புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது கட்டுக் கதையல்ல. Poll_c10இது கட்டுக் கதையல்ல. Poll_m10இது கட்டுக் கதையல்ல. Poll_c10 
44 Posts - 58%
heezulia
இது கட்டுக் கதையல்ல. Poll_c10இது கட்டுக் கதையல்ல. Poll_m10இது கட்டுக் கதையல்ல. Poll_c10 
24 Posts - 32%
வேல்முருகன் காசி
இது கட்டுக் கதையல்ல. Poll_c10இது கட்டுக் கதையல்ல. Poll_m10இது கட்டுக் கதையல்ல. Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
இது கட்டுக் கதையல்ல. Poll_c10இது கட்டுக் கதையல்ல. Poll_m10இது கட்டுக் கதையல்ல. Poll_c10 
3 Posts - 4%
viyasan
இது கட்டுக் கதையல்ல. Poll_c10இது கட்டுக் கதையல்ல. Poll_m10இது கட்டுக் கதையல்ல. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது கட்டுக் கதையல்ல. Poll_c10இது கட்டுக் கதையல்ல. Poll_m10இது கட்டுக் கதையல்ல. Poll_c10 
236 Posts - 42%
heezulia
இது கட்டுக் கதையல்ல. Poll_c10இது கட்டுக் கதையல்ல. Poll_m10இது கட்டுக் கதையல்ல. Poll_c10 
221 Posts - 40%
mohamed nizamudeen
இது கட்டுக் கதையல்ல. Poll_c10இது கட்டுக் கதையல்ல. Poll_m10இது கட்டுக் கதையல்ல. Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
இது கட்டுக் கதையல்ல. Poll_c10இது கட்டுக் கதையல்ல. Poll_m10இது கட்டுக் கதையல்ல. Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
இது கட்டுக் கதையல்ல. Poll_c10இது கட்டுக் கதையல்ல. Poll_m10இது கட்டுக் கதையல்ல. Poll_c10 
13 Posts - 2%
prajai
இது கட்டுக் கதையல்ல. Poll_c10இது கட்டுக் கதையல்ல. Poll_m10இது கட்டுக் கதையல்ல. Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இது கட்டுக் கதையல்ல. Poll_c10இது கட்டுக் கதையல்ல. Poll_m10இது கட்டுக் கதையல்ல. Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இது கட்டுக் கதையல்ல. Poll_c10இது கட்டுக் கதையல்ல. Poll_m10இது கட்டுக் கதையல்ல. Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இது கட்டுக் கதையல்ல. Poll_c10இது கட்டுக் கதையல்ல. Poll_m10இது கட்டுக் கதையல்ல. Poll_c10 
7 Posts - 1%
mruthun
இது கட்டுக் கதையல்ல. Poll_c10இது கட்டுக் கதையல்ல. Poll_m10இது கட்டுக் கதையல்ல. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது கட்டுக் கதையல்ல.


   
   
jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Thu Jan 30, 2014 4:01 pm

இது கட்டுக் கதையல்ல.....  உண்மை !.
இப்படிப்பட்ட மனிதர்களும் நிகழ்ச்சிகளும் 
தற்காலத்தில் அரிதாகி விட்டதால். இந்தத்  
தலைப்பை கொடுக்கவேண்டி உள்ளது.      
 
அன்பன்
 ரவி

 
அப்போது காமராஜர் முதல்வர். பழைய சட்டமன்ற விடுதியில் மண்ணாங்கட்டி என்பவர் கீழ்மட்ட ஊழியராக இருந்தார். சட்டமன்ற ஊறப்பினர்கள் கேட்பதை வாங்கிவந்து தருவார். முதல் தளத்தில் முன்பாகவே இருக்கும் மூக்கையாத் தேவர் அறையிலேயே இருப்பார். ஒருமுறை ஏம்பா மண்ணாங்கட்டி அவசரமாக வெளியில போறன்.குளிச்சு முடிச்சு ரெடியாகுறதுக்குள்ள இட்லிய வாங்கி வந்துடுஎன்று 100 -ருபாயை கொடுத்தார்  மூக்கையாத் தேவர். சொன்னபடியே அவர் ரெடியாகி காத்திருந்தார்.
 
ரொம்ப நேரம் ஓடியது. தலையில் சுமையுடன் தட்டுதடுமாறி வந்தார் மண்ணாங்கட்டி. பார்த்ததும் ஏன்யா. நான் அவசரமா வெளியில போகனும்னு காத்துகிட்டு இருக்கேன். இட்லி வாங்க இவ்வளவு நேரமா என்று எகிறினார் மூக்கையாத் தேவர். மண்ணாங்கட்டிக்கு கோபம். என்னங்கய்யா நீங்க. இங்க ஆஸ்ட்ல அவ்வளவு இட்லி இல்லைன்னு சொல்லிட்டாங்க. மவுண்ட் ரோடெல்லாம் போய் அலைஞ்சு 100 ரூபாய்க்கும் இட்லி வாங்குறது லேசுபட்ட காரியமாஎன்று பதிலுக்கு சத்தம் போட்டார். அதுதான் மண்ணாங்கட்டி என்ற வெகுளி. அப்பாவி. அவ்வளவு வெள்ளந்தி....
 
அப்படியான மண்ணாங்கட்டியின் தலையில் ஒருநாள் இடி விழுந்தது. அந்த உத்தரவை படித்து காட்டச் சொல்லி வீட்டில் அழுது புரண்டு கதறினார். அரசாங்க உத்தியோகத்தில் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் இனி வேலையில் இருக்க கூடாது. பணியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்என்று காமராஜர் போட்ட உத்தரவுதான் அந்த கடிதம். இரண்டு நாள் கழித்து பழைய சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு ஓடிவந்தார்.  மூக்கையாத் தேவரிடம் தரையில் விழுந்து கதறி அழுகிறார்.
 
என்னவென்று கேட்கிறார்.இப்படி ஒரு உத்தரவு வந்திருக்கிறதே. என் குடும்பம் எல்லாம் நடுத்தெருவுக்கு வந்துடுச்சே. எப்படியாவது காப்பாத்துங்க ஐயாஎன்று பித்துப் பிடித்தவராக அழுகிறார். ஏதாவது சமாதானம் சொல்லனுமே என்று முதல்வர் ஆபிசுக்கு போன் போடுடா. கேட்டுடலாம்என்றார். அப்போது எல்லாம் நேரடியாக தொலைபேசும் வசதி இல்லை. ஆப்ரேட்டரிடம் கூறிவிட்டு காத்திருக்க வேண்டும். முதல்வர் அலுவலகத்தில் யாராவது உதவியளர் எடுப்பார்கள்.
 
மண்ணாங்கட்டி புக்செய்த நேரம் உடனே தொடர்பு கிடைத்தது. மறுமுனையில் முதல்வர் காமராஜ். 
" யார் நீங்கள் உங்களுக்கு என்ன வேண்டும் " என்கிறார். அய்யா நான்தான் அசம்பிளி ஆஸ்டல் பியூன் மண்ணாங்கட்டி பேசுறங்க ஐயா என்றபடியே அருகில் இருந்த மூக்கையாத் தேவரை பார்க்கிறார். அவருக்கு முதல்வர் அலுவலகத்தில் இருந்து யாராவது உதவியாளர்கள்தான் டெலிபோனை எடுத்திருப்பார்கள் என்ற நினைப்பு. எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கறப்போ நான் பியூனா இருக்கக்கூடாதான்னு கேளுடாஎன்கிறார்.
மறுமுனையில் இருந்த காமராஜரிடம் அதை அச்சுபிசகாமல் ஐயா, எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கிறப்போ நான் பியூனா இருக்ககூடாதான்னுதேவர் ஐயா கேட்க சொல்றாருங்க என்கிறார் மண்ணாங்கட்டி. பிறகு பேச்சில்லை....
 
அடுத்த 30 நிமிடத்தில் உயர் அதிகாரிகள் 3-பேர் அங்கே வந்துவிட்டார்கள். முதல்வருக்கு போன் செய்தது யார்? என்றார்கள். " நான்தான் ஐயா " என்று முன்னே வருகிறார் மண்ணாங்கட்டி. " உங்களை கையோடு அழைத்துவரச் சொல்லியிருக்கிறார். உடனே புறப்படுங்கள் " என்று நிற்கிறார்கள். அப்போதுதான் நாம் பேசியிருப்பது முதல்வரிடம் என புரிகிறது. மூக்கையாத் தேவருக்கும் பதட்டம். மண்ணாங்கட்டி ஐயா நீங்களும் வாங்கஎன்று அழுகிறார். பின்னாடியே வருகிறேன். நீ போப்பா என்று அனுப்பி வைக்கிறார். கோட்டையில் உள்ள முதல்வர் காமராஜை நோக்கி வாகனம் பறக்கிறது.
 
முதல்வர் அறையில் உள்ள  சோபாவில், கன்னத்தில் கை வைத்தபடி கவலை தோய்ந்த முகத்தோடு உட்கார்ந்திருக்கிறார் காமராஜர். கதவு திறக்கப்படுகிறது. மண்ணாங்கட்டி முதலில் நுழைய அதிகாரிகள் சற்று ஒதுங்கி கதவோரம் நின்று கொண்டார்கள். " நீங்கதான் மண்ணாங்கட்டியா." .என்கிறார்​. "ஆமாங்க ஐயா. நான் தெரியாம பேசிட்டேன். என்னை மன்னிச்சுடுங்க ஐயா " என்றபடியே கீழே விழுந்தார். அந்த கலாச்சாரம் காமராஜருக்கு பிடிக்காது. அதிகாரிகளை பார்க்க உடனே எழுப்பி நிற்க வைக்கிறார்கள். 
 
அவரை " வா...வாண்னேன். வந்து பக்கதில உட்காருங்கன்னேன் " என்றழைக்கிறார். மண்ணாங்கட்டி தயங்கி நிற்கிறார். காமராஜர் முறைக்க தயங்கி தயங்கி பக்கத்தில் சென்று உட்காருகிறார்.
மண்ணாங்கட்டியை முதுகில் தட்டிக்கொடுத்து முகத்தையே உற்றுப்பார்த்த முதல்வர் காமராஜ், பட்டென்று கையெடுத்து கும்பிட்டு நான் தப்பு பண்ணிட்டேன்  தெரியாம செய்திட்டேன்  மன்னிச்சுடு. அந்த தவறை நீதான் புரியவைச்சே...ரெண்டு நாளா உங்கவீட்ல சோறுதண்ணியில்லியாமே.
சமைக்கலயாமே....உங்களுக்கு ரெண்டு பொம்பள புள்ளைங்க...எல்லாத்தையும் இப்பதான் தெரிஞ்சுகிட்டேன்..எவ்வளவு பெரிய தப்பு செய்திருக்கேன்.. நான் அப்படி ஒரு உத்தரவு போட்டிருக்ககூடாது. இனிமே புதிதாக வேலைக்கு வருபவர்களுக்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்னு போட்டிருக்க வேண்டும். நான் செய்தது தவறுதான்  " என்று தட்டிக்கொடுத்து ஆதரவு சொல்ல மண்ணாங்கட்டி கதறி அழுகிறார். காமராஜருக்கும் பேச்சு இல்லை...
 
அடுத்து அங்கேயே ஒரு உத்தரவு தயாராகிறது. காமராஜர் கையொப்பமிடுகிறார். மண்ணாங்கட்டிக்கு மீண்டும் அரசு வேலை. அதிகாரிகளை பார்த்து இவரை அழைத்துக்கொண்டு போங்க. வேலை கொடுத்தாச்சு. இனி கவலைப்பாதீங்கன்னு அவரோட மனைவி, குழைந்தைங்ககிட்ட சொல்லுங்கன்னு அதிகார குரலில் உத்தரவிடுகிறார். பிறகென்ன நினைத்தாரோ சற்று தயங்கி போகிறபோது வெறும் கையோட போகாதீங்க. ஓட்டல்ல எல்லாருக்கும் சாப்பாடு வாங்கிட்டு போய் கொடுங்க. ரெண்டு நாளா அவர்கள் சாப்பிட்டிருக்க மாட்டர்கள்என கண்டிப்போடு கூறுகிறார் அந்த அதிகாரிகளிடம்.
மண்ணாங்கட்டிக்கு பேச வார்த்தைகளின்றி கையெடுத்து கும்பிட்டபடியே வெளியேற, முதர்வர் காமராஜரும் எழுந்து கையெடுத்து கும்பிட்டபடியே அனுப்பி வைத்தார்.
 
ஒரு ஏழையின் கண்ணீர்.. வலி..இன்னொரு ஏழைக்குத்தான் தெரியும். 
ஆமாம் காமராஜர் ஏழையாகவே, எழைகளுக்காகவே இருந்தார்....
 
இப்படியும் மனுசங்க இருந்திருக்காங்க
--


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Jan 30, 2014 4:20 pm

தமிழகத்தை ஆண்ட முதல்வர்களில், மக்களின் மனதை தெரிந்து வைத்திருந்தவர் அவர் மட்டுமே.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

PostSenthilMookan Thu Jan 30, 2014 7:09 pm

jayaravi wrote:
ஒரு ஏழையின் கண்ணீர்.. வலி..இன்னொரு ஏழைக்குத்தான் தெரியும். 
ஆமாம் காமராஜர் ஏழையாகவே, எழைகளுக்காகவே இருந்தார்....
 
இப்படியும் மனுசங்க இருந்திருக்காங்க
--

 இது கட்டுக் கதையல்ல. 3838410834



எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

PostSenthilMookan Fri Jan 31, 2014 12:26 am

நான் வரும்போது கிராமத்தில் ஒரு பையன் குச்சியை வைத்துக் கொண்டு மாடு மேய்க்க போய்க் கொண்டிருந்தான். நான் கேட்டேன், ஏண்டா பள்ளிக்கூடம் பள்ளிக்கூடம் போகவில்லையென்று. கஞ்சித் தண்ணிக்கே வழியில்லை என்கிறான். அவனுக்கு சாப்பாடு இருந்தால், அவன் பள்ளிக்கூடம் போட மாட்டானா என்ன? அவன் அப்பன், அம்மாவுக்கு தன் பையனை பள்ளிகூடத்திற்கு அனுப்பி படிக்க வைக்க வேண்டுமென்ற ஆசையிருக்காதா என்ன?. நான் கேட்டேன், சம்பளம் நீ கொடுக்க வேண்டியதில்லை, மதியானம் சோறு வேறு போடுகிறோம், நீ ஏன் பள்ளிக்கூடத்திற்க்கு போக கூடாதென்று? அவனுக்கு ஏதாவது வழி பண்ண வேண்டாமா? இல்லையா? இல்லை அப்படியே விட்டுவிடலாமா? நீ மாடு மேய்க்கத்தான் பிறந்தாய், உன் தலையெலுத்து அப்படித்தான் இருக்கிறது என்னு சொல்லி விட்டுவிடலாமா? இது எப்படி நியாமென்று கேட்கிறேன். நல்ல முறையில் படிக்க வைக்க வேண்டாமா?

மதிய உணவு அளிப்பதால், பள்ளிகளில் மாணவர்களின் வருகை அதிகரித்தது என்பதை உறுதி செய்தவுடன், எழைக் குழந்தைகள் கல்விக்கு அதுவே வழி செய்திடும் என்பதை கமராஜ் பின்வருமாறு கூறினார்.
" அத்தனைபேரும் படிக்கணும். வயிற்றிலே ஈரமில்லாதவன் எப்படிப் படிப்பான்? அவனுந்தானே நம் இந்தியாவுக்குச் சொந்தக்காரன். ஏழைக்குழந்தைகளுக்குப் பள்ளிக்கூடத்திலேயே சோறு போட்டு படிக்க வைக்கணும். இதைத் தள்ளிப்போட முடியுமா என்ன? இது மிக முக்கியம் என்பதால் உடனடியாகத் தொடங்கி விடணும். பணத்திற்க்கு எங்கே போவது? இப்படிக் கேட்பீர்கள். வழி இருக்குது, தேவைப்பட்டால், பகல் உணவிற்க்கென்று, தனியாக வரி போடத் தயங்க மாட்டேன். எப்படியும் எல்லா ஏழைகளும் படிக்கனும். அவர்களுக்கும்தான் தேசம்."

http://kamaraj101.blogspot.in



எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக