Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
மந்திரங்கள்
2 posters
Page 5 of 5
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
மந்திரங்கள்
First topic message reminder :
இந்த உலகம் வேகமாக இயங்கி கொண்டிருக்கிறது. பல எதிர்பார்ப்புகள், கனவுகள், ஆசைகள் என மனிதர்கள் தொடர்ந்து அதன்பின் ஓடிக் கொண்டிருக்கின்றனர்.
நாம் மகிழ்ச்சியாக இருப்பதும், மன அழுத்தத்தில் இருப்பதும் முழுக்க முழுக்க நம்மைச் சார்ந்ததே. நமது மனதைச் சார்ந்ததே.
சரி. தற்போது நாம் சிந்தித்து கொண்டிருக்கும் முறையில் என்ன பிரச்னை?
மந்திரத்தைச் சொல்லி தியானம் செய்வது நமது மனதை குணப்படுத்தும் என்பதற்கு என்ன ஆதாரங்கள் உள்ளன?
நமது மனது 24 மணி நேரத்தில் 60 ஆயிரம் எண்ணங்களை நினைத்துக் கொண்டிருக்கும்.
ஒரு குரங்கைப் போல நமது மனது ஓர் எண்ணத்திலிருந்து மற்றொரு எண்ணத்திற்கு தாவாமல் இருப்பதற்கு இந்த மந்திரங்கள் உதவி செய்யும்.
நாம் எப்போதும் ஏதோ ஒரு வாழ்க்கைத் தரத்தை நோக்கி தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறோம். இன்ஸ்டாகிராமையும், ஃபேஸ்புக்கையும் நிஜ உலகம் என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். என்ன வென்றே தெரியாத ஒன்றை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறோம்.
எனவே இந்த மந்திரங்கள் நமது ஆணிவேருடன் நம்மை இணைப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
சமஸ்கிருதத்தில் 'மந்த்ரா' - மன் என்றால் மனது; 'த்ரா' என்றால் கருவி என்று பொருள். நாம் என்ன சிந்திக்கின்றோம் என்பதை கட்டுப்படுத்தும் ஒரு கருவியாக மந்திரங்கள் பணி செய்கின்றன.
"என்னுடைய இளம் வயதில் எனக்கு மந்திரங்கள் பழக்கமானது மற்றொரு பக்கம் நமது மானிட இருப்பின் இன்றியமையாத ஒன்று சத்தம். அதாவது நாம் பேசும் வார்த்தைகள் நமது உலகை உருவாக்கும் அல்லது உடைக்கும். வார்த்தைகளால் இது இரண்டுமே சாத்தியம்," என்கிறார் ஓம் ஸ்வாமி. இவர் தி ஏன்ஷியண்ட் சயின்ஸ் ஆஃப் மந்த்ராஸ் என்னும் புத்தகத்தை எழுதியவர்.
"ஒருவரிடம் நீங்கள் அவர்களை நேசிக்கிறீர்கள் என்று கூறி அதன்படி நடந்து கொண்டால், இந்த மொத்த உலகமும் அவர்களைப் பார்த்துக் கொள்ளும். 'மனது' என்ற பூ பூத்தவுடன் ஒருவரின் வாழ்வில் அழகு கூடிவிடுகிறது. மனம் எனும் பூ வாடினால் நாம் சோர்ந்து போகிறோம். இந்த உலகில் இருந்து மறைந்துவிடப் பார்க்கிறோம். எனவே மந்திரங்கள் உங்கள் மனதிற்கு ஒரு பாதுகாப்புக் கவசமாக செயல்படுகிறது. தேவையில்லாத எண்ணங்களிலிருந்து உங்கள் மனதைக் காக்கிறது," என்கிறார் ஓம் ஸ்வாமி.
ரோசலின் மற்றும் அவர் உடன் பணிபுரியும் மரியா, இந்த 'மந்த்ரா தியானம்' அறிவியல் ரீதியாக பயன் கொடுக்குமா என்பதை நிரூபிக்க முடியுமா என்று பார்த்தார்கள்.
பெண்கள் அமைதியான மந்திரங்களை சொல்லும்போது அவர்களின் மூளையை ஸ்கேன் செய்து ஆய்வில் ஈடுபட்டார் மரியா. ரோசலின் அதன் விளைவுகளை ஆராய்ந்தார்.
"இரண்டு வார காலத்தில் திரும்ப திரும்ப மந்திரங்களை சொல்லும்போது மூளையின் அந்த டீஃபால்ட் மோட் நெட்வொர்க் பகுதி அமைதியானது," என்கிறார் ரோசலின்.
எனவே மந்திரங்களை சொன்னவர்கள், தங்களைத் தாங்களே எடைபோட்டுக் கொள்ளும் பழக்கம் குறைந்ததாக தெரிவித்தனர்.
அதேபோல ஒரு பணி குறித்த அவர்களின் நினைவாற்றலும் அதிகரித்தது. ஓம் ஸ்வாமி, தனது வாழ்நாளில் 15 ஆயிரம் மணி நேரங்களை மந்திரங்கள் ஓதவும், தியானம் செய்யவும் செலவிட்டார்.
2018ஆம் ஆண்டு அவரின் மூளையை விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். அப்போது அவர் தனது மனதை இயல்பைக் காட்டிலும் அமைதியாக வைத்துக் கொள்ளும் திறன் படைத்தவர் என்பது தெரியவந்தது.
"ஒரு நல்ல மந்திரம் ஒரு சிறிய கடிதத்தை போன்று இருக்கலாம். அல்லது ஆயிரம் சொற்களை கொண்டதாகவும் இருக்கலாம். இதை நாம் மாலை மந்திரம் என்போம். அதாவது மணியால் ஆன மாலையை கொண்டு மந்திரம் ஓதுவது. மந்திரம் என்பது சொற்களின் அழகான வடிவமைப்பு," என்கிறார் ஓம் ஸ்வாமி.
"நீங்கள் என்ன வாக்கியத்தை பயன்படுத்துகிறீர்கள் என்பது மட்டுமல்ல, எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பதும்தான். அது சத்தமும் அமைதியும் கலந்தது. அமைதியை கொண்டு ஓசைக்கு அழகு சேர்ப்பது," என்கிறார் ஓம் ஸ்வாமி.
மந்திரங்களை சொல்ல நீங்கள் மத நம்பிக்கை கொண்டவராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
"எந்த மொழியிலும் மந்திரத்தை நீங்கள் தேர்வு செய்யலாம். நீங்கள் எந்த மந்திரத்தை சொன்னாலும் சரி, ஒரு 6 மாத காலத்தில் அது நரம்பியல் பாதையை உருவாக்கும். 'இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி' என்றும் நீங்கள் சொல்லலாம். ஆங்கிலத்திலும் கூட அது இருக்கலாம்.
ஆனால் நீங்கள் பாரம்பரிய முறையை தேர்ந்தெடுப்பவராகவோ அல்லது மந்திரங்கள் மூலம், உங்கள் ஆழ்மனதை கட்டுப்படுத்த விரும்பினாலோ நீங்கள் ஓம் என்ற மந்திரத்தை சொல்வதன் மூலம் உங்கள் தியானத்தை தொடங்கலாம்" என்கிறார் ஓம் ஸ்வாமி.
"அனைத்தும் நன்றாக சென்று கொண்டிருக்கும்போது உங்கள் தோள்களை தட்டி, 'வாவ் எல்லாம் நன்றாக சென்று கொண்டிருக்கிறது' என்று தொடர்ந்து சொல்லுங்கள். நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் சமயம், அந்த ஆற்றலை சேகரிக்கத் தொடங்கும்போது உங்கள் மூளை அதைக் குறித்து வைத்து கொள்ளும். சில நாட்கள் கழித்து நீங்கள் சோர்வாக இருக்கும்போது, உங்கள் தோள்களைத் தட்டினால், அனைத்தும் சரியாக உள்ளது என உங்கள் மூளைக்கு ஒரு சிக்னல் அனுப்பப்படும்" என்கிறார் அவர்.
நீங்கள் முயன்றால், நமது எதிர்பார்ப்புகளிடமிருந்து மந்திரங்கள் நம்மை விடுவிக்கும் என்பதும் மந்திரங்கள் குறித்த நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
"புத்தா என்றால் விழித்தல், அவர் நாம் நமது வாழ்நாள் முழுவதும் நமது ஆசைகள் மூலமும், தேவைகள் மூலமும் உறங்கிக் கொண்டிருக்கிறோம் என்கிறார். நாம் நம் மீதும் பிறர் மீதும் வைத்திருக்கும் எதிர்ப்பார்ப்புகள் மூலம் பிணையப்பட்டு அந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறாத பட்சத்தில் குற்ற உணர்ச்சியிலோ அல்லது கோபத்தாலோ சூழப்படுகிறோம்," என்கிறார் ஓம் ஸ்வாமி.
நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாகவே நாம் மாறுகிறோம். எனவே நான் எதில் கவனம் செலுத்துகிறோம் என்பது மிக அவசியம். நீங்கள் எதில் கவனம் செலுத்துகிறீர்களோ அவ்வாறே உங்கள் மூளை அமைப்பும் மாறுகிறது. காலப்போக்கில் அதன்படியே செயல்படுகிறது என்கிறார்கள் நிபுணர்கள்.
மந்திரங்கள் சொல்லி தியானம் செய்வது மனதை அமைதிப்படுத்துமா?
இந்த உலகம் வேகமாக இயங்கி கொண்டிருக்கிறது. பல எதிர்பார்ப்புகள், கனவுகள், ஆசைகள் என மனிதர்கள் தொடர்ந்து அதன்பின் ஓடிக் கொண்டிருக்கின்றனர்.
நாம் மகிழ்ச்சியாக இருப்பதும், மன அழுத்தத்தில் இருப்பதும் முழுக்க முழுக்க நம்மைச் சார்ந்ததே. நமது மனதைச் சார்ந்ததே.
மந்திரங்களின் பின் உள்ள அறிவியல்
சரி. தற்போது நாம் சிந்தித்து கொண்டிருக்கும் முறையில் என்ன பிரச்னை?
மந்திரத்தைச் சொல்லி தியானம் செய்வது நமது மனதை குணப்படுத்தும் என்பதற்கு என்ன ஆதாரங்கள் உள்ளன?
நமது மனது 24 மணி நேரத்தில் 60 ஆயிரம் எண்ணங்களை நினைத்துக் கொண்டிருக்கும்.
ஒரு குரங்கைப் போல நமது மனது ஓர் எண்ணத்திலிருந்து மற்றொரு எண்ணத்திற்கு தாவாமல் இருப்பதற்கு இந்த மந்திரங்கள் உதவி செய்யும்.
நாம் எப்போதும் ஏதோ ஒரு வாழ்க்கைத் தரத்தை நோக்கி தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறோம். இன்ஸ்டாகிராமையும், ஃபேஸ்புக்கையும் நிஜ உலகம் என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். என்ன வென்றே தெரியாத ஒன்றை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறோம்.
எனவே இந்த மந்திரங்கள் நமது ஆணிவேருடன் நம்மை இணைப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மந்திரம் என்னும் பாதுகாப்பு கவசம்
சமஸ்கிருதத்தில் 'மந்த்ரா' - மன் என்றால் மனது; 'த்ரா' என்றால் கருவி என்று பொருள். நாம் என்ன சிந்திக்கின்றோம் என்பதை கட்டுப்படுத்தும் ஒரு கருவியாக மந்திரங்கள் பணி செய்கின்றன.
"என்னுடைய இளம் வயதில் எனக்கு மந்திரங்கள் பழக்கமானது மற்றொரு பக்கம் நமது மானிட இருப்பின் இன்றியமையாத ஒன்று சத்தம். அதாவது நாம் பேசும் வார்த்தைகள் நமது உலகை உருவாக்கும் அல்லது உடைக்கும். வார்த்தைகளால் இது இரண்டுமே சாத்தியம்," என்கிறார் ஓம் ஸ்வாமி. இவர் தி ஏன்ஷியண்ட் சயின்ஸ் ஆஃப் மந்த்ராஸ் என்னும் புத்தகத்தை எழுதியவர்.
"ஒருவரிடம் நீங்கள் அவர்களை நேசிக்கிறீர்கள் என்று கூறி அதன்படி நடந்து கொண்டால், இந்த மொத்த உலகமும் அவர்களைப் பார்த்துக் கொள்ளும். 'மனது' என்ற பூ பூத்தவுடன் ஒருவரின் வாழ்வில் அழகு கூடிவிடுகிறது. மனம் எனும் பூ வாடினால் நாம் சோர்ந்து போகிறோம். இந்த உலகில் இருந்து மறைந்துவிடப் பார்க்கிறோம். எனவே மந்திரங்கள் உங்கள் மனதிற்கு ஒரு பாதுகாப்புக் கவசமாக செயல்படுகிறது. தேவையில்லாத எண்ணங்களிலிருந்து உங்கள் மனதைக் காக்கிறது," என்கிறார் ஓம் ஸ்வாமி.
ஆய்வு சொன்ன தகவல்
ரோசலின் மற்றும் அவர் உடன் பணிபுரியும் மரியா, இந்த 'மந்த்ரா தியானம்' அறிவியல் ரீதியாக பயன் கொடுக்குமா என்பதை நிரூபிக்க முடியுமா என்று பார்த்தார்கள்.
பெண்கள் அமைதியான மந்திரங்களை சொல்லும்போது அவர்களின் மூளையை ஸ்கேன் செய்து ஆய்வில் ஈடுபட்டார் மரியா. ரோசலின் அதன் விளைவுகளை ஆராய்ந்தார்.
"இரண்டு வார காலத்தில் திரும்ப திரும்ப மந்திரங்களை சொல்லும்போது மூளையின் அந்த டீஃபால்ட் மோட் நெட்வொர்க் பகுதி அமைதியானது," என்கிறார் ரோசலின்.
எனவே மந்திரங்களை சொன்னவர்கள், தங்களைத் தாங்களே எடைபோட்டுக் கொள்ளும் பழக்கம் குறைந்ததாக தெரிவித்தனர்.
அதேபோல ஒரு பணி குறித்த அவர்களின் நினைவாற்றலும் அதிகரித்தது. ஓம் ஸ்வாமி, தனது வாழ்நாளில் 15 ஆயிரம் மணி நேரங்களை மந்திரங்கள் ஓதவும், தியானம் செய்யவும் செலவிட்டார்.
2018ஆம் ஆண்டு அவரின் மூளையை விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். அப்போது அவர் தனது மனதை இயல்பைக் காட்டிலும் அமைதியாக வைத்துக் கொள்ளும் திறன் படைத்தவர் என்பது தெரியவந்தது.
தியானத்தை எப்படி தொடங்க வேண்டும்?
"ஒரு நல்ல மந்திரம் ஒரு சிறிய கடிதத்தை போன்று இருக்கலாம். அல்லது ஆயிரம் சொற்களை கொண்டதாகவும் இருக்கலாம். இதை நாம் மாலை மந்திரம் என்போம். அதாவது மணியால் ஆன மாலையை கொண்டு மந்திரம் ஓதுவது. மந்திரம் என்பது சொற்களின் அழகான வடிவமைப்பு," என்கிறார் ஓம் ஸ்வாமி.
"நீங்கள் என்ன வாக்கியத்தை பயன்படுத்துகிறீர்கள் என்பது மட்டுமல்ல, எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பதும்தான். அது சத்தமும் அமைதியும் கலந்தது. அமைதியை கொண்டு ஓசைக்கு அழகு சேர்ப்பது," என்கிறார் ஓம் ஸ்வாமி.
மந்திரங்களை சொல்ல நீங்கள் மத நம்பிக்கை கொண்டவராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
"எந்த மொழியிலும் மந்திரத்தை நீங்கள் தேர்வு செய்யலாம். நீங்கள் எந்த மந்திரத்தை சொன்னாலும் சரி, ஒரு 6 மாத காலத்தில் அது நரம்பியல் பாதையை உருவாக்கும். 'இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி' என்றும் நீங்கள் சொல்லலாம். ஆங்கிலத்திலும் கூட அது இருக்கலாம்.
ஆனால் நீங்கள் பாரம்பரிய முறையை தேர்ந்தெடுப்பவராகவோ அல்லது மந்திரங்கள் மூலம், உங்கள் ஆழ்மனதை கட்டுப்படுத்த விரும்பினாலோ நீங்கள் ஓம் என்ற மந்திரத்தை சொல்வதன் மூலம் உங்கள் தியானத்தை தொடங்கலாம்" என்கிறார் ஓம் ஸ்வாமி.
"அனைத்தும் நன்றாக சென்று கொண்டிருக்கும்போது உங்கள் தோள்களை தட்டி, 'வாவ் எல்லாம் நன்றாக சென்று கொண்டிருக்கிறது' என்று தொடர்ந்து சொல்லுங்கள். நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் சமயம், அந்த ஆற்றலை சேகரிக்கத் தொடங்கும்போது உங்கள் மூளை அதைக் குறித்து வைத்து கொள்ளும். சில நாட்கள் கழித்து நீங்கள் சோர்வாக இருக்கும்போது, உங்கள் தோள்களைத் தட்டினால், அனைத்தும் சரியாக உள்ளது என உங்கள் மூளைக்கு ஒரு சிக்னல் அனுப்பப்படும்" என்கிறார் அவர்.
நீங்கள் முயன்றால், நமது எதிர்பார்ப்புகளிடமிருந்து மந்திரங்கள் நம்மை விடுவிக்கும் என்பதும் மந்திரங்கள் குறித்த நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
"புத்தா என்றால் விழித்தல், அவர் நாம் நமது வாழ்நாள் முழுவதும் நமது ஆசைகள் மூலமும், தேவைகள் மூலமும் உறங்கிக் கொண்டிருக்கிறோம் என்கிறார். நாம் நம் மீதும் பிறர் மீதும் வைத்திருக்கும் எதிர்ப்பார்ப்புகள் மூலம் பிணையப்பட்டு அந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறாத பட்சத்தில் குற்ற உணர்ச்சியிலோ அல்லது கோபத்தாலோ சூழப்படுகிறோம்," என்கிறார் ஓம் ஸ்வாமி.
நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாகவே நாம் மாறுகிறோம். எனவே நான் எதில் கவனம் செலுத்துகிறோம் என்பது மிக அவசியம். நீங்கள் எதில் கவனம் செலுத்துகிறீர்களோ அவ்வாறே உங்கள் மூளை அமைப்பும் மாறுகிறது. காலப்போக்கில் அதன்படியே செயல்படுகிறது என்கிறார்கள் நிபுணர்கள்.
Last edited by சிவா on Wed Mar 22, 2023 3:48 am; edited 1 time in total
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மந்திரங்கள்
தும்ஹரே பஜன் ராம்கோ பாவை | ஜன்ம ஜன்ம கே துக்க பிஸராவை || |
அனுமனிடம் பக்தி கொள்வதால், ஒருவன் ஶ்ரீராமனை வெகுசுலபத்தில் அடைகிறான். எத்தனையோ பிறவிகளில் அவனைத் தொடர்ந்து வந்த துன்பங்கள் அவனைவிட்டு அகல்கின்றன.
Re: மந்திரங்கள்
ஸர்வஜ்ஞே ஸர்வ வரதே ஸர்வ துஷ்ட பயங்கரி | ஸர்வ துக்கஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || |
உயர்ந்த ஞானத்தின் இருப்பிடமாக இருப்பவளும், அனைத்து வரங்களையும் அளிப்பவளும், எல்லா தீமைகளுக்கும் பயங்கரியாக விளங்குபவளும், எல்லா துக்கங்களையும் தீர்ப்பவளுமாகிய மஹாலக்ஷ்மியே உன்னை வணங்குகின்றேன்
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: மந்திரங்கள்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: மந்திரங்கள்
"ப்ரளயம் ஹி கமிஷ்யந்த ஶ்ரீமத் பாகவதத்வநே: | கலேர்தோஷா இமே ஸர்வே ஸிம்ஹ ஶப்தாத் வ்ருகா இவ ||" - ஸநகாதி முனிவர்கள் உவாச (பாகவதம் அத்2.ஸ்62) |
சிங்கத்தின் கர்ஜனை கேட்டு நரிகள் ஓடி ஒளிவது போல், கலியின் எல்லா தோஷங்களும்(துன்பங்களும்), ஶ்ரீமத் பாகவதத்தின் துவனி(ஒலி) கேட்டு அழிந்து போகின்றன.
- ஸநகாதி முனிவர்கள் கூறுவது
(பாகவதம் அத்2.ஸ்62)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மந்திரங்கள்
கதா பாகவதஸ்யாபி நித்யம் பவதி யத்க்ருஹே| தத்க்ருஹம் தீர்த்தரூபம் ஹி வஸதாம் பாபநாஶநம்|| |
எந்த வீட்டில் தினமும் ஶ்ரீமத் பாகவதம் படிக்கப்படுகிறதோ, அந்த வீடுதான் புண்ணிய க்ஷேத்திரம். அங்கு குடியிருப்பவர்களது பாவங்கள் முற்றிலுமாக அழிந்துவிடும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மந்திரங்கள்
"கல்யாணரூபாய கலௌ ஜனானாம் கல்யாணதாத்ரே கருணாஸுதாப்தே| கம்ப்வாதி திவ்யாயுதஸத்கராய வாதாலயாதீஸ நமோ நமஸ்தே||" |
நன்மையை அருளும் மங்களரூபத்தில், திருக்கரங்களில் சங்கு போன்ற திவ்ய ஆயுதங்களை ஏந்தியவரும், கலியுகத்தில் பக்தர்களுக்கு வற்றாத நல்வளங்களை வழங்குபவரும், கருணா அமிர்தத்தின் சாகரமானவரும்(சமுத்திரம்) ஆன குருவாயூரப்பா, உன்னை நாராயணா என்ற திவ்யநாமத்தால் போற்றி வணங்குகிறேன்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மந்திரங்கள்
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே
நமச்சி வாயவே ஞானமுங் கல்வியும்'
நமச்சி வாயவே நானறி விச்சையும்
நமச்சி வாயவே நாநவின் றேத்துமே
நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மந்திரங்கள்
யந்நாம ஸ்மரணாத் பீதா பூத வேதாள ராக்ஷஸா ரோகாத்யாஸ்ச ப்ரணச்யந்தி பீஷணம் தம் நமாம்யஹம் |
யாருடைய பெயரை உச்சரித்த மாத்திரத்தில் பூதங்கள், வேதாளங்கள், மற்றும் ராக்ஷஸர்கள் பீதி அடைந்து விலகுவார்களோ; யாரின் நாமம் அனைத்து உபாதைகளையும் விலக்குமோ, அந்த 'பீஷணம்' என்ற சொல்லால் வணங்கப்படும் நரசிம்மமூர்த்திக்கு நமஸ்காரங்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மந்திரங்கள்
கதா பாகவதஸ்யாபி நித்யம்
பவதி யத்க்ருஹே|
தத்க்ருஹம் தீர்த்தரூபம் ஹி
வஸதாம் பாபநாஶநம்||
எந்த வீட்டில் தினமும் ஶ்ரீமத் பாகவதம் படிக்கப்படுகிறதோ, அந்த வீடுதான் புண்ணிய க்ஷேத்திரம். அங்கு குடியிருப்பவர்களது பாவங்கள் முற்றிலுமாக அழிந்துவிடும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» மந்திரங்கள்
» தலையணை மந்திரங்கள்
» காயத்ரி மந்திரங்கள்!
» காயத்ரி மந்திரங்கள் - குபேரன் காயத்ரி
» மஹா விஷ்ணு - காயத்ரி மந்திரங்கள்
» தலையணை மந்திரங்கள்
» காயத்ரி மந்திரங்கள்!
» காயத்ரி மந்திரங்கள் - குபேரன் காயத்ரி
» மஹா விஷ்ணு - காயத்ரி மந்திரங்கள்
Page 5 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|