ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
கஷ்ட காலங்களில் கடவுள் நம்முடன்தான் இருக்கிறார் Poll_c10கஷ்ட காலங்களில் கடவுள் நம்முடன்தான் இருக்கிறார் Poll_m10கஷ்ட காலங்களில் கடவுள் நம்முடன்தான் இருக்கிறார் Poll_c10 
ayyasamy ram
கஷ்ட காலங்களில் கடவுள் நம்முடன்தான் இருக்கிறார் Poll_c10கஷ்ட காலங்களில் கடவுள் நம்முடன்தான் இருக்கிறார் Poll_m10கஷ்ட காலங்களில் கடவுள் நம்முடன்தான் இருக்கிறார் Poll_c10 
mohamed nizamudeen
கஷ்ட காலங்களில் கடவுள் நம்முடன்தான் இருக்கிறார் Poll_c10கஷ்ட காலங்களில் கடவுள் நம்முடன்தான் இருக்கிறார் Poll_m10கஷ்ட காலங்களில் கடவுள் நம்முடன்தான் இருக்கிறார் Poll_c10 
VENKUSADAS
கஷ்ட காலங்களில் கடவுள் நம்முடன்தான் இருக்கிறார் Poll_c10கஷ்ட காலங்களில் கடவுள் நம்முடன்தான் இருக்கிறார் Poll_m10கஷ்ட காலங்களில் கடவுள் நம்முடன்தான் இருக்கிறார் Poll_c10 

Top posting users this month
heezulia
கஷ்ட காலங்களில் கடவுள் நம்முடன்தான் இருக்கிறார் Poll_c10கஷ்ட காலங்களில் கடவுள் நம்முடன்தான் இருக்கிறார் Poll_m10கஷ்ட காலங்களில் கடவுள் நம்முடன்தான் இருக்கிறார் Poll_c10 
ayyasamy ram
கஷ்ட காலங்களில் கடவுள் நம்முடன்தான் இருக்கிறார் Poll_c10கஷ்ட காலங்களில் கடவுள் நம்முடன்தான் இருக்கிறார் Poll_m10கஷ்ட காலங்களில் கடவுள் நம்முடன்தான் இருக்கிறார் Poll_c10 
mohamed nizamudeen
கஷ்ட காலங்களில் கடவுள் நம்முடன்தான் இருக்கிறார் Poll_c10கஷ்ட காலங்களில் கடவுள் நம்முடன்தான் இருக்கிறார் Poll_m10கஷ்ட காலங்களில் கடவுள் நம்முடன்தான் இருக்கிறார் Poll_c10 
VENKUSADAS
கஷ்ட காலங்களில் கடவுள் நம்முடன்தான் இருக்கிறார் Poll_c10கஷ்ட காலங்களில் கடவுள் நம்முடன்தான் இருக்கிறார் Poll_m10கஷ்ட காலங்களில் கடவுள் நம்முடன்தான் இருக்கிறார் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கஷ்ட காலங்களில் கடவுள் நம்முடன்தான் இருக்கிறார்

2 posters

Go down

கஷ்ட காலங்களில் கடவுள் நம்முடன்தான் இருக்கிறார் Empty கஷ்ட காலங்களில் கடவுள் நம்முடன்தான் இருக்கிறார்

Post by ayyasamy ram Fri Nov 12, 2021 8:44 pm

கஷ்ட காலங்களில் கடவுள் நம்முடன்தான் இருக்கிறார் MqLvPsx
-
உங்களுக்கு நடக்க முடியாத போது சுமக்கத் தயாராய் கடவுள்
உங்களுடனேயே இருக்கிறார் என்பதை நினைவில் வைத்துக்
கொண்டால் வாழ்க்கைப் பயணம் சுலபமாகும்

கஷ்ட காலங்களில் கடவுள் ஒரு மனிதன் ஒரு நெடும்பயணம்
மேற்கொண்டிருந்தான். அது அவன் வாழ்க்கைப் பயணம். நீண்ட
தூரம் சென்றபின் தான் கவனித்தான். அவனுடைய கால்
தடங்கள் அருகே இன்னொரு ஜோடி கால் தடங்கள். அவனுக்கு
ஆச்சரியம். சுற்றும் முற்றும் பார்த்தான். யாரும் தெரியவில்லை.

சத்தமாகக் கேட்டான். “என்னுடன் வருவது யார்?” “நான் கடவுள்”
என்று அசரீரியாகப் பதில் வந்தது. அவனுக்கு எல்லையில்லா
மகிழ்ச்சி. ‘கடவுள் என்னுடன் பயணம் செய்து வருகிறார்’. பயணம்
தொடர்ந்தது. அவன் அந்தக் கால் தடங்களைக் கவனிப்பதை
நாளாவட்டத்தில் மறந்தான். சுகமாகப் போய்க் கொண்டிருந்த
வாழ்க்கையில் பிரச்சினைகள் தலையெடுக்க ஆரம்பித்தன.

சிறிய பிரச்சினைகள் பெரிதாயின. துன்பமும் துக்கமும்
அதிகமாயின. ஒரு கட்டத்தில் அவன் சமாளிக்க முடியாமல்
தவித்த போது தான் அந்தக் கால் தடங்கள் நினைவு மறுபடி வந்தது.
‘கூட கடவுள் இருக்கும் போதே இவ்வளவு துன்பமா’ என்று தனக்குள்
கேட்டுக் கொண்டவன் கால் தடங்களைக் கவனித்தான்.

அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்தப் பாதையில் ஒரே ஒரு ஜோடி
கால் தடங்கள் மட்டுமே தெரிந்தன. அவன் சுற்றி பின்னோக்கிப்
பார்த்தான். அவன் கஷ்டகாலம் ஆரம்பித்த கணத்திலிருந்து ஒரே ஒரு
ஜோடிக் கால் தடம் மட்டுமே தெரிந்தது. அவனுக்கு அழுகையாய்
வந்தது.

கண்ணுக்குத் தெரியாத அந்தக் கடவுளை அழுகையினூடே கேட்டான்.
“கடவுளே என் இன்ப காலத்தில் உடன் வந்து கொண்டிருந்தீர்கள்,
துன்ப காலத்தில் என்னைக் கைவிட்டுக் காணாமல் போய் விட்டீர்களே
இது நியாயமா?” கடவுளிடமிருந்து பதில் வந்தது.

“மகனே, நான் உன்னைக் கைவிடவில்லை. உன் துன்ப காலத்தில்
நீ பார்த்த காலடிச்சுவடுகள் உன்னுடையவை அல்ல. என்னுடையவை.
இந்தக் கடின யாத்திரையில் நடக்க முடியாத உன்னைத் தூக்கிக்
கொண்டு நான் தான் நிறைய தூரம் வந்துள்ளேன். அதனால் தான்
நீ உன்னுடைய காலடி சுவடுகளைக் காண முடியவில்லை….”

அந்த மனிதன் கண்களில் நன்றியுடன் வழிந்த கண்ணீர் நிற்க நிறைய
நேரம் ஆயிற்று. கஷ்ட காலங்களில் உறவும் நட்பும் காணாமல் போவது
போல கடவுளின் அருளும் காணாமல் போவதாக அவன் என்ணுவதில்
வியப்பில்லை.

எத்தனையோ கஷ்டங்கள் வரவிருந்து, அவை இறையருளால் வராமல்
தவிர்க்கப் பட்டிருக்கலாம். அவை நம் கவனத்திற்கு வராமலேயே
போய் விடுகிறது. கடவுள் கணக்கு சொல்வதில்லை. எனவே
எத்தனையோ உண்மைகள் நமக்குத் தெரியாமலேயே போய்
விடுகின்றன. துன்பங்களும், சோதனைக் காலங்களும் வரும் போது
நாம் ஒரு பெரிய உண்மையை மறந்து விடக் கூடாது.

எதுவுமே காரணம் இல்லாமல் நம்மிடம் வருவதில்லை. அவற்றில்
சில நாம் சம்பாதித்தவை. நம் முந்தைய செயல்களின் விளைவுகள்.
நாமே வர வழைத்தவற்றை நாம் சந்தித்தே ஆக வேண்டியுள்ளது.
மறுப்பதும் எதிர்ப்பதும் நியாயமல்ல. மற்றவை நாம் வளர, பக்குவப்
படத் தேவையான அனுபவங்கள். கையால் மென்மையாக தடவிக்
கொடுத்தே

கல்லை சிலையாக முடியாது. இன்பங்கள் மட்டுமே வந்து
கொண்டிருந்தால் நாம் பக்குவம் அடைவதும் சாத்தியமல்ல. உளிக்கு
கல்லின் மீது பகையில்லை. உளியடிகளைத் தாங்காத கல் அழகிய
சிலையாவதில்லை. கடவுள் என்ற சிற்பி நம்மைச் செதுக்கும் போது
அழகிய சிலையாகப் போகிறோம் என்ற உணர்வுடன் தாங்கிக்
கொண்டால், இது அர்த்தமில்லாததல்ல என்று புரிந்து கொண்டால்
அந்த அடிகளும் நமக்கு ஆனந்தமே.

உங்களுக்கு நடக்க முடியாத போது சுமக்கத் தயாராய் கடவுள்
உங்களுடனேயே இருக்கிறார் என்பதை நினைவில் வைத்துக்
கொண்டால் வாழ்க்கைப் பயணம் சுலபமாகும்.

நன்றி-ஆன்மீகமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கஷ்ட காலங்களில் கடவுள் நம்முடன்தான் இருக்கிறார் Empty Re: கஷ்ட காலங்களில் கடவுள் நம்முடன்தான் இருக்கிறார்

Post by T.N.Balasubramanian Fri Nov 26, 2021 12:25 pm

https://eegarai.darkbb.com/t94498-topic?.......
12/01/2013அன்று பொங்கல் பரிசாக ஈகரை உறவுகளுக்கு, எந்தன் சமர்ப்பணம் கவிதையாக ,
ரமணியன்
=========================================================================
எமை தாங்கிய சுமைதாங்கி
Post by T.N.Balasubramanian Sat Jan 12, 2013 9:23 pm
எனது இனிய ஈகரை அன்புகளுக்கு
எந்தன் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
கருத்தை கவர்ந்த ஆங்கில கவிதை
விருந்தென படைப்போம் தமிழில். அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்
=======================================================================================

எமை தாங்கிய சுமைதாங்கி


கனவொன்று காண்கிறேன்
கையோடு கை கோர்த்து
கடவுளுடன் நடக்கிறேன்,
கடற்கரை தனிலே..



இன்ப துன்பத்தில்
இணைந்திருக்கும்
இறைவனுடன் நடக்கிறேன்,
ஈர மணல்தனிலே

வானத்து மீதொரு
காணொளி காண்கிறேன்
வாழ்வில் நடந்தவை யாவும்
வண்ணக்காட்சி ஆக,

.நிகழ்வு ஒன்று நடக்க,
பதிந்த பாத சுவடுகள் ,
இரு ஜோடி --- ஈர மண்ணில்.

எமை தாங்கிய சுமைதாங்கி - எமை தாங்கிய சுமைதாங்கி Footprints2


ஒரு ஜோடி இறைவனது
மறு ஜோடி எனது.


மகிழ்ச்சி காலங்களும் உண்டு:
நெகிழ்ச்சி காலங்களும் உண்டு.

நிகழ்ந்த நிகழ்வுகள் பலப்பல,
பதிந்த ஜோடி சுவடுகளும்,
பற்பல பற்பல.

நடக்க நடக்க,
கடந்த காலங்கள்,
காலடி சுவடென
பதிய கண்டேன்.

கடைசி காட்சியும்,
வானிலே மறைய,
காலடிகளை நோக்க
கண்களும் பின்னோக்கின .

இரு ஜோடி காலடிகள்
ஈர மண்ணில் தெரிந்தாலும்,
ஒரு சில இடங்களில்,
ஒரு ஜோடி காலடிகளே ,
யோசிக்க வைத்தது என்னை!
எமை தாங்கிய சுமைதாங்கி - எமை தாங்கிய சுமைதாங்கி Footprints
கஷ்டப்பட்ட காலங்கள்,
கவலை பட்ட காலங்கள்,
கடவுளே காப்பாற்றுங்கள் என
கதறிய காலங்கள்
தனியாக தவித்த
காலங்களன்றோ,
ஒரு ஜோடி காலடிகள்
காட்டும் காலங்கள்,

எமை தாங்கிய சுமைதாங்கி - எமை தாங்கிய சுமைதாங்கி Footprints




கை கொடுக்கா கடவுளா?
கூட வராக் கடவுளா?
கூடவே வராதவரா ?
கூடுகிறதே குழப்பம் ?
கேட்போமா?
கேட்டிட வாயை
திறக்..........கு ....முன்னரே .......

கணீரென்ற குரல்,
கனிவான குரல்,
குழந்தாய் ...
செல்வமே --------
குழம்பாதே --------
கஷ்டகாலத்திலும்
கவலை பட்டக் காலத்திலும்
கதறிய காலத்திலும்
ஆறுதல் காட்டவே ..
தோளில் உன்னை சுமந்ததால்
ஒரு ஜோடி காலடி சுவடுகளே.
உன் கண்ணில் படுகிறது.
======================================================================
இதற்கு வந்த மறுமொழிகளை தலைப்பில் கண்ட லிங்கில் பார்க்கலாம்.--ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum