ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகா பெரியவா

Go down

மகா பெரியவா  Empty மகா பெரியவா

Post by T.N.Balasubramanian Wed Nov 24, 2021 6:12 pm

ஒரு நாள் மஹானின் தரிசனத்திற்காக, ஒரு குடும்பம் சென்னையிலிருந்து காஞ்சிக்குச் சென்றது. கணவன், மனைவி, சிறு பெண் குழந்தை, மனைவியின் தந்தை ஆகியோர் அடங்கிய குடும்பம் இது.
வழியில் சுங்குவார் சத்திரம் அருகே, குடும்பத்துப் பெரியவர் உடலில் ஏற்பட்ட இயற்கையின் உந்துதலினால் காரில் இருந்து இறங்கி மாப்பிள்ளையின் துணையுடன் ரோட்டின் மறுபக்கம் சென்றார். ஒரு மாதிரியாக உபாதை தீர்ந்த பின்னர், அவர்கள் இருவரும் மறுபக்கம் இருந்த காரை நோக்கி நடந்தனர். வழியில் நிறைய வாகனங்கள் வந்து போய்க்கொண்டு இருந்ததால், இருவரும் சற்றுத் தயங்கினர். இதற்குள் மறுபக்கம் இருந்த சிறுமி தன் தந்தையுடன் தாத்தாவையும் புதிதாகக் கண்டுவிட்டவள் போல, அங்கிருந்து துள்ளிக்கொண்டு இவர்கள் இருக்குமிடம் நோக்கி ஓடிவந்தாள். இளங்கன்று பயமறியவில்லை. வேகமாக அப்பக்கம் வந்த லாரி ஒன்று, குழந்தை மீது மோதி அவளை வெகு தூரத்திற்குத் தள்ளிவிட்டது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்துவிட்ட இந்த கோரத்தைப் பார்த்த பெற்றோர் ஸ்தம்பித்துப் போயினர்.
அடிபட்ட சிறுமியை உடனே காஞ்சிபுரம் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அக்குழந்தையை டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு, சென்னைக்கு எடுத்துச் செல்லுமாறு சொல்லி விட்டனர். அக்குழந்தைக்கு என்ன வைத்தியம் செய்தாலும் சில நாட்கள்தான் உயிரோடு இருப்பாள் என்று டாக்டர்கள் சொன்னார்கள். இதற்கிடையில் குழந்தையைப் பார்க்க வந்த உறவினர் ஒருவர், காஞ்சிக்குச் சென்று மஹானிடம் அச்சிறுபெண்ணுக்கு ஏற்பட்ட விபத்தைப் பற்றி விவரமாகச் சொல்ல –
“என்னைப் பார்க்க வரும்போதா இப்படி ஆகிவிட்டது?” என்று வினவினார். சற்று நேரம் கண்களை மூடிக்கொண்டு தியானம் செய்துவிட்டு, வந்தவரிடம் ஒரு ஆப்பிள் பழத்தை கொடுத்த மஹான், அவரிடம் “நீ போகுமுன் காஞ்சி காமாட்சியை தரிசனம் செய்துவிட்டுப் போ” என்று பணித்தார்.
வந்தவரும் அங்கிருந்து விரைந்தார். நடை சார்த்தும் சமயம் நெருங்கிவிட்டதால் வந்தவரால் தேவி காமாட்சியை ஒருகணம் தான் பார்க்க முடிந்தது. பச்சைப் புடவையுடன் அருள்பொழியும் முகத்தோடு நின்ற அம்பாளைப் பார்த்த அவர், அதை மனதில் இருத்தியபடி தியானம் செய்துகொண்டே சென்னை திரும்பினார். வந்தவர் நேராக மருத்துவமனைக்குச் சென்று ‘கோமா’ நிலையில் இருந்த குழந்தையின் தலைமாட்டில் ஆப்பிளை வைத்துவிட்டு, மஹான் வருத்தப்பட்டதையும் அவர்களிடம் சொன்னார்.
மணிக்கணக்கு, நாள்கணக்கு என்று கெடு வைத்த குழந்தை சில நேரங்களில் கோமா நிலையில் இருந்து நினைவுடன் பேசத் தொடங்கியது. முதலில் ‘அம்மா’ என்று குரல் கொடுக்க, எல்லோருக்கும் சந்தோஷம். தொடர்ந்து ஓரிரு நாட்களில் குழந்தை நன்றாகத் தேறியது மட்டுமில்லாமல் பேசவும் தொடங்கியது. அப்போது அது தன் அம்மாவைப் பார்த்து “என்னுடன் இருந்த பாப்பா எங்கே?” என்று கேட்டதாம்.
“நீ இங்கே ஆஸ்பத்திரியில் இருக்கிறாய். இங்கே பாப்பா யாரும் இல்லையே?” என்று அம்மா பதில் சொல்ல,
“அந்தப் பாப்பா எங்கே? என்னோட அவ விளையாடறதுக்கு வேணும்” என்று சிணுங்கிக்கொண்டே சிறுமி சொல்ல,
“எந்தப் பாப்பா அம்மா?” என்று தாயும் மற்றவர்களும் குழப்பத்துடன் கேட்க, அதற்கு அந்தக் குழந்தை, “பச்சைப் பாவாடை கட்டிண்டு என்னோடவே இருந்தாளே அந்தப் பாப்பா” என்றது. அப்போது தான் அவர்களுக்கும் பொறிதட்டியது போல் இருந்ததாம். சாட்சாத் அந்தக் காமாட்சி தான் குழந்தையைக் காப்பாற்றி அவளுடன் சில நாட்கள் இருந்திருக்கிறாள்.
“காமாட்சியைப் பார்த்துட்டுப் போ” என்று மஹான் சொன்னதற்கு இப்போதுதான் அவர்களுக்கு அர்த்தம் புரிந்தது.
காஞ்சி மஹானின் கருணையை நினைத்து, அவர்கள் கண்களில் நீர்மல்க, காஞ்சிபுரம் திசையை நோக்கிக் கை கூப்பினார்கள்.
மகா பெரியவா திருவடிகள்சரணம்
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

நன்றி முகநூல்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum