ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் அக்டோபர் 31 வரை கொரோனா கட்டுப்பாடுகள் நீட்டிப்பு

Go down

தமிழ்நாட்டில் அக்டோபர் 31 வரை கொரோனா கட்டுப்பாடுகள் நீட்டிப்பு Empty தமிழ்நாட்டில் அக்டோபர் 31 வரை கொரோனா கட்டுப்பாடுகள் நீட்டிப்பு

Post by ayyasamy ram Wed Sep 29, 2021 9:56 am

தமிழ்நாட்டில் அக்டோபர் 31 வரை கொரோனா கட்டுப்பாடுகள் நீட்டிப்பு Corona-restrictions
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் அக்டோபர் 31ஆம் தேதி
காலை 6 மணி வரை தொடர்ந்து அமலில் இருக்கும் என்று தமிழக
அரசு அறிவித்துள்ளது. அத்துடன், 1 முதல் 8 ஆம் வகுப்பு
வரையிலான வகுப்புகளுக்கான பள்ளிகள் நவம்பர் 1 முதல் இயங்கும்
என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தொடர்ந்து கண்காணித்து
கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, தலைமைச்
செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று
ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் பொது
மக்கள் அதிகம் கூடுவதன் காரணமாக, கொரோனா நோய்த் தொற்று
பரவக்கூடும் என்பதைக் கருத்தில் கொண்டும், நோய்த் தொற்று
பரவலைக் கண்காணித்து தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய
அவசியத்தை கருத்தில் கொண்டும் முக்கிய அறிவிப்புகளை
வெளியிட்டுள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், சமுதாயம், அரசியல்,
கலாச்சாரநிகழ்வுகள், திருவிழாக்கள், குடமுழுக்கு உள்ளிட்ட
செயல்பாடுகளுக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து
நடைமுறையில் இருக்கும். நோய்த்தொற்று பரவாமல் இருக்க
பெருமளவில் மக்கள் ஒன்று கூடக்கூடிய நாட்களாகிய வெள்ளி,
சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் அனைத்து வழிபாட்டு
தலங்களும் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும்.

மேலும், ஏற்கெனவே அனுமதிக்கப் பட்டுள்ள செயல்பாடுகள்,
விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.
பொதுமக்கள், தங்களது குறைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு,
பல்வேறு மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வருகை புரிந்து
தலைமைச் செயலகத்தில் தங்களது கோரிக்கை மனுக்களை ச
மர்ப்பித்து வருகின்றனர்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82750
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழ்நாட்டில் அக்டோபர் 31 வரை கொரோனா கட்டுப்பாடுகள் நீட்டிப்பு Empty Re: தமிழ்நாட்டில் அக்டோபர் 31 வரை கொரோனா கட்டுப்பாடுகள் நீட்டிப்பு

Post by ayyasamy ram Wed Sep 29, 2021 9:57 am

தமிழ்நாட்டில் அக்டோபர் 31 வரை கொரோனா கட்டுப்பாடுகள் நீட்டிப்பு Corona-vaccine-1024x683
-


பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் நோக்குடன், அனைத்து
மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில், திங்கட்கிழமை தோறும்,
பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள், மாதந்தோறும் விவசாயிகள்
குறைதீர்க்கும் நாள் ஆகியவற்றைகொரோனா நிலையான
வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி நடத்த
அனுமதிக்கப்படுகிறது.

மருத்துவநிபுணர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்களின்
ஆலோசனையின்படி, 9,10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ-
மாணவிருக்காக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.

அதேபோல், 1ஆம்வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவ
மாணவியர், பள்ளி செல்லாமல் பலமாதங்களாக தொடர்ந்து
வீட்டிலேயே இருப்பது அவர்களிடையே பெரும் மனஅழுத்தத்தையும் ச
முதாயத்தில் பெரும் கற்றல் இடைவெளியையும் இழப்பையும்
ஏற்படுத்தியுள்ளதாக மருத்துவ வல்லுநர்கள், கல்வியாளர்கள்,
பெற்றோர்கள் தெரிவித்ததைக் கருத்தில் கொண்டு, அனைத்து
பள்ளிகளிலும், 1 ஆம் வகுப்புமுதல் 8-ஆம் வகுப்பு மாணவ
மாணவியருக்கான வகுப்புகள், கொரோனா நிலையான வழிகாட்டு
நடைமுறைகளைப் பின்பற்றி 01-11-2021 முதல் நடத்த அனுமதிக்கப்படும்.

அதற்கான முன்னேற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொள்ள
வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

மேலும், மாவட்ட ஆட்சியர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி
ஆணையர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடத்தப்படும்
சிறப்பு தடுப்பூசி முகாம்களுக்கு சென்று பொதுமக்கள் தடுப்பூசி
செலுத்திக் கொள்ள வேண்டும்.

கடைகளிலும், பொது மக்கள் கூடக்கூடிய இடங்களிலும் எதிர்வரும்
பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு, கீழ்க்கண்ட முக்கிய
நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.

கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும்
வகையில் கை சுத்திகரிப்பான்கள் (hand sanitizer with
dispenser) கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்ப நிலை
பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும்
(thermal screening). கடைகளில் பணிபுரிபவர்களும்,
வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்மந்தப்
பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

அனைத்து கடைகளும், குளிர் சாதன வசதி இல்லாமல் செயல்
படுவதோடு, கடைகளில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும்
வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்
கூடாது. கடைகளின் நுழைவு வாயிலில் பொது மக்கள் வரிசையில்
காத்திருக்கும் போது, ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே
போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட
வேண்டும்.

நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களை கண்டறிதல், நோய்த்
தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல்,
சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கொரோனாநோய்த்
தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுதல்
(Test-Track-Treat-Vaccination-Covid-19 Appropriate Behaviour)
ஆகிய கோட்பாடுகளை கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும்.

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்கு,
நோய்த் தொற்று பாதிப்பிற்குள்ளானவர்கள் உள்ள பகுதிகளில்,
நோய்க் கட்டுப்பாட்டு மண்டல எல்லைகளை நுண்ணளவு வரை
(Micro Level) வரையறை செய்து, நிலையான வழிகாட்டு நடை
முறைகளின்படி, தீவிரமாக நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை
மாவட்ட ஆட்சியர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள
வேண்டும்.

வரையறுக்கப்பட்ட நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில், கீழ்க்கண்ட
நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட
வேண்டும். நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய
செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும்.

இந்த நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், மருத்துவ அவசர சேவைகள்
மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல் தவிர, இதர
செயல்பாடுகள் அனுமதி இல்லை.

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், தீவிரமாக நோய்த் தொற்று பரவலை,
வீடு வீடாக கண்காணிக்க குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்படும்.
கொரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடு நடைமுறைகள் தொடர்ந்து
கண்காணிக்கப்பட்டு, விதிமீறல்களில் ஈடுபடுவர்கள் மீது அபராதம்
விதிக்கப்படும்.

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பொதுமக்கள் மிகவும் கவனத்துடன்
இருக்குமாறும், கூட்டம் கூடக்கூடிய இடங்களுக்கு செல்வதை தவிர்க்க
வேண்டும் என்றும், உரிய கட்டுப்பாடுகளால் மட்டுமே கொரோனா
3வது அலையை தவிர்க்க இயலும் என்பதை உணர்ந்து அரசின்
அனைத்து முயற்சிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

அனைத்து வணிக நிறுவனங்களும் கட்டுப்பாட்டு விதிமுறைகளை
தவறாது கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூஸ் 18
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82750
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum