஒன்றுக்கொன்று இணைவு பெறுகிறது
காரணம் : ராகு ராசி சக்கரத்தில் எதிர் திசையில் சுற்ற்க்கூடியது. எனவே சந்திரன் ராகுவை நோக்கியும், ராகு சந்திரனை நோக்கியும் நகர்வதால் ஒன்றையொன்று இணைகிறது.
மீனத்தில் கேதுவும் புதனும் ஒரே ராசியில் இருந்தாலும் இணைவு பெற்றதாகக் கருத முடியாது.
காரணம் : கேது மகரத்தை நோக்கியும் புதன் மேஷத்தை நோக்கியும் செல்கின்றனர். ஒருவரையருவர் விலகிச் செல்கின்றனர். (ஆனால் இதற்கும் பலன் உண்டு பலன் பற்றி பிறகு பார்ப்போம்.)
மேற்படி உதாரண ஜாதகத்தில் மேஷத்தில் சூரியன் சுக்கிரனுடன் இணைவு பெற்றதாக கருத வேண்டும். அதே சமயம் சூரியன் சுக்கிரனோடு ஒரே ராசியில் இணைவு பெற்றிருந்தாலும் சூரியனுடைய பாதிப்பு சுக்கிரனுக்கு முழுமையாக இருக்காது.
சுக்கிரனுடைய பாதிப்புதான் சூரியனுக்கு முழுமையாக இருக்கும்.
காரணம் : சூரியன் சுக்கிரனை நோக்கி நகர்கிறது. சுக்கிரன் சூரியனிலிருந்து விலகிச் செல்கிறது.
கண்ணியில் ராகு சந்திரன் இரண்டு கிரகங்களும் ஒன்றுக்கொன்று இணைவு பெறுகிறது
காரணம் : ராகு ராசி சக்கரத்தில் எதிர் திசையில் சுற்ற்க்கூடியது. எனவே சந்திரன் ராகுவை நோக்கியும், ராகு சந்திரனை நோக்கியும் நகர்வதால் ஒன்றையொன்று இணைகிறது.
மீனத்தில் கேதுவும் புதனும் ஒரே ராசியில் இருந்தாலும் இணைவு பெற்றதாகக் கருத முடியாது.
காரணம் : கேது மகரத்தை நோக்கியும் புதன் மேஷத்தை நோக்கியும் செல்கின்றனர். ஒருவரையருவர் விலகிச் செல்கின்றனர். (ஆனால் இதற்கும் பலன் உண்டு பலன் பற்றி பிறகு பார்ப்போம்.)
மனதோடு கோபம நீ வளர்த்தாலும் பாவம்
மெய்யான அன்பே தெய்வீகம் ஆகும்.
நாளை உயிர் போகும் இன்று போனாலும்
கொள்கை நிறைவேற்று.
விதி 3 ஒரே திசையை குறிக்கும் ராசிகளில் உள்ள கிரகங்கள் இணைவு பெற்று செயல்படும்.
ஒரே திசையை குறிக்கும் ராசிகள்
மேஷம், சிம்மம், தனுசு இம்மூன்று ராசிகளும் கிழக்கு திசையை குறிக்கும்
ரிஷபம், கண்ணி, மகரம் இம்மூன்று ராசிகளும் தெற்கு திசையை குறிக்கும்
மிதுனம், துலாம், கும்பம் இம்மூன்று ராசிகளும் மேற்கு திசையை குறிக்கும்
கடகம், விருச்சிகம், மீனம் இம்மூன்று ராசிகளும் வடக்கு திசையை குறிக்கும்
கிழக்கு ராசிகள் :
மேஷத்திற்கு ஐந்தாமிடம் சிம்மம், ஒன்பதாமிடம் தனுசு.
சிம்மத்திற்கு ஐந்தாமிடம் தனுசு, ஒன்பதாமிடம் மேஷம்.
தனுசுவிற்கு ஐந்தாமிடம் மேஷம், ஒன்பதாமிடம் சிம்மம்.
இப்படி ஒன்றுக்கொன்று திரிகோணமாக (1,5,9 ஆக) அமைகிறது
இதுபோலவே மற்ற திசைகளுக்கு உரிய ராசிகளும் அமையும்.
மேலும் ஒரே திசையில் உள்ள நட்சத்திர அதிபதிகள் ஒன்றாகவே அமைவார்கள்
மேஷத்தின் முதல் நட்சத்திரம் அசுவனி, சிம்மத்தின் முதல் நட்சத்திரம் மகம, தனுசுவின் முதல் நட்சத்திரம் மூலம் - ஆக கிழக்கு ராசிகளில் உள்ள நட்சத்திரங்களில் முதல் நட்சத்திரங்கள் கேதுவின் நட்சத்திரங்கள். இரண்டாவது நட்சத்திரங்கள் சுக்கிரனின் பரணி, பூரம், பூராடம், மூன்றாவதாக சூரியனின் நட்சத்திரங்களான கிருத்திகை, உத்திரம், உத்திராடம் இவற்றின் முதல் பாதம் என்று அமைந்திருக்கிறது.
இதுபோலவே மற்ற திசைகளை குறிக்கும் ரசிகளிலும் அமைந்திருக்கும்.
இப்பொழுது விதிக்கான விளக்கத்தைப் பார்ப்போம்.
அதாவது ஒரே திசையை குறிக்கும் ராசிகளில் உள்ள கிரகங்கள் இனைந்து செயல்படும்.
முன்பு காட்டப்பட்ட உதாரண ஜாதகத்தில் மேஷத்தில் சூரியனும் சுக்கிரனும், சிம்மத்தில் சனியும் இருக்கிறார்கள். தனுசுவில் யாரும் இல்லை
இப்பொழுது சூரியன், சுக்கிரன், சனி இமூவரும் இனைந்து செயல் படுவார்கள்
எப்படி?
கிழக்கு ராசிகளில் முதல் பாதத்தில் சனியும், சூரியன் இரண்டாம் பாதத்திலும், சுக்கிரன் ஒன்பதாம் பாதத்திலும் இருக்கிறார்கள். அதாவது சனி + சூரியன் + சுக்கிரன் என்ற வரிசைப்படி இயங்குவார்கள். (இதற்குரிய பலன் பற்றி பிறகு பார்ப்போம்)
தெற்கு ராசிகளில் ரிஷபத்தில் கிரகம் இல்லை, கண்ணியில் சந்திரன் ராகு, மகரத்தில் கிரகம் இல்லை எனவே தெற்கு ராசிகளில் சந்திரன் + ராகு என்ற வரிசைப்படி இயங்கும்
மேற்கு ராசிகளில் மிதுனத்தில் மட்டும் குரு இருக்கிறார்
வடக்கு ராசிகளில் கடகத்தில் செவ்வாய், விருச்சிகத்தில் கிரகம் இல்லை, மீனத்தில் புதன் கேது - அதாவது கேதுவும் செவ்வாயும் கேதுவும் நான்காம் பாதத்திலும், புதன் ஏழாம் பாதத்திலும் இருந்து- (செவ்வாய்,கேது) + புதன் என்ற வரிசையில் செயல்படுவார்கள்
மூன்றாம் விதி ஓரளவுக்கு புரிந்திருக்கும் என்று நபுகிறேன்.
நான்காம் விதி அடுத்த பதிவில்...
ஒரே திசையை குறிக்கும் ராசிகள்
மேஷம், சிம்மம், தனுசு இம்மூன்று ராசிகளும் கிழக்கு திசையை குறிக்கும்
ரிஷபம், கண்ணி, மகரம் இம்மூன்று ராசிகளும் தெற்கு திசையை குறிக்கும்
மிதுனம், துலாம், கும்பம் இம்மூன்று ராசிகளும் மேற்கு திசையை குறிக்கும்
கடகம், விருச்சிகம், மீனம் இம்மூன்று ராசிகளும் வடக்கு திசையை குறிக்கும்
கிழக்கு ராசிகள் :
மேஷத்திற்கு ஐந்தாமிடம் சிம்மம், ஒன்பதாமிடம் தனுசு.
சிம்மத்திற்கு ஐந்தாமிடம் தனுசு, ஒன்பதாமிடம் மேஷம்.
தனுசுவிற்கு ஐந்தாமிடம் மேஷம், ஒன்பதாமிடம் சிம்மம்.
இப்படி ஒன்றுக்கொன்று திரிகோணமாக (1,5,9 ஆக) அமைகிறது
இதுபோலவே மற்ற திசைகளுக்கு உரிய ராசிகளும் அமையும்.
மேலும் ஒரே திசையில் உள்ள நட்சத்திர அதிபதிகள் ஒன்றாகவே அமைவார்கள்
மேஷத்தின் முதல் நட்சத்திரம் அசுவனி, சிம்மத்தின் முதல் நட்சத்திரம் மகம, தனுசுவின் முதல் நட்சத்திரம் மூலம் - ஆக கிழக்கு ராசிகளில் உள்ள நட்சத்திரங்களில் முதல் நட்சத்திரங்கள் கேதுவின் நட்சத்திரங்கள். இரண்டாவது நட்சத்திரங்கள் சுக்கிரனின் பரணி, பூரம், பூராடம், மூன்றாவதாக சூரியனின் நட்சத்திரங்களான கிருத்திகை, உத்திரம், உத்திராடம் இவற்றின் முதல் பாதம் என்று அமைந்திருக்கிறது.
இதுபோலவே மற்ற திசைகளை குறிக்கும் ரசிகளிலும் அமைந்திருக்கும்.
இப்பொழுது விதிக்கான விளக்கத்தைப் பார்ப்போம்.
அதாவது ஒரே திசையை குறிக்கும் ராசிகளில் உள்ள கிரகங்கள் இனைந்து செயல்படும்.
முன்பு காட்டப்பட்ட உதாரண ஜாதகத்தில் மேஷத்தில் சூரியனும் சுக்கிரனும், சிம்மத்தில் சனியும் இருக்கிறார்கள். தனுசுவில் யாரும் இல்லை
இப்பொழுது சூரியன், சுக்கிரன், சனி இமூவரும் இனைந்து செயல் படுவார்கள்
எப்படி?
கிழக்கு ராசிகளில் முதல் பாதத்தில் சனியும், சூரியன் இரண்டாம் பாதத்திலும், சுக்கிரன் ஒன்பதாம் பாதத்திலும் இருக்கிறார்கள். அதாவது சனி + சூரியன் + சுக்கிரன் என்ற வரிசைப்படி இயங்குவார்கள். (இதற்குரிய பலன் பற்றி பிறகு பார்ப்போம்)
தெற்கு ராசிகளில் ரிஷபத்தில் கிரகம் இல்லை, கண்ணியில் சந்திரன் ராகு, மகரத்தில் கிரகம் இல்லை எனவே தெற்கு ராசிகளில் சந்திரன் + ராகு என்ற வரிசைப்படி இயங்கும்
மேற்கு ராசிகளில் மிதுனத்தில் மட்டும் குரு இருக்கிறார்
வடக்கு ராசிகளில் கடகத்தில் செவ்வாய், விருச்சிகத்தில் கிரகம் இல்லை, மீனத்தில் புதன் கேது - அதாவது கேதுவும் செவ்வாயும் கேதுவும் நான்காம் பாதத்திலும், புதன் ஏழாம் பாதத்திலும் இருந்து- (செவ்வாய்,கேது) + புதன் என்ற வரிசையில் செயல்படுவார்கள்
மூன்றாம் விதி ஓரளவுக்கு புரிந்திருக்கும் என்று நபுகிறேன்.
நான்காம் விதி அடுத்த பதிவில்...
மனதோடு கோபம நீ வளர்த்தாலும் பாவம்
மெய்யான அன்பே தெய்வீகம் ஆகும்.
நாளை உயிர் போகும் இன்று போனாலும்
கொள்கை நிறைவேற்று.
விதி 4 : ஒரு கிரகம் நின்ற ராசிக்கு எதிர் திசையை குறிக்கும் ராசிகளில் உள்ள கிரகங்களோடு இணைவு பெற்று செயல்படும் (3,7,11 - ல் உள்ள கிரகன்களோடு இணைவு பெறும்)
உதாரணமாக முதல் பதிவில் உள்ள உதாரண ஜாதகத்தில் மேஷத்தில் சூரியனும் சுக்கிரனும் இருக்கிறார்கள்.
மேஷம் கிழக்கு ராசி. கிழக்குக்கு எதிர் திசை மேற்கு. மேற்கு ராசிகள் மிதுனம், துலாம், கும்பம் ஆகியவை ஆகும்.
மிதுனத்தில் குரு இருக்கிறார். துலாத்திலும் கும்பத்திலும் கிரகங்கள் ஏதும் இல்லை. எனவே சூரியன் சுக்கிரன் இருவரும் குருவுடன் இணைவு பெற்று செயல் படுவார்கள்.
வடக்கு ராசிகளாகிய கடகத்தில் செவ்வாயும், மீனத்தில் புதன் கேது இருவரும் இருக்கிறார்கள்.விருச்சிகத்தில் யாரும் இல்லை.
வடக்குக்கு எதிர் திசையாகிய தெற்கு ராசிகளாகிய ரிஷபத்திலும் மகரத்திலும் கிரகங்கள் இல்லை. கண்ணியில் மட்டும் சந்திரன் ராகு இருவரும் இருக்கிறார்கள்.
எனவே செவ்வாய், புதன் கேது மூவரும் சந்திரன் ராகு வுடன் இணைவு பெற்று செயல் படுவார்கள்.
விதி 5 : கிரகம் நின்ற ராசிக்கு முன் பின் ராசிகளில் உள்ள கிரகங்களோடும் இணைவு பெற்று செயல்படும். அதாவது 2, 12 - ல் உள்ள கிரகங்களோடு இணைவு பெற்று செயல்படும்.
கடகத்தில் உள்ள செவ்வாய், மிதுனத்தில் உள்ள குரு, சிம்மத்தில் உள்ள சனி இருவரோடும் இனைந்து செயல் படுவார்.
சிம்மத்தில் உள்ள சனி, கடகத்தில் உள்ள செவ்வாய், கண்ணியில் உள்ள சந்திரன் ரகு உடன் இணைந்து செயல் படுவார்.
குறிப்பு: இதுவரை நாம் பார்த்த 5 விதிகளின் சுருக்கம்.
1. கிரகங்களை பாதசார அடிப்படையில் வரிசைப் படுத்திக் கொள்ளவேண்டும்
2. ஒரே ராசியில் உள்ள கிரகங்கள் இனைந்து செயல்படும்.
3. ஒரே திசையை குறிக்கும் ராசிகளில் உள்ள கிரகங்கள் இணைவுபெற்று செயல்படும்.
அதாவது ஒரு கிரகம் தனக்கு 5,9 ல் உள்ள கிரகங்களோடு இணைவு பெற்று செயல்படும்
4. எதிர் திசை ராசிகளில் உள்ள கிரகங்களோடு இணைவு பெறும்.
அதாவது 3,7,11 ல் உள்ள கிரகங்களோடு இணைவு பெறும்
5. முன்பின் ராசிகளில் உள்ள கிரகங்களோடு இணைவு பெறும்
அதாவது 2,12 ல் உள்ள கிரகங்களோடு இணைவு பெறும்.
சிறப்பு குறிப்பு:
1) ஒரு கிரகத்தோடு சேர்ந்து நின்ற கிரகங்களும், 5,9 ல் உள்ள கிரகங்களும் சேர்ந்து செயல்படும்போது 100 சதவீதம் பாதிப்பை தரும். (பாதிப்பு என்பது நல்லவிதமாகவும் இருக்கலாம், தீய விதமாகவும் இருக்கலாம். நன்மை தீமையை நிர்ணயம் செவது பற்றி பிறகு பார்க்கலாம்)
2) 7 மிடத்து கிரகம் 80 சதவீதமும் 3,11 மிட கிரகங்கள் 50 சதவீதமும் செயல்படும்
3) 2 மிடத்து கிரகம் 100 சதவீதமும் 12 மிடத்து கிரகம் 40சதவீதமும் செயல் படும்
மேலும் சில சிறப்பு விதிகளை அடுத்தடுத்த பதிவுகளில்....
உதாரணமாக முதல் பதிவில் உள்ள உதாரண ஜாதகத்தில் மேஷத்தில் சூரியனும் சுக்கிரனும் இருக்கிறார்கள்.
மேஷம் கிழக்கு ராசி. கிழக்குக்கு எதிர் திசை மேற்கு. மேற்கு ராசிகள் மிதுனம், துலாம், கும்பம் ஆகியவை ஆகும்.
மிதுனத்தில் குரு இருக்கிறார். துலாத்திலும் கும்பத்திலும் கிரகங்கள் ஏதும் இல்லை. எனவே சூரியன் சுக்கிரன் இருவரும் குருவுடன் இணைவு பெற்று செயல் படுவார்கள்.
வடக்கு ராசிகளாகிய கடகத்தில் செவ்வாயும், மீனத்தில் புதன் கேது இருவரும் இருக்கிறார்கள்.விருச்சிகத்தில் யாரும் இல்லை.
வடக்குக்கு எதிர் திசையாகிய தெற்கு ராசிகளாகிய ரிஷபத்திலும் மகரத்திலும் கிரகங்கள் இல்லை. கண்ணியில் மட்டும் சந்திரன் ராகு இருவரும் இருக்கிறார்கள்.
எனவே செவ்வாய், புதன் கேது மூவரும் சந்திரன் ராகு வுடன் இணைவு பெற்று செயல் படுவார்கள்.
விதி 5 : கிரகம் நின்ற ராசிக்கு முன் பின் ராசிகளில் உள்ள கிரகங்களோடும் இணைவு பெற்று செயல்படும். அதாவது 2, 12 - ல் உள்ள கிரகங்களோடு இணைவு பெற்று செயல்படும்.
கடகத்தில் உள்ள செவ்வாய், மிதுனத்தில் உள்ள குரு, சிம்மத்தில் உள்ள சனி இருவரோடும் இனைந்து செயல் படுவார்.
சிம்மத்தில் உள்ள சனி, கடகத்தில் உள்ள செவ்வாய், கண்ணியில் உள்ள சந்திரன் ரகு உடன் இணைந்து செயல் படுவார்.
குறிப்பு: இதுவரை நாம் பார்த்த 5 விதிகளின் சுருக்கம்.
1. கிரகங்களை பாதசார அடிப்படையில் வரிசைப் படுத்திக் கொள்ளவேண்டும்
2. ஒரே ராசியில் உள்ள கிரகங்கள் இனைந்து செயல்படும்.
3. ஒரே திசையை குறிக்கும் ராசிகளில் உள்ள கிரகங்கள் இணைவுபெற்று செயல்படும்.
அதாவது ஒரு கிரகம் தனக்கு 5,9 ல் உள்ள கிரகங்களோடு இணைவு பெற்று செயல்படும்
4. எதிர் திசை ராசிகளில் உள்ள கிரகங்களோடு இணைவு பெறும்.
அதாவது 3,7,11 ல் உள்ள கிரகங்களோடு இணைவு பெறும்
5. முன்பின் ராசிகளில் உள்ள கிரகங்களோடு இணைவு பெறும்
அதாவது 2,12 ல் உள்ள கிரகங்களோடு இணைவு பெறும்.
சிறப்பு குறிப்பு:
1) ஒரு கிரகத்தோடு சேர்ந்து நின்ற கிரகங்களும், 5,9 ல் உள்ள கிரகங்களும் சேர்ந்து செயல்படும்போது 100 சதவீதம் பாதிப்பை தரும். (பாதிப்பு என்பது நல்லவிதமாகவும் இருக்கலாம், தீய விதமாகவும் இருக்கலாம். நன்மை தீமையை நிர்ணயம் செவது பற்றி பிறகு பார்க்கலாம்)
2) 7 மிடத்து கிரகம் 80 சதவீதமும் 3,11 மிட கிரகங்கள் 50 சதவீதமும் செயல்படும்
3) 2 மிடத்து கிரகம் 100 சதவீதமும் 12 மிடத்து கிரகம் 40சதவீதமும் செயல் படும்
மேலும் சில சிறப்பு விதிகளை அடுத்தடுத்த பதிவுகளில்....
மனதோடு கோபம நீ வளர்த்தாலும் பாவம்
மெய்யான அன்பே தெய்வீகம் ஆகும்.
நாளை உயிர் போகும் இன்று போனாலும்
கொள்கை நிறைவேற்று.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
ஆர்வத்தை தூண்டும் பதிவுகள்.
ரமணியன்
ரமணியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
விதி 6 : ராகு, கேதுகளுக்கான விதி.
ராகு கேது இருவரும் ராசி சக்கரத்தில் அப்பிரதட்சனமகவே (எதிர் திசையில்) சுற்றி வருவார்கள், என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம்.
எனவே இவ்விருவருக்கும் 2 மிடம் என்பது 12 மிடத்தைக் குறிக்கும்.
அதாவது ராகு அல்லது கேது மேஷத்தில் இருந்தால் மேஷத்திற்கு 12 மிடமாகிய மீனம், ராகு அல்லது கேதுவுக்கு 2 மிடமாகும் (இதை கவனமாக வைத்துக்கொள்ளவும்)
இனி விஷயத்திற்கு வருவோம்
ராகுவுக்கு (கேதுவுக்கு) 2 ல் ஏதேனும் கிரகம் இருந்தால் அந்த கிரகம் ராகு (கேது) வுடன் இணைவு பெற்று செயல்படும்.
கீழ்க்கண்ட உதாரண ஜாதகத்தைப் பாருங்கள்
ராகுவுக்கு 2 ல் சனி இருக்கிறார். (சனிக்கு 2 ல் ராகு இருக்கிறார் என்றும் கூறலாம்) எனவே சனி ராகுவுடன் இணைவு பெற்று செயல் படுவார்.
மேலும்...
சனிக்கு 5 ல் உள்ள புதனுக்கும், 9 ல் உள்ள சந்திரனுக்கும் ராகு (சனி வழியாக) தனது தாக்கத்தை தருவர்.
ராகு (கேது)வுக்கு 5 ல் ஏதேனும் கிரகமிருந்தால் 6 ல் உள்ள கிரகத்திற்கும் 6 க்கு திரிகோணத்தில்(ராகுவுக்கு 10 ல்) உள்ள கிரகத்திற்கும் தனது தாக்கத்தை தருவார்.
கீழ்க்கண்ட கட்டத்தைப் பாருங்கள்.
ராகுவுக்கு 5 ல் சனி இருக்கிறாரா? ராகுவுக்கு 6 ல் (சனிக்கு 12 ல்) செவ்வாயும், செவ்வாய்க்கு திரிகொனத்தில் (ராகுவுக்கு 10 ல்) குருவும் இருக்கிறார்களா?
ராகு சனியின் வழியாக செவ்வாய்க்கும் குருவுக்கும் தனது தாக்கத்தை தருவார்.
மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்துகிறேன் " ராகு கேதுக்கள் ராசி சக்கரத்தில் எதிர் திசையில் சுற்றிவருவார்கள்.
ராகு கேது இவர்கள் குறித்த பலன்களை ஆய்வு செய்யும்போது மிக கவனத்துடன் ஆய்வு செய்ய வேண்டும். சிறிது கவனச்சிதறல் ஏற்பட்டாலும் பலன் மாறிவிடும். இவர்களுக்கு மட்டுமல்ல மற்ற கிரகங்களுக்கும் இப்படித்தான். நாடி முறை மிக மிக எளிமையானது. அதேசமயத்தில் புரிந்துகொள்ளும் வரை சற்று கடினமானதும் கூட.
வக்கிரம் பெற்ற கிரகங்களுக்கும் மேற்படி ராகு கேதுக்களுக்கான விதிகள் அப்படியே பொருந்தும்.
வக்கிர கிரகங்களுக்கும் ராகு கேதுக்களுக்கும் ஒரு வித்தியாசம் உண்டு.
வக்கிர கிரகங்களை ஆய்வு செய்யும்போது, வக்கிரம் என்பதை தற்காலிகமாக மறந்துவிட்டு 2, 3, 4, 5 ம் விதிகளின்படியும்,
வக்கிரம் என்ற நிலையில் மேற்படி ராகு கேதுக்க்ளின் விதிகளின்படியும் ஆய்வு செய்து இரண்டு பலன்களையும் கலந்து சொல்லவேண்டும்
அடுத்தப் பதிவில் பரிவர்த்தனை பெற்ற கிரகங்களுக்கான விதிகளை பார்க்கலாம்.
ராகு கேது இருவரும் ராசி சக்கரத்தில் அப்பிரதட்சனமகவே (எதிர் திசையில்) சுற்றி வருவார்கள், என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம்.
எனவே இவ்விருவருக்கும் 2 மிடம் என்பது 12 மிடத்தைக் குறிக்கும்.
அதாவது ராகு அல்லது கேது மேஷத்தில் இருந்தால் மேஷத்திற்கு 12 மிடமாகிய மீனம், ராகு அல்லது கேதுவுக்கு 2 மிடமாகும் (இதை கவனமாக வைத்துக்கொள்ளவும்)
இனி விஷயத்திற்கு வருவோம்
ராகுவுக்கு (கேதுவுக்கு) 2 ல் ஏதேனும் கிரகம் இருந்தால் அந்த கிரகம் ராகு (கேது) வுடன் இணைவு பெற்று செயல்படும்.
கீழ்க்கண்ட உதாரண ஜாதகத்தைப் பாருங்கள்
ராகுவுக்கு 2 ல் சனி இருக்கிறார். (சனிக்கு 2 ல் ராகு இருக்கிறார் என்றும் கூறலாம்) எனவே சனி ராகுவுடன் இணைவு பெற்று செயல் படுவார்.
மேலும்...
சனிக்கு 5 ல் உள்ள புதனுக்கும், 9 ல் உள்ள சந்திரனுக்கும் ராகு (சனி வழியாக) தனது தாக்கத்தை தருவர்.
ராகு (கேது)வுக்கு 5 ல் ஏதேனும் கிரகமிருந்தால் 6 ல் உள்ள கிரகத்திற்கும் 6 க்கு திரிகோணத்தில்(ராகுவுக்கு 10 ல்) உள்ள கிரகத்திற்கும் தனது தாக்கத்தை தருவார்.
கீழ்க்கண்ட கட்டத்தைப் பாருங்கள்.
ராகுவுக்கு 5 ல் சனி இருக்கிறாரா? ராகுவுக்கு 6 ல் (சனிக்கு 12 ல்) செவ்வாயும், செவ்வாய்க்கு திரிகொனத்தில் (ராகுவுக்கு 10 ல்) குருவும் இருக்கிறார்களா?
ராகு சனியின் வழியாக செவ்வாய்க்கும் குருவுக்கும் தனது தாக்கத்தை தருவார்.
மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்துகிறேன் " ராகு கேதுக்கள் ராசி சக்கரத்தில் எதிர் திசையில் சுற்றிவருவார்கள்.
ராகு கேது இவர்கள் குறித்த பலன்களை ஆய்வு செய்யும்போது மிக கவனத்துடன் ஆய்வு செய்ய வேண்டும். சிறிது கவனச்சிதறல் ஏற்பட்டாலும் பலன் மாறிவிடும். இவர்களுக்கு மட்டுமல்ல மற்ற கிரகங்களுக்கும் இப்படித்தான். நாடி முறை மிக மிக எளிமையானது. அதேசமயத்தில் புரிந்துகொள்ளும் வரை சற்று கடினமானதும் கூட.
வக்கிரம் பெற்ற கிரகங்களுக்கும் மேற்படி ராகு கேதுக்களுக்கான விதிகள் அப்படியே பொருந்தும்.
வக்கிர கிரகங்களுக்கும் ராகு கேதுக்களுக்கும் ஒரு வித்தியாசம் உண்டு.
வக்கிர கிரகங்களை ஆய்வு செய்யும்போது, வக்கிரம் என்பதை தற்காலிகமாக மறந்துவிட்டு 2, 3, 4, 5 ம் விதிகளின்படியும்,
வக்கிரம் என்ற நிலையில் மேற்படி ராகு கேதுக்க்ளின் விதிகளின்படியும் ஆய்வு செய்து இரண்டு பலன்களையும் கலந்து சொல்லவேண்டும்
அடுத்தப் பதிவில் பரிவர்த்தனை பெற்ற கிரகங்களுக்கான விதிகளை பார்க்கலாம்.
மனதோடு கோபம நீ வளர்த்தாலும் பாவம்
மெய்யான அன்பே தெய்வீகம் ஆகும்.
நாளை உயிர் போகும் இன்று போனாலும்
கொள்கை நிறைவேற்று.
இந்த பதிவில் பரிவர்த்தனை பெற்ற கிரகங்களுக்கான விதிகளைப் பற்றி எழுதுவதாக குறிப்பிட்டிருந்தேன்.
பரிவர்த்தனை பெற்ற கிரகங்களுக்கான விதிகளைப் பார்ப்பதர்க்குமுன் ராகு கேதுகளுக்கான சிறப்பு விதி ஒன்றை பார்த்துவிட்டு பிறகு பரிவர்த்தனை பெற்ற கிரகங்களுக்கு செல்வோம்.
ராகு கேதுக்களுக்கான சிறப்பு விதி.
ராகு கேதுக்களுக்கு 3, 7, 11 ம் இடத்தில் உள்ள கிரகங்களுடன் இணைவு பெறாது.
கீழ்க்கண்ட உதாரண கட்டத்தைப் பாருங்கள், இன்னொரு சூட்சுமம் புரியும்
ராகுவுக்கு 3 ல் சனியும், 11 ல் குருவும் 7 ல் செவ்வாயும், இருக்கிறார்கள். ஆனால் சனி, குரு, செவ்வாய் இம்மூவருக்கும் ராகுவின் தாக்கம் இருக்காது.
ஆனால் கேது வுடன் செவ்வாய் சேர்ந்திருக்கிறார், செவ்வாய்க்கும் 5 ல் சனியும், 9 ல் குருவும் இருக்கிறார்கள். செவ்வாய், சனி, குரு இம்மூவருக்கும் கேதுவின் தாக்கம் உண்டு.
இதையே வேறுவிதமாக சொல்வதென்றால், கேதுவுடன் செவ்வாயும், கேதுவுக்கு 5 ல் குருவும், 9 ல் சனியும் இருக்கிறார்கள். எனவே செவ்வாய், சனி, குரு இம்மூவருக்கும் கேதுவின் தாக்கம் உண்டு.
இனி பரிவர்த்தனை பெற்ற கிரகங்களைப் பற்றி பார்ப்போம்.
கீழ்க்கண்ட உதாரணக் கட்டத்தைப் பாருங்கள்.
சுக்கிரன் ரசியாகிய துலாத்தில் சனியும், சனியின் ராசியாகிய மகரத்தில் சுக்கிரனும் இருக்கிறார்கள், அதாவது சனி, சுக்கிரன் தங்களது ராசிகளில் பரிவர்த்தனை பெற்றிருக்கிறார்கள்.
அடுத்து புதன் ராசியாகிய மிதுனத்தில் குருவும், குருவின் ராசியாகிய மீனத்தில் புதனும் இருக்கிறார்கள், அதாவது குரு, புதன் தங்களது ராசிகளில் பரிவர்த்தனை பெற்றிருக்கிறார்கள்.
பரிவர்த்தனை பெற்ற கிரகங்களை முதலில் அவர்கள் இருந்த நிலையிலேயே எந்தெந்த கிரகங்களுடன் சேர்க்கை பெறுகிறார்கள், பிறகு பரிவர்த்தனை பெற்ற தன் சொந்த ராசியில் இருந்து எந்தெந்த கிரகங்களோடு சேர்க்கை பெறுகிறார்கள், என்று இரண்டு வகையில் பார்த்து பலன் நிர்ணயிக்க வேண்டும்.
முதலில் சுக்கிரன் சனியைப் பற்றி பார்ப்போம்.
மகர சுக்கிரனுக்கு 5 ல் ரிஷபத்தில் உள்ள செவ்வாயுடனும் சேர்க்கை. பிறகு சுக்கிரனை துலாத்தில் வைத்துப் பார்க்கும்போது துலாத்திற்கு 9 ல் மிதுனத்தில் உள்ள குருவுடனும் சேர்க்கை ஏற்படுகிறது.
துலாத்தில் உள்ள சனிக்கு 9 ல் மிதுனத்தில் உள்ள குருவுடன் சேர்க்கை, பிறகு மகரத்தில் வைத்துப் பார்க்கும்போது மகரத்திற்கு 5 ல் ரிஷபத்தில் உள்ள செவ்வாயுடனும் சேர்க்கை.
அடுத்து குரு புதன் இவர்களின் பரிவர்த்தனையை பார்ப்போம்
மிதுனத்தில் உள்ள குரு 5 ல் துலாத்தில் உள்ள சனியுடனும் 12 ல் ரிஷபத்தில் உள்ள செவ்வாயுடனும் சேர்க்கை, பிறகு மீனத்தில் வைத்துப் பார்க்கும்போது, மீனத்திற்கு 11 ல் மகரத்தில் உள்ள சுக்கிரனுடனும் சேர்க்கை.
மீனத்தில் உள்ள புதனுக்கு 3 ல் ரிஷபத்தில் உள்ள செவ்வாய், 11 ல் மகரத்தில் உள்ள சுக்கிரன் இருவருடனும் சேர்க்கை. மிதுனத்தில் வைத்து பார்த்தால் மிதுனத்திற்கு 5 ல் உள்ள சனியுடனும் சேர்க்கை.
இப்படி இரண்டு வகையில் பலன் எடுக்க வேண்டும்.
இந்த விதியை ஒருமுறைக்கு இருமுறை திரும்ப படித்துப் பாருங்கள்.
இந்த விதியை புரிந்து கொள்வதில் சிரமம் எதாவது இருந்தால் கவலை வேண்டாம், பலன் அறியும் முறைகளைப் பற்றி தெரிந்துகொள்ளும்போது சுலபமாக புரியும்.
அன்புடன்....
பரிவர்த்தனை பெற்ற கிரகங்களுக்கான விதிகளைப் பார்ப்பதர்க்குமுன் ராகு கேதுகளுக்கான சிறப்பு விதி ஒன்றை பார்த்துவிட்டு பிறகு பரிவர்த்தனை பெற்ற கிரகங்களுக்கு செல்வோம்.
ராகு கேதுக்களுக்கான சிறப்பு விதி.
ராகு கேதுக்களுக்கு 3, 7, 11 ம் இடத்தில் உள்ள கிரகங்களுடன் இணைவு பெறாது.
கீழ்க்கண்ட உதாரண கட்டத்தைப் பாருங்கள், இன்னொரு சூட்சுமம் புரியும்
ராகுவுக்கு 3 ல் சனியும், 11 ல் குருவும் 7 ல் செவ்வாயும், இருக்கிறார்கள். ஆனால் சனி, குரு, செவ்வாய் இம்மூவருக்கும் ராகுவின் தாக்கம் இருக்காது.
ஆனால் கேது வுடன் செவ்வாய் சேர்ந்திருக்கிறார், செவ்வாய்க்கும் 5 ல் சனியும், 9 ல் குருவும் இருக்கிறார்கள். செவ்வாய், சனி, குரு இம்மூவருக்கும் கேதுவின் தாக்கம் உண்டு.
இதையே வேறுவிதமாக சொல்வதென்றால், கேதுவுடன் செவ்வாயும், கேதுவுக்கு 5 ல் குருவும், 9 ல் சனியும் இருக்கிறார்கள். எனவே செவ்வாய், சனி, குரு இம்மூவருக்கும் கேதுவின் தாக்கம் உண்டு.
இனி பரிவர்த்தனை பெற்ற கிரகங்களைப் பற்றி பார்ப்போம்.
கீழ்க்கண்ட உதாரணக் கட்டத்தைப் பாருங்கள்.
சுக்கிரன் ரசியாகிய துலாத்தில் சனியும், சனியின் ராசியாகிய மகரத்தில் சுக்கிரனும் இருக்கிறார்கள், அதாவது சனி, சுக்கிரன் தங்களது ராசிகளில் பரிவர்த்தனை பெற்றிருக்கிறார்கள்.
அடுத்து புதன் ராசியாகிய மிதுனத்தில் குருவும், குருவின் ராசியாகிய மீனத்தில் புதனும் இருக்கிறார்கள், அதாவது குரு, புதன் தங்களது ராசிகளில் பரிவர்த்தனை பெற்றிருக்கிறார்கள்.
பரிவர்த்தனை பெற்ற கிரகங்களை முதலில் அவர்கள் இருந்த நிலையிலேயே எந்தெந்த கிரகங்களுடன் சேர்க்கை பெறுகிறார்கள், பிறகு பரிவர்த்தனை பெற்ற தன் சொந்த ராசியில் இருந்து எந்தெந்த கிரகங்களோடு சேர்க்கை பெறுகிறார்கள், என்று இரண்டு வகையில் பார்த்து பலன் நிர்ணயிக்க வேண்டும்.
முதலில் சுக்கிரன் சனியைப் பற்றி பார்ப்போம்.
மகர சுக்கிரனுக்கு 5 ல் ரிஷபத்தில் உள்ள செவ்வாயுடனும் சேர்க்கை. பிறகு சுக்கிரனை துலாத்தில் வைத்துப் பார்க்கும்போது துலாத்திற்கு 9 ல் மிதுனத்தில் உள்ள குருவுடனும் சேர்க்கை ஏற்படுகிறது.
துலாத்தில் உள்ள சனிக்கு 9 ல் மிதுனத்தில் உள்ள குருவுடன் சேர்க்கை, பிறகு மகரத்தில் வைத்துப் பார்க்கும்போது மகரத்திற்கு 5 ல் ரிஷபத்தில் உள்ள செவ்வாயுடனும் சேர்க்கை.
அடுத்து குரு புதன் இவர்களின் பரிவர்த்தனையை பார்ப்போம்
மிதுனத்தில் உள்ள குரு 5 ல் துலாத்தில் உள்ள சனியுடனும் 12 ல் ரிஷபத்தில் உள்ள செவ்வாயுடனும் சேர்க்கை, பிறகு மீனத்தில் வைத்துப் பார்க்கும்போது, மீனத்திற்கு 11 ல் மகரத்தில் உள்ள சுக்கிரனுடனும் சேர்க்கை.
மீனத்தில் உள்ள புதனுக்கு 3 ல் ரிஷபத்தில் உள்ள செவ்வாய், 11 ல் மகரத்தில் உள்ள சுக்கிரன் இருவருடனும் சேர்க்கை. மிதுனத்தில் வைத்து பார்த்தால் மிதுனத்திற்கு 5 ல் உள்ள சனியுடனும் சேர்க்கை.
இப்படி இரண்டு வகையில் பலன் எடுக்க வேண்டும்.
இந்த விதியை ஒருமுறைக்கு இருமுறை திரும்ப படித்துப் பாருங்கள்.
இந்த விதியை புரிந்து கொள்வதில் சிரமம் எதாவது இருந்தால் கவலை வேண்டாம், பலன் அறியும் முறைகளைப் பற்றி தெரிந்துகொள்ளும்போது சுலபமாக புரியும்.
அன்புடன்....
மனதோடு கோபம நீ வளர்த்தாலும் பாவம்
மெய்யான அன்பே தெய்வீகம் ஆகும்.
நாளை உயிர் போகும் இன்று போனாலும்
கொள்கை நிறைவேற்று.
இந்த பதிவில் சில குறிப்புகளை பார்ப்போம்
ஒரு கிரகத்திற்கு முன் பின்னாக இரு பகை கிரகங்கள் இருந்தால், அந்த கிரகம் பாப கர்த்தாரி யோகத்தில் இருக்கிறது.
ஒரு கிரகத்திற்கு முன் பின்னாக இரு நட்பு கிரகங்கள் இருந்தால், அந்த கிரகம் சுப கர்த்தாரி யோகத்தில் இருக்கிறது.
இந்த கர்த்தாரி யோகம் பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.
உதாரணம் 1
மேற்கண்ட ரசிக் கட்டத்தில் சனி, சூரியன், கேது ஆகிய மூவரும் ரிஷபத்தில் இருப்பதாகவும், குறிப்பாக சனி கார்த்திகை 2 ம் பாதத்திலும், சூரியன் ரோகினி 2 ம் பாதத்திலும், கேது மிருகசீரிடம் 1 ம் பாதத்திலும் இருப்பதாக வைத்துக்கொள்வோம். இப்போது பாதசார அடிப்படையில் பார்க்கும்போது முதலில் சனி பிறகு சூரியன், அதன்பிறகு கேது என்று இருக்கிறார்கள். அதாவது சனி கேது இவர்களுக்கிடையில் சூரியன் இருக்கிறார்.
சனியும் கேதுவும் ஒருவருக்கொருவர் பகை, சூரியனுக்கு சனி கேது இருவரும் பகை.
எனவே சூரியன் பாப கர்த்தாரி யோகத்தில் இருக்கிறார்.
உதாரணம் 2
மேற்கண்ட ரசிக் கட்டத்தில் மேஷத்தில் சனி, ரிஷபத்தில் சூரியன், மிதுனத்தில் கேது இருப்பதாக வைத்துக்கொள்வோம். இப்போது முதலில் சனி பிறகு சூரியன், அதன்பிறகு கேது என்று இருக்கிறார்கள். அதாவது சனி கேது இவர்களுக்கிடையில் சூரியன் இருக்கிறார்.
சனியும் கேதுவும் ஒருவருக்கொருவர் பகை, சூரியனுக்கு சனி கேது இருவரும் பகை.
எனவே சூரியன் பாப கர்த்தாரி யோகத்தில் இருக்கிறார்.
உதாரணம் 3
மேற்கண்ட ரசிக் கட்டத்தில் சுக்கிரன், சூரியன், சனி ஆகிய மூவரும் சிம்மத்தில் இருப்பதாகவும், குறிப்பாக சுக்கிரன் மகம 1 ம் பாதத்திலும், சூரியன் பூரம் 2 ம் பாதத்திலும், சனி பூரம் 4 ம் பாதத்திலும் இருப்பதாக வைத்துக்கொள்வோம். இப்போது பாதசார அடிப்படையில் பார்க்கும்போது முதலில் சுக்கிரன் பிறகு சூரியன், அதன்பிறகு சனி என்று இருக்கிறார்கள். அதாவது சுக்கிரன் சனி இவர்களுக்கிடையில் சூரியன் இருக்கிறார்.
சுக்கிரனும் சனியும் ஒருவருக்கொருவர் நட்பு, சூரியனுக்கு சுக்கிரன் சனி இருவரும் பகை.
எனவே சூரியன் பாப கர்த்தாரி யோகத்தில் இருக்கிறார்.
உதாரணம் 4
மேற்கண்ட ரசிக் கட்டத்தில் கடகத்தில் சுக்கிரன், சிம்மத்தில் சூரியன், கண்ணியில் சனியும் இருப்பதாக வைத்துக்கொள்வோம். இப்போது முதலில் சுக்கிரன் பிறகு சூரியன், அதன்பிறகு சனி என்று இருக்கிறார்கள். அதாவது சுக்கிரன் சனி இவர்களுக்கிடையில் சூரியன் இருக்கிறார்.
சுக்கிரனும் சனியும் ஒருவருக்கொருவர் நட்பு, சூரியனுக்கு சுக்கிரன் சனி இருவரும் பகை.
எனவே சூரியன் பாப கர்த்தாரி யோகத்தில் இருக்கிறார்.
பாப கர்த்தாரி யோகம் மேலும் தொடரும்...
அன்புடன்...
ஒரு கிரகத்திற்கு முன் பின்னாக இரு பகை கிரகங்கள் இருந்தால், அந்த கிரகம் பாப கர்த்தாரி யோகத்தில் இருக்கிறது.
ஒரு கிரகத்திற்கு முன் பின்னாக இரு நட்பு கிரகங்கள் இருந்தால், அந்த கிரகம் சுப கர்த்தாரி யோகத்தில் இருக்கிறது.
இந்த கர்த்தாரி யோகம் பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.
உதாரணம் 1
மேற்கண்ட ரசிக் கட்டத்தில் சனி, சூரியன், கேது ஆகிய மூவரும் ரிஷபத்தில் இருப்பதாகவும், குறிப்பாக சனி கார்த்திகை 2 ம் பாதத்திலும், சூரியன் ரோகினி 2 ம் பாதத்திலும், கேது மிருகசீரிடம் 1 ம் பாதத்திலும் இருப்பதாக வைத்துக்கொள்வோம். இப்போது பாதசார அடிப்படையில் பார்க்கும்போது முதலில் சனி பிறகு சூரியன், அதன்பிறகு கேது என்று இருக்கிறார்கள். அதாவது சனி கேது இவர்களுக்கிடையில் சூரியன் இருக்கிறார்.
சனியும் கேதுவும் ஒருவருக்கொருவர் பகை, சூரியனுக்கு சனி கேது இருவரும் பகை.
எனவே சூரியன் பாப கர்த்தாரி யோகத்தில் இருக்கிறார்.
உதாரணம் 2
மேற்கண்ட ரசிக் கட்டத்தில் மேஷத்தில் சனி, ரிஷபத்தில் சூரியன், மிதுனத்தில் கேது இருப்பதாக வைத்துக்கொள்வோம். இப்போது முதலில் சனி பிறகு சூரியன், அதன்பிறகு கேது என்று இருக்கிறார்கள். அதாவது சனி கேது இவர்களுக்கிடையில் சூரியன் இருக்கிறார்.
சனியும் கேதுவும் ஒருவருக்கொருவர் பகை, சூரியனுக்கு சனி கேது இருவரும் பகை.
எனவே சூரியன் பாப கர்த்தாரி யோகத்தில் இருக்கிறார்.
உதாரணம் 3
மேற்கண்ட ரசிக் கட்டத்தில் சுக்கிரன், சூரியன், சனி ஆகிய மூவரும் சிம்மத்தில் இருப்பதாகவும், குறிப்பாக சுக்கிரன் மகம 1 ம் பாதத்திலும், சூரியன் பூரம் 2 ம் பாதத்திலும், சனி பூரம் 4 ம் பாதத்திலும் இருப்பதாக வைத்துக்கொள்வோம். இப்போது பாதசார அடிப்படையில் பார்க்கும்போது முதலில் சுக்கிரன் பிறகு சூரியன், அதன்பிறகு சனி என்று இருக்கிறார்கள். அதாவது சுக்கிரன் சனி இவர்களுக்கிடையில் சூரியன் இருக்கிறார்.
சுக்கிரனும் சனியும் ஒருவருக்கொருவர் நட்பு, சூரியனுக்கு சுக்கிரன் சனி இருவரும் பகை.
எனவே சூரியன் பாப கர்த்தாரி யோகத்தில் இருக்கிறார்.
உதாரணம் 4
மேற்கண்ட ரசிக் கட்டத்தில் கடகத்தில் சுக்கிரன், சிம்மத்தில் சூரியன், கண்ணியில் சனியும் இருப்பதாக வைத்துக்கொள்வோம். இப்போது முதலில் சுக்கிரன் பிறகு சூரியன், அதன்பிறகு சனி என்று இருக்கிறார்கள். அதாவது சுக்கிரன் சனி இவர்களுக்கிடையில் சூரியன் இருக்கிறார்.
சுக்கிரனும் சனியும் ஒருவருக்கொருவர் நட்பு, சூரியனுக்கு சுக்கிரன் சனி இருவரும் பகை.
எனவே சூரியன் பாப கர்த்தாரி யோகத்தில் இருக்கிறார்.
பாப கர்த்தாரி யோகம் மேலும் தொடரும்...
அன்புடன்...
மனதோடு கோபம நீ வளர்த்தாலும் பாவம்
மெய்யான அன்பே தெய்வீகம் ஆகும்.
நாளை உயிர் போகும் இன்று போனாலும்
கொள்கை நிறைவேற்று.
நல்ல தொடர். தொடருங்கள்.
நன்றி.
நன்றி.
திருமங்கலம் ராஜ், ரமேஷ்
Vedhajothidam.blogspot.in
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|