ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல்

Go down

ஈகரை தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல்

Post by bharathichandranssn Wed Oct 20, 2021 8:00 pm

தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல்
ஆசிரியர் : பாரதிசந்திரன்
வெளியீடு : சிவகுரு பதிப்பகம்- சென்னை-16,

தமிழ்ச்சிற்றிதழ்களில் இன்று மாபெரும் வகையில் நவீன படைப்புக்கள் வெளிவருகின்றன.
தமிழகத்திலிருந்து வரும் சிற்றிதழ்கள் சுமார் 300 இதழ்களிலிருந்து படைப்புக்கள் ஆராயப்பட்டு அவை கட்டுரைகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் KMAOZTU

இந்த நூலுக்கு வாழ்த்துரை வழங்கிய பேராசிரியர் முனைவர் ஜெயச்சந்திரன் அவர்கள், நூலினைக் குறித்து ஆய்வு செய்து எழுதியுள்ளார். அதுவே இந்த நூலுக்கு அறிமுகமாகக் காணலாம்.

வாழ்த்துரை

முனைவர் ஜெயச்சந்திரன்.
முதல்வர்,
வேல்டெக் ரங்கா சங்கு கலைக்கல்லூரி, ஆவடி

இலக்கியங்கள் வாழ்வின் ரசனைத் தன்மையை மிகுத்து நடத்தைகளின் மேல் பெரும் லயித்தலை ஏற்படுத்துகின்றன. இவ்வித லயிப்புத்தன்மை உலகிலுள்ள எல்லாவற்றின் பூரணத் தன்மையையும் மென்மையாக்கி வாழ்வின் ஒவ்வொரு கட்டத்தையும் எளிமையாகவும், சிறப்பாகவும் ஆக்குகின்றன.

நூல்கள்,அறிவிற்கு வழிகாட்டிகளாகி பெரு வெளியை ஒவ்வொரு வருக்குள்ளும் ஏற்படுத்தும் தன்மையன. அவைகள் வழி வழியான சிந்தனைகளின் வடிகால்கள். அவற்றைச் சமூகம் காலந்தோறும் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குத் தானம் அளிக்க வேண்டும்.
இவ்வகையில், நமது கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர் பாரதி சந்திரன் (முனைவர் செ.சு.நா சந்திரசேகரன்) "தமிழ்ச் சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்" எனும் நூலைக் கொண்டு வந்துள்ளார். தமிழ் இலக்கியப் பரப்பில் தொடர்ந்து இயங்கி வருபவர் அவர். தற்பொழுது பல நூல்களுக்குச் சொந்தக்காரர். இணையதளங்களிலும் சிற்றிதழ்களிலும் ஆய்வுக் கட்டுரைகளையும், கவிதை, சிறுகதை போன்ற படைப்புகளையும் தொடர்ந்து எழுதி வருகின்ற படைப்பாளி அவர்

கல்லூரியின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆகவும் சிறப்பாகச் செயலாற்றும் தன்மை கொண்டவர்
.
இந்நூலில், சிற்றிதழ்களில் காணலாகும் நவீன இலக்கிய வளத்தைத் தமிழ் மக்களுக்கு இனம் காட்டியுள்ளார். ஆழமான, அகலமான ஆய்வுக் கட்டுரைகள் இந்நூலில் அமைந்துள்ளன. கவிதைகளின் தன்மை, உருவாக்கம், வெளிப்பாட்டுத் திறன், வாசகர் அவதானிப்பு, சிற்றிதழ்களில் பிற கலைகள் என விரிந்த நோக்கில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.

ஒரு கட்டுரையானது விளக்க முறைத் திறனாய்விலும் ‌, மற்றொரு கட்டுரையானது சமுதாயவியல் திறனாய்விலும், இன்னொரு கட்டுரை இஸங்களின் அடிப்படைத் திறனாய்விலும் என இவ்வாறு ஒவ்வொரு கட்டுரைக்கும் நவீனத் திறனாய்வுகள் பல கையாளப் பெற்று ஆய்வு செய்து இருப்பதனால் இதைப் படிப்பவர்களுக்கு ஒரு விரிந்த திறனாய்வுக் திறன் கிடைக்கும்

பயன் மிக்கதான நூல்கள் எல்லாராலும் பாதுகாக்க பெரும். சிற்றிதழ்கள் குறித்த நூல்கள் இக்காலகட்டத்தில் வெளிவருவது மிக குறைவாக இருப்பதாகவே கருகிறோம் .ஆனால் சிற்றிதழ்கள் தான் மிகப் பெரும் இலக்கிய சேவையினைச் செய்கின்றன என்கின்றார் ஆசிரியர். புதிய படைப்பாளிகளின் சொர்க்க புரியாக சிற்றிதழ்கள் இருக்கின்றன. இது போன்ற இதழ்கள் பல்கிப் பெருக வேண்டும். அப்பொழுதுதான் தமிழ் இலக்கியம் உலக இலக்கியத்தோடு போட்டி போட்டு வளரும் என்று நாம் நம்புகின்றோம். அந்நிலை தமிழ் சமூகத்தில் உருவாக வேண்டும்
இதன் படைப்புகளும் இன்றும் ஆய்வாளர்களால் நிறைய ஆய்வு செய்யப்படவேண்டும். பல்கலைக்கழகங்களும், ஆராய்ச்சிப் படிப்பைக் கொண்டுள்ள கல்வி நிறுவனங்களும் நவீன இலக்கியத்தின் வாழ்விடமாக உள்ள சிற்றிதழ்களின் இலக்கிய வளத்தை ஆய்வுக்காக எடுத்துக் கொண்டு ஆய்வு செய்யவேண்டும் .அதற்குப் பேராசிரியர் பாரதி சந்திரனின் இது போன்ற நூல்கள் அடித்தளமாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

இலக்கியப் படைப்பாளர்களும் ஆய்வாளர்களும், சிற்றிதழ் ஆசிரியர்களும் , நவீன இலக்கியத்தைத் தேடும் வாசகர்களும், நூல் சேகரிப்பாளர்களும், இந்நூலை வாங்கி பயன்பெறலாம். மிகப் பயனுள்ள நூலாக இந்தப் "படைப்புத் திறனும் ஏற்பு கோட்பாடும்" என்ற இந்த நூல் இருக்கும் என்பதில் ஐயமில்லை
.
பேராசிரியர் பாரதிசந்திரன் இன்னும் இது போன்ற சிறப்பான நூல்களைத் தமிழ் இலக்கிய உலகிற்கு நிறையத் தர வேண்டும் என வாழ்த்துகிறேன்.


இந்த நூல் விரைவில் இ புத்தகமாக வெளிவரும். பதிப்பில் பெற 9283275782 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
தமிழ் உலகம் சிற்றிதழ் பொக்கிசமான இந்த நூலையும் பாதுகாக்கும் என நம்புகிறேன்

அன்பன்,
பாரதிசந்திரன்(9283275782)

bharathichandranssn
bharathichandranssn
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 48
இணைந்தது : 16/01/2020

Back to top Go down

Back to top

- Similar topics
» இரா. இரவியின் படைப்புலகம் ! நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா. மோகன் ! நூல் மதிப்புரை கவிஞர் கே .ஜி .ராஜேந்திர பாபு !
» இரா. இரவியின் படைப்புலகம் ! நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! நூல் மதிப்புரை கவிபாரதி மு .வாசுகி மேலூர் !
» தமிழ்ச் சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- மின்னூல் வெளியீடு
» சிற்பியின் படைப்புலகம் ! நூல் ஆசிரியர்கள் தமிழ்த்தேனீ முனைவர் இரா .மோகன் , தமிழ்ச்சுடர் முனைவர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் ! கவிஞர் இரா .இரவி.
» இரா. இரவியின் படைப்புலகம் ! நூலாசிரியர் : பேராசிரியர் இரா. மோகன் ! நூல் மதிப்புரை : நெருப்பலைப் பாவலர் இராம. இளங்கோவன், பெங்களூர்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum