ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

லண்டனில் 3வது நாளாக இன்றும் தமிழர்கள் போராட்டம்

Go down

லண்டனில் 3வது நாளாக இன்றும் தமிழர்கள் போராட்டம் Empty லண்டனில் 3வது நாளாக இன்றும் தமிழர்கள் போராட்டம்

Post by இளவரசன் Thu Apr 09, 2009 10:06 am

லண்டன்: லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் பாலம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழர்களின் போராட்டம் 3வது நாளை எட்டியுள்ளது.

திங்கள்கிழமை பிற்பகல் முதல் இப்பகுதியில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் பிரமாண்டமான அளவில் முற்றுகை மறியல் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் நாடாளுமன்றப் பகுதியில் பதட்டம் நிலவுகிறது. பல சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

போலீஸார் பலரை அப்புறப்படுத்த முயன்றபோது தமிழர்களுக்கும், ஸ்காட்லாந்து யார்டு போலீஸாருக்கும் இடையே சில இடங்களில் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து சிலரை போலீஸார் கைது செய்தனர்.

போர் நிறுத்தம் அமல்படுத்தப்படும் வரை போராட்டத்தைத் தொடரப் போவதாக தமிழர்கள் கூறியுள்ளனர். இதனால் போலீஸார் நடத்திய பல சுற்றுப் பேச்சுவார்த்தை பலனின்றி போய் விட்டது.

ஏராளமான தமிழர்கள் வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் இரவும் தங்கி போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

இந்தப் போராட்டம் காரணமாக வெஸ்ட்மின்ஸ்டர் பாலம் போக்குவரத்துக்கு மூடப்பட்டு விட்டது.

போராட்டம் குறித்து மெட்ரோபாலிடன் போலீஸ் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், தமிழர் பிரதிநிதிகளுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் போராட்டத்திற்கு அவர்கள் அனுமதி பெறவில்லை. இது சட்டவிரோதம்.

இருப்பினும் பெருமளவில் கைது நடவடிக்கையை மேற்கொள்ளாமல் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர முயலுகிறோம் என்றார்.

போராட்டம் நடத்தி வருவோர் நகரின் பிற பகுதிகளுக்குப் பரவி பெரும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்பட்டு விடாமல் தடுக்கும் வகையில் அவர்களைச் சுற்றி போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது நாடாளுமன்ற வளாகத்திற்கு முன்பு உள்ள சதுக்கப் பகுதியில்தான் தமிழர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் போக்குவரத்துக்கு இதுவரை பாதிப்பு ஏற்படவில்லை என்றார்.

இதற்கிடையே நாடாளுமன்ற வளாகத்திற்கு எதிரே இருந்தபடி போராடி வரும் தமிழர்களில் பலர் சாலைகளுக்கு வர முயன்றபோது அவர்களை போலீஸார் கடும் சிரமத்திற்குப் பின்னர் மீண்டும் பழைய இடத்திற்குத் தள்ளி விட்டனர்.

ஆனாலும் மறுபடியும் மறுபடியும் தமிழர்கள் சாலைகளுக்கு வர முயற்சிப்பதும், போலீஸார் அவர்களை தடுத்து உள்ளே திருப்பவதும் அவ்வப்போது நடந்தவண்ணம் உள்ளது. இதில் சிலர் லேசான காயமடைந்தனர்.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழர்கள் வைத்துள்ள விடுதலைப் புலிகள் இயக்கக் கொடியை கைவிட வேண்டும். அது தடை செய்யப்பட்ட இயக்கம் என்பதால் கொடியை வைத்துக் கொள்ள அனுமதிக்க முடியாது என போலீஸார் எச்சரித்துள்ளனர்.

புலிகள் இயக்கக் கொடியை வைத்திருந்த இருவரை போலீஸார் தீவிரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மொத்தமாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளியுறவு அமைச்சர் கவலை..

இதற்கிடையே, இலங்கையில் பாதுகாப்பு வளையப் பகுதியில் சிக்கியுள்ள லட்சக்கணக்கான தமிழர்களின் நிலை குறித்து இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபான்ட் கவலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இலங்கை ராணுவம், பாதுகாப்பு வளையப் பகுதியில் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இது கவலை தருகிறது. அப்பாவி மக்களின் நிலை மேலும் துயரத்திற்குள்ளாகியுள்ளதாக கருதுகிறேன்.

தற்போது உடனடியாக போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும். இது மிக மிக அவசியம் என்றார்.

எம்.பிக்கள் திரளுகிறார்கள்..

இதற்கிடையே, இலங்கை நிலவரம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை உடனடியாகக் கூட்டி விவாதம் நடத்த வேண்டும் என இங்கிலாந்து எம்.பிக்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து லீசஸ்டர் கிழக்கு எம்.பி. கீத் வாஸ் கூறுகையில், தொழிலாளர் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சிககளைச் சேர்ந்த பெருமளவிலான எம்.பிக்கள் கையெழுத்திட்ட ஒரு கோரிக்கை மனுவை பிரதமரிடம் வழங்கவுள்ளேன்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலைக் கூட்டி இலங்கை குறித்து முக்கிய விவாதம் நடத்தப்பட வேண்டும். அங்கு அப்பாவிகளைக் காப்பாற்றியாக வேண்டும் என்றார் வாஸ்.

2 தமிழர்கள் சாகும் வரை உண்ணாவிரதம்..

இந்த நிலையில், போராட்டம் நடந்து வரும் பகுதியில், தமிழ் இளைஞர்கள் இருவர் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

வெஸ்ட்மின்ஸ்டர் பால பகுதியில் இவர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

உடனடியாக நிரந்தரமான போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும், ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் பான்கீ மூன் அல்லது இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன் தங்களை நேரில் சந்தித்து தமிழர்களின் இனப்பிரச்சினை குறித்து பரிசீலித்து உறுதிமொழி வழங்க வேண்டும், வன்னியில் சிக்கியுள்ள மக்களுக்கு உடனடி உணவு மற்றும் மருந்துப் பொருட்களை அனுப்பி வைக்க வேண்டும், தமிழர்கள் சிங்கள மக்களுடன் ஒருங்கிணைந்து வாழ்வதா அல்லது தனித்து நாடு அமைப்பதா என்பதை அறிய ஐ.நாவின் ஏற்பாட்டில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும், விடுதலைப் புலிகள் மீதான தடையை உடனடியாக நீக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழர்களின் போராட்டம் தொய்வின்றி தொடருவதால் இங்கிலாந்து அரசு நிர்வாகம் குழப்பமடைந்துள்ளது.
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» விஷவாயுக் கசிவு எதிரொலி-பாக்ஸ்கான் நிறுவனம் 3வது நாளாக இன்றும் மூ்டல்
» "வால் ஸ்ட்ரீட்' போராட்டம் துவங்கி ஒரு மாதம் நிறைவு: நிதியுதவி குவிகிறது : லண்டனில் மூன்றாவது நாளாக
» வண்ணாரப்பேட்டையில் 24-வது நாளாக தொடரும் போராட்டம்: மகளிர் தினத்தை கருப்பு நாளாக அனுசரித்த முஸ்லிம் பெண்கள்
» மேற்கு தொடர்ச்சி மலையில் 3வது நாளாக எரியும் காட்டு தீ-அரிய வகை மூலிகை செடிகள் நாசம்
» பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 2–வது நாளாக போராட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum