ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாரடைப்பு வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே தெரியும் சில எச்சரிக்கை அறிகுறிகள்!

Go down

மாரடைப்பு வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே தெரியும் சில எச்சரிக்கை அறிகுறிகள்!   Empty மாரடைப்பு வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே தெரியும் சில எச்சரிக்கை அறிகுறிகள்!

Post by T.N.Balasubramanian Sun Sep 19, 2021 4:39 pm

தற்போது மாரடைப்பால் இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒருவருக்கு ஏற்படும் மாரடைப்பு தீவிரமான மார்பு வலி மற்றும் அழுத்தம் போன்ற அறிகுறிகளை வெளிக்காட்டும். இது தவிர கை, கழுத்து அல்லது தாடை போன்ற பகுதிகளில் கூர்மையான வலி, திடீரென மூச்சுத் திணறல், வியர்வை மற்றும் மயக்கம் போன்ற அறிகுறிகளும் வெளிப்படும். ஆனால் இவை அனைத்துமே மாரடைப்பின் போது நடப்பவையாகும்.

சில நேரங்களில், அமைதியான மாரடைப்பு (Silent Myocardial Infarction) ஏற்பட்டால், அது எவ்வித அறிகுறிகளையும் வெளிக்காட்டாமல் அமைதியாக தாக்கும். அமைதியான மாரடைப்பின் அறிகுறிகள் மிகவும் லேசாக இருக்கும். விரிவாக கூற வேண்டுமெனில், வழக்கமான அசௌகரியம் அல்லது வேறு ஏதேனும் உடல்நல பிரச்சனைகளால் பலர் இவற்றை புறக்கணிக்கிறார்கள்.

மாரடைப்பு என்பது ஒரு தீவிர மருத்துவ அவசரமாகும். இந்நிலையால் இரத்தம் உறைந்து, இதயத்திற்கு இரத்தம் வழங்கப்படுவது திடீரென தடுக்கப்படுகிறது. துரதிர்ஷ்டமாக, பலருக்கு மாரடைப்பின் அறிகுறிகள் குறித்த அறியாமையினால், மாரடைப்பினால் பலர் இறக்க நேரிடுகிறது. எனவே கனடா, சுவிட்சர்லாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள தளங்களில் கடுமையான கரோனரி நோய்க்குறி சிகிச்சை அளிக்கப்பட்ட நோயாளிகளின் ஆரோக்கியத்தை கண்காணித்து எடுக்கப்பட்டு தரவுகளில் இருந்து, ஆராய்ச்சியாளர்கள் மாரடைப்பு வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன் வெளிப்படும் நான்கு முக்கியமான எச்சரிக்கை அறிகுறிகளைப் பட்டியலிட்டுள்ளனர். அந்த அறிகுறிகள் பின்வருமாறு:

அசாதாரண சோர்வு பல நோயாளிகள் உடல் சோர்வு அல்லது உடல் அசௌகரியத்தை உணரக்கூடும் மற்றும் அதிக வேலை, மோசமான தூக்கம் அல்லது சில வயது தொடர்பான வலி போன்றவற்றை உணரலாம் என்று ஹார்வர்ட் ஆய்வு கூறுகிறது. மாரடைப்பு உள்ள ஒவ்வொரு 3 பேரில் 2 பேருக்கு நெஞ்சு வலி, மூச்சுத் திணறல் அல்லது மிகுந்த உடல் சோர்வு போன்றவற்றை ஒரு வாரங்களுக்கு முன் உணர்வதாக சிடார்ஸ் சினாய் மருத்துவமனை கூறுகிறது

தொடருகிறது.
நன்றி தட்ஸ்தமிழ் 


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

மாரடைப்பு வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே தெரியும் சில எச்சரிக்கை அறிகுறிகள்!   Empty Re: மாரடைப்பு வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே தெரியும் சில எச்சரிக்கை அறிகுறிகள்!

Post by T.N.Balasubramanian Sun Sep 19, 2021 4:47 pm

தொடர்ச்சி------2-----

தூக்க பிரச்சனை
 சிடிசி-யின் படி, தூக்கமின்மை உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோயுடன் தொடர்புடையது. காலப்போக்கில் மோசமான தூக்கம் ஆரோக்கியமற்ற பழக்கங்களுக்கு வழிவகுத்து, இதயத்தை காயப்படுத்தும். மேலும் தூக்கமின்மை மன அழுத்த அளவை அதிகரிப்பதோடு, உடல் செயல்பாட்டைக் குறைக்கும் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளின் மீது நாட்டத்தை அதிகரிக்கும். எனவே மாரடைப்பு வருவதற்கு முன் தூக்கமின்மை பிரச்சனையை சந்தித்தால் கவனமாக இருங்கள். இது இவிர மிகுந்த சப்தத்துடனான குறட்டை விட்டு தூங்கினால், அது இதய ஆரோக்கியம் மோசமாக இருப்பதன் மற்றொரு அறிகுறியாகும். பெரும்பாலும் உடல் பருமன் மற்றும் இதய செயலிழப்பு போன்ற சில உடல்நல பிரச்சனைகளைக் கொண்டவர்களுக்கு மிகுந்த சப்தத்துடனான குறட்டை ஏற்படலாம். நை

கவலை 
சில நோயாளிகள் மிகவும் கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். இது மாரடைப்பு நோயாளிகளிடையே பொதுவாக காணப்படும். ஆனால் சிலருக்கு உடலில் ஏதோ தவறு நிகழப்போகிறது என்ற ஒருவித அழிவின் உணர்வை உணரக்கூடும். எனவே உங்களுக்கு திடீரென்று மனதில் உயிரைப் பற்றிய ஒருவித கவலை திடீரென எழுமாயின், உஷாராகிக் கொள்ளுங்கள்.

கை பலவீனம் அல்லது அசௌகரியம் 
மாரடைப்பு வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே தெரியும் சில எச்சரிக்கை அறிகுறிகள்!   Handpain-1631963182



மாரடைப்பு ஏற்படவிருக்கும் ஒருவருக்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே கைகள் பலவீனமாக இருப்பது போல் இருக்கும். அதேப்போல் தொண்டை அல்லது மார்பில் லேசான வலி, இரைப்பை ரிஃப்ளக்ஸ், அஜீரணம் மற்றும் நெஞ்செரிச்சல் ஆகியவற்றுடன் குழப்பமடையலாம். இது தவிர, முதுகு, கழுத்து, தாடை, வயிறு போன்ற பகுதிகளிலும் வலி அல்லது அசௌகரியத்தை அனுபவிக்கலாம். ஆனால் இந்த அறிகுறிகள் அனைத்தும் ஒருவருக்கு ஒருவர் மாறுபடும்
மாரடைப்பு வந்தால் எவ்வாறு நடந்து கொள்வது? 
மாரடைப்பு ஏற்பட்டு உங்களால் முடிந்தால், ஆஸ்பிரின் மாத்திரையை உடனே எடுத்து உங்களுக்கு அருகிலுள்ள மருத்துவமனையில் உள்ள அவசர மருத்துவ சேவைகள் (EMS) ஊழியர்களை அழைக்கவும். உங்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருந்தால், உங்கள் இதயத்தில் தேவையற்ற அழுத்தத்தைத் தவிர்ப்பதற்காக ஆம்புலன்ஸ் வரும் வரை மனதை அமைதியாக வைத்து காத்திருக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் மாரடைப்பு வந்த ஒருவருக்கு அருகில் இருந்து, அந்த நபர் மயக்கமுற்று, சுவாசிக்காமல், இதய துடிப்பு இல்லாமல் இருந்தால், உடனே சிபிஆரைத் தொடங்குங்கள். இது தவிர, அவசர மருத்துவ உதவிக்கு உடனே அழைப்பு விடுங்கள்.

==================


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum