Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்றைய சிந்தனை
2 posters
Page 1 of 1
இன்றைய சிந்தனை
*இன்றைய சிந்தனை*
*இயற்கை மருத்துவ ஆரோக்கிய குறிப்புகள்*
*1) பொன்மேனி தரும்* குப்பைமேனி
குப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குணமாகும்.
*2) தேளை விரட்டும்* குடியோட்டிப்பூண்டு
பிரம்மதண்டின் பச்சை வேரைச் சிதைத்து தேள்கடி வாயில் வைத்துக் கட்ட *நஞ்சு நீங்கும்.*
*3) வயிற்றுவலி* போக்கும் நறுவலி
நறுவிலிப்பட்டையை இடித்துச் சாறு பிழிந்து, தேங்காய்ப் பாலில் கலக்கி குடிக்க கடினமான *வயிற்றுவலி போகும்.*
*4) காற்று சுத்திகரிப்பான்* சர்க்கரை
சர்க்கரையை நாட்பட்ட நோயாளிகளின் படுக்கை அறையில் புகைக்க சுத்தக்காற்று உண்டாகி அறை சுத்தப்படும்.
*5) தலைபாரம் நீக்கும்* கிராம்பு
கிராம்பை நீர்விட்டு மை போல அரைத்து நெற்றியிலும் மூக்கு தண்டின் மீதும் பற்றிட *தலைபாரம் நீரேற்றம் குணமாகும்.*
*6) காயத்துக்கு* காட்டாமணக்கு
காயம்பட்டு, இரத்தம் வெளிப்பட்ட இடத்தில் காட்டாமைக்கு பாலைப் பூச குருதி நிற்கும். *காயமும் ஆறும்.*
*7) உப்பலுக்கு* உப்பிலாங்கொடி
மாந்தத்தினால் குழந்தைகளின் வயிறு உப்பிக் காணின், உப்பிலாங்கொடியை அரையில் கட்டத் தீரும்.
*8)குழந்தையை காப்பான்* கரிப்பான்
கரிசாலைச் சாறு 2 துளியுடன், 8 துளி தேன் கலந்து கொடுக்க கைக்குழந்தைகளுக்கு உண்டாகும் *நீர்க்கோவை நீங்கும்.*
*9) கடலையும் அடிதடியும்*
கடலை இலையை வேகவைத்து அடிபட்ட வீக்கம், மூட்டுப் பிசகல் முதலியவைகளுக்குச் சூட்டோடு வைத்துக் கட்ட தீரும்.
*10) மயக்கத்துக்கு* ஏலம்
ஏலக்காய் 1 பங்கு, பனைவெல்லம் ½ பங்கு சேர்த்து, எட்டுப்பங்கு நீர்விட்டுக் காய்ச்சி கொடுக்க *பித்த மயக்கம் நீங்கும்.*
*11) புளியிருக்க புண்ணேது?*
புளியிலை, வேப்பிலை இவ்விரண்டையும் சமஅளவு எடுத்து இடித்து எட்டுபங்கு நீர்விட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வர, *ஆறாத புண்கள் ஆறும்*
*12) பால்கட்டுக்கு* பாசிப்பயிறு
பாசிப்பயிறு மாவை வெந்நீர் விட்டுக் களியாகக் கிளறி மார்பில் பற்றிட பால்கட்டு குறைந்து வீக்கமும் குறைந்து போகும். மார்பின் *நெறிக்கட்டிகளும் குறையும்.*
*13) மயிர்கறுக்க* மருதோன்றி
மருதோன்றி இலை, நிலவாரை இரண்டையும் சேர்த்து அரைத்துப் பூச மயிர் கறுக்கும்.
*14) வாந்தி நீக்கும்* நெல்லி
நெல்லியீர்க்கு, கருவேம்பீர்க்கு, வேப்பீர்க்கு மூன்றையும் சேர்த்து இடித்து, நீர்விட்டுக் காய்ச்சிக் கொடுக்க *வாந்தி உடனே நிற்கும்.*
*15) படர்தாமரைக்கு*
அறுகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து அரைத்து படர்தாமரையில் பூச தீரும்.
*16) பல் ஈறு, வீக்கம், வலிக்கு*
கிராம்பு, கற்பூரம், ஓமம் எடுத்து நன்றாகத் தட்டி வீக்கம் உள்ள ஈறுகளில் வைத்து சிறிது நேரம் சென்றபின் வாய் கொப்பளிக்க *பல் ஈறு, வீக்கம் தீரும்*.
*17) மலச்சிக்கலுக்கு*
பிஞ்சு கடுக்காய் – 100 கிராம், சுக்கு – 100 கிராம், எடுத்து தட்டி 1 குவளை நீரில் போட்டு காய்ச்சி இரவு படுக்க போகும்பொழுது குடித்து விட்டு படுக்கவும். நன்றாக *மலம் இளகும்.*
*18) மூலம் அகல*
ஆகாசத் தாமரை இலையை அரைத்து தொடர்ந்து தடவி வந்தால் *மூலம் அகன்று விடும்.*
*19) முகப்பொலிவிற்கு*
உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் *பொலிவு பெறும்.*
*20) சூட்டினால் உண்டாகும் இருமலுக்கு*
மிளகை தூள் செய்து சம அளவு பனைவெல்லம் கலந்து சுண்டைக்காய் அளவு ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டும்.
*21) கல்லடைப்புக்கு* தாம்பூலம்
எருக்கம் பூவின் மொக்கு ஏழு எடுத்து சுண்ணாம்பு போடாமல் வெற்றிலை பாக்குடன் வைத்து உண்ணவும். இப்படி 2 அல்லது 3 வேளையில் கல் விழும்.
*22) தாய்ப்பால் சுரக்க* கீரை
கோவை இலையை நெய்யில் வதக்கி, வெள்ளைப் பூண்டு சேர்த்து வதக்கி, கால் வயிறு கீரை, காலையில் உண்டு விட்டு ஆகாரம் சாப்பிடவும். இவ்வாறு 3 நாள் செய்ய. *பால்சுரக்கும்*
*23) அரையாப்பு தீர*
எலுமிச்சம் வேர், சத்திசாரணைவேர் அரைத்து கெச்சக்காய் அளவு நல்லெண்ணையில் கலந்து சாப்பிடவும் 3 நாளில் தீரும்.
*24) குழந்தைகள் பேதிக்குப்* பிட்டு வகை
புளியாரை, வாழைப்பூ சமனெடை எடுத்து இடித்து பிட்டவியல் செய்து தேன் சேர்த்து பிசைந்து கொடுக்க *பேதி நிற்கும்.*
*25) கர்ப்பிணிகளுக்கு* குடிநீர்
கர்ப்பிணிகளுக்கு மலசலம் கட்டினால், ஒரு பலம் பழைய நெல்லிவற்றலை இடித்துக் குடிநீர் செய்து சமஅளவு பசும்பால் விட்டு சாப்பிட, *மலசலம் வெளியேறும்.*
*26) பசி உண்டாக*
புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சம் பழச்சாறு 3 பங்கு கூட்டி கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.
*27) இருமலுக்கு* தேனூறல்
5 பலம் தேனை நன்றாய்க் காய்ச்சி சுடுகையில் மிளகுத்தூள் படிகாரம் (12 கிராம்) போட்டுக் குலுக்கி கொடுக்கவும்.
*28) வெள்ளை தீர்க்கும் புங்கன்*
புங்கன் கொழுந்தை நெகிழ அரைத்து நல்லெண்ணெய் கலந்து கொடுக்க *வெள்ளை தீரும்.*
*29) அரையாப்புக்கு* அரிசிக் களிம்பு
முருங்கை வேர்ப்பட்டையும், புழுங்கலரிசியும் உப்பும் சேர்த்து அரைத்து கட்ட *கட்டி கரையும்.*
*30) துத்தி டீ*
துத்தியிலை கஷாயம் வைத்து பால், சர்க்கரை கலந்து கொடுக்க *மேகச்சூடு தணியும்.*
*31) வாய்ப்புண் தீர்க்கும்* மருதாணி
மருதாணி இலையைப் பஞ்சுபோல் இடித்து அரைப்படி தண்ணீர் விட்டு காய்ச்சி வடித்து *வாய் கொப்புளிக்கத் தீரும்.*
*32) நீர்த்துவார எரிவு தீர*
வால்மிளகு 5 கிராம், நல்ல நீர்விட்டு அரைத்து தண்ணீரில் கலந்து 1 நாளைக்கு 4 முறை கொடுக்கவும்.
*33) அஜீரண பேதிக்கு*
மிளகை வறுத்துப் பொடி பண்ணி திரிகடி பிரமாணம் தேனில் கொள்ளத் தீரும்.
*34) உடல் இளைத்தவருக்கு*
பூசினிவித்தின் பருப்பை எடுத்து பொடித்துக் காய்ச்சிய பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் *எடை கூடும்.*
*35) இரத்த கடுப்புக்கு*
மாங்கொட்டை பருப்பை அரைத்து பாலில் கலக்கி உண்டு வர இரத்தகடுப்பு, சீதக்கடுப்பு இவை குணமாகும்.
*36) வெளுத்த மயிர் கறுக்க*
கரிய போளத்தை நெல்லிக்காயின் சாற்றால் அரைத்துப் பூசி வந்தால் *மயிர்கள் கறுத்து வளரும்.*
*37) தொண்டை கம்மல் தீர*
கற்பூர வள்ளிச் சாற்றில் கற்கண்டுத் தூள் ஒரு சிட்டிகை போட்டுச் சாப்பிட்டால் *தொண்டைக்கம்மல் நிவர்த்தியாகும்.*
*38) வண்டுகடிக்கு*
வெட்பாலை இலை, கொடி, வேர் முதலிய சமூலம் அரைத்த விழுது எலுமிச்சங்காயளவு எடுத்து ½ படி பசுவின் பாலில் கலந்து சாப்பிடவும். 3 நாள் காலையில் சாப்பிடக் *கரப்பான், வண்டுக்கடி இவை நீங்கும்.*
*39) சூட்டுக்குத் தைலம்*
அகத்திக்கீரை சாறும், நல்லெண்ணெயும் சமனாய்க் கூட்டி அடுப்பிலேற்றி வெந்தயத்தைப் பாலிலறைத்துப் போட்டுத் தைலபதமாக காய்ச்சி இறக்கி தலைமுழுகி வந்தால் சகல சூடுந்தணியும் தேகம் குளிர்ச்சியாகும்.
*40) கிருமிகள் விழ*
வேப்பீர்க்கு 10 வராகன், கடுக்காய் தோல் 4 வராகன், பிரண்டை சாற்றில் மைபோலரைத்து சுண்டைகாயளவெடுத்து விளக்கெண்ணெயில் மத்தித்து கொடுக்க கிருமிகள் வந்துவிடும்.
*41) மூலம் தீர்க்கும்* ஆவாரை
ஆவாரங் கொழுந்து, ஆவாரம்பட்டை, அறுகன் வேர் இவைகளை சமஅளவு எடுத்து உலர்த்தி சூரணம் செய்து 2 வேளை தேனில் (அ) நெய்யில் உண்டுவர *உள்மூலம் தீரும்.*
*42) மூலத்திற்கு* வேது
இளநீரில் வல்லாரை இலையை அவித்து, வரும் ஆவியை மூலத்தில் காட்டிப் பிறகு இலையை வைத்துக் கட்டிகொள்ள உடனே குணமாகும்.
*43) ஈளை தீர்க்கும் இம்பூரல்*
இம்பூரல் செடியும் வல்லாரைச் செடியும் சமஅளவு எடுத்து இடித்து குடிநீராக்கி உட்கொள்ள சுவாசகாசம், ஈளை *இருமல் குணமாகும்.*
*44) கைநடுக்கம் தீர*
தூதுவளையை மைபோல அரைத்து சுண்டைக்காய் அளவு காலைமாலை பசும்பாலில் *15 நாள் சாப்பிட தீரும்.*
*45) இருமல் தீர*
இலவங்கப்பட்டை ஒன்றரை பலம், வால்மிளகு கால் பலம் பொடித்து 3 வேளையாக நெய்யில் தர *இருமல் தீரும்.*
*46) காதில் சீழ் வருதல் தீர*
இந்துப்பு, சுக்கு சமஎடை கூட்டிப் பொடித்து, வெண்ணெயில் போட்டு காய்ச்சி 4 முதல் 5 முறை விட சீழ் வடிதல் தீரும்.
*47) தொண்டை புண்ணிற்கு*
நவாச்சாரத்தை கோழிமுட்டை வெண்கருவில் அரைத்து *தொண்டைக்குழியில் தடவ தீரும்.*
*48) தலைவலிக்கு*
அதிமதுரம், சோம்பு, சர்க்கரை வகைக்கு 35 கிராம் சூரணம் செய்து 1 கிராம் தேனில் உண்ண ஒற்றை தலைவலி தீராத *தலைவலி தீரும்.*
*49) சீதபேதிக்கு*
நாட்டுச் சர்க்கரையும், நெய்யும் கலந்து சாப்பிட தீரும்.
*50) யானைக்கால் வீக்கம்* வடிய
முருங்கைப் பட்டையுடன் சிறு அளவு கடுகு சேர்த்தரைத்து லேசாக பற்று போட யானைக்கால் *வீக்கம் வடியும்.*
*51) விக்கல் தீர்க்கும்* இந்துப்பு
இந்துப்பு சூரணத்தை நெய்யுடன் கலந்து உண்ண விக்கல் நிற்கும்.
*52) புண்கள் ஆற*
தாழம்பூவின் சுட்ட சாம்பலை புண்களின் மீது தூவி வர ஆறும்.
*53) முடி உதிர்வதை தவிர்க்க*
நன்கு முற்றிய தேங்காயை சிறிது தயிர்விட்டு அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.
*54) கட்டிகள் உடைய*
சிவப்பு கீரைத்தண்டு இலையை அரைத்துக் கட்டிகள் மருவுகளுக்கு தடவி வந்தால் *பழுத்து உடையும்.*
*55) அண்ட வாத கட்டு*
பப்பாளி இலையை அறைத்து, இரவில் வீக்கத்தின் மீது கட்டி வர அண்டவாயு, *அண்டவீக்கம், தீரும்.*
*56) கண் பூ குணமாக*
சிவப்பு நாயுருவி இலையை கண்ணில் பிழிந்து வர *கண் பூ மாறும்*
*57) இரத்த மூத்திரத்திற்கு*
மாதுளம்பூ, கசகசா, வேம்பு, இவைகளை சூரணித்து 3 தடவை 5 மிளகளவு பாலுடன் கொடுக்க *இரத்த மூத்திரம் குணமாகும்.*
*58) இரத்த மூலம் குணமாக*
வாழைப்பூ சாறுடன் சீரகத்தை கலந்து அரைத்து தினசரி காலையில் பருக வேண்டும்.
*59) அசீரணம் குணமாக*
கொத்தமல்லி பூவை குடிநீர் செய்து காலை, மாலை 2 வேளை அருந்த அசீரணம் மற்றும் பித்த சம்பந்தமான நோய்கள் தீரும்.
*60) வேர்க்குரு நீங்க*
சந்தனத்தை பன்னீரில் அரைத்து பூசலாம்.
*61) தேக ஊறலுக்கு*
கொட்டை கரந்தை இலையை நிழலில் உலர்த்தி பொடித்து சூரணம் செய்து வேளைக்கு 5 கிராம் வீதம் தேன் கலந்து உண்ண 5 நாளில் *ஊறல் மிக குறையும்.*
*62) சூட்டிருமலுக்கு*
சிறுதுத்தி விதையைப் பால்விட்டு ஊறவைத்து காலையில் எடுத்து அந்த கோழையுடன் சிறிது கற்கண்டுதூள் சேர்த்து 6 வேளை சாப்பிட *இருமல் எளிதில் விலகும்*
*63) நெருப்பு சுட்ட புண்ணிற்கு*
வெந்தயத்தை நீர்விட்டு அரைத்து மேற்பூச்சாக பூச *எரிச்சல் தணிந்து ஆறும்.*
*64) நீர்க்கடுப்பு எரிவு தீர*
எலுமிச்சம் பழச்சாறும், நல்லெண்ணெய்யும் கலந்து சாப்பிட *நீர்க்கடுப்பு, எரிவு தீரும்*
*65) சகல விஷத்திற்கும்* நசியம்
குப்பை மேனியிலை வெற்றிலை, நவச்சாரம் இவைகளை சிறுநீர் விட்டுத் தட்டித் துணியிற் கட்டி நாசியில் நசியமிட *சகலவிஷமும் கலைந்து விடும்.*
*66) பெரியோர்களுக்கு மலக்கட்டு நீங்க* சூரணம்
கருவேப்பிலை தூளும், வல்லாரையிலை தூளும் சமமாய் எடுத்து தேனில் குழைத்து இரவில் போசனம் செய்த பிறகு சாப்பிட்டு வரவும்.
*67) பால் உண்டாக*
ஆலம் விழுதும், ஆலம் விதையும் சமன் கொண்டு பாலில் காய்ச்சி உண்டால், பாலில்லாத பெண்களுக்கு *பால் உண்டாகும்.*
*68) தோலில் ஊறல்,* தடுப்பு இவற்றிற்கு
ஏலரிசி பொடியை வல்லாரை இலைச்சாறு விட்டு அரைத்து காயவைத்து பின் கொட்டைக் கரந்தையை நிழலில் உலர்த்தி பொடித்து, இரண்டையும் சேர்த்து ஒன்றாக கலந்துவேளை 2 கிராம் வீதம் 3 வேளை உண்ண வேண்டும்.
*69) உடல் வலுவுண்டாக*
சிறியவர் முதல் பெரியவர் வரை அத்தி, ஆலம், அரசு, இதன் விதைகளை சம அளவில் எடுத்து பாலில் அரைத்து 5 கிராம் காலை மட்டும் உட்கொள்ள பிற நோயிலிருந்துபாதிக்கப்பட்ட உடலையும் உரமாக்குகிறது.
*70) குடற்புண் தீர்க்கும்* மணத்தக்காளி
மணத்தக்காளி கீரையைச் சமைத்தோ, மணத்தக்காளிப் பழத்தை வற்றல் செய்து உணவுடன் சேர்த்து தினந்தோறும் உண்டுவர *வயிற்றுப்புண் குணமாகும்.*
*71) தேமல் மறைய*
கருங்சீரகத்தை எண்ணெய்விட்டு கருக வறுத்து அதனை காடி விட்டரைத்து பூச *சொறி, தேமல் குறையும்.*
*72) வாயு கலைய*
வெள்ளைப் பூண்டின் மேல் தோலை அகற்றி பசும்பாலில் இட்டு காய்ச்சி அருந்த *வாயு கலையும்.*
*73) பாலுண்ணி மறைய*
சிவப்பு முள்ளங்கி இலையை உலர்த்தி சருகுபோலாக்கி அதனை எரித்து சாம்பலாக்கி, சாம்பலில் கொஞ்சம் எடுத்து ஆமணக்கு எண்ணெய்விட்டு குழப்பி ஒரு வெள்ளைத் துணி மீது தடவி பாலுண்ணி மீது சில தினங்கள் போட *குணமாகும்.*
*74) தொண்டை நோய்க்கு*
கடுகை குடிநீர் செய்து தேன்விட்டு உள்ளுக்கு கொடுக்க *தொண்டை நோய் நீங்கும்.*
*75) பெளத்திரம் நீங்க*
குப்பை மேனிச் சூரணமும், திப்பிலி சூரணமும் சமஅளவு கலந்து 1கி நெய்யில் உட்கொள்ள *பெளத்திரம் நீங்கும்.*
*76) தீச்சுட்ட புண்களுக்கு*
வேப்பங் கொழுந்தைச் சிதைத்து ஆமணக்கிலையில் பொதித்து உப காந்தலில் பொதித்து வெந்த பதத்தில் எடுத்து மேற்படி புண்மேல் வைத்துக்கட்ட *தீச்சுட்டபுண் ஆறிவிடும்.*
*77) தேக பலமுண்டாக*
நத்தை சூரி விதையை அரைத்து அல்லது சூரணித்து பாலில் உட்கொண்டு வந்தால் *தேக பலமுண்டாகும்.*
*78) படைகளுக்கு*
பொன்னாவாரை வேருடன் சந்தனத்தை சேர்த்து அரைத்து தடவி வந்தால் படைகள் உதிர்ந்து *மறைந்து போகும்.*
*79) கண்ணோய் தீர*
வெள்ளை (அ) சிவப்பு நந்தியாவட்டை பூவை பிழிந்து அந்த ரசத்தை 2 – 3 துளி கணக்காய் காலை மாலை கண்களுக்கு விட்டு வர *கண்ணோய் தீரும்.*
*80) கற்றாழை நாற்றத்திற்கு*
கோஷ்டத்தைப் பசுவின் பால் விட்டரைத்து பாலில் கலக்கி உட்கொண்டு வந்தால் கற்றாழை *நாற்றம் நீங்கும்.*
*81) சேற்று புண்ணிற்கு*
மருதோன்றி இலையை அரைத்து பூச *குணமாகும்.*
*82) நகச்சுற்று குணமாக*
வெற்றிலையுடன் கற்சுண்ணாம்பு சேர்த்தரைத்து சீழ்கோர்த்த *நகச்சுற்றுக்கு பூசலாம்.*
*83) முகப்பரு குணமாக*
சங்கை பன்னீரில் உரைத்து பூசலாம்.
*84) புழுவெட்டு குணமாக*
அரளிச் செடியின் பாலை புழுவெட்டுள்ள இடங்களில் தடவி வர மயிர் முளைக்கும்.
*85) பொடுகு குணமாக*
வெள்ளை மிளகு (அ) நல்ல மிளகை பாலில் அரைத்து தலைக்குத்தடவி குளித்து வந்தால் *பொடுகு வராது.*
*86) தழும்பு மறைய*
வேப்பம்பட்டைக் கியாழத்தைக் கலக்கி அதில் வரும் நுரையை தடவி வரலாம்.
*87) முறித்த எலும்புகள் கூட*
வேரை உலர்த்திப் பொடித்து 2 கிராம் கொடுத்துவர, *முறிந்த எலும்புகள் சீக்கிரம் கூடும்.*
*88) பால் சுரக்க*
பால் சுரக்கவும், பால் கட்டி உண்டாகும் முலை வீக்கத்தை கரைக்கவும் வெற்றிலையைத் தணலில் வாட்டி அடுக்கடுக்காக வைத்துக் கட்டலாம்.
*89) தண்ணீர் தெளிய*
தேற்றான் விதையை தண்ணீரில் உரைத்து கரைத்தால் *தண்ணீர் தெளிந்து நிற்கும்.*
*90) கண் நீர் கோர்த்தல் தணிய*
மஞ்சள் நீரில் ஒரு சிறிய வெண்சீலைத்துண்டை நனைத்து நிழலிலுலர்த்தி வைத்துக் கொண்டு கண்நோய் உள்ளவர்கள், இச்சீலையைக் கொண்டு கண்களை துடைத்துவரகண்சிவப்பு, கண்ணருகல், கண்வலி, *கண்ணில் நீர்கோர்த்தில் இவை தணியும்.*
*91) புகையிலை நஞ்சுக்கு*
வெங்காய கிழங்கு சாற்றை உட்கொள்ள *புகையிலை நஞ்சு மாறும்.*
*92) குடிவெறியின் பற்று நீங்க*
மிளகாய் செடியுடன் இலவங்கப்பட்டை, சருக்கரை சேர்த்து குடிநீரிட்டுக் கொடுக்க *குடிவெறியின் பற்று நீங்கும்.*
*93) நீரிழிவு நீங்க*
தொட்டாற்சுணுங்கி இலையையும், வேரையும் உலர்த்திப் பொடித்து பாலில் 4-8 கிராம் சேர்த்துக் கொடுக்க *நீரிழிவு நீங்கும்.*
*94) பெரும்பாடு தணிய*
அசோக பட்டையை இடித்துச் சாறுபிழிந்து கால் முதல் ஒரு உச்சிகரண்டியளவு கொடுத்துவர *பெரும்பாடு தணியும்.*
*95) நரம்பு தளர்ச்சி நீங்க*
அமுக்கராக் கிழங்குபொடி 1 பங்கும், கற்கண்டு 3 பங்கும் சேர்த்து, வேளைக்கு 4 கிராம் காலை மாலை உட்கொண்டு, அரை அல்லது ஓர் ஆழாக்குப் பசுவின் பால் சாப்பிட்டுவர, *நரம்பு தளர்ச்சி நீங்கும்*
*96) வீக்கத்திற்கு ஒற்றடம்*
நொச்சி இலையை வதக்கி ஒற்றடமிட *வீக்கம், கீல்வாயு தீரும்.*
*97) மூட்டுப் பூச்சிகள் அகல*
ஆகாயத் தாமரை பூண்டை மூட்டுப் பூச்சிகள் நிரம்பிய இடங்களில் வைக்க, இது வாடுந்தறுவாயில் உண்டாகும் ஒருவித வெகுட்டல் மணத்தால் *இப்பூச்சிகள் மயங்கி இறக்கும்.*
*98)நெஞ்சு சளி*
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ *சளி குணமாகும்.*
*99)தலைவலி*
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் *தலைவலி குணமாகும்.**
*100)தொண்டை கரகரப்பு*
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட *தொண்டை கரகரப்பு குணமாகும்*.
*101)தொடர் விக்கல்*
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் *தொடர் விக்கல் தீரும்.*
*102)வாய் நாற்றம்*
சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் *வாய் நாற்றம் போகும்.*
*103)உதட்டு வெடிப்பு*
கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர *உதட்டு வெடிப்பு குணமாகும்.*
*104)அஜீரணம்*
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க *அஜீரணம் சரியாகும்.*
*105)குடல்புண்*
மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட *குடல் புண் ஆறும்.*
*106)வாயு தொல்லை*
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத *வயிற்றுப்புண் நீங்கும்.*
*107)வயிற்று வலி*
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க *வயிற்று வலி நீங்கும்.*
*108)மலச்சிக்கல்*
செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு *வர மலச்சிக்கல் தீரும்.*
*109)சீதபேதி*
மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட *சீதபேதி குணமாகும்.*
*110)பித்த வெடிப்பு*
கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் *பித்த வெடிப்பு குணமாகும்.*
*111)மூச்சுப்பிடிப்பு*
சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி *மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில்* மூன்று வேளை தடவினால் குணமாகும்.
*112)சரும நோய்*
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர *சரும நோய் குணமாகும்*.
*113)தேமல்*
வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர *தேமல் குணமாகும்.*
*114)மூலம்*
கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர *மூலம் குணமாகும்*.
*115)தீப்புண்*
வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் *காயங்கள் விரைவில் குணமாகும்.*
*116)மூக்கடைப்பு*
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர *மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.*
*117)வரட்டு இருமல்*
எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க *வரட்டு இருமல் குணமாகும்*
*இயற்கை மருத்துவ ஆரோக்கிய குறிப்புகள்*
*1) பொன்மேனி தரும்* குப்பைமேனி
குப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குணமாகும்.
*2) தேளை விரட்டும்* குடியோட்டிப்பூண்டு
பிரம்மதண்டின் பச்சை வேரைச் சிதைத்து தேள்கடி வாயில் வைத்துக் கட்ட *நஞ்சு நீங்கும்.*
*3) வயிற்றுவலி* போக்கும் நறுவலி
நறுவிலிப்பட்டையை இடித்துச் சாறு பிழிந்து, தேங்காய்ப் பாலில் கலக்கி குடிக்க கடினமான *வயிற்றுவலி போகும்.*
*4) காற்று சுத்திகரிப்பான்* சர்க்கரை
சர்க்கரையை நாட்பட்ட நோயாளிகளின் படுக்கை அறையில் புகைக்க சுத்தக்காற்று உண்டாகி அறை சுத்தப்படும்.
*5) தலைபாரம் நீக்கும்* கிராம்பு
கிராம்பை நீர்விட்டு மை போல அரைத்து நெற்றியிலும் மூக்கு தண்டின் மீதும் பற்றிட *தலைபாரம் நீரேற்றம் குணமாகும்.*
*6) காயத்துக்கு* காட்டாமணக்கு
காயம்பட்டு, இரத்தம் வெளிப்பட்ட இடத்தில் காட்டாமைக்கு பாலைப் பூச குருதி நிற்கும். *காயமும் ஆறும்.*
*7) உப்பலுக்கு* உப்பிலாங்கொடி
மாந்தத்தினால் குழந்தைகளின் வயிறு உப்பிக் காணின், உப்பிலாங்கொடியை அரையில் கட்டத் தீரும்.
*8)குழந்தையை காப்பான்* கரிப்பான்
கரிசாலைச் சாறு 2 துளியுடன், 8 துளி தேன் கலந்து கொடுக்க கைக்குழந்தைகளுக்கு உண்டாகும் *நீர்க்கோவை நீங்கும்.*
*9) கடலையும் அடிதடியும்*
கடலை இலையை வேகவைத்து அடிபட்ட வீக்கம், மூட்டுப் பிசகல் முதலியவைகளுக்குச் சூட்டோடு வைத்துக் கட்ட தீரும்.
*10) மயக்கத்துக்கு* ஏலம்
ஏலக்காய் 1 பங்கு, பனைவெல்லம் ½ பங்கு சேர்த்து, எட்டுப்பங்கு நீர்விட்டுக் காய்ச்சி கொடுக்க *பித்த மயக்கம் நீங்கும்.*
*11) புளியிருக்க புண்ணேது?*
புளியிலை, வேப்பிலை இவ்விரண்டையும் சமஅளவு எடுத்து இடித்து எட்டுபங்கு நீர்விட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வர, *ஆறாத புண்கள் ஆறும்*
*12) பால்கட்டுக்கு* பாசிப்பயிறு
பாசிப்பயிறு மாவை வெந்நீர் விட்டுக் களியாகக் கிளறி மார்பில் பற்றிட பால்கட்டு குறைந்து வீக்கமும் குறைந்து போகும். மார்பின் *நெறிக்கட்டிகளும் குறையும்.*
*13) மயிர்கறுக்க* மருதோன்றி
மருதோன்றி இலை, நிலவாரை இரண்டையும் சேர்த்து அரைத்துப் பூச மயிர் கறுக்கும்.
*14) வாந்தி நீக்கும்* நெல்லி
நெல்லியீர்க்கு, கருவேம்பீர்க்கு, வேப்பீர்க்கு மூன்றையும் சேர்த்து இடித்து, நீர்விட்டுக் காய்ச்சிக் கொடுக்க *வாந்தி உடனே நிற்கும்.*
*15) படர்தாமரைக்கு*
அறுகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து அரைத்து படர்தாமரையில் பூச தீரும்.
*16) பல் ஈறு, வீக்கம், வலிக்கு*
கிராம்பு, கற்பூரம், ஓமம் எடுத்து நன்றாகத் தட்டி வீக்கம் உள்ள ஈறுகளில் வைத்து சிறிது நேரம் சென்றபின் வாய் கொப்பளிக்க *பல் ஈறு, வீக்கம் தீரும்*.
*17) மலச்சிக்கலுக்கு*
பிஞ்சு கடுக்காய் – 100 கிராம், சுக்கு – 100 கிராம், எடுத்து தட்டி 1 குவளை நீரில் போட்டு காய்ச்சி இரவு படுக்க போகும்பொழுது குடித்து விட்டு படுக்கவும். நன்றாக *மலம் இளகும்.*
*18) மூலம் அகல*
ஆகாசத் தாமரை இலையை அரைத்து தொடர்ந்து தடவி வந்தால் *மூலம் அகன்று விடும்.*
*19) முகப்பொலிவிற்கு*
உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் *பொலிவு பெறும்.*
*20) சூட்டினால் உண்டாகும் இருமலுக்கு*
மிளகை தூள் செய்து சம அளவு பனைவெல்லம் கலந்து சுண்டைக்காய் அளவு ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டும்.
*21) கல்லடைப்புக்கு* தாம்பூலம்
எருக்கம் பூவின் மொக்கு ஏழு எடுத்து சுண்ணாம்பு போடாமல் வெற்றிலை பாக்குடன் வைத்து உண்ணவும். இப்படி 2 அல்லது 3 வேளையில் கல் விழும்.
*22) தாய்ப்பால் சுரக்க* கீரை
கோவை இலையை நெய்யில் வதக்கி, வெள்ளைப் பூண்டு சேர்த்து வதக்கி, கால் வயிறு கீரை, காலையில் உண்டு விட்டு ஆகாரம் சாப்பிடவும். இவ்வாறு 3 நாள் செய்ய. *பால்சுரக்கும்*
*23) அரையாப்பு தீர*
எலுமிச்சம் வேர், சத்திசாரணைவேர் அரைத்து கெச்சக்காய் அளவு நல்லெண்ணையில் கலந்து சாப்பிடவும் 3 நாளில் தீரும்.
*24) குழந்தைகள் பேதிக்குப்* பிட்டு வகை
புளியாரை, வாழைப்பூ சமனெடை எடுத்து இடித்து பிட்டவியல் செய்து தேன் சேர்த்து பிசைந்து கொடுக்க *பேதி நிற்கும்.*
*25) கர்ப்பிணிகளுக்கு* குடிநீர்
கர்ப்பிணிகளுக்கு மலசலம் கட்டினால், ஒரு பலம் பழைய நெல்லிவற்றலை இடித்துக் குடிநீர் செய்து சமஅளவு பசும்பால் விட்டு சாப்பிட, *மலசலம் வெளியேறும்.*
*26) பசி உண்டாக*
புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சம் பழச்சாறு 3 பங்கு கூட்டி கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.
*27) இருமலுக்கு* தேனூறல்
5 பலம் தேனை நன்றாய்க் காய்ச்சி சுடுகையில் மிளகுத்தூள் படிகாரம் (12 கிராம்) போட்டுக் குலுக்கி கொடுக்கவும்.
*28) வெள்ளை தீர்க்கும் புங்கன்*
புங்கன் கொழுந்தை நெகிழ அரைத்து நல்லெண்ணெய் கலந்து கொடுக்க *வெள்ளை தீரும்.*
*29) அரையாப்புக்கு* அரிசிக் களிம்பு
முருங்கை வேர்ப்பட்டையும், புழுங்கலரிசியும் உப்பும் சேர்த்து அரைத்து கட்ட *கட்டி கரையும்.*
*30) துத்தி டீ*
துத்தியிலை கஷாயம் வைத்து பால், சர்க்கரை கலந்து கொடுக்க *மேகச்சூடு தணியும்.*
*31) வாய்ப்புண் தீர்க்கும்* மருதாணி
மருதாணி இலையைப் பஞ்சுபோல் இடித்து அரைப்படி தண்ணீர் விட்டு காய்ச்சி வடித்து *வாய் கொப்புளிக்கத் தீரும்.*
*32) நீர்த்துவார எரிவு தீர*
வால்மிளகு 5 கிராம், நல்ல நீர்விட்டு அரைத்து தண்ணீரில் கலந்து 1 நாளைக்கு 4 முறை கொடுக்கவும்.
*33) அஜீரண பேதிக்கு*
மிளகை வறுத்துப் பொடி பண்ணி திரிகடி பிரமாணம் தேனில் கொள்ளத் தீரும்.
*34) உடல் இளைத்தவருக்கு*
பூசினிவித்தின் பருப்பை எடுத்து பொடித்துக் காய்ச்சிய பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் *எடை கூடும்.*
*35) இரத்த கடுப்புக்கு*
மாங்கொட்டை பருப்பை அரைத்து பாலில் கலக்கி உண்டு வர இரத்தகடுப்பு, சீதக்கடுப்பு இவை குணமாகும்.
*36) வெளுத்த மயிர் கறுக்க*
கரிய போளத்தை நெல்லிக்காயின் சாற்றால் அரைத்துப் பூசி வந்தால் *மயிர்கள் கறுத்து வளரும்.*
*37) தொண்டை கம்மல் தீர*
கற்பூர வள்ளிச் சாற்றில் கற்கண்டுத் தூள் ஒரு சிட்டிகை போட்டுச் சாப்பிட்டால் *தொண்டைக்கம்மல் நிவர்த்தியாகும்.*
*38) வண்டுகடிக்கு*
வெட்பாலை இலை, கொடி, வேர் முதலிய சமூலம் அரைத்த விழுது எலுமிச்சங்காயளவு எடுத்து ½ படி பசுவின் பாலில் கலந்து சாப்பிடவும். 3 நாள் காலையில் சாப்பிடக் *கரப்பான், வண்டுக்கடி இவை நீங்கும்.*
*39) சூட்டுக்குத் தைலம்*
அகத்திக்கீரை சாறும், நல்லெண்ணெயும் சமனாய்க் கூட்டி அடுப்பிலேற்றி வெந்தயத்தைப் பாலிலறைத்துப் போட்டுத் தைலபதமாக காய்ச்சி இறக்கி தலைமுழுகி வந்தால் சகல சூடுந்தணியும் தேகம் குளிர்ச்சியாகும்.
*40) கிருமிகள் விழ*
வேப்பீர்க்கு 10 வராகன், கடுக்காய் தோல் 4 வராகன், பிரண்டை சாற்றில் மைபோலரைத்து சுண்டைகாயளவெடுத்து விளக்கெண்ணெயில் மத்தித்து கொடுக்க கிருமிகள் வந்துவிடும்.
*41) மூலம் தீர்க்கும்* ஆவாரை
ஆவாரங் கொழுந்து, ஆவாரம்பட்டை, அறுகன் வேர் இவைகளை சமஅளவு எடுத்து உலர்த்தி சூரணம் செய்து 2 வேளை தேனில் (அ) நெய்யில் உண்டுவர *உள்மூலம் தீரும்.*
*42) மூலத்திற்கு* வேது
இளநீரில் வல்லாரை இலையை அவித்து, வரும் ஆவியை மூலத்தில் காட்டிப் பிறகு இலையை வைத்துக் கட்டிகொள்ள உடனே குணமாகும்.
*43) ஈளை தீர்க்கும் இம்பூரல்*
இம்பூரல் செடியும் வல்லாரைச் செடியும் சமஅளவு எடுத்து இடித்து குடிநீராக்கி உட்கொள்ள சுவாசகாசம், ஈளை *இருமல் குணமாகும்.*
*44) கைநடுக்கம் தீர*
தூதுவளையை மைபோல அரைத்து சுண்டைக்காய் அளவு காலைமாலை பசும்பாலில் *15 நாள் சாப்பிட தீரும்.*
*45) இருமல் தீர*
இலவங்கப்பட்டை ஒன்றரை பலம், வால்மிளகு கால் பலம் பொடித்து 3 வேளையாக நெய்யில் தர *இருமல் தீரும்.*
*46) காதில் சீழ் வருதல் தீர*
இந்துப்பு, சுக்கு சமஎடை கூட்டிப் பொடித்து, வெண்ணெயில் போட்டு காய்ச்சி 4 முதல் 5 முறை விட சீழ் வடிதல் தீரும்.
*47) தொண்டை புண்ணிற்கு*
நவாச்சாரத்தை கோழிமுட்டை வெண்கருவில் அரைத்து *தொண்டைக்குழியில் தடவ தீரும்.*
*48) தலைவலிக்கு*
அதிமதுரம், சோம்பு, சர்க்கரை வகைக்கு 35 கிராம் சூரணம் செய்து 1 கிராம் தேனில் உண்ண ஒற்றை தலைவலி தீராத *தலைவலி தீரும்.*
*49) சீதபேதிக்கு*
நாட்டுச் சர்க்கரையும், நெய்யும் கலந்து சாப்பிட தீரும்.
*50) யானைக்கால் வீக்கம்* வடிய
முருங்கைப் பட்டையுடன் சிறு அளவு கடுகு சேர்த்தரைத்து லேசாக பற்று போட யானைக்கால் *வீக்கம் வடியும்.*
*51) விக்கல் தீர்க்கும்* இந்துப்பு
இந்துப்பு சூரணத்தை நெய்யுடன் கலந்து உண்ண விக்கல் நிற்கும்.
*52) புண்கள் ஆற*
தாழம்பூவின் சுட்ட சாம்பலை புண்களின் மீது தூவி வர ஆறும்.
*53) முடி உதிர்வதை தவிர்க்க*
நன்கு முற்றிய தேங்காயை சிறிது தயிர்விட்டு அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.
*54) கட்டிகள் உடைய*
சிவப்பு கீரைத்தண்டு இலையை அரைத்துக் கட்டிகள் மருவுகளுக்கு தடவி வந்தால் *பழுத்து உடையும்.*
*55) அண்ட வாத கட்டு*
பப்பாளி இலையை அறைத்து, இரவில் வீக்கத்தின் மீது கட்டி வர அண்டவாயு, *அண்டவீக்கம், தீரும்.*
*56) கண் பூ குணமாக*
சிவப்பு நாயுருவி இலையை கண்ணில் பிழிந்து வர *கண் பூ மாறும்*
*57) இரத்த மூத்திரத்திற்கு*
மாதுளம்பூ, கசகசா, வேம்பு, இவைகளை சூரணித்து 3 தடவை 5 மிளகளவு பாலுடன் கொடுக்க *இரத்த மூத்திரம் குணமாகும்.*
*58) இரத்த மூலம் குணமாக*
வாழைப்பூ சாறுடன் சீரகத்தை கலந்து அரைத்து தினசரி காலையில் பருக வேண்டும்.
*59) அசீரணம் குணமாக*
கொத்தமல்லி பூவை குடிநீர் செய்து காலை, மாலை 2 வேளை அருந்த அசீரணம் மற்றும் பித்த சம்பந்தமான நோய்கள் தீரும்.
*60) வேர்க்குரு நீங்க*
சந்தனத்தை பன்னீரில் அரைத்து பூசலாம்.
*61) தேக ஊறலுக்கு*
கொட்டை கரந்தை இலையை நிழலில் உலர்த்தி பொடித்து சூரணம் செய்து வேளைக்கு 5 கிராம் வீதம் தேன் கலந்து உண்ண 5 நாளில் *ஊறல் மிக குறையும்.*
*62) சூட்டிருமலுக்கு*
சிறுதுத்தி விதையைப் பால்விட்டு ஊறவைத்து காலையில் எடுத்து அந்த கோழையுடன் சிறிது கற்கண்டுதூள் சேர்த்து 6 வேளை சாப்பிட *இருமல் எளிதில் விலகும்*
*63) நெருப்பு சுட்ட புண்ணிற்கு*
வெந்தயத்தை நீர்விட்டு அரைத்து மேற்பூச்சாக பூச *எரிச்சல் தணிந்து ஆறும்.*
*64) நீர்க்கடுப்பு எரிவு தீர*
எலுமிச்சம் பழச்சாறும், நல்லெண்ணெய்யும் கலந்து சாப்பிட *நீர்க்கடுப்பு, எரிவு தீரும்*
*65) சகல விஷத்திற்கும்* நசியம்
குப்பை மேனியிலை வெற்றிலை, நவச்சாரம் இவைகளை சிறுநீர் விட்டுத் தட்டித் துணியிற் கட்டி நாசியில் நசியமிட *சகலவிஷமும் கலைந்து விடும்.*
*66) பெரியோர்களுக்கு மலக்கட்டு நீங்க* சூரணம்
கருவேப்பிலை தூளும், வல்லாரையிலை தூளும் சமமாய் எடுத்து தேனில் குழைத்து இரவில் போசனம் செய்த பிறகு சாப்பிட்டு வரவும்.
*67) பால் உண்டாக*
ஆலம் விழுதும், ஆலம் விதையும் சமன் கொண்டு பாலில் காய்ச்சி உண்டால், பாலில்லாத பெண்களுக்கு *பால் உண்டாகும்.*
*68) தோலில் ஊறல்,* தடுப்பு இவற்றிற்கு
ஏலரிசி பொடியை வல்லாரை இலைச்சாறு விட்டு அரைத்து காயவைத்து பின் கொட்டைக் கரந்தையை நிழலில் உலர்த்தி பொடித்து, இரண்டையும் சேர்த்து ஒன்றாக கலந்துவேளை 2 கிராம் வீதம் 3 வேளை உண்ண வேண்டும்.
*69) உடல் வலுவுண்டாக*
சிறியவர் முதல் பெரியவர் வரை அத்தி, ஆலம், அரசு, இதன் விதைகளை சம அளவில் எடுத்து பாலில் அரைத்து 5 கிராம் காலை மட்டும் உட்கொள்ள பிற நோயிலிருந்துபாதிக்கப்பட்ட உடலையும் உரமாக்குகிறது.
*70) குடற்புண் தீர்க்கும்* மணத்தக்காளி
மணத்தக்காளி கீரையைச் சமைத்தோ, மணத்தக்காளிப் பழத்தை வற்றல் செய்து உணவுடன் சேர்த்து தினந்தோறும் உண்டுவர *வயிற்றுப்புண் குணமாகும்.*
*71) தேமல் மறைய*
கருங்சீரகத்தை எண்ணெய்விட்டு கருக வறுத்து அதனை காடி விட்டரைத்து பூச *சொறி, தேமல் குறையும்.*
*72) வாயு கலைய*
வெள்ளைப் பூண்டின் மேல் தோலை அகற்றி பசும்பாலில் இட்டு காய்ச்சி அருந்த *வாயு கலையும்.*
*73) பாலுண்ணி மறைய*
சிவப்பு முள்ளங்கி இலையை உலர்த்தி சருகுபோலாக்கி அதனை எரித்து சாம்பலாக்கி, சாம்பலில் கொஞ்சம் எடுத்து ஆமணக்கு எண்ணெய்விட்டு குழப்பி ஒரு வெள்ளைத் துணி மீது தடவி பாலுண்ணி மீது சில தினங்கள் போட *குணமாகும்.*
*74) தொண்டை நோய்க்கு*
கடுகை குடிநீர் செய்து தேன்விட்டு உள்ளுக்கு கொடுக்க *தொண்டை நோய் நீங்கும்.*
*75) பெளத்திரம் நீங்க*
குப்பை மேனிச் சூரணமும், திப்பிலி சூரணமும் சமஅளவு கலந்து 1கி நெய்யில் உட்கொள்ள *பெளத்திரம் நீங்கும்.*
*76) தீச்சுட்ட புண்களுக்கு*
வேப்பங் கொழுந்தைச் சிதைத்து ஆமணக்கிலையில் பொதித்து உப காந்தலில் பொதித்து வெந்த பதத்தில் எடுத்து மேற்படி புண்மேல் வைத்துக்கட்ட *தீச்சுட்டபுண் ஆறிவிடும்.*
*77) தேக பலமுண்டாக*
நத்தை சூரி விதையை அரைத்து அல்லது சூரணித்து பாலில் உட்கொண்டு வந்தால் *தேக பலமுண்டாகும்.*
*78) படைகளுக்கு*
பொன்னாவாரை வேருடன் சந்தனத்தை சேர்த்து அரைத்து தடவி வந்தால் படைகள் உதிர்ந்து *மறைந்து போகும்.*
*79) கண்ணோய் தீர*
வெள்ளை (அ) சிவப்பு நந்தியாவட்டை பூவை பிழிந்து அந்த ரசத்தை 2 – 3 துளி கணக்காய் காலை மாலை கண்களுக்கு விட்டு வர *கண்ணோய் தீரும்.*
*80) கற்றாழை நாற்றத்திற்கு*
கோஷ்டத்தைப் பசுவின் பால் விட்டரைத்து பாலில் கலக்கி உட்கொண்டு வந்தால் கற்றாழை *நாற்றம் நீங்கும்.*
*81) சேற்று புண்ணிற்கு*
மருதோன்றி இலையை அரைத்து பூச *குணமாகும்.*
*82) நகச்சுற்று குணமாக*
வெற்றிலையுடன் கற்சுண்ணாம்பு சேர்த்தரைத்து சீழ்கோர்த்த *நகச்சுற்றுக்கு பூசலாம்.*
*83) முகப்பரு குணமாக*
சங்கை பன்னீரில் உரைத்து பூசலாம்.
*84) புழுவெட்டு குணமாக*
அரளிச் செடியின் பாலை புழுவெட்டுள்ள இடங்களில் தடவி வர மயிர் முளைக்கும்.
*85) பொடுகு குணமாக*
வெள்ளை மிளகு (அ) நல்ல மிளகை பாலில் அரைத்து தலைக்குத்தடவி குளித்து வந்தால் *பொடுகு வராது.*
*86) தழும்பு மறைய*
வேப்பம்பட்டைக் கியாழத்தைக் கலக்கி அதில் வரும் நுரையை தடவி வரலாம்.
*87) முறித்த எலும்புகள் கூட*
வேரை உலர்த்திப் பொடித்து 2 கிராம் கொடுத்துவர, *முறிந்த எலும்புகள் சீக்கிரம் கூடும்.*
*88) பால் சுரக்க*
பால் சுரக்கவும், பால் கட்டி உண்டாகும் முலை வீக்கத்தை கரைக்கவும் வெற்றிலையைத் தணலில் வாட்டி அடுக்கடுக்காக வைத்துக் கட்டலாம்.
*89) தண்ணீர் தெளிய*
தேற்றான் விதையை தண்ணீரில் உரைத்து கரைத்தால் *தண்ணீர் தெளிந்து நிற்கும்.*
*90) கண் நீர் கோர்த்தல் தணிய*
மஞ்சள் நீரில் ஒரு சிறிய வெண்சீலைத்துண்டை நனைத்து நிழலிலுலர்த்தி வைத்துக் கொண்டு கண்நோய் உள்ளவர்கள், இச்சீலையைக் கொண்டு கண்களை துடைத்துவரகண்சிவப்பு, கண்ணருகல், கண்வலி, *கண்ணில் நீர்கோர்த்தில் இவை தணியும்.*
*91) புகையிலை நஞ்சுக்கு*
வெங்காய கிழங்கு சாற்றை உட்கொள்ள *புகையிலை நஞ்சு மாறும்.*
*92) குடிவெறியின் பற்று நீங்க*
மிளகாய் செடியுடன் இலவங்கப்பட்டை, சருக்கரை சேர்த்து குடிநீரிட்டுக் கொடுக்க *குடிவெறியின் பற்று நீங்கும்.*
*93) நீரிழிவு நீங்க*
தொட்டாற்சுணுங்கி இலையையும், வேரையும் உலர்த்திப் பொடித்து பாலில் 4-8 கிராம் சேர்த்துக் கொடுக்க *நீரிழிவு நீங்கும்.*
*94) பெரும்பாடு தணிய*
அசோக பட்டையை இடித்துச் சாறுபிழிந்து கால் முதல் ஒரு உச்சிகரண்டியளவு கொடுத்துவர *பெரும்பாடு தணியும்.*
*95) நரம்பு தளர்ச்சி நீங்க*
அமுக்கராக் கிழங்குபொடி 1 பங்கும், கற்கண்டு 3 பங்கும் சேர்த்து, வேளைக்கு 4 கிராம் காலை மாலை உட்கொண்டு, அரை அல்லது ஓர் ஆழாக்குப் பசுவின் பால் சாப்பிட்டுவர, *நரம்பு தளர்ச்சி நீங்கும்*
*96) வீக்கத்திற்கு ஒற்றடம்*
நொச்சி இலையை வதக்கி ஒற்றடமிட *வீக்கம், கீல்வாயு தீரும்.*
*97) மூட்டுப் பூச்சிகள் அகல*
ஆகாயத் தாமரை பூண்டை மூட்டுப் பூச்சிகள் நிரம்பிய இடங்களில் வைக்க, இது வாடுந்தறுவாயில் உண்டாகும் ஒருவித வெகுட்டல் மணத்தால் *இப்பூச்சிகள் மயங்கி இறக்கும்.*
*98)நெஞ்சு சளி*
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ *சளி குணமாகும்.*
*99)தலைவலி*
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் *தலைவலி குணமாகும்.**
*100)தொண்டை கரகரப்பு*
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட *தொண்டை கரகரப்பு குணமாகும்*.
*101)தொடர் விக்கல்*
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் *தொடர் விக்கல் தீரும்.*
*102)வாய் நாற்றம்*
சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் *வாய் நாற்றம் போகும்.*
*103)உதட்டு வெடிப்பு*
கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர *உதட்டு வெடிப்பு குணமாகும்.*
*104)அஜீரணம்*
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க *அஜீரணம் சரியாகும்.*
*105)குடல்புண்*
மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட *குடல் புண் ஆறும்.*
*106)வாயு தொல்லை*
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத *வயிற்றுப்புண் நீங்கும்.*
*107)வயிற்று வலி*
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க *வயிற்று வலி நீங்கும்.*
*108)மலச்சிக்கல்*
செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு *வர மலச்சிக்கல் தீரும்.*
*109)சீதபேதி*
மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட *சீதபேதி குணமாகும்.*
*110)பித்த வெடிப்பு*
கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் *பித்த வெடிப்பு குணமாகும்.*
*111)மூச்சுப்பிடிப்பு*
சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி *மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில்* மூன்று வேளை தடவினால் குணமாகும்.
*112)சரும நோய்*
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர *சரும நோய் குணமாகும்*.
*113)தேமல்*
வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர *தேமல் குணமாகும்.*
*114)மூலம்*
கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர *மூலம் குணமாகும்*.
*115)தீப்புண்*
வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் *காயங்கள் விரைவில் குணமாகும்.*
*116)மூக்கடைப்பு*
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர *மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.*
*117)வரட்டு இருமல்*
எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க *வரட்டு இருமல் குணமாகும்*
Srg- பண்பாளர்
- பதிவுகள் : 53
இணைந்தது : 04/12/2021
Re: இன்றைய சிந்தனை
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: இன்றைய சிந்தனை
தைராய்டு நோயை குணப்படுத்தும் சீதாப்பழ இலை குடிநீர்
தைராய்டு பிரச்னைக்கு மிக எளிமையான மருத்துவம் சித்த மருத்துவத்தில் உள்ளது.
பத்து முதல் பதினைந்து சீதப்பழ இலையை நான்கு குவளை தண்ணீர் ஊற்றி ஒரு குவளையாக வற்ற வைக்க வேண்டும்.
காலை மாலை வெறும் வயிற்றில் தொடர்ந்து பருக நல்ல பலன் கிடைக்கும்
இந்த குடிநீர் நாற்பத்து எட்டு நாட்கள் அதாவது ஒரு மண்டலம் பருக வேண்டும்.
அதன் பின் பரிசோதனை செய்து பார்த்து குணமாகி விட்டால் நிறுத்தி கொள்ளலாம். இல்லாவிட்டால் சிலநாட்கள் மட்டும் தொடரலாம்.
தைராய்டு பிரச்னைக்கு மிக எளிமையான மருத்துவம் சித்த மருத்துவத்தில் உள்ளது.
பத்து முதல் பதினைந்து சீதப்பழ இலையை நான்கு குவளை தண்ணீர் ஊற்றி ஒரு குவளையாக வற்ற வைக்க வேண்டும்.
காலை மாலை வெறும் வயிற்றில் தொடர்ந்து பருக நல்ல பலன் கிடைக்கும்
இந்த குடிநீர் நாற்பத்து எட்டு நாட்கள் அதாவது ஒரு மண்டலம் பருக வேண்டும்.
அதன் பின் பரிசோதனை செய்து பார்த்து குணமாகி விட்டால் நிறுத்தி கொள்ளலாம். இல்லாவிட்டால் சிலநாட்கள் மட்டும் தொடரலாம்.
Srg- பண்பாளர்
- பதிவுகள் : 53
இணைந்தது : 04/12/2021
Re: இன்றைய சிந்தனை
நன்றிT.N.Balasubramanian wrote:நல்ல தகவல் .
மருத்துவ கட்டுரை பகுதியில் இருந்து சித்த மருத்துவத்திற்கு மாற்றப்படுகிறது.
@Srg
Srg- பண்பாளர்
- பதிவுகள் : 53
இணைந்தது : 04/12/2021
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|