புதிய பதிவுகள்
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 திருக்கழுக்குன்றம்:-திருவானைக்கோயில். Poll_c10 திருக்கழுக்குன்றம்:-திருவானைக்கோயில். Poll_m10 திருக்கழுக்குன்றம்:-திருவானைக்கோயில். Poll_c10 
30 Posts - 54%
heezulia
 திருக்கழுக்குன்றம்:-திருவானைக்கோயில். Poll_c10 திருக்கழுக்குன்றம்:-திருவானைக்கோயில். Poll_m10 திருக்கழுக்குன்றம்:-திருவானைக்கோயில். Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
 திருக்கழுக்குன்றம்:-திருவானைக்கோயில். Poll_c10 திருக்கழுக்குன்றம்:-திருவானைக்கோயில். Poll_m10 திருக்கழுக்குன்றம்:-திருவானைக்கோயில். Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
 திருக்கழுக்குன்றம்:-திருவானைக்கோயில். Poll_c10 திருக்கழுக்குன்றம்:-திருவானைக்கோயில். Poll_m10 திருக்கழுக்குன்றம்:-திருவானைக்கோயில். Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 திருக்கழுக்குன்றம்:-திருவானைக்கோயில். Poll_c10 திருக்கழுக்குன்றம்:-திருவானைக்கோயில். Poll_m10 திருக்கழுக்குன்றம்:-திருவானைக்கோயில். Poll_c10 
30 Posts - 54%
heezulia
 திருக்கழுக்குன்றம்:-திருவானைக்கோயில். Poll_c10 திருக்கழுக்குன்றம்:-திருவானைக்கோயில். Poll_m10 திருக்கழுக்குன்றம்:-திருவானைக்கோயில். Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
 திருக்கழுக்குன்றம்:-திருவானைக்கோயில். Poll_c10 திருக்கழுக்குன்றம்:-திருவானைக்கோயில். Poll_m10 திருக்கழுக்குன்றம்:-திருவானைக்கோயில். Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
 திருக்கழுக்குன்றம்:-திருவானைக்கோயில். Poll_c10 திருக்கழுக்குன்றம்:-திருவானைக்கோயில். Poll_m10 திருக்கழுக்குன்றம்:-திருவானைக்கோயில். Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்கழுக்குன்றம்:-திருவானைக்கோயில்.


   
   
velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Mon Sep 13, 2021 9:44 pm

 திருக்கழுக்குன்றம்:-திருவானைக்கோயில்.

திருவானைக்கோயில் எங்கே உள்ளது எனக்கேட்டால்  எல்லோரும் திருச்சிக்கு அருகில் உள்ள கோயில் என்று கூறுவார்கள். திருச்சிக்கு அருகே உள்ளது  #திருவானைக்காவல்.. ஆனால் இது திருவானைக்கோயில்.#திருக்கழுக்குன்றம் வட்டத்தில்இதுஅமைந்துள்ளது.#திருவானைக்கோயில் புராதனமான ஊராகும்.இங்கு  #திருவாலீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.புராதன கதையில் வாலி இறைவனை வணங்கியதால் இங்குள்ள இறைவன் #திருவாலீஸ்வரர் என அழைக்கப்படுகின்றார்.






#ஊர் அமைவிடம்:-
#திருக்கழுக்குன்றதிலிருந்து #பொன்விளைந்த களத்தூர் சென்று அங்கிருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் 2 கிலோமீட்டர் தூரம் சென்றதும் சிறிது தூரத்தில் வலதுபுறம் உள்ள மலைகளுக்கு நடுவில் சென்றால் இருளர் காலணிக்கு அடுத்து அமைந்துள்ளது.#திருக்கழுக்குன்றதிலிருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் பில்லேரிமேடுவில் பிரியும் சாலையில் சென்றால் சேகண்டி கிராமம் தாண்டியதும் இந்த ஊர் வருகின்றது.
#கல்வெட்டில் உள்ள தகவல்:-
தூங்கானை மாட வடிவில் உள்ள இந்த கோயில் பிற்கால சோழர் காலத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. விக்கிரம சோழனுடைய கல்வெட்டு கி.பி.1127 திருவாலீஸ்வரர் கோயிலை திருவாலக்கோயில் என்கின்றது.இரண்டாம் குலோத்துங்கனுடைய அரசு அதிகாரி அநபாய மூவேந்த வேளான் என்பவன் உழுலூர் என்கின்ற ஊரின் ஓரு பகுதியை அரும்பாக்கத்துடன் இணைத்து அநபாயநல்லூர் என மாற்றி வழிபாட்டுக்காக அதனை அளித்துள்ளான்.இந்த கோயிலில் 16 கல்வெட்டுக்கள் உள்ளன. கி.பி.1128ல் சந்திரசேகர மூர்த்தி வழிபாட்டுக்கு சிறுதண்டல் கிராமம் வழங்கப்பட்டுள்ளது.கி.பி.1220 ல் சென்னை மயிலாப்பூர்  வியாபாரி ஒருவர் இங்கே விளக்கெரிக்க வழி செய்துள்ளான்.விஜயநகர மன்னரான கம்பண்ணன் கோயில் திருப்பணி செய்து பங்குனி விழா நடத்த ஏற்பாடு செய்துள்ளான்.லிங்கராயன் இந்த திருத்தொண்டில் 1365 ஆம் ஆண்டில் ஈடுபட்டுள்ளான்.இரண்டாம் அரிகரன் காலங்களிலும் கோயிலுக்கு தானங்கள் அளிக்கப்பட்டுள்ளன.காங்கேய பல்லவராயர் தன் மகள் பொன்னியார் நலத்திற்கு தானங்கள் அளித்துள்ளார்.குலோத்துங்க சோழ திருநீற்றுச் சோழநல்லூர் என்ற ஊர் புதியதாக உருவாக்கப்பட்டு இந்த கோயிலுக்கு அளிக்கப்பட்டுள்ளது. நென்மேலி என்கின்ற கிராமத்தின் ஒரு பகுதியே இவ்வாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.காளாமுகம் என்ற சைவத்தின் பிரிவைச் சார்ந்த கோமடத்து ஞானராசி பண்டிதர் மற்றும் சைவராசி பண்டிதர் பற்றிய விவரங்கள் கல்வெட்டில் உள்ளது. சென்னை திருவெற்றியூர் போன்று திருவானைக்கோயிலிலும் காளாமுகப்பிரிவினர் தங்கியிருந்த ஊர் திருவானைக்கோயில் எனலாம்.இந்த ஊர் நாட்டியபெண்கள் மற்றும் கைக்கோளர்களுக்கு மதுராந்தகத்தின் வடவெல்லையான வீட்டுரில் வீட்டு மனைகள் அளிக்கப்பட்டுள்ளன.முதல் இராஜநாராயண சம்புவராயன் என்ற மன்னன் புண்டரீக நல்லூரைக்கைக்கோளர்களுக்கு மானியமாக அளித்துள்ளான்.புண்டரீக நல்லூர் நரியஞ்சேரி என்றும் இவ்வூர் அழைக்கப்பட்டுள்ளது.சுந்தரபாண்டியன் ஆட்சிக்காலத்தில் இவ்வூர் கோயிலில் விளக்கெரிக்க 6 பசுக்களை புஷபகிரி ஜீயர் அளித்துள்ளார்.விஜயநகர வேந்தரான கிருஷ்ணதேவராயரின் முகவரான மூட்டுக்கனகராயன் என்பவர் கோயிலில் திருவிழாக்கள் நடைபெற ஏற்பாடு செய்துள்ளதை செப்பேடுகள் குறிப்பிடுகின்றன.
#ஆலய அமைப்பு:-


ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட கோயில் என்பது கோயினை பார்க்கும் சமயம் நமக்கு தெரியவருகின்றது.


ஆலயத்திற்கு வெளியே வினாயகர் சிலையும் ஜெஷ்டா தேவி சிலையும் அமைந்துள்ளது.


இறைவன் பெயர் #திருவாலீஸ்வரர். இறைவி பெயர் #திரிபுரசுந்தரி..இறைவன் கிழக்கு பார்த்து உள்ளார். இறைவி தெற்கு பக்கம் பார்த்து உள்ளார். கிழக்கு பக்க வாசல் கருங்கல் ஜன்னலால் அமைக்கப்பட்டுள்ளது. ஜன்னலுக்கு வெளியே நந்தி உள்ளது




ராஜநந்தி என அதனை அழைக்கின்றனர். கோயிலுக்கு தெற்கு பார்த்த வாசல் நாம் தெற்கு பார்த்த வாசல்வழியே உள்ளே நுழையவேண்டும்.கருவரையின் முன்பு வினாயகர் மற்றும் முருகர் சிலைகள் அமைந்துள்ளன. வினாயகர் வித்தியாசமான தோற்றத்தில் அமைந்துள்ளார்.

இறைவன் சுயம்பு லிங்கம். லிங்கம் எதிரே சிறிய நந்தி –பலிபீடம் அமைந்துள்ளது. திரிபுரசுந்தரி அம்மன் 4 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் நமக் கு அருள்பாலிக்கின்றார். கருவரையை சுற்றி வருகையில் #வினாயகர்,#தட்சிணாமூர்த்தி.#விஷ்ணு,#பிரம்மா,#தூர்கை சிலைகள் அமைந்துள்ளன.













ஒவ்வொரு சிலையின் கீழேயும் பக்கவாட்டிலும் அழகிய சிறிய சிற்பங்கள் அமைந்துள்ளன. மகளிர் சிறப்பினை –இறைவழிபாட்டை விளங்குவதாக அவை உள்ளன.

வெளிபிரகாரம்  இரண்டு அடி உயரத்தில் இரண்டு அடுக்காக அமைந்துள்ளது.


இறைவனுக்கு அருகிலும் சுற்றி வரலாம். மேலே உள்ள பிரகாரத்திலும் சுற்றிவரலாம்.கருவரையை சுற்றி நிறைய கல்வெட்டுக்கள் உள்ளன. தமிழில் ஓரளவு புரியும் அளவில் அமைந்துள்ளது சிறப்பாகும். தூர்கைஅம்மன் அருகில் வேப்பமரம் அமைந்துள்ளது.
#ஆலய சிறப்புகள்:-
கிழக்கு பக்கம் அமைந்துள்ள ஜன்னல் சாரளத்தின் வழியே சூரிய வெளிச்சம் லிங்கத்தின் மீது விழும் நிகழ்வு வருடத்திற்கு இரண்டு முறை நடைபெறுகின்றது. அதுபோல வினாயகர் மீதும். முருகப்பெருமான் மீதும் சூரிய கதிர்கள் விழுகின்றன. மாசி மாதம் வருகின்ற பௌர்ணமியில் அம்மன் மீது சூரிய கதிர்விழுகின்றது. வருடத்தின் குறிப்பிட்ட நாளில் அனைத்து சிலைகள் மீதும் சூரியஒளி பாய்கின்றது. வழக்கமாக கோயில்களில் நாம் நினைத்தது பலிக்குமா என பார்க்க குங்குமம்.விபூதி பெட்டலம் மடித்து ஸ்வாமிபாதத்தில்வைத்து எடுத்து வந்து கொடுப்பார்கள். நாம் எதை நினைத்து எடுக்கின்றோமோ அது வந்தால் ஸ்வாமி நமக்கு உத்தரவு கொடுத்துவிட்டதாக நம்புவோம். சில ஆலயங்களில் பூ வைத்து பார்பார்கள். இந்த ஆலயத்தில் நாம் வேண்டுதல் சொன்னால் அர்ச்சகர் நம்மை கருவரையில்எதிரில் விட்டு விட்டு வெளியில் சென்று விடுகின்றார். நாம் இறைவனை மனமுருக வேண்டிக்கொள்ளலாம். நாம் எண்ணிய எண்ணம் பலிக்குமானால் கருவரையிலிருந்து வௌவால் பறந்து வருகின்றது. சில சமயம் பல்லி உள்ளே இருந்து ஒடிவருகின்றது. சிலருக்கு பாம்பு உருவில் இறைவன் வந்து உத்தரவு கொடுத்ததாக அர்ச்சகர் தெரிவித்தார்.நான் இறைவனை வணங்கிய சமயம் வௌவால் உள்ளேஇருந்து பறந்து வந்தது. ஜீவ ராசிகள் வருவது மூலம் இறைவன் உத்தரவு கொடுத்ததை நாம் உறுதி படுத்திக்கொள்ளலாம். கோயிலில் குறிப்பிடதக்க விஷேஷம் என்னவென்றால் இங்குள்ள இறைவனுக்கு சுத்தமான பசும்பாலினால் காலை மற்றும் மாலையில் அபிஷேகம் நடைபெறுகின்றது.ஒவ்வொரு பிரதோஷ வழிபாடு,பௌர்ணமி –அமாவாசை வழிபாடு,கிருத்திகை வழிபாடு மற்றும் அனைத்து விஷேஷநாட்களிலும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் உண்டு.கோயில் சிறிய தாக இருந்தாலும் மன அமைதி பெரியதாக நமக்கு கிடைக்கின்றது. நேரம் கிடைக்கும் சமயம் ஆலயம் சென்றுவாருங்கள்.


இணையத்தில் காண:- இங்கு கிளிக் செய்யவும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 14, 2021 10:10 am

திருக்கழுக்குன்றம்: திருவானைக்கோயில் பற்றி அறியத்தந்தமைக்கு நன்றி வேலன்.



 திருக்கழுக்குன்றம்:-திருவானைக்கோயில். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Wed Sep 15, 2021 7:31 am

சிவா wrote:திருக்கழுக்குன்றம்: திருவானைக்கோயில் பற்றி அறியத்தந்தமைக்கு நன்றி வேலன்.
மேற்கோள் செய்த பதிவு: 1351362
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்...

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக