புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 8 Poll_c10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 8 Poll_m10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 8 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 8 Poll_c10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 8 Poll_m10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 8 Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 8 Poll_c10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 8 Poll_m10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 8 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 8 Poll_c10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 8 Poll_m10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 8 Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கன்னடச் சிறுவர் கதைகள் (50)


   
   

Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jan 02, 2022 6:50 pm

First topic message reminder :

கன்னடச் சிறுவர் கதைகள் (1)

தூங்கிக் காலத்தைக் கழிக்காதே !

“பிள்ளைங்களா! சீக்கிரம் எழுந்திருங்கள்! எழுந்திருந்து பல்லை விளக்கிச், சாப்பிட்டுவிட்டுச் சீக்கிரம் பள்ளிக்குக் கிளம்புங்க!” எனத் தாய் அதட்டினாள். “சீக்கிரம்! நேற்று லேட்டா போனதுமாதிரி இன்றும் போகக் கூடாது!” என்று துரிதப் படுத்தினாள்!

“சரி! வாங்க கூட்டிட்டுப் போறேன்! பள்ளிக்கு நடந்து போகக் கொஞ்சம் நேரம் ஆகும்! அதுவரை ஒரு கதை சொல்கிறேன்!” என்று தாய் கூறச், “சொல்லுங்க சொல்லுங்க” என்றனர் பிள்ளைகள்.
தாய் கதை சொன்னாள்.

ஒரு காட்டில் சில முயல்கள்! அவைகளுக்குள் ஒரு தலைவன்!

ஒரு நாள் தலைவன் முயல், பிற முயல்களைக் கூட்டியது; ஒரு முயல் மட்டும் வரவில்லை! கூப்பிடப் போன முயலிடம், ‘எனக்குத் தூக்கம் தூக்கமா வருது!என்னைத் தொந்தரவு செய்யாதே! போ!’ என்றது தூங்கும் முயல். “இல்லை! நம் தலைவர் நல்ல விஷயங்களைக் கூறவுள்ளார்! அவர் அனுபவசாலி! நீ இப்படித் தூங்காதே! ” என்றது கூப்பிடப் போன முயல். அதற்கும் தூங்கும் முயல் மசியவில்லை!

முயல் கூட்டத்தில், தலைவன் முயல், “கேளுங்க முயல்களே! மழைக்காலம் வரப்போகுது! காரட்டுகளை எடுத்துச் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்! இந்தக் காலம் பார்த்து நரிகள் நம்மைத் தாக்கும்! பாதுகாப்பாக நாம் வேறு இடம் சென்று தப்பித்துக் கொள்ள வேண்டும்; இங்கு இருக்கக் கூடாது!” என்றது.

தலைவன் முயல் சொன்னது போலவே சில நரிகள் வந்தன! நரிகள், “ அட! ஒரு முயலையும் காணோமே! எல்லாம் போய்விட்டனவே! இன்று நாம் பட்டினிதான்! என்று புலம்பின!
அப்போது, தூங்கிக் கொண்டிருந்த அந்த முயல், “ஹாவ்! … தூக்கம் தூக்கமா வருது!...எங்கே யாரையும் காணலை? ” என்று விழிக்கவே, நரிகள் அதைப் பார்த்துவிட்டன! அவை அத் தூங்குமூஞ்சி முயல் மீது பாய்ந்து கொன்று, தின்றன!

“பிள்ளைகளே! கேட்டீர்களா? இதிலிருந்து என்ன தெரிகிறது? சோம்பல் பட்டுக்கொண்டு , எப்போதும் தூங்கிக் கொண்டே இருக்கக் கூடாது என்பது புரிகிறதா?” எனத் தாய் கூறவும், பிள்ளைகள், “புரிகிறது! புரிகிறது!என்று உரக்கத் தலையாட்டிக் கூறினர்!
(கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்; கன்னடக் காட்சி ஒலி மூலம் , KooKooTv)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

T.N.Balasubramanian and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Feb 05, 2022 8:05 pm

Code:
இதற்குத்தான் சொல்வது, யாருக்கு என்ன சக்தி உள்ளதோ அதற்குத் தகுந்தாற் போலக் காரியங்களில் ஈடுபட வேண்டும்

முற்றிலும் உண்மை,நல்ல நீதி போதனை.

@Dr.S.Soundarapandian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Feb 06, 2022 3:12 pm

நன்றி இரமணியன் அவர்களே!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Feb 06, 2022 3:13 pm

கன்னடச் சிறுவர் கதைகள் (48)

பூசாரியும் முதலையும் !

ஒரு சின்னக் குளத்தில் ஒரு முதலை இருந்தது!

அதற்கு ஓர் ஆசை வந்தது!

கங்கையில் வாழவேண்டும் என்பதே அந்த ஆசை!

அப்படி இருக்கும்போது, அந்தக் குளத்தருகே ஒரு பிராமணன் வந்துகொண்டிருந்தான்! அப்போது முதலை, “பிராமணனே! இப்படி வாரும்! என்னைக் கங்கைக் கரையில் கொண்டுபோய் விடு! உனக்குப் பெரும் புண்ணியம் வரும்! நான் கங்கை வழியே காசிக்குச் சென்று மீண்டும் பிறக்காத நிலையை அடைய வேண்டும்! அவ்வளவுதான்!” என்றது.

முதலையின் பேச்சை நம்பி அதற்கு உதவி செய்யப் பிராமணன் நினைத்தான்!
ஒரு சாக்குப் பையில் முதலையைப் போட்டுத் தோளில் சுமந்தபடி சென்று,கங்கை அருகே இறக்கி வைத்தான்! முதலையைச் சாக்கிலிருந்து விடுவித்தான்!

ஆனால் முதலை, திடீரென்று பிராமணன் காலைக் கவ்வியது! “உன்னைத் தின்னப் போகிறேன்!”என்றது!

“ஐயோ! நீ இப்படிச் செய்யலாமா? உனக்கு உதவியதற்கு எனக்கு இதுதான் பலனா? ” என்றான் பிராமணன்!

“நியாயம் பேசாதே! நானா நன்றி கெட்டவன்? வேண்டுமானால் மூன்று நியாயவாதிகளிடம் போய்ச் சொல்லலாம்! முதலை மனிதனைத் தின்பது பழக்கம்தான் என்று சொல்வார்கள்!” என்று மூன்று பேரிடம் பஞ்சாயத்திற்குச் செல்ல இருவரும் சென்றனர்!

முதலில் பிராமணனும் முதலையும் ஒரு மாமரம் அருகே சென்று , நடந்ததைக் கூறி நியாயம் கேட்டனர்!

அதற்கு மாமரம், “மனிதர்கள் நன்றி கெட்டவர்கள்! நான் பழம் தருவேன்! எனது நிழலில் தங்கிக் கொள்வார்கள்! ஆனால் கடைசியில் என்னையே ஒரு நாள் வெட்டிவிடுவார்கள்!” என்றது கோபமாக!

அடுத்து, ஒரு பசுவிடம் போனார்கள் நியாயம் கேட்க!

வழக்கைக் கேட்ட பசு, “மனிதர்கள் நன்றி கெட்டவர்கள்! நான் பால் தருவேன் தினமும்! ஆனால் எனக்கு வயதானால் என்னை இறைச்சிக்கடைக் காரனுக்குத் தள்ளிவிடுவார்கள்! ” என்றது!

மூன்றாவதாக நரியிடம் போனார்கள் நியாயம் கேட்க!

“சரி! முதலில் நீங்கள் இருவரும் குளத்திலிருந்து எப்படிக் கங்கை வரை பயணம் செய்தீர்கள்? அதைச் சொல்லுங்கள்” எனக் கேட்டது நரி!

“இதோ இப்படித்தான் முதலையைச் சாக்குக்குள் போட்டுக்கொண்டு, தோளில் தூக்கி வந்தேன்” என்ற பிராமணன், சாக்குக்குள் முதலையைப் புகவிட்டான்!

முதலை சாக்குக்குள் போனதும், நரி சட்டென்று சாக்கின் வாயைக் காலால் அழுத்தி மூடிவிட்டது!

பிராமணனும் சாக்கைக் கட்டிப் போட்டுவிட்டுத் தன் வழியே நடக்கலானான்!
நன்றியில்லாமல் யாரும் இருக்கக் கூடாது! உதவி செய்தவருகே தீங்கு செய்யக் கூடாது!

(கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்; கன்னடக் காட்சி ஒலி மூலம் – KooKooTv)

***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 06, 2022 6:40 pm

நன்றி ,அருமை.

அன்றே சொன்னார் திருவள்ளுவர் --நன்றி மறப்பது நன்றன்று.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Feb 07, 2022 1:28 pm

நன்றி இரமணியன் அவர்களே!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Feb 07, 2022 1:29 pm

கன்னடச் சிறுவர் கதைகள் (49)

மச்சக் கன்னியர் இருவர் !

கடலுக்கு அடியில் ஒரு அரண்மனை! அதன் ராஜா, ஜல ராஜா!

ஜல ராஜாவுக்கு இரு மகள்கள்-பாயல் மற்றும் பிரீத்தி!
இருவரும் இரட்டைக் குழந்தைகள்!

ஒருவரைப் போலவே இன்னொருவர் இருப்பார்! வேறுபாடு காணவே முடியாது!
பல நேரங்களில் ஜல ராஜாவே இது பாயலா? பிரீத்தியா? என்று குழம்புவார்!

பாயல் நல்லவள்! இரக்கக் குணம் கொண்டவள்!

பிரீத்தி முற்றிலும் மாறுபட்டவள்!

பிறரைத் துன்புறுத்தித் தான் மகிழ்பவள்!

ஒரு நாள் பிரீத்தி, ஆக்டோபசை வம்புகிழுத்து, அதன் கைகளை ஒன்றாகச் சேர்த்துக் கட்டிவிட்டாள்! செய்வதறியாது ஆக்டோபஸ் முழித்தது!

பிறகு, அவ் வழியே வந்த பாயல் அதனைப் பார்த்து வருத்தப்பட்டு, உடனே கட்டவிழ்த்துவிட்டாள்!
இம்மாதிரி அநேகச் சம்பவங்கள்!

ஒரு நாள் மீன்பிடிப் படகு ஒன்று வந்தது! அதன் வலையில் , பாயல் மற்றும் பிரீத்தி இருவரும் சிக்கிக்கொண்டனர்!

“காப்பாற்றுங்கள் அப்பா! காப்பாற்றுங்கள் அப்பா!” எனக் கத்தினர்.

ஜல ராஜா வந்து எவ்வளவோ முயன்றும் வலையிலிருந்து இரு மகள்களையும் விடுவிக்க இயலவில்லை!

பாயல் வலையில் சிக்கிகொண்டதைக் கண்ட ஆக்டோபஸ், நண்டுகள் முதலிய யாவும் தவித்தன! “எப்படியாவது பாயலைக் காப்பாற்ற வேண்டும்”என்று பேசிக்கொண்டன!

எல்லாக் கடல் உயிரினங்களும் ஒன்று சேர்ந்து , வலையைச் சிதைத்தன!
பாயலும் பிரீத்தியும் வெளிவந்தனர்!

இதற்குத்தான் சொல்வது – பிறரிடம் அன்பு காட்டி, அவர்களிடம் நன்மதிப்பையும் அன்பையும் பெறவேண்டும் என்று!

(கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்; கன்னடக் காட்சி ஒலி மூலம் – KooKooTv)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Feb 07, 2022 7:08 pm

கன்னடச் சிறுவர் கதைகள் (50)

மச்சக் கன்னி ஒருத்தி !

கடலுக்கு அடியில் மச்சக்கன்னி ஒருத்தி வாழ்ந்துவந்தாள்! அவள் பெரிய முத்துச் சிப்பியில் படுத்துறங்குவாள்!

ஒரு நாள் ஒரு சத்தம் கேட்டது!

“என்ன சத்தம்?” என்று கேட்டபடி, கடலுக்கு மேற் பகுதியில் வந்து பார்த்தாள்!

அப்போது, ரூபி என்ற இளைஞன் கடலில் சில பொருட்களை வீசிவிட வந்தான்!
வந்த ரூபி, மச்சக்கன்னியின் அழகைப் பார்த்து அசந்துபோனான்!

“யார் இவள்?” என்று யோசித்தபடி ,மச்சக்கன்னியிடம், “ஏ பெண்ணே! யார் நீ? கடலில் என்ன செய்கிறாய்?’’ எனக் கேட்டான்.

“நான் மச்சக்கன்னி! இங்கேயே வசிப்பவள்! நீ யார்?” என்று கேட்டாள்.
“நான் மனிதன்! ரூபி என்று பெயர்!”எனப் பதில் சொன்னான்.

“மனிதனா? மனிதன் என்றால் என்ன? உனக்கு இறக்கை இல்லையா? நீ எப்படி இங்கு வந்தாய் இறக்கை இல்லாமல்?’எனக் கேட்டாள் மச்சக்கன்னி.

“மனிதர்களுக்கு இறக்கை இல்லை!

உங்களைப் போல நீந்தத் தெரியாது! நான் ஒரு படகு மூலமாக இங்கு வந்துள்ளேன்!” – என ரூபி பதில் சொன்னான்!

“படகா? படகில் எதற்கு வருகிறீர்கள்? இங்கு என்ன வேலை உங்களுக்கு?”- மச்சக் கன்னி கேட்டாள்!
“நான் என் சிற்றப்பாவுடன் வந்துள்ளேன்! சிற்றப்பா ஒரு கடற் கொள்ளைக்காரர்! கப்பலில் வருபவர்களிடம் கொள்ளையடிப்பார்!” என்றான் ரூபி.

“அப்படியா? கொள்ளையடிப்பது நல்லதல்லவே? நீங்கள் ஏன் அதைச் செய்கிறீர்கள்?”என மச்சக்கன்னி கேட்டாள்.

“என் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை! செலவுக்குப் பணம் இல்லை! அதனால் கொள்ளையடிக்கிறோம்” என்றான் ரூபி.

“ஏன்? உங்க அம்மாவுக்கு என்ன?”என்று கேட்டாள் மச்சக்கன்னி.

“நான், என் அப்பா மற்றும் சிலர் மீன் பிடித்து நன்றாக வாழ்ந்துவந்தோம்! ஒரு நாள் சுனாமி வந்து எங்களை அழித்துவிட்டது! வீடு, வாசல் இழந்தோம்! சுனாமியில் என் அப்பா இறந்தார்! என் அம்மா நோஇல் விழுந்தார்! மீன் படகு, வலைகள் நாசமாயின!

அன்றிலிருந்து என் சிற்றப்பா யோசனைப்படி, பணத்துக்காகக் கொள்ளையடிக்கிறோம்! தங்கம், வெள்ளி, நகைகள்முதலிய எல்லாவற்றையும் கொள்ளையடித்து, அவற்றை விற்றுப் பணம் பெறுவோம்!” என்றான் ரூபி.

“நகைகளை விற்றால் பணம் கிடைக்குமா? உன் அம்மா குணம் ஆவாரா?” எனக் கேட்டாள் மச்சக்கன்னி.

“ஆமாம்’’ என்றான் ரூபி.

“அப்படியானால் என்னோடு வா!’’ என்று கையைப் பிடித்து ரூபியைக் கடலுக்கு அடியில் கூட்டிச் சென்றாள் மச்சக்கன்னி.

“இதோ பார்! எல்லாம் நகைகள்! நீ வேண்டியவற்றை எடுத்துக்கொள்!”என்று நகைப் பெட்டிகளைக் காட்டினாள் மச்சக்கன்னி.

ரூபி ஒரு நகைப் பெட்டியை எடுத்துக்கொண்டான்!

இருவரும் கடலின் மேற்பகுதியில் அவர்கள் வந்த படகின் அருகில் வந்து சேர்ந்தனர்!

“இந்த நகைகளைக் கொண்டு , உன் அம்மாவைக் காப்பாற்று! மறுபடியும் இங்கு வந்தால் என்னைப் பார்!”என்று ரூபியை வழியனுப்பி வைத்தாள் மச்சக்கன்னி.
நிலப் பரப்பில் மட்டுமல்லாது, நீருக்குள்ளும் அன்பே போற்றத் தக்கதாகப் பெருமையுடன் நிற்கிறது! அன்பே,பிறரை வசப்படுத்துகிறது!

(கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்; கன்னடக் காட்சி ஒலி மூலம் – KooKooTv)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1673
இணைந்தது : 25/08/2018
http://www.nizampakkam.blogspot.com

Postmohamed nizamudeen Mon Feb 07, 2022 8:27 pm

தேவதைகள் என்றுமே மற்றவர்க்கு நன்மை செய்பவைதான். மச்சக்கன்னியும் ஒரு தேவதைத்தானோ?

மச்சக்கன்னிக்கும் ஒரு பெயரை வைத்திருக்கலாம்.

'ரூபி கடல் கொள்ளை தொழிலை விட்டுவிட்டு திருந்தி வாழ்ந்தான்' எனக் கடைசியில் ஒரு வரியை சேர்த்திருக்கலாம்!!!
.



-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
http://nizampakkam.blogspot.com

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Feb 07, 2022 9:38 pm

நன்றி நிஜாமுதீன் அவர்களே!
உன்னிப்பான தங்களின் வாசிப்பு அருமை! தாங்கள் சொல்வது சரியே! ஆனால், கன்னடத்தில் என்ன இருக்கிறதோ அதைத்தான் நான் தரமுடியும்; நானாக ஒன்றைச் சேர்க்கக் கூடாது; மொழிபெயர்ப்பு நெறி இது.



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1673
இணைந்தது : 25/08/2018
http://www.nizampakkam.blogspot.com

Postmohamed nizamudeen Tue Feb 08, 2022 8:42 pm

@Dr.S.Soundarapandian...

தங்களின் நெறி பற்றிய கருத்து உண்மையே!

மேலும் எனது இவ்விமர்சனம்
கன்னட மூலக் கதைக்கானதாக எடுத்துக் கொள்ளவும்!
அங்கே, பதிவிட முடியாததாகையால் இங்கு பதிவிட்டேன்!

நன்றி முனைவர் அவர்களே!



-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
http://nizampakkam.blogspot.com

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக